Friday, December 5, 2008

7 டிசம்பர் 2008, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

7 டிசம்பர் 2008, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
திருவருகை கால இரண்டாவது ஞாயிறு
Isaiah 40:1-5, 9-11
Ps 85:9-14
2 Peter 3:8-14
Mark 1:1-8
மாற்கு நற்செய்தி
அதிகாரம் 1
1 கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்: 2 ' இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்; அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார்.3 பாலை நிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள் ' என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது.4 இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்.5 யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்.6 யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்; தோல்கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.7 அவர் தொடர்ந்து, ' என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை.8 நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார் ' எனப் பறைசாற்றினார்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தி, கடவுளுக்காக தயாரகுங்கள் என்று கூறுகிறது. கடவுள் நமக்கு என்ன கொடுப்பதாக இருந்தாலும், நமக்காக என்ன செய்வதாக இருந்தாலும், நம்மிடம் என்ன கேட்பதாக இருந்தாலும், - நாம் நேரான வழியில் நடந்து, பரிசுத்த பாதையில் நடக்க வேண்டும், மற்றும், பாவச் செயல்களை தவிர்த்து விட வேண்டும்.

பாலை நிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள் ' என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது. உங்களது வாழ்க்கையில் எது இல்லாமல் இருக்கிறது! எந்த பாவங்கள், உங்களுடைய வாழ்க்கயை வறுமையாக்கியது, மாறாக உங்கள் பாவங்கள் இல்லாமல் இருந்தால், அது உங்களுக்கு நல்ல கனியை கொடுத்திருக்கும்?


மோட்சத்திற்கு செல்லும் பாதையில் எந்த பகுதியில் உங்களுக்கு மிகவும் கடினமாயிருக்கிறது? உங்களில் தடையாக இருக்கும் உங்கள் பாவங்களை உங்கள் கண் முன் கொண்டுவாருஙள். அல்லது உங்கள் பாதையில் உள்ள தடைகளை ஞாபகபடுத்திகொள்ளுங்கள்.

ஆண்டவருக்காக வழியை ஆயத்தபடுத்துங்கள். உங்கள் பாவங்களால் உண்டான, வீணான நிலத்தில், கடவுளுக்காக, விரைவு சாலையை உண்டாக்குஙல். பாவசங்கீர்த்தன அருட்சாதனத்தில் கலந்து கொண்டு, உங்கள் இருதயத்தில் உள்ள பாதையை அகலமாக்குங்கள், அதனால், யேசு அங்கு வர மிகவும் எளிதாயிருக்கும். அந்த அகல பாதையில், யேசு மிக விரைவாகவும், மகிமயோடும் வருவார்.

எல்லா மனிதர்களுமே புல்லை போல வலிமையற்றவர்கள் ஆவர். நம் புகழ், வளம் எல்லாமெ ஒரு பூவை போல வாடி விடும். கடவுளுடைய வார்த்தைகள் மட்டும் தான், எக்காலமும் நிமிர்ந்து நிற்கும்.


உனக்கு இருக்கும் தொந்தரவுகளையும், போராட்டங்களையும் உங்கள் மனதின் முன் நிறுத்துங்கள். இங்கே தான், நீங்கள் பாவத்திற்குள் காயப்படுகிறீர்கள். பரிசுத்த ஆவியின் உதவியுடன், இந்த கஷ்டங்களெல்லாம், நித்திய வாழ்விற்கு வாய்ப்பாக பயன்படுத்துங்கள். அந்த கஷ்டங்களெல்லாம், அவ்வளவு மோசமானவையா? நிரந்தரமாக இருக்க கூடியதா? கடவுள் அந்த கஷ்டங்களிடமிருந்து (சிலுவையிலிருந்து) உங்களை தூக்கி நிறுத்துவார்.

உங்கள் வாழ்க்கையில் நன்றாக போய்கொண்டிருக்கும், நல்ல விசயங்களை உங்கள் மனக்கண் முன் கொண்டு வாருங்கள். உங்களுடைய எந்த செயல்கள், நன்றாகவும், நல்ல பொருட்களை ஈட்டுவதாகவும், உள்ளன? அவைகளையும், நித்திய வாழ்விற்கான நல்ல வாய்ப்பாக எடுத்து கொள்ளுங்கள். அவைகள் எல்லாம், புல்களை போல சில காலம் தான் வளமாக இருக்கும? அல்லது, இன்னும் 100 வருடங்களுக்கு, நல்ல விளைவுகளை பெற்று தருமா?


அந்த நல்ல செயல்களின், பல மடங்காக பெருகி, இன்னும் 1000 வருடங்களில் அதன் வளம் என்னவாக இருக்கும்?

கடவுள் உங்களுக்கு நல்ல திறமைகளையும், அதனை உபயோகபடுத்தி, அவரின் இறையரசை பரப்ப உங்களை அழைக்கிறார். நீங்கள் உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்களா? அப்படியெனில், இப்போது, பாவ சங்கீர்த்தன அருட்சாதனத்தில் பங்கு கொண்டு, உங்களை கடவுளின் வருகைக்காக தயார் படுத்தி கொள்ளுங்கள். அவர் உங்கள் மூலம், நித்திய வாழ்விற்கான வழியை இந்த பூமிக்கு கொடுக்க விரும்புகிறார்.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: