Showing posts with label இரக்கத்துடனும். Show all posts
Showing posts with label இரக்கத்துடனும். Show all posts

Friday, September 21, 2012

செப்டம்பர் 23, 2012, ஞாயிறு நற்செய்தி, மறையுரை



செப்டம்பர் 23, 2012, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 25ம் ஞாயிறு
Wis 2:12, 17-20
Ps 54:3-6, 8
James 3:16–4:3
Mark 9:30-37

மாற்கு நற்செய்தி
Description: http://www.arulvakku.com/images/pointmsg.jpg

Description: http://www.arulvakku.com/images/dot.jpgஅதிகாரம் 9
இயேசு தம் சாவை இரண்டாம் முறை முன்னறிவித்தல்
(மத் 17:22 - 23; லூக் 9:43 - 45)
30 அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுக் கலிலேயா வழியாகச் சென்றார்கள். அது யாருக்கும் தெரியக்கூடாது என்று இயேசு விரும்பினார்.31 ஏனெனில், ' மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்என்று அவர் தம் சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார்.32 அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள்.

யார் மிகப் பெரியவர்?
(மத் 18:1- 5; லூக் 9:46 - 48)
33அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்த பொழுது இயேசு, வழியில் நீங்கள் எதைப்பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்? என்று அவர்களிடம் கேட்டார்.34அவர்கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில் தங்களுள் பெரியவர் யார் என்பதைப்பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக் கொண்டு வந்தார்கள்.35 அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம்,  ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும் ' என்றார்.36 பிறகு அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு,37 ' இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக் கொள்பவர் என்னைமட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார் ' என்றார்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், நாம், பொறாமையால், நல்லவற்றை அழிப்பதையும், குறுக்கு புத்தியையும், தனக்கு தான் எல்லாம் என்று நினைப்பால், மற்றவர்களை காயபடுத்துவதையும், தற்பெருமையால், நம் வழியில் வருபவர்களை தாக்குவதையும் பார்க்கிறோம்.

முதல் வாசகம், இஸ்ர்யேலை வெளியாட்கள் அழித்ததை கூறுகிறது. நற்செய்தியில், இயேசுவின் இறைபணியை கெட்ட ஆவியால் தடுப்பவர்களை இயேசு கண்டு கொள்கிறார். ஜேம்ஸின் கடிதமோ, திருச்சபைக்குள் நடக்கும் ப்ரச்னைகளையும், கிறிஸ்தவர்களே கிறிஸ்தவர்களுக்கு எதிராக கலகம் செய்வதையும் எடுத்து காட்டுகிறார்.
பொறாமையும், சுய நலமும் தான் இன்று திருச்சபையில் நடக்கும் ஒவ்வொரு ஊழலுக்கும் காரணமாக இருக்கின்றன. பங்கில் உள்ள ஊழியர்களிடையே ஆன மோதலும், இறைசேவை செய்யும் நண்பர்களிடையே ஏற்படும் பிரிவும், தன்னார்வ ஊழியர்களை வெளியே தள்ளப்படுவதும், கிறிஸ்தவ குடும்பங்களில் ஏற்படும் பிரிவுகளும், கத்தோலிக்க விசுவாசத்தில் இருந்து கத்தோலிக்கர்கள் தள்ளபடுவதும், மிக கேவலமான நடைத்தை ஆகும், இது பொறாமையாலும், சுய நலத்தாலும் ஏற்படுகிறது.
ஒவ்வொரு பிரிவிற்கும் உள்ள முக்கியமான மூல காரணத்தை ஆராய்ந்தால், சுய நலத்தால் ஏற்படும் ஆசை ஆகும். நேர்மையாகவும், மிகவும் கூர்ந்து ஆராய்ந்து பார்த்தால், நமக்கு கடவுளின் மூலம் இதனை சுலபமாக தீர்த்திட வழி தெரியும். பிறரில், நீங்கள் ப்ரச்னை உண்டு என்று அறிந்த பின்பும், அதனால், நீங்கள் கவலை படவில்லை என்றால், உங்களுக்குள்ளும் சுய நலமான எண்ணங்கள் உள்ளது தானே?
இதற்கு இயேசு தீர்வு வழங்குகிறார்: "' ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் (சுய நலத்தினால் தோன்றும் ஆசைஅவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும் ' "
சுய நலத்தினால் வரும் ஆசைகள், பாவத்திற்குள்ளானவை, ஏனெனில், மற்றவர்களிடத்தில் இருந்து வரும் வெற்றியை பிடுங்கிகொள்வது போன்றதாகும். நமக்கு என்ன தேவையாக இருந்தாலும், அது நல்ல விசயமாக இருந்தால், கடவுளிடம் கேட்க வேண்டும், பரிசுத்த ஆவியோடு இனைந்து , நமது நோக்கத்தை அடையவேண்டும். ஆனால், அது நமக்காக மட்டும் இருந்து விட கூடாது.
நாம் என்ன ஜெபிக்க்றோம், கடவுளிடம் என்ன கேட்கிறோமோ, அது பங்கிற்கோ, சமூகத்திற்கோ, குடும்பம் முழுதிற்கோ நன்மை பயக்குமெனில், கடவுள் கண்டிப்பாக தருவார். மற்றவர்களுக்கு எப்படியெல்லாம் உதவ முடிய்மென்ற ஆசையில், அமைதியுடனும், துய ஆசையுடனும், இரக்கத்துடனும் நாம் வேண்டினால், கண்டிப்பாக கிடைக்கும் மேலும் பலன் பெறுமாறு கடவுள் தருகிறார்.
© 2012 by Terry A. Modica

Friday, September 5, 2008

செப்டம்பர் 7, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

செப்டம்பர் 7, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 23வது ஞாயிறு
Ezek 33:7-9
Ps 95:1-2, 6-9
Rom 13:8-10
Matt 18:15-20
http://vailankannishrine.org/live/vailailivetelecast.html
மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 18

15 ' உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும். 16 இல்லையென்றால் ' இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும் ' என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக் கொண்டு போங்கள். 17 அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில் திருச்சபையிடம் கூறுங்கள். திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும். 18 மண்ணுலகில் நீங்கள் தடைசெய்பவை அனைத்தும் விண்ணுலகிலும் தடைசெய்யப்படும்; மண்ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 19 உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார். 20 ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். '
(thanks to www.arulvakku.com)
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

இன்றைய ஞாயிறின் நற்செய்தி, பரிசுத்தத்திற்கும், உண்மைக்கும், எல்லா சரியான செயல்களுக்கும், நாம் துணை நிற்க வேண்டும், நாம் அதற்காக குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. மேலும், பாவ உலகில் உள்ளவர்களை மாற்றுவதற்கும் நாம் துணை செய்ய வேன்டும் என்று கூறுகிறது. நாம் அவ்வாறு செய்யவில்லையென்றால், நாமும் அந்த பாவிகளை போல பாவம் செய்பவர்கள் ஆவோம். நமக்கும் அந்த பொறுப்பிருக்கிறது (முதல் வாசகம்)

நாம் கருனையுடனும், இரக்கத்துடனும் , பாவிகளை அனுகவில்லையென்றால், அதுவும் ஒரு பாவமாகும். (இரண்டாவது வாசக்கம்).

திருச்சபை சமூகத்துடனும், உங்கள் கோரிக்கைகளை வைத்து, அவர்களும் உங்களோடு இனைந்து, அவர்களையும் உங்களுக்காக பேச அழைக்க வேன்டும், என இன்றைய நற்செய்தியில், யேசு அறிவுறுத்துகிறார். அவர்களுடைய ஜெபத்துக்காகவும் நாம் அவர்களோடு சேரவேன்டும் என வலியுறுத்துகிறார்.


முதலில், நாம் பாவிகளுடன் பேசவேண்டும். பாவிகள் அவர்களையும் மற்றும் பலரையும் அவர்கள் பாவத்தினால் பாதிக்கிறார்கள் என்று நாம் அறிந்தால்,(எல்லா பாவங்களும் துன்பத்தை கொடுக்கும். நாம் அதை அறிந்தாலும், அறியாவிட்டாலும், நிச்சயம் பாதிப்பு இருக்கும்), நாம் அதன் விளைவுகளை , அவர்களிடத்தில் சொல்லவில்லையென்றால், நமது அமைதி அன்பிற்கு எதிரானது ஆகும், அக்கறையில்லாமயை காட்டுகிறது.

நாம் உண்மையை பகிர்ந்து கொண்டால், நாம் குற்ற உணர்விலிருந்து, விடுபட்டுவிடுகிறோம். ஆனால், நாம் அவர்களை அன்பு செய்வதை மட்டும் நிறுத்தி விட கூடாது. அதனால், நாம் சிலரை அழைத்து கொண்டு, மேலும் அதிக முயற்சிஉடன் பாவிகளை அவர்கள் பாவங்களிலிருந்டு விடுபட வைக்க வேண்டும். அந்த முயற்சி தோல்வியடந்தால்,மேலும் பலரை சேர்த்து கொண்டு நமது முயற்சியை தொடரவேண்டும்.

எல்லா முறையும் நமது முயற்சி தோல்வியடைந்தால், நாம் நமது முயற்சியை கைவிட்டுவிடவேண்டும். மற்றும் அவர்களிடமிருந்து தள்ளியிருக்க வேண்டும். உண்மையில் அவர்கள் தான் நம்மிடமிருந்து பிரிந்து இருக்கிறார்கள். அவர்கள் தான் நம்மை விட்டு விலகி செல்கின்றனர். யேசு எவ்வாறு யூதரல்லாதவர்களையும், வரி வசூலிப்பவர்களை (அன்புடன்) நடத்தினார் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். எப்போதுமே அவர்கள் மேல் அன்பு கொள்வதில் எந்த தடுமாற்றமும் யேசுவிடம் இல்லை. மேலும் அவர்களுக்காக மரணமடைய ஆவல் கொண்டார். தன்னையே தயார்படுத்கிகொண்டார்.