Friday, September 27, 2013

செப்டம்பர் 29, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


செப்டம்பர் 29, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 26ம் ஞாயிறு
Amos 6:1a, 4-7
Psalm 146:(1b) 7-10
1 Timothy 6:11-16
Luke 16:19-31

செல்வரும் இலாசரும்
19 ' செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்.20 இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார்.21 அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.22 அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார்.23 அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலையில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார்.24 அவர், ' தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச்செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப்படுகிறேன் ' என்று உரக்கக் கூறினார்.25 அதற்கு ஆபிரகாம், ' மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக் கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய்.26 அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது ' என்றார்.27 ' அவர், ' அப்படியானால் தந்தையே, அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன்.28எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே ' என்றார்.29அதற்கு ஆபிரகாம், ' மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும் ' என்றார்.30 அவர், ' அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள் ' என்றார்.31 ஆபிரகாம், ' அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவிசாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்ப மாட்டார்கள் ' என்றார். ' 
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், பணக்காரனின், பாவம் என்ன? அவன் இறப்பிற்கு பிறகு எதனால் அவன் வேதனை அடைந்தான்? செல்வம் மிகுந்தவனாக அவன் இருந்ததாலா? அவனது ஆண்மாவை துன்புறுத்த செய்தது எது என்றால், அவனின் செல்வத்தை லாசருடன் பங்கிட்டு கொள்ளாதது தான் (அவனுக்கு வாய்ப்பு இருந்தும்).

மரணம் வாழ்வின் முடிவு அல்ல; நமது ஆண்மாவை திறந்து, அதனால், நாம் முழுவதும் கடவுளின் அன்பில் வாழலாம். மரணத்தின் மூலம், கடவுளை யார் என்று முழுமையாக நம்மால் அறிய முடியும். அவர் கொடுத்த திறமைகளை, அன்பளிப்பை எந்த அளவிற்கு நாம் உபயோகபடுத்தியிருக்கிறோம் என்று நம்மால் அப்பொழுது அறிய முடியும்.

நமக்கு கிடைத்த செல்வத்தை, நாம் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறோமோ, நாம் கடவுளின் இறையரசில் முதலீடு செய்கிறோம். கடவுளின் பொருளாதார கொள்கையில், நம் முதலீடுகள் பல மடங்கு திருப்பி தரப்படும். நாம் கொடுத்ததை விட பல மடங்கு திருப்பி பெறுவோம். அதன் மூலம் இன்னும் அதிகம் நம்மால், பகிர்ந்து கொள்ள முடியும்.

இதற்கு மாறாக, நாம் நமது செல்வத்தை நம்மிலே வைத்து கொண்டு பாது காத்தால், மலர்கள் கருப்பு பெட்டிக்குள் வைத்து இருப்பது போன்று, அது வாடிய நிலையில் இருப்பது போன்று நமது செல்வமும் ஆகிவிடும். இருட்டு அறையில் மலர்களால் வளரவோ , ப்ரகாசிக்கவோ முடியாது. எதையெல்லாம், நாம் பாதுகாக்க செய்கிறோமோ, அதுவெல்லாம் உபயோகமில்லாமல் ஆகிவிடும். சில நேரங்களில், கெட்டு போய் விஷமாகிவிட கூடும்; பரிசுத்த வாழ்விலும், நம் உணர்விலும், அப்படியே தேங்கி நின்றுவிடுவோம். எல்லா செல்வங்களும், வீணாகிபோய்விடும். நம் சுயனலத்தினால், கடவுளோடு உள்ள உறவு கெட்டுவிடும். அவர் தான், தாராள மனத்தின் அரசராவார்.


ஒவ்வொரு நாளும், நாம் பகிர்ந்து கொள்ள பல வாய்ப்புகள் உள்ளன. – கடவுளிடமிருந்து வந்த ஆசிர்வாதம் – நாம் மற்றவர்களுக்கு தரவேண்டியவையாக கூட இருக்கலாம். இன்றைய நற்செய்தியில் வரும் கதையில் கூட, செல்வந்தார் இலாசரிடம் இருந்து ஒதுங்குவதற்கு, இலாசரின் நோயும் ஒரு காரணமாக இருந்தது. அவர் உடலெங்கும் புண்கள் ஆக இருந்ததால், அவர் தொழு நோயால் பாதிக்கபட்டிருக்கலாம் என்று அனுமானித்து விடுகிறோம்.

இதன் மூலம் ஒரு கேள்வி எழுகிறது: அவர்களை பார்த்து ஒரு வித அசிங்கமான உணர்வினால், நாம் அவர்களிடம் மிகவும் குறைவாக கொடுக்கிறோமோ? அல்லது அச்சம் தான் நம்மை ஒதுங்க வைக்கிறதோ? அல்லது ஒரு வித மன்னிக்க முடியாத கோபத்தினால் நாம் நம்மிடம் உள்ளதை கொடுப்பதில்லையா? கடவுளோடு இனைந்து, நிரந்தரமான மகிழ்ச்சியை அனுபவிக்க, இந்த மாதிரியான பகிர்தல் இல்லாத வாழ்வு இடம் கொடுக்காது. நம்மில் அன்பு தான் முதன்மை இடத்தை பிடித்து, அதன் மூலம் ஊக்குவிக்கபட்டு, அன்பினால் எல்லா காரியங்களையும் செய்தல் வேண்டும். அன்பிற்கு எல்லை இல்லை. அன்பு எப்பொழுதுமே தாராள குணத்தையே கொடுக்கும்.

இரண்டாவது வாசகத்தில், “விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடு” என்று சொல்வதை நாம் கேட்கிறோம். யாரோடு போராடுவது? நம்மோடு! நேற்றைய விட, இன்று இன்னும் பரிசுத்தமாக இருக்கிறோமோ? தாராள குணம் இன்னும் வளர்ந்திருக்கிறதா? பரிசுத்த வாழ்வில் இன்னும் சக்தியோடு, ஆற்றலுடன் இருக்கிறீர்களா? உங்கள் கடின உழைப்பினால், இன்னும் அதிகம் அன்பு செலுத்துபவர்களாகவும், தாராளாமாக கொடுப்பதிலும் தயாராய் இருக்கிறீர்களா?
© 2013 by Terry A. Modica


Friday, September 20, 2013

செப்டம்பர் 23, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


செப்டம்பர் 23, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 25ம் ஞாயிறு
Amos 8:4-7
Psalm 113:1-2, 4-8
1 Timothy 2:1-8
Luke 16:1-13

லூக்கா நற்செய்தி,
அதிகாரம் 16:1-13
முன்மதியோடு செயல்பட்ட வீட்டுப் பொறுப்பாளர்
1 இயேசு தம் சீடருக்குக் கூறியது: ' செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப் பட்டது.2 தலைவர் அவரைக் கூப்பிட்டு, ' உம்மைப்பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது ' என்று அவரிடம் கூறினார்.3 அந்த வீட்டுப் பொறுப்பாளர், ' நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கி விடப்போகிறாரே! மண்வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது.4 வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும் போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியும் ' என்று அவர் தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.5 பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், ' நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்? ' என்று கேட்டார்.6 அதற்கு அவர், ' நூறு குடம் எண்ணெய் ' என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், ' இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும் ' என்றார்.7 பின்பு அடுத்தவரிடம், 'நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?' என்று கேட்டார். அதற்கு அவர், 'நூறு மூடை கோதுமை' என்றார். அவர், 'இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்' என்றார்.http://www.arulvakku.com/images/footnote.jpg8 நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்ளுகிறார்கள்.9 ' ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக் கொள்வார்கள்.10மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார்.11 நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்?12 பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்?13 ' எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது. ' 
(thanks to www.arulvakku.com)

பல புனிதர்கள் எடுத்துகாட்டாக வாழ்ந்த ஏழ்மையின் வாழ்வு வாழ்வது மட்டும் புனித வாழ்விற்கான பாதை அல்ல. இன்றைய நற்செய்தியில், செல்வமிகுந்த வாழ்விலும் நாம் பரிசுத்த வாழ்வு வாழமுடியும் என்று  நமக்கு அறிவுறுத்துகிறது.

நம் சொத்துகள் எல்லாம் கடவுள் கொடுத்தது என்று, நாம் அங்கீகரித்து, அதெல்லாம், கடவுளின் அரசிற்காக உபயோகப்படவேண்டும் நாம் நினைத்து அதனை செயல்படுத்தினால், நாம் பரிசுத்தமானவர்கள். ஆனால், நாம் , பணத்தோடும், இவ்வுலக செல்வங்களோடும் ஒட்டி, நம் பயன் களுக்காக மட்டும், அதனை பயன்படுத்தினால், நாம் கடவுளை விட்டு பிரிந்து விடுகிறோம். ஏனெனில், கடவுளின் நற்செய்தி, நம் செல்வங்கள் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதற்காக , நாம் பெற்று கொண்ட அனைத்தும், பகிர்ந்து கொள்ளபட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

நாம்  நம்மிடம் உள்ள சொத்துகளை பகிர்ந்து கொடுப்பதை விட்டு விட்டு, இன்னும் சொத்து சேர்க்க நாம் ஆசைபட்டோமானால், கடவுள் நம் தலைவர் இல்லை. இது நமது சொத்துக்களை மட்டும் குறிப்பதில்லை.  நம்மிடம் உள்ள ஆற்றல்கள், திறமைகள், அனைத்து, மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளபடவேண்டும்.

நாமெல்லாம் ஏதோ ஒரு வகையில், பல ஆற்றல்களோடும், திறமைகளோடும், ஆசிர்வதிக்கபட்டிருக்கோம். மற்றவர்களின் நலனுக்காக, நம் ஆற்றல் , திறமை எது தயாராக இருக்கிறது? இயேசு இன்றைய நற்செய்தியில், அனியாயமாக வந்த சொத்து, எதுவும், மற்றவர்களுக்கு சொந்தமானது. என்று சொல்கிறார். மற்றவர்களின் பொருளை நாம் உபயோகிக்கும் பொழுது, நம் சொந்த நலன்களூக்காக உபயோகிக்கும் பொழுது, நாம் கடவுளின் தொண்டர்க்ளாக இல்லை, ஆனால், அதனையும் கடவுளுக்காக செய்தால், நாம் அவரின் காவற்படை வீரன் போல ஆவோம்.

அதேபோல, நம் நேரம் மற்றவர்களுக்கு தேவைபடும்பொழுது, அந்த  நேரத்தில், நாம் நம் சொந்த வேலைகள் செய்தாலும், நாம் இறையரசிற்கு விசுவாசமானவர்கள் அல்ல். இயேசு உங்கள் மூலம் மற்றவர்களை ஆசிர்வதிக்கிறார். அவரின் அன்பளிப்புகளை பகிர்ந்தளிக்க உங்களை அழைக்கிறார். இம்மாதிரியான கடவுளின் பொருளாதார கொள்கைகளை நாம் நிராகரித்தால், “உங்களுக்கு தேவையானதை யார் தருவார்? “ என்று இயேசு கேட்கிறார்.

நமக்கு சொந்தமானது எது? நாம் விசுவாசமில்லாமல் இருந்தால், கடவுளின் தொண்டனாக இல்லாவிடில், நம்மில் உள்ள பெரும் சொத்துகள், இறையரசிற்கான அனைத்தும், நம்மிடமே தங்கிவிடும். பரிசுத்த ஆவியின் செல்வம்; கடவுளின் புகழ், அவரின் முழுமையான அன்பும் நம்மிடமே தங்கிவிடும். இன்னும் பலவும்.

செல்வத்துடன், பரிசுத்த வாழ்வு வாழ்வதற்கு, மற்றவர்கள் மேல் அன்புடன், நம் அன்பை நம்பிக்கையுடன் பகிர்ந்து, கடவுளின் அன்பு மற்றவர்கள் நம் மூலம் பெற உழைத்திடல் வேண்டும். நாம் இவ்வுலக சொத்துக்களை பகிர்ந்தும், இறையரசின் செல்வமான (விசுவாசம், ஞாணம்,  நம்பிக்கை, இன்னும் பல) அதனையும் பகிர்ந்து, நம் நம்பிக்கையின் ஆர்வம் நம்மில் கண்டு கொள்ளலாம்.
© 2013 by Terry A. Modica


Saturday, September 14, 2013

செப்டம்பர் 15, 2013, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

செப்டம்பர் 15, 2013, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 24  ஞாயிறு
Exodus 32:7-11, 13-14
Psalm 51:3-4, 12-13, 17, 19
1 Timothy 1:12-17
Luke 15:1-32

லூக்கா நற்செய்தி
அதிகாரம் 15
காணாமற்போன ஆடு பற்றிய உவமை
(மத் 18:12 - 14)
1 வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர்.2 பரிசேயரும், மறைநூல் அறிஞரும், ' இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே ' என்று முணுமுணுத்தனர்.3அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்:4 ' உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா?5கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்;6 வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ' என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன் ' என்பார்.7 அதுபோலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
காணாமற்போன திராக்மா உவமை
8 'பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள் ஒன்று காணாமற் போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா?http://www.arulvakku.com/images/footnote.jpg9கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ' என்னோடு மகிழுங்கள், ஏனெனில் காணாமற் போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன் ' என்பார்.10 அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன். ' 
காணாமற்போன மகன் உவமை
11 மேலும் இயேசு கூறியது: ' ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள்.12 அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, ' அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும் ' என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார்.13 சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார்.14 அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்;15 எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார்.16 அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை.17அவர் அறிவு தெளிந்தவராய், ' என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே!18 நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், ' அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; 19 இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன் ' என்று சொல்லிக்கொண்டார்.20 ' உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அந்தத் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார்.21 மகனோ அவரிடம், ' அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன் ' என்றார்.22 தந்தை தம் பணியாளரை நோக்கி, ' முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்;23கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம்.24 ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான் ' என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.25 ' அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, 26 ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, ' இதெல்லாம் என்ன? ' என்று வினவினார்.27 அதற்கு ஊழியர் அவரிடம், ' உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார் ' என்றார்.28 அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார்.29 அதற்கு அவர் தந்தையிடம், ' பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்துவருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்துகொண்டாட ஓர் ஆட்டுக்குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை.30 ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துகளையெல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே! ' என்றார்.31 அதற்குத் தந்தை, ' மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே.32 இப்போது நாம் மகிழ்ந்துகொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான் ' என்றார். ' 
(Thanks to WWW.ARULVAKKU.COM)
இன்றைய நற்செய்தி, கடவுள் தொலைந்து போனவற்றை, கண்டிப்பாக திரும்ப பெற ஆசையுடன் உள்ளார் என்பதை நமக்கு உறுதியாக காட்டுகிறது. நம் கடவுள், மணம் மாறுதலுக்கு உகந்த கடவுள் ஆவார். உண்மையின் வழியிலிருந்து விலகியவர்களை திரும்ப கொண்டுவர ஆசிக்கிறார். ஏனெனில், கடவுள் ஒவ்வொருவர் மேலும் மிகுந்த அக்கறை கொள்கிறார். நாம் நமக்கு தெரிந்தவர்கள் மேல் அக்கறை கொள்வதை விட கடவுள் அவர்கள் மேல் மிகுந்த அக்கறை கொள்கிறார். காணாமல் போன ஆடுகளை போலவும், காணாமல் போன காசை போலவும் , கடவுள் எல்லோரையும் அவரிடத்தில் கொண்டு வர செய்கிறார்.

உங்களை யாராவது ஒதுக்கியவர்களை, நினைவு கொள்ளூங்கள். கடவுள் அவர்களை பின் தொடர்ந்து, பாதிக்கபட்ட உறவை , நேராக்க முயற்சிக்கிறார். இதனை அவர்கள் மாறாவிட்டாலும், அவர்களின் கடைசி மூச்சு வரை, தொடர்ந்து முயற்சி செய்கிறார். (சில நேரங்களில், இந்த முயற்சி, இறந்த பிறகு கூட நடக்கிறது).

சிலர் அவர்கள் விசுவாசத்தையும் ஒதுக்கி வைத்தவர்களை பற்றி நினையுங்கள். நல்லாயன் இயேசு அவர்களை பின் சென்று உண்மையின் வாழ்விற்கு கொண்டு வர முயற்சி செய்து கொண்டு இருக்கிறார். ஏன்? அவர்கள் உங்கள் குடும்பத்திற்கும், திருச்சபைக்கும் முக்கியமானவர்கள்!, நமது சமுக குழுவிற்கு அவர்கள் வராதது ஒர் இழப்பாகும். கடவுள், தான் இந்த சமூக கூட்டமைப்பிற்கு ஆற்றலை கொடுப்பவர், அவருக்கும் இது ஒரு இழப்பாகும். அதனால் தான் கடவுள், எல்லா வகையிலும், அவர்களை மனமாற செய்து, -- முடியாத வழிகழிலெல்லாம் கூட – அவர்களை நம்மிடம்/அவரிடமும் கொண்டு வர வைப்பார்.

எனினும், இவை எல்லாவற்றையும் கடவுளிடம் மட்டுமே விட்டு விட கூடாது. நம் மூலமாக கடவுள் இதனை நிறைவேற்றுகிறார். நாம் முயற்சி செய்து, அதிலிருந்து எந்த பலனும் வரவில்லையெனில், கட்வுள் “நீங்கள் தொடரவேண்டியதில்லை, நான் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன், நீங்கள் நம்பிக்கையுடன் அடுத்த வேலையை தொடருங்கள், “ என்று கூறுகிறார். யேசு இன்னும் தொடர்ந்து அவர்கள் பின் சென்று கொண்டிருக்கிறார் என்று நாம் நம்பலாம். அவர்கள் இயேசுவை ஒதுக்கி தள்ளீனாலும், அவர்கள் பின்னே அவர் சென்று கொண்டிருக்கிறார்.
ஒரு வேளை, அவர்களை நாம் இயேசுவிடம் அழைக்க வாய்ப்பிருந்தும், நாம் அதனை செய்ய வில்லை என்றால், நாம் ஒரு நாள், இயேசுவிற்கு நாம் விளக்கமளிக்க வேண்டும். ஏன் நாம் இயேசு அவர்களை அன்பு செய்வது போல, நம்மால் அன்பு செய்ய முடியவில்லை. எவ்வாறு அவர்களுக்கு உதவி செய்வது  என்று யோசிக்காமல் , நாம் ஒதுங்கி கொள்கிறோம்.  நாம் அவர்களை ஒதுக்கி தள்ளி விட்டு விட்டோமோ?

கிறிஸ்துவோடு நாம் இனைந்து, எவ்வளவு கஷ்டபட்டு, மற்றவர்களை நாம் திருச்சபைக்கு கொண்டுவர முயற்சி செய்தாலும், நாம் அவர்களை தொடர்ந்து நிபந்தனையற்ற அன்பு செய்தல் வேண்டும். கண்டிப்பாக, இயேசுவின் அன்பை நம் மூலம் அவர்கள் கானலாம்.

© 2013 by Terry A. Modica


Friday, September 6, 2013

செப்டம்பர் 8, 2013, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

செப்டம்பர் 8, 2013, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஆண்டின் 23ம் ஞாயிறு

Wisdom 9:13-18b
Psalm 90:(1) 3-6, 12-17
Philemon 9-10, 12-17
Luke 14:25-33

லூக்கா நற்செய்தி

அதிகாரம்: 14:25-33

              இயேசுவின் சீடர் யார்
25 பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது:26 ' என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது.27 தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது.28 ' உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட்டாரா?29 இல்லாவிட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக,30 ' இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லை ' என்பார்களே!31 ' வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா?32 எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும்போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேட மாட்டாரா?33 அப்படியே, உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.
(thanks to www.arulvakku.com)
உங்கள் வாழ்க்கையின் கடவுளின் உறவை விட எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்? அதனை தான் யேசு. இந்த வார நற்செய்தியில் நாம்  கவணிக்க வேண்டிய விசயமாக நமக்கு சுட்டி காட்டுகிறார். எந்த வித நண்பர்களை? எந்த வேலையை? எந்த சோதனைகளை? எந்த சொத்துக்களை? எந்த நோக்கத்தை? எந்த செயல்களில்? நாம் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

எந்த விதமான சிலுவைகளை தூக்கி எறிய ஆசைபடுகிறீர்கள்? அதிலிருந்து நீங்கள் ஒதுங்க நினைப்பதால், இயேசுவை புறந்தள்ள வேண்டுமா? (இதற்காக எந்த தியாகங்களை நீங்கள் செய்ய விரும்பவில்லை? )
இயேசுவை போல மாறி, அவரிடமிருந்து கற்று, அவராக மாற முற்படும்போது, இயேசுவின் சீடர்களாக முழு அர்ப்பணிப்புடன், இருக்க முடியும் என்று கூறுகிறார்.

இதனை மாறாக சொல்ல வேண்டுமானால், நல்ல முக்கிய குறிக்கோளுடன், நாம் வாழ்க்கைய தொடங்க முடியும். ஆனால், கிறிஸ்து உடன்  உள்ள உறவு நம் முதன்மை குறிக்கோளாக இல்லை எனில், நாம் கிறிஸ்துவின் வழிகாட்டுதலையும், அவரின் ஆசிர்வாதத்தையும் , ஆச்சரியங்களையும் நாம் இழந்து விடுவோம். நாம் இவ்வுலகில் செய்யும் சாதனைகளை எல்லாம், மிக சாதாரணமானவை, ஏனெனில், இறையரசில், இதனை விட மிக பெரிய விசயம் நமக்காக காத்திருக்கிறது, நம் கற்பணைக்கு எட்டாத அளவில் அது இருக்கும்.

சீடர் என்பவர் ஒரு மாணவர் ஆவர். இயேசுவிடமிருந்து நாம் மற்றவர்களை எவ்வாறு அன்பு செய்வது என்று கற்று கொள்கிறோம். அதனால், நாம் சிலுவையை ஏற்றுகொள்ள தயாராகவும் இருக்க வேண்டும். நிபந்தனையற்ற, மன்னிப்புடன் கூடிய அன்பின் வாழ்வை எவ்வாறு சந்தோசமாக வாழ்வது என்று இயேசு நமக்கு கற்று கொடுக்கிறார். மேலும், பரிசுத்த வாழ்வின் வரையறைக்குள் நாம் வாழ , யாரும் நம்மை கெடுத்துவிடாத படி, நாம் ஒரு வேலி போட்டு கொள்ள  நாம் இயேசுவிடமிருந்து கற்று கொள்கிறோம். அதன் மூலம், நமது பரிசுத்த வாழ்வு இன்னும் வளரும், அது நமக்கு சிலுவையாக கூட இருக்க முடியும்.

முழுமையாக கிறிஸ்துவின் பின் பற்றி, அவர் போல மாறுவதற்கு, நமக்கு தேவையான ஆற்றலை, கவனத்தை பின் பற்றிட, நாம் முழு முயற்சியுடன் தொடர்ந்து ஈடுபட வேண்டும். அதன் மூலம் நாம் சிலுவையை ஏற்று கொள்ள, அதனை அரவணைத்து கொள்ள, நமக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். அதன் மூலம், நாம் சிலுவையை ஏற்று கொண்டு, இயேசுவின் சிலுவையோடு இனைந்து, அவரின் ஆற்றலோடு இனைவோம். இந்த நெருங்கிய தொடர்பை நாம் பெறாத பொழுது, நாம் தளர்ந்து விழுந்து விடுகிறோம். சிலுவை பாரம் தாங்காமல் விழுந்து விடுகிறோம். ஆனால், தியாகம் செய்ய நாம் தயாராக இருந்தால், மற்றவர்கள் மேல் உள்ள அன்பினால், இயேசு செய்தது போல,  நாம் கிறிஸ்துவோடு இனைந்து,  அவரின் அன்பை முழுமையாக பெறுவோம். இது திருப்தியான வாழ்வை நமக்கு கொடுக்கும்.

© 2013 by Terry A. Modica


Friday, August 30, 2013

செப்டம்பர் 1, 2013, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

செப்டம்பர் 1, 2013, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 22ம் ஞாயிறு
Sirach 3:17-18, 20, 28-29
Psalm 68:4-7, 10-11
Hebrews 12:18-19, 22-24a
Luke 14:1, 7-14

லூக்கா நற்செய்தி
அதிகாரம்: 14: 1, 7-14
1 ஓய்வுநாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர்.2 
விருந்தினருக்கும் விருந்தளிப்போருக்கும் ஒரு போதனை
7 விருந்தினர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்து கொண்டதை நோக்கிய இயேசு அவர்களுக்குக் கூறிய அறிவுரை:8 ' ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களைவிட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம்.9 உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், ' இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள் ' என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும்.10 நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், ' நண்பரே, முதல் இடத்திற்கு வாரும் ' எனச் சொல்லும்பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள்.11தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர். ' 12 பிறகு தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, ' நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும் போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும். 13மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும்.14 அப்போது நீர் பேறு பெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும் ' என்று கூறினார்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய ஞாயிறின் நற்செய்தியில்,  நான் நல்ல செயல்கள் செய்வதால் எனது எதிர்பார்ப்பு என்ன ? நல்ல செயல்களின் நோக்கம் என்ன? மற்றவர்கள்லின் நன்மைகளுக்காக அதனை செய்கிறோமோ? அல்லது சுய நலத்திற்காகவா? என்ற கேள்விகள் கேட்கபடுகின்றன?

மற்றவர்களுக்கு நன்மை செய்வதால்,  நமக்கு இன்னும் பலன் கிடைக்கும் என்று நினைத்து செய்தால், நாம் கிறிஸ்துவை போல செய்யவில்லை. இதனை இயேசு விருந்தோடு ஒப்பீட்டு சொல்கிறார். யார் உங்களுக்கு திருப்பி செலுத்த முடியாதவரோ, அவரை விருந்துக்கு அழையுங்கள் என்று சொல்கிறார். இதனை பரிசுத்தமாக செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. அதனை அப்படியே நாம் மாற்றி எடுத்து கொண்டால், முக்கியமான கருத்தை நாம் விட்டு விடுகிறோம்.

உண்மையான செய்தி என்ன என்றால், நாம் என்ன செய்தாலும், அதனை அன்பிற்காக செய்தல் வேண்டும். எதனையும் நாம் எதிர்பார்த்து செய்தல் கூடாது. சொந்த நலனை விட்டு விட வேண்டும். மற்றவர்களின் நலனுக்காக நாம் அவர்களுக்கு உதவி செய்தல் வேண்டும். இப்படி செய்வதால் ஒரு பயனும் இல்லை என்று தோன்றலாம் ஆனால், உங்களுக்கு அவர்கள் எப்படி நன்றி சொல்வார்கள் என்று பாருங்கள். எப்படியெல்லாம் பாராட்டுவார்கள் என்பதை நினைத்து பாருங்கள். இதனை விட வேறு என்ன வேண்டும் உங்களுக்கு?

மேலும், சிலர் நமக்கு எதிராக  பாவம் செய்யும்பொழுது, அவர்கள் மனம் திருந்த வேண்டும் என்று நாம் அவர்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் ஆன்மாவிற்காக நாம் ஜெபித்தல் வேண்டும். மேலும், அவர்கள் மாறினால், நமக்கு சுலபமாக இருக்கும். ஆனால் நமது சுலபமான வாழ்க்கைகாக நாம் ஜெபிக்க வேண்டியதில்லை.

கிறிஸ்துவை பின் செல்பவர்களாக, நாம் செய்யும் நன்மைக்கு பிரதிபலனாக நாம் ஆசிர்வாதம் பெறும்பொழுது, அது நமக்கு கூடுதல் பலனாகும். ஆனால் அதுவே நம் நோக்கமல்ல. உரிமையோடு நாம் கூடுதல் பலனை எதிர்பார்க்கலாம், ஆனால், அதுவே நாம் நம்பியிருக்க வேண்டியதில்லை.

நமது நோக்கமும், எதிர்பார்ப்பும்,  சரியாக தெரிந்த பின்பு, நாம் இயேசுவை போல வாழவும், நாமே தெரிந்து கொள்ள முடியும், இயேசுவே, “நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்” என்று கூறியுள்ளார். அவர் கூறியது இப்பொழுதே நமக்கும் ஆரம்ப்பிக்கிறது. உயிர்த்தெழுந்த இயேசுவை போல நாம் மாறும்போது நமக்கும் கைமாறு கிடைக்க ஆரம்பிக்கிறது.
.  
நமக்கு பலனாக கிடைக்கும் அருளானது, இறையரசிற்காக நம்மை செய்ய அழைக்கும் எல்லா செயல்களுக்கும், நமக்கு ஆற்றால் தந்து உதவுகிறது. சந்தோசமாக, வேறு பல ஆசிர்வாதத்தையும்  நாம் பெற முடியும், ஆனால் அதுவே  நமது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டியதில்லை.
© 2013 by Terry A. Modica


Friday, August 23, 2013

ஆகஸ்டு 25 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஆகஸ்டு 25 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 21ம் ஞாயிறு
Isaiah 66:18-21
Psalm 117:1, 2 (with Mark 16:15)
Hebrews 12:5-7, 11-13
Luke 13:22-30


இடுக்கமான வாயில்
22 இயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித்துக்கொண்டே எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார்.23 அப்பொழுது ஒருவர் அவரிடம், ' ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா? ' என்று கேட்டார். அதற்கு அவர் அவர்களிடம் கூறியது:24 ' இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும். '25 ' வீட்டு உரிமையாளரே, எழுந்து கதவைத் திறந்துவிடும் ' என்று கேட்பீர்கள். அவரோ, நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது ' எனப் பதில் கூறுவார்.26 அப்பொழுது நீங்கள், ' நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம். நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே ' என்று சொல்வீர்கள்.27 ஆனாலும் அவர், ' நீங்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது. தீங்கு செய்வோரே, அனைவரும் என்னைவிட்டு அகன்று போங்கள் ' என உங்களிடம் சொல்வார்.28ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் இறைவாக்கினர் யாவரும் இறையாட்சிக்கு உட்பட்டிருப்பதையும் நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும்போது அழுது அங்கலாய்ப்பீர்கள்.29இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்.30 ஆம், கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர். ' 
(Thanks to www.arulvakku.com)
இன்றைய ஞாயிறின் நற்செய்தி, மோட்சத்திற்கு செல்லும், வழிகளுக்கான அடையாள சின்னங்கள், அதுவும் குறுகிய வழியான அந்த  நித்திய வாழ்விற்கு செல்லும் வழிக்கான வழிகாட்டியகளை  நமக்கு காட்டுகிறது. இசையாஸ், சொல்கிறார், ‘கடவுளுக்கு   நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் தெரியும், நம் மனதில் என்ன இருக்கிறது என்றும் கடவுளுக்கு தெரியும் என்று சொல்கிறார். நாம் இறந்து கடவுளிடம் செல்லும் பொழுது, கடவுளின் முழு அருளை நாம் பார்க்க, நம்மை நாமே சுத்த படுத்தவேண்டும். அவர் நம்மில் பல அடையாளங்களை விட்டு செல்கிறார். அது இயேசு தான், - அவரது வாழ்வு தான்- எப்படி வாழ்ந்தார், எப்படி இறந்தார் – அனைத்தும் மோட்சத்திற்கு செல்லும் அடையாளங்களும், வழிகாட்டுதலும் ஆகும்.


“ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும்”, என்று இயேசு சொல்கிறார். நித்திய வாழ்விற்கு செல்ல  நாமும் முயல வேண்டும்.

நற்செய்தி முழுவதும்,இயேசு நமக்கு நித்திய வாழ்விற்கான பதிலை கொடுத்துள்ளார். நாம் நம் அன்பில் முழுமையாகவும் பரிசுத்தமாகவும் இருக்க வேண்டும். அதனால், நாம் செய்யும் சில தவறுகள், குற்றத்துடனும் இருப்பதால், மோட்சம் நமக்கு கிடைக்காது என்று அர்த்தமல்ல. மோட்சத்தை திறக்கும் சாவி அன்பு தான். நாம் அன்பை தூர எறிந்தால், நாம் அந்த சாவியை தூர எறிகிறோம்.

இருந்தாலும்,  நாம் பாவம் செய்தாலும், எப்பொழுதுமே, நாம் அன்பை தூர எறிவதில்லை. ஆனால் பரிசுத்தமான அன்புடன் நாம் இருக்க வேண்டும் என்று நமக்கு சொல்லபடுகிறது. இதன் அர்த்தம் என்ன என்றால், முழுமனதுடன், முழுமையாக அன்பு செய்ய வேண்டும். எவ்வித  நிபந்தனையுமின்றி, தியாகத்துடன், நாம் அன்பு செய்தல் வேண்டும்.

பரிசுத்தமான அன்பில் நிலைத்திருக்க, நாம் கடவுளின் அன்பை கொண்டிருக்க வேண்டும். யேசு நம்மில் இருந்து மற்றவர்களை சென்றடைய வேண்டும். நாமே, பல முறை, முழுமையான அன்பை வெளிபடுத்துவதில்லை. ஆனால், கடவுளிடம் நாம் தஞ்சமடைந்து, அவரின் அன்பை மற்றவர்களுக்காக நம்மிடம் கொடுக்க இறைஞ்சினால், நாம் முழுமையான அன்பை வெளிப்படுத்த முடியும். கடவுளின் அன்பில் நாம் தொடர்ந்து நிலைத்திருக்க, அதில் நம்பிக்கையுடன் இருக்க, அவரின் அன்பை தடுத்து நிறுத்தும் எதையும், நாம் தூக்கி எறிய வேண்டும். மன்னிக்காமல் இருப்பது, பழிவாங்க வேண்டும் என துடிப்பது, வெறுப்புடன் இருப்பது, தெரிந்தே மற்றவர்களின் தேவை அறிந்தும், அதனை செய்யாமல் இருப்பது. மகிழ்ச்சியை, சந்தோசத்தை வெறுக்கும் மனப்பான்மை, ஆகிய இவற்றை, நாம் தூர எறிதல் வேண்டும்.

இரண்டாவது வாசகத்தில், கடவுளின் ஒழுங்கை, கட்டுபாட்டை, அவமதித்து விடாதீர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. நமக்கு எவ்வளவு துயரம் வந்தாலும், நாம் கடவுளின் முழு அன்பை, அவரின் பரிசுத்தத்தை நாம் அவமதிக்க கூடாது. இதனையெல்லாம், கடவுள், நாம் பரிசுத்த அன்பு கொண்டிருக்க உபயோகிக்கிறார். இந்த சோதனைகளையெல்லாம், நாம் அன்பிள் வளர நல்ல வாய்ப்பாக ஏற்றுகொள்ள வேண்டும். அந்த சோதனையான நேரத்தில், நாம், கடவுளை நாடினால், அவர்  நம்மை அன்பில் நிலைத்திருக்க செய்வார். அப்பொழுது, நாம் இயேசுவை போல மாறுவோம். அப்பொழுது, மோட்சத்தின் பாதையை நேராக்குகிறோம். நமது பரிசுத்த வாழ்வில், ஒட்டாமலும், முடமாகவும் இருப்பதெல்லாம் குணமாக்கபட்டுவிடும்.

© 2013 by Terry A. Modica


Friday, August 16, 2013

ஆகஸ்டு 18, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஆகஸ்டு 18, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஆண்டின் 20ம் ஞாயிறு
Jeremiah 38:4-6, 8-10
Psalm 40:2-4, 18 (with 14b)
Hebrews 12:1-4
Luke 12:49-53
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 12:49-53
பிளவு ஏற்படுதல்

49 மண்ணுலகில் தீமூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.50 ஆயினும் நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன்.51 மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன்.52இது முதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு எதிராக இருவரும் பிரிந்திருப்பர்.53 தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்.

(THANKS to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில்,  மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வரவில்லை என்கிறார். மண்ணுலகில் தீமூட்ட வந்தேன். என்கிறார். மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன் என்றும் சொல்லி, அவரை பின்செல்பவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியை பெறும் வரை அவர் மனம் நெருக்கடியோடு இருந்தார்.  பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவின் பின் சென்றவர்கள் பரிசுத்த ஆவியை பெற்று இவ்வுலகை மாற்றுகின்றனர். இது நித்திய அமைதியை கொடுக்கிறது. முதலில் நமக்கு அமைதி அடைகிறோம்., பிறகு நம் மூலம் மற்றாவர்களூக்கும் அந்த  அமைதி பரவுகிறது.

நம்முடைய குறைகளை, பரிசுத்த ஆவி தான் சுத்த படுத்துகிறார். – அன்பில்லாத நமது நடைத்தைகள் – அதனால் ஏற்படும் ப்ரச்சினைகள், ஒற்றுமையின்மை, குழப்பங்கள் , சண்டை சச்சரவுகள்.  அனைத்தையும் பரிசுத்த ஆவி கழுவி தூர எறிகிறார். அதனால் தான் நாம் அமைதி பெறுகிறோம். பல சோதனைகளுக்கும் நடுவிலும், பலர் நம்மை தாக்கினாலும் நாம அமைதியாக இருப்பது பரிசுத்த ஆவியினால் தான். கடவுளின் அமைதியை பரப்பும்  ஊடகமாக  நாம் இருக்க பரிசுத்த ஆவியின் துனையோடு,  நாம் இருக்க இவ்வுலகம் நம்மை அழைக்கிறது. பரிசுத்த ஆவியின் தீ உங்கள் உள்ளத்தில் உணரவில்லியெனில், இயேசு உங்கள் மேல் மண வேதனையோடு உள்ளார்.

உங்கள் சுற்றியிருக்கும், சாத்தானை நினைத்து கொள்ளூங்கள், விரைவில் ஒரு முடிவிற்கு வந்துவிடும் என்று நீங்கள் நம்பிய்ருக்கும்பொழுது, இயேசு பரிசுத்த ஆவியின் நெருப்பை எறிய செய்து , உங்கள் பாவங்களை, குறைகளை, சாத்தானை எறிந்து போகச் செய்ய ஆசைபடுகிறார். இயேசு என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? என்ன
ஞாணஸ்நாணத்தை பற்றி அவர் பேசுகிறார். தண்ணீரால் ஆன ஞாணஸ்நாணத்தை பற்றியல்ல, அதனை ஏற்கனவே அவர் பெற்றுவிட்டார். தியாகத்தால், அவர் தன்னையே இழந்த ,மிகுந்த வலியும், வேதனையையும், அடைந்த  ஞாணஸ்நாணம் . உள்ள உறுதியுடன் , தனது சிலுவை பயனத்தை ,அன்பின் மிகுதியால், சாத்தானிடமிருந்து, நம்மை காப்பாற்ற அவர் தன்னையே தியாகம் செய்தார்.

சாத்தானை வீழ்த்த, நாம் இயேசுவை போலவே மாற வேண்டும். நாம் அதற்காக நம்மையே தியாகம் செய்ய எவ்வளவு வளர்ந்திருக்கிறோம் கிறிஸ்தவ முதிர்ச்சியை கான்பிக்கிறது. நமது ஆண்மாவையும் இதயத்தையும், எவ்வளவு தூரம்,  நமது இதயத்தில், அன்புடன், மற்றவர்களுக்காக  நெருப்புடன், நாம் முழு மனதுடன், நாம் இறையரசிற்காக இறைசேவை செய்யும்பொழுது, மற்றவர்களின் வாழ்வை நாம் மாற்றும்பொழுது, நாமும், மற்றவர்களும், அமைதி பெறுகிறோம்.   இயேசு “தீ வீட்டை பிரித்து விடும் “ என்று சொல்கிறார்.   யாரும் சுய நலத்தோடு இருப்பவரிடமிருந்து நம்மை பிரித்து விடும். இருந்தாலும், நாம் அவரிடம் அன்பாக இருப்போம். இதன் மூலம், நம்மில் தீ வளர்கிறது. இது இன்னும் நம்மை சுத்தபடுத்துகிறது. மேலும், மெதுவாக, இவ்வுலகம் மாறும்.

© 2013 by Terry A. Modica