Friday, October 31, 2008

நவம்பர் 2, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

நவம்பர் 2, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 31வது ஞாயிறு
கல்லறை திருவிழா (அனைத்து ஆன்மாக்கள் நினைவு தினம்)

Wisdom 3:1-9
Ps 23:1-6
Rom 5:5-11 or Rom 6:3-9
John 6:37-40


யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 1



37 தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் வந்து சேருவர். என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன்.38 ஏனெனில் என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல, என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்.39 ' அவர் என்னிடம் ஒப்படைக்கும் எவரையும் நான் அழிய விடாமல் இறுதி நாளில் அனைவரையும் உயிர்த்தெழச் செய்ய வேண்டும். இதுவே என்னை அனுப்பியவரின் திருவுளம்.40 மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன் ' என்று கூறினார்.

(thanks to www.arulvakku.com)

நீ எப்போதாவது, யேசு கொடுத்த மீட்பை சிதைத்து விட்டு, மோட்சத்திற்கு செல்லவே மாட்டோம் என்று நினைத்தது உண்டா? இன்றைய நற்செய்தியில், யேசு, "
37 தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் வந்து சேருவர். என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன் " அவர் உஙளை குறிப்பிடுகிறார். தந்தை கடவுள் உங்களை யேசுவிடம் ஒப்படைத்து இருக்கிறார். யேசு உங்களை மோட்சத்திற்கு வழி நடத்தி செல்வார்.

நம்முடைய ஞானஸ்நானத்தில், தந்தை கடவுள் யேசுவிடம் நம்மை ஒப்படைக்கிறார். "மகனே, இவர்களை உன்னிடம் கையளிக்கிறேன், அவர்கள் மோட்சம் செல்வதற்கு தேவையான எல்லாவற்றையும் செய்" என்று யேசுவிடம் கூறுகிறார். யேசு அவருக்கு இவ்வாறு பதிலளிக்கிறார். " நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன் "


தந்தைக்கு என்ன தேவையோ, அதை அவர் பெறுகிறார். (எல்லோரும் மோட்சம் செல்வது). ஆனால், அவரின் எல்லா வகை முயற்சிகளையும், அவரின் அன்பையும் நிராகரித்தவர்களுக்கு என்ன செய்வது.


நோயுற்ற நமது அன்பானவர்களுக்கும் இது பொருந்தும், அவர்கள் இந்த பூமியில் இருக்கும்போது, யேசுவோடு இருக்க விரும்பினால், அவர்கள் இறக்கும் நேரத்தில், யேசு அவர்கள் முன் நிற்கும்போது, அவரோடு இருக்க வேண்டும் என்று ஆசை படுவார்கள்.

நாம் யேசுவை நேருக்கு நேராக பார்க்கும்போது, நமக்கு எல்லாமே தெளிவாக தெரியும். நாம் நமது வாழ்வில் நடந்த பாவஙளுக்காக மனம் வருந்துவோம், மேலும் யேசு நம்மை உத்தரிக்கிற ஸ்தலத்தை நாமே தேர்ந்தெடுக்க அனுமத்கிக்கிறார். அங்கே நமது விடுபட்ட பாவங்கள் எல்லாம் நீக்கப்பட்டுவிடும். அதன் பிறகு நாம் நமது பாவங்களிலிருந்து மீண்டு புனிதப்பட்டுவிடுவோம். அப்போது நாம் நித்தியத்திற்கும், கடவுளின் முழு அன்போடு மோட்சத்தில் இருப்போம். இருந்தாலும், இந்த பூமியில் நாம் இறைவன் மேல் உள்ள அன்பினால் நமது பாவங்கள் துடைக்கபடுவது, உத்தரிக்கிற் ஸ்தலத்தில் கழுவப்படுவதை விட மேலானது.


நாம் எவ்வாறு, நம்மை பாவங்களிலிருந்து விடுபட்டுகொள்வது. மற்றவர்களை எவ்வளவு கடினமாக இருந்தாலும், அன்பு செய்வது. அடிக்கடி பாவம் செய்பவர்களை மன்னிப்பது, மிகவும் தாராளமாக தேவையானவர்களுக்கு உதவுவது. இப்படி செய்கிறபோது, கடவுளின் அன்பில் நாம் இணைகிறோம். மேலும் கடவுளரசில் இந்த பூமியில் இருந்து கொண்டே வாழ்கிறோம்.


புனித தெரசா அவர்கள் "கடவுள் நம்மை உத்தரிக்கிற ஸ்தலத்தில் நம் பாவங்கள் கழுவப்படுவதை விரும்புவதில்லை. இந்த பூமியிலேயே, அவரை சந்தோசப்படுத்தி, அவர் மேல் முழு நம்பிக்கையுடன் இருந்தால், அவர் அவரின் அன்பினால் ஒவ்வொரு நிமிடமும் நம்மை புனிதப்படுத்துகிறார் அதனால் , நம் மேல் எந்த பாவ கறைகளும் இல்லாமல் இருக்கும். அதன் பிறகு நாம் உத்தரிக்கிற ஸ்தலத்திற்கு செல்ல தேவையில்லை" என்று கூறுகிறார்.

© 2008 by Terry A. Modica

No comments: