Friday, August 14, 2015

ஆகஸ்டு 16 2015 ஞாயிறு திருப்பலி மறையுரை


ஆகஸ்டு 16 2015 ஞாயிறு திருப்பலி மறையுரை
ஆண்டின் 20ம் ஞாயிறு
Proverbs 9:1-6
Ps 34:2-7
Ephesians5:15-20
John 6:51-58

யோவான் நற்செய்தி


அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கி, ``விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.
நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?''என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது.
இயேசு அவர்களிடம், ``உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடைய மாட்டீர்கள். எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர்,நானும் அவர்களோடு இணைந் திருப்பேன். வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர். விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே;இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்.''



இன்றைய நற்செய்தியில், இயேசு " வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்" எந்த மாதிரியான வாழ்வை இயேசு குறிப்பிடுகிறார்? அவர் குறிப்பிடும் வாழ்விற்கும், நீங்கள் பிறந்த வாழ்விற்கும் வித்தியாசம் என்ன ?

இயேசு அவரது உடலையும் இரத்தத்தையும் ஒவ்வொரு திருப்பலியிலும் நமக்கு தருகிறார். அதன் முலம் நாம் அவரை முழு மனிதனாகவும், தெய்வமாகவும் எடுத்து கொள்ள முடியும். கிறிஸ்து அவரின் முழு அன்பையும் நாம் பெற்று அதன் முலம் நாம் வளர வேண்டும் என ஆசைபடுகிறார். நாம் சொதனைகளை எதிர் கொள்ளும் பொழுது , அவரிடமிருந்து ஆற்றல் பெற்று கொண்டு, அதனை எதிர் கொள்ள வேண்டும் என்று ஆசைபடுகிறார். நமது காயங்கள் அவர் உணவின் முலம் ஆரவேண்டும் எனவும், அவரின் முழு வாழ்வும் நாம் இங்கேயே பெற வேண்டும் எனவும் அவர் ஆசைபடுகிறார் , மோட்சத்தில் அல்ல , இந்த உலகிலே நாம் அவரை முழுமையாக பெற வேண்டும் என ஆசைபடுகிறார்.
இயேசுவை நாம் உட்கொண்டு அவரை போல மாறவேண்டும். உண்மையாகவே திவ்ய நற்கருணை யும் திராட்சை இரசமும், இயேசு கிறிஸ்துவின் உடலும் இரத்தமும் தான் நாம் நம்பினால், அவர் தான் மீட்பர் என்றும் நம்பினால், திருப்பலியில் அவரை பெற்று கொண்டு வெளியில் வரும் பொழுது நாம் ஏன் மாறாமல் இருக்கிறோம் ?

திருப்பலியின் தொடக்கத்தில், முழு மனதோடு பாவ மன்னிப்பு நிகழ்வில் பங்கு கொண்டு, நற்செய்தி வாசகங்களில் முழுமையாக கேட்டு குருவானவரோடு இணைந்து எல்லா ஜெபங்களும் சொல்லி, இறைவனிடம் வேண்டி, கடவுளின் சக்தி மேல் முழுமையான நம்பிக்கை கொண்டு , நாம் "நாம் உன்னை பெற தகுதியில் லாதவன் ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும் எனது ஆன்மா குணமடையும் " என்று சொல்லி, திவ்ய நற்கருணையை நாம் பெரும்பொழுது , அவரோடு நாமும் இணைந்து ஒன்றா கிறோம்.


இப்போது , நாமும் இயேசுவின் உடலாக இரத்தமாக , இந்த உலகில் இருக்கிறோம். மற்றவர்கள் கிறிஸ்துவை நம் முலமாக பெறுகிறார்கள் . இதையே மாற்றாக சொல்வதானால், மற்றவர்களுக்கு கிறிஸ்துவின் பிரசன்னத்தை நம் முலம் பெற்று கொள்ள ஒரு வாய்ப்பை நாம் வழங்குகிறோம்.

நாம் அன்பை மற்றவர்களுக்கு கொடுக்கும் பொழுது அவர்கள் கடவுளின் அன்பை பெறுகிறார்கள். அதே அன்பை அவர்கள் திருப்பி கொடுக்க வில்லை என்றால், நாம் அதிகமாக கொடுக்கிறோம், குறைவாக பெற்று கொள்கிறோம் . அதே போல நமது நேரத்தையும் , திறமைகளையும், இறையரசிற்காக நாம் எந்த ஒரு வெகுமதியும் பெறாமல் செலவிடும் பொழுது , நாம் திவ்ய நர்கருனையாக மாறி விடுகிறோம். நாம் இயேசுவோடு ஒரே உடலும் இரத்தமாக மாறி விடுகிறோம்
இயேசுவிடமிருந்து நாம் பெற்று கொண்டால் ஒழிய, நம்மிடமிருந்து வெளியேறினாலும், நம்மிடம் எதுவும் அழியாது. அதனால் தான் ஒவ்வொரு திருப்பலியும், அதில் வழங்கப்படும் திவ்ய நற்கருணை யும் நம்மை வாழ வைக்கிறது. வளர்க்கிறது. இது தான் நம் வாழ்வின் ஊற்று கண்ணாகவும் , அடித்தளமாகவும் இருப்பது.

© 2015 by Terry A. Modica

No comments: