Friday, October 24, 2008

அக்டோபர் 26, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

அக்டோபர் 26, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 30வது ஞாயிறு

Ex 22:20-26
Ps 18:2-4, 47, 51
1 Thes 1:5c-10
Matt 22:34-40

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 22

34 இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர். 35 அவர்களிடையே இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன், 36 ' போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது? ' என்று கேட்டார். 37 அவர், ' உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து. ' 38 இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. 39 ' உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக ' என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை. 40 திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன ' என்று பதிலளித்தார்.




இன்றைய ஞாயிறின் நற்செய்தியில், "நாம் மற்றவர்களை அன்பு செய்யாமலும், நம்மையே அன்பு செய்யாமலும், கடவுளை அன்பு செய்ய முடியாது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கடவுளுக்கு தான் முதல் வாய்ப்பு.

நாம் கடவுளை நமது முழு மனதுடனும், முழு ஆத்ம திருப்தியோடும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கனமும் அன்பு செய்ய நம்மால் இயலவில்லை. நமக்கு மிகவும் க்ஷ்டமாக இருக்கிறது. ஏனெனில், அதிகமான நேரங்களில், நமது மனம் மற்றவர்களை பற்றியும், நம்மை பற்றியும் யோசிக்கிறது. அதிலேயே நாம் நேரம் செலவிடப்படுகிறது.

ஆமாம், மற்றவர்களை நோக்கி நமது எண்ணம் இருந்தால் தான் நாம் அவர்களை அன்பு செய்ய முடியும். மேலும் நமது எண்ணங்கள் நம்மை பற்றி இருந்தால் தான், நாம் நம்மையே அன்பு செய்ய முடியும். நமது தேவைகள் மிகவும் முக்கியமானவைதான், நமது தேவைகளை பூர்த்தி செய்ய நாம் கடைமைபட்டிருக்கிறோம். அப்படியில்லையென்றால், நாம் மற்றவர்களோடு எப்படி பகிர்ந்து கொள்வது? மேலும், எல்லாவற்றையும் நாமே வைத்து கொள்ள கூடாது.

தற்போதைய கேள்வி: எதற்கு முதலிடம் கொடுப்பது? எது முதன்மையானது? வேறு மாதிரி கேட்டால்: நாம் கடவுளோடு எவ்வளவு நேரம் செலவழிப்பது? நம்மை பற்றி, நமது தேவைகளுக்காக எவ்வளவு நேரம் செலவ்ழிப்பது? மற்றவர்களுக்காக நமது நேரங்களையும், தேவைகளையும், தியாகம் செய்ய வேண்டும்.?

நமது முதன்மை வாய்ப்பாக, கடவுளை முதலில் நிறுத்தி, அவருடைய உறவிற்கு முதலிடம் கொடுத்தோமானால், மற்ற காரியங்களுக்கான நேரம் செலவிட நம்மால் முடியும். கடவுளுடைய நட்பு, நம்மால் முடியாத தேவைகளால் ஏற்படும் காயங்களை குணமாக்குகிறது. இந்த உந்துதல் தான், நம்மை மற்றவர்கள் மேல் அன்பு காட்ட வைக்கிறது, அது மிகவும் கடினமாக இருந்தாலும், நம்மை மற்றவர்களோடு அன்பு செய்ய வைக்கிறது. மேலும், நாள் முழுதும், கடவுளோடு நட்புறவு வைத்து கொள்ள , அவரோடு இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.


நாம் நம் மேல் அன்பு கொள்ளவும், பிறரை அன்பு செய்யவும், நாம் கடவுளை முதலில் அன்பு செய்து, அவரை நம்பி இருந்தாலே, நாம் நமது தேவைகளில் வெற்றி பெறுவோம். வழிகாட்டவும், குணப்படுத்தவும், நமது சக்திக்காகவும், கடவுளை நம்பி இருந்தால், நாம் கடவுளை முழுமனதுடன் அன்பு செய்கிறோம். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கனமும், நாம் அவர் அன்பிலேயே இருக்கிறோம்.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: