பிப்ரவரி 27, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 8ம் ஞாயிறு
Is 49:14-15
Ps 62:2-3,6-9
1 Cor 4:1-5
Matt 6:24-34
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 6
கடவுளா? செல்வமா?
(லூக் 16:13)
24 ' எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.
கவலை வேண்டாம்
(லூக் 12:22 - 34)
25 ' ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். உணவை விட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா? ' 26 வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா!27 கவலைப் படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்? 28 உடைக்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டுமலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக் கவனியுங்கள்; அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை.29 ஆனால் சாலமோன் கூடத் தம் மேன்மையில் எல்லாம் அவற்றில் ஒன்றைப் போலவும் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.30 நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப்புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணிசெய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் அதிகமாகச் செய்ய மாட்டாரா?31 ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள்.32ஏனெனில் பிற இனத்தவரே இவற்றையெல்லாம் நாடுவர்; உங்களுக்கு இவை யாவும் தேவை என உங்கள் விண்ணகத் தந்தைக்குத் தெரியும்.33 ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும். 34 ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும. அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தி, இயேசு மலைகள் மேல் கொடுத்த ப்ரசங்கத்தின் ஒரு பகுதியாகும். இது இயேசு வாழ்ந்தது போல், எப்படி பரிசுத்தமாகவும், முன் மாதிரியாகவும் வாழ்வேண்டும் என்று நமக்கு அறிவுறை சொல்கிறார். இதே அறிவுரை, இயேசு கூறிய "பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே " ஜெபத்திலும் "எங்கள் அனுதின உணவை இன்று அளித்தருளும்" என்றும் இருக்கிறது. ஜெபத்திலும், ப்ரசங்கத்திலும், நமது அனுதின தேவைகளுக்கு நாம் கடவுளை நம்பி இருக்க வேண்டும் என்பது தான் இன்றைய நற்செய்தியின் நோக்கம்.
ஒவ்வொரு நாளும், நமது தேவைகளுக்கு, நாம் கடவுளை நம்பியிருக்க வேண்டும் அல்லது இவ்வுலக வழியில் நாமாக நமது முடிவை எடுக்க வேண்டும். நாம் இரண்டு பேருக்கும் பணியாளனாய் இருக்க முடியாது. நமது மதச்சடங்குகள் மூலம் நாம் ஒரு காலை மோட்சத்திற்கும், இன்னொரு காலை, இவ்வுலக வாழ்வின் முறைகளிலும் வைத்து கொண்டு நாம் நம்மையெ ஏமாற்றி கொள்ள கூடாது.
"செல்வம்" என்ற வார்த்தை அரமாயிக் வார்த்தையிலிருந்து வந்தது. அதன் அர்த்தம் என்னவென்றால், "செல்வம்" அல்லது "சொத்து" ஆகும். ஒரு காலத்தில் ஒரு கதை உண்டு, யாரோ ஒருவர், "எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்" என்று கடவுளிடம் வேண்டிகொண்டார்களாம் அதற்கு கடவுள், "உங்களிடம் ஏற்கணவே உங்கள் உணவு உள்ளது, மற்றவர்கள் உணவையும் நீங்கள் வைத்திருக்கிறீர்கள்" என்று கூறினாராம். மற்றவர்களுக்கு தேவையானதை ஏன் நாம் சேமித்து வைத்திருக்கிறோம் ? நாம் நமது எதிர்காலத்திற்காக நாம் சேமித்து வைக்கிறோம். ஆனால் பலர், நம்மிடம் அதிகம் உள்ளதை தினமும் கிடைக்காமல் அவதிபடுகின்றனர். அவர்களிடம் அதை கொடுத்து விட்டால், நமக்கு பிற்காலத்தில் கிடைக்காமல் போய்விடுவோமா என்ற பயம் நம்மிடம் இருக்கிறது.
அப்படி ஒரு எண்ணம் நமக்கு இருந்தால், நாம் கடவுளை நம்பவில்லை என்று அர்த்தம். கடவுள் நம்மை கவனிக்கமாட்டார் என்ற கொள்கையுடன் இருக்கிறீர்கள். நாம் எப்படி மற்றவர்களிடம் தாரளமாக இருக்கிறோமோ, அப்படி ஒன்றும் கடவுள் இருக்கமாட்டார் என்று அனுமானித்து விடுகிறோம். அதனால் தான் இயேசு "நீங்கள் ரொம்பவே கவலைபடுகிறீர்கள்!, உங்களுக்கு தேவையானதை விட அதிகமாக வைத்து இருந்தால், கவலை படவேண்டாம்" என்று கூறுகிறார். நாம் நமது கவலையை விட கடவுள் எவ்வளவு நல்லவர் என்று நீங்கள் நினைக்க வேண்டும்.
"கடவுள் உங்களை அதிகமாக அன்பு செய்கிறார். அவர் உங்களை கவனித்து கொள்வார்! நீங்கள் இறையரசிற்காகவும், கடவுளின் வழியிலும் செல்ல முனைந்தால், உங்களுக்கு தேவையானது ஒவ்வொன்றும் கிடைக்கும், அதனால் கவலைபடுவதை நிறுந்துங்கள் " என்று இயேசு கூறுகிறார்.
கவலைபடுவது ஒரு பாவமாகும், இது நம்மை இயேசுவின் மீது உள்ள கண்களை விலக்கிவிடும். கவலை சாத்தானின் வேலையாகும், , இது நம்மை மற்றவர்களிடம் நாம் காட்ட வேண்டிய இயேசுவின் தாராள குணத்தையும், அன்பையும் பிரித்து விடும்.
(www.gnm.org)
Showing posts with label ஞாயிறு நற்செய்தி. Show all posts
Showing posts with label ஞாயிறு நற்செய்தி. Show all posts
Friday, February 25, 2011
Friday, September 3, 2010
செப்டம்பர் 5, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
செப்டம்பர் 5, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 23ம் ஞாயிறு
Wisdom 9:13-18b
Ps 90:(1) 3-6, 12-17
Philemon 9-10, 12-17
Luke 14:25-33
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 14
இயேசுவின் சீடர் யார்?
(மத் 10:37 - 38)
25 பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது:26 ' என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது.27 தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது.28 ' உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட்டாரா?29 இல்லாவிட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக,30 ' இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லை ' என்பார்களே!31 ' வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா?32 எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும்போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேட மாட்டாரா?33 அப்படியே, உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.
(thanks to www.arulvakku.com)
உங்கள் வாழ்க்கையில் கடவுளின் உறவை விட,வேறு எதற்கு முதன்மை இடம் கொடுக்கிறீர்கள்? இன்றைய நற்செய்தியில், யேசு எதற்கு முதன்மையிடம் கொடுக்கிறீர்கள் என்று பார்க்க சொல்கிறார். உங்கள் நன்பர்களுக்கா ?, உங்கள் வேலைக்கா? உங்கள் சொத்துக்கா? உங்கள் லட்சியங்களுக்காகவா? இல்லை உங்கள் அனுதின செயல்களுக்கா?
எந்த சிலுவையிலிருந்து விலக விரும்புகிறீர்கள்? அதிலிருந்து விலகுவதால், இயேசுவை ஒதுக்கி தள்ளுகிறீர்களா? (குறிப்பாக: அன்பிற்காக எந்த தியாகத்தை செய்ய நீங்கள் விரும்பவில்லை? )
நாம் அவருடைய சீடராக இருப்பதற்கு முழுமையான பற்றுதலோடும், ஒத்துழைப்போடும் இல்லாமல் இருந்தால், அவரை போல மாறாமலும், அவரிடமிருந்து கற்காமலும் இருந்தால், நமது வாழ்வில் மற்ற வேலைகளுக்கும் நாம் சரியாக தயார் படுத்தவில்லை என்று இயேசு கூறுகிறார்.
மாறாக சொல்வதானால், நாம் நமது முக்கிய நோக்கத்திற்காக, நமது வேலைகளை சரியாக செய்து வந்தாலும், கிறிஸ்துவோடு உள்ள நமது உறவு எல்லாவற்றிற்கும் மேலான , முதன்மையான குறிக்கோளாக இல்லையெனில், நாம் மிகச்சரியான முடிவிற்கு செல்ல முடியாமால் இருப்போம். ஏனெனில், இவ்வுலக சிந்தனைகளால், மிகவும் தொந்தரவிற்கு உள்ளாவோம். அதனால் பாதிக்கபடுவோம், வெற்றியாளராக இல்லாமல், பாதிக்கப்பட்டோராய் இருப்போம். இவ்வுலகில் நாம் செய்து முடிக்கும் எந்த வெற்றியும் தற்காலிகமானதே, ஏனெனில், அந்த வெற்றியில், கடவுளரசின் நோக்கங்களோ, அல்லது நித்திய வாழ்விற்கான ஆயத்தங்களோ இல்லை.
சீடர் என்பவர் மானவர் ஆவார். யேசுவிடமிருந்து, மற்றவர்களை அன்பு செய்வது எப்படி என்று கற்று கொள்கிறோம். சில் நேரங்களில், இதுவே, நமக்கு மிகப்பெரிய சிலுவை ஆகும். யேசு நமக்கு எப்படி , அன்புடனும், சந்தோசத்துடனும், நிபந்தனையற்ற அன்புடனும், மன்னித்து வாழவும் வாழ கற்று தருகிறார். நமது பரிசுத்த வாழ்வில் தொந்தரவு செய்பவர்களையும் நமது எல்லைக்குள் வரவிடாமல் இருக்கவும் யேசு நமக்கு கற்று தருகிறார். இதுவே நமக்கு ஒரு சிலுவையாக இருக்க கூடும்.
இயேசுவை பின் செல்வதிலும், அவரை போலவே மாறுவதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றால், தொடர்ந்து நாம் முயற்சி செய்து, நமக்கு வரும் சிலுவையை தூக்கி கொண்டு , நம்மையே யேசுவோடு இணைத்து, அவரின் சிலுவையோடு, நாமும் இனைந்து, அவரது ஆற்றலோடு நாமும் இனைந்தால் தான், நம்மால் அவர் பின் செல்ல முடியும். கிறிஸ்துவோடு உள்ள இனைப்பில் நாம் கவனம் செலுத்தவில்லையென்றால், நாம் நமது முயற்சியில் தோல்வியடைவோம். சிலுவையின் பாரத்தால், நாம் கீழே விழுவோம். ஆனால் இயேசு செய்ததை போல , மற்றவர்களின் அன்பிற்காக நாம் தியாகம் செய்ய முயற்சித்தால், யேசுவை முழுமையாக அனைத்து, அவரோடு முழு இனைப்பில், நாம் செய்ய வேண்டியதை செய்வோம். இது எந்த் ஒரு ஜெபமும், அல்லது மற்ற முறைகளையும் விட மிகவும் அதிக பலனை தரக்கூடியது.
http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica
ஆண்டின் 23ம் ஞாயிறு
Wisdom 9:13-18b
Ps 90:(1) 3-6, 12-17
Philemon 9-10, 12-17
Luke 14:25-33
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 14
இயேசுவின் சீடர் யார்?
(மத் 10:37 - 38)
25 பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது:26 ' என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது.27 தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது.28 ' உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட்டாரா?29 இல்லாவிட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக,30 ' இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லை ' என்பார்களே!31 ' வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா?32 எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும்போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேட மாட்டாரா?33 அப்படியே, உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.
(thanks to www.arulvakku.com)
உங்கள் வாழ்க்கையில் கடவுளின் உறவை விட,வேறு எதற்கு முதன்மை இடம் கொடுக்கிறீர்கள்? இன்றைய நற்செய்தியில், யேசு எதற்கு முதன்மையிடம் கொடுக்கிறீர்கள் என்று பார்க்க சொல்கிறார். உங்கள் நன்பர்களுக்கா ?, உங்கள் வேலைக்கா? உங்கள் சொத்துக்கா? உங்கள் லட்சியங்களுக்காகவா? இல்லை உங்கள் அனுதின செயல்களுக்கா?
எந்த சிலுவையிலிருந்து விலக விரும்புகிறீர்கள்? அதிலிருந்து விலகுவதால், இயேசுவை ஒதுக்கி தள்ளுகிறீர்களா? (குறிப்பாக: அன்பிற்காக எந்த தியாகத்தை செய்ய நீங்கள் விரும்பவில்லை? )
நாம் அவருடைய சீடராக இருப்பதற்கு முழுமையான பற்றுதலோடும், ஒத்துழைப்போடும் இல்லாமல் இருந்தால், அவரை போல மாறாமலும், அவரிடமிருந்து கற்காமலும் இருந்தால், நமது வாழ்வில் மற்ற வேலைகளுக்கும் நாம் சரியாக தயார் படுத்தவில்லை என்று இயேசு கூறுகிறார்.
மாறாக சொல்வதானால், நாம் நமது முக்கிய நோக்கத்திற்காக, நமது வேலைகளை சரியாக செய்து வந்தாலும், கிறிஸ்துவோடு உள்ள நமது உறவு எல்லாவற்றிற்கும் மேலான , முதன்மையான குறிக்கோளாக இல்லையெனில், நாம் மிகச்சரியான முடிவிற்கு செல்ல முடியாமால் இருப்போம். ஏனெனில், இவ்வுலக சிந்தனைகளால், மிகவும் தொந்தரவிற்கு உள்ளாவோம். அதனால் பாதிக்கபடுவோம், வெற்றியாளராக இல்லாமல், பாதிக்கப்பட்டோராய் இருப்போம். இவ்வுலகில் நாம் செய்து முடிக்கும் எந்த வெற்றியும் தற்காலிகமானதே, ஏனெனில், அந்த வெற்றியில், கடவுளரசின் நோக்கங்களோ, அல்லது நித்திய வாழ்விற்கான ஆயத்தங்களோ இல்லை.
சீடர் என்பவர் மானவர் ஆவார். யேசுவிடமிருந்து, மற்றவர்களை அன்பு செய்வது எப்படி என்று கற்று கொள்கிறோம். சில் நேரங்களில், இதுவே, நமக்கு மிகப்பெரிய சிலுவை ஆகும். யேசு நமக்கு எப்படி , அன்புடனும், சந்தோசத்துடனும், நிபந்தனையற்ற அன்புடனும், மன்னித்து வாழவும் வாழ கற்று தருகிறார். நமது பரிசுத்த வாழ்வில் தொந்தரவு செய்பவர்களையும் நமது எல்லைக்குள் வரவிடாமல் இருக்கவும் யேசு நமக்கு கற்று தருகிறார். இதுவே நமக்கு ஒரு சிலுவையாக இருக்க கூடும்.
இயேசுவை பின் செல்வதிலும், அவரை போலவே மாறுவதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றால், தொடர்ந்து நாம் முயற்சி செய்து, நமக்கு வரும் சிலுவையை தூக்கி கொண்டு , நம்மையே யேசுவோடு இணைத்து, அவரின் சிலுவையோடு, நாமும் இனைந்து, அவரது ஆற்றலோடு நாமும் இனைந்தால் தான், நம்மால் அவர் பின் செல்ல முடியும். கிறிஸ்துவோடு உள்ள இனைப்பில் நாம் கவனம் செலுத்தவில்லையென்றால், நாம் நமது முயற்சியில் தோல்வியடைவோம். சிலுவையின் பாரத்தால், நாம் கீழே விழுவோம். ஆனால் இயேசு செய்ததை போல , மற்றவர்களின் அன்பிற்காக நாம் தியாகம் செய்ய முயற்சித்தால், யேசுவை முழுமையாக அனைத்து, அவரோடு முழு இனைப்பில், நாம் செய்ய வேண்டியதை செய்வோம். இது எந்த் ஒரு ஜெபமும், அல்லது மற்ற முறைகளையும் விட மிகவும் அதிக பலனை தரக்கூடியது.
http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica
Friday, March 5, 2010
மார்ச் 7, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
மார்ச் 7, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 3ம் ஞாயிறு
Ex 3:1-8a, 13-15
Ps 103: 1-4, 6-8, 11
1 Cor 10:1-6, 10-12
Luke 13:1-9
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 13
1 அவ்வேளையில் சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர்.2 அவர் அவர்களிடம் மறுமொழியாக, ' இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா?3அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்.4சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும்விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா?5அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள் ' என்றார்.6மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்: ' ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை.7எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், ' பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்? ' என்றார்.8தொழிலாளர் மறுமொழியாக, ' ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன்.9அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம் ' என்று அவரிடம் கூறினார். '
(thanks to www.arulvakku.com)
மிகவும் கொடூரமான, தவறான முறையைல் எல்லோரையும் பாதிக்கும் செயல்கள் செய்பவர்களுக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்து அவர்கள் மிகவும் கஷ்டப்படும்பொழுது, நாம் அனைவரும் சந்தோசப்படுவோம், ஏனெனில், அவர்களுக்கு சரியான தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என நாம் நினைக்கிறோம்.
இதை தான் யேசு இன்றைய நற்செய்தியில் செய்தியாக நமக்கு கொடுக்கிறார். நம்மை விட மற்றவர்கள் பெரிய பாவிகள் என்று நம்மால் உறுதியாக கூற முடியாது என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என சொல்கிறார். அவர்கள் நம்மை விட தீயவர்களாக இருந்தாலும், நாம் அவர்கள் பெரும்பாவிகள் என்று சொல்ல கூடாது.
ஒவ்வொரு மனிதனும், கடவுளின் உருவத்தை போல படைக்கப்பட்டுள்ளான், தீயவர்களும் அப்படியே படைக்கப்பட்டுள்ளனர். கடவுளுக்கு எதிரான உருவத்தை யாரும் காட்டினாலும், அவர்களையும் யேசு அன்பு செய்தார், அவர்களுக்காகவும் அவர் மரித்தார்.எந்த மனிதரும் தீய மனிதர் கிடையாது, அவர்கள் உடைந்த மனிதர்கள். அவர்கள் அனைவரும் பேயின் தூன்டுதலால், தவறான வழியில் செல்பவர்கள். நமக்காகவே உடைந்த யேசுபிரானின் பாவமற்ற மனம், இந்த பாவ வழியில் செல்பவர்களை புனிதமாக்கும், என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வில்லை. அவர்களுக்காக நாம் வருத்தபட வேண்டும். அந்த தியவர்கள் இன்னும் அந்த பாவத்திலேயே இருக்கிறார்களே என்று யேசுவோடு நாமும் சேர்ந்து கவலைபடவேன்டும்.
ஒரு மனிதனின் ஆன்மா அழிவு பாதையில் செல்வதை நினைத்து நாம் வருத்தப்படவில்லை என்றால், நாம் பாவம் செய்கிறோம். யேசு நமக்காக சிலுவையில் செய்ததை நாம் அலட்சியம் செய்கிறோம். நாம் நம் ஆன்மாவையே புன்படுத்திகொள்கிறோம்.
உங்களுக்கு எதிராக பாவம் செய்தவர்கள் அனைவரும், அத்தி மரத்தை போன்றவர்கள் ஆவர். உங்களால் அவர்களை கேட்க வைக்க முடியும் என்றால், நீங்கள் அவர்களுக்கு உரம் போட வேன்டும் என்று யேசு கூறுகிறார். உங்கள் நடவடிக்கைகள் மூலமும், உங்கள் வார்த்தைகள் மூலமும், அவர்களுக்கு நீங்கள் உரமாக இருக்க வேன்டும் என்று யேசு விரும்புகிறர். சரியான திசையில் அவர்களை செலுத்த நீங்கள் பனிவுடனும், கனிவுடனும் அறிவுறுத்த வேண்டும் என யேசு ஆசைபடுகிறார்.
யேசு கனிகொடாத மரத்தை அதிக நாட்கள் வைத்திருக்க விரும்பவில்லை என்பதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நம்மால் செய்ய முடிந்த்தெல்லாம் செய்தும், தியவர்கள் மனதிரும்பவில்லை என்றால், அந்த தோட்டத்திற்கு நம்மால் முடிந்த உதவி என்னவென்றால், அந்த மரத்தை வெட்டிவிடுவது தான். இதற்கு என்ன அர்த்தம் என்றால், அவர்களை விட்டு விலகி விடுவது அல்லது, சரியான் அதிகார்த்தில் இருக்கும் நபரிடம், இந்த ப்ரச்னைகளை கையான்டு, அவர்களின் தீமைகளுக்கு சரியான தன்டனை கிடைக்க ஏற்பாடு செய்ய வேன்டும். இதனையும் மிகவும் கனிவுடனும், பொருமையுடனும் செய்ய வேன்டும். உரம் கொடுத்தும் , நல்ல பழங்களை தரவில்லையென்றால், அந்த மரம் கீழே விழுந்து, மக்கி மற்ற புதிய மரங்களுக்கு உரமாக இருக்கும்.
http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica
தவக்காலத்தின் 3ம் ஞாயிறு
Ex 3:1-8a, 13-15
Ps 103: 1-4, 6-8, 11
1 Cor 10:1-6, 10-12
Luke 13:1-9
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 13
1 அவ்வேளையில் சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர்.2 அவர் அவர்களிடம் மறுமொழியாக, ' இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா?3அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்.4சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும்விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா?5அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள் ' என்றார்.6மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்: ' ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை.7எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், ' பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்? ' என்றார்.8தொழிலாளர் மறுமொழியாக, ' ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன்.9அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம் ' என்று அவரிடம் கூறினார். '
(thanks to www.arulvakku.com)
மிகவும் கொடூரமான, தவறான முறையைல் எல்லோரையும் பாதிக்கும் செயல்கள் செய்பவர்களுக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்து அவர்கள் மிகவும் கஷ்டப்படும்பொழுது, நாம் அனைவரும் சந்தோசப்படுவோம், ஏனெனில், அவர்களுக்கு சரியான தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என நாம் நினைக்கிறோம்.
இதை தான் யேசு இன்றைய நற்செய்தியில் செய்தியாக நமக்கு கொடுக்கிறார். நம்மை விட மற்றவர்கள் பெரிய பாவிகள் என்று நம்மால் உறுதியாக கூற முடியாது என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என சொல்கிறார். அவர்கள் நம்மை விட தீயவர்களாக இருந்தாலும், நாம் அவர்கள் பெரும்பாவிகள் என்று சொல்ல கூடாது.
ஒவ்வொரு மனிதனும், கடவுளின் உருவத்தை போல படைக்கப்பட்டுள்ளான், தீயவர்களும் அப்படியே படைக்கப்பட்டுள்ளனர். கடவுளுக்கு எதிரான உருவத்தை யாரும் காட்டினாலும், அவர்களையும் யேசு அன்பு செய்தார், அவர்களுக்காகவும் அவர் மரித்தார்.எந்த மனிதரும் தீய மனிதர் கிடையாது, அவர்கள் உடைந்த மனிதர்கள். அவர்கள் அனைவரும் பேயின் தூன்டுதலால், தவறான வழியில் செல்பவர்கள். நமக்காகவே உடைந்த யேசுபிரானின் பாவமற்ற மனம், இந்த பாவ வழியில் செல்பவர்களை புனிதமாக்கும், என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வில்லை. அவர்களுக்காக நாம் வருத்தபட வேண்டும். அந்த தியவர்கள் இன்னும் அந்த பாவத்திலேயே இருக்கிறார்களே என்று யேசுவோடு நாமும் சேர்ந்து கவலைபடவேன்டும்.
ஒரு மனிதனின் ஆன்மா அழிவு பாதையில் செல்வதை நினைத்து நாம் வருத்தப்படவில்லை என்றால், நாம் பாவம் செய்கிறோம். யேசு நமக்காக சிலுவையில் செய்ததை நாம் அலட்சியம் செய்கிறோம். நாம் நம் ஆன்மாவையே புன்படுத்திகொள்கிறோம்.
உங்களுக்கு எதிராக பாவம் செய்தவர்கள் அனைவரும், அத்தி மரத்தை போன்றவர்கள் ஆவர். உங்களால் அவர்களை கேட்க வைக்க முடியும் என்றால், நீங்கள் அவர்களுக்கு உரம் போட வேன்டும் என்று யேசு கூறுகிறார். உங்கள் நடவடிக்கைகள் மூலமும், உங்கள் வார்த்தைகள் மூலமும், அவர்களுக்கு நீங்கள் உரமாக இருக்க வேன்டும் என்று யேசு விரும்புகிறர். சரியான திசையில் அவர்களை செலுத்த நீங்கள் பனிவுடனும், கனிவுடனும் அறிவுறுத்த வேண்டும் என யேசு ஆசைபடுகிறார்.
யேசு கனிகொடாத மரத்தை அதிக நாட்கள் வைத்திருக்க விரும்பவில்லை என்பதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நம்மால் செய்ய முடிந்த்தெல்லாம் செய்தும், தியவர்கள் மனதிரும்பவில்லை என்றால், அந்த தோட்டத்திற்கு நம்மால் முடிந்த உதவி என்னவென்றால், அந்த மரத்தை வெட்டிவிடுவது தான். இதற்கு என்ன அர்த்தம் என்றால், அவர்களை விட்டு விலகி விடுவது அல்லது, சரியான் அதிகார்த்தில் இருக்கும் நபரிடம், இந்த ப்ரச்னைகளை கையான்டு, அவர்களின் தீமைகளுக்கு சரியான தன்டனை கிடைக்க ஏற்பாடு செய்ய வேன்டும். இதனையும் மிகவும் கனிவுடனும், பொருமையுடனும் செய்ய வேன்டும். உரம் கொடுத்தும் , நல்ல பழங்களை தரவில்லையென்றால், அந்த மரம் கீழே விழுந்து, மக்கி மற்ற புதிய மரங்களுக்கு உரமாக இருக்கும்.
http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica
Saturday, February 13, 2010
பிப்ரவரி 14, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
பிப்ரவரி 14, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 6வது ஞாயிறு
Jer 17:5-8
Ps 1:1-4, 6 (with 40:5a)
1 Cor 15:12, 16-20
Luke 6:17, 20-26
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 6
17 இயேசு அவர்களுடன் இறங்கி வந்து சமவெளியான ஓரிடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீர், சீதோன் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த பெருந்திரளான மக்களும் அங்கே இருந்தார்கள். 20 இயேசு சீடர்மீது தம் பார்வையைப் பதித்துக் கூறியவை: ' ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே.21 இப்பொழுது பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறு பெற்றோர்; ஏனெனில் நீங்கள் நிறைவு பெறுவீர்கள். இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்.22 மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர்.23 அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அவர்களுடைய மூதாதையரும் இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்துவந்தனர்.24 ஆனால் செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் எல்லாம் அனுபவித்துவிட்டீர்கள்.25 இப்போது உண்டு கொழுந்திருப்போரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் பட்டினி கிடப்பீர்கள். இப்போது சிரித்து இன்புறுவோரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் துயருற்று அழுவீர்கள்.26 மக்கள் எல்லாரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் அவர்களின் மூதாதையரும் போலி இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்தார்கள்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், ஏழைகளிடத்திலே, கடவுள் பரிவும் அன்பும் கொண்டு, அவர்கள் பக்கம் தான் இருப்பார் என்று நமக்கு தெளிவாக சொல்கிறார். ஏழைகள் (இவ்வுலக செல்வம் இல்லாமல் இருக்கும் ஏழைகள் மற்றும், பரிசுத்த வாழ்விலும் வளம் இழந்தவர்கள்), பசியுற்றவர்கள், அழுபவர்கள், பலர் வெறுப்புக்கு ஆளானவர்கள், விலக்கி வைக்கப்பட்டவர்கள், அவமானப்படுத்தபட்டவர்கள், யேசுவின் மேல் கொண்ட விசுவாசத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் அனைவரிடமும், கடவுள் பரிவும் பாசமும் கொண்டு அவர்கள் பக்கம் நிற்கிறார்.
மற்றவர்களின் துக்கத்திற்கு நாமும் ஒரு காரணமாக எப்பொழுது இருந்தாலும், நாம் கடவுளுக்கு எதிராக இருக்கிறோம். எடுத்து காட்டாக, மற்றவகளை பற்றி தவறாக கிசு கிசு பேசும்பொழுது, அந்த கிசு கிசு உண்மையாக இருந்தாலும், கூட, நாம் யேசுவிற்கு எதிராக வேலை செய்கிறோம்.
இழிவான ஜோக்குகள், நீதியற்ற வழக்குகள் பதிவு செய்வது, நம்மால் உதவ முடியும் என்று தெரிந்தும், தேவையானவர்களுக்கு அவர்கள் தேவை அறிந்தும் செய்யாமலிருப்பது எல்லாமே யேசுவிற்கு எதிரானது தான். மற்றவர்களை பயமுறுத்துவது, , எப்பொழுதுமே தாமதமாக செய்வது, மற்றவர்களிடமிருந்து அதிகம் எதிர்பார்ப்பது போன்ற செயல்கள் அனைத்தும் கடவுளுக்கு எதிரானவையே.
இது மாதிரியாக, கடவுளை தொடர்ந்து ஒதுக்கியும், எதிராகவும் செய்பவர்களுக்கு என்ன ஆகும்? அவர்களுக்கு அழிவு தான்!, கடவுள் மேல் நம்பிக்கையும், விசுவாசமும் கொண்டவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் ஆவர். (இன்றைய முதல் வாசகத்தில் குறிப்பிட்டுள்ளது உள்ளது போல), தம்மையே நம்பியவர்களுக்கு துக்கமும், துன்பமும் அனுபவிப்பது தவிர்க்க முடியாதது ஆகும்.
சுய நலக்காரர்கள், அவர்களுடைய சொத்து மூலம் அதிக பயனடையலாம், ஆனால், அது தற்காலிகமானது தான், அதை எடுத்து கொண்டு மோட்சத்திற்கு செல்ல முடியாது அல்லது அந்த சொத்தை வைத்து கொண்டு, மோட்சத்திற்கான வழியை வாங்க முடியாது. இதற்கினிடையே, கடவுள் இந்த சொத்தையெல்லாம் அனுபவிக்காத ஏழைகள் பக்கம் நிற்கிறார். ஏனெனில் அந்த சொத்துக்கள் / செல்வங்கள் அவர்களுக்கு பகிர்ந்து அளிக்க படவில்லை.
அதேபோல, அழுபவர்களை பார்த்து, சிரிப்பவர்கள், அதிக நாள் சிரிக்க மாட்டார்கள். அடுத்தவர்களின் துன்பத்தால், இன்பம் பெறுபவது தற்காலிகமானது, மேலும் அதனால் உண்மையான திருப்தி அடைய முடியாது.
புகழுடனும், பிரபலத்துடனும், எல்லோராலும் புகழப்படுபவர்கள் , அவர்கள் திரும்பி நடக்க ஆரம்பிக்கும்போதே, அவர்கள் எல்லாரும் குறை சொல்ல ஆரம்பிப்பார்கள்.
கீழே தள்ளப்படுபவர்கள் எல்லாரையும் யேசு மேலே தூக்குகிறார். தன்னை தானே தூக்கி கொள்பவர்கள், ரொம்ப நேரம் தூக்க முடியாமல் தவிப்பார்கள் , அந்த துயரத்தினிடையே புன்னகைப்பார்கள் .
http://catholicdr.com/ebooks/Lent.htm
© 2010 by Terry A. Modica
This work is NOT in Public Domain and may NOT be copied without permission.
You may print one copy for your own personal use.
For PERMISSION and info on how to copy this reflection for sharing, see:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
ஆண்டின் 6வது ஞாயிறு
Jer 17:5-8
Ps 1:1-4, 6 (with 40:5a)
1 Cor 15:12, 16-20
Luke 6:17, 20-26
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 6
17 இயேசு அவர்களுடன் இறங்கி வந்து சமவெளியான ஓரிடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீர், சீதோன் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த பெருந்திரளான மக்களும் அங்கே இருந்தார்கள். 20 இயேசு சீடர்மீது தம் பார்வையைப் பதித்துக் கூறியவை: ' ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே.21 இப்பொழுது பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறு பெற்றோர்; ஏனெனில் நீங்கள் நிறைவு பெறுவீர்கள். இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்.22 மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர்.23 அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அவர்களுடைய மூதாதையரும் இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்துவந்தனர்.24 ஆனால் செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் எல்லாம் அனுபவித்துவிட்டீர்கள்.25 இப்போது உண்டு கொழுந்திருப்போரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் பட்டினி கிடப்பீர்கள். இப்போது சிரித்து இன்புறுவோரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் துயருற்று அழுவீர்கள்.26 மக்கள் எல்லாரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் அவர்களின் மூதாதையரும் போலி இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்தார்கள்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், ஏழைகளிடத்திலே, கடவுள் பரிவும் அன்பும் கொண்டு, அவர்கள் பக்கம் தான் இருப்பார் என்று நமக்கு தெளிவாக சொல்கிறார். ஏழைகள் (இவ்வுலக செல்வம் இல்லாமல் இருக்கும் ஏழைகள் மற்றும், பரிசுத்த வாழ்விலும் வளம் இழந்தவர்கள்), பசியுற்றவர்கள், அழுபவர்கள், பலர் வெறுப்புக்கு ஆளானவர்கள், விலக்கி வைக்கப்பட்டவர்கள், அவமானப்படுத்தபட்டவர்கள், யேசுவின் மேல் கொண்ட விசுவாசத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் அனைவரிடமும், கடவுள் பரிவும் பாசமும் கொண்டு அவர்கள் பக்கம் நிற்கிறார்.
மற்றவர்களின் துக்கத்திற்கு நாமும் ஒரு காரணமாக எப்பொழுது இருந்தாலும், நாம் கடவுளுக்கு எதிராக இருக்கிறோம். எடுத்து காட்டாக, மற்றவகளை பற்றி தவறாக கிசு கிசு பேசும்பொழுது, அந்த கிசு கிசு உண்மையாக இருந்தாலும், கூட, நாம் யேசுவிற்கு எதிராக வேலை செய்கிறோம்.
இழிவான ஜோக்குகள், நீதியற்ற வழக்குகள் பதிவு செய்வது, நம்மால் உதவ முடியும் என்று தெரிந்தும், தேவையானவர்களுக்கு அவர்கள் தேவை அறிந்தும் செய்யாமலிருப்பது எல்லாமே யேசுவிற்கு எதிரானது தான். மற்றவர்களை பயமுறுத்துவது, , எப்பொழுதுமே தாமதமாக செய்வது, மற்றவர்களிடமிருந்து அதிகம் எதிர்பார்ப்பது போன்ற செயல்கள் அனைத்தும் கடவுளுக்கு எதிரானவையே.
இது மாதிரியாக, கடவுளை தொடர்ந்து ஒதுக்கியும், எதிராகவும் செய்பவர்களுக்கு என்ன ஆகும்? அவர்களுக்கு அழிவு தான்!, கடவுள் மேல் நம்பிக்கையும், விசுவாசமும் கொண்டவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் ஆவர். (இன்றைய முதல் வாசகத்தில் குறிப்பிட்டுள்ளது உள்ளது போல), தம்மையே நம்பியவர்களுக்கு துக்கமும், துன்பமும் அனுபவிப்பது தவிர்க்க முடியாதது ஆகும்.
சுய நலக்காரர்கள், அவர்களுடைய சொத்து மூலம் அதிக பயனடையலாம், ஆனால், அது தற்காலிகமானது தான், அதை எடுத்து கொண்டு மோட்சத்திற்கு செல்ல முடியாது அல்லது அந்த சொத்தை வைத்து கொண்டு, மோட்சத்திற்கான வழியை வாங்க முடியாது. இதற்கினிடையே, கடவுள் இந்த சொத்தையெல்லாம் அனுபவிக்காத ஏழைகள் பக்கம் நிற்கிறார். ஏனெனில் அந்த சொத்துக்கள் / செல்வங்கள் அவர்களுக்கு பகிர்ந்து அளிக்க படவில்லை.
அதேபோல, அழுபவர்களை பார்த்து, சிரிப்பவர்கள், அதிக நாள் சிரிக்க மாட்டார்கள். அடுத்தவர்களின் துன்பத்தால், இன்பம் பெறுபவது தற்காலிகமானது, மேலும் அதனால் உண்மையான திருப்தி அடைய முடியாது.
புகழுடனும், பிரபலத்துடனும், எல்லோராலும் புகழப்படுபவர்கள் , அவர்கள் திரும்பி நடக்க ஆரம்பிக்கும்போதே, அவர்கள் எல்லாரும் குறை சொல்ல ஆரம்பிப்பார்கள்.
கீழே தள்ளப்படுபவர்கள் எல்லாரையும் யேசு மேலே தூக்குகிறார். தன்னை தானே தூக்கி கொள்பவர்கள், ரொம்ப நேரம் தூக்க முடியாமல் தவிப்பார்கள் , அந்த துயரத்தினிடையே புன்னகைப்பார்கள் .
http://catholicdr.com/ebooks/Lent.htm
© 2010 by Terry A. Modica
This work is NOT in Public Domain and may NOT be copied without permission.
You may print one copy for your own personal use.
For PERMISSION and info on how to copy this reflection for sharing, see:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Saturday, December 12, 2009
டிசம்பர் 13, 2009, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
டிசம்பர் 13, 2009, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
திருவருகை கால மூன்றாம் ஞாயிறு
Zeph 3:14-18a
Isaiah 12:2-6
Phil 4:4-7
Luke 3:10-18
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 3
10 அப்போது, ' நாங்கள் என்ன செய்ய வேண்டும்? ' என்று கூட்டத்தினர் அவரிடம் கேட்டனர்.11 அதற்கு அவர் மறுமொழியாக, ' இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும் ' என்றார்.12 வரி தண்டுவோரும் திருமுழுக்குப் பெற வந்து, ' போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்? ' என்று அவரிடம் கேட்டனர்.13 அவர், ' உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும் தண்டாதீர்கள் ' என்றார்.14 படைவீரரும் அவரை நோக்கி, ' நாங்கள் என்ன செய்ய வேண்டும்? ' என்று கேட்டனர். அவர், ' நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்; யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள்; உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள் ' என்றார்.15 அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்கள்.16 யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, ' நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.17 அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார். கோதுமையைத் தம் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார் ' என்றார்.18 மேலும் பல அறிவுரைகள் கூறி மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்.
(thanks to www.arulvakku.com)
திருவருகை ஞாயிறின் மூன்றாம் வாரத்தில், நாம் ஆவியின் மகிழ்ச்சியை நோக்கி, அதனை கருத்தில் கொண்டு இந்த வாரத்தை கொண்டாடுகிறோம். எல்லா வாசகங்களும், முழுமையான மகிழ்ச்சியையும், சந்தோசத்தையும் காட்டுகிறது. மேலும் சந்தோசமான எதிர்பார்ப்பையும் கூட்டுகிறது. நற்செய்தியில், யோவான் நற்செய்தியை மக்களுக்கு கூறுகிறார். மக்கள் எல்லோரும், சந்தோசமான எதிர்பார்ப்புடன், கடவுள் என்ன செய்ய போகிறாரோ என்று எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.
சந்தோசாமாக இருப்பது, மகிழ்ச்சியுடன் நமது செயல்கள் செய்வதுமே இறைசேவையாகும். நீங்கள் அனைவரும் இதனை செய்ய அழைக்கப்பட்டுள்ளீர்கள். எங்கெல்லாம், நம்பிக்கையின்மையும், சந்தோசமின்மையும், கலக்கமும் உண்டாகிறதோ , அங்கெல்லாம், நீங்கள் மகிழ்ச்சியையும், அமைதியையும் கொடுக்க அழைக்கப்பட்டுள்ளீர்கள்.
யோவான் இந்த இறைசேவையை (மகிழ்ச்சியை பகிரும்) எப்படி செய்தார் என்பதை பார்ப்போம். அவர் சாதாரான ஒட்டக தோலை உடுத்தி, எல்லாரும் மனத்திரும்புங்கள் என்று பயமுறுத்தும், மனிதராக நாம் பார்க்கலாம். ஆனால், கொஞ்சம் உற்று நோக்குங்கள், மக்களை யேசுவின் வருகையை எதிர்பார்த்து அவரை வரவழைக்க தயார்படுத்தினார்.
நீங்களும் நானும் மற்றவர்களின் உணர்வுகளுக்கு பொறுப்பானவர்கள் இல்லை. நாம் அவர்களை மகிழ்ச்சிபடுத்தும் இறைசேவையை செய்தாலும், அவர்கள் அதனால் சந்தோசப்படவில்லை என்றால், நாம் நம் இறைசேவையில் தோற்று போவதில்லை. அவர்கள் சந்தோசத்தை அடையவில்லை என்றால், அவர்கள் இன்னும் யேசுவை ஏற்று கொள்ளவில்லை என்று அர்த்தம்.
சந்தோசத்தின் ஊற்று யேசு தான். நாம் அவரோடு இனைந்தால், கடவுளின் அன்பில் நாம் திளைத்து, நாம் மிகவும் கடினமான ப்ரஸ்னையில் இருந்தாலும், அவரின் அனுக்கமான அன்பினால் நாம் அமைதியுடனும், சந்தோசத்துடனும் இருக்க முடியும். இந்த இனைப்பை கடவுளோடு மற்றவர்கள் அடைய வேண்டும் என்ற உண்மையை, அவர்களுக்கு உணர்த்தினால், நம் மகிழ்சிசியின் இறைசேவை அவர்களை சென்றடையும். யேசுவின் சந்தோசம் , அவரின் மகிழ்ச்சியின் பக்கத்தை, மற்றவர்கள் தெரிந்து கொள்ள நாம் கடமைபட்டுள்ளோம். மேலும், அவரின் எல்லா போதனைகளிலும் உள்ள மகிழ்ச்சியை நாம் அவர்களுக்கு தெரியபடுத்த வேண்டும். அதன் பலனை அவர்கள் தெரியவேண்டும்.
நாம் நமது எதிரியையும் அன்பு செய்ய வேண்டும் என்று யேசு நம்மை கேட்டு கொள்கிறார். நமக்கு தொந்தரவு செய்கிறவர்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்று கூறுகிறார். இவ்வாறு செய்வது நமக்கு ஒன்றும் சந்தோசமில்லை.நாம் என்ன செய்ய வேண்டும் என்றால், பரிசுத்த வாழ்வை எப்படி வாழ வேண்டும் என்று நாம் கண்டறிந்து, அதனை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். அதன் மூலம், யேசுவின் சந்தோசமான அன்பினை அவர்களோடும், நம்மோடும் இனைத்து கொண்டு, அவரின் போதனையை நாம் பின்பற்றுவது ஆகும். இதற்காக நாம் மிகவும் துன்பப்பட்டாலும், இந்த இறைசேவையின் விளைவு, மிகவும் மகிழ்ச்சியான சந்தோசத்தை கொடுக்கும்.
யேசு நாம் எப்படி பரிசுத்த மாக வாழ்வது என்று சொல்வதோடு, பரிசுத்த மாக இருக்க நமக்கு ஆற்றலையும் தருகிறார். அவரின் பரிசுத்த ஆவியை நமக்கு தருகிறார். யோவான் சொல்வது போல, நாம் மனத்திரும்ப வேண்டும் என்று பயப்பட வேண்டியதில்லை. கிறிஸ்துவுடன் இனையும் மகிழ்ச்சியை, நாம் மற்றவர்களுக்கு காட்டி, பரிசுத்த ஆவி நம்மில் செய்யும் செயலை மற்றவர்கள் அறிந்து கொள்ள செய்ய வேண்டும். மேலும் யேசு தான் நமது மகிழ்ச்சிக்கு சந்தோசம் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள செய்ய வேண்டும்.
http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2009 by Terry A. Modica
திருவருகை கால மூன்றாம் ஞாயிறு
Zeph 3:14-18a
Isaiah 12:2-6
Phil 4:4-7
Luke 3:10-18
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 3
10 அப்போது, ' நாங்கள் என்ன செய்ய வேண்டும்? ' என்று கூட்டத்தினர் அவரிடம் கேட்டனர்.11 அதற்கு அவர் மறுமொழியாக, ' இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும் ' என்றார்.12 வரி தண்டுவோரும் திருமுழுக்குப் பெற வந்து, ' போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்? ' என்று அவரிடம் கேட்டனர்.13 அவர், ' உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும் தண்டாதீர்கள் ' என்றார்.14 படைவீரரும் அவரை நோக்கி, ' நாங்கள் என்ன செய்ய வேண்டும்? ' என்று கேட்டனர். அவர், ' நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்; யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள்; உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள் ' என்றார்.15 அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்கள்.16 யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, ' நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.17 அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார். கோதுமையைத் தம் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார் ' என்றார்.18 மேலும் பல அறிவுரைகள் கூறி மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்.
(thanks to www.arulvakku.com)
திருவருகை ஞாயிறின் மூன்றாம் வாரத்தில், நாம் ஆவியின் மகிழ்ச்சியை நோக்கி, அதனை கருத்தில் கொண்டு இந்த வாரத்தை கொண்டாடுகிறோம். எல்லா வாசகங்களும், முழுமையான மகிழ்ச்சியையும், சந்தோசத்தையும் காட்டுகிறது. மேலும் சந்தோசமான எதிர்பார்ப்பையும் கூட்டுகிறது. நற்செய்தியில், யோவான் நற்செய்தியை மக்களுக்கு கூறுகிறார். மக்கள் எல்லோரும், சந்தோசமான எதிர்பார்ப்புடன், கடவுள் என்ன செய்ய போகிறாரோ என்று எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.
சந்தோசாமாக இருப்பது, மகிழ்ச்சியுடன் நமது செயல்கள் செய்வதுமே இறைசேவையாகும். நீங்கள் அனைவரும் இதனை செய்ய அழைக்கப்பட்டுள்ளீர்கள். எங்கெல்லாம், நம்பிக்கையின்மையும், சந்தோசமின்மையும், கலக்கமும் உண்டாகிறதோ , அங்கெல்லாம், நீங்கள் மகிழ்ச்சியையும், அமைதியையும் கொடுக்க அழைக்கப்பட்டுள்ளீர்கள்.
யோவான் இந்த இறைசேவையை (மகிழ்ச்சியை பகிரும்) எப்படி செய்தார் என்பதை பார்ப்போம். அவர் சாதாரான ஒட்டக தோலை உடுத்தி, எல்லாரும் மனத்திரும்புங்கள் என்று பயமுறுத்தும், மனிதராக நாம் பார்க்கலாம். ஆனால், கொஞ்சம் உற்று நோக்குங்கள், மக்களை யேசுவின் வருகையை எதிர்பார்த்து அவரை வரவழைக்க தயார்படுத்தினார்.
நீங்களும் நானும் மற்றவர்களின் உணர்வுகளுக்கு பொறுப்பானவர்கள் இல்லை. நாம் அவர்களை மகிழ்ச்சிபடுத்தும் இறைசேவையை செய்தாலும், அவர்கள் அதனால் சந்தோசப்படவில்லை என்றால், நாம் நம் இறைசேவையில் தோற்று போவதில்லை. அவர்கள் சந்தோசத்தை அடையவில்லை என்றால், அவர்கள் இன்னும் யேசுவை ஏற்று கொள்ளவில்லை என்று அர்த்தம்.
சந்தோசத்தின் ஊற்று யேசு தான். நாம் அவரோடு இனைந்தால், கடவுளின் அன்பில் நாம் திளைத்து, நாம் மிகவும் கடினமான ப்ரஸ்னையில் இருந்தாலும், அவரின் அனுக்கமான அன்பினால் நாம் அமைதியுடனும், சந்தோசத்துடனும் இருக்க முடியும். இந்த இனைப்பை கடவுளோடு மற்றவர்கள் அடைய வேண்டும் என்ற உண்மையை, அவர்களுக்கு உணர்த்தினால், நம் மகிழ்சிசியின் இறைசேவை அவர்களை சென்றடையும். யேசுவின் சந்தோசம் , அவரின் மகிழ்ச்சியின் பக்கத்தை, மற்றவர்கள் தெரிந்து கொள்ள நாம் கடமைபட்டுள்ளோம். மேலும், அவரின் எல்லா போதனைகளிலும் உள்ள மகிழ்ச்சியை நாம் அவர்களுக்கு தெரியபடுத்த வேண்டும். அதன் பலனை அவர்கள் தெரியவேண்டும்.
நாம் நமது எதிரியையும் அன்பு செய்ய வேண்டும் என்று யேசு நம்மை கேட்டு கொள்கிறார். நமக்கு தொந்தரவு செய்கிறவர்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்று கூறுகிறார். இவ்வாறு செய்வது நமக்கு ஒன்றும் சந்தோசமில்லை.நாம் என்ன செய்ய வேண்டும் என்றால், பரிசுத்த வாழ்வை எப்படி வாழ வேண்டும் என்று நாம் கண்டறிந்து, அதனை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். அதன் மூலம், யேசுவின் சந்தோசமான அன்பினை அவர்களோடும், நம்மோடும் இனைத்து கொண்டு, அவரின் போதனையை நாம் பின்பற்றுவது ஆகும். இதற்காக நாம் மிகவும் துன்பப்பட்டாலும், இந்த இறைசேவையின் விளைவு, மிகவும் மகிழ்ச்சியான சந்தோசத்தை கொடுக்கும்.
யேசு நாம் எப்படி பரிசுத்த மாக வாழ்வது என்று சொல்வதோடு, பரிசுத்த மாக இருக்க நமக்கு ஆற்றலையும் தருகிறார். அவரின் பரிசுத்த ஆவியை நமக்கு தருகிறார். யோவான் சொல்வது போல, நாம் மனத்திரும்ப வேண்டும் என்று பயப்பட வேண்டியதில்லை. கிறிஸ்துவுடன் இனையும் மகிழ்ச்சியை, நாம் மற்றவர்களுக்கு காட்டி, பரிசுத்த ஆவி நம்மில் செய்யும் செயலை மற்றவர்கள் அறிந்து கொள்ள செய்ய வேண்டும். மேலும் யேசு தான் நமது மகிழ்ச்சிக்கு சந்தோசம் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள செய்ய வேண்டும்.
http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2009 by Terry A. Modica
Friday, June 19, 2009
ஜூன் 21, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஜூன் 21, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 12ம் ஞாயிறு
Job 38:1, 8-11
Ps 107:23-26, 28-31
2 Cor 5:14-17
Mark 4:35-41
மாற்கு நற்செய்தி
அதிகாரம் 4
35 அன்றொரு நாள் மாலை நேரம். இயேசு சீடர்களை நோக்கி, ' அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள் ' என்றார்.36 அவர்கள் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு, படகில் இருந்தவாறே அவரைக் கூட்டிச் சென்றார்கள். வேறு படகுகளும் அவருடன் சென்றன.37 அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்தது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக் கொண்டிருந்தது.38 அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள், ' போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா? ' என்று சொல்லி அவரை எழுப்பினார்கள்.39 அவர் விழித்தெழுந்து காற்றைக் கடிந்து கொண்டார். கடலை நோக்கி, ' இரையாதே, அமைதியாயிரு ' என்றார். காற்று அடங்கியது; மிகுந்த அமைதி உண்டாயிற்று.40 பின் அவர் அவர்களை நோக்கி, ' ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா? ' என்று கேட்டார்.41 அவர்கள் பேரச்சம் கொண்டு, ' காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ! ' என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள்.
(thanks to www.arulvakku.com)
நான் வாழும் ப்ளோரிடாவில், தற்போது சூறாவளி காற்று வீசும் காலமாகும். இங்கே சிலர் இந்த புயலை, கடவுள் நமக்கு கொடுக்கும் தண்டனை என நினைக்கின்றனர். மனிதர்களின் தவறுகளுக்கு அவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்பதில், எல்லோரும் சரியெனவே கூறுவர். யேசு கடவுளின் கோபக்கணையை தன் உடல் மேல் ஏற்றுகொண்டு, அதன் துன்பங்களை, வலியை ஏற்று, நம் பாவங்களுக்காக, அவரது இரத்தத்தை சிந்தி, மரணமடைந்தார். இதன் மூலம், நாம் நமது பாவங்களினால் கிடைக்க வேண்டிய நீதியிலிருந்து விடுபட்டோம்.
யேசு நம்மில் உள்ள சூறாவளியை அமைதியாக்க விரும்பினார், சூறாவளியை உண்டாக்க அல்ல.
கஷ்டம், துன்பம் எல்லாம் நமக்கு தண்டனை இல்லை. அவைகள் தான் நம்மை கடவுளுக்கு இன்னும் நெருக்கத்தில் கொண்டு செல்லும் வாய்ப்பு ஆகும். நாம் எல்லாரும்,நமது வாழ்வில் சூறாவளி காலத்தை சந்திக்கிறோம். ஒவ்வொரு சூறாவளியும், யேசு நம்முடன் ஒவ்வொரு நிமிடமும் நடந்து வருகிறார் என்பதை நமக்கு புரிய வைக்கிறது. மேலும் நமக்கு உதவி தேவைபட்டாலும், இல்லாவிட்டலும் கூட நம்முடனே யேசு கிறிஸ்து இருக்கிறார். இந்த துன்ப காலங்களில் தான், நாம் இன்னும் அதிக அறிவினை பெறுகிறோம், நமது ஞாணம் இன்னும் விரிவடையும், விசுவாசத்தில் இன்னும் உறுதியடைவோம். இன்னும் பனிவும், தாழ்மையும் நமக்கு வரும். மேலும், நாம் கடவுளை நம்பியே இருப்பதால், அந்த துன்ப வேளையில், அவரின் முழு அன்பை நாம் இன்னும் சரியாக புரிந்து கொள்ள முடியும். ஆனால் இவையெல்லாம் நமக்கு கிடைக்க வேண்டுமென்றால், கடவுள் ஒரு மேஜிக் நிபுணர் போல வந்து, நம் ப்ரச்னையை நாம் நினைப்பது போல முடித்து வைப்பார் என்று எதிர்பார்க்காமல் இருக்க வேன்டும்.
இன்னும் சில சூறாவளிகள் இவ்வுலகில் தொடர்ந்து வந்து கொண்டிருப்ப்பது, ஏனென்றால், நாம் இன்னும் கிறிஸ்துவின் உண்மையான ப்ரசன்னத்தை அவர்களுக்குள் கொண்டு வரவில்லை. நாம் நமது அனுபவங்களின் மூலம் பலனடைந்த பின், நாம், மற்றவர்களும், அவர்களின் துன்பங்களை தாங்கி கொள்ள நாம் உதவ வேன்டும். யேசு இந்த உலகில் உபயோக்கும் கரங்களாக நாம் ஆகவேன்டும். அதன் மூலம், நமது துன்பங்கள், வீனாகவில்லை என்பதை நாம் அறிவோம். இதன் மூலம் நம் துன்பங்களினால் ஏற்பட்ட மன் சஞ்சலங்கள்,வருத்தங்கள் எல்லாம் மறைந்து நம்மில் அமைதி ஏற்படும்.
சில நேரங்களில், நாமெ நம்முடைய தவறான முடிவால்(பாவங்களால்), சூறாவளியை , துன்பத்தை ஏற்படுத்தி கொள்கிறோம். ஆனால், கடவுள் நமக்கு தன்டனை கிடைக்க வேண்டும் என்று விரும்பவில்லை. கடவுள் அதிகமான சிவப்பு கொடி எச்சரிக்கை செய்கிறார். இருந்தும், நாம் துன்ப சூறாவளியில் மாட்டிவிட்டல், நாம் நமது கொந்தளிப்பை அமைதிபடுத்தி, அவரோடு இனக்கம் கொண்டு, அவரோடு சேரவேண்டும் என அழைக்கின்றார்.
சூறாவளி நம்மால் உண்டானதோ அல்லது, இயற்கையை உண்டானதோ, இன்றைய நற்செய்தியில் சீடர்கள் கூறுவது போல "போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா? " என்று அவர்கள் போல் நாமும் கூவி அழுதால், யேசு " ஏன் பயப்படுகிறீர்கள்? உங்களுக்கு குறைவான விசுவாசமே உள்ளது!, எனது அமைதி ஏற்கனவே இங்கு இருக்கிறது" என்று கூறுகிறார்.
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
ஆண்டின் 12ம் ஞாயிறு
Job 38:1, 8-11
Ps 107:23-26, 28-31
2 Cor 5:14-17
Mark 4:35-41
மாற்கு நற்செய்தி
அதிகாரம் 4
35 அன்றொரு நாள் மாலை நேரம். இயேசு சீடர்களை நோக்கி, ' அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள் ' என்றார்.36 அவர்கள் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு, படகில் இருந்தவாறே அவரைக் கூட்டிச் சென்றார்கள். வேறு படகுகளும் அவருடன் சென்றன.37 அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்தது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக் கொண்டிருந்தது.38 அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள், ' போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா? ' என்று சொல்லி அவரை எழுப்பினார்கள்.39 அவர் விழித்தெழுந்து காற்றைக் கடிந்து கொண்டார். கடலை நோக்கி, ' இரையாதே, அமைதியாயிரு ' என்றார். காற்று அடங்கியது; மிகுந்த அமைதி உண்டாயிற்று.40 பின் அவர் அவர்களை நோக்கி, ' ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா? ' என்று கேட்டார்.41 அவர்கள் பேரச்சம் கொண்டு, ' காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ! ' என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள்.
(thanks to www.arulvakku.com)
நான் வாழும் ப்ளோரிடாவில், தற்போது சூறாவளி காற்று வீசும் காலமாகும். இங்கே சிலர் இந்த புயலை, கடவுள் நமக்கு கொடுக்கும் தண்டனை என நினைக்கின்றனர். மனிதர்களின் தவறுகளுக்கு அவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்பதில், எல்லோரும் சரியெனவே கூறுவர். யேசு கடவுளின் கோபக்கணையை தன் உடல் மேல் ஏற்றுகொண்டு, அதன் துன்பங்களை, வலியை ஏற்று, நம் பாவங்களுக்காக, அவரது இரத்தத்தை சிந்தி, மரணமடைந்தார். இதன் மூலம், நாம் நமது பாவங்களினால் கிடைக்க வேண்டிய நீதியிலிருந்து விடுபட்டோம்.
யேசு நம்மில் உள்ள சூறாவளியை அமைதியாக்க விரும்பினார், சூறாவளியை உண்டாக்க அல்ல.
கஷ்டம், துன்பம் எல்லாம் நமக்கு தண்டனை இல்லை. அவைகள் தான் நம்மை கடவுளுக்கு இன்னும் நெருக்கத்தில் கொண்டு செல்லும் வாய்ப்பு ஆகும். நாம் எல்லாரும்,நமது வாழ்வில் சூறாவளி காலத்தை சந்திக்கிறோம். ஒவ்வொரு சூறாவளியும், யேசு நம்முடன் ஒவ்வொரு நிமிடமும் நடந்து வருகிறார் என்பதை நமக்கு புரிய வைக்கிறது. மேலும் நமக்கு உதவி தேவைபட்டாலும், இல்லாவிட்டலும் கூட நம்முடனே யேசு கிறிஸ்து இருக்கிறார். இந்த துன்ப காலங்களில் தான், நாம் இன்னும் அதிக அறிவினை பெறுகிறோம், நமது ஞாணம் இன்னும் விரிவடையும், விசுவாசத்தில் இன்னும் உறுதியடைவோம். இன்னும் பனிவும், தாழ்மையும் நமக்கு வரும். மேலும், நாம் கடவுளை நம்பியே இருப்பதால், அந்த துன்ப வேளையில், அவரின் முழு அன்பை நாம் இன்னும் சரியாக புரிந்து கொள்ள முடியும். ஆனால் இவையெல்லாம் நமக்கு கிடைக்க வேண்டுமென்றால், கடவுள் ஒரு மேஜிக் நிபுணர் போல வந்து, நம் ப்ரச்னையை நாம் நினைப்பது போல முடித்து வைப்பார் என்று எதிர்பார்க்காமல் இருக்க வேன்டும்.
இன்னும் சில சூறாவளிகள் இவ்வுலகில் தொடர்ந்து வந்து கொண்டிருப்ப்பது, ஏனென்றால், நாம் இன்னும் கிறிஸ்துவின் உண்மையான ப்ரசன்னத்தை அவர்களுக்குள் கொண்டு வரவில்லை. நாம் நமது அனுபவங்களின் மூலம் பலனடைந்த பின், நாம், மற்றவர்களும், அவர்களின் துன்பங்களை தாங்கி கொள்ள நாம் உதவ வேன்டும். யேசு இந்த உலகில் உபயோக்கும் கரங்களாக நாம் ஆகவேன்டும். அதன் மூலம், நமது துன்பங்கள், வீனாகவில்லை என்பதை நாம் அறிவோம். இதன் மூலம் நம் துன்பங்களினால் ஏற்பட்ட மன் சஞ்சலங்கள்,வருத்தங்கள் எல்லாம் மறைந்து நம்மில் அமைதி ஏற்படும்.
சில நேரங்களில், நாமெ நம்முடைய தவறான முடிவால்(பாவங்களால்), சூறாவளியை , துன்பத்தை ஏற்படுத்தி கொள்கிறோம். ஆனால், கடவுள் நமக்கு தன்டனை கிடைக்க வேண்டும் என்று விரும்பவில்லை. கடவுள் அதிகமான சிவப்பு கொடி எச்சரிக்கை செய்கிறார். இருந்தும், நாம் துன்ப சூறாவளியில் மாட்டிவிட்டல், நாம் நமது கொந்தளிப்பை அமைதிபடுத்தி, அவரோடு இனக்கம் கொண்டு, அவரோடு சேரவேண்டும் என அழைக்கின்றார்.
சூறாவளி நம்மால் உண்டானதோ அல்லது, இயற்கையை உண்டானதோ, இன்றைய நற்செய்தியில் சீடர்கள் கூறுவது போல "போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா? " என்று அவர்கள் போல் நாமும் கூவி அழுதால், யேசு " ஏன் பயப்படுகிறீர்கள்? உங்களுக்கு குறைவான விசுவாசமே உள்ளது!, எனது அமைதி ஏற்கனவே இங்கு இருக்கிறது" என்று கூறுகிறார்.
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Subscribe to:
Posts (Atom)