Friday, August 2, 2019

ஆகஸ்டு 4 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஆகஸ்டு  4 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 18ம் ஞாயிறு
Ecclesiastes 1:2; 2:21-23
Ps 90:(1) 3-6, 12-14, 17
Colossians 3:1-5, 9-11
Luke 12:13-21

லூக்கா நற்செய்தி

அறிவற்ற செல்வன் உவமை
13கூட்டத்திலிருந்து ஒருவர் இயேசுவிடம், “போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக்கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்என்றார்.

14அவர் அந்த ஆளை நோக்கி
என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்?”
 என்று கேட்டார்.

15பின்பு அவர் அவர்களை நோக்கி
எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது
 என்றார்.
16அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார்: 
செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது.
17அவன், ‘நான் என்ன செய்வேன்? என் விளை பொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே!என்று எண்ணினான்.

18‘ஒன்று செய்வேன்; என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்; அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன்’.

19பின்பு, "என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பல வகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு" எனச் சொல்வேன்என்று தனக்குள் கூறிக்கொண்டான்.

20ஆனால் கடவுள் அவனிடம், ‘அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?’ என்று கேட்டார்.

21கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே.
(thanks to www.arulvakku.com)
கடவுளின் தாராள குணத்தின் செல்வங்கள்
கடவுளின் தாராள குணத்தை நாம் புரிந்து கொள்ளும்பொழுது , உண்மையாகவே நாம் எவ்வளவு பெரிய செல்வத்தை கொண்டுள்ளோம் என்று நாம் அறிந்து கொள்வோம்.  நம்மிடம் குறைவான பணம் வங்கியில் இருந்தாலும்,  கடவுளோடு நம் வாழ்வு நாம் பணக்காரர்களாகவே இருப்போம். --கடவுளால் நாம் பாதுகாக்கப்பட்டு , நாம் பயம் இல்லாமல் இருப்போம். அதனால், நமக்கு  நிம்மதியும், அமைதியும் பல சோதனைகளுக்கு இடையிலும் கிடைக்கும். நாம் ஞானத்தாலும், தொடர் முயற்சியாலும் பல சோதனைகளை கடந்து வருவோம்.

கடவுளின் தாராள குணம் மூலம் நமக்கு பொருட் செல்வமும்  கிடைக்கும். நம்மிடம் இருக்கும் அன்னை பொருட் செல்வமும் கடவுளிடமிருந்து வந்தவை தான். கடவுள் நமக்கு கிடைத்த திறமைகள், தகுதிகளால்  நமக்கு அந்த பொருட்கள் வந்தன.  நமது முயற்சியால் வந்த அனைத்துமே கடவுளின் முயற்சியால் வந்தவைகள் தான்.  நமது வாழ்வில் உள்ள அனைத்து நல்ல  விஷயங்களும் கடவுளிடமிருந்தே வந்தவை.

எனினும்,  நம்மை விட பெரிய நோக்கம் உள்ளது. கடவுளிடமிருந்து வந்த அனைத்தும், மற்றவர்களை ஆசிர்வதிக்க தான் நமக்கு உள்ளது. கடவுளின் தாராள குணத்திற்கு நாம் வழித்தடம் ஆக இருக்கிறோம்.
நம்மிடம் இருப்பவைகளை நாம் பகிர்ந்து கொள்ளாமல் இருக்கும்போது அது நாம் பாவம் செய்வதற்கு காரணம் ஆகும். சுய நலத்திற்கு நாம் அடிமைகளாகியுள்ளோம்.   கொஞ்சம்  கர்வத்திற்கு சமமானது. கடவுள் நம் மூலம் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ள விரும்புவதை கர்வம் தடுக்கிறது. அதனால் மற்றவர்கள் காயப்படுகிறார்கள்.
இந்த பாவத்தினால்  நாம் பாதிக்கப்பட கூடியது எது? நம்மை நாமே நம்புவது. ஏனெனில், நம்மிடம் உள்ள பொருட் செல்வமும், நம்மாலே எல்லாம் செய்ய முடியும்  என்று நாம் நினைத்து கொண்டு, கடவுளை விட்டு விடுகிறோம். கடவுளோடு இணைந்து நாம் எதனையும் செய்யாமல் இருக்கிறோம். கடவுளின் தாராள குணத்தோடு நாம் இணைந்து  எந்த செயலும் செய்வதில்லை. கடவுள் நம் மேல் தாராளமாக இருந்தால் கூட,  நம் சுய நம்பிக்கையால்,  நாம் அவரை ஒதுக்கி விடுகிறோம்.
நாம் நமக்காக பொருட்களை சேர்த்து கொண்டு , நம் வாழ்வை காப்பாற்றி கொள்ளலாம்  என்று இருக்கும் பொழுது, மற்றவர்கள் துன்ப படுகிறார்கள். இன்றைய ஞாயிறின்  நற்செய்தியில் கர்வத்தையும் சுயநலமாக இருப்பதையும் பற்றி பேசுகிறார். ஏனெனில் இவையிரண்டும், கடவுளின் தன்மைக்கு மாறாக இருப்பதாகும்.
நமக்கு கிடைத்த நல்லது  அனைத்தும்,  கடவுள் தான் கொடுத்தார். என்று நமக்கு புரியும்  போது ,    தாராள குணம் நம்முள் வளரும். மேலும் அவர் நமக்கு கொடுத்ததை நாம் பகிர்ந்து கொள்ளும்பொழுது கடவுள் மேலும்  நமக்கு கொடுப்பார் என்றும் நமக்கு தெரியும். கடவுள் உங்களுக்கு கொடுத்த அத்தனை பணம், ஞானம், நாம் கற்று கொண்ட போதனைகள் அனைத்தையும் நினைத்து பாருங்கள். இப்பொழுது  உங்களை  சுற்றி பாருங்கள், உங்களால், வரிகளின் ஜெபத்திற்கு பதில் கொடுக்க முடியும். அதனை எப்படி செய்ய முடியும்?
நாம் எப்படி எல்லாம் , எத்தனை செல்வம் அடைய வேண்டும் என நினைக்கிறோமோ , அவையெல்லாம் கடவுளிடம் இருந்து வந்தது. அவைகளை நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும். இறையரசின் முக்கியமான பொருளாதார கொள்கையே இது தான். நாம் தொடர்ந்து பகிர்ந்து கொள்ளும்பொழுது தான், கிறிஸ்துவின் உடல் இவ்வுலகில் வளரும். இதனை தான் நாம் புனிதர்களின் ஒற்றுமை என்று கூறுகிறோம்
© 2019 by Terry A. Modica


No comments: