Friday, May 29, 2015

மே 31 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

மே 31 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

மூவொரு கடவுள்

Deut 4:32-34, 39-40
Ps 33:4-6, 9, 18-20, 22 (with 12b)
Rom 8:14-17
Matt 28:16-20


மத்தேயு நற்செய்தி

இயேசு சீடருக்குக் கட்டளை கொடுத்து அனுப்புதல்
(
மாற் 16:14 - 18; லூக் 24:36 - 49; யோவா 20:19 - 23; திப 1:6 - 8)

16பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள்.17அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள்.18இயேசு அவர்களை அணுகி,' விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது.19எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.20நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன் 'என்று கூறினார்.
(thanks to www.arulvakku.com)


மூவொரு கடவுளுக்கு நீங்கள் மிகவும் முக்கியமானவர்கள்!

நீங்கள் கடவுளுக்கு முக்கியமானவர்கள். நீங்கள் கடவுளுக்கு சொந்தமானவர்கள் . – தந்தை மகன் தூய ஆவி அனைவருக்கும் சொந்தமானவர்கள்.

தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்கு நீங்கள் பெற, முக்கியமான காரணம் . இருக்கிறது , மூவொரு கடவுளும் ஒன்றாகவும் , தனி தனியேயும் உங்களோடு தொடர்பு வைத்து கொள்ள விரும்புகிறார்கள். உண்மையான நட்பை உங்களோடு தொடர விரும்புகிறார்கள்.

மூவொரு கடவுளின் ஒவ்வொருவரிடமும் , தனி தனியே அன்பினால் ஆனா நட்புடன் நீங்கள் இருக்கிறிர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா ? தந்தை கடவுளோடும், இயேசு மிட்பாரோடும், பரிசுத்த ஆவியின் கடவுளோடும் தனியே அமர்ந்து , அவர்களுடன் பேசி இருக்கிறிர்களா? உங்களுக்கு துன்பம் ஏற்படும் போது , தந்தை மடியில் அமர்ந்து , அவரின் ஆறுதலை பெற்று இருக்கிறிர்களா ? சோதனைகளை எதிர் கொள்ளும் பொழுது , இயேசுவின் ஆற்றல் உங்களிடம் வருவதை உணர்ந்து இருக்கிறிர்களா? கவலையுடன் இருக்கும்போதோ, கலக்கத்துடன் இருக்கும்போதோ , உறுதியான விசுவாசம் இல்லாமல் இருக்கும்போதோ , பரிசுத்த ஆவியின் அறிவுரையை கேட்டு இருக்கிறிர்களா ?


இயேசுவின் தந்தையும் , நம் சொந்த தந்தை, “அப்பா" ( யூத வார்த்தையில் தந்தைக்கு அப்பா என்று பெயர்) , தந்தை ஒன்றும், உங்களுக்கு தண்டனை கொடுக்கும் .அதிகாரம் படைத்தவர் என்று நினைத்து கொண்டு இருக்கிறிர்களா ? உங்கள் திருமுழுக்கு அன்று தந்தை கடவுள் உங்களை தத்து எடுத்து கொண்டார். ஏனெனில், அவர் தந்தையாக நமக்கு தேவையானதை கொடுக்கிறார்.

பரிசுத்த ஆவி நமக்கு தேவையானதை கொடுப்பதாக உறுதி அளிக்கிறார். கடவுளின் ஆவி நம்மை ஆறுதல் படுத்தி, நம் வாழ்விற்கு தேவையான அனைத்தையும் , நம் வாழ்வில் முழு அன்புடனும், சந்தோசத்துடனும் வாழ அனைத்தையும் பெற நமக்கு ஆலோசனை வழங்குகிறார். அந்த அன்பில் தான், இயேசு நமக்காக தியாகம் செய்தார். அதனால், நமக்கு கிடைக்க வேண்டிய பாவத்தின் தண்டனைஇலிருந்து விடுபட்டு இருக்கிறோம். அதன் மூலம் பரிசுத்த ஆவியின் உதவியோடு நாம் பரிசுத்த வாழ்வோம்

கடவுள் மூவொரு விதமாக நமக்கு இருக்கிறார். உதவி செய்பவராக, குணப்படுத்துவராக, நம்மை ஆற்றல் கொண்டவராக , விசுவாசத்தை உறுதி ஆக்குபவராக இருக்கிறார். அவரது தெயவிகத்தில் முழுதும் இருக்க நம்மை அழைக்கிறார். அவரிடமிருந்து எல்லாவற்றையும் பெற்று அதன் முலம் பயன் பெற வேண்டும் மென விரும்புகிறார்
திருமுழுக்கு பெற்ற கிறிஸ்தவனாக, புனிதமான கத்தோலிக்கர்களாக, நாம் கடவுளின் பிரசன்னம் நம்மோடு திவ்ய நற்கருணையில் இருக்கும் கடவுளோடு நாம் என்றும் இருக்கிறோம். அதனால், நம்மில் எதுவும் குறையில்லை.



© 2015 by Terry A. Modica

No comments: