Friday, July 14, 2017

ஜுலை 16 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஜுலை 16 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 15ம் ஞாயிறு
Isaiah 55:10-11
Ps 65:10-14 (with Luke 8:8)
Romans 8:18-23
Matthew 13:1-23

மத்தேயு  நற்செய்தி

உவமைப் பொழிவு
விதைப்பவர் உவமை
(மாற் 4:1 - 9; லூக் 8:4 - 8)
1அதே நாளில் இயேசு வீட்டிற்கு வெளியே சென்று கடலோரத்தில் அமர்ந்தார்.

2மக்கள் பெருந்திரளாய் அவரிடம் ஒன்றுகூடி வந்தனர். ஆகவே அவர் படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் நின்றுகொண்டிருந்தனர்.

3அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றைக் குறித்து அவர்களோடு பேசினார்: 
விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார்.

4அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கி விட்டன.

5வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன;

6ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேரில்லாமையால் கருகிப் போயின.

7மற்றும் சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிட்டன.

8ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் சில நூறு மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன.

9
கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்”  என்றார்.
உவமைகளின் நோக்கம்
(மாற் 4:10 - 12; லூக் 8:9 - 10)
10சீடர்கள் அவரருகே வந்து, “ஏன் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகின்றீர்?” என்று கேட்டார்கள்.

11அதற்கு இயேசு அவர்களிடம் மறுமொழியாகக் கூறியது: 
விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை.

12உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார். மாறாக, இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்.

13அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை; புரிந்து கொள்வதுமில்லை. இதனால்தான் நான் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகிறேன்.

14இவ்வாறு எசாயாவின் பின்வரும் இறைவாக்கு அவர்களிடம் நிறைவேறுகிறது:
நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும்
கருத்தில் கொள்வதில்லை.
உங்கள் கண்களால் பார்த்துக்
கொண்டேயிருந்தும் உணர்வதில்லை.
15இம்மக்களின் நெஞ்சம்
கொழுத்துப்போய்விட்டது;
காதும் மந்தமாகிவிட்டது.
இவர்கள் தம் கண்களை
மூடிக்கொண்டார்கள்; எனவே
கண்ணால் காணாமலும் காதால்
கேளாமலும் உள்ளத்தால் உணராமலும்
மனம் மாறாமலும் இருக்கின்றார்கள்.
நானும் அவர்களைக்
குணமாக்காமல் இருக்கிறேன்.
16உங்கள் கண்களோ பேறுபெற்றவை; ஏனெனில் அவை காண்கின்றன. உங்கள் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன.

17நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; பல இறைவாக்கினர்களும் நேர்மையாளர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை.
விதைப்பவர் உவமையின் விளக்கம்
(மாற் 4:13 - 20; லூக் 8:12 - 15)
18“எனவே விதைப்பவர் உவமையைப் பற்றிக் கேளுங்கள்:

19வழியோரம் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறையாட்சியைக் குறித்த இறைவார்த்தையைக் கேட்டும் புரிந்து கொள்ளமாட்டார்கள். அவர்கள் உள்ளத்தில் விதைக்கப்பட்ட விதைகளைத் தீயோன் கைப்பற்றிச் செல்லுவான்.
20பாறைப் பகுதிகளில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார்கள்.

21ஆனால், அவர்கள் வேரற்றவர்கள். எனவே அவர்கள் சிறிது காலமே நிலைத்திருப்பார்கள்; இறைவார்த்தையின் பொருட்டு வேதனையோ இன்னலோ நேர்ந்த உடனே தடுமாற்றம் அடைவார்கள்.

22முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால் பயன் அளிக்க மாட்டார்கள்.

23நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்து கொள்வார்கள். இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும் சிலர் முப்பது மடங்காகவும் பயன் அளிப்பர்.

(THANKS to www.arulvakku.com)

நல்ல மண்ணில் விதைக்கப்படும் விதை
இன்றைய ஞாயிறின் நற்செய்தி விதை விதைப்பதை பற்றி சொல்கிறது. சரியான நிலத்தில் விதைக்கபடாத விதை , அதன் தன்மை மாறா விட்டால், அதற்காக செய்த முயற்சி வீனாகிவிடும். ஒவ்வொரு விதையும் அதன் சுயத்தை இழந்து விட வேண்டும். அந்த மண்ணில் அழிந்து , புதிய செடியாக / வாழ்வை அதே விதையிலிருந்து உண்டாக்கும். அதிலிருந்து தான் , முதல் தண்டாக , செடியாக, வேறாக மாறி, பல மடங்காக பெருகும்,  அதன் வேர் எவ்வளவு ஆழமாக கீழே   செல்கிறதோ அந்த  அளவிற்கு பூமியின் மேல் நன்றாக வளரும். அப்படியிருந்தும், அதற்கு தேவையான உரமும் நீரும் எப்பொழுதும் கொடுத்து கொண்டே இருக்க வேண்டும்.
இவையெல்லாம் நடந்தால், இறுதியாக ஒரு செடி வளரும், அது விதையை போலவே இருக்காது. விதை வளர்ந்து இந்த உலக இயற்கை வளம் பெற அது செடியாக மரமாக வளர்ந்து பல்வேறு பலனை கொடுக்கும்.
இயேசுவின் உவமையை நாம் கேட்கும்பொழுது, நாம் நல்ல விதையாக இருந்து, நல்ல பலனுள்ள வாழக்கையை கொடுக்க வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் நாம் ஆசைபட்டால் மட்டும் பலன் தராது, நமது வாழ்வை நல்ல நிலமாக மாற்ற என்ன செய்ய வேண்டும்?
இசையாஸ் வாசகத்தில், கடவுள் ஒரு நல்ல வளமான மண் - கடவுளும் அவர் வார்த்தைகளும் - என்று சொல்லப்பட்டுள்ளது. புனித பவுல் இரண்டாவது வாசகத்தில் துன்பபடுவது படைத்தலின் ஒரு அங்கம் என்று சொல்லபடுகிறது (விதை மண்ணில் விழுந்து, மடிந்து புதிய வாழ்வை கொடுக்கும்) . துன்பத்திலிருந்தும், இறப்பிலயும் இருந்து தான் மீட்பு கிடைக்கிறது.
நாம் இந்த நிலத்தில் முழுதுமாய கொடுத்து, கடவுள் நம்ம ஊட்ட சத்துடேன் வளர்க்க அனுமதித்தால் மட்டுமே நாம் இந்த கடவுளின் அழைப்பை முழுதுமாக ஏற்று கொண்டோம் என்று அர்த்தம்

© 2017 by Terry A. Modica

No comments: