Thursday, August 23, 2012

ஆகஸ்டு 26, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை



ஆகஸ்டு 26, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 21ம் ஞாயிறு
Josh 24:1-2a, 15-18b
Ps 34:2-3, 16-21 (with 9a)
Eph 5:21-32
John 6:60-69


யோவான் (அருளப்பர்) நற்செய்தி
Description: http://www.arulvakku.com/images/pointmsg.jpg

Description: http://www.arulvakku.com/images/dot.jpgஅதிகாரம் 6


சீடர் முணு முணுத்தல்
60 அவருடைய சீடர் பலர் இதைக் கேட்டு, ' இதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா? ' என்று பேசிக் கொண்டனர்.61 இதுபற்றித் தம் சீடர் முணுமுணுப்பதை இயேசு உணர்ந்து அவர்களிடம், ' நீங்கள் நம்புவதற்கு இது தடையாய் இருக்கிறதா?62 அப்படியானால் மானிடமகன் தாம் முன்பு இருந்த இடத்திற்கு ஏறிச் செல்வதை நீங்கள் கண்டால் அது உங்களுக்கு எப்படி இருக்கும்?63 வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன.64 அப்படியிருந்தும் உங்களுள் சிலர் என்னை நம்பவில்லை ' என்றார். நம்பாதோர் யார், யார் என்பதும் தம்மைக் காட்டிக்கொடுக்கவிருப்பவன் யார் என்பதும் இயேசுவுக்குத் தொடக்கத்திலிருந்தே தெரிந்திருந்தது.65 மேலும் அவர், ' இதன் காரணமாகத்தான் ″ என் தந்தை அருள் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது ″ என்று உங்களுக்குக் கூறினேன் ' என்றார்.

பேதுருவின் அறிக்கை
66 அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரை விட்டு விலகினர். அன்று முதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை.67 இயேசு பன்னிரு சீடரிடம், ' நீங்களும் போய் விட நினைக்கிறீர்களா? ' என்று கேட்டார்.68 சீமோன் பேதுரு மறுமொழியாக, ' ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.69 நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். அதை நம்புகிறோம் ' என்றார்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், கிறிஸ்துவின் உண்மையான திருப்பணியை பற்றி அறிந்த பின்னர், அவரை கேட்டு, அவரை பின் சென்றவர்கள் பலர் உடனே அவரை விட்டு விலகியதை பார்க்கிறோம். அவர் போதனை செய்த விசயத்தை எப்படி அவர்கள் தவற விட்டார்கள்? "நான் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன" என்று இயேசு கூறுகின்றார். ஆனால் அவர்கள் சாதாரண வார்த்தையை தான் கேட்டனர், உள்ளர்த்ததை அவர்கள் புரிந்துகொள்ள வில்லை. அதனால் இயேசு கொடுத்த வாழ்வை அவர்கள் தவற விட்டுவிட்டார்கள். அந்த வாழ்வு: சந்தோசமான வாழ்வு, வெற்றியின் வாழ்வு, நித்திய வாழ்வு, மற்றும் குணமளிக்கும் வாழ்வு.


இயேசுவை புனிதமாகவோ, ஆண்மீகத்துடனும் அவர்கள் பார்க்கவில்லை. அவரை மனிதனாகவே பார்த்தனர், மெசியாவாக பார்க்கவில்லை, உடல் நோய்களை குணமளிப்பவராகவே பார்த்தனர், ஆண்மாவை குணமளீப்பவராக பார்க்கவில்லை. நமது பாவங்களிலிருந்து விடுதலை அளிப்பவராக பார்க்காமல், ரோமானியர்களிடமிருந்து விடுதலை அளிப்பவராக பார்த்தார்கள்.

அதனால் , அவர உடலையும், இரத்ததையும் (போன வார, ஞாயிறு நற்செய்தியில் வந்த வசணம்), உண்பது என்பது, ஏற்று கொள்ளக்கூடியதாக இல்லை. அதனால், இவ்வார்த்தைகளி அமிழ்ந்து போயிருக்கும், ஆவியும் அதன் வாழ்வையும் அவர்களால் அறிந்து கொள்ளவில்லை. அதனால் இயேசுவை பின் செல்வது என்பது மிகவும் நம்ப முடியாமல், கடினமான ஒன்றான செயலாக ஆனது.

உண்மையான சீடர்கள் - இன்னும் அதிகமாக இயேசுவிடமிருந்து கற்று கொள்ள காத்திருப்பவர்கள் - அவர்களும், இயேசு என்ன சொல்ல வருகிறார் என்பதை உண்மையாக அறிந்திருக்கவில்லை. ஆனால், அவரின் வார்த்தைகளில் தூய ஆவி இருந்ததை அறிந்து கொண்டார்கள்.

இயேசு எத்தனை முறை, மற்றவர்கள் மூலமாக உங்களிடம் வந்திருக்கிறார், ஆனால் அதனை நீங்கள் அறிந்து கொள்ளவில்லை? ஏனெனில், நீங்கள், தனி மனிதராக பார்த்தீர்கள், ஏனெனில், கிறிஸ்துவிற்கு மாறான அந்த மனிதனின் குனாதிசியங்களை பார்த்தீர்கள்.

ஒவ்வொரு மனிதனும் கடவுளை போன்றே படைக்கப்பட்டிருக்கிறோம். பரிசுத்த ஆவியானவர் இவ்வாழ்வை கொடுக்காவிட்டால் எந்த மனிதனும் வாழமுடியாது. கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களிடத்தில் கூட கிறிஸ்து இருக்கிறார். வெற்றியான வாழ்வு வாழ, நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனின் அடியிலும் இருக்கும் இயேசுவை நாம் காணவேண்டும்.
திருப்பலியில் இயேசுவின் ப்ரசன்னத்தை அறிந்து கொள்ள நீங்கள் சிரமபடுகிறீர்களாமற்றவர்கள் மூலம் வரும் இயேசுவை கண்டு கொள்ள பயிற்சி செய்து கொள்ளுங்கள். அதன் மூலம், திவ்ய நற்கருணையை புதிய வழியில் காண்பீர்கள்.
© 2012 by Terry A. Modica

No comments: