Friday, June 26, 2015

ஜூன் 28 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஜூன் 28 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 13ம் ஞாயிறு


Wisdom 1:13-15; 2:23-24
Ps 30:2, 4-6, 11-13
2 Cor 8:7, 9, 13-15
Mark 5:21-43


மாற்கு நற்செய்தி

இரத்தப் போக்குடைய பெண் நலம் பெறுதலும், சிறுமி உயிர் பெற்றெழுதலும்
(
மத் 9:18 - 26; லூக் 8:40 - 56)
21இயேசு படகேறி, கடலைக் கடந்து மீண்டும் மறு கரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார்.22தொழுகைக் கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து,23' என் மகள் சாகுந்தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள் ' என்று அவரை வருந்தி வேண்டினார்.24இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக் கொண்டே பின்தொடர்ந்தனர்.25அப்போது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார்.26அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர். அவர் நிலைமை வர வர மிகவும் கேடுற்றது.27அவர் இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையைத் தொட்டார்.28ஏனெனில், ' நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன் ' என்று அப்பெண் எண்ணிக் கொண்டார்.29தொட்ட உடனே அவருடைய இரத்தப் போக்கு நின்று போயிற்று. அவரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றதைத் தம் உடலில் உணர்ந்தார்.30உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து,' என் மேலுடையைத் தொட்டவர் யார்? 'என்று கேட்டார்.31அதற்கு அவருடைய சீடர்கள் அவரிடம், ' இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும், ' என்னைத் தொட்டவர் யார்? ' என்கிறீரே! ' என்றார்கள்.32ஆனால் அவர் தம் மேலுடையைத் தொட்டவரைக் காணும்படி சுற்றிலும் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்.33அப்போது அப்பெண் தமக்கு நேர்ந்ததை அறிந்தவராய், அஞ்சி நடுங்கிக்கொண்டு, அவர்முன் வந்து விழுந்து, நிகழ்ந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னார்.34இயேசு அவரிடம்,' மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு 'என்றார்.35அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக் கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், ' உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்? ' என்றார்கள்.36அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம்,' அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர் 'என்று கூறினார்.37அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை.38அவர்கள் தொழுகைக் கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார்.39அவர் உள்ளே சென்று,' ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள் 'என்றார்.40அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள். ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றியபின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக் கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார்.41சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம்,' தலித்தா கூம் 'என்றார். அதற்கு,' சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு 'என்பது பொருள்.42உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்மறந்து நின்றார்கள்.43' இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது 'என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்; அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார்.
(thanks to www.arulvakku.com)




இயேசுவின் உடையை தொடுவது எப்படி

இயேசுவின் உடையை தொட்டு பார்க்கும் அனுபவம் நமக்கு கிடைத்தல், எவ்வளவு மகத்தான விசயம் ஆக நமக்கு இருக்கும். இன்றைய நற்செய்தியில் வரும் பெண் போல, நமக்கு ஒரு அனுபவம் கிடைத்தால் எப்படி இருக்கும். ? இயேசுவின் அருகில் இருந்து, அவர் மூலம் உள்ளத்திலும், உடலிலும், மனதளவிலும் நாம் குணமடையும், 2000 வருடத்திற்கு முன்பே இயேசு விண்ணகத்திற்கு சென்ற பின்பு, நம்மால் எப்படி அவர் அருகில் செல்ல முடியும்?

கண்டிப்பாக முடியும். இதனயே தான் இயேசுவும் விரும்புகிறார். இயேசு உண்மையிலேயே யார் என்று நாம் நன்றாக புரிந்து கொண்டு, எவ்வளவு அவர் நம் மேல் அக்கறை கொண்டுள்ளார் என்று நாம் அறிந்து கொள்வதை நாம் இன்னும் முயற்சிக்கும் பொழுது நம்மால் இயேசுவின் தெய்விகத்தை நாம் அறிந்து கொள்ள முடியும். தொழுகை கூடத்தின் தலைவருக்கு இது புரிந்து தான் இயேசுவிடம் , “ என் மகள் சாகுந்தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்" என்று கூறினார் . அவர் இயேசுவை அவர் கண் முன்னே தோன்றிய இயேசுவை விட தெய்விக இயேசுவின் மேல் நம்பிக்கை வைத்தார் .

இயேசுவை தெரிந்து கொள்வது என்பது தெய்வீக வாழ்வை தெரிந்து கொள்தல் ஆகும் . அது நம்மை இந்த உலக வாழ்விலிருந்து நம்மை மாற்றி, இன்னும் பரிசுத்த வாழ்விற்கு சென்று , நம்மை விண்ணகம் எடுத்து செல்லும். முதல் வாசகத்தில், மரணம், கடவுளின் திட்டம் அல்ல என்று உறுதியாக சொல்கிறது. இயேசு இதே செய்தியை நமக்கு மீண்டும் உறுதியாக நமக்கு நினைவுட்டவே, அந்த பெண் இறந்தவுடன் செல்கிறார். கண்டிப்பாக கடவுளால் இயேசு செல்வது வரை, அந்த பெண்ணை உயிரோடு வைத்திருக்க முடியும், ஆனால், இயேசு மரணத்திலிருந்து உயிர் கொடுக்க முடியும் என்று காட்டவே , வாழ்வை மீட்க முடியும் என்று இயேசு காட்டவே இப்படி செய்தார்.


நாம் மரணத்திற்காக பயந்தால், கிறிஸ்து நமக்கு அருகில் இருப்பதை நாம் மறந்து விடுகிறோம். இயேசுவின் உடையை நம்மால் தொட முடியும், ஆனால் நாம் அதை பார்க்க முடியாது, அதனால் நாம் இதனை நம்புவதில்லை, தொழுகை கூட தலைவரின் வீட்டில் அழுது கொண்டிருந்தவர்களை போல நாம் இருக்கிறோம் , இயேசு அந்த பெண்ணை எழ செய்யும் அற்புதற்கு முன்பு ,அவர்களை இயேசு விரட்டி அடித்தார் .

நமது சோதனைகள் நம்மை முடிவில்லாத அழிவிற்கு கொண்டு சென்று விடும் என்று நாம் பயப்பட்டால், இயேசு எவ்வளவு சக்தி வாய்ந்தவர் என்பதை நாம் மறந்து விட்டோம் , இயேசு நம்மை காப்பவர் என்பதை நாம் மறந்து விட்டோம். நாம் இயேசுவின் அருகில் செல்ல முயற்சிக்க வேண்டும். நமக்கு உள்ள சந்தேகங்கள், தடைகள் மீறி நாம் அவர் அருகில் செல்ல முயற்சிக்க வேண்டும். நமது கண்கள் இயேசுவை நோக்கி , நமக்கு கைகள் அவரிடமும் செல்ல , நமது ஜெபம் மூலம் பிரார்த்திக்க வேண்டும்.

கடவுள் நம்மை இன்னும் முழுமையாக அக்கறை காட்டவில்ல என்று நாம் பயந்தோமானால், ஏன் இயேசு அவரது வாழ்வையே நமக்காக கொடுத்தார் என்பதை நாம் இன்னும் புரிந்து கொள்ள வேண்டும். கடவுள் என் அவர் மகனை இந்த உலகிற்கு அனுப்பினார் என்பதும், நாம் அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

© 2015 by Terry A. Modica

No comments: