Saturday, October 29, 2011

30, அக்டோபர், 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

30, அக்டோபர், 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 31ம் ஞாயிறு
Mal 1:14b-2:2b, 8-10
Ps 131:1-3
1 Thes 2:7b-9, 13
Matt. 23:1-12

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 23

மறைநூல் அறிஞர், பரிசேயர் கண்டிக்கப்படல்
(மாற் 12:38 - 40; லூக் 11:37 - 52; 20:45 - 47)
1 பின்பு இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது:2 ' மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர்.3 ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள்.4 சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக் கூட முன்வரமாட்டார்கள்.5 தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்; தங்கள் மறைநூல் வாசகப் பட்டைகளை அகலமாக்குகிறார்கள்; அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறார்கள். 6 விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகின்றார்கள்;7 சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் ரபி என அழைப்பதையும் விரும்புகிறார்கள். 8 ஆனால் நீங்கள் ' ரபி ' என அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்குப் போதகர் ஒருவரே. நீங்கள் யாவரும் சகோதரர், சகோதரிகள்.9 இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார்.10 நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்.11உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும்.12 தம்மைத்தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்
(thanks to www.arulvakku.com)


"இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார்" இன்றைய நற்செய்தியில் உள்ள இந்த வசனத்தை வைத்து கொண்டு, ப்ராடஸ்டன்ட் கிறிஸ்தவர்கள் கத்தோலிக்கர்களை , அவர்கள் குருவானவர 'தந்தை' என அழைப்பதால், கண்டனம் செய்கிறார்கள். இயேசு "இவ்வுலகில் யாரையும் தந்தை என அழைக்காதீர்கள்" என்று கூறுகிறார் அப்படி என்றால், நம்மை பெற்றெடுத்த தந்தையும் சேர்த்தா? சூசையப்பரை இயேசு தந்தை என அழைத்ததில்லையா? இயேசு தச்சு தொழில் கற்று கொண்ட பொழுது, சூசையப்பரிடம் அம்மாவை திருமணம் செய்தவர் யார் என கேட்டிருக்க வாய்ப்பில்லை.
நற்செய்தியில், இயேசு என்ன சொல்ல வருகிறார் என்பதை பார்த்தோமானால், முழு அதிகார்த்தையும் நாம் படிக்க வேண்டும்: எல்லோரையும் சமமாக பார்க்க வேண்டும் என்பதும் அதன் அர்த்தமாகும். நாம் யாரையும் நம்மை விட பெரியவர் என்று நாம் நினைக்க வேண்டியதில்லை என்பதை தான் இயேசு கூற வருகிறார். கடவுள் தான் பெரியவர். அவரை தவிர வேறு யாருமில்லை.

இயேசு இவ்வாறு சொல்கிறார்: "உங்களுள் பெரியவர் உங்களுக்கு தொண்டராக இருக்க வேண்டும்". மேலும் "நீங்கள் பெரியவராக இருக்க விரும்பினால், நாம் எல்லோருக்கும் தொண்டராக இருக்க வேண்டும்" என்று கூறுகிறார். மேலும், இன்றைய போதனையாக, நாம் மற்றவர்களை விட குறைந்தவராக நாம் நினைத்து விட கூடாது. நம் தாழ்வான மனப்பான்மையையும் போக்கவே இவ்வாறு இயேசு கூறுகிறார்.

போப்பாண்டவரை விட நீங்கள் தாழ்வானவர் இல்லை, என்று உங்களுக்கு தெரியுமா? அதனால் இறை சேவை செய்பவர்களுக்கெல்லாம், சேவை செய்பவர் என்று அழைக்கப்படுகிறார். மக்களின் ஊழியர் என்று அழைக்கபடுகிறார். கிறிஸ்துவின் பிரதிநிதியாக , போப் ஆண்டவர், எல்லோருக்கும் ஊழியம் செய்கிறார், திருப்பலி நடத்துவதாக இருந்தாலும், திருச்சபை சட்டதிட்டங்கள் தயாரிப்பதாக இருக்கட்டும், முக்கியமான முடிவாக இருந்தாலும், அவர் மக்களுக்காக செய்யும் இறை சேவை தான்


கடவுள் எவ்வளவு அதிகாரங்கள், குருக்களுக்கும், திருச்சபை தலைவர்களுக்கு கொடுத்திருந்தாலும், எவ்வளவு பணக்காரராக இருந்தாலும், எலோருக்கும் பிடித்தமானவராக இருந்தாலும், எல்லோருமே ஒரே அளவில் தான் கடவுளால் அன்பு செய்யபடுகிறோம். எல்லோருமே கடவுளுக்கு முக்கியமானவர்கள் தான். கடவுளின் கண்கள் மூலமாக நம்மை பார்க்க கற்றுகொண்டால் தான், நமக்கு எவ்வளவு மதிப்பு இருக்கும் என்று தெரியும்.

© 2011 by Terry A. Modica

30, அக்டோபர், 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

30, அக்டோபர், 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 31ம் ஞாயிறு
Mal 1:14b-2:2b, 8-10
Ps 131:1-3
1 Thes 2:7b-9, 13
Matt. 23:1-12

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 23

மறைநூல் அறிஞர், பரிசேயர் கண்டிக்கப்படல்
(மாற் 12:38 - 40; லூக் 11:37 - 52; 20:45 - 47)
1 பின்பு இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது:2 ' மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர்.3 ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள்.4 சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக் கூட முன்வரமாட்டார்கள்.5 தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்; தங்கள் மறைநூல் வாசகப் பட்டைகளை அகலமாக்குகிறார்கள்; அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறார்கள். 6 விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகின்றார்கள்;7 சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் ரபி என அழைப்பதையும் விரும்புகிறார்கள். 8 ஆனால் நீங்கள் ' ரபி ' என அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்குப் போதகர் ஒருவரே. நீங்கள் யாவரும் சகோதரர், சகோதரிகள்.9 இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார்.10 நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்.11உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும்.12 தம்மைத்தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்
(thanks to www.arulvakku.com)


"இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார்" இன்றைய நற்செய்தியில் உள்ள இந்த வசனத்தை வைத்து கொண்டு, ப்ராடஸ்டன்ட் கிறிஸ்தவர்கள் கத்தோலிக்கர்களை , அவர்கள் குருவானவர 'தந்தை' என அழைப்பதால், கண்டனம் செய்கிறார்கள். இயேசு "இவ்வுலகில் யாரையும் தந்தை என அழைக்காதீர்கள்" என்று கூறுகிறார் அப்படி என்றால், நம்மை பெற்றெடுத்த தந்தையும் சேர்த்தா? சூசையப்பரை இயேசு தந்தை என அழைத்ததில்லையா? இயேசு தச்சு தொழில் கற்று கொண்ட பொழுது, சூசையப்பரிடம் அம்மாவை திருமணம் செய்தவர் யார் என கேட்டிருக்க வாய்ப்பில்லை.
நற்செய்தியில், இயேசு என்ன சொல்ல வருகிறார் என்பதை பார்த்தோமானால், முழு அதிகார்த்தையும் நாம் படிக்க வேண்டும்: எல்லோரையும் சமமாக பார்க்க வேண்டும் என்பதும் அதன் அர்த்தமாகும். நாம் யாரையும் நம்மை விட பெரியவர் என்று நாம் நினைக்க வேண்டியதில்லை என்பதை தான் இயேசு கூற வருகிறார். கடவுள் தான் பெரியவர். அவரை தவிர வேறு யாருமில்லை.

இயேசு இவ்வாறு சொல்கிறார்: "உங்களுள் பெரியவர் உங்களுக்கு தொண்டராக இருக்க வேண்டும்". மேலும் "நீங்கள் பெரியவராக இருக்க விரும்பினால், நாம் எல்லோருக்கும் தொண்டராக இருக்க வேண்டும்" என்று கூறுகிறார். மேலும், இன்றைய போதனையாக, நாம் மற்றவர்களை விட குறைந்தவராக நாம் நினைத்து விட கூடாது. நம் தாழ்வான மனப்பான்மையையும் போக்கவே இவ்வாறு இயேசு கூறுகிறார்.

போப்பாண்டவரை விட நீங்கள் தாழ்வானவர் இல்லை, என்று உங்களுக்கு தெரியுமா? அதனால் இறை சேவை செய்பவர்களுக்கெல்லாம், சேவை செய்பவர் என்று அழைக்கப்படுகிறார். மக்களின் ஊழியர் என்று அழைக்கபடுகிறார். கிறிஸ்துவின் பிரதிநிதியாக , போப் ஆண்டவர், எல்லோருக்கும் ஊழியம் செய்கிறார், திருப்பலி நடத்துவதாக இருந்தாலும், திருச்சபை சட்டதிட்டங்கள் தயாரிப்பதாக இருக்கட்டும், முக்கியமான முடிவாக இருந்தாலும், அவர் மக்களுக்காக செய்யும் இறை சேவை தான்


கடவுள் எவ்வளவு அதிகாரங்கள், குருக்களுக்கும், திருச்சபை தலைவர்களுக்கு கொடுத்திருந்தாலும், எவ்வளவு பணக்காரராக இருந்தாலும், எலோருக்கும் பிடித்தமானவராக இருந்தாலும், எல்லோருமே ஒரே அளவில் தான் கடவுளால் அன்பு செய்யபடுகிறோம். எல்லோருமே கடவுளுக்கு முக்கியமானவர்கள் தான். கடவுளின் கண்கள் மூலமாக நம்மை பார்க்க கற்றுகொண்டால் தான், நமக்கு எவ்வளவு மதிப்பு இருக்கும் என்று தெரியும்.

© 2011 by Terry A. Modica

Friday, October 21, 2011

23 அக்டோபர் 2011, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

23 அக்டோபர் 2011, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 30ம் ஞாயிறு
Ex 22:20-26
Ps 18:2-4, 47, 51
1 Thes 1:5c-10
Matt 22:34-40

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 22

முதன்மையான கட்டளை
(மாற் 12:28 - 34; லூக் 10:25 - 28)
34 இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர்.35 அவர்களிடையே இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன்,36 ' போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது? ' என்று கேட்டார்.37அவர், ' உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து. ' 38 இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை.39 ' உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக ' என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை.40 திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன ' என்று பதிலளித்தார்.
(thanks to www.arulvakku.com)


இன்றைய ஞாயிறின் நற்செய்தி, நம்மையும் , நமது சகோதரர்களையும் அன்பு செய்யாமல், கடவுளை அன்பு செய்ய முடியாது என்பதனை நமக்கு நினைவுபடுத்துகிறது.


நமது முழு உள்ளத்தோடும், ஆண்மாவோடும், எல்லா நேரங்களிலும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் கடவுளை அன்பு செய்ய நமக்கு கடினமாக இருந்தால், நாம், நமது நேரத்தை நமது சுய தேவைகளுக்காகவும், மற்றவர்களுக்காகவும், நம் திட்டங்களுக்காகவும் செலவழிக்கிறோம்.


கண்டிப்பாக நாம் மற்றாவர்களை அன்பு செய்ய அவர்களோடு நேரம் செலவிட வேண்டும். நம் தேவைகளுக்காகவும் நாம் நேரம் ஒதுக்க வேண்டும், அதன் மூலம் நாம் நம்மை அன்பு செய்வது போல மற்றாவர்களை அன்பு செய்ய முடியும். நமது தேவைகளை நாம் தான் செய்து கொள்ள வேண்டும். நம்மிடம் அதிகமாக இருந்தால் தான், மற்றவர்களோடு அதனை பகிர்ந்து கொள்ள முடியும், போதுமான ஆற்றல், உற்சாகம், இரக்கம், பொறுமை, இன்னும் பல நமக்கு தேவயாக இருக்கிறது. அதே போல நாம் நம்மையே , நம் தேவைகளையே பார்த்து கொண்டிருந்தால், மற்றவர்களின் தேவைகளை நாம் ஒதுக்கி தள்ளிவிடுவோம்.

அதனால் இப்போது ஒரு கேள்வி எழுகிறது: எதை முதலில் செய்ய வேண்டும், எதை அடுத்து செய்ய வேண்டும்: மாறாக, கடவுளுக்கு எவ்வளவு நேரம் செலவிட வேண்டும்? நமக்கு எவ்வளவு நேரம் செலவிடவேண்டும்? மற்றவர்களுக்காக நாம் எவ்வளவு நேரம் செலவிடவேண்டும், தியாகம் செய்ய வேண்டும் ?

கடவுளை முதலில் வைத்து, அவரோடு கூட உள்ள உறவிற்கு முதல் வாய்ப்பாக கொடுத்தால், நமக்கு சரியாக எதற்கு எப்பொழுதெல்லாம் நேரம் செலவிட வேண்டும் என்று தெரியும். கடவுளோடு உள்ள உறவு தான், நம்மில் இல்லாத தேவைகளை பூர்த்தி செய்யும். கடவுளோடு உள்ள நட்புறவு தான், மற்றவர்கள் மேல் அன்பை பகிர கஷ்டமாக இருந்தாலும் , நமக்கு உற்சாகம் தந்து மற்றவர்களை அன்பு செய்ய வைக்கும்.கடவுளோடு நாம் முழு நாளும் கடவுளோடு இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.


கடவுளை நம்பியே, அவரை சார்ந்து இருந்தால், மற்றவர்களையும், நம்மையும் நம்மால் அன்பு செய்ய முடியும். அவருடைய வழிகாட்டுதலுக்காக நாம் அவரிடம் வேண்டினால், குணப்படுத்த வேண்டினால், ஆற்றல் கொடுக்க வேண்டினால், முழு உள்ளத்தோடும், முழு ஆண்மாவோடும் அவரை அன்பு செய்தால், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணீத்துளியும் அன்புடன் இருந்தால், நம்மால் நம்மையும் , மற்றவர்களையும் அன்பு செய்ய முடியும்.

© 2011 by Terry A. Modica

Friday, October 14, 2011

அக்டோபர் 16, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

அக்டோபர் 16, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 29ம் ஞாயிறு
Is 45:1, 4-6
Ps 96:1, 3-5, 7-10
1 Thes 1:1-5b
Matt 22:15-21

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 22
சீசருக்கு வரி செலுத்துதல்
(மாற் 12:13 - 17; லூக் 20:20 - 26)
15 பின்பு பரிசேயர்கள் போய் எப்படி இயேசுவைப் பேச்சில் சிக்க வைக்கலாமெனச் சூழ்ச்சி செய்தார்கள்.16 தங்கள் சீடரை ஏரோதியருடன் அவரிடம் அனுப்பி, ' போதகரே, நீர் உண்மையுள்ளவர்; எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கேற்பக் கற்பிப்பவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர் என்பது எங்களுக்குத் தெரியும்.17 சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா? நீர் என்ன நினைக்கிறீர் என எங்களுக்குச் சொல்லும் ' என்று அவர்கள் கேட்டார்கள்.18 இயேசு அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்து கொண்டு, ' வெளிவேடக்காரரே, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்?19 வரி கொடுப்பதற்கான நாணயம் ஒன்றை எனக்குக் காட்டுங்கள் ' என்றார். அவர்கள் ஒரு தெனாரியத்தை அவரிடம் கொண்டு வந்தார்கள்.20 இயேசு அவர்களிடம், ' இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை? ' என்று கேட்டார்.21 அவர்கள், ' சீசருடையவை ' என்றார்கள். அதற்கு அவர், ' ஆகவே சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள் ' என்று அவர்களிடம் கூறினார்.22 இதைக் கேட்ட அவர்கள் வியந்து, அவரை விட்டுப் போய்விட்டார்கள்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், இயேசு "நீங்கள் வரி கொடுக்கும் பொற்காசினில் பொறிக்கப்பட்டுள்ள உருவம் யாருடையது" என்று கேட்கிறார். இதனை வைத்து உங்கள் இதயத்தில் ஒரு உருவத்தை செதுக்க நமக்கு போதனை செய்கிறார். நமது இதயம் கடவுளுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்.
ரோமானியர்கள் அவர்களுடைய அரசர்கள் தான் தெய்வம் என்று நினைத்திருந்தனர். அதனால், ரோமானியார்களின் பொற்காசுகளை வைத்திருந்தால், அவர்களின் மனித கடவுளை தாம் வைத்திருப்பதாக அவர்கள் நினைத்து கொண்டிருந்தனர். பரிசேயர்களுக்கு இயேசுவிடம் கேள்வி கேட்கும்போது, இந்த ரோமானியக் கடவுளை பத்தி தெரியும்.

சீசருக்கு வரி கொடுப்பது என்பது , அரசிற்கு வரி கொடுப்பதை விட அதற்கு மேல் பரிகாரமாக கொடுக்கிறோம் என்று நினைத்து கொண்டிருந்தார்கள். அவர்கள் சமயத்தோடு வரி கொடுப்பதை இனைத்திருந்தார்கள். அவர் யூதர்களுக்கு எதிராக பேசவேண்டும் என்றும், வேறு நாட்டின் அரசாங்கத்தையும், அதன் வரி கொடுமையையும் இயேசு மெசியாவாக விரட்டி அடிக்க வேண்டும் என்றும் அவர்கள் விரும்பினர்.
நாம் கடவுளின் மக்களாக இருந்தால், இயேசு தான் நம் இதயத்தில் பொறிக்கப்பட்டிருக்கும். பாவத்தின் அழிவிலுருந்து நம்மை மெசியாதான் காப்பாற்றினார். நமது பாவங்களினால் உண்டான அழ்விலிருந்து இயேசு நம்மை காப்பாற்ற நாம் அவருக்கு அனுமதி அளித்தோம்.
மற்றவர்கள் உங்களை பார்க்கும்பொழுது, இயேசுவை தான் உங்களில் அவர்கள் பார்க்கினறனரா? இயேசு உங்கள் இதயத்தில் பொறிக்கப்பட்டிருப்பதை பார்க்கிறார்களா? ஓரளவிற்கு இயேசுவை பார்ப்பார்கள், அதே அளவிற்கு நீங்கள் இறையரசோடு இணைந்து உள்ளீர்கள்!

© 2011 by Terry A. Modica

Friday, October 7, 2011

அக்டோபர் 9, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

அக்டோபர் 9, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 28ம் ஞாயிறு

Is 25:6-10a
Ps 23:1-6
Phil 4:12-14,19-20
Matt 22:1-14


மத்தேயு நற்செய்தி


அதிகாரம் 22


திருமண விருந்து உவமை
(லூக் 14:15 - 24)
1 இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து உவமைகள் வாயிலாகப் பேசியது:2 ' விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்தினார்.3 திருமணத்திற்கு அழைப்புப் பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார். அவர்களோ வர விரும்பவில்லை.4 மீண்டும் அவர் வேறு பணியாளர்களிடம், ' நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். காளைகளையும் கொழுத்த கன்றுகளையும் அடித்துச் சமையல் எல்லாம் தயாராயுள்ளது. திருமணத்திற்கு வாருங்கள் ' என அழைப்புப் பெற்றவர்களுக்குக் கூறுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.5 அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார்; வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார்.6 மற்றவர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள்.7 அப்பொழுது அரசர் சினமுற்றுத் தம் படையை அனுப்பி அக்கொலையாளிகளைக் கொன்றொழித்தார். அவர்களுடைய நகரத்தையும் தீக்கிரையாக்கினார்.8 பின்னர் தம் பணியாளர்களிடம், ' திருமண விருந்து ஏற்பாடாகி உள்ளது. அழைக்கப் பெற்றவர்களோ தகுதியற்றுப் போனார்கள்.9 எனவே நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள் ' என்றார்.10 அந்தப் பணியாளர்கள் வெளியே சென்று வழியில் கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் கூட்டி வந்தனர். திருமண மண்டபம் விருந்தினரால் நிரம்பியது.11 அரசர் விருந்தினரைப் பார்க்க வந்த போது அங்கே திருமண ஆடை அணியாத ஒருவனைக் கண்டார்.12 அரசர் அவனைப் பார்த்து, ' தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்? ' என்று கேட்டார். அவனோ வாயடைத்து நின்றான்.13 அப்போது அரசர் தம் பணியாளர்களிடம், ' அவனுடைய காலையும் கையையும் கட்டிப் புறம்பே உள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும் ' என்றார்.14 இவ்வாறு அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர். '
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தி, போலியானவர்களின் ப்ரச்னையை பற்றி கூறுகிறது. அது என்னவென்றால், சிலர் இயேசுவின் நட்பை பெற, திருப்பலிக்கு ஒழுங்காக செல்வதும், ஆனால், கடவுளோடு உண்மையான, இயல்பான நட்புடன் வாழ அவர்கள் முயல்வதில்லை.

உங்களுக்கு ஒரு சிலரின் பழக்க வழக்கங்கள் தெரிந்திருக்கும்: சிலர், அவர்களுக்கு தேவையான விசயங்கள் பயன் பெறும் வரை நம்மோடு நட்பாக இருப்பார்கள். அவர்களுக்கு தோதாக இருக்கும்பொழுது தான் நல்ல விசயங்களை செய்வார்கள். கத்தோலிக்க நெறிமுறைகளை திருப்பலியில் மட்டும் தான் பின் பற்றுவார்கள், ஆனால் வீட்டிலோ அவர்கள் சிறிது நேரம் கூட ஜெபம் செய்வதில்லை. அவர்கள் விசுவாசம் ஆழமில்லாத, கொஞ்சமாக இருப்பதால், திருப்பலிக்கு கூட அவர்கள் செல்ல முயல்வதில்லை. குருவானவர் பாவம் செய்யும்பொழுது, அவர்கள் கத்தோலிக்கத்தை விட்டு வெளியே செல்கிறார்கள். அவர்கள் உங்களோடு கொண்டுள்ள உறவில் மணந்திரும்புதல் தேவைபட்டால், அவர்கள் உங்களை ஒதுக்கி தள்ளுகிறார்கள்.


கடவுளோடு உண்மையான நட்புறவை கொண்டுள்ளவர்கள் மேல் கடவுளின் ப்ரசன்னமும் , அவர்கள் மற்றவர்களுக்கு கொடுக்கும் கடவுளின் அன்பும் , ஆசிர்வாதமும் நமக்கு தெரியும். அதுவும் அன்பே செய்ய முடியாதவர்களிடமும், அன்பு காட்டும்பொழுது நமக்கு தெரியும்.

போலியானவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று இயேசு இன்றைய நற்செய்தியில் கூறுகிறார். விருந்தில் கலந்து கொள்ள எல்லோருக்கும் அழைப்பு கொடுக்கபட்டது, ஆனால் அவர்கள் கடவுளின் குழந்தகளாக சந்தோசமாகவே இருக்க விரும்புகிறார்கள், கடவுளின் அன்பை மற்றவர்களொடு பகிர்ந்து கொள்ள வெண்டும் என்கிற பொழுது, அதன் கடினத்தை ஏற்று கொள்ள மறுக்கிறார்கள் , கடவுள் அவர்களுக்கு ஒரு எல்லையை வைத்துள்ளார்.

நீங்கள் விருந்துக்கு அழைத்தவர்கள் பற்றி எண்ணி பாருங்கள். அவர்களோடு நட்பு கடவுளோடு இனைந்த , மிகவும் சிறப்பான நட்பாக இருக்கும். ஆனால், அவர்களோ, அவர்களின் தேவைகேற்ப, அந்த நட்புறவை தீமையான பயனுக்கு உபயோக்கிறார்கள். நாம் அவர்களை அன்பு செய்ய வேண்டும் ஆனால் அதனால் எந்த கெடுதலும் நடந்து விட கூடாது. அந்த நட்புறவை நல்ல உறவாக மாற்ற நாம் முயற்சி செய்ய வெண்டும். மற்றவர்கள் அதனை செய்யாத பொழுது, அவர்கள் இந்த நட்புறவை உதறி தள்ளுகிறார்கள்.

அவர்கள் மணந்திரும்ப , மண மாற்றத்திற்கும் , குணப்படுத்தவும், கடவுள் நம்மை எல்லாவிதங்களிலும் முயற்சி செய்ய வேண்டும் என்று கேட்கிறார். அந்த சிலுவையை நாம் சுமக்க வேண்டும் என்று கடவுள் அழைக்கிறார். எனினும், நமது எல்லைகள் காக்கப்படவேண்டும். நமது முயற்சிகள் பயன் தராவிட்டால், நாம் நமது வழியில் செல்ல வேண்டும் என்று கடவுள் சொல்கிறார்.
மேலும், எப்பொழுது, கடவுளின் உண்மையான நட்புறவுடன் இருப்பவர்களோடு நமது நட்புறவு தொடர நாம் செல்வோம்.

© 2011 by Terry A. Modica

Friday, September 30, 2011

அக்டோபர் 2, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

அக்டோபர் 2, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 27ம் ஞாயிறு
Isaiah 5:1-7
Ps 80:9, 12-16, 19-20 (with Is 5:7a)
Phil 4:6-9
Matt 21:33-43

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 21


கொடிய குத்தகைக்காரர் உவமை
(மாற் 12:1 - 12; லூக் 20:9 - 19)
33 ″ மேலும் ஓர் உவமையைக் கேளுங்கள்: நிலக்கிழார் ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, சுற்றிலும் வேலி அடைத்து அதில் பிழிவுக்குழி வெட்டி ஒரு காவல் மாடமும் கட்டினார்; பின்பு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். 34பழம் பறிக்கும் காலம் நெருங்கி வந்த போது அவர் தமக்குச் சேர வேண்டிய பழங்களைப் பெற்று வரும்படி தம் பணியாளர்களை அத்தோட்டத் தொழிலாளர்களிடம் அனுப்பினார்.35 தோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து, ஒருவரை நையப் புடைத்தார்கள்; ஒருவரைக் கொலை செய்தார்கள்; ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள்.36 மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களைவிட மிகுதியான வேறு சில பணியாளர்களை அனுப்பினார். அவர்களுக்கும் அப்படியே அவர்கள் செய்தார்கள்.37 தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டு அவரை இறுதியாக அவர்களிடம் அனுப்பினார்.38 அம்மகனைக் கண்ட போது தோட்டத் தொழிலாளர்கள், ' இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்று போடுவோம்; அப்போது இவன் சொத்து நமக்குக் கிடைக்கும் ' என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.39 பின்பு அவர்கள் அவரைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றுபோட்டார்கள்.40 எனவே, திராட்சைத் தோட்ட உரிமையாளர் வரும்போது அத்தொழிலாளர்களை என்ன செய்வார்? ' என இயேசு கேட்டார்.41 அவர்கள் அவரிடம், ' அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து விடுவார்; உரிய காலத்தில் தமக்கு சேர வேண்டிய பங்கைக் கொடுக்க முன்வரும் வேறு தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார் ' என்றார்கள்.42 இயேசு அவர்களிடம், ' கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது; நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! ' என்று நீங்கள் மறைநூலில் ஒருபோதும் வாசித்தது இல்லையா?43 எனவே உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்
(thanks to www.arulvakku.com)

"இறையரசு யார் அதற்காக உழைத்து கணி தருகிறார்களோ அவர்களிடமே கொடுக்கப்படும்" என்பதுதான் இன்றைய நற்செய்தியின் மையக்கருத்தாக இயேசு நமக்கு கொடுக்கிறார். நாம் இன்னும் இப்பூமியில் இருக்கும்பொழுது இறையரசு என்பது என்ன? என்ன மாதிரியான கணிகளை நாம் இப்பூமியிலிருந்து தரவேண்டும்?
கிறிஸ்துவை போல நாமும் எந்த செயலையும் செய்து அதன் விளைவாக தரும் கணியுடன், நாம் மோட்சத்தை நோக்கிய நமது பயணத்திற்கு அது உதவுகிறது. கிறிஸ்து அன்பு செய்வது போல நாமும் அன்பு செய்து, அவரை போல நாமும் மன்னித்து, மற்றவர்களுக்கு இறைசேவை செய்து, உண்மையை எடுத்துரைத்து, மணக்காயங்களுக்கு மருந்து போட்டு நமது வாழ்வை தொடர்ந்தோமானால், நாம் இறையரசில் இப்பொழுதே வாழ்கிறோம்.

நான் கத்தோலிக்கர்களை பார்த்து 'அவர்கள் மோட்சத்திற்கு போவார்களா? ' என்று கேட்கும்பொழுது, பலர் நிச்சயமற்ற நிலையில் இருக்கிறார்கள், கிறிஸ்துவின் மீட்பை, இனிமேல் நடக்க இருக்கும், சாவான பாவத்தினால் அவர்க்ள் பெறாமல் போய்விடுவார்களோ என்றும், அல்லது 'ஆம் நிச்சயம் மோட்சத்திற்கு போவோம் ' என்று சொல்வது ஆடம்பரமாகிவிடும் என்றோ அவர்கள் நினைக்கின்றனர்.

நாம் கிறிஸ்துவை போல முழுதாக நடந்து கொள்வதில்லை. நம்மில் பலர், உத்தரிக்கிற ஸ்தலத்தில், நமது பாவங்களை, மோட்சத்திற்கு ஒவ்வாத நம்மில் இருக்கும் குறைகளை முழுமையாக அகற்றிவிட்டு , மோட்சத்திற்கு செல்வோம். இந்த சுத்தப்படுத்துதல் முடிந்த உடன், கடவுளின் முழு மோட்சத்தில் நாமும் வாழ்வோம். நாம் உத்தரிக்கிறஸ்தலத்திற்கு சென்று விட்டால், கண்டிப்பாக நாம் மோட்சத்திற்கு செல்வோம். நாம் கிறிஸ்துவை போல இருக்க வேண்டும் என்ற நமது ஆசை, உண்மையாக இருந்தால், கண்டிப்பாக நமக்கு சாவான பாவங்கள் நடக்க போவதில்லை. கண்டிப்பாக நமது இறப்பின் போது , இயேசுவை அனைத்து அவரோடு மோட்சத்தின் பயனத்தை தொடர்வோம்.
கிறிஸ்துவிற்காக நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், அவர் மேல் உள்ள அன்பினால் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையும், நீங்கள் இறையரசில் வாழ்ந்து கொண்டும், வாழ்வும் போகிறீர்கள்.

© 2011 by Terry A. Modica

Saturday, September 24, 2011

செப்டம்பர் 25, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

செப்டம்பர் 25, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 26ம் ஞாயிறு

Ezek 18:25-28
Ps 25:4-5, 8-10, 14
Phil 2:1-11
Matt 21:28-32

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 21


இரு புதல்வர்கள் உவமை
28 மேலும் இயேசு, ' இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், ' மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய் ' என்றார்.29 அவர் மறுமொழியாக, ' நான் போக விரும்பவில்லை ' என்றார். ஆனால் பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார்.30 அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார். அவர் மறுமொழியாக, ' நான் போகிறேன் ஐயா! ' என்றார்; ஆனால் போகவில்லை.31 இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்? ' என்று கேட்டார். அவர்கள் ' மூத்தவரே ' என்று விடையளித்தனர். இயேசு அவர்களிடம், ' வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.32 ஏனெனில் யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக வரி தண்டு வோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவுமில்லை; அவரை நம்பவுமில்லை ' என்றார்.

(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தி, பக்தியிலும், விசுவாசத்த்லும், சரியாக நடந்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்து கொண்டிருபவர்களுக்கு ஒரு அதிர்ச்சையை கொடுக்கும். ஏனெனில் அவர்கள், கடவுளின் விருப்பத்தை எந்த அளவிற்கு சரியாக செய்கிறார்கள் என்று சுய பரிசோதனை செய்தது கிடையாது. வரி வசூலிப்போடும், விலைமகளிரும், (வெட்ககேடான, அசூத்தமானவர்கள் என்று சமூகம் அவர்களை தூற்றியது) ,சமய அறிஞர்களை விட முன்னே இறையரசிற்கு செல்வார்கள் என்று இயேசு சொல்கிறார்

'அறிஞர்கள்" என்று சொல்லப்படுபவர்களுக்கு இயேசு கேட்ட கேள்விக்கு, பதில் தெரியும் - கடவுளுக்காக "ஆம்" என்று பதில் சொல்வார்கள் - ஆனால், சரியான பதில் சொல்வதற்கும், அவர் என்ன கேட்டோரா, அதனை செய்வதற்கும் வித்தியாசம் - மோட்சத்திற்கும், நரகத்திற்கு இடையே உள்ள ஒரு கோடு போன்றது.

கடவுளோ சரியான பதிலை எதிர்பார்க்கவில்லை; சரியான செயலை தான் எதிர்பார்க்கிறார். திருச்சபையின் போதனைகளை சரியாக பின்பற்ற வேண்டும் என்று கடவுள் சொல்லவில்லை; அன்பினால் ஊக்கப்படுத்தப்பட்ட கீழ்படிதலும், உற்சாகத்துடன் திருச்சபையின் நோக்கத்திற்கு உழைக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார்.
ஒவ்வொரு ஞாயிறும் திருப்பலிக்கு போவதால் என்ன பயன்? திருப்பலி முடிந்தவுடன் வெளியேயும் பரிசுத்த செயல்களால் உங்கள் வாழ்வு தொடரவில்லையென்றால், திருப்பலியின் பயன் என்ன? கோவிலை விட்டு வெளியே இருக்கும் உங்களுக்கு தெரிந்த வர்களுக்கு, திவ்ய நற்கருணையிலும்,திருச்சபையின் சமூகத்திலும் பிரிந்து இருப்பது பாவம் என்று அவர்களுக்கு தெரியாது. அவர்கள் நல்ல செயல்கள் செய்தால், அவர்கள் கடவுள் மேல் உள்ள அன்பினால் செய்கிறார்கள். தினமும் திருப்பலி செல்பவர்களை விட, இவர்கள் தான் இறையரசோடு விரைவில் இனைவார்கள் என்று கடவுள் சொல்லவில்லை.



கடவுளை வேண்டாம் என்று சொல்பவர்களை, நாம் கண்டிக்கும்பொழுது , நம்மை அவர்களோடு ஒப்பீட்டு கொள்கிறோம்- இதை தான் நாம் எக்காலமும் செய்ய கூடாது . ஒப்பீட்டு பார்க்கும்பொழுது ஒன்று நாம் மற்றவர்களோடு பெரியவர்களாக இருப்போம் அல்லது சிறியவர்களாக இருபோம். நாம் சரியாக இருக்கும் நம்மையே ஒப்பீடு செய்து கொள்ள வேண்டும். நாம் எவ்வளவு நெருக்கமாக கடவுளோடு நேற்று இருந்ததை விட இன்று இருக்கிறோம் என்று ஒப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

© 2011 by Terry A. Modica