மார்ச் 27, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 3ம் ஞாயிறு
Exodus 17:3-7
Ps 95:1-2, 6-9
Romans 5:1-2, 5-8
John 4:5-42
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 4
சமாரியப் பெண் ஒருவரும் இயேசுவும்
.5 அவர் சமாரியாவில் உள்ள சிக்கார் என்னும் ஊருக்கு வந்து சேர்ந்தார். யாக்கோபு தம் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே அந்த ஊர் இருந்தது.6 அவ்வூரில் யாக்கோபின் கிணறும் இருந்தது. பயணத்தால் களைப்புற்றிருந்த இயேசு கிணற்று ஓரமாய் அமர்ந்தார். அப்போது ஏறக்குறைய நண்பகல். 7அவருடைய சீடர் உணவு வாங்குவதற்காக நகருக்குள் சென்றிருந்தனர். சமாரியப் பெண் ஒருவர் தண்ணீர் மொள்ள வந்தார்.8 இயேசு அவரிடம், ' குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும் ' என்று கேட்டார்.9அச்சமாரியப் பெண் அவரிடம், 'நீர் யூதர்; நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?' என்று கேட்டார். ஏனெனில் யூதர்கள் சமாரியரோடு பழகுவதில்லை. 10 இயேசு அவரைப் பார்த்து, ' கடவுளுடைய கொடை எது என்பதையும் ' குடிக்கத் தண்ணீர் கொடும் ' எனக் கேட்பவர் யார் என்பதையும் நீர் அறிந்திருந்தால் நீரே அவரிடம் கேட்டிருப்பீர்; அவரும் உமக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பார் ' என்றார்.11 அவர் இயேசுவிடம், ' ஐயா, தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை; கிணறும் ஆழமானது. அப்படியிருக்க வாழ்வு தரும் தண்ணீர் உமக்கு எங்கிருந்து கிடைக்கும்?12 எம் தந்தை யாக்கோபை விட நீர் பெரியவரோ? அவரே எங்களுக்கு இக்கிணற்றை வெட்டித் தந்தார். அவரும் அவருடைய மக்களும் கால்நடைகளும் இதிலிருந்துதான் தண்ணீர் குடிப்பது வழக்கம் ' என்றார்.13 இயேசு அவரைப் பாhத்து, ' இந்தத் தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும்.14 நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது; நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும் ' என்றார்.15 அப்பெண் அவரை நோக்கி, ' ஐயா, அத்தண்ணீரை எனக்குக் கொடும்; அப்போது எனக்குத் தாகமும் எடுக்காது; தண்ணீர் மொள்ள நான் இங்கு வரத்தேவையும் இருக்காது ' என்றார்.16 இயேசு அவரிடம், ' நீர் போய், உம் கணவரை இங்கே கூட்டிக் கொண்டு வாரும் 'என்று கூறினார்.17 அப்பெண் அவரைப் பார்த்து, ' எனக்குக் கணவர் இல்லையே ' என்றார். இயேசு அவரிடம், ' எனக்குக் கணவர் இல்லை ' என நீர் சொல்வது சரியே.18 உமக்கு ஐந்து கணவர்கள் இருந்தார்கள் என்றாலும் இப்போது உம்முடன் இருப்பவர் உம் கணவர் அல்ல. எனவே நீர் கூறியது உண்மையே ' என்றார்.19 அப்பெண் அவரிடம், ' ஐயா, நீர் ஓர் இறைவாக்கினர் எனக் கண்டுகொண்டேன்.20 எங்கள் முன்னோர் இம்மலையில் வழிபட்டுவந்தனர். ஆனால் நீங்கள் எருசலேமில்தான் வழிபட வேண்டும் என்கிறீர்களே ' என்றார்.21 இயேசு அவரிடம், ' அம்மா, என்னை நம்பும். காலம் வருகிறது. அப்போது நீங்கள் தந்தையை இம்மலையிலோ எருசலேமிலோ வழிபடமாட்டீர்கள்.22 யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம். யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது.23 காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது! அப்போது உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர். தம்மை வழிபடுவோர் இத்தகையோராய் இருக்கவே தந்தை விரும்புகிறார். 24கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும் ' என்றார்.25 அப்பெண் அவரிடம், ' கிறிஸ்து எனப்படும் மெசியா வருவார் என எனக்குத் தெரியும். அவர் வரும்போது அனைத்தையும் எங்களுக்கு அறிவிப்பார் ' என்றார்.26 இயேசு அவரிடம், ' உம்மோடு பேசும் நானே அவர் ' என்றார்.27 அந்நேரத்தில் இயேசுவின் சீடர் திரும்பி வந்தனர். பெண் ஒருவரிடம் அவர் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் வியப்புற்றனர். எனினும் ' என்ன வேண்டும்? ' என்றோ, ' அவரோடு என்ன பேசுகிறீர்? ' என்றோ எவரும் கேட்கவில்லை.28 அப்பெண் தம் குடத்தை விட்டுவிட்டு ஊருக்குள் சென்று மக்களிடம்,29 ' நான் செய்த எல்லாவற்றையும் என்னிடம் சொன்ன மனிதரை வந்து வாருங்கள். அவர் மெசியாவாக இருப்பாரோ! ' என்றார்.30 அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு இயேசுவிடம் வந்தார்கள்.31 அதற்கிடையில் சீடர், ' ரபி, உண்ணும் ' என்று வேண்டினர்.32 இயேசு அவர்களிடம், ' நான் உண்பதற்குரிய உணவு ஒன்று உண்டு. அது உங்களுக்குத் தெரியாது ' என்றார்.33 ' யாராவது அவருக்கு உணவு கொடுத்திருப்பார்களோ ' என்று சீடர்கள் தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.34 இயேசு அவர்களிடம், ' என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு.35 ″ நான்கு மாதங்களுக்குப் பின்தான் அறுவடை ″ என்னும் கூற்று உங்களிடையே உண்டே! நிமிர்ந்து வயல்வெளிகளைப் பாருங்கள். பயிர் முற்றி அறுவடைக்குத் தயாராய் உள்ளது.36 அறுப்பவர் கூலி பெறுகிறார்; நிலைவாழ்வு பெறுவதற்காக மக்களைக் கூட்டிச் சேர்க்கிறார். இவ்வாறு விதைப்பவரும் அறுப்பவரும் ஒருமிக்க மகிழ்ச்சியடைகின்றனர். 37 நீங்கள் உழைத்துப் பயிரிடாததை அறுவடை செய்ய நான் உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் உழைத்தார்கள்; ஆனால் நீங்கள் அந்த உழைப்பின் பயனை அடைந்தீர்கள்.38 இவ்வாறு ' விதைப்பவர் ஒருவர்; அறுவடை செய்பவர் வேறு ஒருவர் ' என்னும் கூற்று உண்மையாயிற்று ' என்றார்.39 \'நான் செய்தவை அனைத்தையும் என்னிடம் சொன்னார்\' என்று சான்று பகர்ந்த பெண்ணின் வார்த்தையை முன்னிட்டு அவ்வவூரிலுள்ள சமாரியர் பலர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர். 40 சமாரியர் அவரிடம் வந்தபோது அவரைத் தங்களோடு தங்குமாறு கேட்டுக்கொண்டனர். அவரும் அங்கு இரண்டு நாள் தங்கினார்.41 அவரது வார்த்தையை முன்னிட்டு இன்னும் பலர் அவரை நம்பினர்.42 அவர்கள் அப்பெண்ணிடம், ' இப்போது உன் பேச்சைக் கேட்டு நாங்கள் நம்பவில்லை; நாங்களே அவர் பேச்சைக் கேட்டோம். அவர் உண்மையிலே உலகின் மீட்பர் என அறிந்து கொண்டோம் ' என்றார்கள்.
(thanks to www.arulvakku.com)
நீங்கள் எதற்கு தாகமாக இருக்கிறீர்கள்? நம்மில் எது குறையாக இருக்கிறதோ அப்பொழுது தான் நமக்கு தாகம் ஏற்படும். நமது உடலுக்கு தண்ணீர் தேவை. நமது உடலுக்கு தண்ணீர் தேவைபடும்போது, நமக்கு தாகம் ஏற்படுகிறது, அப்போது தான் நமது உடல் முழு சக்தியுடனும் நலமாகவும் இருக்கும்.
எப்படி நம் உடலுக்கு தண்ணீர் தேவையோ, அதே போல நமது பரிசுத்த வாழ்விற்கும், நீர் தேவைபடுகிறது. ஆனால், இது வேறு மாதிரியான நீர், வாழும் தண்ணீர், ஞானஸ்நாண தண்ணீர், அது நம் நித்திய வாழ்விற்கு நம்மை சுத்தப்படுத்த்தும் தண்ணீர். இந்த தீர்த்தத்தால் தான், நமக்கு கிறிஸ்துவின் அபரிதமான அன்பும், செல்வமும் நம் வாழ்வில் இருக்கும்.
பரிசுத்த ஆவி நமக்கு வாழ்வை தருபவர். கடவுளின் ஆவியின் ப்ரசன்னத்தை பைபிளில் குறியீடு காட்டும்பொழுது, அந்த குறியீடுகளில் வாழ்வு தரும் நீரும் ஒன்று. இதிலிருந்து, இயேசு அந்த சமாரிய பெண்ணிற்கு, பரிசுத்த ஆவியை தான் கொடுப்பதாக கூறினார் என்பதை நாம் அனுமானிக்க முடியும். ஏன்? இன்னும் சில நாட்களில், பரிசுத்த ஆவியானவர் எல்லோருக்கும், பெந்தகோஸ்தே நாளில் இறங்கி வர இருக்கிறார்.
அந்த பெண் உண்மையை அறிய விரும்பினாள்; பரிசுத்த ஆவியானவர் உண்மை. இயேசு அந்த பெண் விரும்பியதை கொடுக்க விரும்பினார். அந்த பெண் அதன் முலம் மனந்திருந்தி, மீட்பை அவள் பெற்று , அந்த புதிய வாழ்வை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என் இயேசு விரும்பினார்.
போதிய அளவிற்கு நாம் தண்ணீர் குடிக்கவில்லையென்றால் தான், நமக்கு தாகும் எடுக்கும். அதே பரிசுத்த வாழ்வின் தாகம், நமக்கு வேறு வடிவங்களில் ஏற்படும்: மனசஞ்சலம், பயம், நாமே பாவத்திற்கு இடமளித்தல், அல்லது ஏதாவது ஒரு உணர்வு எதையோ நாம் இழந்து விட்டதை போல இருக்கும்.
ஏன், நாம் பரிசுத்த வாழ்வில் , நமக்கு பலதும் இல்லாமல் இருக்கிறது? ஏனெனில், அந்த கிணற்றடியில் இருந்த பெண்ணை போல, நாமும் பாவியாய் இருக்கிறோம், கடவுள் நம்மை குணப்படுத்தவேண்டும். கடவுள் நம்மை குணப்படுத்துகிறார்? போதுமான அளவிற்கு கடவுள் நமது அன்பை கொடுத்து, நம்மை குணப்படுத்துகிறார். ஆனால், அதனை முழுமையாய் நாம் பெறுவதற்கு, நாம் அவர் வார்த்தைகளை முழுமையாக கேட்டு, உண்மையுடன் மாறவேண்டும்.
© 2011 by Terry A. Modica
Friday, March 25, 2011
Friday, March 18, 2011
மார்ச் 20, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
மார்ச் 20, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 2ம் ஞாயிறு
Genesis 12:1-4a
Ps 33:4-5, 18-20, 22
2 Timothy 1:8b-10
Matthew 17:1-9
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 17
இயேசு தோற்றம் மாறுதல்
(மாற் 9:2 - 13; லூக் 9:28 - 36)
1 ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார்.2 அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின.3 இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர்.4 பேதுரு இயேசுவைப் பார்த்து, ' ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா? ' என்றார்.5 அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, ' என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள் ' என்று ஒரு குரல் ஒலித்தது.6 அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள்.7 இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, ' எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள் ' என்றார்.8 அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத்தவிர வேறு எவரையும் காணவில்லை.9 அவர்கள் மலையிலிருந்து இறங்கிவந்தபோது இயேசு, ' மானிட மகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை இக்காட்சியைப்பற்றி எவருக்கும் சொல்லக்கூடாது ' என அவர்களுக்குக் கட்டளையிட்டார்
(thanks www.arulvakku.com)
அந்த உயர்ந்த மலையில், இயேசுவின் முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது, உண்மையான இயேசுவின் ஒளி எல்லோருக்கும் தெரிந்தது. கடவுள் தந்தை " என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள் " என்று சொன்னார்.
நாம் இயேசுவின் வார்த்தைகளை, ஒவ்வொரு முறை கேட்கும்போதும், நமது விசுவாசத்தை இன்னும் தெளிவும், ஞாணமும் தெரிய இயேசுவிடம் நம்மை அளிக்கும்போது , இந்த தோற்ற மாறுதல் நடக்கிறது. எனினும், இப்போது, நமது தோற்றமும் மாறுகின்றது.
இந்த தவக்காலத்தில், நாம் கிறிஸ்துவை போல இருக்கிறோமோ என்று பார்த்து, நமது பாவ வாழ்வை விட்டு, மனந்திரும்பொழுது, நம்மில் இருக்கும் இருளை இயேசுவின் ஒளியால் நிரப்ப அனுமதிக்கிறோம். அதனால், மற்றவர்கள் நம் மூலம் இயேசுவை பார்க்கிறார்கள். இயேசுவும், நம்மில் அவரது ஒளியை ஒளிரச்செய்கிறார்.
இயேசுவின் தோற்றம் மாற்றத்தினால், நாமும் நமது அடையாளத்தை காட்டுகிறது. நமது உண்மையான அடையாளம் என்ன? கடவுளின் உருவத்தினால் நாம் உருவாக்கபட்ட்டிருப்பதும், நம்மில் கடவுள் இருப்பதும் ஆகும்.
இயேசு இந்த மலையில் நடந்த தோற்றம் மாறுதல் அனுபவத்திற்கு பிறகு, சிலுவையின் வேதனைகளை ஏற்று கொள்ள தயாரானார். நாமும், கிறிஸ்துவின் ஒளியால், மாற்றபட்ட பிறகு, , நாமும்,மலையை விட்டு இறங்கி, இயேசுவை இவ்வுலகிற்கு காட்ட வேண்டும். எனினும், திமோத்தியின் வாசகத்தில் கூறியுள்ளது போல, நற்செய்தியை பகிர்ந்து கொள்ளும்பொழுது, நிச்சயம், கடினமாக இருக்கும். ஆனால், ஒவ்வொரு கல்வாரி சிலுவைக்கு பிறகு, ஒரு ஈஸ்டர் இருக்கும் என்பது நமக்கு ஆறுதலை தரும்.
முதலில், நாம் மலையில், நமது நேரத்தை செலவிட வேண்டும். நிறைய நேரம் அங்கே இருந்து, கடவுளின் ஆற்றல் நம்மில் வரும் வரை ஜெபம் செய்திடல் வேண்டும். பிறகு, நாம் தயாராகிவிட்டோம், உற்சாகபடுத்த படுவோம், நாம் மீட்கப்பட்டுவிட்டோம். அதன் மூலம், நமது பாதையில் ஏற்படும் கஷ்டங்களை நம்மால் தாங்கி கொள்ள முடியும்.
நன்றாக கேளுங்கள். கடவுள் உங்களை பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா? அந்த தபோர் மலையில் கடவுள் இயேசுவை பற்றி என்ன சொன்னாரோ, அதையே தான் உங்களை பற்றியும் சொல்கிறார். : "இவர் என் அன்பார்ந்த மகன், இவருக்கு செவி சாயுங்கள்" சிலர் உங்க்ளிடம் கேட்பர், சிலர் கேட்க மாட்டார்கள். ஆனால் நாம் எப்படி கடவுளின் ஒளியுடன் ஒளிர்கிறோம் என்பது, எத்தனை பேர் நம்மிடம் கேட்கிறார்கள் என்பது பொறுத்து அல்ல. நமது தோற்ற மாற்றம், இயேசு நம் மேல் அன்பு கொண்டு , நம்மை பரிசுத்த வாழ்விற்கு வாழ அழைப்பதல் ஏற்படுகிறது.
© 2011 by Terry A. Modica
தவக்காலத்தின் 2ம் ஞாயிறு
Genesis 12:1-4a
Ps 33:4-5, 18-20, 22
2 Timothy 1:8b-10
Matthew 17:1-9
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 17
இயேசு தோற்றம் மாறுதல்
(மாற் 9:2 - 13; லூக் 9:28 - 36)
1 ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார்.2 அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின.3 இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர்.4 பேதுரு இயேசுவைப் பார்த்து, ' ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா? ' என்றார்.5 அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, ' என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள் ' என்று ஒரு குரல் ஒலித்தது.6 அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள்.7 இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, ' எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள் ' என்றார்.8 அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத்தவிர வேறு எவரையும் காணவில்லை.9 அவர்கள் மலையிலிருந்து இறங்கிவந்தபோது இயேசு, ' மானிட மகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை இக்காட்சியைப்பற்றி எவருக்கும் சொல்லக்கூடாது ' என அவர்களுக்குக் கட்டளையிட்டார்
(thanks www.arulvakku.com)
அந்த உயர்ந்த மலையில், இயேசுவின் முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது, உண்மையான இயேசுவின் ஒளி எல்லோருக்கும் தெரிந்தது. கடவுள் தந்தை " என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள் " என்று சொன்னார்.
நாம் இயேசுவின் வார்த்தைகளை, ஒவ்வொரு முறை கேட்கும்போதும், நமது விசுவாசத்தை இன்னும் தெளிவும், ஞாணமும் தெரிய இயேசுவிடம் நம்மை அளிக்கும்போது , இந்த தோற்ற மாறுதல் நடக்கிறது. எனினும், இப்போது, நமது தோற்றமும் மாறுகின்றது.
இந்த தவக்காலத்தில், நாம் கிறிஸ்துவை போல இருக்கிறோமோ என்று பார்த்து, நமது பாவ வாழ்வை விட்டு, மனந்திரும்பொழுது, நம்மில் இருக்கும் இருளை இயேசுவின் ஒளியால் நிரப்ப அனுமதிக்கிறோம். அதனால், மற்றவர்கள் நம் மூலம் இயேசுவை பார்க்கிறார்கள். இயேசுவும், நம்மில் அவரது ஒளியை ஒளிரச்செய்கிறார்.
இயேசுவின் தோற்றம் மாற்றத்தினால், நாமும் நமது அடையாளத்தை காட்டுகிறது. நமது உண்மையான அடையாளம் என்ன? கடவுளின் உருவத்தினால் நாம் உருவாக்கபட்ட்டிருப்பதும், நம்மில் கடவுள் இருப்பதும் ஆகும்.
இயேசு இந்த மலையில் நடந்த தோற்றம் மாறுதல் அனுபவத்திற்கு பிறகு, சிலுவையின் வேதனைகளை ஏற்று கொள்ள தயாரானார். நாமும், கிறிஸ்துவின் ஒளியால், மாற்றபட்ட பிறகு, , நாமும்,மலையை விட்டு இறங்கி, இயேசுவை இவ்வுலகிற்கு காட்ட வேண்டும். எனினும், திமோத்தியின் வாசகத்தில் கூறியுள்ளது போல, நற்செய்தியை பகிர்ந்து கொள்ளும்பொழுது, நிச்சயம், கடினமாக இருக்கும். ஆனால், ஒவ்வொரு கல்வாரி சிலுவைக்கு பிறகு, ஒரு ஈஸ்டர் இருக்கும் என்பது நமக்கு ஆறுதலை தரும்.
முதலில், நாம் மலையில், நமது நேரத்தை செலவிட வேண்டும். நிறைய நேரம் அங்கே இருந்து, கடவுளின் ஆற்றல் நம்மில் வரும் வரை ஜெபம் செய்திடல் வேண்டும். பிறகு, நாம் தயாராகிவிட்டோம், உற்சாகபடுத்த படுவோம், நாம் மீட்கப்பட்டுவிட்டோம். அதன் மூலம், நமது பாதையில் ஏற்படும் கஷ்டங்களை நம்மால் தாங்கி கொள்ள முடியும்.
நன்றாக கேளுங்கள். கடவுள் உங்களை பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா? அந்த தபோர் மலையில் கடவுள் இயேசுவை பற்றி என்ன சொன்னாரோ, அதையே தான் உங்களை பற்றியும் சொல்கிறார். : "இவர் என் அன்பார்ந்த மகன், இவருக்கு செவி சாயுங்கள்" சிலர் உங்க்ளிடம் கேட்பர், சிலர் கேட்க மாட்டார்கள். ஆனால் நாம் எப்படி கடவுளின் ஒளியுடன் ஒளிர்கிறோம் என்பது, எத்தனை பேர் நம்மிடம் கேட்கிறார்கள் என்பது பொறுத்து அல்ல. நமது தோற்ற மாற்றம், இயேசு நம் மேல் அன்பு கொண்டு , நம்மை பரிசுத்த வாழ்விற்கு வாழ அழைப்பதல் ஏற்படுகிறது.
© 2011 by Terry A. Modica
Friday, March 11, 2011
மார்ச் 13, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
மார்ச் 13, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் முதல் ஞாயிறு
Genesis 2:7-9; 3:1-7
Ps 51:3-6, 12-13, 17
Romans 5:12-19
Matthew 4:1-11
________________________________________
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 4
இயேசு சோதிக்கப்படுதல்
(மாற் 1:12 - 13; லூக் 4:1 - 13)
1 அதன்பின் இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலை நிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார்.2 அவர் நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார். அதன் பின் பசியுற்றார்.3 சோதிக்கிறவன் அவரை அணுகி, ' நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும் ' என்றான்.4 அவர் மறுமொழியாக, ' மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர் ' என மறைநூலில் எழுதியுள்ளதே ' என்றார்.5 பின்னர் அலகை அவரை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி,6 ' நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்; ' கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள் ' என்று மறைநூலில் எழுதியுள்ளது ' என்று அலகை அவரிடம் சொன்னது.7 இயேசு அதனிடம், ' ″ உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்கவேண்டாம் ″ எனவும் எழுதியுள்ளதே ' என்று சொன்னார்.8 மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி,9 அவரிடம், ' நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன் ' என்றது.10 அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து, ' அகன்று போ, சாத்தானே, ' உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய் ' என்றும் மறைநூலில் எழுதியுள்ளது ' என்றார்.11 பின்னர் அலகை அவரை விட்டு அகன்றது. உடனே வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர்.
(thanks to www.arulvakku.com)
சோதனைகளை நீங்கள் எப்படி எதிர் கொள்கிறீர்கள்? தவக்காலத்தின் முதல் ஞாயிறு நற்செய்தியில், நமக்கு தனியாக சவால் விடப்படுகிறது. அதன் மூலம், நாம் நமது பயனத்தை இயேசுவோடு சேர்ந்து துவக்குகிறோம். இவ்வுலக வாழ்வில், அவரோடு இனைந்து பரிசுத்த இடத்திற்கு செல்வோம்.
இந்த தவக்காலம் மற்ற தவக்காலத்தை போல அல்ல. போன வருடம், உங்களுடைய தேவைகள் வேறாக இருந்தது, வேறு வளர்ச்சியை , முன்னேற்றத்தையும் எதிர்பார்த்தோம்., நமது புரிதலும், உள்நோக்கமும் வேறாக இருந்தது. கடந்த வருடத்திற்கு பிறகு, நிறைய மாற்றங்கள் நடந்து விட்டது. இதுவெல்லாம் , கடவுள் இப்பொழுது நம் வாழ்வில் என்ன செய்ய போகிறார் என்பதற்கு தயார் படுத்துவது ஆகும்.
உங்களுக்கு எந்த வெற்றியை இந்த வருடம் எதிர்பார்க்கிறீர்கள்? எதிலெல்லாம் மீண்டு எழ விழைகிறீர்கள்? அதனை பெற இயேசு உங்களை சிலுவையின் மூலம் அழைத்து செல்வார், அவருடைய கல்லறைக்கும், அதன் பிறகு கடவுளின் ஒளியில் உங்களை அழைத்து சென்று, புதிய வாழ்விற்கு கடவுளின் அன்பை கொடுத்து உங்கள் குறைகளை போக்குவார்.
தவக்காலத்தில் - மெலும் ஒவொரு முறையும், நாம் தியாகம் செய்து நமது துன்பத்தை யேசுவின் பாடுகளோடு இனைக்கும்பொழுது, நாம் இயேசுவை பின் சென்Dரு , அவரின் மீட்போடும் நாமும் சேருகிறோம். இதற்கு நமது சிலுவைகளை நாம் ஏற்று கொண்டு, அந்த துன்பத்தை தழுவிகொள்ள வேண்டும் , கலவாரிமலை பாதையில்தான், நமது வெற்றி வாழ்வையும், புதிய அனுபவத்தையும் நாம் அடைய முடியும்.
இந்த ஈஸ்டர் நமக்கு சாதாரண விடுமுறையாக இல்லாமல், இந்த 40 நாட்களையும், எரிச்சலை கட்டுபடுத்துவதும், தியாகங்களும், புலால் உணவு கட்டுபாடும், அடிக்கடி கோவிலுக்கு சென்றும், ஜெபங்களில் ஈடுபடுவதும், இப்படி, நமது தின வாழ்வில் ஈடுபட்டு நமது தவ நாட்களை கழித்தோமானால் நாம் மீட்பின் வெற்றியை , அதனுடைய ஆற்றலை நாம் அனுபவிக்க முடியும். நமது பாவ வாழ்க்கையை நினைத்து, மனம் வருந்தை, நாம் மணம் திரும்பும்போது, அதன் ஆற்றலை நாம் அனுபவிக்க முடியும். மாற்றாக சொல்வதானால், மரணத்தின் மீது உள்ள வெறும் பயத்தை நாம் அனுபவிக்க வேண்டும். - நமது சுய ஆசைகளை சாகடிக்க வேண்டும், இவ்வுலக வாழ்வின் மேல் உள்ள ஆசைகளை சாகடிக்க வேண்டும். கிறிஸ்துவிற்கு எதிரான நமது தின நடவடிக்கைகளை நாம் சாகடிக்க வேண்டும்.
© 2011 by Terry A. Modica
தவக்காலத்தின் முதல் ஞாயிறு
Genesis 2:7-9; 3:1-7
Ps 51:3-6, 12-13, 17
Romans 5:12-19
Matthew 4:1-11
________________________________________
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 4
இயேசு சோதிக்கப்படுதல்
(மாற் 1:12 - 13; லூக் 4:1 - 13)
1 அதன்பின் இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலை நிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார்.2 அவர் நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார். அதன் பின் பசியுற்றார்.3 சோதிக்கிறவன் அவரை அணுகி, ' நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும் ' என்றான்.4 அவர் மறுமொழியாக, ' மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர் ' என மறைநூலில் எழுதியுள்ளதே ' என்றார்.5 பின்னர் அலகை அவரை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி,6 ' நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்; ' கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள் ' என்று மறைநூலில் எழுதியுள்ளது ' என்று அலகை அவரிடம் சொன்னது.7 இயேசு அதனிடம், ' ″ உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்கவேண்டாம் ″ எனவும் எழுதியுள்ளதே ' என்று சொன்னார்.8 மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி,9 அவரிடம், ' நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன் ' என்றது.10 அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து, ' அகன்று போ, சாத்தானே, ' உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய் ' என்றும் மறைநூலில் எழுதியுள்ளது ' என்றார்.11 பின்னர் அலகை அவரை விட்டு அகன்றது. உடனே வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர்.
(thanks to www.arulvakku.com)
சோதனைகளை நீங்கள் எப்படி எதிர் கொள்கிறீர்கள்? தவக்காலத்தின் முதல் ஞாயிறு நற்செய்தியில், நமக்கு தனியாக சவால் விடப்படுகிறது. அதன் மூலம், நாம் நமது பயனத்தை இயேசுவோடு சேர்ந்து துவக்குகிறோம். இவ்வுலக வாழ்வில், அவரோடு இனைந்து பரிசுத்த இடத்திற்கு செல்வோம்.
இந்த தவக்காலம் மற்ற தவக்காலத்தை போல அல்ல. போன வருடம், உங்களுடைய தேவைகள் வேறாக இருந்தது, வேறு வளர்ச்சியை , முன்னேற்றத்தையும் எதிர்பார்த்தோம்., நமது புரிதலும், உள்நோக்கமும் வேறாக இருந்தது. கடந்த வருடத்திற்கு பிறகு, நிறைய மாற்றங்கள் நடந்து விட்டது. இதுவெல்லாம் , கடவுள் இப்பொழுது நம் வாழ்வில் என்ன செய்ய போகிறார் என்பதற்கு தயார் படுத்துவது ஆகும்.
உங்களுக்கு எந்த வெற்றியை இந்த வருடம் எதிர்பார்க்கிறீர்கள்? எதிலெல்லாம் மீண்டு எழ விழைகிறீர்கள்? அதனை பெற இயேசு உங்களை சிலுவையின் மூலம் அழைத்து செல்வார், அவருடைய கல்லறைக்கும், அதன் பிறகு கடவுளின் ஒளியில் உங்களை அழைத்து சென்று, புதிய வாழ்விற்கு கடவுளின் அன்பை கொடுத்து உங்கள் குறைகளை போக்குவார்.
தவக்காலத்தில் - மெலும் ஒவொரு முறையும், நாம் தியாகம் செய்து நமது துன்பத்தை யேசுவின் பாடுகளோடு இனைக்கும்பொழுது, நாம் இயேசுவை பின் சென்Dரு , அவரின் மீட்போடும் நாமும் சேருகிறோம். இதற்கு நமது சிலுவைகளை நாம் ஏற்று கொண்டு, அந்த துன்பத்தை தழுவிகொள்ள வேண்டும் , கலவாரிமலை பாதையில்தான், நமது வெற்றி வாழ்வையும், புதிய அனுபவத்தையும் நாம் அடைய முடியும்.
இந்த ஈஸ்டர் நமக்கு சாதாரண விடுமுறையாக இல்லாமல், இந்த 40 நாட்களையும், எரிச்சலை கட்டுபடுத்துவதும், தியாகங்களும், புலால் உணவு கட்டுபாடும், அடிக்கடி கோவிலுக்கு சென்றும், ஜெபங்களில் ஈடுபடுவதும், இப்படி, நமது தின வாழ்வில் ஈடுபட்டு நமது தவ நாட்களை கழித்தோமானால் நாம் மீட்பின் வெற்றியை , அதனுடைய ஆற்றலை நாம் அனுபவிக்க முடியும். நமது பாவ வாழ்க்கையை நினைத்து, மனம் வருந்தை, நாம் மணம் திரும்பும்போது, அதன் ஆற்றலை நாம் அனுபவிக்க முடியும். மாற்றாக சொல்வதானால், மரணத்தின் மீது உள்ள வெறும் பயத்தை நாம் அனுபவிக்க வேண்டும். - நமது சுய ஆசைகளை சாகடிக்க வேண்டும், இவ்வுலக வாழ்வின் மேல் உள்ள ஆசைகளை சாகடிக்க வேண்டும். கிறிஸ்துவிற்கு எதிரான நமது தின நடவடிக்கைகளை நாம் சாகடிக்க வேண்டும்.
© 2011 by Terry A. Modica
Friday, March 4, 2011
மார்ச் 6, 2011 ஞாயிறு நற்செய்தி
மார்ச் 6, 2011 ஞாயிறு நற்செய்தி
ஆண்டின் 9ம் ஞாயிறு
Deut 11:18, 26-28, 32
Ps 31:2-4, 17, 25
Rom 3:21-25, 28
Matt 7:21-27
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 7
சொல்லும் செயலும்
(லூக் 13:25 - 27)
21 ' என்னை நோக்கி, ' ஆண்டவரே, ஆண்டவரே ' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்.22 அந்நாளில் பலர் என்னை நோக்கி, ″ ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா? ″ என்பர்.23 அதற்கு நான் அவர்களிடம், ' உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னைவிட்டு அகன்று போங்கள் ' என வெளிப்படையாக அறிவிப்பேன்.
இருவகை அடித்தளங்கள்
(லூக் 6:47 - 49)
24 ' ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறை மீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார்.25 மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.26 நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார்.27மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங் காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், இயேசுவின் உண்மையான சீடராக எப்படி இருக்க வேண்டும் என்று விளக்குகிரார்: தந்தையின் திருவுளப்படி நடக்க வேண்டும். இயேசுவிடமிருந்து கற்று கொண்டததை உங்கள் தினசரி நடவடிக்கையாக கொள்ளுங்கள்.
இயேசு கிறிஸ்து நற்செய்தி மூலமாகவும், திருச்சபையின் போதனைகள் மூலமும் நம்மிடம் தொடர்ந்து பேசி வருகிறார். ஆனால் அந்த வார்த்தைகளை கேட்பது மட்டும் செய்கிறோம் என்பதோடு இருந்து விட கூடாது. நமது மீட்பு, எப்படி அந்த வார்த்தையை நாம் கடைபிடிக்கிறோம் என்பதில் தான் நமது மீட்பு இருக்கிறது. நாம் இயெசுவின் மேல் விசுவாசம் வைத்துள்ளோம் என்று சொல்லி கொண்டு, அவரின் போதனைகளை நாம் செய்யாமல் இருந்தால், நாம் வெறுமனே "கடவுளே, கடவுளே" என்று சொல்பவர்களாக மட்டும் தான் இருப்போம். நாம் கடவுளை பின் தொடர்ந்து மோட்சத்திற்கு செல்வதில்லை.
இயேசு குறிப்பிட்டு சொல்வதை போல, இறையரசோடு நமது தின வாழ்வில் ஒன்றித்து, இவ்வுலக வாழ்வில் இறையரசின் தூதுவராய் இருப்போம், மேலும், நாமும் நமக்கு வரும் சோதனைகளையும், கேளியையும், இம்சையையும் நம்மால் தாங்க்கொள்ள முடியும். நமது நடவடிக்கைகளினால், பெரிய ப்ரச்னை உண்டானால் கூட நம்மால் அதனை எதிர்கொள்ள முடியும். ஏனெனில், நாம் கிறிஸ்துவின் மரணத்திற்கும், மீட்பிற்கும் இடையிலான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் கடவுளின் அருளாலும், அவரது ஆட்சியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அவரது பலம், இவ்வுலக வாழ்வை வெற்றி கொள்ளும்.
இயேசுவின் போதனைகள் நமது வாழ்வை மாற்ற நாம் அனுமதிக்காமல் இருக்கும்பொழுது, நமக்கு சோதனைகள், ப்ரச்னைகள் வந்தால், அவைகள் நம்மை அழித்து விடும், நம் அமைதி குலைந்து விடும். நமது சந்தோசம் போய்விடும். கடவுள் நம்மை அன்பு செய்கிறார் என்பதையும் நாம் மறந்து விடுவோம். கிறிஸ்துவோடு நாம் ஒன்றித்து இந்த சோதனைகளை எதிர் கொண்டோமானால், நம்மால் இந்த சோதனைகளை எதிர்கொள்ள முடியும். இந்த ப்ரசனைகள் முடிய , கிறிஸ்துவின் ஆற்றலை நாம் அனுமதிக்க வில்லையென்றால், இந்த ப்ரச்னைகள் முடிய இன்னும் கால் தாமதம் ஆகும்.
கிறிஸ்துவின் போதனைகளை இவ்வுலகிற்கு எடுத்து செல்ல வில்லையென்றால், அநியாயங்களும், அநீதியும் மற்றவர்களை அழித்து விடும். அவர்களின் அழிவிற்கு நாம் உடந்தையாகிவிடுகிறோம். அக்கறையின்மை ஒரு பாவமாகும், இது மோட்சத்திற்கு செல்லும் வழியில்லை.
நமது இறப்பிற்கு பிறகு, மோட்சத்திற்கு செல்வதற்கு, நாம் கிறிஸ்துவோடு சேர்ந்து, அவரது சிலுவையோடு நம்மையும் இனைத்து,மற்றவர்கள் மேல் அக்கறை கொண்டு, சாத்தானிற்கு எதிராக இருந்தோமானால், நாம் கடவுளின் சாட்சியாக இருப்போம்.
நாம் கிறிஸ்துவோடு இருப்பதால், பல ப்ரச்னைகள் நம்மை வந்து சேரும், ஆனால் நாம் வீழ்ந்து விடமாட்டொம். ஆனால், இன்னும் நாம் உறுதியாகவும், பரிசுத்தமாகவும் ஆவோம்.
© 2011 by Terry A. Modica
ஆண்டின் 9ம் ஞாயிறு
Deut 11:18, 26-28, 32
Ps 31:2-4, 17, 25
Rom 3:21-25, 28
Matt 7:21-27
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 7
சொல்லும் செயலும்
(லூக் 13:25 - 27)
21 ' என்னை நோக்கி, ' ஆண்டவரே, ஆண்டவரே ' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்.22 அந்நாளில் பலர் என்னை நோக்கி, ″ ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா? ″ என்பர்.23 அதற்கு நான் அவர்களிடம், ' உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னைவிட்டு அகன்று போங்கள் ' என வெளிப்படையாக அறிவிப்பேன்.
இருவகை அடித்தளங்கள்
(லூக் 6:47 - 49)
24 ' ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறை மீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார்.25 மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.26 நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார்.27மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங் காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், இயேசுவின் உண்மையான சீடராக எப்படி இருக்க வேண்டும் என்று விளக்குகிரார்: தந்தையின் திருவுளப்படி நடக்க வேண்டும். இயேசுவிடமிருந்து கற்று கொண்டததை உங்கள் தினசரி நடவடிக்கையாக கொள்ளுங்கள்.
இயேசு கிறிஸ்து நற்செய்தி மூலமாகவும், திருச்சபையின் போதனைகள் மூலமும் நம்மிடம் தொடர்ந்து பேசி வருகிறார். ஆனால் அந்த வார்த்தைகளை கேட்பது மட்டும் செய்கிறோம் என்பதோடு இருந்து விட கூடாது. நமது மீட்பு, எப்படி அந்த வார்த்தையை நாம் கடைபிடிக்கிறோம் என்பதில் தான் நமது மீட்பு இருக்கிறது. நாம் இயெசுவின் மேல் விசுவாசம் வைத்துள்ளோம் என்று சொல்லி கொண்டு, அவரின் போதனைகளை நாம் செய்யாமல் இருந்தால், நாம் வெறுமனே "கடவுளே, கடவுளே" என்று சொல்பவர்களாக மட்டும் தான் இருப்போம். நாம் கடவுளை பின் தொடர்ந்து மோட்சத்திற்கு செல்வதில்லை.
இயேசு குறிப்பிட்டு சொல்வதை போல, இறையரசோடு நமது தின வாழ்வில் ஒன்றித்து, இவ்வுலக வாழ்வில் இறையரசின் தூதுவராய் இருப்போம், மேலும், நாமும் நமக்கு வரும் சோதனைகளையும், கேளியையும், இம்சையையும் நம்மால் தாங்க்கொள்ள முடியும். நமது நடவடிக்கைகளினால், பெரிய ப்ரச்னை உண்டானால் கூட நம்மால் அதனை எதிர்கொள்ள முடியும். ஏனெனில், நாம் கிறிஸ்துவின் மரணத்திற்கும், மீட்பிற்கும் இடையிலான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் கடவுளின் அருளாலும், அவரது ஆட்சியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அவரது பலம், இவ்வுலக வாழ்வை வெற்றி கொள்ளும்.
இயேசுவின் போதனைகள் நமது வாழ்வை மாற்ற நாம் அனுமதிக்காமல் இருக்கும்பொழுது, நமக்கு சோதனைகள், ப்ரச்னைகள் வந்தால், அவைகள் நம்மை அழித்து விடும், நம் அமைதி குலைந்து விடும். நமது சந்தோசம் போய்விடும். கடவுள் நம்மை அன்பு செய்கிறார் என்பதையும் நாம் மறந்து விடுவோம். கிறிஸ்துவோடு நாம் ஒன்றித்து இந்த சோதனைகளை எதிர் கொண்டோமானால், நம்மால் இந்த சோதனைகளை எதிர்கொள்ள முடியும். இந்த ப்ரசனைகள் முடிய , கிறிஸ்துவின் ஆற்றலை நாம் அனுமதிக்க வில்லையென்றால், இந்த ப்ரச்னைகள் முடிய இன்னும் கால் தாமதம் ஆகும்.
கிறிஸ்துவின் போதனைகளை இவ்வுலகிற்கு எடுத்து செல்ல வில்லையென்றால், அநியாயங்களும், அநீதியும் மற்றவர்களை அழித்து விடும். அவர்களின் அழிவிற்கு நாம் உடந்தையாகிவிடுகிறோம். அக்கறையின்மை ஒரு பாவமாகும், இது மோட்சத்திற்கு செல்லும் வழியில்லை.
நமது இறப்பிற்கு பிறகு, மோட்சத்திற்கு செல்வதற்கு, நாம் கிறிஸ்துவோடு சேர்ந்து, அவரது சிலுவையோடு நம்மையும் இனைத்து,மற்றவர்கள் மேல் அக்கறை கொண்டு, சாத்தானிற்கு எதிராக இருந்தோமானால், நாம் கடவுளின் சாட்சியாக இருப்போம்.
நாம் கிறிஸ்துவோடு இருப்பதால், பல ப்ரச்னைகள் நம்மை வந்து சேரும், ஆனால் நாம் வீழ்ந்து விடமாட்டொம். ஆனால், இன்னும் நாம் உறுதியாகவும், பரிசுத்தமாகவும் ஆவோம்.
© 2011 by Terry A. Modica
Friday, February 25, 2011
பிப்ரவரி 27, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
பிப்ரவரி 27, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 8ம் ஞாயிறு
Is 49:14-15
Ps 62:2-3,6-9
1 Cor 4:1-5
Matt 6:24-34
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 6
கடவுளா? செல்வமா?
(லூக் 16:13)
24 ' எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.
கவலை வேண்டாம்
(லூக் 12:22 - 34)
25 ' ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். உணவை விட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா? ' 26 வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா!27 கவலைப் படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்? 28 உடைக்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டுமலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக் கவனியுங்கள்; அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை.29 ஆனால் சாலமோன் கூடத் தம் மேன்மையில் எல்லாம் அவற்றில் ஒன்றைப் போலவும் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.30 நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப்புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணிசெய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் அதிகமாகச் செய்ய மாட்டாரா?31 ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள்.32ஏனெனில் பிற இனத்தவரே இவற்றையெல்லாம் நாடுவர்; உங்களுக்கு இவை யாவும் தேவை என உங்கள் விண்ணகத் தந்தைக்குத் தெரியும்.33 ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும். 34 ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும. அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தி, இயேசு மலைகள் மேல் கொடுத்த ப்ரசங்கத்தின் ஒரு பகுதியாகும். இது இயேசு வாழ்ந்தது போல், எப்படி பரிசுத்தமாகவும், முன் மாதிரியாகவும் வாழ்வேண்டும் என்று நமக்கு அறிவுறை சொல்கிறார். இதே அறிவுரை, இயேசு கூறிய "பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே " ஜெபத்திலும் "எங்கள் அனுதின உணவை இன்று அளித்தருளும்" என்றும் இருக்கிறது. ஜெபத்திலும், ப்ரசங்கத்திலும், நமது அனுதின தேவைகளுக்கு நாம் கடவுளை நம்பி இருக்க வேண்டும் என்பது தான் இன்றைய நற்செய்தியின் நோக்கம்.
ஒவ்வொரு நாளும், நமது தேவைகளுக்கு, நாம் கடவுளை நம்பியிருக்க வேண்டும் அல்லது இவ்வுலக வழியில் நாமாக நமது முடிவை எடுக்க வேண்டும். நாம் இரண்டு பேருக்கும் பணியாளனாய் இருக்க முடியாது. நமது மதச்சடங்குகள் மூலம் நாம் ஒரு காலை மோட்சத்திற்கும், இன்னொரு காலை, இவ்வுலக வாழ்வின் முறைகளிலும் வைத்து கொண்டு நாம் நம்மையெ ஏமாற்றி கொள்ள கூடாது.
"செல்வம்" என்ற வார்த்தை அரமாயிக் வார்த்தையிலிருந்து வந்தது. அதன் அர்த்தம் என்னவென்றால், "செல்வம்" அல்லது "சொத்து" ஆகும். ஒரு காலத்தில் ஒரு கதை உண்டு, யாரோ ஒருவர், "எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்" என்று கடவுளிடம் வேண்டிகொண்டார்களாம் அதற்கு கடவுள், "உங்களிடம் ஏற்கணவே உங்கள் உணவு உள்ளது, மற்றவர்கள் உணவையும் நீங்கள் வைத்திருக்கிறீர்கள்" என்று கூறினாராம். மற்றவர்களுக்கு தேவையானதை ஏன் நாம் சேமித்து வைத்திருக்கிறோம் ? நாம் நமது எதிர்காலத்திற்காக நாம் சேமித்து வைக்கிறோம். ஆனால் பலர், நம்மிடம் அதிகம் உள்ளதை தினமும் கிடைக்காமல் அவதிபடுகின்றனர். அவர்களிடம் அதை கொடுத்து விட்டால், நமக்கு பிற்காலத்தில் கிடைக்காமல் போய்விடுவோமா என்ற பயம் நம்மிடம் இருக்கிறது.
அப்படி ஒரு எண்ணம் நமக்கு இருந்தால், நாம் கடவுளை நம்பவில்லை என்று அர்த்தம். கடவுள் நம்மை கவனிக்கமாட்டார் என்ற கொள்கையுடன் இருக்கிறீர்கள். நாம் எப்படி மற்றவர்களிடம் தாரளமாக இருக்கிறோமோ, அப்படி ஒன்றும் கடவுள் இருக்கமாட்டார் என்று அனுமானித்து விடுகிறோம். அதனால் தான் இயேசு "நீங்கள் ரொம்பவே கவலைபடுகிறீர்கள்!, உங்களுக்கு தேவையானதை விட அதிகமாக வைத்து இருந்தால், கவலை படவேண்டாம்" என்று கூறுகிறார். நாம் நமது கவலையை விட கடவுள் எவ்வளவு நல்லவர் என்று நீங்கள் நினைக்க வேண்டும்.
"கடவுள் உங்களை அதிகமாக அன்பு செய்கிறார். அவர் உங்களை கவனித்து கொள்வார்! நீங்கள் இறையரசிற்காகவும், கடவுளின் வழியிலும் செல்ல முனைந்தால், உங்களுக்கு தேவையானது ஒவ்வொன்றும் கிடைக்கும், அதனால் கவலைபடுவதை நிறுந்துங்கள் " என்று இயேசு கூறுகிறார்.
