Friday, August 17, 2012

ஆகஸ்டு 19, 2012 ஞாயிறு நற்செய்தி மறையுரை



ஆகஸ்டு 19, 2012 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டிம் 20ம் ஞாயிறு
Prov 9:1-6
Ps 34:2-7
Eph 5:15-20
John 6:51-58
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
Description: http://www.arulvakku.com/images/pointmsg.jpg

Description: http://www.arulvakku.com/images/dot.jpgஅதிகாரம் 6
மானிடமகனின் சதையும் இரத்தமும் உணவாதல்
51 ' விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். ' 52 ' நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்? ' என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது.53 இயேசு அவர்களிடம், ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்.54 எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.55 எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்.56 எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்.57 வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்.58 விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர். ' 
(Thanks to www.arulvakku.com)

இன்றைய ஞாயிறின் நற்செய்தியில், திவ்ய நற்கருணை கட்டளையை கேட்கிறோம்: " எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். " இவர் எந்த வாழ்வை குறித்து சொல்கிறார்? அவர் வாழ்வை வாழ்வதற்கும், நம் இப்பிறப்பின் வாழ்விற்கு என்ன வித்தியாசம்?

ஒவ்வொரு திருப்பலியிலும், இயேசு நமக்கு அவரது உடலையும் இரத்ததையும் முழுதுமாக தருகிறார். முழுதும், என்றால், மனிதனாகவும், தெய்வமாகவும் நம்மில் வருகிறார். அவரது அன்பினால் முழு ஊட்டம் பெற விரும்புகிறார். சோதனையை தாங்கிகொள்ள அவரிடமிருந்து ஆற்றலை பெற வேண்டும் என விரும்புகிறார். நமது காயங்களை ஆற்றிகொள்ள அவரிடமிருந்து குணப்படுத்தலை பெற விரும்புகிறார். அதற்கும் மேலாக அவரது முழு வாழ்வையே ,கொடுத்து, மோட்சம் செல்வதற்கும் மட்டும் அல்ல , இவ்வுலக வாழ்விலே முழு கிறிஸ்துவ வாழ்வை வாழ நமக்கு கொடுக்கிறார்.
இயேசுவை பெற்ற பின்பு நாமும் அவரை போல மாற வேண்டும். திவ்ய நற்கருணையில், இயேசு தான் முழு உடலோடும் இரத்தத்தோடும் இருக்கிறார் என்று நம்பினால், நாம் ஏன் ஒவ்வொரு திருப்பலியை விட்டு வெளியே செல்லும்பொழுது, நாம் கிறிஸ்துவை போல மாறி செல்வதில்லை. ?
திருப்பலியின் ஆரம்பத்தில் நடக்கும் மன்னிப்பு வார்த்தைபாட்டில் முழு மனதோடு பங்கு கொண்டு, ஒவ்வொரு திருப்பலி வாசகத்தையும் கவனத்தோடு கேட்டு, குருவோடு சேர்ந்து "உன்னை அடைய நான் தகுதியானவில்லை , ஆனா ஒரு வார்த்தை சொன்னால், என் ஆண்மா குணமடையும்" என்ற ஜெபத்தை சொல்லி, திவ்ய நற்கருணையை, பனிவோடும், ஆவலோடும்  நாம் பெற்று கொண்டேனால், நாம் அவரது இனைந்து ஒரே உடலாகவும், இரத்தமாகவும் ஆவோம்.

இப்போது, நாமும் அவரது உடலும் இரத்தமுமாக இவ்வுலகில் இருக்கிறோம், நம்மை மற்றவர்கள் பெற்று கொள்ள தயாராக இருக்கிறோம்கிறிஸ்துவின் உண்மையான ப்ரசன்னத்தை நம் மூலம் அவர்கள் பெற்று ஊட்டமடைய ஒரு வாய்ப்பினை கொடுப்பதாக இருக்கிறோம்.

அன்பை மற்றவர்களிடம் பகிரும்பொழுது, அவர்கள் கடவுளின் அன்பை பெறுகிறார்கள். அவர்கள் அந்த அன்பை திருப்பி கொடுக்காதபொழுது, நம்மை , நம் அன்பை அவர்கள் முழுதும் ஏற்று கொண்டுவிட்டார்கள்! நாம் பெற்றதை விட அதிகம் கொடுத்திருக்கிறோம். அதே போல, இறையரசிற்காக, நமது நேரத்தையும், திறமைகளையும் கொடுக்க்ம்பொழுது, அதற்கு எதிர்பலன் பாராது கொடுக்கும்பொழுது, நாம் திவ்ய நற்கருணையாகிறோம். நாம் இயேசுவோடு ஒரே உடலாக , இரத்தமாகிறோம்.

மற்றவர்கள் நமக்கு கொடுக்காததை, இயேசுவிடமிருந்து முழுதுமாக பெற்றால், நாம் இன்னும் பலருக்கு அவரை முழுமையாக கொடுக்க முடியும். அதனால் தான், ஒவ்வொரு திருப்பலியிலும், நற்கருணை பெறுவது நமக்கு முழு ஊட்டமாக இருக்கிறது. அதுவே நம் வாழ்வின் ஊற்றாகவும் , ஆதாரமாகவும் இருக்க வேண்டும்.

© 2012 by Terry A. Modica

No comments: