Friday, November 14, 2008

நவம்பர் 16, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

நவம்பர் 16, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 33வது வாரம்
Prv 31:10-13, 19-20, 30-31
Ps 128:1-5
1 Thes 5:1-6
Matt 25:14-30

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 25
14 ' விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்: நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார்.15 அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.ஒரு தாலந்து வெள்ளி 6000 திராக்மாவுக்கு அல்லது தெனாரியத்துக்கு இணையாகும். ஒரு தாலந்து பொன் 180000 திராக்மாவுக்கு அல்லது தெனாரியத்துக்கு இணையாகும். திராக்மா, தெனாரியம் ஆகியவற்றின் விளக்கத்தை முறையே மத் 17:24, 18:28 இல் காண்க. 16 ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார்.17 அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார்.18 ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார்.19 நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார்.20 ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, ' ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன் ' என்றார்.21 அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், ' நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும் ' என்றார்.22 இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, ' ஐயா நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன் ' என்றார்.23 அவருடைய தலைவர் அவரிடம், ' நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்குகொள்ளும் ' என்றார்.24 ஒரு தாலந்தைப் பெற்றுக் கொண்டவரும் அவரையணுகி, ' ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன்.25 உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது ' என்றார்.26 அதற்கு அவருடைய தலைவர், ' சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா?27 அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன் ' என்று கூறினார்.28 ' எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்துப் பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள்.29 ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்.30 பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும் ' என்று அவர் கூறினார்

(thanks to www.arulvakku.com)



இன்றைய ஞாயிறின் நற்செய்தியில், "நமக்கு கடவுள் கொடுத்த ஆற்றலையும், அன்பளிப்புகளையும் புதைத்து வைத்து விட கூடாது" என்று நமக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி புதைத்து வைத்தால், "சோம்பேறியானவனாகவும், பொல்லாத பணியாளனாகவும்" மாறிவிடுவோம்.

நாம் சோம்பேறிகளாய் இருப்பதற்கு நாமே அதற்கு ஒரு காரணம் வைத்திருப்போம். "நான் அந்த அளவிற்கு ஆற்றல் உள்ளவனில்லை, போதுமான தகுதிகள் இல்லை" அல்லது "வேறு யாராவது என்னை விட நல்ல முறையில் செய்ய முடியும்" அல்லது "கடவுள் என்னிடம் இந்த செயலை செய்ய சொல்ல கூடாது" , "னம்மிடம் பொருளாதாரம் இல்லை" "போதிய பண வசதி இல்லை" , "உடல் உழைப்புக்கு தயாராய் இல்லை" , "நான் இப்போது ஓய்வு பெற்றுள்ளேன், இனிமேல், நான் எனக்கு தேவையானவற்றை பார்த்து கொள்ள போகிறேன்" என்று கூறிகொண்டு நாம் இருக்கிரோம்.

கடவுள் நமக்கு கொடுத்த எந்த ஆசிர்வாததையும், அன்பளிப்புகளையும்,ஆற்றலையும், கடவுள் நமக்கு புனிதமாக கொடுத்த எதையும் வீணாக்கினால், அதற்கு மன்னிப்பே கிடையாது. அதற்கான எந்த காரனங்களும், கடவுளரசின் முன்னிலையில் எடுபடாது. நமக்காக கடவுளின் அன்பளிப்பை உபயோகித்தால், அது கடவுளரசை போற்றுவதற்கு சமமாகாது.

நாம் எல்லோருமே, நமக்கு தேவையான ஆற்றலும், திறமையும் உள்ளவராய் இருக்கிறோம். அதன் மூலம் கடவுளரசிற்கு நிச்சயம் ஒரு மாறுதலை கொடுக்க முடியும். ஏனெனில், அந்த ஆற்றல் அனைத்து அவரிடமிருந்து வந்தவை. நாம் எல்லாம் அவருடைய ஊழியர்கள். அதனால் கடவுள் தான் நாம் எந்த செயலை செய்ய முடியும் என்றும் முடிவெடுக்கிறார். மேலும், படுத்த படுக்கையாய் இருப்பவர்களூக்கு கூட கடவுளுக்காக சில செயல்களை செய்ய வேண்டும். அந்த கஷ்டத்திலும் வேதனையிலும்,கடவுளுக்காக செய்ய சில வேலைகள் உள்ளன. அதிகமாக, ஜெபங்களிலிலும், இந்த பூமியில் பெற்ற அனைத்து ஞானத்தையும் பகிர்ந்து கொண்டவர்களாய் இருப்பர்.

உங்களிடம் யாராவது இப்படி கேட்டதுண்டா?: "கடவுள் இவவளவு நல்லவராய் இருந்தால், அவர் ஏன் சாத்தானை, பாவங்களை இந்த உலகத்தில் அனுமதிக்கிறார்? " அதற்கு பதில், "கடவுள் அதனை அனுமதிக்கவில்லை", "நாம் தான் சாத்தானை அனுமதிக்கிறோம்". இந்த உலகத்தில், நாம் கிறிஸ்துவின் உடல். நாம் அவரின் கைகள், கால்கள், அரவணைக்கும் கைகள், யேசுவின் குரல். யேசுவிடம் தஙகளது குறைகளை சொல்லி, அழும் மக்களுக்கு, அவர்கள் துயரை துடைக்க வேன்டும் என்று தான யேசு விரும்புகிறார். ஆனால், நம்மில் பலர், அவரின் அன்பளிப்புகளை புதைத்து விட்டு, கடவுளரசில் மாற்றம் கொண்டு வருவதில்லை. அதற்கு பல காரனங்கள் வைத்திருக்கிறோம். எல்லாம் இந்த பொல்லாத சோம்பேறித்தனம்!.


© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: