Friday, August 10, 2012

ஆகஸ்டு 12, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஆகஸ்டு 12, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 19ம் ஞாயிறு
1 Kings 19:4-8
Ps 34:2-9
Eph 4:30–5:2
John 6:41-51

யோவான் (அருளப்பர்) நற்செய்தி
Description: http://www.arulvakku.com/images/pointmsg.jpg

Description: http://www.arulvakku.com/images/dot.jpgஅதிகாரம் 6.
41 ' விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே ' என்று இயேசு கூறியதால் யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள்.42 ' இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா? அப்படியிருக்க, ″ நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன் ″ என இவர் எப்படி சொல்லலாம்? ' என்று பேசிக்கொண்டார்கள்.43 இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது: ' உங்களிடையே முணுமுணுக்க வேண்டாம்.44 என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.45 ″ கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத்தருவார் ″ என இறைவாக்கு நூல்களில் எழுதியுள்ளது. தந்தைக்குச் செவிசாய்ந்து அவரிடமிருந்து கற்றுக்கொண்ட அனைவரும் என்னிடம் வருவர்.46 கடவுள்தாமே கற்றுத்தருவார் என்பதிலிருந்து தந்தையை எவராவது கண்டுள்ளார் என்று பொருள் கொள்ளக்கூடாது. கடவுளிடமிருந்து வந்துள்ளவர் மட்டுமே கடவுளைக் கண்டுள்ளார்.47உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்.48 வாழ்வுதரும் உணவு நானே.49 உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர்.50 உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே.

மானிடமகனின் சதையும் இரத்தமும் உணவாதல்
51 ' விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.

(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தி, கிறிஸ்துவே, நற்கருணையை பற்றிய ஒரு விளக்கம் கொடுப்பதாக அமைந்திருக்கிறது: "என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்.48 வாழ்வுதரும் உணவு நானே" என்று இயேசு கூறுகிறார்.

"வாழ்வு தரும் உணவு நானே!" என்று ஏன் இயேசு கூறினார்? திவ்ய நற்கருணை எப்படி நமக்கு வாழ்வு தரும்?" இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்." என்று இயேசு பதில் சொல்கிறார். மாறாக சொல்வதானால், அவரை முழுமையாக நமக்காக கொடுத்தார். அவரின் வாழ்வை நமக்காக கொடுத்தார். சிலுவையில் கொடுத்தார். நமது பாவ வாழ்வு நம்மை சாவிற்கு இட்டு செல்கிறது. ஆனால், பாவமில்லாத இயேசு, நமக்கு பதிலாக, நம் சாவை அவர் எடுத்து கொண்டு, நமக்கு நித்திய வாழ்வை கொடுத்துள்ளார்.

உயிர்த்தெழுந்த அவரது உடல், சாவை வென்று வந்தது. அவரது உடல், சிலுவை அறைபட்டு, உயிர்ந்தெழுந்த அவரது உடல் தான் நம் வாழ்வின் சக்தியாகும். இதனை தான் நாம் திருப்பலியில் கொண்டாடுகிறோம், சிலர் இதனை தவறாக, 'கிறிஸ்துவோடு இணைகிறோம்' என்று புரிந்து கொள்கிறார்கள்.

"கோவில் பீடத்தில் நடக்கும் தியாகம்" நாமும் கிறிஸ்துவோடு கலந்து கொள்கிறோம் என்பதை குறிக்கிறது. அவரது வாழ்வில், அவரது இறைசேவையில், நமது பாவங்களுக்கான சிலுவை மரணத்திலும், உயிர்த்தெழுதலிலும், மோட்சத்திற்கு செல்வதிலும் நாம் கிறிஸ்துவோடு கலந்து கொள்கிறோம். நமது வாழ்வை அவருக்கு அர்ப்பனித்து, இயேசுவோடு நாம் இனைகிறோம். நம் மூலம இறைவார்த்தையை அவர் பரப்புகிறார். கிறிஸ்துவின் விருப்பத்திற்காக, நம் விருப்பங்களை தியாகம் செய்கிறோம். இதனால் கிறிஸ்துவோடு சேர்ந்து மோட்சத்திற்கு, அவரை பின் செல்கிறோம்.
ஒவ்வொரு கத்தோலிக்க திருப்பலியிலும், இயேசுவின் உடலையும் இரத்தத்தையும், உணவாக நமக்கு நன்மை வடிவில் கொடுக்கபடுகிறது: வாழ்வின் உணவாக. போப் ஜான் பால், அவருடைய மறைகல்வி குறிப்பேடுகளில் குறிப்பிட்டு உள்ளது போல, "திவ்ய நற்கருணை தான் , கிறிஸ்தவ வாழ்விற்கு ஆதாராமாயி இருக்கிறது " என்பதை போப் இது சரியான வார்த்தை என்று முன் மொழிந்துள்ளார்.
கிறிஸ்துவின் கடைசி இரவு உணவின் போது ஆரம்பிக்கப்பட்டு நற்கருணை நமக்கு கிடைக்கபெறுகிறது. அப்போஸ்தலர்கள் மூலமும், தொடர்ந்து குருக்கள் மூலமும் நமக்கு கிடைக்க பெறுகிறது. கிறிஸ்துவின் திருவழிபாட்டில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும், திவ்ய நற்கருணையை , திருப்பலியில் அதன் ப்ரசன்னத்தை நாம் போற்றி ஏற்றுகொள்ள வேண்டும். ஆனால் அதனை ஏற்று கொள்ள நம்மில் உள்ள தடையை முதலில் போக்க வேண்டும்.
கிறிஸ்து நற்கருணையில் முழுதுமாக இருக்கிறார். கடைசி இரா உணவில் எப்படி அப்போஸ்தலர்களுடன் இருந்தாரோ, அவ்வாறே திருப்பலியிலும் முழுதுமாக நற்கருணையில் வீற்றிருக்கிறார்.

கடைசி இரவு உணவில், அப்போஸ்தலர்களிடம் அமர்ந்து என்ன சொன்னாரோ அதனையே, "இதோ என் உடல், இதோ என் இரத்தம்" என்று அவரை ஆராதித்து வணங்கும் ஒவ்வொருவருக்கும்   இவ்வாறு சொல்கிறார். இயேசு தான் நம்மை காப்பவர் என்று நம்பு ஒவ்வொருவருக்கும் , அவரின் திவ்ய நற்கருனைதான் , நிலையில்லா வாழ்வின் ஊற்றாக, ஆதாரமாக இருக்கும்.

© 2012 by Terry A. Modica