Friday, April 28, 2017

ஏப்ரல் 30 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஏப்ரல் 30 ,2017   ஞாயிறு நற்செய்தி மறையுரை
பாஸ்கா காலத்தின் 3ம் ஞாயிறு
Acts 2:14, 22-33
Ps 16:1-2, 5, 7-11
1 Peter 1:17-21
Luke 24:13-35
லூக்கா நற்செய்தி


எம்மாவு வழியில் சீடரைச் சந்தித்தல்
(மாற் 16:12 - 13)
13அதே நாளில் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர்⁕ தொலையிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அவ்வூரின் பெயர் எம்மாவு.

14அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொண்டே சென்றார்கள்.
15இப்படி அவர்கள் உரையாடிக் கொண்டும் வினவிக்கொண்டும் சென்றபோது, இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்து சென்றார்.

16ஆனால் அவர் யார் என்று அறிந்து உணர முடியாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன.

17அவர் அவர்களை நோக்கி
வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பது என்ன?”
 என்று கேட்டார். அவர்கள் முகவாட்டத்தோடு நின்றார்கள்.
18அவர்களுள் கிளயோப்பா என்னும் பெயருடைய ஒருவர் அவரிடம் மறுமொழியாக, “எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்குமட்டும்தான் இந்நாள்களில் நிகழ்ந்தவை தெரியாதோ!என்றார்.

19அதற்கு அவர் அவர்களிடம்
என்ன நிகழ்ந்தது?”
 என்று கேட்டார். அவர்கள் அவரிடம், “நாசரேத்து இயேசுவைப் பற்றியேதான் பேசுகின்றோம். அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார்.

20-21அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் தலைமைக் குருக்களும் ஆட்சியாளர்களும் அவருக்கு மரணதண்டனை விதித்துச் சிலுவையில் அறைந்தார்கள். இவையெல்லாம் நிகழ்ந்து இன்றோடு மூன்று நாள்கள் ஆகின்றன.

22ஆனால் இன்று எங்களைச் சேர்ந்த பெண்களுள் சிலர் எங்களை மலைப்புக்குள்ளாக்கினர்; அவர்கள் விடியற்காலையில் கல்லறைக்குச் சென்றார்கள்;

23அவருடைய உடலைக் காணாது திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடியிருக்கிறார் என்று அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள்.

24எங்களோடு இருந்தவர்களுள் சிலரும் கல்லறைக்குச் சென்று, அப்பெண்கள் சொன்னவாறே இருக்கக் கண்டனர். ஆனால் அவர்கள் இயேசுவைக் காணவில்லைஎன்றார்கள்.
25இயேசு அவர்களை நோக்கி
அறிவிலிகளே! இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே!
26
மெசியா தாம் மாட்சி அடைவதற்குமுன் இத்துன்பங்களைப் பட வேண்டுமல்லவா!
 என்றார்.

27மேலும் மோசேமுதல் இறைவாக்கினர்வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார்.
28அவர்கள் தாங்கள் போக வேண்டிய ஊரை நெருங்கி வந்தார்கள். அவரோ அதற்கு அப்பால் போகிறவர் போலக் காட்டிக் கொண்டார்.
29அவர்கள் அவரிடம், “எங்களோடு தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்றுஎன்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள். அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார்.
30அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார்.
31அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார்.
32அப்போது, அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, “வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?” என்று பேசிக் கொண்டார்கள்.

33அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அங்கே பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் குழுமியிருக்கக் கண்டார்கள்.

34அங்கிருந்தவர்கள், “ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார்என்று சொன்னார்கள்.

35அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.

(thanks to www.arulvakku.com)

இயேசுவை எப்படி காண்பது
இன்றைய நற்செய்தியில் வரும் இரண்டு சீடர்கள், இயேசுவை அறிந்து கொள்ளவில்லை. இயேசு அப்பத்தை பிட்டு , அவர்களுடன் நற்செய்தியை பகிர்ந்து கொண்ட பின்பு தான் அறிந்து கொண்டனர். இது இரண்டு வகையாக முறைபடுத்தப்பட்ட செயல் முறை ஆகும்.
முதலில் இயேசு இறைவார்த்தைகளை விளக்கி கூறிய பொழுது, அவர்கள் இருதயம் மட்டும் அவரை தெரிந்து கொண்டது.  (நம் உள்ளம் பற்றி எரியவில்லையா? ) . ஆனால் அவர்கள் கண்களோ இயேசுவின் உண்மையான உருவத்தை பார்க்கவில்லை. இயேசு அப்பத்தை எடுத்து, ஆசிர்வதித்து , பிட்டு கொடுக்கும் வரை, அவர்கள் இயேசுவின் உண்மையான உருவத்தை கண்டு பிடிக்க முடியவில்லை.

நாம் இன்று திருப்பலி  கொண்டாடும் பொழுது, நாமும் இயேசுவோடு அதே பயணத்தை தொடர்கிறோம். முதலில் நாம் வாசகங்களை கேட்கிறோம் , இதில் நற்செய்தியையும் பிரசங்கத்தையும் கேட்கிறோம், இந்த நேரத்தில் நம் உள்ளம் இயேசுவுக்காக திறக்கிறது.

நன்றாக பயிற்சி பெற்ற நற்செய்தி வாசிப்பவர், நற்செய்தி வாசிக்கும் பொழுது , அதன் அர்த்தம் புரியும் படி, நன்றாக சில வசங்களை அழுத்தம் கொடுத்து வாசிப்பார்கள், அதன் மூலம் நாம் அந்த வார்த்தைகளில் கடவுளை அறிந்து கொள்வோம். குருக்கள் நம் உள்ளம் பற்றி எரியும் அளவிற்கு அந்த வாசங்களுக்கு உரிய அர்த்தத்தை கொடுத்து பிரசங்கம் செய்வர். அவர்கள் செய்ய வேண்டிய நற்செய்தி வாசிப்பிலும், பிரசங்கமும் சரியாக செய்ய வில்லை என்றாலும், இயேசு நம்மிடம் நேரடியாக பேச நம் உள்ளத்தை திறந்து வைக்க வேண்டும்.
அதன் பிறகு காணிக்கை மற்றும் நற்கருணை சடங்குகள் தொடர்கின்றன. குருவானவர், அப்பத்தையும் திராட்சை ரசத்தையும் புனித்படுத்தும் பொழுது, இயேசுவே அதனை செய்கிறார். குருவின் கைகளும், அவரது குரலும் இயேசுவினுடையது. அந்த எம்மாவுவில் இரண்டு சிடர்களுக்கும் செய்ததை இயேசுவே நமக்கும் செய்கிறார்.
திருப்பலியின் முதல் பகுதியிலேயே நாம் நம் உள்ளத்தை திறந்து விட்டால், தொடர்ந்து கவனத்துடன் அனைத்து பகுதிகளிலும் ஈடுபட்டால், நாம் வெறும் ரொட்டியும் திராட்சை ரசமாக பார்க்க மாட்டோம். அதை விட மேலாக நாம் இயேசுவை பார்ப்போம் . அவரை நம் உள்ளத்திலும் , ஞானத்திலும் அறிந்து கொள்வோம். இதற்கும் மேலாக , எல்லா சந்தேகங்களும் தீர உயிர்த்த இயேசு தான் திவ்ய நற்கருணையில் இருக்கிறார் என்று தெரிந்து கொள்வோம்.

© 2017 by Terry A. Modica

No comments: