Saturday, May 16, 2015

மே 17 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

மே 17 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டவரின் விண்ணேற்றம்

Acts 1:1-11
Ps 47:2-3, 6-7, 8-9
Ephesians 1:17-23 or Ephesians 4:1-13
Mark 16:15-20

மாற்கு நற்செய்தி

நற்செய்தி பறைசாற்ற அனுப்புதல்
(
மத் 28:16 - 20; லூக் 24:36 - 49; யோவா 20:19 - 23; திப 1:6 -
15இயேசு அவர்களை நோக்கி,' உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.16நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்.17நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்;18பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர் 'என்று கூறினார்.

இயேசுவின் விண்ணேற்றம்
(
லூக் 24:50 - 53; திப 1:9 - 11)
19இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார்.20அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.
(thanks to www.arulvakku.com)



பரிசுத்த ஆவியோடு முன்னெடுத்து செல்வோம்

சில நேரங்களில், முதல் வாசகத்தில் கூறி இருப்பது போல, சீடர்கள் அண்ணாந்து பார்த்ததை போல , நாமும் இருக்கிறோம். வானத்தை அண்ணாந்து பார்த்து இயேசுவை தேடுகிறோம். ஒண்ணுமில்லாத இடத்தை பார்த்து வெறித்து கொண்டிருக்கிறோம் . இயேசு வந்து இந்த உலகை சாத்தானின் பிடியிலிருந்து நம்மை மீட்பார் என காத்திருக்கிறோம்.


கிறிஸ்து இன்னும் அவர் பணியை முடிக்க வில்லை என்று எல்லோரும் நினைக்கிறோம். நமது உலகம் அவரை இன்னொரு முறை வர வேண்டும் என நினைக்கிறது - இப்பொழுதே , என் இன்னும் வாவில்லை ?

ஆனால், இயேசு நம்மை இப்படி காத்து கொண்டு இருக்க வேண்டாம், நீங்கள் போய் நற்செய்தியை அறிவியுங்கள் என்று கூறுகிறார். அவர் நமக்கு என்ன கொடுத்திரிக்கிறரோ அதனை கொண்டு மற்றவர்களுக்கு இறைபணி புரியுங்கள் என்று கூறுகிறார். முடிந்த வரையில் பலருக்கும் இறைபணி செய்யுங்கள் என்று கூறுகிறார் .
ஏன் நாம் ஒன்றுமில்லாத வானத்தை அண்ணாந்து பார்த்து கொண்டிருக்கிறோம். ஏனெனில் நாம் இன்னும் தகுதி குறைவாகவே உணர்கிறோம்

பெற்றோர்களுக்கு இது தெரியும். குழ்ந்தை பிறந்தபின்பு, அதனை கொடுத்த கடவுளோடு இணைந்து, அந்த சின்ன குசந்தையை விசுவாசத்தோடு, பெரிய மனிதனாக வளர்க்கும் வேளையில் இருக்கிறோம் .பல அதிசயம் நிகழ வேண்டும். அப்பொழது தான் குழ்ந்தை நல்ல மன வளத்தோடு, இறைவனின் குழந்தையாக வளரும்.


கல்லுரி படித்தவர்களும், இதே மாதிரி தகுதி குறைவாக எண்ணுகிறோம். கல்லூரி படிப்பு முடிந்தவுடன் , அல்லது இறுதி வார்த்தபாடு முடிந்தவுடன் , இறைவனின் இடத்தில் , அவருக்காக உழைக்க காத்திருக்கிறோம். நான், ஒழுங்காக இந்த வேலையை செய்வேனா ? என்றும், நமக்கு பிடிக்காத இடத்திற்கு நம்மை அனுப்பி விடுவார்களோ? என்றும் நாம் நினைக்கிறோம்.


துக்கத்தோடு இருக்கிறவர்கலும, தமக்கு குறைவு உண்டாஇற்று என்று நினைக்கிறார்கள். நமக்கு அன்பானவர்களை கடவுள் அவரிடம் எடுத்து கொள்ளும் பொழுது , நமது வாழ்க்கை மாறி விடுகிறது , இது மாதிரி நடந்திருக்க கூடாது என்று நினைக்கிறோம். காலியாக இருக்கும் இடத்தை எப்படி நிரப்ப போகிறோம். ? நமது நோக்கங்களும் எண்ணங்களும், நம்மை நோக்கியே , நமது சுய சிந்தனை யாகவே இருக்கும் பொழுது நாம் எப்படி மற்றவர்களுக்கு உதவ முடியும். ?


நமது வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு மாற்றமும், அடுத்த நகர்வுக்கு நம்மை அழைத்து செல்கிறது , ஒவ்வொரு இழப்பும் , நம்மை புதிய அழைப்பிற்கு எடுத்து செல்கிறது. ஒவ்வொரு அனுபவும், கடவுள் அரசிற்கு நம்ம செய்ய வேண்டிய வேலைக்கான பயிற்சியாகும் . கடவுள் நம் மூலமாக இதனை செய்ய ஆசை படுகிறார்.


நீங்கள் ஏன் இன்னும், வானத்தை பாரத்து கொண்டு இருக்கிறீர்கள் ? இயேசு உங்களுக்கு போதகராகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறார். அவர் என்ன இப்போது செய்கிறார் என்று உங்களால் பார்க்க முடியாவிட்டாலும், உங்களை அவர் விட்டு விடவில்லை. அவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றுகிறார். “பரிசுத்த ஆவியிடமிருந்து நீங்கள் ஆற்றலை பெற்று கொள்வீர்கள் , மேலும் நீங்கள் எனது சாட்சிகளாய் இந்த உலகத்தில் இருப்பிர்கள் ". ஞானஸ்நாணத்தில், நீங்கள் பரிசுத்தா ஆவியை பெர்ருகொண்டிர்கள் . , கடவுளின் ஆவி இயேசுவின் இறைபணியை தொடர உங்களுக்கு கிடைத்த ஆற்றலையும், தகுதியையும் கொண்டு தொடர ஆசிக்க பட்டிருக்கிரிர்கள்.

நம்பிக்கையோடு நமது காலை எடுத்து வைத்து முன்னேறி , அந்த கால் கிழே வைக்கும் முன்பு, கடவுளிடம் அடுத்த அடியை எங்கே வைக்கிறது என்று கேட்போம். கடவுளிடம் முழு நம்பிக்கையோடு இருந்தால், உங்களுக்கு நல்ல பாலன்ஸ் கிடைக்கும். பரிசத்த ஆவி கிறிஸ்துவின் இறைபணியை உங்கள் முலம் இவ்வுலகில் நிறைவேர்ருகிறார்.

© 2015 by Terry A. Modica


No comments: