Showing posts with label முழு இதயத்தோடும். Show all posts
Showing posts with label முழு இதயத்தோடும். Show all posts

Friday, October 21, 2011

23 அக்டோபர் 2011, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

23 அக்டோபர் 2011, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 30ம் ஞாயிறு
Ex 22:20-26
Ps 18:2-4, 47, 51
1 Thes 1:5c-10
Matt 22:34-40

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 22

முதன்மையான கட்டளை
(மாற் 12:28 - 34; லூக் 10:25 - 28)
34 இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர்.35 அவர்களிடையே இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன்,36 ' போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது? ' என்று கேட்டார்.37அவர், ' உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து. ' 38 இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை.39 ' உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக ' என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை.40 திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன ' என்று பதிலளித்தார்.
(thanks to www.arulvakku.com)


இன்றைய ஞாயிறின் நற்செய்தி, நம்மையும் , நமது சகோதரர்களையும் அன்பு செய்யாமல், கடவுளை அன்பு செய்ய முடியாது என்பதனை நமக்கு நினைவுபடுத்துகிறது.


நமது முழு உள்ளத்தோடும், ஆண்மாவோடும், எல்லா நேரங்களிலும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் கடவுளை அன்பு செய்ய நமக்கு கடினமாக இருந்தால், நாம், நமது நேரத்தை நமது சுய தேவைகளுக்காகவும், மற்றவர்களுக்காகவும், நம் திட்டங்களுக்காகவும் செலவழிக்கிறோம்.


கண்டிப்பாக நாம் மற்றாவர்களை அன்பு செய்ய அவர்களோடு நேரம் செலவிட வேண்டும். நம் தேவைகளுக்காகவும் நாம் நேரம் ஒதுக்க வேண்டும், அதன் மூலம் நாம் நம்மை அன்பு செய்வது போல மற்றாவர்களை அன்பு செய்ய முடியும். நமது தேவைகளை நாம் தான் செய்து கொள்ள வேண்டும். நம்மிடம் அதிகமாக இருந்தால் தான், மற்றவர்களோடு அதனை பகிர்ந்து கொள்ள முடியும், போதுமான ஆற்றல், உற்சாகம், இரக்கம், பொறுமை, இன்னும் பல நமக்கு தேவயாக இருக்கிறது. அதே போல நாம் நம்மையே , நம் தேவைகளையே பார்த்து கொண்டிருந்தால், மற்றவர்களின் தேவைகளை நாம் ஒதுக்கி தள்ளிவிடுவோம்.

அதனால் இப்போது ஒரு கேள்வி எழுகிறது: எதை முதலில் செய்ய வேண்டும், எதை அடுத்து செய்ய வேண்டும்: மாறாக, கடவுளுக்கு எவ்வளவு நேரம் செலவிட வேண்டும்? நமக்கு எவ்வளவு நேரம் செலவிடவேண்டும்? மற்றவர்களுக்காக நாம் எவ்வளவு நேரம் செலவிடவேண்டும், தியாகம் செய்ய வேண்டும் ?

கடவுளை முதலில் வைத்து, அவரோடு கூட உள்ள உறவிற்கு முதல் வாய்ப்பாக கொடுத்தால், நமக்கு சரியாக எதற்கு எப்பொழுதெல்லாம் நேரம் செலவிட வேண்டும் என்று தெரியும். கடவுளோடு உள்ள உறவு தான், நம்மில் இல்லாத தேவைகளை பூர்த்தி செய்யும். கடவுளோடு உள்ள நட்புறவு தான், மற்றவர்கள் மேல் அன்பை பகிர கஷ்டமாக இருந்தாலும் , நமக்கு உற்சாகம் தந்து மற்றவர்களை அன்பு செய்ய வைக்கும்.கடவுளோடு நாம் முழு நாளும் கடவுளோடு இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.


கடவுளை நம்பியே, அவரை சார்ந்து இருந்தால், மற்றவர்களையும், நம்மையும் நம்மால் அன்பு செய்ய முடியும். அவருடைய வழிகாட்டுதலுக்காக நாம் அவரிடம் வேண்டினால், குணப்படுத்த வேண்டினால், ஆற்றல் கொடுக்க வேண்டினால், முழு உள்ளத்தோடும், முழு ஆண்மாவோடும் அவரை அன்பு செய்தால், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணீத்துளியும் அன்புடன் இருந்தால், நம்மால் நம்மையும் , மற்றவர்களையும் அன்பு செய்ய முடியும்.

© 2011 by Terry A. Modica

Friday, October 24, 2008

அக்டோபர் 26, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

அக்டோபர் 26, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 30வது ஞாயிறு

Ex 22:20-26
Ps 18:2-4, 47, 51
1 Thes 1:5c-10
Matt 22:34-40

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 22

34 இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர். 35 அவர்களிடையே இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன், 36 ' போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது? ' என்று கேட்டார். 37 அவர், ' உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து. ' 38 இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. 39 ' உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக ' என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை. 40 திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன ' என்று பதிலளித்தார்.




இன்றைய ஞாயிறின் நற்செய்தியில், "நாம் மற்றவர்களை அன்பு செய்யாமலும், நம்மையே அன்பு செய்யாமலும், கடவுளை அன்பு செய்ய முடியாது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கடவுளுக்கு தான் முதல் வாய்ப்பு.

நாம் கடவுளை நமது முழு மனதுடனும், முழு ஆத்ம திருப்தியோடும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கனமும் அன்பு செய்ய நம்மால் இயலவில்லை. நமக்கு மிகவும் க்ஷ்டமாக இருக்கிறது. ஏனெனில், அதிகமான நேரங்களில், நமது மனம் மற்றவர்களை பற்றியும், நம்மை பற்றியும் யோசிக்கிறது. அதிலேயே நாம் நேரம் செலவிடப்படுகிறது.

ஆமாம், மற்றவர்களை நோக்கி நமது எண்ணம் இருந்தால் தான் நாம் அவர்களை அன்பு செய்ய முடியும். மேலும் நமது எண்ணங்கள் நம்மை பற்றி இருந்தால் தான், நாம் நம்மையே அன்பு செய்ய முடியும். நமது தேவைகள் மிகவும் முக்கியமானவைதான், நமது தேவைகளை பூர்த்தி செய்ய நாம் கடைமைபட்டிருக்கிறோம். அப்படியில்லையென்றால், நாம் மற்றவர்களோடு எப்படி பகிர்ந்து கொள்வது? மேலும், எல்லாவற்றையும் நாமே வைத்து கொள்ள கூடாது.

தற்போதைய கேள்வி: எதற்கு முதலிடம் கொடுப்பது? எது முதன்மையானது? வேறு மாதிரி கேட்டால்: நாம் கடவுளோடு எவ்வளவு நேரம் செலவழிப்பது? நம்மை பற்றி, நமது தேவைகளுக்காக எவ்வளவு நேரம் செலவ்ழிப்பது? மற்றவர்களுக்காக நமது நேரங்களையும், தேவைகளையும், தியாகம் செய்ய வேண்டும்.?

நமது முதன்மை வாய்ப்பாக, கடவுளை முதலில் நிறுத்தி, அவருடைய உறவிற்கு முதலிடம் கொடுத்தோமானால், மற்ற காரியங்களுக்கான நேரம் செலவிட நம்மால் முடியும். கடவுளுடைய நட்பு, நம்மால் முடியாத தேவைகளால் ஏற்படும் காயங்களை குணமாக்குகிறது. இந்த உந்துதல் தான், நம்மை மற்றவர்கள் மேல் அன்பு காட்ட வைக்கிறது, அது மிகவும் கடினமாக இருந்தாலும், நம்மை மற்றவர்களோடு அன்பு செய்ய வைக்கிறது. மேலும், நாள் முழுதும், கடவுளோடு நட்புறவு வைத்து கொள்ள , அவரோடு இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.


நாம் நம் மேல் அன்பு கொள்ளவும், பிறரை அன்பு செய்யவும், நாம் கடவுளை முதலில் அன்பு செய்து, அவரை நம்பி இருந்தாலே, நாம் நமது தேவைகளில் வெற்றி பெறுவோம். வழிகாட்டவும், குணப்படுத்தவும், நமது சக்திக்காகவும், கடவுளை நம்பி இருந்தால், நாம் கடவுளை முழுமனதுடன் அன்பு செய்கிறோம். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கனமும், நாம் அவர் அன்பிலேயே இருக்கிறோம்.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm