Friday, December 19, 2008

21, டிசம்பர், 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை:

21, டிசம்பர், 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை:
திருவருகை கால 4வது ஞாயிறு

2 Sam 7:1-5, 8b-12, 14a, 16
Ps 89:2-5, 27, 29
Rom 16:25-27
Luke 1:26-38

அதிகாரம் 1
26 ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார்.27 அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.28 வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, 'அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்றார்.'அருள் நிறைந்தவரே வாழ்க!' என்று வுல்காத்தா என்னும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் உள்ளது. ------ 'பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்' என்னும் சொற்றொடரும் சில முக்கிய கையெழுத்துப் படிகளில் காணப்படுகிறது. 29 இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.30 வானதூதர் அவரைப் பார்த்து, ' மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்.31 இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.32 அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்.33 அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது ' என்றார்.34 அதற்கு மரியா வானதூதரிடம், ' இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே! ' என்றார்.35 வானதூதர் அவரிடம், ' தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்.36 உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம்.37 ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை ' என்றார்.38 பின்னர் மரியா, ' நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும் ' என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.
(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், கன்னி மரியாள் யேசுவை கர்ப்பத்தில் ஏற்று கொள்வதற்கு முன்பே, அவரை கிறிஸ்துவின் ஒளி எப்படி பாதித்தது என்று குறிப்பிடுகிறது.

முப்பது வருடங்களுக்கு பிறகு, யேசு இந்த உலகின் இருளுக்குள், வீசும் ஒளியாக உருவானார். இருந்தாலும், யேசு தான் கடவுள்; அவர் எப்போதுமே இருக்கிறார். அவர் உருவாக்கப்பட்டவர் அல்ல. கடவுளின் ஒளியாவார். அவரது ஒளி, கன்னி மரியாளுக்கு கருவாய் உருவானதிலிருந்தே, ஒரு விளைவை உண்டாக்கி கொண்டிருந்தது.

கடவுளின் மகன் மனித உருவாக இந்த உலகிற்கு வருவதற்கு, அவரது ஆவி மரியாளின் முழு உடலையும் ஆவியால குளிப்பாட்டியது. கடவுளின் தூய பிரகாச ஒளி, அன்னை மரியாளை குளிப்பாட்டியது. அதனால் தான், அன்னை மரியாள், எந்த ஒரு ஆனுடனும் தொடர்பில்லாமலே, அவர்கள் பார்க்காமலேயே, கன்னி மரியாள், மெசியாவை தன் வயிற்றுக்குள் கர்ப்பமாக தாங்கினாள். இந்த ஒளியின் மூலம், கடவுள் தான் இதற்காக நம்மிடம் கேட்டார், கடவுள் தான் இதை செய்கிறார் என்று நம்பினாள்.

கன்னி மரியாளுக்கு அதுவே போதுமானது.

கிறிஸ்துவின் ஒளியை முழுவதுமாக இந்த உலகிற்கு கொன்டு செல்ல, கடவுள் நம்மையெல்லாம் அழைக்கிறார். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? தெய்வீக கடவுளின் அழைப்பை எந்த அளவிற்கு நீங்கள் கடமைபட்டு செய்கிறீர்கள்? கடவுள் நம்மிடம் எந்த செயல்லை செய்ய சொல்கிறாரோ? அந்த செயலுக்கு தேவையான ஆற்றலை, கடவுள் நமக்கு தருகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கடவுளுக்கு அவர் என்ன செய்கிறார் என்பதை அறிவார், எப்போது உங்களை அவரின் கடவுளர்சிற்காக செய்ய அழைக்கிறார் என்பது அவருக்கு தெரியும். அவர் எப்போதுமே நம்ப தகுந்தவர் மேலும், அவரை சார்ந்து இருக்கலாம். எந்த ஒரு பயமும் தேவையில்லை.


கடவுள் செய்யும் ஒவ்வொரு செயலுமே நல்ல செயல்களே ஆகும். நம்மை ஈடுபடுத்தும், கடவுளின் திட்டம், சிலுவையை சுமப்பதாக இருந்தாலும், அவர் செய்யும் செயல்கள் அனைத்தும் நல்லவையாகவே இருக்கும். நாம் கிறிஸ்துவை பின் சென்றால், மிகவும் சீக்கிரமாகவோ, அல்லது கொஞ்சம் தாமதமாகவோ, நாம் யேசுவோடு சிலுவையில் தொங்குவோம். ஏனெனில், அதுவே மிகவும் மேலான முடிவாகும். அதுவே நல்ல முறையில் செயல்படுத்த கூடிய, வெற்றியை தேடிதருகிற செயலாகும். அதன் மூலம், பலரின் வாழ்வை மாற்றியமைக்க முடியும்.

இதையெல்லாம் நினைவில் வைத்து கொண்டு, கடவுள் அவரது அரசிற்காக, நம்மை அழைக்கும் போது, நமது பதில் "ஆம்" என்று தானே இருக்கும்?
ஆனால், அது சரியாக நடப்பதில்லை? கண்டிப்பாக, நாம் அவரோடு சேர்ந்து ஈடுபட ஆவலாயிருக்கிறோம், அவரின் ஆணைக்கு நாம் "ஆம்" என்கிறோம். நாம் அவர் என்ன செய்ய சொல்கிறார் என்று தெரியாவிட்டாலும், கடவுள் இதனை செய்பவர் என்று இருக்கிறோம்.

அடிக்கடி, கடவுள் நம் மூலம் செய்ய நினைக்கும் திட்டத்தை, அவரால் நம் மூலம் செய்ய முடியாது என்று நினைக்கிறோம். ஏனெனில், நாம் வலிமையில்லாதவர்கள் என்றும், பாவம் செய்பவர்கள் , முறையான தகுதி உள்ளவர் இல்லை என்றும் நமக்கு தெரியும். உங்கள் எண்ணங்களின் மேல் நம்பிக்கை கொள்ளாதேர்கள். கடவுளை நம்புங்கள்.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: