Friday, November 28, 2008

30 நவம்பர், 2008, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

30 நவம்பர், 2008, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
திருவருகை கால முதல் ஞாயிறு

Isaiah 63:16b-17, 19b; 64:2-7
Ps 80:2-3, 15-16, 18-19 (with 4)
1 Cor 1:3-9
Mark 13:33-37
மாற்கு நற்செய்தி

அதிகாரம் 13
33 கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில் அந்நேரம் எப்போது வரும் என உங்களுக்குத் தெரியாது.34 நெடும்பயணம் செல்லவிருக்கும் ஒருவர் தம் வீட்டைவிட்டு வெளியேறும்போது தம் பணியாளர் ஒவ்வொருவரையும் அவரவர் பணிக்குப் பொறுப்பாளராக்கி, விழிப்பாயிருக்கும்படி வாயில் காவலருக்குக் கட்டளையிடுவார்.35 அதுபோலவே நீங்களும் விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர் மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும் வேளையிலோ, காலையிலோ எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது.36 அவர் திடீரென்று வந்து நீங்கள் தூங்குவதைக் காணக்கூடாது.37 நான் உங்களுக்குச் சொல்லுவதை எல்லாருக்குமே சொல்கிறேன்; விழிப்பாயிருங்கள். '
(thanks to www.arulvakku.com)



எல்லா பொருள்களும் வைத்திருக்கும் ஒருவருக்கு, கிறிஸ்துமஸ் அன்பளிப்பாக என்ன கொடுப்பீர்கள்?
நமக்கு மிகவும் முக்கியமானவர்களுக்கு, நாம் அவர்கள் மேல் கொண்டுள்ள அன்பை வெளிக்காட்ட, அவர்களுக்கு உபயோகமான அன்பளிப்பை கொடுப்போம். மேலும், அவர்களுக்கு தேவையான ஒன்றை அன்பளிப்பை கொடுத்தாலும், அது ஏதாவது ஒரு தாக்கத்தை உண்டு பன்னுகிறத? எத்தனை அன்பளிப்புகள், பீரோவில் அடுக்கப்பட்டிருக்கிறது. ?

யேசுவிற்கு பிறந்த நாள் அன்பளிப்பாக என்ன கொடுப்பாய்? உன்னுடைய கிறிஸ்துமஸ் பட்டியலில், யேசுவை விட்டு விட மாட்டாஇ என நம்புகிறேன். மற்றவர்களை விட, கடவுள் மிக பெரிய அன்பளிப்புக்கு உரியவர். ஆனால், அவருக்கு தேவையான எல்லாமே அவரிடம் இருக்கிறது. அல்லது அவருக்கு எதுவும் தேவையா?

இந்த திருவருகை காலம் முழுதும், ஒவ்வொரு நாளும், இந்த மறையுரையில், கடவுளுக்கு என்ன அன்பளிப்புகள் கொடுக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவையாவும், மறைந்திருக்கும் கிறிஸ்துமஸ் அன்பளிப்புகள். நாம் நற்செய்தியில், தேடி கண்டுபிடித்து, அதனை பாலிஸ் செய்து, அதனை நமது அன்பால் சுற்றி, கடவுளுக்கு கொடுப்போம். அது கண்டிப்பாக இறைவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கும் என்ற எண்ணத்தில் நாம் அவருக்கு கொடுக்கவேண்டும்.

முதல் வாசகம், கடவுள் நமது தந்தை என நினைவுபடுத்துகிறது. பதிலுரையில், நம்மை கடவுள் அவர் பக்கம் திரும்ப வைக்க உதவ வேண்டும் என வேண்டுகிறோம். இரண்டாவது வாசகம், கடவுள் நமக்கு செய்த எல்லா நன்மைகளுக்காகவும், நன்றி கூறுகிறது. அதனால், நீங்கள் எந்த அன்பளிப்பை கடவுளுக்கு கொடுத்தால், அவர் உனக்கு செய்த எல்லாவற்றிற்கும் பொருத்த மானதாக இருக்கும்.

இன்றைய நற்செய்தியில், கிறிஸ்து வரும் நேரம் விழித்திருக்க வேன்டும் என நினைவுபடுத்த படுகிறோம். இது ஒன்றும், கிறிஸ்துவின் இரண்டாவது வருகையை மட்டும் குறிப்பிடவில்லை. உனது கடைசி மூச்சு நிற்கும் நேரமும், உனக்காக அவர் வருவார். மேலும், தற்போது கூட உனக்காக வருவார்.


கடவுள் உனக்காக புதிதாக ஒன்றை கொடுக்க விரும்புகிறார். உன்னை வந்து அவர் அடையும்போது, நீ சரியான காரியத்தை செய்கிறாயா? (முதல் வாசகத்தில் கூறியிருப்பது போல), நீ அவர் கொடுத்த பரிசுத்த அன்பளிப்பை உபயோகித்து கொண்டு இருப்பாயா? (இரண்டாவது வாசகத்தில் கூறியிருப்பது போல)? மேலும், விழிப்பாயிருந்து, தந்தை கடவுள் வரும் வழியை பார்த்து கொண்டு இருப்பாய? (நற்செய்தியில் கூறியிருப்பது போல) ?

யேசு அவரை ஒவ்வொரு கனமும் உங்களிடம் வெளிப்படுத்துகிறார். இந்த திருவருகை காலம் , நமக்கு சரியான சந்தர்ப்பம், அவரை ஒவ்வொரு கனமும் எதிர்கொண்டு, அவர் பிறந்த நாளை கொண்டாட நாம் தயாராகி கொண்டிருக்கும் நேரத்தில், நாம் விழிப்புனர்வுடன் இருந்து எதிர் கொள்ள வேண்டும். இந்த மறையுரைகளில் வரும் அன்பளிப்புகளை உபயோக்கிது, ஒரு வித்தியாசத்தை அவருக்கும் , உஙளுக்கும் கொடுத்து அவர் பிரந்த நாளை கொண்டாடுங்கள்.



© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: