Saturday, November 8, 2008

8, நவம்பர் 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

8, நவம்பர் 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 32 வது ஞாயிறு

Ezek 47:1-2, 8-9, 12
Ps 46:2-3, 5-6, 8-9
1 Cor 3:9c-11, 16-17
John 2:13-22

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 1

13 யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்;14 கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்;15 அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடு மாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப்போட்டார்.16 அவர் புறா விற்பவர்களிடம், ' இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள் ' என்று கூறினார்.17 அப்போது அவருடைய சீடர்கள். ' உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்துவிடும் ' என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவு கூர்ந்தார்கள்.18 யூதர்கள் அவரைப் பார்த்து, ' இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன? ' என்று கேட்டார்கள்.19 இயேசு மறுமொழியாக அவர்களிடம், ' இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன் ' என்றார்.20 அப்போது யூதர்கள், ' இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பி விடுவீரோ? ' என்று கேட்டார்கள்.21 ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப்பற்றியே பேசினார்.22 அவர் இறந்து உயிருடன் எழுப்பப்பட்டபோது அவருடைய சீடர் அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை நினைவு கூர்ந்து மறைநூலையும் இயேசுவின் கூற்றையும் நம்பினர்.
(thanks to www.arulvakku.com)

நீஙகள் தான் கடவுளுடைய கட்டிடம், என்று இன்றைய இரண்டாவது வாசகத்தில் நாம் படிக்கிறோம். ஏனெனில் யேசு கிறிஸ்து அக்கட்டிடத்தின் அடிக்கல்லாக (அஸ்திவாரம்) இருக்கிறார். நீங்கள் கடவுளின் கோவில். ஏனெனில், பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் வசிக்கிறார்.

பழைய ஏற்பாட்டில், கடவுளுடைய ஆவி ஒவ்வொரு கோவிலின் நடுவிலும், கோவிலின் இதயம் போல உள்ள பரிசுத்ததின் பரிசுத்தமான இடத்தில் வசிப்பதாக கூறுகிறது. அங்கே எந்த மனிதனும் நுழைய முடியாது. ஒவ்வொரு வருடமும், எல்லோருடைய பாவங்களுக்காகவும் பரிகாரம் செய்யும்போது மட்டும் பெரிய குருவானவர் அந்த அறைக்குள் செல்வார்.

இந்த பரிகாரம் செய்யும் நாளைதான், யேசு கிறிஸ்து, தான் ஒரு பெரிய குருவாக இருந்து, தம்மையே பரிகொடுத்து, அந்த நாளை பெரிய வெள்ளி ஆக்கினர். பிறகு அவருடைய ஆவியை அவருடைய சீடர்களின் இதயத்தில் வைத்தார்.

ஆனால், பரிசுத்தத்தின் பரிசுத்தமானவருக்கு நம்முடைய இதயம் எப்போதுமே திறப்பதில்லை. உங்களுடைய வாழ்க்கை எப்போதுமே மேலோங்கியே (அ) எழுச்சியுடன் இருக்கிறதா? ஒரு வேளை, யேசு, உங்கள் மேலோங்கிய வாழ்வை திருப்புகிறாரோ? அதன் மூலம் நீங்கள் முழுமையாக பரிசுத்த ஆவியானவருக்கு உங்களுடைய கதவை திறப்பதற்காக செய்கிறாரோ?

நாம் பரிசுத்த ஆவியானவர் நம்மில் வர, எந்த தடுப்புகளெல்லாம் இருக்கிறதோ அதையெல்லாம், கடவுள் ஒதுக்கியும், திருப்பியும் வைக்க விரும்புகிறார். நமது எந்த ஒரு செயலும், அல்லது எந்த பொருளும், கடவுளரசின் முன்னேற்றத்திற்கு உதவவில்லை என்றால், அது கடவுளின் கோவிலை அசுத்தமாகுதல் ஆகும். யேசு அந்த அசுத்தத்தை துடைக்க விரும்புகிறார்.

இன்றைய முதல் வாசகத்தில், தன்னீர் பரிசுத்த ஆவியை குறிக்கிறது, நாம் நமது உள்ளே இருக்கும் பர்சுத்த ஆவியை மற்றவர்களுக்கு செல்ல அனுமதிக்கும் போது, நாம் நிறைய ஆசிர்வாதங்களை நாம் அதிகமாக்குகிறோம். ஆனால் நமது பாவங்கள் அதை வெளியே செல்ல தடை செய்கிறது. அந்த ஆவியின் பாதை அனையில் உள்ளது போல் தடுக்கபடுகிறது. அதனால் அந்த தண்ணியினால்(பரிசுத்த ஆவி) மின்சார அலை உருவாகிறது. யேசு கிறிஸ்து அந்த அடைப்பை உடைக்க முயல்கிறார். அந்த தடுப்பை பிளந்து பரிசுத்த ஆவியை வெளியே செல்ல முயல்கிறார். கேள்வி என்ன வென்றால்: நாம் யேசுவிற்கு அந்த முயற்சியில் வெற்றி பெற அனுமதிக்கிறோமோ? அல்லது அவரை அந்த முயற்சியில் யேசுவை நம்மை விட்டு விலக சொல்கிறோமோ?

பணம் மாற்றுபவர்கள், திருப்பியும் அவர்கள் கடைகளை வைத்தார்களா? நாம் யேசுவை நம்மை மாற்ற அனுமதிக்க போகிறோமோ? அல்லது பழைய வழியிலெயே செல்ல போகிறோமோ?

நமது இதயம் பரிசுத்த ஆவியானவருக்கு திறந்தால், நாம் விரைவில், நமது ஆசிர்வாதங்களை பெறுவோம். மேலும் இந்த ஆசிர்வாதம், பலருக்கு ஆசிர்வாதங்களாக மாறும்.
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: