ஜூலை 6 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை:
Zec 9:9-10
Ps 145:1-2, 8-11, 13-14
Rom 8:9, 11-13
Matt 11:25-30
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 11
25 அவ்வேளையில் இயேசு, ' தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். 26 ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம். 27 என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார் ' என்று கூறினார். 28 மேலும் அவர், ' பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். 29 நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். 30 ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது ' என்றார்.
(thanks to www.arulvakku.com)
மறையுரை
பல வேலைகள் செய்யும்போதும், பங்கு , கோவில் சேவைகளில் ஈடுபடும்போதும், யேசுவை மற்றவர்களுக்கு எடுத்து செல்லும்போதும், உங்களுக்கு பாரச்சுமை அழுத்துகிறதா? வேலை சுமை அதிகமாயுள்ளதா?
நமக்கு அதிக போராட்டங்களை சந்திக்கிறோம், பல சிலுவைகளை சுமக்கிறோம்.பலருக்கு உதவி செய்ய வேண்டியுள்ளது. இதனால், நமக்கு பல வேலை சுமையாகிறது, அதனால், நாம் மிகவும் அயர்ச்சி அடைகிறோம். இருந்தாலும், யேசு இன்றைய நற்செய்தியில் சொல்கிறார், "என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது " அவர் நம்மிடம் செய்ய சொல்லும் செயல்கள் யாவும், அவ்வளவு பளுவானது அல்ல.
அது எப்படி முடியும்?
வாழ்க்கையில் உள்ள பொறுப்புகள், வேலைகள் நம்மை சோர்வடைய செய்யும். ஏனெனில், கடவுள் நமக்கு கொடுத்த பொறுப்புகளை விட நாம் அதிகமாக செய்கிறோம். அல்லது, யேசு கொடுத்த சிலுவைகளிலிருந்து தப்பிக்க, நமது சொந்த வேலைகளை இழுத்து போட்டு செய்கிறோம். நமது வேலை பளு நம்மை ஆற்றல் இல்லாமல் செய்தால், கடவுள் நம்மை சோர்வடைய செய்கிரார். ஏனெனில், அவர் நமக்கு எச்சரிக்கை செய்கிறார்: உங்கள் வேலை பளுவை குறைத்து கொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கையை சுலபமானதாக ஆக்கி கொள்ளுங்கள். மாற்றத்தை உண்டாக்குங்கள்!. செபங்களில் அதிக நேரம் செலவிடுங்கள். என்கிறார் கடவுள். இது உங்களுக்கு கோபத்தையும், ஆங்காரத்தையும் தூண்டுமெனில், நமது சுய நலங்கள் தான், நமது வாழ்வை சுல்பமானதாக்கி கொள்ள தூன்டுகின்றன ஆனால், அதுவே நமக்கு மிகவும் கடினமாக மாறிவிடுகிறது என கடவுள் நமக்கு எடுத்து சொல்கிறார்.
கடவுளின் சேவையை ஏற்று கொள்வதற்கு முன், நாம் நம்முடைய தேவைகளை கவனித்து கொள்ள வேண்டும். யேசுவின் சுமை நாம் ஏற்று கொள்ளாமல், மற்றவர்களுக்கு தள்ளி விட ஆசைபட்டால், அவரின் சுமை நமக்கு பளுவானதாக இருக்கும். யேசுவோடு சேர்ந்து, சேவை செய்திட நம்மால் எவ்வள்வு முடியுமோ, அவ்வளவு தான் அவர் நமக்கு கொடுப்பார். அப்போது தான், நமது கோபமும், ஆற்றாமையும், தானாக நீங்கிவிடும்.மேலும், நாமும், பரிசுத்த பெரும் ஆனந்தம், திருப்தி அடைவோம். ஏனினில், யேசுவின் ஆற்றலும், திறனும், நம்ம் சேவை பளுவோடு சேர்ந்து விடுகிறது.
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Friday, July 4, 2008
Saturday, June 28, 2008
ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஜுன் 29, 2008
Acts 12:1-11
Ps 34:2-9
2 Tim 4:6-8, 17-18
Matt 16:13-19
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 16
13 இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, ' மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்? ' என்று கேட்டார். 14 அதற்கு அவர்கள், ' சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர் ' என்றார்கள். 15 ' ' ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்? ' என்று அவர் கேட்டார். 16 சீமோன் பேதுரு மறுமொழியாக, ' நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன் ' என்று உரைத்தார். அதற்கு இயேசு, ' யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன். 17 ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். 18 எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. 19 விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் ' என்றார்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தி வாசகங்களில், ஒரு 'நல்லாயனுக்கு' அல்லது 'மேய்ப்பனுக்கு' உள்ள பரிசுத்த தகுதிகளை குறிப்பிட்டு சொல்லப்படுகிறது. இந்த தகுதிகள் எல்லாம், ஆற்றல்கள் அனைத்தும், கிறிஸ்துவ தலைமைத்துவத்திற்கு தேவையானவை. இந்த தலைமைத்துவம் குருக்களுக்கு மட்டுமல்ல, பெற்றோர்கள், ஆசிரியர்கள், கோவில் ஊழியர்கள் மற்றும் பலர்.
பேதுரு யேசுவை அங்கீகரித்து, அவரை மெசியா என்று அழைத்த பிறகு, அவரை யேசு அர்ச்சித்து, இந்த திருச்சபையின் தலைமை குருத்துவராக நியமித்தார். அவர் வெளிப்படுத்திய மெசியா என்ற அங்கீகாரத்தை மற்றவர்களும் வெளிப்படுத்த வேண்டும் என்று ஆனையிட்டார். இன்றைய உலகில், நமது பங்கு விசயங்களில், விழாக்களில், தலைமை பொறுப்பை ஏற்று ஈடுபடும்போது, நமக்கும் இந்த மெசியாவை உலக்குக்கு சொல்ல பொறுப்பு இருக்கிறது. யேசு எப்படி என்று நாம் அக்கறையுடன் எடுத்து காட்ட வேண்டும். பங்கு கூட்டங்களுக்கு பொறுப்பாளர்களாக இருப்பதும், பாடல் குழுவினருக்கு தலைமை ஏற்று நடத்துவதும், வேதாகம பாடங்கள் நடத்துவதும், மறை மாவட்ட பொறுப்புகளில் இருப்பதும், இந்த நற்செயலுக்குன்டான வாகனங்களாகும். அது நம்மை யேசுவின் மீட்பு செயலுக்கு உகந்தவராக்கும்.
நாம், முதல் வாசகத்தில் பார்ப்பது போல, பவுல், அவருடைய மேய்ப்பு பனியில், யேசுவை போல, அவரும் அதிகம் துன்புற்றார். நாமும் உண்மையாக கடவுளரசை இந்த உலகிற்கு எடுத்து செல்ல ஈடுபட்டால், நாமும் பல துன்பங்களை சந்திக்க வேண்டியிருக்கும். யேசுவின் பரிசுத்த ஆவியில், நாம் ஆற்றலையும், வழிகாட்டுதலையும் பெற்று, நமது வெற்றிக்கு தூணாயிருக்கும். யேசு நம் முன்னே செல்கிறார், பரிசுத்த ஆவி நாம் யாரிடம் கடவுளரசை எடுத்து செல்கிறோமோ, அவர்களது இதயத்தை தயார் படுத்துகிறது.
சாத்தானின் கூண்டுக்குள் செல்லும் ஒருவனை காப்பாற்றாமல், அபாயங்களில் இருக்கும் ஒருவரை காப்பாற்றாதவர்கள் , யேசுவை உன்மையாக பின் செல்லாதவர்கள் ஆவர். ஏனெனில் இது தான், கிறிஸ்துவின் முழு வேலையாக இருந்து கொண்டு இருக்கிறது.
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
ஜுன் 29, 2008
Acts 12:1-11
Ps 34:2-9
2 Tim 4:6-8, 17-18
Matt 16:13-19
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 16
13 இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, ' மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்? ' என்று கேட்டார். 14 அதற்கு அவர்கள், ' சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர் ' என்றார்கள். 15 ' ' ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்? ' என்று அவர் கேட்டார். 16 சீமோன் பேதுரு மறுமொழியாக, ' நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன் ' என்று உரைத்தார். அதற்கு இயேசு, ' யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன். 17 ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். 18 எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. 19 விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் ' என்றார்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தி வாசகங்களில், ஒரு 'நல்லாயனுக்கு' அல்லது 'மேய்ப்பனுக்கு' உள்ள பரிசுத்த தகுதிகளை குறிப்பிட்டு சொல்லப்படுகிறது. இந்த தகுதிகள் எல்லாம், ஆற்றல்கள் அனைத்தும், கிறிஸ்துவ தலைமைத்துவத்திற்கு தேவையானவை. இந்த தலைமைத்துவம் குருக்களுக்கு மட்டுமல்ல, பெற்றோர்கள், ஆசிரியர்கள், கோவில் ஊழியர்கள் மற்றும் பலர்.
பேதுரு யேசுவை அங்கீகரித்து, அவரை மெசியா என்று அழைத்த பிறகு, அவரை யேசு அர்ச்சித்து, இந்த திருச்சபையின் தலைமை குருத்துவராக நியமித்தார். அவர் வெளிப்படுத்திய மெசியா என்ற அங்கீகாரத்தை மற்றவர்களும் வெளிப்படுத்த வேண்டும் என்று ஆனையிட்டார். இன்றைய உலகில், நமது பங்கு விசயங்களில், விழாக்களில், தலைமை பொறுப்பை ஏற்று ஈடுபடும்போது, நமக்கும் இந்த மெசியாவை உலக்குக்கு சொல்ல பொறுப்பு இருக்கிறது. யேசு எப்படி என்று நாம் அக்கறையுடன் எடுத்து காட்ட வேண்டும். பங்கு கூட்டங்களுக்கு பொறுப்பாளர்களாக இருப்பதும், பாடல் குழுவினருக்கு தலைமை ஏற்று நடத்துவதும், வேதாகம பாடங்கள் நடத்துவதும், மறை மாவட்ட பொறுப்புகளில் இருப்பதும், இந்த நற்செயலுக்குன்டான வாகனங்களாகும். அது நம்மை யேசுவின் மீட்பு செயலுக்கு உகந்தவராக்கும்.
நாம், முதல் வாசகத்தில் பார்ப்பது போல, பவுல், அவருடைய மேய்ப்பு பனியில், யேசுவை போல, அவரும் அதிகம் துன்புற்றார். நாமும் உண்மையாக கடவுளரசை இந்த உலகிற்கு எடுத்து செல்ல ஈடுபட்டால், நாமும் பல துன்பங்களை சந்திக்க வேண்டியிருக்கும். யேசுவின் பரிசுத்த ஆவியில், நாம் ஆற்றலையும், வழிகாட்டுதலையும் பெற்று, நமது வெற்றிக்கு தூணாயிருக்கும். யேசு நம் முன்னே செல்கிறார், பரிசுத்த ஆவி நாம் யாரிடம் கடவுளரசை எடுத்து செல்கிறோமோ, அவர்களது இதயத்தை தயார் படுத்துகிறது.
சாத்தானின் கூண்டுக்குள் செல்லும் ஒருவனை காப்பாற்றாமல், அபாயங்களில் இருக்கும் ஒருவரை காப்பாற்றாதவர்கள் , யேசுவை உன்மையாக பின் செல்லாதவர்கள் ஆவர். ஏனெனில் இது தான், கிறிஸ்துவின் முழு வேலையாக இருந்து கொண்டு இருக்கிறது.
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Friday, June 20, 2008
ஜூன் 22, 2008 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஜூன் 22, 2008 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 12வது ஞாயிறு
Jer 20:10-13
Ps 69:8-10, 14, 17, 33-35
Rom 5:12-15
Mt 10:26-33
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 10
26 ' எனவே, அவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஏனெனில் வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறியமுடியாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை. 27 நான் உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். காதோடு காதாய்க் கேட்பதை வீட்டின் மேல்தளத்திலிருந்து அறிவியுங்கள். 28 ஆன்மாவைக் கொல்ல இயலாமல். உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள். 29 காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றுள் ஒன்று கூட உங்கள் தந்தையின் விருப்பமின்றித் தரையில் விழாது. 30 உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றது. 31 சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதிருங்கள். 32 ' மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன். 33 மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன்
(thanks to www.arulvakku.com)
நீ இருளில் இருந்த நேரத்தை அல்லது பாவத்தில் விழுந்த நேரத்தை நினைத்து பார். அல்லது கடவுள் உன்னை நிராகரித்ததை அல்லது உனது வேண்டுதல்கள் கிடைக்காத போது, உன்னுடைய பரிசுத்த அன்பளிப்புகள் மூடப்பட்ட நேரங்களை நினைத்து பார். அந்த நேரங்களில் யேசு உன்னிடம் என்ன சொல்கிறார்? உன் காதோரோம் ரகசியமாக என்ன சொல்கிறார். இன்றைய நற்செய்தியில் யேசு இவ்வாறு சொல்கிறார்:" நான் உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். "
பரிசுத்த ஆவியின் மூலமாக, யேசு உங்களை நற்செய்தி உலகெங்கும் கூற உங்களை அழைக்கிறார், உங்களுக்கு ஆசிர்வாதத்தையும், அதிகாரத்தையும் உங்களுக்கு கொடுக்கிறார். உங்கள் மூலமாக இருளில் இருக்கும் மற்றவர்களும் நற்செய்தியை கேட்கவேண்டும் என கடவுள் விரும்புகிறார். நற்செய்தியை மிகவும் தைரியத்துடனும், சத்தமாகவும், முழங்குங்கள், அப்பொழுது தான், அதை கேட்க விரும்புவர்கள், அவர்கள் செய்யும் செயல்களை விட்டு விட்டு உங்கள் மூலம் நற்செய்தியை கேட்க ஆரம்பிப்பர். உங்களது வாழ்வில், யேசு எவ்வாறு உதவினார் என்பதை உலகிற்கு எடுத்து சொல்ல பயப்படாதீர்கள். யேசு எப்படி உங்கள் பாவ வாழ்விலிருந்து மீட்டு, நல் வழிக்கு கொண்டு சென்றார் என்பதை எடுத்து கூறுங்கள்.
நீங்கள் இவ்வள்வு துனிவுடன், யேசுவின் நற்செய்தியை கூறுகிறபொழுது, பலர் உங்களை பரிகாசம் செய்வர். ஜெரமியாவை முதல் வாசகத்தில் செய்வது போல. ஆனால், கடவுள் நம்மோடு இருக்கிறார். "எல்லாம் வல்ல இறைவனாக" எனவே நாம் தைரியத்துடன் இருக்க வேண்டும். மேலும், உங்களை பரிகாசம் செய்தவர்கள், தடுமாறு விழ்வார்கள். யேசு "யாருக்கும் அஞ்ச வேண்டாம்" என்று கூறுகிறார். கடவுள் உங்களை பார்த்து கொள்வார்.
யேசுவை மக்கள் முன்னிலையில் ஏற்றுகொண்டவர்களை, அவரும் ஏற்றுகொள்கிறார். நமது விசுவாசத்திற்காக கேலி செய்யப்பட்டாலோ, பரிகாசம் செய்தாலோ, கடவுள் உங்களை அரவனைத்து ஆறுதல் செய்வார். அவர் நம்மை பற்றி என்ன நினைக்கிறார் என்பது முக்கியமே தவிர மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. யேசு சொல்வதை கேளுங்கள். உங்கள் இதயத்தில், அவர் இரகசியமாய் சொல்வதை கேளுங்கள். அவர் உங்களில் உள்ள நல்லதை தான், நல்ல குணத்தைதான் உங்கள் மதிப்பிடாக வைத்திருக்கிறார்.
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
ஆண்டின் 12வது ஞாயிறு
Jer 20:10-13
Ps 69:8-10, 14, 17, 33-35
Rom 5:12-15
Mt 10:26-33
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 10
26 ' எனவே, அவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஏனெனில் வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறியமுடியாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை. 27 நான் உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். காதோடு காதாய்க் கேட்பதை வீட்டின் மேல்தளத்திலிருந்து அறிவியுங்கள். 28 ஆன்மாவைக் கொல்ல இயலாமல். உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள். 29 காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றுள் ஒன்று கூட உங்கள் தந்தையின் விருப்பமின்றித் தரையில் விழாது. 30 உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றது. 31 சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதிருங்கள். 32 ' மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன். 33 மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன்
(thanks to www.arulvakku.com)
நீ இருளில் இருந்த நேரத்தை அல்லது பாவத்தில் விழுந்த நேரத்தை நினைத்து பார். அல்லது கடவுள் உன்னை நிராகரித்ததை அல்லது உனது வேண்டுதல்கள் கிடைக்காத போது, உன்னுடைய பரிசுத்த அன்பளிப்புகள் மூடப்பட்ட நேரங்களை நினைத்து பார். அந்த நேரங்களில் யேசு உன்னிடம் என்ன சொல்கிறார்? உன் காதோரோம் ரகசியமாக என்ன சொல்கிறார். இன்றைய நற்செய்தியில் யேசு இவ்வாறு சொல்கிறார்:" நான் உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். "
பரிசுத்த ஆவியின் மூலமாக, யேசு உங்களை நற்செய்தி உலகெங்கும் கூற உங்களை அழைக்கிறார், உங்களுக்கு ஆசிர்வாதத்தையும், அதிகாரத்தையும் உங்களுக்கு கொடுக்கிறார். உங்கள் மூலமாக இருளில் இருக்கும் மற்றவர்களும் நற்செய்தியை கேட்கவேண்டும் என கடவுள் விரும்புகிறார். நற்செய்தியை மிகவும் தைரியத்துடனும், சத்தமாகவும், முழங்குங்கள், அப்பொழுது தான், அதை கேட்க விரும்புவர்கள், அவர்கள் செய்யும் செயல்களை விட்டு விட்டு உங்கள் மூலம் நற்செய்தியை கேட்க ஆரம்பிப்பர். உங்களது வாழ்வில், யேசு எவ்வாறு உதவினார் என்பதை உலகிற்கு எடுத்து சொல்ல பயப்படாதீர்கள். யேசு எப்படி உங்கள் பாவ வாழ்விலிருந்து மீட்டு, நல் வழிக்கு கொண்டு சென்றார் என்பதை எடுத்து கூறுங்கள்.
நீங்கள் இவ்வள்வு துனிவுடன், யேசுவின் நற்செய்தியை கூறுகிறபொழுது, பலர் உங்களை பரிகாசம் செய்வர். ஜெரமியாவை முதல் வாசகத்தில் செய்வது போல. ஆனால், கடவுள் நம்மோடு இருக்கிறார். "எல்லாம் வல்ல இறைவனாக" எனவே நாம் தைரியத்துடன் இருக்க வேண்டும். மேலும், உங்களை பரிகாசம் செய்தவர்கள், தடுமாறு விழ்வார்கள். யேசு "யாருக்கும் அஞ்ச வேண்டாம்" என்று கூறுகிறார். கடவுள் உங்களை பார்த்து கொள்வார்.
யேசுவை மக்கள் முன்னிலையில் ஏற்றுகொண்டவர்களை, அவரும் ஏற்றுகொள்கிறார். நமது விசுவாசத்திற்காக கேலி செய்யப்பட்டாலோ, பரிகாசம் செய்தாலோ, கடவுள் உங்களை அரவனைத்து ஆறுதல் செய்வார். அவர் நம்மை பற்றி என்ன நினைக்கிறார் என்பது முக்கியமே தவிர மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. யேசு சொல்வதை கேளுங்கள். உங்கள் இதயத்தில், அவர் இரகசியமாய் சொல்வதை கேளுங்கள். அவர் உங்களில் உள்ள நல்லதை தான், நல்ல குணத்தைதான் உங்கள் மதிப்பிடாக வைத்திருக்கிறார்.
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Friday, June 13, 2008
ஜூன் 15 2008 நற்செய்தி, மறையுரை
ஜூன் 15 2008
ஆண்டின் 11 வது ஞாயிறு
நற்செய்தி, மறையுரை
இன்றைய நற்செய்தியில், யேசு மக்களின் தேவையை அறிந்து எவ்வாறு அவர்கள் மீது பரிவு கொண்டார் என்பதை காட்டுகிறது. அவருடைய இருதயம் அவர்களுக்காக வலித்தது. ஏனெனில், அவர்கள் அனைவரும் ஒதுக்கப்பட்டோர், ப்ரச்னைக்குள்ளானவர்கள் என்று அவர் அறிந்திருந்தார். அவர் அதற்கு என்ன செய்தார்? அவர்களுக்கு மேய்ப்பனாக இருப்பதற்கு பதிலாக, அவர் சீடர்களை நோக்கி எல்லாருக்கும் மேய்ப்பனாக இருங்கள் என்று கட்டளையிடுகிறார்.
இன்றைய உலகில், பலர் ப்ரச்னைக்குள்ளாகும்போதும், ஒதுக்கபடும்போது, துன்பத்திற்கு உள்ளாகும் போதும் , நாம் என்ன நினைக்கிறோம், அவர்களுக்கு சரியான காப்பாளர் இல்லை, அல்லது உதவிக்கு ஆள் இல்லை. பல கோவில்களில், குருவானவர் இல்லாமல் இருக்கிற போது, மற்றும், பங்கு சேவைகளுக்கு தேவையான ஆட்கள் இல்லாத போதும், நாம் யேசு கூறுவது, அதிக மேய்ப்பாளர்களை அனுப்புங்க்ள என்று யேசுவை நோக்கி கேட்கிறோம். யேசு நமது தோள் மேல் தட்டி, "நீயே அந்த வேலையை செய்" என்கிறார்.
நாம் குருகுலத்திற்கு அதிக பேர் வரவேண்டும் என கடவுளிடம் வேண்டுகிறோம். மிகவும் குறைவானவர்களே செமினரி பள்ளிக்கு செல்கிறார்கள். யேசு "இதற்காக ஜெபம் செய்து கொண்டே இருக்காதீர்கள், நீங்களும் பல வேலைகள் செய்ய வேண்டியுள்ளது, எழுந்து சென்று உங்கள் வேலையை ஆரம்பியுங்கள் " என்று கூறுகிறார்.
நிறைய பேர் கடவுள் அவர்கள் வேண்டுதலை கேட்கவில்லை, அவர்கள் விண்ணப்பத்திற்கு பதிலளிக்கவில்லை என்று கூறுவதை கேட்டிருப்பீர்கள். யேசு அவர்கள் விண்ணப்பத்திற்கு நம் மூலமாக பதிலளிக்கிறார். நம்மில் ஒரு சிலர் தான் யேசுவுக்கு நம்மை முழுவதுமாக அர்ப்பணித்து, அவரின் செயலுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறோம். அநியாயங்களுக்கும், மற்ற தீய சக்திகளுக்கு எதிராக குரல் கொடுக்க தேவையான கிறிஸ்தவர்கள் நம்மிடையே இல்லை. அதனால், பலர் துன்பங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடவுள் இதனை பற்றி கவலை கொள்ளாதவ் தோற்றமளிக்கிறார்.
யேசு அந்த முழு நாட்டிற்கும் சேவை செய்பவராக இருந்தார். சீடர்கள் அவருக்கு உதவியாக இருந்தனர். அவர் மூன்று வருடம் மிக அதிகமாகவே அறுவடை செய்தார். குரு மேய்ப்பாளருக்கென்றே சில கடமைகள் இருக்கும், அவர் அதனை செய்யும்போது, அதனை தவர மற்ற சேவைகள்/செயல்கள் அனைத்து நம்மால் செய்ய முடியும்,. குருவானவர் உதவியுடன், நாம் அந்த செயல்கள் செய்யலாம். இதன் மூலம், எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். இவ்வாறு செய்தால், இந்த திருச்சபை முழுமையானதாகவும், பரிசுத்தமானதாகவும் இருக்கும், மேலும், இன்னும் சிறப்பாக மணமாற்றத்தை செய்ய முடியும்.
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
ஆண்டின் 11 வது ஞாயிறு
நற்செய்தி, மறையுரை
இன்றைய நற்செய்தியில், யேசு மக்களின் தேவையை அறிந்து எவ்வாறு அவர்கள் மீது பரிவு கொண்டார் என்பதை காட்டுகிறது. அவருடைய இருதயம் அவர்களுக்காக வலித்தது. ஏனெனில், அவர்கள் அனைவரும் ஒதுக்கப்பட்டோர், ப்ரச்னைக்குள்ளானவர்கள் என்று அவர் அறிந்திருந்தார். அவர் அதற்கு என்ன செய்தார்? அவர்களுக்கு மேய்ப்பனாக இருப்பதற்கு பதிலாக, அவர் சீடர்களை நோக்கி எல்லாருக்கும் மேய்ப்பனாக இருங்கள் என்று கட்டளையிடுகிறார்.
இன்றைய உலகில், பலர் ப்ரச்னைக்குள்ளாகும்போதும், ஒதுக்கபடும்போது, துன்பத்திற்கு உள்ளாகும் போதும் , நாம் என்ன நினைக்கிறோம், அவர்களுக்கு சரியான காப்பாளர் இல்லை, அல்லது உதவிக்கு ஆள் இல்லை. பல கோவில்களில், குருவானவர் இல்லாமல் இருக்கிற போது, மற்றும், பங்கு சேவைகளுக்கு தேவையான ஆட்கள் இல்லாத போதும், நாம் யேசு கூறுவது, அதிக மேய்ப்பாளர்களை அனுப்புங்க்ள என்று யேசுவை நோக்கி கேட்கிறோம். யேசு நமது தோள் மேல் தட்டி, "நீயே அந்த வேலையை செய்" என்கிறார்.
நாம் குருகுலத்திற்கு அதிக பேர் வரவேண்டும் என கடவுளிடம் வேண்டுகிறோம். மிகவும் குறைவானவர்களே செமினரி பள்ளிக்கு செல்கிறார்கள். யேசு "இதற்காக ஜெபம் செய்து கொண்டே இருக்காதீர்கள், நீங்களும் பல வேலைகள் செய்ய வேண்டியுள்ளது, எழுந்து சென்று உங்கள் வேலையை ஆரம்பியுங்கள் " என்று கூறுகிறார்.
நிறைய பேர் கடவுள் அவர்கள் வேண்டுதலை கேட்கவில்லை, அவர்கள் விண்ணப்பத்திற்கு பதிலளிக்கவில்லை என்று கூறுவதை கேட்டிருப்பீர்கள். யேசு அவர்கள் விண்ணப்பத்திற்கு நம் மூலமாக பதிலளிக்கிறார். நம்மில் ஒரு சிலர் தான் யேசுவுக்கு நம்மை முழுவதுமாக அர்ப்பணித்து, அவரின் செயலுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறோம். அநியாயங்களுக்கும், மற்ற தீய சக்திகளுக்கு எதிராக குரல் கொடுக்க தேவையான கிறிஸ்தவர்கள் நம்மிடையே இல்லை. அதனால், பலர் துன்பங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடவுள் இதனை பற்றி கவலை கொள்ளாதவ் தோற்றமளிக்கிறார்.
யேசு அந்த முழு நாட்டிற்கும் சேவை செய்பவராக இருந்தார். சீடர்கள் அவருக்கு உதவியாக இருந்தனர். அவர் மூன்று வருடம் மிக அதிகமாகவே அறுவடை செய்தார். குரு மேய்ப்பாளருக்கென்றே சில கடமைகள் இருக்கும், அவர் அதனை செய்யும்போது, அதனை தவர மற்ற சேவைகள்/செயல்கள் அனைத்து நம்மால் செய்ய முடியும்,. குருவானவர் உதவியுடன், நாம் அந்த செயல்கள் செய்யலாம். இதன் மூலம், எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். இவ்வாறு செய்தால், இந்த திருச்சபை முழுமையானதாகவும், பரிசுத்தமானதாகவும் இருக்கும், மேலும், இன்னும் சிறப்பாக மணமாற்றத்தை செய்ய முடியும்.
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Friday, June 6, 2008
ஜூன் 8, 2008 நற்செய்தி , மறையுரை:
ஜூன் 8, 2008 நற்செய்தி , மறையுரை:
ஆண்டின் 10 வது ஞாயிறு
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 9
9 இயேசு அங்கிருந்து சென்ற போது மத்தேயு என்பவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம், ' என்னைப் பின்பற்றி வா ' என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். 10 பின்பு அவருடைய வீட்டில் பந்தியில் அமர்ந்திருந்தபோது வரி தண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் வந்து இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். 11 இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரிடம், ' உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்? ' என்று கேட்டனர். 12 இயேசு இதைக் கேட்டவுடன், ' நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. 13 ' பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் ' என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக் கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன் ' என்றார்.
(www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், நாம் யேசுவை போல் எப்படி நடந்து கொள்ள வேண்டும் குறிப்பிட்டு உள்ளது. யாரெல்லாம் இந்த சமுகத்தில் ஒதுக்கபடுகிறார்களோ, அவர்களை நாம் எப்படி நெருங்கி, அவர்கள் கூடவே இருந்து அவர்களுக்கு உதவியாக இருக்க முடியும். உங்கள் பங்கில், யாரெல்லாம் ஒதுக்கபட்டவர்கள், அல்லது கண்டுகொள்ளபடாதவர்கள்? யாரெல்லாம், எந்த ஒரு பங்கு நிகழ்ச்சிகளிலும், கலந்து கொள்ளாதவர்கள், அவர்கள் அழைக்கபடவில்லையா? உங்கள் வேலையிடத்தில், உங்களை அவர்களுக்காக வேண்டிகொள்ள சொல்வார்கள், ஆனால் அவர்கள் கோவிலுக்கு செல்வதில்லை. அவர்கள் அதற்கு தகுதி ஆனவர்கள் இல்லை என தள்ளப்பட்டவர்களா? யாரெல்லாம், உங்கள் பங்கில், எந்த ஒரு நிகழ்ச்சிகளுக்கும் அழைக்கபடுவதில்லை? ஏனெனில், அவர்கள் வித்தியாசமானவர்கள், அதிக பாவம் செய்பவர்களாய் இருக்கிறார்களா? அல்லது வேரு காரணமா?
இவர்கள் எல்லாம் நம்மை சுற்றி இருக்கும் மத்தேயுகள். யேசு கூப்பிட்டவுடன், மத்தேயு அவர் பின் சென்றார். யாரும் அவரை அழைக்காமல் இருந்தால், யேசுவின் சீடராய அவர் ஆகியிருக்க முடியுமா? முடியாது. ஏனெனில், வரி வசூலிப்பாவர் எவராக இருந்தாலும், அவரை கழுவு நீருக்கு சமமாக யூத சமூகத்தில் பாவிப்பார்கள்.
அதிகமான நேரங்களில், நமக்கு தெரிந்தவர்கள், அவர்கள் திருப்பலிக்கு வராதவர்கள், அல்லது பங்கு நிகழ்ச்சிகளுக்கு வராதவர்கள், எல்லாம், அவர்கள் இந்த குழுவிற்கு உகந்தவர்கள் அல்ல என்று நினைப்பவர்கள், மேலும், அவர்களை யாரும் அழைக்கவில்லை. மேலும், நாம் பல தடவை அவர்களுக்கு அழைப்பு விடுத்தும், அவர்களை எல்லோரும் ஏற்று கொள்வார்கள் என்று நம்ப வைத்தாலும், நமது பல முயற்சிகளிலும், அவர்கள் ஏற்று கொள்ள வில்லையெனில், அவர்கள் லாயக்கில்லாதவர்கள் என்று நாம் தவறாக தீர்ப்பிட கூடாது.
மணமாற்றுதல் என்பது, நாம் அவர்களோடு சேர்ந்து நடந்து, மிகவும் கருணையுடன் நல்ல நட்பை உண்டாக்கி கொண்டால் தான் அது பயனுள்ளதாக கூடும். இதனால், நாம் அவர்களோடு அடிக்கடி சேர்ந்து பல ஆக்க பூர்வமான செயல்களில் ஈடுபடவேண்டும் என்றில்லை. ஆனால், ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். மத்தேயும் யேசுவின் பன்ன்ரண்டு சீடர்களுல் ஒருவராகி, ஆரம்ப கால திருச்சபை வளர மிகவும் உறுதுணையாக இருந்தார். நமது அழைப்புகள், நாம் கனவில் கூட நிணைக்க முடியாத விழைவுகள் ஏற்படுத்து என்பதை நினைவில் கொள்.!
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
ஆண்டின் 10 வது ஞாயிறு
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 9
9 இயேசு அங்கிருந்து சென்ற போது மத்தேயு என்பவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம், ' என்னைப் பின்பற்றி வா ' என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். 10 பின்பு அவருடைய வீட்டில் பந்தியில் அமர்ந்திருந்தபோது வரி தண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் வந்து இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். 11 இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரிடம், ' உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்? ' என்று கேட்டனர். 12 இயேசு இதைக் கேட்டவுடன், ' நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. 13 ' பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் ' என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக் கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன் ' என்றார்.
(www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், நாம் யேசுவை போல் எப்படி நடந்து கொள்ள வேண்டும் குறிப்பிட்டு உள்ளது. யாரெல்லாம் இந்த சமுகத்தில் ஒதுக்கபடுகிறார்களோ, அவர்களை நாம் எப்படி நெருங்கி, அவர்கள் கூடவே இருந்து அவர்களுக்கு உதவியாக இருக்க முடியும். உங்கள் பங்கில், யாரெல்லாம் ஒதுக்கபட்டவர்கள், அல்லது கண்டுகொள்ளபடாதவர்கள்? யாரெல்லாம், எந்த ஒரு பங்கு நிகழ்ச்சிகளிலும், கலந்து கொள்ளாதவர்கள், அவர்கள் அழைக்கபடவில்லையா? உங்கள் வேலையிடத்தில், உங்களை அவர்களுக்காக வேண்டிகொள்ள சொல்வார்கள், ஆனால் அவர்கள் கோவிலுக்கு செல்வதில்லை. அவர்கள் அதற்கு தகுதி ஆனவர்கள் இல்லை என தள்ளப்பட்டவர்களா? யாரெல்லாம், உங்கள் பங்கில், எந்த ஒரு நிகழ்ச்சிகளுக்கும் அழைக்கபடுவதில்லை? ஏனெனில், அவர்கள் வித்தியாசமானவர்கள், அதிக பாவம் செய்பவர்களாய் இருக்கிறார்களா? அல்லது வேரு காரணமா?
இவர்கள் எல்லாம் நம்மை சுற்றி இருக்கும் மத்தேயுகள். யேசு கூப்பிட்டவுடன், மத்தேயு அவர் பின் சென்றார். யாரும் அவரை அழைக்காமல் இருந்தால், யேசுவின் சீடராய அவர் ஆகியிருக்க முடியுமா? முடியாது. ஏனெனில், வரி வசூலிப்பாவர் எவராக இருந்தாலும், அவரை கழுவு நீருக்கு சமமாக யூத சமூகத்தில் பாவிப்பார்கள்.
அதிகமான நேரங்களில், நமக்கு தெரிந்தவர்கள், அவர்கள் திருப்பலிக்கு வராதவர்கள், அல்லது பங்கு நிகழ்ச்சிகளுக்கு வராதவர்கள், எல்லாம், அவர்கள் இந்த குழுவிற்கு உகந்தவர்கள் அல்ல என்று நினைப்பவர்கள், மேலும், அவர்களை யாரும் அழைக்கவில்லை. மேலும், நாம் பல தடவை அவர்களுக்கு அழைப்பு விடுத்தும், அவர்களை எல்லோரும் ஏற்று கொள்வார்கள் என்று நம்ப வைத்தாலும், நமது பல முயற்சிகளிலும், அவர்கள் ஏற்று கொள்ள வில்லையெனில், அவர்கள் லாயக்கில்லாதவர்கள் என்று நாம் தவறாக தீர்ப்பிட கூடாது.
மணமாற்றுதல் என்பது, நாம் அவர்களோடு சேர்ந்து நடந்து, மிகவும் கருணையுடன் நல்ல நட்பை உண்டாக்கி கொண்டால் தான் அது பயனுள்ளதாக கூடும். இதனால், நாம் அவர்களோடு அடிக்கடி சேர்ந்து பல ஆக்க பூர்வமான செயல்களில் ஈடுபடவேண்டும் என்றில்லை. ஆனால், ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். மத்தேயும் யேசுவின் பன்ன்ரண்டு சீடர்களுல் ஒருவராகி, ஆரம்ப கால திருச்சபை வளர மிகவும் உறுதுணையாக இருந்தார். நமது அழைப்புகள், நாம் கனவில் கூட நிணைக்க முடியாத விழைவுகள் ஏற்படுத்து என்பதை நினைவில் கொள்.!
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Friday, May 30, 2008
ஜூன் 1, 2008 , நற்செய்தி , மறையுரை
ஜூன் 1, 2008 , நற்செய்தி , மறையுரை
ஞாயிறு நற்செய்தி மற்றும் மறையுரை
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 7
21 ' என்னை நோக்கி, ' ஆண்டவரே, ஆண்டவரே ' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர். 22 அந்நாளில் பலர் என்னை நோக்கி, ″ ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா? ″ என்பர். 23 அதற்கு நான் அவர்களிடம், ' உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னைவிட்டு அகன்று போங்கள் ' என வெளிப்படையாக அறிவிப்பேன். 24 ' ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறை மீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். 25 மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது. 26 நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். 27 மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங் காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது. '
(www.arulvakku.com)
இன்றைய ஞாயிறு நற்செய்தியில், யேசு நாம் எப்படி அவருக்கு சீடராக இருக்க முடியும் என்று விளக்குகிறார். "என்னை நோக்கி, ' ஆண்டவரே, ஆண்டவரே ' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்." யேசுவிடமிருந்து என்ன கற்று கொண்டீர்களோ அதனை செயல்படுத்துங்கள். அவர் நம்மிடையே தொடர்ந்து நற்செய்தி மூலமும், திருச்சபையின் வாயிலாகவும் நம்மிடையே பேசிகொண்டிருக்கிறார். நாம் அப்படியே நற்செய்தி வார்த்தகளை கேட்டு கொண்டு இருப்பவராக இருக்க முடியாது. நமது மீட்பு, நற்செய்தியைன் படியும், கடவுளின் திருவுளப்படியும் வாழ்வதிலும் தான் அடங்கியிருக்கிறது. நாம் யேசுவின் மேல் விசுவாசம் கொண்டுள்ளவர்கள் என்று கூறிகொண்டு, அவர் சொன்னபடி வாழவில்லையெனில், நாம் "ஆண்டவரே, ஆண்டவரே" என்று கூவிகொண்டு தான் இருக்கிறோம், அவர் பின் சென்று கடவுளோடு மோட்சத்தில் சேரபோவதில்லை.
யேசு குறிப்பிடுவது போல, நாம் செயல்படுத்த ஆரம்பித்தால், இறையரசின் உண்மைகளை, நமது ஒவ்வொரு நாளிலிலும் ஒன்றினைத்து வாழ்ந்து , நாம் இந்த உலகில் ஒரு வித்தியாசத்தை நாம் காட்ட முடியும். எந்த ஒரு போராட்டத்தையும் நாம் தாங்கிகொள்ள முடியும். எவ்வித வழக்கையும், சோதனைகளையும் நாம் தாண்டி வர முடியும். ஏனெனில், நாம் கிறிஸ்துவின் இறப்பிலும், அவரது பாவத்தை வென்ற உயிர்ப்பின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவரின் ஆற்றலில் வாழ்கிறோம். மேலும் நாம் அவரின் சக்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த சக்தி இந்த உலகை வென்ற சக்தி ஆகும்.
ஆனால், நாம் யேசுவின் படிப்பினைகள் நம்மை மாற்ற நாம் அனுமதிக்கவில்லயெனில், நமது வாழ்வு, பல் பிரச்னைகளாழ் சூழ்ந்துள்ள போது, அவைகள் நமது அமைதியை, சந்தோசத்தை அழித்து விடும். கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற உணர்வையும் அழித்து விடும். நாம் இந்த சோதனைகளிலிருந்து மீள , இந்த உலக பாடங்கள் சொல்வது போல, நாம் இந்த சோதனைகளிலிருந்து மீள வேண்டும். மேலும், கிறுஸ்துவின் செல்வாக்கும் நம்மிடம் மெதுவாக வந்து அடையும்.
மேலும், யேசுவின் படிப்பினைகளை இந்த உலகிற்கு எடுத்து சொல்லவில்லையெனில், மற்றவர்கள் இந்த உலகின் அநீதிகள், நிந்தனைகளில் மாட்டி கொண்டு துன்புறும்போது, அதனால், அவர்கள் அழிவிறும்போது, நாமும் அந்த துன்பத்திற்கு ஒரு காரணமாகிவிடுவோம். எந்த ஒரு செயலும் , நற்செய்தி அறிவ்க்காமல் இருக்கும்போதும், யேசுவின் படிப்பினைகளை நாம் உலகிற்கு சொல்லாமல் இருக்கும்போதும், அவர்களின் துன்பத்திற்கு காரணமாகிவிடுவோம். இது மோட்சத்தின் வழி அல்ல. இந்த அக்கறையின்மை மிக பெரிய பாவமாகும். நாம் இறந்த பின்பு, மோட்சத்திற்கு செல்ல, முதலில், யேசுவோடு அவரது சிலுவைக்கு செல்ல வேண்டும். மற்றவர்கள் மேல் நாம் அக்கறை கொண்டு, அவர்களோடு சேர்ந்து சாத்தானுக்கு எதிராக நின்று, நாம் யேசுவோடு மற்றவர்களை இணைக்க வேண்டும்.
நாம் யேசுவிற்காக, யேசுவோடு சேர்ந்து பல நல்ல செயல்கள் செய்யும்போது, பல சோதனைகள் நம்மை தாக்கும். ஆனால், நாம் வீழ்ந்து விட மாட்டோம். மேலும், இன்னும் அதிக ஆற்றலுடன் வளர்வோம்.
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
ஞாயிறு நற்செய்தி மற்றும் மறையுரை
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 7
21 ' என்னை நோக்கி, ' ஆண்டவரே, ஆண்டவரே ' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர். 22 அந்நாளில் பலர் என்னை நோக்கி, ″ ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா? ″ என்பர். 23 அதற்கு நான் அவர்களிடம், ' உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னைவிட்டு அகன்று போங்கள் ' என வெளிப்படையாக அறிவிப்பேன். 24 ' ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறை மீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். 25 மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது. 26 நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். 27 மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங் காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது. '
(www.arulvakku.com)
இன்றைய ஞாயிறு நற்செய்தியில், யேசு நாம் எப்படி அவருக்கு சீடராக இருக்க முடியும் என்று விளக்குகிறார். "என்னை நோக்கி, ' ஆண்டவரே, ஆண்டவரே ' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்." யேசுவிடமிருந்து என்ன கற்று கொண்டீர்களோ அதனை செயல்படுத்துங்கள். அவர் நம்மிடையே தொடர்ந்து நற்செய்தி மூலமும், திருச்சபையின் வாயிலாகவும் நம்மிடையே பேசிகொண்டிருக்கிறார். நாம் அப்படியே நற்செய்தி வார்த்தகளை கேட்டு கொண்டு இருப்பவராக இருக்க முடியாது. நமது மீட்பு, நற்செய்தியைன் படியும், கடவுளின் திருவுளப்படியும் வாழ்வதிலும் தான் அடங்கியிருக்கிறது. நாம் யேசுவின் மேல் விசுவாசம் கொண்டுள்ளவர்கள் என்று கூறிகொண்டு, அவர் சொன்னபடி வாழவில்லையெனில், நாம் "ஆண்டவரே, ஆண்டவரே" என்று கூவிகொண்டு தான் இருக்கிறோம், அவர் பின் சென்று கடவுளோடு மோட்சத்தில் சேரபோவதில்லை.
யேசு குறிப்பிடுவது போல, நாம் செயல்படுத்த ஆரம்பித்தால், இறையரசின் உண்மைகளை, நமது ஒவ்வொரு நாளிலிலும் ஒன்றினைத்து வாழ்ந்து , நாம் இந்த உலகில் ஒரு வித்தியாசத்தை நாம் காட்ட முடியும். எந்த ஒரு போராட்டத்தையும் நாம் தாங்கிகொள்ள முடியும். எவ்வித வழக்கையும், சோதனைகளையும் நாம் தாண்டி வர முடியும். ஏனெனில், நாம் கிறிஸ்துவின் இறப்பிலும், அவரது பாவத்தை வென்ற உயிர்ப்பின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவரின் ஆற்றலில் வாழ்கிறோம். மேலும் நாம் அவரின் சக்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த சக்தி இந்த உலகை வென்ற சக்தி ஆகும்.
ஆனால், நாம் யேசுவின் படிப்பினைகள் நம்மை மாற்ற நாம் அனுமதிக்கவில்லயெனில், நமது வாழ்வு, பல் பிரச்னைகளாழ் சூழ்ந்துள்ள போது, அவைகள் நமது அமைதியை, சந்தோசத்தை அழித்து விடும். கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற உணர்வையும் அழித்து விடும். நாம் இந்த சோதனைகளிலிருந்து மீள , இந்த உலக பாடங்கள் சொல்வது போல, நாம் இந்த சோதனைகளிலிருந்து மீள வேண்டும். மேலும், கிறுஸ்துவின் செல்வாக்கும் நம்மிடம் மெதுவாக வந்து அடையும்.
மேலும், யேசுவின் படிப்பினைகளை இந்த உலகிற்கு எடுத்து சொல்லவில்லையெனில், மற்றவர்கள் இந்த உலகின் அநீதிகள், நிந்தனைகளில் மாட்டி கொண்டு துன்புறும்போது, அதனால், அவர்கள் அழிவிறும்போது, நாமும் அந்த துன்பத்திற்கு ஒரு காரணமாகிவிடுவோம். எந்த ஒரு செயலும் , நற்செய்தி அறிவ்க்காமல் இருக்கும்போதும், யேசுவின் படிப்பினைகளை நாம் உலகிற்கு சொல்லாமல் இருக்கும்போதும், அவர்களின் துன்பத்திற்கு காரணமாகிவிடுவோம். இது மோட்சத்தின் வழி அல்ல. இந்த அக்கறையின்மை மிக பெரிய பாவமாகும். நாம் இறந்த பின்பு, மோட்சத்திற்கு செல்ல, முதலில், யேசுவோடு அவரது சிலுவைக்கு செல்ல வேண்டும். மற்றவர்கள் மேல் நாம் அக்கறை கொண்டு, அவர்களோடு சேர்ந்து சாத்தானுக்கு எதிராக நின்று, நாம் யேசுவோடு மற்றவர்களை இணைக்க வேண்டும்.
நாம் யேசுவிற்காக, யேசுவோடு சேர்ந்து பல நல்ல செயல்கள் செய்யும்போது, பல சோதனைகள் நம்மை தாக்கும். ஆனால், நாம் வீழ்ந்து விட மாட்டோம். மேலும், இன்னும் அதிக ஆற்றலுடன் வளர்வோம்.
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Friday, May 23, 2008
கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழா மே 25, 2008
ஞாயிறு நற்செய்தி, மறையுரை
கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழா
மே 25, 2008
இணைச்சட்டம் (உபாகமம்)
அதிகாரம் 8
2 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் பாலைநிலத்தில் உங்களைக் கூட்டிச் சென்ற எல்லா வழிகளையும் நினைவில் கொள்ளுங்கள். அதன்மூலமே அவர் உங்களை எளியவராக்கினார். அவர்தம் கட்டளைகளை நீங்கள் கடைப்பிடிப்பீர்களோ மாட்டீர்களோ என உங்கள் உள்ளச் சிந்தனையை அறிந்து கொள்ளவும் சோதித்தார். 3 அவர் உங்களை எளியவராக்கினார். உங்களுக்குப் பசியைத் தந்தார். ஆனால், மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் உயிர்வாழ்கின்றார் என்று நீங்கள் தெரிந்துகொள்ளுமாறு, நீங்களும் உங்கள் மூதாதையரும் அறிந்திராத மன்னாவினால் உங்களை உண்பித்தார்.
14 நீங்கள் நெஞ்சில் செருக்குற்று, அடிமைத்தனத்தின் வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து உங்களைக் கூட்டி வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்துவிட வேண்டாம். 15 அவரே, கொள்ளிவாய்ப் பாம்புகளும் தேள்களும் நிறைந்த, நீரற்று வறண்ட நிலமான பரந்த கொடிய பாலைநிலத்தில் உங்களை வழி நடத்தியவர்: இறுகிய பாறையிலிருந்து உங்களுக்காக நீரைப் புறப்படச் செய்தவர். 16 உங்கள் மூதாதையருக்குத் தெரிந்திராத மன்னாவால் பாலைநிலத்தில் உங்களை உண்பித்தவர்: இறுதியில் உங்களுக்கு நல்லது செய்வதற்காக உங்களை எளியவராக்கிச் சிறுமைப்படுத்திச் சோதித்தவரும் அவரே.
கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்
அதிகாரம் 10
16 கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்ளுதல் அல்லவா! அப்பத்தைப்பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்கு கொள்ளுதல் அல்லவா! 17 அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில் தான் பங்கு கொள்கிறோம்.
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 6
51 ' விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். ' 52 ' நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்? ' என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது. 53 இயேசு அவர்களிடம், ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள். 54 எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். 55 எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். 56 எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். 57 வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர். 58 விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர். '
(thanks to www.arulvakku.com )
இன்றைய ஞாயிறு நாம் யேசுவின் திரு உடல் திரு இரத்த பெருவிழாவை கொண்டடுகிறோம். நாம் ஏன் நண்மையை கிறிஸ்துவின் உண்மையான உடலாக, அவரின் உண்மையின் ப்ரசன்னமாக நம்புகிறோம்.
முதல் வாசகம், கடவுள் மனிதர்களின் பசியை ஆற்றியைருக்கிறார், தாகத்தை தீர்த்திருக்கிறார், என்று கூறுகிறது. எப்பொழுதெல்லாம் நாம் கடினமான வாழ்க்கை பயணத்தில் தடைபெற்று, துன்பமடையும்போது, கடவுள் நமக்கு தேவையானதை கொடுக்கிறார். இஸ்ரேயலருக்கு என்னவெல்லாம் செய்தாரோ, அதையெல்லாம், இப்போதும் நமக்கு துன்ப நேரங்களில் செய்கிறார். உண்மையான கிறிஸ்துவின் ப்ரசன்னமாக, நமக்கு தேவையானவற்றை தூய நண்மையாகவும், பரிசுத்த ஆவி மூலமும் கொடுக்கிறார். பரிசுத்த ஆவியானவர் நாம் ஞான்ஸ்நானம் பெற்ற போது நம் உடலில் வந்து நம்மில் வாழ்கிறார். பரிசுத்த ஆவியானவர், நல் வழி காட்டி, நமது பரிசுத்த வாழ்வை வளர செய்கிரார்.
இன்றைய நற்செய்தி நாம் திருப்பலியில் பெறும் கிறிஸ்து உண்மையான யேசுவின் ப்ரசன்னம் என்று கூறுகிறது. திரு உடல் ஒன்றும் அன்பின் குறியீடு கிடையாது. நமது பாலைவன வறண்ட வாழ்வில், நமக்கு இந்த திரு உடலும் திரு இரத்தமும் தேவையாய் இருக்கிறது. பாம்புகளும், தேளுகளும் உள்ள துன்ப வாழ்வில், யேசு உணமையான உடலுடனமும், திரு இரத்தத்துடனும், நமது பசியையும், தாகத்தையும் தீர்க்கிறார். நாம் அவரை விழுங்கும்போது, யேசுவும் நம்மை விழுங்குகிறார். அவரை நம்மில் இழுத்துகொள்ளும்போது, அவர் நம்மை அவரில் இழுத்துகொள்கிறார். இந்த ஒன்றினைப்பில், நாம் நமது சோதனையில் நடந்து , அவரின் ஆறுதலோடு , வெற்றி அடைகிறோம்.
இரண்டாவது வாசகம், "திருவிருந்து உண்ணும்போதும், பருகும்போதும், கிறிஸ்துவோடு ஒன்றினைகிறோம்" என்று கூறுகிறது. இந்த திருச்சபை ஒன்றினைப்பின் மூலம், அவர் எல்லாவித உதவிகளையும் நமக்கு செய்கிறார். இந்த ஒற்றுமையில், நமக்கு இல்லாத எந்த ஒரு விசயமும், உணவும், ஆற்றலும், எல்லாருக்கும் பகிரப்படுகிறது. இயேசு நற்செய்தியில் கூறுவது போல, "இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர். ' " மோட்சத்தின் வாழ்வு நமக்கு என்றும் நிறையுள்ளதாய் இருக்கிரது. அங்கே பசியில்லா குறையில்லா நிறைவாழ்வை குறிக்கிறது.
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழா
மே 25, 2008
இணைச்சட்டம் (உபாகமம்)
அதிகாரம் 8
2 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் பாலைநிலத்தில் உங்களைக் கூட்டிச் சென்ற எல்லா வழிகளையும் நினைவில் கொள்ளுங்கள். அதன்மூலமே அவர் உங்களை எளியவராக்கினார். அவர்தம் கட்டளைகளை நீங்கள் கடைப்பிடிப்பீர்களோ மாட்டீர்களோ என உங்கள் உள்ளச் சிந்தனையை அறிந்து கொள்ளவும் சோதித்தார். 3 அவர் உங்களை எளியவராக்கினார். உங்களுக்குப் பசியைத் தந்தார். ஆனால், மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் உயிர்வாழ்கின்றார் என்று நீங்கள் தெரிந்துகொள்ளுமாறு, நீங்களும் உங்கள் மூதாதையரும் அறிந்திராத மன்னாவினால் உங்களை உண்பித்தார்.
14 நீங்கள் நெஞ்சில் செருக்குற்று, அடிமைத்தனத்தின் வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து உங்களைக் கூட்டி வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்துவிட வேண்டாம். 15 அவரே, கொள்ளிவாய்ப் பாம்புகளும் தேள்களும் நிறைந்த, நீரற்று வறண்ட நிலமான பரந்த கொடிய பாலைநிலத்தில் உங்களை வழி நடத்தியவர்: இறுகிய பாறையிலிருந்து உங்களுக்காக நீரைப் புறப்படச் செய்தவர். 16 உங்கள் மூதாதையருக்குத் தெரிந்திராத மன்னாவால் பாலைநிலத்தில் உங்களை உண்பித்தவர்: இறுதியில் உங்களுக்கு நல்லது செய்வதற்காக உங்களை எளியவராக்கிச் சிறுமைப்படுத்திச் சோதித்தவரும் அவரே.
கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்
அதிகாரம் 10
16 கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்ளுதல் அல்லவா! அப்பத்தைப்பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்கு கொள்ளுதல் அல்லவா! 17 அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில் தான் பங்கு கொள்கிறோம்.
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 6
51 ' விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். ' 52 ' நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்? ' என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது. 53 இயேசு அவர்களிடம், ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள். 54 எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். 55 எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். 56 எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். 57 வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர். 58 விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர். '
(thanks to www.arulvakku.com )
இன்றைய ஞாயிறு நாம் யேசுவின் திரு உடல் திரு இரத்த பெருவிழாவை கொண்டடுகிறோம். நாம் ஏன் நண்மையை கிறிஸ்துவின் உண்மையான உடலாக, அவரின் உண்மையின் ப்ரசன்னமாக நம்புகிறோம்.
முதல் வாசகம், கடவுள் மனிதர்களின் பசியை ஆற்றியைருக்கிறார், தாகத்தை தீர்த்திருக்கிறார், என்று கூறுகிறது. எப்பொழுதெல்லாம் நாம் கடினமான வாழ்க்கை பயணத்தில் தடைபெற்று, துன்பமடையும்போது, கடவுள் நமக்கு தேவையானதை கொடுக்கிறார். இஸ்ரேயலருக்கு என்னவெல்லாம் செய்தாரோ, அதையெல்லாம், இப்போதும் நமக்கு துன்ப நேரங்களில் செய்கிறார். உண்மையான கிறிஸ்துவின் ப்ரசன்னமாக, நமக்கு தேவையானவற்றை தூய நண்மையாகவும், பரிசுத்த ஆவி மூலமும் கொடுக்கிறார். பரிசுத்த ஆவியானவர் நாம் ஞான்ஸ்நானம் பெற்ற போது நம் உடலில் வந்து நம்மில் வாழ்கிறார். பரிசுத்த ஆவியானவர், நல் வழி காட்டி, நமது பரிசுத்த வாழ்வை வளர செய்கிரார்.
இன்றைய நற்செய்தி நாம் திருப்பலியில் பெறும் கிறிஸ்து உண்மையான யேசுவின் ப்ரசன்னம் என்று கூறுகிறது. திரு உடல் ஒன்றும் அன்பின் குறியீடு கிடையாது. நமது பாலைவன வறண்ட வாழ்வில், நமக்கு இந்த திரு உடலும் திரு இரத்தமும் தேவையாய் இருக்கிறது. பாம்புகளும், தேளுகளும் உள்ள துன்ப வாழ்வில், யேசு உணமையான உடலுடனமும், திரு இரத்தத்துடனும், நமது பசியையும், தாகத்தையும் தீர்க்கிறார். நாம் அவரை விழுங்கும்போது, யேசுவும் நம்மை விழுங்குகிறார். அவரை நம்மில் இழுத்துகொள்ளும்போது, அவர் நம்மை அவரில் இழுத்துகொள்கிறார். இந்த ஒன்றினைப்பில், நாம் நமது சோதனையில் நடந்து , அவரின் ஆறுதலோடு , வெற்றி அடைகிறோம்.
இரண்டாவது வாசகம், "திருவிருந்து உண்ணும்போதும், பருகும்போதும், கிறிஸ்துவோடு ஒன்றினைகிறோம்" என்று கூறுகிறது. இந்த திருச்சபை ஒன்றினைப்பின் மூலம், அவர் எல்லாவித உதவிகளையும் நமக்கு செய்கிறார். இந்த ஒற்றுமையில், நமக்கு இல்லாத எந்த ஒரு விசயமும், உணவும், ஆற்றலும், எல்லாருக்கும் பகிரப்படுகிறது. இயேசு நற்செய்தியில் கூறுவது போல, "இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர். ' " மோட்சத்தின் வாழ்வு நமக்கு என்றும் நிறையுள்ளதாய் இருக்கிரது. அங்கே பசியில்லா குறையில்லா நிறைவாழ்வை குறிக்கிறது.
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Subscribe to:
Posts (Atom)