கவலைபடுவது ஒரு பாவமாகும், இது நம்மை இயேசுவின் மீது உள்ள கண்களை விலக்கிவிடும். கவலை சாத்தானின் வேலையாகும், , இது நம்மை மற்றவர்களிடம் நாம் காட்ட வேண்டிய இயேசுவின் தாராள குணத்தையும், அன்பையும் பிரித்து விடும்.
(www.gnm.org)
ஆண்டின் 8ம் ஞாயிறு
Is 49:14-15
Ps 62:2-3,6-9
1 Cor 4:1-5
Matt 6:24-34
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 6
கடவுளா? செல்வமா?
(லூக் 16:13)
24 ' எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.
கவலை வேண்டாம்
(லூக் 12:22 - 34)
25 ' ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். உணவை விட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா? ' 26 வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா!27 கவலைப் படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்? 28 உடைக்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டுமலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக் கவனியுங்கள்; அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை.29 ஆனால் சாலமோன் கூடத் தம் மேன்மையில் எல்லாம் அவற்றில் ஒன்றைப் போலவும் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.30 நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப்புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணிசெய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் அதிகமாகச் செய்ய மாட்டாரா?31 ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள்.32ஏனெனில் பிற இனத்தவரே இவற்றையெல்லாம் நாடுவர்; உங்களுக்கு இவை யாவும் தேவை என உங்கள் விண்ணகத் தந்தைக்குத் தெரியும்.33 ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும். 34 ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும. அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தி, இயேசு மலைகள் மேல் கொடுத்த ப்ரசங்கத்தின் ஒரு பகுதியாகும். இது இயேசு வாழ்ந்தது போல், எப்படி பரிசுத்தமாகவும், முன் மாதிரியாகவும் வாழ்வேண்டும் என்று நமக்கு அறிவுறை சொல்கிறார். இதே அறிவுரை, இயேசு கூறிய "பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே " ஜெபத்திலும் "எங்கள் அனுதின உணவை இன்று அளித்தருளும்" என்றும் இருக்கிறது. ஜெபத்திலும், ப்ரசங்கத்திலும், நமது அனுதின தேவைகளுக்கு நாம் கடவுளை நம்பி இருக்க வேண்டும் என்பது தான் இன்றைய நற்செய்தியின் நோக்கம்.
ஒவ்வொரு நாளும், நமது தேவைகளுக்கு, நாம் கடவுளை நம்பியிருக்க வேண்டும் அல்லது இவ்வுலக வழியில் நாமாக நமது முடிவை எடுக்க வேண்டும். நாம் இரண்டு பேருக்கும் பணியாளனாய் இருக்க முடியாது. நமது மதச்சடங்குகள் மூலம் நாம் ஒரு காலை மோட்சத்திற்கும், இன்னொரு காலை, இவ்வுலக வாழ்வின் முறைகளிலும் வைத்து கொண்டு நாம் நம்மையெ ஏமாற்றி கொள்ள கூடாது.
"செல்வம்" என்ற வார்த்தை அரமாயிக் வார்த்தையிலிருந்து வந்தது. அதன் அர்த்தம் என்னவென்றால், "செல்வம்" அல்லது "சொத்து" ஆகும். ஒரு காலத்தில் ஒரு கதை உண்டு, யாரோ ஒருவர், "எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்" என்று கடவுளிடம் வேண்டிகொண்டார்களாம் அதற்கு கடவுள், "உங்களிடம் ஏற்கணவே உங்கள் உணவு உள்ளது, மற்றவர்கள் உணவையும் நீங்கள் வைத்திருக்கிறீர்கள்" என்று கூறினாராம். மற்றவர்களுக்கு தேவையானதை ஏன் நாம் சேமித்து வைத்திருக்கிறோம் ? நாம் நமது எதிர்காலத்திற்காக நாம் சேமித்து வைக்கிறோம். ஆனால் பலர், நம்மிடம் அதிகம் உள்ளதை தினமும் கிடைக்காமல் அவதிபடுகின்றனர். அவர்களிடம் அதை கொடுத்து விட்டால், நமக்கு பிற்காலத்தில் கிடைக்காமல் போய்விடுவோமா என்ற பயம் நம்மிடம் இருக்கிறது.
அப்படி ஒரு எண்ணம் நமக்கு இருந்தால், நாம் கடவுளை நம்பவில்லை என்று அர்த்தம். கடவுள் நம்மை கவனிக்கமாட்டார் என்ற கொள்கையுடன் இருக்கிறீர்கள். நாம் எப்படி மற்றவர்களிடம் தாரளமாக இருக்கிறோமோ, அப்படி ஒன்றும் கடவுள் இருக்கமாட்டார் என்று அனுமானித்து விடுகிறோம். அதனால் தான் இயேசு "நீங்கள் ரொம்பவே கவலைபடுகிறீர்கள்!, உங்களுக்கு தேவையானதை விட அதிகமாக வைத்து இருந்தால், கவலை படவேண்டாம்" என்று கூறுகிறார். நாம் நமது கவலையை விட கடவுள் எவ்வளவு நல்லவர் என்று நீங்கள் நினைக்க வேண்டும்.
"கடவுள் உங்களை அதிகமாக அன்பு செய்கிறார். அவர் உங்களை கவனித்து கொள்வார்! நீங்கள் இறையரசிற்காகவும், கடவுளின் வழியிலும் செல்ல முனைந்தால், உங்களுக்கு தேவையானது ஒவ்வொன்றும் கிடைக்கும், அதனால் கவலைபடுவதை நிறுந்துங்கள் " என்று இயேசு கூறுகிறார்.
கவலைபடுவது ஒரு பாவமாகும், இது நம்மை இயேசுவின் மீது உள்ள கண்களை விலக்கிவிடும். கவலை சாத்தானின் வேலையாகும், , இது நம்மை மற்றவர்களிடம் நாம் காட்ட வேண்டிய இயேசுவின் தாராள குணத்தையும், அன்பையும் பிரித்து விடும்.
(www.gnm.org)
Friday, February 18, 2011
பிப்ரவரி 20 2011 ஞாயிறு நற்செய்தி மறையுரை
பிப்ரவரி 20 2011 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 7ம் ஞாயிறு
Lev 19:1-2, 17-18
Ps 103:1-4,8,10,12-13
1 Cor 3:16-23
Matt 5:38-48
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 5
பழி வாங்குதல்
(லூக் 6:29 - 30)
38 ' ″ கண்ணுக்குக் கண் ″ , ″ பல்லுக்குப் பல் ″ என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.39 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.40 ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக் கொள்ள விட்டு விடுங்கள்.41 எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள்.42 உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள். '
பகைவரிடம் அன்பாயிருத்தல்
(லூக் 6:27 - 28, 32 - 36)
43 ' ″ உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக ″ , ″ பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக ″ எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள்.44 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். 45 ' இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.46 உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரி தண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா?47 நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா?48 ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.
(thanks to www.arulvakku.com)
இரக்கம் தான் இந்த வார நற்செய்தியை புரிந்து கொள்வதற்கு நமக்கு உறுதுனையாகும். அன்பு தான் மற்றவர்களின் இதயத்திற்குள் நாம் நுழைய முதல் கதவு என்று யோசியுங்கள். அவர்கள் அந்த கதவை மூடினால் நீங்கள் இரக்கத்தின் மூலமாக பின் கதவு மூலமாக நீங்கள் செல்லுங்கள்.
முற்காலத்தில், யாராவது ஒருவர் ஒருவரின் கண்ணை நோண்டி எடுத்தால், அவர் அவரது குழுவினருடன் சேர்ந்து கொண்டு, நோடியவரின் உற்றார் உறவினரையும் திருப்பி அடிப்பார். அதனால், கடவுள் அவர்களெல்லாம் அன்பினால் ஒன்றாய் இருக்க வேண்டும் என்று கடவுள் அவர்களுக்கு இந்த சட்டத்தை கொடுத்தார். அதனால், உங்களின் கண்ணை யாராவது காயப்படுத்தினால், நீங்கள் அதற்கு மேல் அவர்களை ஒன்றும் செய்யாமல் இருந்தாலே போதும். அதுவே அன்பு இல்லாத செயல் தான், இருந்தாலும் அவர்களை எதுவும் செய்யாமல் இருப்பதே நல்லது.
இயேசு இந்த சட்டம் அமலில் இருக்கும்போது வந்தவர், "யாராவது உங்களை துன்ப்புறுத்தினால், அவர்களை அன்பு செய்" என்று கூறுகிறார்.
மற்றவர்கள் நம்மிடம் பாவம் செய்யும்பொழுது, அவர்கள் கடவுளுக்கும், அவரது அன்பிற்கும் அவர்களின் இதயத்தை மூடிவிட்டார்கள். ஆனால், நாம் அவர்களிடம் அன்பினை கொடுத்தால், நாம் அவர்களுக்கு பின் கதவு வழியாக கடவுளை கொடுக்கிறோம்.
இதன் மூலம், நாம் அப்படியே நமக்கு தீங்கு நடக்க வேண்டும் என்றே இருந்து விட வேன்டும் என்றில்லை. ஆனால், நாம் தொடர்ந்து அன்பு செய்து கொண்டே இருந்தால், நாம் கடவுளையும், அவரது குணப்படுத்தலையும் பெறுவோம்.
நியாயமற்ற முறையில், உங்களிடம் யாராவது பணத்தையோ அல்லது வேறு ஏதாவது எடுத்து கொண்டால், அவர்களின் பேராசையை நீங்கள் தடுக்க முடியாது, ஆனால், உங்களுக்கு எதிராக அவர்கள் செய்யும் பாவத்தை தடுக்க முடியும்: அவர்கள் கேட்பதை சந்தோசமாகவும், இலவசமாகவும் கொடுங்கள். தாராளமான அன்பினால், உங்களிடம் உள்ளதை அதிகமாகவே கொடுங்கள், அதை தான் இயேசு சொல்கிறார்.
உங்களை யாராவது நியாயம் அற்ற முறையில் ஏதாவது செய்ய சொன்னால், இந்த குரூரமான பாவத்தை தடுக்க, அந்த செயலை நீங்களாகவே, தானாகவே முன் வந்து ஏற்று செய்தால் நல்லது.
நமது அன்பை அன்பளிப்பாக அவர்களுக்கு இலவசமாக கொடுக்கிறோம் என்பதை, அவர்களுக்கு தெரியபடுத்த வேன்டும். நாம் அவர்களின் பாவத்திற்கு உட்பட்டவர் அல்ல என்பதனை அவர்களுக்கு தெரியபடுத்த வெண்டும். நாம் கடவுளின் அன்பை மற்றவர்களுக்கு கொடுப்பதில் முன் மாதிரியாக செய்யும்போது, அந்த அன்பு சாத்தானை வெற்றி கொள்ளும்.
இது தான் மிகச்சரியாக இருப்பதற்கு சமம். மிகச்சரியாக இருப்பதற்கு பைபிளில் இருக்கும் அர்த்தம் - முழுமையான அன்பு, பூரனமான, முழுமையான, நிரம்ப, எல்லையில்லாத அன்பும், இரக்கமுள்ள அன்பும் ஆகும்.
© 2011 by Terry A. Modica
ஆண்டின் 7ம் ஞாயிறு
Lev 19:1-2, 17-18
Ps 103:1-4,8,10,12-13
1 Cor 3:16-23
Matt 5:38-48
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 5
பழி வாங்குதல்
(லூக் 6:29 - 30)
38 ' ″ கண்ணுக்குக் கண் ″ , ″ பல்லுக்குப் பல் ″ என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.39 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.40 ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக் கொள்ள விட்டு விடுங்கள்.41 எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள்.42 உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள். '
பகைவரிடம் அன்பாயிருத்தல்
(லூக் 6:27 - 28, 32 - 36)
43 ' ″ உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக ″ , ″ பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக ″ எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள்.44 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். 45 ' இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.46 உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரி தண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா?47 நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா?48 ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.
(thanks to www.arulvakku.com)
இரக்கம் தான் இந்த வார நற்செய்தியை புரிந்து கொள்வதற்கு நமக்கு உறுதுனையாகும். அன்பு தான் மற்றவர்களின் இதயத்திற்குள் நாம் நுழைய முதல் கதவு என்று யோசியுங்கள். அவர்கள் அந்த கதவை மூடினால் நீங்கள் இரக்கத்தின் மூலமாக பின் கதவு மூலமாக நீங்கள் செல்லுங்கள்.
முற்காலத்தில், யாராவது ஒருவர் ஒருவரின் கண்ணை நோண்டி எடுத்தால், அவர் அவரது குழுவினருடன் சேர்ந்து கொண்டு, நோடியவரின் உற்றார் உறவினரையும் திருப்பி அடிப்பார். அதனால், கடவுள் அவர்களெல்லாம் அன்பினால் ஒன்றாய் இருக்க வேண்டும் என்று கடவுள் அவர்களுக்கு இந்த சட்டத்தை கொடுத்தார். அதனால், உங்களின் கண்ணை யாராவது காயப்படுத்தினால், நீங்கள் அதற்கு மேல் அவர்களை ஒன்றும் செய்யாமல் இருந்தாலே போதும். அதுவே அன்பு இல்லாத செயல் தான், இருந்தாலும் அவர்களை எதுவும் செய்யாமல் இருப்பதே நல்லது.
இயேசு இந்த சட்டம் அமலில் இருக்கும்போது வந்தவர், "யாராவது உங்களை துன்ப்புறுத்தினால், அவர்களை அன்பு செய்" என்று கூறுகிறார்.
மற்றவர்கள் நம்மிடம் பாவம் செய்யும்பொழுது, அவர்கள் கடவுளுக்கும், அவரது அன்பிற்கும் அவர்களின் இதயத்தை மூடிவிட்டார்கள். ஆனால், நாம் அவர்களிடம் அன்பினை கொடுத்தால், நாம் அவர்களுக்கு பின் கதவு வழியாக கடவுளை கொடுக்கிறோம்.
இதன் மூலம், நாம் அப்படியே நமக்கு தீங்கு நடக்க வேண்டும் என்றே இருந்து விட வேன்டும் என்றில்லை. ஆனால், நாம் தொடர்ந்து அன்பு செய்து கொண்டே இருந்தால், நாம் கடவுளையும், அவரது குணப்படுத்தலையும் பெறுவோம்.
நியாயமற்ற முறையில், உங்களிடம் யாராவது பணத்தையோ அல்லது வேறு ஏதாவது எடுத்து கொண்டால், அவர்களின் பேராசையை நீங்கள் தடுக்க முடியாது, ஆனால், உங்களுக்கு எதிராக அவர்கள் செய்யும் பாவத்தை தடுக்க முடியும்: அவர்கள் கேட்பதை சந்தோசமாகவும், இலவசமாகவும் கொடுங்கள். தாராளமான அன்பினால், உங்களிடம் உள்ளதை அதிகமாகவே கொடுங்கள், அதை தான் இயேசு சொல்கிறார்.
உங்களை யாராவது நியாயம் அற்ற முறையில் ஏதாவது செய்ய சொன்னால், இந்த குரூரமான பாவத்தை தடுக்க, அந்த செயலை நீங்களாகவே, தானாகவே முன் வந்து ஏற்று செய்தால் நல்லது.
நமது அன்பை அன்பளிப்பாக அவர்களுக்கு இலவசமாக கொடுக்கிறோம் என்பதை, அவர்களுக்கு தெரியபடுத்த வேன்டும். நாம் அவர்களின் பாவத்திற்கு உட்பட்டவர் அல்ல என்பதனை அவர்களுக்கு தெரியபடுத்த வெண்டும். நாம் கடவுளின் அன்பை மற்றவர்களுக்கு கொடுப்பதில் முன் மாதிரியாக செய்யும்போது, அந்த அன்பு சாத்தானை வெற்றி கொள்ளும்.
இது தான் மிகச்சரியாக இருப்பதற்கு சமம். மிகச்சரியாக இருப்பதற்கு பைபிளில் இருக்கும் அர்த்தம் - முழுமையான அன்பு, பூரனமான, முழுமையான, நிரம்ப, எல்லையில்லாத அன்பும், இரக்கமுள்ள அன்பும் ஆகும்.
© 2011 by Terry A. Modica
Friday, February 4, 2011
பிப்ரவரி 6 , 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
பிப்ரவரி 6 , 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 5ம் ஞாயிறு
Is 58:7-10
Ps 112:4-9
1 Cor 2:1-5
Matt 5:13-16
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 5
உப்பும் ஒளியும்
(மாற் 9:50; லூக் 14:34 - 35)
13 ' நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது.14 நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது.15 எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும்.16இவ்வாறே உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.
(thanks to www.arulvakku.com)
"நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்" என்று இயேசு கூறுகிறார். உப்பாய் இருப்பதாக இருப்பது என்றால், அதற்கு என்ன அர்த்தம். உப்பு என்ன செய்யும் என்று யோசித்து பாருங்கள். சுவையில்லாத உணவிற்கு சுவையை கூட்டுகிறது. மேலும் உப்பு உவர்ப்பற்று போனால் என்ன ஆகும் என்று இயேசுவே ஒரு கேள்வியை கேட்கிறார். எப்படி மீண்டும் அந்த உவர்ப்பை எப்படி பெறுவது? அதற்கு பதில்: கடவுள் நம்மிடம் அதனை மீண்டும் சேர்க்க செய்ய அவரிடம் சரண்டைய வேண்டும்.
உங்கள் ஞானஸ்நானத்திலேயே, கடவுள் உங்களுக்கு எல்லா சுவைகளையும் வழங்கியிருக்கிறார். கடவுளின் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, இன்னும் பல உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு பலன் கொடுக்கும் கிறிஸ்தவர்கள் அனைவரும் கடவுளின் வாழ்வான, கடவுள் அன்பு, அமைதி, மகிழ்வு அனைத்திற்கும் இன்னும் சுவை கூட்டி அவர்களை சுற்றியுள்ளவர்களுக்கு கொடுப்பவர்கள்.
ஆனால், எல்லாவற்றிற்கும் அதிகமான உழைப்பை கொடுத்தால் என்ன ஆகும் என்று நினைவில் கொள்ளுங்கள்!. உணவிற்கு அதிக உப்பு இருந்தால் என்ன ஆகும் என்றும் யோசியுங்கள். அதன் சுவை ஏற்று கொள்ள முடியாது. நாம் நல்ல எண்ணத்தில் அதிகமாக அந்த சுவையை கொடுத்தாலும், அது ஏற்று கொள்ளபடுவதில்லை, நல்லது செய்ய போய், அழிவை தான் கொடுப்போம்.
இயேசுவின் அன்பை நம்மிடமிருந்து பெறும் அனைவரும், இயேசுவை நோக்கி திரும்புவார்கள். இயேசுவின் அமைதியை நம்மிடமிருந்து பெறுபவர்கள், இயேசுவின் மகிழ்ச்சியையும் நம்மிடமிருந்து பெறுபவர்கள், இயேசுவின் வாழ்வை நாம் வாழ்ந்து காமிக்கும்பொழுது, பலர் இயேசுவிடம் திரும்புவார்கள். அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே, இயேசு அவர்களை அன்பு செய்கிறார் என்று அவர்களுக்கு தெரிய வேண்டும், ஆனால், இயேசு அவர்களை மனப்பூர்வமான தெய்வீக வாழ்வை துவங்க வேண்டும் என்று விரும்புகிறார், அப்போது தான், இயேசு அவர்களின் ப்ரச்னைகளையும், கஷ்டங்களையும், சோதனைகளையும் ஆசிர்வாதங்களாகவும், சந்தோசமாகவும் இயேசு மாற்றுவார்.
மேலும் இயேசு நம்மை ஒளியாய் இருக்க சொல்கிறார். அதற்கு மற்றவர்கள் உதவி செய்ய முடியாது ஆனால், அந்த ஒளியை நிச்சயம் திரும்பி பார்ப்பார்கள். ஆனால் குருடாக்கும் ஒளியை நாம் வீசக்கூடாது. நாம் இயேசுவின் ஒளியை நம்மில் ஒளிர விட வேண்டும். நம் ஒளியையும் கிறிஸ்துதான் ஒளியூட்ட வேண்டும். அதனால் மற்றவர்கள் அந்த ஒளியை நோக்குவார்கள்.
மேலும், இயேசு நம்மை மலை மேல் இருக்கும் நகர் போல இருக்க சொல்கிறார். நாம் ஒருவர் மட்டும் மணமாற்றுதல் செய்ய முடியாது. ஒரு "நகர்" என்பது கிறிஸ்தவர்களின் குழு : ஒரு பங்கு, ஒரு குடும்பம், பங்கு குழு, இன்னும் பல. கிறிஸ்தவர்களாக இருப்பது என்பது நாம் ஒரு குழுவில் இருக்கிறோம் என்பது ஆகும். நமது ஒளி மற்றவர்களின் ஒளியோடு சேரும்போது, எல்லாம் சேர்ந்த வெளிச்சம் கிறிஸ்துவை இவ்வுலகிற்க்கு காட்ட பலமான ஒளியாக இருக்கும். ஏன்? ஏனெனில், கிறிஸ்துவை நம்பாதவர்கள், நாம் எல்லாம் சேர்ந்து ஒருவரையொருவர் அன்பு செய்யும்பொழுது, கிறிஸ்துவின் அன்பு உண்மையானது என்று அவர்கள் நம்பி, கிறிஸ்துவின் அன்பை புரிந்து கொள்வார்கள். எவ்வித நிபந்தனையின்றி, தாராளமாகவும், பணி செய்யும் பன்பும் அவர்களிடம் கிறிஸ்துவின் அன்பை காமிக்கும். நாம் ஒருவொருக்கு ஒருவர் கிறிஸ்துவின் ஒளியாய் இருக்கிறோம். நாம் ஒருவர்க்கு ஒருவர் சுவையூட்டுகிறோம். மற்றவர்கள் இல்லையென்றால், நமது ஒளி மங்கிவிடும். நமது சுவை குறைந்து விடும், கடவுளரசிற்கு வேண்டாதவர் ஆகி விடுவோம்.
© 2011 by Terry A. Modica
ஆண்டின் 5ம் ஞாயிறு
Is 58:7-10
Ps 112:4-9
1 Cor 2:1-5
Matt 5:13-16
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 5
உப்பும் ஒளியும்
(மாற் 9:50; லூக் 14:34 - 35)
13 ' நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது.14 நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது.15 எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும்.16இவ்வாறே உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.
(thanks to www.arulvakku.com)
"நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்" என்று இயேசு கூறுகிறார். உப்பாய் இருப்பதாக இருப்பது என்றால், அதற்கு என்ன அர்த்தம். உப்பு என்ன செய்யும் என்று யோசித்து பாருங்கள். சுவையில்லாத உணவிற்கு சுவையை கூட்டுகிறது. மேலும் உப்பு உவர்ப்பற்று போனால் என்ன ஆகும் என்று இயேசுவே ஒரு கேள்வியை கேட்கிறார். எப்படி மீண்டும் அந்த உவர்ப்பை எப்படி பெறுவது? அதற்கு பதில்: கடவுள் நம்மிடம் அதனை மீண்டும் சேர்க்க செய்ய அவரிடம் சரண்டைய வேண்டும்.
உங்கள் ஞானஸ்நானத்திலேயே, கடவுள் உங்களுக்கு எல்லா சுவைகளையும் வழங்கியிருக்கிறார். கடவுளின் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, இன்னும் பல உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு பலன் கொடுக்கும் கிறிஸ்தவர்கள் அனைவரும் கடவுளின் வாழ்வான, கடவுள் அன்பு, அமைதி, மகிழ்வு அனைத்திற்கும் இன்னும் சுவை கூட்டி அவர்களை சுற்றியுள்ளவர்களுக்கு கொடுப்பவர்கள்.
ஆனால், எல்லாவற்றிற்கும் அதிகமான உழைப்பை கொடுத்தால் என்ன ஆகும் என்று நினைவில் கொள்ளுங்கள்!. உணவிற்கு அதிக உப்பு இருந்தால் என்ன ஆகும் என்றும் யோசியுங்கள். அதன் சுவை ஏற்று கொள்ள முடியாது. நாம் நல்ல எண்ணத்தில் அதிகமாக அந்த சுவையை கொடுத்தாலும், அது ஏற்று கொள்ளபடுவதில்லை, நல்லது செய்ய போய், அழிவை தான் கொடுப்போம்.
இயேசுவின் அன்பை நம்மிடமிருந்து பெறும் அனைவரும், இயேசுவை நோக்கி திரும்புவார்கள். இயேசுவின் அமைதியை நம்மிடமிருந்து பெறுபவர்கள், இயேசுவின் மகிழ்ச்சியையும் நம்மிடமிருந்து பெறுபவர்கள், இயேசுவின் வாழ்வை நாம் வாழ்ந்து காமிக்கும்பொழுது, பலர் இயேசுவிடம் திரும்புவார்கள். அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே, இயேசு அவர்களை அன்பு செய்கிறார் என்று அவர்களுக்கு தெரிய வேண்டும், ஆனால், இயேசு அவர்களை மனப்பூர்வமான தெய்வீக வாழ்வை துவங்க வேண்டும் என்று விரும்புகிறார், அப்போது தான், இயேசு அவர்களின் ப்ரச்னைகளையும், கஷ்டங்களையும், சோதனைகளையும் ஆசிர்வாதங்களாகவும், சந்தோசமாகவும் இயேசு மாற்றுவார்.
மேலும் இயேசு நம்மை ஒளியாய் இருக்க சொல்கிறார். அதற்கு மற்றவர்கள் உதவி செய்ய முடியாது ஆனால், அந்த ஒளியை நிச்சயம் திரும்பி பார்ப்பார்கள். ஆனால் குருடாக்கும் ஒளியை நாம் வீசக்கூடாது. நாம் இயேசுவின் ஒளியை நம்மில் ஒளிர விட வேண்டும். நம் ஒளியையும் கிறிஸ்துதான் ஒளியூட்ட வேண்டும். அதனால் மற்றவர்கள் அந்த ஒளியை நோக்குவார்கள்.
மேலும், இயேசு நம்மை மலை மேல் இருக்கும் நகர் போல இருக்க சொல்கிறார். நாம் ஒருவர் மட்டும் மணமாற்றுதல் செய்ய முடியாது. ஒரு "நகர்" என்பது கிறிஸ்தவர்களின் குழு : ஒரு பங்கு, ஒரு குடும்பம், பங்கு குழு, இன்னும் பல. கிறிஸ்தவர்களாக இருப்பது என்பது நாம் ஒரு குழுவில் இருக்கிறோம் என்பது ஆகும். நமது ஒளி மற்றவர்களின் ஒளியோடு சேரும்போது, எல்லாம் சேர்ந்த வெளிச்சம் கிறிஸ்துவை இவ்வுலகிற்க்கு காட்ட பலமான ஒளியாக இருக்கும். ஏன்? ஏனெனில், கிறிஸ்துவை நம்பாதவர்கள், நாம் எல்லாம் சேர்ந்து ஒருவரையொருவர் அன்பு செய்யும்பொழுது, கிறிஸ்துவின் அன்பு உண்மையானது என்று அவர்கள் நம்பி, கிறிஸ்துவின் அன்பை புரிந்து கொள்வார்கள். எவ்வித நிபந்தனையின்றி, தாராளமாகவும், பணி செய்யும் பன்பும் அவர்களிடம் கிறிஸ்துவின் அன்பை காமிக்கும். நாம் ஒருவொருக்கு ஒருவர் கிறிஸ்துவின் ஒளியாய் இருக்கிறோம். நாம் ஒருவர்க்கு ஒருவர் சுவையூட்டுகிறோம். மற்றவர்கள் இல்லையென்றால், நமது ஒளி மங்கிவிடும். நமது சுவை குறைந்து விடும், கடவுளரசிற்கு வேண்டாதவர் ஆகி விடுவோம்.
© 2011 by Terry A. Modica
Subscribe to:
Posts (Atom)