Friday, July 21, 2017

ஜூலை 23, 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஜூலை  23, 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 16ம் ஞாயிறு
Wisdom 12:13,16-19
Ps 86:5-6,9-10,15-16
Romans 8:26-27
Matthew 13:24-43
மத்தேயு நற்செய்தி
வயலில் தோன்றிய களைகள் உவமை
24இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: 
விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார்.

25அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான்

26பயிர் வளர்ந்து கதிர் விட்டபோது களைகளும் காணப்பட்டன.

27நிலக்கிழாருடைய பணியாளர்கள் அவரிடம் வந்து, ‘ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி? என்று கேட்டார்கள்.

28அதற்கு அவர், ‘இது பகைவனுடைய வேலைஎன்றார். உடனே பணியாளர்கள் அவரிடம், ‘நாங்கள் போய் அவற்றைப் பறித்துக் கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன?’ என்று கேட்டார்கள்.

29அவர், ‘வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக்கூடும்.

30அறுவடைவரை இரண்டையும் வளர விடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம், ‘முதலில் களைகளைப் பறித்துக் கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்என்று கூறுவேன்என்றார்.

கடுகு விதை, புளிப்பு மாவு உவமைகள்
(
மாற் 4:30 - 32; லூக் 13:18 - 21)

31-32இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: 
ஒருவர் கடுகு விதையை* எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும்விடச் சிறியது. ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும் விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும்.

33அவர் அவர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை: 
பெண் ஒருவர் புளிப்புமாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்புமாவுக்கு ஒப்பாகும்.
உவமைகள் வாயிலாகவே பேசும் இயேசு
(
மாற் 4:33 - 34)
34இவற்றையெல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை.

35“நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன்; உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன்என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது.
வயலில் தோன்றிய களைகள் உவமையின் விளக்கம்
36அதன்பின்பு இயேசு மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார். அப்போது அவருடைய சீடர்கள் அவரருகே வந்து, “வயலில் தோன்றிய களைகள்பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிக் கூறும்என்றனர்.

37அதற்கு அவர் பின் வருமாறு கூறினார்: 
நல்ல விதைகளை விதைப்பவர் மானிடமகன்;

38வயல், இவ்வுலகம்; நல்ல விதைகள், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள்; களைகள், தீயோனைச் சேர்ந்தவர்கள்;

39அவற்றை விதைக்கும் பகைவன், அலகை; அறுவடை, உலகின்முடிவு; அறுவடை செய்வோர், வானதூதர்.

40எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும்.

41மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார். அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும்* நெறிகெட்டோரையும் ஒன்று சேர்ப்பார்கள்;

42பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.

43அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப்போல் ஒளிவீசுவர் கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.
(THANKS to www.arulvakku.com)

மன(மத) மாற்றத்தின் மூன்று அடுக்குகள்
நீங்கள் போய் சீடரக்குங்கள்: அமெரிக்க கத்தோலிக்க  மன மாறுதல் திட்டம் மற்றும் வீயூகம் (1992) அறிக்கையில் மூன்று செயல்களை மனம் மாறுதலுக்கான அடுக்குகளாக குறிப்பிட்டுள்ளது.
(1) உங்கள் சொந்த விசுவாச வளர்ச்சியை ஊட்டம் கொடுத்து வளர்த்தல்
(2) மற்றவர்களை மனம் மாற அழைத்தல்
(3) கிறிஸ்தவ வாழ்வின் மூலம் சமூகத்தை மாற்றுதல் 
இன்றைய ஞாயிறின் நற்செய்தியில் இயேசு மூன்று உவமைகள் மூலம் இதே வியூகத்தை போதிக்கிறார்
(1) உங்கள் சொந்த விசுவாச வளர்ச்சியை ஊட்டம் கொடுத்து வளர்த்தல்
இறையரசில் நாம் களைகளிடையே வளரும் நல்ல கோதுமை போன்றவர்கள். இப்படி வளர்வதற்கு முழு முயற்சி தேவை; களைகள் நம்மை தாண்டி வளர்ந்து நம்மை அமுக்க நினைக்கும். அதனால் , தினமும் பரிசுத்த வாழ்வில் வளர நாம் உழைக்க வேண்டும். உங்கள் பரிசுத்த வாழ்வை குழைக்கும் களைகள் அகற்ற நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றீர்கள்?  அசுவிசுவாசம் மற்றும் சாத்தானின் மத்தியில்  உங்கள் விசுவாச வாழ்வு எப்படி பயன் கொடுக்கிறது? உங்களை படைத்த தந்தை கடவுள் உங்களுக்கு தேவையான ஆற்றலை சக்தியை கொடுத்து வளர உதவி செய்கிறார்.
(2) மற்றவர்களை மனம் மாற அழைத்தல்
இறையரசில், நாம் கடுகை போன்ற மிக சிறிய விதை போன்று புற்களிடையே வளர்ந்து பலரும் தங்க கூடிய பெரிய மரம் போல பலரும் வளர பயனுள்ளதாய் வளர்வோம். உங்கள் விசுவாசம் மூலம் யார் பயன் அடைகிறார்கள் ? உங்கள் பரிசுத்த வாழ்வு வளர்ச்சி யாரையெல்லாம் இயேசுவோடு இணைய அழைக்கிறீர்கள்? பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு தேவையான சக்தியை , வழியை கொடுத்து உங்களை மேம்படுத்துகிறார், ஆனால், நீங்கள் அதற்கு உங்கள் விருப்பத்தை பரிசுத்த ஆவியானவரிடம் தெரிவிக்க வேண்டும். மேலும் உங்கள் அனுபவத்தின் மூலம் அவர்களுக்கு இறை சேவை செய்ய வேண்டும்.
(3) கிறிஸ்தவ வாழ்வின் மூலம் சமூகத்தை மாற்றுதல் 
இறையரசில், நாம் புளித்த மாவு போல இருக்கிறோம். அது தான் மற்ற மாவுடன் சேர்ந்து அதனை பெரிதாக்கி , ரொட்டி துண்டுகாலாக மாற்றி , மற்றவர்கள் அதனால் பலன் பெறுவர். இந்த உலகை முன்னேற்றுவதற்கு கிறிஸ்தவனாக நீங்கள் என்ன செய்கிறீர்கள்? உங்கள் வேலையிடத்தில், உங்கள் சமுகத்தில், மேலும் உங்கள் பங்கு கோவிலில் உங்கள் விசுவாசம் என்ன வித்தியாசம் கொண்டு வருகிறது ? திருப்பலியில் நமக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் நிறைந்த திவ்ய நற்கருணையை நாம் பெரும்பொழுது, இந்த உலகின் திவ்ய நற்கருணையாக நாம் மாறுகிறோம். மேலும் திருப்பலி முடிவில், நீங்கள் போய் இந்த உலகிற்கு இறையரசின் புளிப்பு மாவாய் இருங்கள் என்று குருவானவர் உங்களை ஆசிர்வதித்து உங்களை ஆற்றலோடு அனுப்புகிறார்.
© 2017 by Terry A. Modica


No comments: