Saturday, July 29, 2017

ஜூலை 30 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஜூலை  30 2017 ஞாயிறு   நற்செய்தி மறையுரை
ஆண்டின் 17ம் ஞாயிறு
1 Kings 3:5, 7-12
Ps 119:57, 72, 76-77, 127-130
Romans 8:28-30
Matthew 13:44-52
மத்தேயு நற்செய்தி
புதையல் உவமை
44“ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்து விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.
முத்து உவமை
45-46“வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார். விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள் யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்.
வலை உவமை
47“விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும்.
48வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க்கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர்.

49இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்;

50பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.
முடிவுரை
51
இவற்றையெல்லாம் புரிந்து கொண்டீர்களா?”
 என்று இயேசு கேட்க, அவர்கள், “ஆம்என்றார்கள்.

52பின்பு அவர்
ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப்போல் இருக்கின்றனர்
 என்று அவர்களிடம் கூறினார்.
(thanks to www.arulvakku.com)
விண்ணரசின் பொக்கிஷங்கள்
இன்றைய ஞாயிறின் நற்செய்தியில், இயேசு கடவுளின் விண்ணரசை, புதையலுக்கு ஒப்பாகவும், விலையுயர்ந்த நல்ல முத்துக்கு நிகராகவும், கடலில் சென்று வலையை கொண்டு அதிக மீன்களை பிடிக்கும் செயலுக்கு ஒப்பாகவும் சொல்கிறார்.
வேறு மாதிரியாக சொல்வதானால், நம் கிறிஸ்துவ வாழ்வு என்பது, அதிக மதிப்புடைய செல்வங்கள் நிறைந்தது. நமது தங்க பெட்டிகளில் தேவையில்ல்லாத குப்பைகள் இருக்கிறது, அதனை துடைத்து எரிந்து விட்டு , விண்ணரசின் பொக்கிசங்களை சேமிக்க அதனை தயார் படுத்தவும். நம்மிடம் உள்ள சில செல்வங்கள், திறமைகள் விண்ணக அரசிற்கு தேவை இல்லாதது. அதனுடைய செல்வம் மதிப்பு மிகுந்ததாக மாற வேண்டுமெனில், அதன் மூலம் விண்ணக அரசிற்கு பயன் உள்ளதாய் மாற்றவேண்டும்.

ரோமானியர் வாசகத்தில் " கடவுளிடம் அன்பு கூர்பவர்களோடுஅதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடுஅவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார்"  நாம் நமது தவறான முத்துகளையும், தவறான மீன்களையும் தூக்கி எரிந்து நாம் வாழும்பொழுது கடவுளை போல நாமும் மாறிவிடுகிறோம். விண்ணக அரசிற்கு மிகவும் உதவி செய்ய கூடியவனாக நாம் மாறி விடுகிறோம். கடவுளின் உருவாக்கத்தில், அவரின் மிக பெரிய ஆற்றலின் , மிகுந்து இரக்கமுள்ள கடவுளின் அடியில் நமக்கு தீய செயல்கள் நடந்தாலும் கூட அதனை நம் முத்துக்கள் மிளிர்வதற்கும், இன்னும் இறையரசில் மின்னவும் நாம் அந்த தீய செயலை உபயோகிப்போம்.
முதலாவது வாசகத்தில், சாலமன் கடவுளிடம் அதிக சொத்தையும் பொக்கிசங்களையும் கேட்டிருக்கலாம், கடவுள் கண்டிப்பாக கொடுத்திருப்பார். ஆனால் அவரோ " ஞானம் நிறைந்த உள்ளத்தை" கேட்டார். அதன் மூலம் நல்லாட்சி நடைபெற உதவி கேட்டார். அவர் ஆட்சியில் சில குறைகள் இருந்தாலும், ஞானம் நிறைந்த அரசர் என உலகம் அனைத்தும் கேள்வியுற்று மிக பெரிய பெயர் பெற்றார், அதன் மூலம் பல செல்வங்களை சேர்த்தார்.
இதன் மூலம் நமக்கு கிடைக்கும் போதனை என்னவேனில், நாம் முதலில் கடவுளின் விண்ணரசின் பொக்கிசங்களை சேர்க்க வேண்டும். அதன் பிறகு, இவ்வுலகின் சொத்தக்க்களை கடவுளின் ஞானம் மூலம் எப்படி அதனை உபயோகிக்க வேண்டும் என அறிந்து விண்ணக அரசிற்காக அதனை உபயோகிப்போம். நாம் கிறிஸ்துவை எந்த அளவிற்கு அதிகமாக அன்பு செய்கிறோமோ, அந்த  அளவிற்கு எது அதிக மதிப்பு வாய்ந்தது என்று நம்மால் முடிவு செய்ய முடியும். கடவுளுக்கு வேண்டாத பொருளை நாம் அகற்ற முடியும் மேலும், மற்ற அனைத்தையும் கடவுளரசின் தேவைக்காக உபயோகிக்க முடியும் .

© 2017 by Terry A. Modica

No comments: