Friday, October 10, 2008

அக்டோபர் 12, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

அக்டோபர் 12, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை:
ஆண்டின் 28வது ஞாயிறு


Is 25:6-10a
Ps 23:1-6
Phil 4:12-14, 19-20
Matt 22:1-14

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 22

1 இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து உவமைகள் வாயிலாகப் பேசியது: 2 ' விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்தினார். 3 திருமணத்திற்கு அழைப்புப் பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார். அவர்களோ வர விரும்பவில்லை. 4 மீண்டும் அவர் வேறு பணியாளர்களிடம், ' நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். காளைகளையும் கொழுத்த கன்றுகளையும் அடித்துச் சமையல் எல்லாம் தயாராயுள்ளது. திருமணத்திற்கு வாருங்கள் ' என அழைப்புப் பெற்றவர்களுக்குக் கூறுங்கள் என்று சொல்லி அனுப்பினார். 5 அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார்; வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார். 6 மற்றவர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள். 7 அப்பொழுது அரசர் சினமுற்றுத் தம் படையை அனுப்பி அக்கொலையாளிகளைக் கொன்றொழித்தார். அவர்களுடைய நகரத்தையும் தீக்கிரையாக்கினார். 8 பின்னர் தம் பணியாளர்களிடம், ' திருமண விருந்து ஏற்பாடாகி உள்ளது. அழைக்கப் பெற்றவர்களோ தகுதியற்றுப் போனார்கள். 9 எனவே நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள் ' என்றார். 10 அந்தப் பணியாளர்கள் வெளியே சென்று வழியில் கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் கூட்டி வந்தனர். திருமண மண்டபம் விருந்தினரால் நிரம்பியது. 11 அரசர் விருந்தினரைப் பார்க்க வந்த போது அங்கே திருமண ஆடை அணியாத ஒருவனைக் கண்டார். 12 அரசர் அவனைப் பார்த்து, ' தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்? ' என்று கேட்டார். அவனோ வாயடைத்து நின்றான். 13 அப்போது அரசர் தம் பணியாளர்களிடம், ' அவனுடைய காலையும் கையையும் கட்டிப் புறம்பே உள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும் ' என்றார். 14 இவ்வாறு அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர். '
(thanks to www.arulvakku.com )

இன்றைய நற்செய்தியில், போலித்தன்மையுடன் ஏமாற்றுபவர்களின் ப்ரச்னையை பற்றி கூறுகிறார். அது என்னவெனில், சிலர் யேசுவின் நட்பை பெறுவதற்காக, மதச்சடங்குகளில் ஈடுபாட்டுடன் இருப்பர். கோவில் காரியங்களில், ஆர்வத்துடன் செயல்படுவர். ஆனால், உண்மையான நட்பு கொள்வதில், இணங்கமாட்டர்கள்.

அந்த மாதிரியான மனிதர்களை பற்றி உங்களுக்கு தெரியும். அவர்கள் நட்புடன் இருப்பர், நல்ல செயல்கள் செய்வர். ஆனால் அவர்களுடைய நன்மைகளுக்காகவே அந்த நல்ல விசயங்களை செய்வார்கள். கஷ்டமான காலங்களில், அவர்களுடைய விசுவாசத்திற்கான சவாலான நேரங்களில், கோவிலுக்கு செல்வதை நிறுத்திவிடுவார்கள். குருவானவர் தவறான செய்திகளை பேசும்போதோ, அல்லது தவறான காரியங்களில் ஈடுபடும்போது, கத்தோலிக்க மதத்தை விட்டு விலகி செல்வர். உங்களோடு உள்ள நட்புறவிற்கு அவர்கள் ஏதாவது தியாகம் பன்ன வேண்டியிருந்தால், உங்களை விட்டு விலகி விடுவர்.

இந்த நீதிக்கதையின் மூலம், நட்பிலும், திருமனத்திலும், உண்மையான அன்பினால் இணையாமலிருப்பவர்களுக்கு,யேசு கடவுளின் மருந்து சீட்டை, அதற்கு என்ன செய்ய வேண்டும் என சொல்கிறார். எல்லோருக்குமே, விருந்து உண்ண அழைக்கபடுகின்றனர். ஆனால், சிலர், மகிழ்ச்சையான விருந்தையே விரும்புகின்றனர். ஆனால், கடினமான தருனங்களையோ அவர்கள் தவிர்த்துவிடுகின்றனர். ஆனால் சந்தோசமான தருனங்களும், கடினமான நேரங்களும், எல்லோர் உறவிலும் உண்டு. இந்த மாதிரியான போலிகளை தவிர்க்க கடவுள் சில எல்லைகளை நிர்மானித்துள்ளார்.


உங்களுடைய விருந்து மேஜைக்கு நீங்கள் அழைத்தவர்கள் பற்றி என்னிப்பாருங்கள். அதாவது கடவுளோடு சேர்ந்து உண்மையான நட்பிற்கு அழைத்தவர்கள். ஆனால், அந்த நட்பை அவர்களுக்கு ஏற்றமாதிரி அவர்கள் மாற்றி அமைக்க முயல்வர். நாம் அவர்களை முழுவதுமாக அன்பு செய்ய வேண்டும். ஆனால் அது ஒரு எல்லைக்குள் இருக்க வேண்டும். அந்த நட்புறவு, நல்ல முறையாக செல்ல நமது கடமைகளை நமது பங்கிற்கு செய்யவேண்டும். மற்றவர்கள் அவர்கள் கடமையை செய்யாதபோது உங்களுடைய உறவை நிராகரித்து விட்டார்கள்.

அவர்களுக்காக, நம்மால் முடிந்த எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு, அவர்களை மனம் திரும்பவும், மன மாற்றத்திற்கும் உறுதுனையாக இருக்க வேண்டும் என்று கடவுள் நம்மிடம் கேட்கிறார். இருந்தாலும், நமது முயற்சிகள் ஒரு எல்லைக்குள்ளாக இருக்க வேன்டும். நமது முயர்சிகள் வீணாக போகும்போது, நாம் நமது வழியை நோக்கி செல்ல வேன்டும், என்று கடவுள் கூறுகிறார்.


மேலும் எப்போதுமே , நாம் நமக்கு கிடைக்கும், நல்ல உண்மையான நட்புடன் கூடிய நண்பர்களை தேடி அவர்களோடு சேர்ந்து கடவுளோடு இணைதல் வேண்டும்.


© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: