Friday, June 19, 2009

ஜூன் 21, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜூன் 21, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 12ம் ஞாயிறு
Job 38:1, 8-11
Ps 107:23-26, 28-31
2 Cor 5:14-17
Mark 4:35-41

மாற்கு நற்செய்தி

அதிகாரம் 4
35 அன்றொரு நாள் மாலை நேரம். இயேசு சீடர்களை நோக்கி, ' அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள் ' என்றார்.36 அவர்கள் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு, படகில் இருந்தவாறே அவரைக் கூட்டிச் சென்றார்கள். வேறு படகுகளும் அவருடன் சென்றன.37 அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்தது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக் கொண்டிருந்தது.38 அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள், ' போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா? ' என்று சொல்லி அவரை எழுப்பினார்கள்.39 அவர் விழித்தெழுந்து காற்றைக் கடிந்து கொண்டார். கடலை நோக்கி, ' இரையாதே, அமைதியாயிரு ' என்றார். காற்று அடங்கியது; மிகுந்த அமைதி உண்டாயிற்று.40 பின் அவர் அவர்களை நோக்கி, ' ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா? ' என்று கேட்டார்.41 அவர்கள் பேரச்சம் கொண்டு, ' காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ! ' என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள்.

(thanks to www.arulvakku.com)

நான் வாழும் ப்ளோரிடாவில், தற்போது சூறாவளி காற்று வீசும் காலமாகும். இங்கே சிலர் இந்த புயலை, கடவுள் நமக்கு கொடுக்கும் தண்டனை என நினைக்கின்றனர். மனிதர்களின் தவறுகளுக்கு அவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்பதில், எல்லோரும் சரியெனவே கூறுவர். யேசு கடவுளின் கோபக்கணையை தன் உடல் மேல் ஏற்றுகொண்டு, அதன் துன்பங்களை, வலியை ஏற்று, நம் பாவங்களுக்காக, அவரது இரத்தத்தை சிந்தி, மரணமடைந்தார். இதன் மூலம், நாம் நமது பாவங்களினால் கிடைக்க வேண்டிய நீதியிலிருந்து விடுபட்டோம்.
யேசு நம்மில் உள்ள சூறாவளியை அமைதியாக்க விரும்பினார், சூறாவளியை உண்டாக்க அல்ல.
கஷ்டம், துன்பம் எல்லாம் நமக்கு தண்டனை இல்லை. அவைகள் தான் நம்மை கடவுளுக்கு இன்னும் நெருக்கத்தில் கொண்டு செல்லும் வாய்ப்பு ஆகும். நாம் எல்லாரும்,நமது வாழ்வில் சூறாவளி காலத்தை சந்திக்கிறோம். ஒவ்வொரு சூறாவளியும், யேசு நம்முடன் ஒவ்வொரு நிமிடமும் நடந்து வருகிறார் என்பதை நமக்கு புரிய வைக்கிறது. மேலும் நமக்கு உதவி தேவைபட்டாலும், இல்லாவிட்டலும் கூட நம்முடனே யேசு கிறிஸ்து இருக்கிறார். இந்த துன்ப காலங்களில் தான், நாம் இன்னும் அதிக அறிவினை பெறுகிறோம், நமது ஞாணம் இன்னும் விரிவடையும், விசுவாசத்தில் இன்னும் உறுதியடைவோம். இன்னும் பனிவும், தாழ்மையும் நமக்கு வரும். மேலும், நாம் கடவுளை நம்பியே இருப்பதால், அந்த துன்ப வேளையில், அவரின் முழு அன்பை நாம் இன்னும் சரியாக புரிந்து கொள்ள முடியும். ஆனால் இவையெல்லாம் நமக்கு கிடைக்க வேண்டுமென்றால், கடவுள் ஒரு மேஜிக் நிபுணர் போல வந்து, நம் ப்ரச்னையை நாம் நினைப்பது போல முடித்து வைப்பார் என்று எதிர்பார்க்காமல் இருக்க வேன்டும்.

இன்னும் சில சூறாவளிகள் இவ்வுலகில் தொடர்ந்து வந்து கொண்டிருப்ப்பது, ஏனென்றால், நாம் இன்னும் கிறிஸ்துவின் உண்மையான ப்ரசன்னத்தை அவர்களுக்குள் கொண்டு வரவில்லை. நாம் நமது அனுபவங்களின் மூலம் பலனடைந்த பின், நாம், மற்றவர்களும், அவர்களின் துன்பங்களை தாங்கி கொள்ள நாம் உதவ வேன்டும். யேசு இந்த உலகில் உபயோக்கும் கரங்களாக நாம் ஆகவேன்டும். அதன் மூலம், நமது துன்பங்கள், வீனாகவில்லை என்பதை நாம் அறிவோம். இதன் மூலம் நம் துன்பங்களினால் ஏற்பட்ட மன் சஞ்சலங்கள்,வருத்தங்கள் எல்லாம் மறைந்து நம்மில் அமைதி ஏற்படும்.

சில நேரங்களில், நாமெ நம்முடைய தவறான முடிவால்(பாவங்களால்), சூறாவளியை , துன்பத்தை ஏற்படுத்தி கொள்கிறோம். ஆனால், கடவுள் நமக்கு தன்டனை கிடைக்க வேண்டும் என்று விரும்பவில்லை. கடவுள் அதிகமான சிவப்பு கொடி எச்சரிக்கை செய்கிறார். இருந்தும், நாம் துன்ப சூறாவளியில் மாட்டிவிட்டல், நாம் நமது கொந்தளிப்பை அமைதிபடுத்தி, அவரோடு இனக்கம் கொண்டு, அவரோடு சேரவேண்டும் என அழைக்கின்றார்.
சூறாவளி நம்மால் உண்டானதோ அல்லது, இயற்கையை உண்டானதோ, இன்றைய நற்செய்தியில் சீடர்கள் கூறுவது போல "போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா? " என்று அவர்கள் போல் நாமும் கூவி அழுதால், யேசு " ஏன் பயப்படுகிறீர்கள்? உங்களுக்கு குறைவான விசுவாசமே உள்ளது!, எனது அமைதி ஏற்கனவே இங்கு இருக்கிறது" என்று கூறுகிறார்.

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: