Friday, July 19, 2019

ஜூலை 21 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை



ஜூலை 21 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 16ம் ஞாயிறு
Genesis 18:1-10a
Ps 15:1-5
Colossians1:24-28
Luke 10:38-42

கவலைபட வேண்டாம், பயமில்லாமல் இருங்கள்
லூக்கா நற்செய்தி

மார்த்தா மரியாவைச் சந்தித்தல்
38அவர்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது இயேசு ஓர் ஊரை அடைந்தார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா.

39அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

40ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, “ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டு விட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும்என்றார்.

41ஆண்டவர் அவரைப் பார்த்து
மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.

42
ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது
 என்றார்
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், இயேசு, மனக்கலக்கத்தையும், கவலையையும் பற்றி நம்மிடம் பேசுகிறார். அவைகள் நம்மை திசை திரும்புகின்றன.  மனபயத்தையும் , கவலையும் நம் வாழ்க்கையை கட்டுப்படுத்த ஆரம்பித்துவிடும். ஏனெனில் நம் கண்களை கடவுள் மேல் இல்லாமல் திசை திருப்பிவிடும். அதனால் எது தப்பானது என்று நம்மால் கண்டறிய  முடியாது. மேலும், இன்னும் நம் நிலைமை மோசமடைந்து விடும்.
மரியாள் "நல்ல பங்கை" தேர்ந்தெடுத்து கொண்டாள்.   இயேசுவோடு சேர்ந்து, பேரார்வத்துடன் ம் எவ்வித தொந்தரவு இல்லாமல் அவரின் போதனையை கேட்க , மரியாள் தேர்ந்து கொண்டாள்,  அமைதியாக இயேசுவோடு அமர்ந்து, இயேசுவிடம் கற்று கொண்டாள் . நமது கவலைகள் நாம் நினைப்பது போல, கண்டிப்பாக நமது கவலைகள் அவ்வளவு பெரிய விஷயமில்லை.
நமது விரக்தியிலும், கவலையிலும், இருந்து வெளியே வர, இயேசுவின் பாதத்தில் அமர்ந்து நாம் ஜெபிக்கும்பொழுது முடியும். சோதனைகளிலிருந்து வெளியே வர நாம் ஞானத்தையும்  பெற முடியும். மார்த்தா தனது உணவு தயாரிக்கும் வேலையில் யாரும் உதவவில்லை என புலம்புவைத்து கூட சின்ன பாவம் தான். அங்கே நமது கண்கள் இயேசுவை விட்டு அகன்றுவிட்டது. இயேசுவை விட்டு விலக எது தடையாக இருந்தாலும், அது நல்லதில்லை.
நாம் இயேசுவோடு இல்லாமல், அவர் மேல் நமது கண் இல்லாமல்,எப்படி பரிசுத்தமாக இருக்க முடியும் என்று நாம் அவரிடம் கேட்காமல்,  நாம் பரிசுத்த வாழ்வில் முன்னேறமுடியாது. நாம் ஜெப வாழ்விலும், இயேசுவோடு அமைதியாக நேரம் செலவழித்தால் ஒழிய , நாம் இயேசுவை போல அன்பு செய்ய முடியாது. அவர் கொடுக்கும் அன்பையும் நாம் முழுதாக பெற முடியாது. மேலும், இயேசுவோடு இருந்து அவர் போதனையை கேட்டு , அவரின் அன்பில் நிலைத்திருக்க முடியும். பிரசங்க நேரத்திலும், கார் ஒட்டிக்கொண்டு இருக்கும் போதும் நாம் செய்யும் ஜெபம் போதுமானதில்லை.
மன கலக்கங்களும், கவலைகளும் பயத்தின் வெளிப்பாடுகள். எதோ ஒன்று தவறாக நடக்க போகிறது என்று நாம் பயப்படுகிறோம்.  `உண்மையாக கவலை பட காரணம் இருந்தாலும், அதன் மூலம் ஏற்படும் பயம் நம்மை இயேசுவிடம் இருந்து மறைக்கிறது. இந்த பயம் நம்மை திசை திருப்புகிறது. இந்த பயம் தான்,  நமக்கு ஒரு சிக்னல் ஆகும். அதனால், நாம் இயேசுவோடு அமர்ந்து, அவரோடு பேசி,  எது நமக்கு தொந்தரவாக இருக்கிறதோ அதனை  இயேசுவோடு பேசி , அவரிடம் இருந்து பதில் கிடைக்கும். நமக்கு உற்சாகமும் , உறுதிமொழியும் கிடைக்கும்.அதன் மூலம் நமக்கு அமைதி கிடைக்கும்.
© 2019 by Terry A. Modica


No comments: