Saturday, August 22, 2015

ஆகஸ்டு 23 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஆகஸ்டு 23 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 21ம் ஞாயிறு

Joshua 24:1-2a, 15-18b
Ps 34:2-3, 16-21 (with 9a)
Ephesians 5:21-32
John 6:60-69

யோவான் நற்செய்தி

60அவருடைய சீடர் பலர் இதைக் கேட்டு, ' இதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா? ' என்று பேசிக் கொண்டனர்.61இதுபற்றித் தம் சீடர் முணுமுணுப்பதை இயேசு உணர்ந்து அவர்களிடம்,' நீங்கள் நம்புவதற்கு இது தடையாய் இருக்கிறதா?62அப்படியானால் மானிடமகன் தாம் முன்பு இருந்த இடத்திற்கு ஏறிச் செல்வதை நீங்கள் கண்டால் அது உங்களுக்கு எப்படி இருக்கும்?63வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன.64அப்படியிருந்தும் உங்களுள் சிலர் என்னை நம்பவில்லை 'என்றார். நம்பாதோர் யார், யார் என்பதும் தம்மைக் காட்டிக்கொடுக்கவிருப்பவன் யார் என்பதும் இயேசுவுக்குத் தொடக்கத்திலிருந்தே தெரிந்திருந்தது.65மேலும் அவர்,' இதன் காரணமாகத்தான் ″ என் தந்தை அருள் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது ″ என்று உங்களுக்குக் கூறினேன் 'என்றார்.
பேதுருவின் அறிக்கை
66அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரை விட்டு விலகினர். அன்று முதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை.67இயேசு பன்னிரு சீடரிடம்,' நீங்களும் போய் விட நினைக்கிறீர்களா? 'என்று கேட்டார்.68சீமோன் பேதுரு மறுமொழியாக, ' ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.69நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். அதை நம்புகிறோம் ' என்றார்

(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில் , இயேசுவின் உண்மையான இறைபணியை பலர் கேட்டும், அவரை பார்த்தும் இருப்பவர்கள் , இயேசுவை ஏற்று கொள்ளாததை நாம் பார்க்கிறோம். எப்படி அவர்கள் இயேசுவின் செய்தியை சரியாக எடுத்து கொள்ள வில்லை ?”நான் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன. “ என்று அவர் கூறியதை , வெறும் வார்த்தைகளாக அவர்களுக்கு தெரிந்து இருந்தது, ஆனால், அதன் உள் அர்த்தம் அவர்கள் தெரிந்து கொள்ளவில்லை. மேலும், அவரது வாழ்வையே நமக்காக கொடுத்தார் என்பதை அவர்கள் மறந்து விட்டனர். அதன் மூலம் அவர் நமக்கு , குணமான நல்ல வாழ்க்கையையும், சந்தோசமான வாழ்வும், வெற்றியின் வாழ்வும், நித்திய வாழ்வும் அவர்களுக்கு கிடைக்கும் என்பதை மறந்து விட்டனர்.


அவர்கள் இயேசுவை தேய்விகமாக பார்க்கவில்லை , அவரை மனிதனாக பார்த்தார்கள். மெசியாவாக பார்கவில்லை, உடல் நோய்கள் குணமாக்கும் தெய்வமாக அவரை பார்க்கவில்லை, ஆன்மாவை காப்பாற்றுபவர் என்றும் பார்க்கவில்லை, ரோமானியர்கள் இடமிருந்து தங்களை காப்பாற்றுபவராக பார்த்தார்கள்.

அதனால், அவரின் உடலையும், இரத்தத்தையும் உணவாக உட்கொள்ளுதல் (போன வாரம் நற்செய்தியில் குறிப்பிட்டுள்ளது போல ) , அவர்களின் மனதில் ஒரு குறிப்பாக கூட உணரவில்லை. அவர் வார்த்தைகளில் உள்ள ஆவியும் வாழ்வும் பற்றி அவர்கள் அறிந்து கொள்ள வில்லை. இயேசு அவர்களுக்கு ஒரு வினோதமான ஆளாக தெரிந்தது போல இருக்கிறது.


உண்மயான சீடர்கள் அவாரோடு எப்பொழுது இணைந்து இருந்து இன்னும் அவரிடம் கற்று கொள்ள ஆசைப்பட்டவர்கள் , அவர் என்ன சொன்னார் என்பதை , அறிந்து கொள்ள வில்லை, ஆனால், பரிசுத்த ஆவியானவர் அவரின் வார்த்தைகளில் இருந்ததை அறிந்து கொண்டனர்.

இயேசு உங்களிடம் வேறொரு மனிதர் மூலம் வந்துள்ளார், ஆனால், நீங்கள் அவரை அறிந்து கொள்ளாமல் எத்தனை முறை இருந்துள்ளீர்கள் ? ஏனெனில், உங்களிடம் வந்தவரை நீங்கள் மனிதராக மட்டுமே பார்த்திர்கள் . கிறிஸ்து அல்லாத அந்த மனிதரின் பழக்க வழக்கங்களை மட்டுமே நீங்கள் பார்க்கிறிர்கள் ?

ஒவ்வொருவரும் கடவுளை போல படைக்க பட்டிருக்கிறோம். பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு வாழ்வு கொடுக்க வில்லை என்றால், அவர்கள் இப்போது வாழ்ந்து கொண்ட்டிருக்க மாட்டார்கள் . மற்ற மதத்தை சார்ந்தவர்களும் , இயேசு அவர்களிடம் இருக்கிறார். வெற்றியான வாழ்வு வாழ, நாம் இயேசுவை இன்னும் ஆழ்ந்து அறிந்து கொள்ள ஒவ்வொருவரிடமும் மறைந்து இருக்கும் இயேசுவை பார்க்க வேண்டும்.

திருப்பலியில் இயேசு திவ்ய நற்கருணையில் இருப்பதை உங்களால் அறிந்து கொள்ள ஏதாவது கஷ்டமாக இருக்கிறதா ? இயேசு மற்றவர்கள் மூலம் உங்களிடம் வருவதை ஒவ்வொரு முறையும் பயிற்சி கொள்ளுங்கள். அப்போது , திவ்ய நற்கருணையை நீங்கள் புதிய வழியில் பார்ப்பிர்கள் .


© 2015 by Terry A. Modica

No comments: