Friday, July 19, 2019

ஜூலை 21 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை



ஜூலை 21 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 16ம் ஞாயிறு
Genesis 18:1-10a
Ps 15:1-5
Colossians1:24-28
Luke 10:38-42

கவலைபட வேண்டாம், பயமில்லாமல் இருங்கள்
லூக்கா நற்செய்தி

மார்த்தா மரியாவைச் சந்தித்தல்
38அவர்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது இயேசு ஓர் ஊரை அடைந்தார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா.

39அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

40ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, “ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டு விட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும்என்றார்.

41ஆண்டவர் அவரைப் பார்த்து
மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.

42
ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது
 என்றார்
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், இயேசு, மனக்கலக்கத்தையும், கவலையையும் பற்றி நம்மிடம் பேசுகிறார். அவைகள் நம்மை திசை திரும்புகின்றன.  மனபயத்தையும் , கவலையும் நம் வாழ்க்கையை கட்டுப்படுத்த ஆரம்பித்துவிடும். ஏனெனில் நம் கண்களை கடவுள் மேல் இல்லாமல் திசை திருப்பிவிடும். அதனால் எது தப்பானது என்று நம்மால் கண்டறிய  முடியாது. மேலும், இன்னும் நம் நிலைமை மோசமடைந்து விடும்.
மரியாள் "நல்ல பங்கை" தேர்ந்தெடுத்து கொண்டாள்.   இயேசுவோடு சேர்ந்து, பேரார்வத்துடன் ம் எவ்வித தொந்தரவு இல்லாமல் அவரின் போதனையை கேட்க , மரியாள் தேர்ந்து கொண்டாள்,  அமைதியாக இயேசுவோடு அமர்ந்து, இயேசுவிடம் கற்று கொண்டாள் . நமது கவலைகள் நாம் நினைப்பது போல, கண்டிப்பாக நமது கவலைகள் அவ்வளவு பெரிய விஷயமில்லை.
நமது விரக்தியிலும், கவலையிலும், இருந்து வெளியே வர, இயேசுவின் பாதத்தில் அமர்ந்து நாம் ஜெபிக்கும்பொழுது முடியும். சோதனைகளிலிருந்து வெளியே வர நாம் ஞானத்தையும்  பெற முடியும். மார்த்தா தனது உணவு தயாரிக்கும் வேலையில் யாரும் உதவவில்லை என புலம்புவைத்து கூட சின்ன பாவம் தான். அங்கே நமது கண்கள் இயேசுவை விட்டு அகன்றுவிட்டது. இயேசுவை விட்டு விலக எது தடையாக இருந்தாலும், அது நல்லதில்லை.
நாம் இயேசுவோடு இல்லாமல், அவர் மேல் நமது கண் இல்லாமல்,எப்படி பரிசுத்தமாக இருக்க முடியும் என்று நாம் அவரிடம் கேட்காமல்,  நாம் பரிசுத்த வாழ்வில் முன்னேறமுடியாது. நாம் ஜெப வாழ்விலும், இயேசுவோடு அமைதியாக நேரம் செலவழித்தால் ஒழிய , நாம் இயேசுவை போல அன்பு செய்ய முடியாது. அவர் கொடுக்கும் அன்பையும் நாம் முழுதாக பெற முடியாது. மேலும், இயேசுவோடு இருந்து அவர் போதனையை கேட்டு , அவரின் அன்பில் நிலைத்திருக்க முடியும். பிரசங்க நேரத்திலும், கார் ஒட்டிக்கொண்டு இருக்கும் போதும் நாம் செய்யும் ஜெபம் போதுமானதில்லை.
மன கலக்கங்களும், கவலைகளும் பயத்தின் வெளிப்பாடுகள். எதோ ஒன்று தவறாக நடக்க போகிறது என்று நாம் பயப்படுகிறோம்.  `உண்மையாக கவலை பட காரணம் இருந்தாலும், அதன் மூலம் ஏற்படும் பயம் நம்மை இயேசுவிடம் இருந்து மறைக்கிறது. இந்த பயம் நம்மை திசை திருப்புகிறது. இந்த பயம் தான்,  நமக்கு ஒரு சிக்னல் ஆகும். அதனால், நாம் இயேசுவோடு அமர்ந்து, அவரோடு பேசி,  எது நமக்கு தொந்தரவாக இருக்கிறதோ அதனை  இயேசுவோடு பேசி , அவரிடம் இருந்து பதில் கிடைக்கும். நமக்கு உற்சாகமும் , உறுதிமொழியும் கிடைக்கும்.அதன் மூலம் நமக்கு அமைதி கிடைக்கும்.
© 2019 by Terry A. Modica


Friday, July 12, 2019

ஜூலை 14 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஜூலை 14 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 15ம் ஞாயிறு
Deuteronomy 30:10-14
Ps 69:14,17,30-31,33-34,36-37 or Ps 19:8-11
Colossians 1:15-20
Luke 10:25-37
லூக்கா நற்செய்தி
நல்ல சமாரியர்
25திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், “போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.

26அதற்கு இயேசு
திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?”
 என்று அவரிடம் கேட்டார்.

27அவர் மறுமொழியாக,
உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக
என்று எழுதியுள்ளதுஎன்றார்.

28இயேசு
சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்
 என்றார்.
29அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, “எனக்கு அடுத்திருப்பவர் யார்?” என்று இயேசுவிடம் கேட்டார்.

30அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை: 
ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள்.

31குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார்.

32அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார்.

33ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார்.

34அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார்.

35மறுநாள் இருதெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, ‘இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்என்றார்.
36
கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?”
 என்று இயேசு கேட்டார்.

37அதற்கு திருச்சட்ட அறிஞர், “அவருக்கு இரக்கம் காட்டியவரேஎன்றார். இயேசு
நீரும் போய் அப்படியே செய்யும்
என்று கூறினார்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய  நற்செய்தி: நாம் கடவுளை அன்பு  செய்தோமானால்,  இயற்கையாகவே   மற்றவர்கள் மேல் நாம் கொள்வோம் , அதனால் நமக்கு சில இழப்புகள்   ஏற்பட்டாலும்,நாம் அவர்கள் மேல் அக்கறை கொள்வோம் .

இந்த உலக கவலையை போக்க போதுமான அன்பு உள்ளது

அன்பிற்கு  எதிர்பதம் வெறுப்பு அல்ல. அது அக்கறையின்மை:  பிறரின் தேவையை நிராகரிப்பது,  அக்கறையற்று  இருப்பது, ஒருவரின் வேதனையை அறிந்தும், அதனை போக்க நம்மால் முடிந்தாலும், எதுவும் செய்யாமல் இருப்பது. இன்றைய ஞாயிறின் நற்செய்தியில், நல்ல சமாரியனின் உவமையை இயேசு நமக்கு தருகிறார். அதன் மூலம் முழு மனதுடன் நாம் கடவுளை அன்பு செய்ய வேண்டும் என்றும், முழு சக்தியுடனும், முழு உள்ளத்தோடும், கடவுளை அன்பு செய்யும் போது , கண்டிப்பாக மற்றவர்கள் மேல் அக்கறை கொள்வோம்.புதியவர்களுக்கு, நமக்கு தெரியாதவர்களுக்கும், யாருக்கு உதவக்கூடாதோ அவர்களுக்கும், நம் உதவியால், நமக்கு சில இழப்புகள் ஏற்பட்டாலும்,கண்டிப்பாக உதவி செய்வோம். அவர்கள் மேல் அக்கறை கொள்வோம்.
கிறிஸ்துவின் மூலம் நம்மால், இந்த உலகை மாற்ற முடிந்தாலும், பெரும்பாலான கிறிஸ்தவர்களாகிய நாம்  எந்த தியாகம் செய்யாமலும், மற்றவர்கள் மேல் அக்கறை கொள்ளாமல் இருப்பதாலும் தான், இந்த உலகில் அதிக பிரசினைகள் இங்கே இருந்து கொண்டு இருக்கிறது. நம் வேலை செய்யும் இடத்திலும்,  குடும்பத்திலும் ஏற்படும் பல பிரச்சினைகள் அகலாமல் இருக்க காரணமே நம் அருகில் உள்ள கிறிஸ்தவர்கள் யாரும் முழுமையான அன்பை கடவுள் மேல் கொள்ளாமல் ,மற்றவர்கள் மேல் அக்கறை கொள்வதில்லை. நாம் அனைவருமே முழு அக்கறை எப்போதும் கொள்வதில்லை.
நீங்கள் எந்த அளவிற்கு கடவுள் மேல் அன்பு வைத்துள்ளீர்கள்? நீங்கள் மற்றவர்களுக்காக எந்த அளவிற்கு தியாகம் செய்ய  தயாராய் இருப்பது தான் இதற்கான பதில் உள்ளது. இன்றைய உவமையின் மூலம் இயேசு கற்பித்த உண்மையான அன்பின் இலக்கணம் எது? இயேசுவின் வாழ்வும் , அவர் கூறிய இந்த உவமையும் தான் அன்பின் அடையாளம்.
நாம்  யாருமே  கடவுளை முழுமையாக  அன்பு செய்வதில்லை. உத்தரிக்கிற ஸ்தலத்தில் தான் நாம் முழு அன்பு  செய்யவில்லை  என்று உணர்ந்து , அதற்காக வருந்தி, பல துன்பங்கள் அடைந்து,  இன்னும் நம்மை ஆழ்ந்த அன்பில் ஆழ்த்தி முழுமையான அன்போடு கடவுளின் பரலோகத்தில் செல்வோம். அது வரை ஒவ்வொரு நாளும், நம் வாழ்வை மெருகேற்றி கொள்ள பல வாய்ப்புகள் வரும். (சிறு வலியோடு நாம் ஏற்று கொள்வோம்). ஒவ்வொரு நாளும் நாம் மற்றவர்களை அன்பு செய்ய நமக்கு பல சோதனை நிகழ்வுகள் நடைபெறும்.
தினமும் பரிசுத்த ஆவியிடம், (உங்கள் போதகர், உங்களுக்கு ஆற்றல் கொடுப்பவர், உங்கள் பரிசுத்தத்தின் உற்று ) நீங்களும் கிறிஸ்துவை போல மாற்ற வேண்டிக்கொள்ளுங்கள். கிறிஸ்து மற்றவர்களை எப்படி அன்பு செய்கிறாரோ அதே போல நீங்களும் அன்பு செய்யவேண்டும் என்று பரிசுத்த ஆவியிடம் வேண்டி கொள்ளுங்கள்.
இந்த ஆன்மிக பயிற்சியை தினமும் நாம்  செய்யும்பொழுது,நீங்கள்  புதிய சந்தோசத்தை பெறுவீர்கள், மேலும் மற்றவர்களை எப்படி அணுக வேண்டும், எப்படி  நடத்த வேண்டும் என்றும் நாம் அதிகம் அனுபவம் பெறுவோம். மேலும், கடவுள் மேல் இன்னும் அன்பு செலுத்துவோம். அதன் மூலம் இன்னும் கடவுளோடு நெருங்குவோம்.
© 2019 by Terry A. Modica



Saturday, July 6, 2019

ஜூலை 7 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை


இன்றைய ஜெபம்: ஒன்றிணைந்த இறப்பணிக்கு நிறைய அர்ச்சிக்கப்பட்ட அழைப்புகள் அதிகப்படவேண்டும் என வேண்டுவோம்.
ஜூலை 7 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 14ம் ஞாயிறு
Isaiah 66:10-14c
Ps 66:1-7, 16, 20
Galatians 6:14-18
Luke 10:1-12, 17-20

லூக்கா நற்செய்தி

எழுபத்திரண்டு சீடர்களை அனுப்புதல்
1இதற்குப்பின்பு ஆண்டவர் வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார்.

2அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: 
அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்.

3புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன்.

4பணப்பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம்.

5நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், ‘இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!என முதலில் கூறுங்கள்.

6அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லாவிட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும்.

7அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே; வீடுவீடாய்ச் செல்ல வேண்டாம்.

8நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள்.

9அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்.

10நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அதன் வீதிகளில் சென்று,

11‘எங்கள் கால்களில் ஒட்டியுள்ள உங்கள் ஊர்த் தூசியையும் உங்களுக்கு எதிராக உதறிவிடுகிறோம். ஆயினும் இறையாட்சி நெருங்கி வந்து விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்எனச் சொல்லுங்கள்.

12அந்த நாளில் அவ்வூர் பெறும் தண்டனை சோதோம் நகரினர் பெறும் தண்டனையை விட கடினமாகவே இருக்கும் என உங்களுக்குச் சொல்கிறேன்.
எழுபத்திரண்டு சீடர்களும் திரும்பிவருதல்
17பின்னர் எழுபத்திரண்டு பேரும் மகிழ்வுடன் திரும்பிவந்து, “ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றனஎன்றனர்.

18அதற்கு அவர்
வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன்.
19பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு எதுவுமே தீங்கு விளைவிக்காது.

20
ஆயினும் தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பதுபற்றி மகிழவேண்டாம். மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்
என்றார்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய ஞாயிறு நற்செய்தியில் , இயேசு அவருடைய சீடர்களை நோக்கி "
அறுவடை மிகுதி (கிறிஸ்த்துவுக்குள் மனம் மாற்றுதல்) ; வேலையாள்களோ (மனம் மாற்றுபவர்கள்) குறைவு."  ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்." மேலும் "உங்கள் வழியில் செல்லுங்கள்" என்று கூறி வழி அனுப்புகிறார்.

மனம் மாற்றுபவர்கள் என்று கத்தோலிக்க திருசபையில் நீங்கள் யாரை நினைக்கிறீர்கள்?  நம்மில் பலர்,  குருவானவர்களை நினைக்கிறோம். கண்டிப்பாக இன்னும் பல குருக்கள் உருவாக வேண்டும்.  மேலை நாடுகளில் வயதான பல குருக்களுக்கு  பதிலாக புதிய குருக்கள் வருவதில்லை.

இன்னும் நிறைய தேவ அழைப்புகள் நடைபெற, குருக்கள்  அதிகமாக   நீங்கள் தினமும் ஜெபம் செய்கிறீர்களா?  இதுவும் ஒரு இறைபணியாக நாம் செய்ய வேண்டும் என்று இயேசு சொல்கிறார். "உங்கள் வழியில் செல்லுங்கள்" என்று நம்மிடமும் இயேசு சொல்கிறார். உங்கள் திறமைகள், உங்களுக்கான தனி தகுதிகள் அனைத்தையும் அறுவடைக்காக உபயோகிங்கள் என்று இயேசு சொல்கிறார்.

இயேசு எப்பொழுதுமே ஒன்றிணைந்து செயல் ஆற்றிட விரும்புகிறார். நாம் எல்லோரும் இணைந்து இறைபணி செய்ய ஆரம்பிக்கும் பொழுது தான் திருசபைக்கு தேவையான வேலையாட்கள் கிடைப்பார்கள். -- குருவானவர்கள் ,   பொதுவானவர் - அனைவரும் இணைந்து, அவரவரின் திறமைகளை, தகுதிகளை இறைபனிக்காக தாழ்மையோடு கொடுக்கும் போது  ஒரே அணியின் உறுப்பினர்களாக நாம் செயல்படுவோம்.

போதுமான வேலையாட்கள் உண்டு என்ற நிலைக்கு வர,  "வேறு யாரவது பார்த்து கொள்வார்கள் " என்கிற மனப்பான்மையை விட்டு நாம் வெளியே வரவேண்டும். மேலும், எல்லாமே சரியாக செய்ய வேண்டும் என்கிற மனப்பாண்மையை விட்டு வெளியே வர வேண்டும். இதனை நான் செய்திருந்தால் இன்னும் நன்றாக செய்திருப்பேன் என்று சொல்வதும் கூட,  மற்றவர்களுக்கு உண்டான வாய்ப்பை தடுக்கிறோம்.

நம்மில் பலர் இன்னும் பலருக்கு "எப்படி செய்ய வேண்டும் " என நான் சொல்லி கொடுக்க வேண்டும் என நினைப்போம். அந்த மனப்பான்மையிலிருந்து நாம் வெளியே வரவேண்டும். இதனால், பல திறமையானவர்களை நாம் வெளியே தள்ளுகிறோம். இயேசு மேலும் சொல்கிறார். இறைபணியின் போது  நாம் வேறு எந்த பொருளையும் எடுத்து செல்ல கூடாது  என்று சொல்கிறார். அங்கே என்ன கொடுக்கப்படுகிறதோ  அதனை நாம்  ஏற்று கொள்ளவேண்டும் என்றும் சொல்கிறார்.

அர்ச்சிக்கபட்ட தேவ அழைப்பிற்க்கு நாம் வேண்டி மன்றாடும் போது ,  நாம் ஒன்றுபட்டு இணையும் இறைபணி தான் பதிலாகும். குருவானவர்களும், திருச்சபையில் உள்ளவர்களும்   நமக்கு முன்மாதிரியாக இருப்பவர்கள். அதன் மூலம் பலரை தேவ அழைத்தலுக்கு அழைக்கலாம். ஆனால், பொது நிலையினர் , குருக்களிடம் என்ன எதிர்பார்க்கிறோமோ   (பரிசுத்தமும், இறைபணியின் ஆர்வமும் ), நாமும் செய்ய வேண்டும். ஏன்  அப்படி நாம் எதிர்பார்க்கிறோம். ஏனெனில் அவர்கள், தன்னுடைய குடும்பத்தை விட்டு அவர்கள் இறைபனி செய்ய வந்துள்ளார்கள்.
© 2019 by Terry A. Modica


Saturday, June 22, 2019

கடவுளின் திரு உடல் திரு இரத்தம் பெருவிழா


கடவுளின் திரு உடல் திரு இரத்தம் பெருவிழா
ஜூன் 23 2019
Genesis 14:18-20
Ps 110:1-4
1 Corinthians 11:23-26
Luke 9:11b-17
லூக்கா நற்செய்தி
11அதை அறிந்து திரளான மக்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். அவர்களை அவர் வரவேற்று இறையாட்சியைப் பற்றி அவர்களோடு பேசி, குணமாக வேண்டியவர்களைக் குணப்படுத்தினார்.
12பொழுது சாயத் தொடங்கவே பன்னிருவரும் அவரிடம் வந்து, “இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே; சுற்றிலுமுள்ள ஊர்களுக்கும் பட்டிகளுக்கும் சென்று தங்கவும் உணவு வாங்கிக்கொள்ளவும் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்என்றனர்.

13இயேசு அவர்களிடம்
நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்
 என்றார். அவர்கள், “எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமே உள்ளன. நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால்தான் முடியும்என்றார்கள்.
14ஏனெனில் ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அங்கு இருந்தனர். இயேசு அவருடைய சீடர்களை நோக்கி
இவர்களை ஐம்பது ஐம்பது பேராகப் பந்தியில் அமரச் செய்யுங்கள்
 என்றார்.

15அவர் சொன்னபடியே அனைவரையும் அவர்கள் பந்தியில் அமரச் செய்தார்கள்.

16அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, அவற்றின் மீது ஆசிகூறி, பிட்டு, மக்களுக்குப் பரிமாறுவதற்காகச் சீடரிடம் கொடுத்தார்.

17அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.
ஐந்தாவது ரொட்டி
"அன்பானது ஐந்து ரொட்டி துண்டுகளும் மற்றும் இரண்டு மீன் துண்டுகளுக்கும் சமமானது . நீங்கள் அதனை மற்றவர்களுக்கும் கொடுக்கும் வரை அது சிறியதாகவே காணப்படும்." கலிலேயாவில் உள்ள கடல் அருகே உள்ள கோவிலில் இது எழுதப்பட்டிருக்கிறது. அங்கே தான், இயேசு இந்த சிறிய உணவை பல மடங்காக பெருக்கி அங்கு உள்ள அனைவருக்கும் பசியாற வழங்கினார்.

பலிபீடத்தின் முன்னே பைசைனைட் மொசைக் கல்லால் ரொட்டி துண்டுகளும், மீன்களும் 480 கி பி ஆண்டுகளுக்கு முன்பே செதுக்கப்பட்டு அங்கே இருக்கிறது. அந்த பாறையில் தான் இயேசு அந்த உணவினை ஆசிர்வதித்தார். இருந்தாலும், அந்த மொசைக்கிள் 4 ரொட்டி துண்டுகள் தான் இருக்கும். ஐந்து இல்லை ? ஏன் ? இயேசுவை பாருங்கள்.

அந்த ஐந்தாவது ரொட்டி துண்டு திவ்ய நற்கருணையில் இயேசு இருக்கிறார். ஒவ்வொரு திருப்பலியிலும் நம்மிடம் வருகிறார்.
அந்த திருத்தலத்தின் விளக்கங்கள் இந்த சுட்டியில் உள்ளது. http://gnm-holyland.org/church-of-the-multiplication-mosaic/
திவ்ய நற்கருணை  இயேசுவின் உண்மையான பிரசன்னத்தை விட மேலானது. கிறிஸ்துவின் திரு உடலோடு இணைந்த திருகுழுவுடன் சமுகத்துடன்  மேலானது. பல மடங்காக பெருக்கிய அதிசயத்திற்கு இணையானது. கடவுளிடமிருந்து நாம் ஏதாவது கிடைக்காமல் இருந்தால்,   நமக்கு தேவையான திறமை இல்லாமலிருந்தால், பரிசுத்த  ஆவியின் மூலம் இயேசு திவ்ய நற்கருணையில் நமக்கு கொடுக்கிறார். மேலும் திருப்பலியில் நாம் கலந்து கொள்ளும்பொழுது , நாம் இயேசுவிடம் நமக்கு தேவையானதை கொடுக்க சொல்லி கேட்கலாம்.
இந்த திவ்ய நற்கருணை தான் இந்த உலகில் கடவுளை இணைக்கும் ஒரே கருவியாகும். அதனுடைய முழு அன்பினை நாம் அனுபவிக்காமல் இருப்பதன் அர்த்தம், எப்படி திவ்ய நற்கருணையோடு நம்மை இணைப்பது என்று தெரியாமல் இருக்கிறோம். திவ்ய நற்கருணையை முழுதுமாக நாம் பெற, நாமே முழு திவ்ய நற்கருணையாக மாறவேண்டும். மற்றவர்களுக்காக தியாகம் செய்து வழங்கிய அன்பு தான் திவ்ய நற்கருணை. உங்களுக்கு தேவையான அன்பு கிடைக்கவில்லை என்றால், மற்றவர்களுக்கு உங்கள் அன்பை செலுத்துங்கள், மற்றவர்களுக்கு திவ்ய நற்கருணையாக இருங்கள்.
© 2019 by Terry A. Modica


Saturday, June 8, 2019

ஜூன் 9 2019 ஞாயிறு நச்செய்தி மறையுரை


ஜூன்  9 2019 ஞாயிறு நச்செய்தி மறையுரை
பரிசுத்த ஆவி ஞாயிறு
Acts 2:1-11
Ps 104:1, 24, 29-31, 34
1 Cor 12:3b-7, 12-13 (or Rom 8:8-17)
John 20:19-23 (or John 14:15-16, 23b-26)
யோவான் நற்செய்தி

இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல்
(மத் 28:16-20; மாற் 16:14-18; லூக் 24:36-49)
19அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, 
“உங்களுக்கு அமைதி உரித்தாகுக!”
என்று வாழ்த்தினார்.
20இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.
21இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, 
“உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்”
 என்றார்.✠

22இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, 
“தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

23
எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா”
 என்றார்.✠
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில் இயேசு, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக" என்று சீடர்களை நோக்கி கூறினார். முதலில் அவர்களுக்கு அமைதியை அன்பளிப்பாக கொடுத்தார், அதனால், அவர்கள் கவலையை விட்டு , இயேசுவின் மேல் அவர்கள் பார்வை திரும்பும் என்றும், இயேசுவை அவர்கள் உண்மையாக கண்டு கொள்ள வேண்டும் என்றும் அவர்களின் கருத்ததொற்றுமையை நோக்கத்தை இயேசுவின் பக்கம் திருப்பினார்.
அதன் பிறகு,  தந்தை அனுப்பிய அவரின் இறைப்பணியை தொடருங்கள்  என்று கூறினார். இந்த முறை, "அமைதி உங்களோடு இருப்பதாக" என்பதன் அர்த்தம் , பரிசு ஆவியின் துனையுடன், கடவுளின் இறைப்பணியை நாம் இந்த உலகில்  தொடர்ந்து செய்து வருவதின் பலனாக இருக்கும்.
இயேசு நம்மோடு இருக்கிறார் என்பதே நமக்கு அமைதியை கொடுக்கும்.  இயேசுவை பற்றி நாம் மற்றவர்களுக்கு சொல்லும்போது ஒரு சவால் தான், ஆனால், நமக்கு போதிய தகுதி இல்லை என்றும், அதிகமாக, நம்மை யாராவது, கேலி செய்வார்கள் என்றும், நம்மை நிராகரிப்பார்கள் என்றும் நாம் நினைக்கிறோம். அதனால் தான், இயேசு நமக்கு பரிசுத்த ஆவி கொடுத்தார்.
தந்தை கடவுள் நமக்கு என்ன இறைபணி செய்ய சொன்னாரோ, அதனை செய்ய தேவையானதை பரிசுத்த ஆவி நமக்கு தருகிறார். அதனால், நாம் எல்லா தகுயுடன் தான் இறைபணி செய்கிறோம், மேலும், நம்மை யாராவது நிராகரிக்கும் போது கடவுள் நம்மை தேற்றுவார்.

இயேசுவோடு இணைந்து, பரிசுத்த ஆவியின் துணையோடு நாம் பெரும் பரிசு, நமது உள்ளத்தின் அமைதி,  என்ன நடந்தாலும், அது நமது உள்  அமைதியை பாதிக்காது. நாம் பகிர்ந்து கொள்ளும் நற்செய்தியை அவர்கள் நிராகரித்தால், நம் உள் அமைதி ஒன்றும் மாறாது . பரிசுத்த ஆவி நம்மில் இருந்தால், நம் உள்ளம் என்றும் அமைதியாக இருக்கும்.  அமைதி பரிசுத்த ஆவியின் செயல்.
நற்செய்தியின் முடிவில், இயேசு அப்போஸ்தலர்களுக்கு (முதல் கத்தோலிக்க பாதிரியார்கள்) , பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் கொடுத்தார். அப்போஸ்தலர்கள், குருவானவர்கள்,  இயேசுவின் தெவீக ப்ரசன்னத்துடன் குருவானவர் பாவங்களை மன்னிக்கலாம்.  இயேசு, நமக்கு பாவ சங்கீர்த்தன திருச்சடங்கை நமக்கு கொடுத்து,  அந்த சடங்கின் மூலம் , இயேசு குருவின் உள்ளே பிரசன்னமாக இருக்கிறார்.
அதே மன்னிக்கும் பரிசுத்த ஆவியின் ஆற்றல், நமது பாவ வாழ்வில் நமக்கு அமைதியை கொடுக்கிறது. மன்னிப்பது மிகவும் கடினமான காரியமாக இருந்தால் கூட,  கிறிஸ்துவின் ஆவியோடு இணைந்து நம்மால் முடியும்.நம்மை கழ்டபடுத்தியவர்களை  கூட நாம் மன்னிக்க முடியும்.  அவர்கள் மனம் திரும்பினாலும், திரும்பாவிட்டாலும், நம்மில் அமைதி ஏற்படும்.
© 2019 by Terry A. Modica