Friday, November 21, 2008

நவம்பர் 23, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

நவம்பர் 23, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 34 வது ஞாயிறு

Ezek 34:11-12, 15-17
Ps 23:1-3, 5-6
1 Cor 15:20-26, 28
Matt 25:31-46
மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 25
31 ' வானதூதர் அனைவரும் புடை சூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார்.32 எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர்.33 ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார்.34 பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ' என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.35 ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்;36 நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள் ' என்பார்.37 அதற்கு நேர்மையாளர்கள் ' ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்?38 எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்?39 எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத்தேடி வந்தோம்? ' என்று கேட்பார்கள்.40 அதற்கு அரசர், ' மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் ' எனப் பதிலளிப்பார்.41 பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ' சபிக்கப் பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள்.42 ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை.43 நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை ' என்பார்.44 அதற்கு அவர்கள், ' ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்? ' எனக் கேட்பார்கள்.45 அப்பொழுது அவர், ' மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' எனப் பதிலளிப்பார்.46 இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள். '
(thanks to www.arulvakku.com)


நாம் மேய்ப்பர்களை, ராஜாக்களாக எப்பொழுதும் நினைப்பதில்லை. ஆனால், இன்றைய நற்செய்தி, நல்ல மேய்ப்பனின் அரசில், அவருடைய செல்வாக்கு, மற்றும் மாட்சிமை என்னென்ன என பட்டியலிடுகிறது. யேசு கிறிஸ்து, நல்ல அரசனாக, அவருடைய ப்ரஜைகளை, எப்படி ஒரு நல்ல மேய்ப்பன் பார்த்து கொள்வானோ, அப்படி பார்த்து கொள்கிறார்.

அரசர்கள் தங்களுடைய ஆட்சியை தன்னுடைய மக்களுக்கெல்லாம் பரப்ப, அவர்களூடைய ப்ரஜைகள் மூலமாக ஆட்சியை, அதிகாரத்தை செலுத்துகின்றனர். அதனால் தான் யேசு "' மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்று சொல்கிறார்.


நமது அரசர்கள், பஞ்ச காலங்களில், உணவை எல்லோருக்கும் பகிர்ந்தளிக்க விரும்புகின்றனர். தங்கள் எல்லையின் விளிம்பிலுல்ல எல்லா மக்களுக்கும் இந்த உணவு போய் சேர விரும்புகின்றனர். யேசு இதனை எவ்வாறு செய்கிறார். அவர் அளவிற்கு அதிகமான உணவை நம்மில் பலருக்கு கொடுத்து, அதனை யாருக்கு எல்லாம் தேவையோ, அவர்களிடம் சேர்ப்பிக்க சொல்கிறார்.

நாம் கிறிஸ்து அரசரின் இந்த கட்டளையை செய்யவில்லையென்றால் என்ன ஆகும்? பசியோடு இருப்பவர்கள், கிறிஸ்து அரசர் தயாள குணம் இல்லாதவர் என்றா நினைப்பர்? இல்லை, அவர்கள் கிறிஸ்துவின் நல்ல மனதை, நாம் அவரின் கட்டளையை ஏற்று அதை செய்யும்போது பார்ப்பார்கள்.

உன்னை சுற்றியுள்ளவர்களை பார். ஒவ்வொருவரும், உன் மூலம் கடவுளுக்கு நல்ல பெயரை கொடுக்க வாய்ப்பு கொடுப்பார்கள்.

நீங்கள், யாரைவையாவது வெறுக்கீறீர்களா? உங்களை கோபம் கொள்ள செய்தவர் யார்? உங்களை வருத்தமுற செய்தவர் யார்? நீங்கள் உங்களுக்குள் இந்த கேள்விகளை கேட்டுகொள்ளுங்கள்: அவர்கள் எதற்காக பசியோடு இருக்கிறார்கள்? உங்களுக்கு பதில் தெரியவில்லை என்றால், பரிசுத்த ஆவியானவரிடம் கேளுங்கள். அந்த மனிதர்களை கொஞ்ச நாள் கவனித்து பாருங்கள். அவர்கள் எது தேவை என்று பாருங்கள். எதற்காக பயபடுகிறார்கள்? எந்த வலியோடு இருக்கிறார்கள்?


பிறகு இந்த கேள்வியை கேளுங்கள்: நமக்கு கடவுள் என்ன திறமை, கொடைகளை கொடுத்துள்ளார். இந்த குறையுள்ளவர்களுக்கு கடவுளிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள்? அவர்களுக்கு கடவுளின் தயாள குணத்தை என்மூலம் கான்பிக்கலாமா? அவர்கள் நாம் கோபமாயிருந்தாலும்?


நாம், நமக்கு வாய்ப்பு கிடைக்கும்போது, இல்லையென்று சொல்லிவிட்டால், நம்மிடம் இருப்பதை, நாம் பகிர்ந்து கொள்ளவில்லையென்றால், நாமெல்லாம், ஆடு மேய்ப்பாளன் , மோட்சத்திற்கு செல்ல கூடாத ஆடுகளை ஒதுக்குவது நாமும் ஒதுக்கபடுவோம். நாம் அவர்கள் மேல் கோபமாயிருந்தாலும், சரி என்று சொல்லி, அவர்களுக்கு தேவையானதை செய்தால், நல்ல ஆடுகளாக ஒதுக்கப்பட்டு, கடவுளின் நல்ல ஆட்சி எல்லோருக்கும் பரவும், அதன் மூலம் நாம் ஆசிர்வதிக்கபடுவோம்.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: