Friday, August 17, 2012

ஆகஸ்டு 19, 2012 ஞாயிறு நற்செய்தி மறையுரை



ஆகஸ்டு 19, 2012 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டிம் 20ம் ஞாயிறு
Prov 9:1-6
Ps 34:2-7
Eph 5:15-20
John 6:51-58
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
Description: http://www.arulvakku.com/images/pointmsg.jpg

Description: http://www.arulvakku.com/images/dot.jpgஅதிகாரம் 6
மானிடமகனின் சதையும் இரத்தமும் உணவாதல்
51 ' விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். ' 52 ' நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்? ' என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது.53 இயேசு அவர்களிடம், ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்.54 எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.55 எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்.56 எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்.57 வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்.58 விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர். ' 
(Thanks to www.arulvakku.com)

இன்றைய ஞாயிறின் நற்செய்தியில், திவ்ய நற்கருணை கட்டளையை கேட்கிறோம்: " எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். " இவர் எந்த வாழ்வை குறித்து சொல்கிறார்? அவர் வாழ்வை வாழ்வதற்கும், நம் இப்பிறப்பின் வாழ்விற்கு என்ன வித்தியாசம்?

ஒவ்வொரு திருப்பலியிலும், இயேசு நமக்கு அவரது உடலையும் இரத்ததையும் முழுதுமாக தருகிறார். முழுதும், என்றால், மனிதனாகவும், தெய்வமாகவும் நம்மில் வருகிறார். அவரது அன்பினால் முழு ஊட்டம் பெற விரும்புகிறார். சோதனையை தாங்கிகொள்ள அவரிடமிருந்து ஆற்றலை பெற வேண்டும் என விரும்புகிறார். நமது காயங்களை ஆற்றிகொள்ள அவரிடமிருந்து குணப்படுத்தலை பெற விரும்புகிறார். அதற்கும் மேலாக அவரது முழு வாழ்வையே ,கொடுத்து, மோட்சம் செல்வதற்கும் மட்டும் அல்ல , இவ்வுலக வாழ்விலே முழு கிறிஸ்துவ வாழ்வை வாழ நமக்கு கொடுக்கிறார்.
இயேசுவை பெற்ற பின்பு நாமும் அவரை போல மாற வேண்டும். திவ்ய நற்கருணையில், இயேசு தான் முழு உடலோடும் இரத்தத்தோடும் இருக்கிறார் என்று நம்பினால், நாம் ஏன் ஒவ்வொரு திருப்பலியை விட்டு வெளியே செல்லும்பொழுது, நாம் கிறிஸ்துவை போல மாறி செல்வதில்லை. ?
திருப்பலியின் ஆரம்பத்தில் நடக்கும் மன்னிப்பு வார்த்தைபாட்டில் முழு மனதோடு பங்கு கொண்டு, ஒவ்வொரு திருப்பலி வாசகத்தையும் கவனத்தோடு கேட்டு, குருவோடு சேர்ந்து "உன்னை அடைய நான் தகுதியானவில்லை , ஆனா ஒரு வார்த்தை சொன்னால், என் ஆண்மா குணமடையும்" என்ற ஜெபத்தை சொல்லி, திவ்ய நற்கருணையை, பனிவோடும், ஆவலோடும்  நாம் பெற்று கொண்டேனால், நாம் அவரது இனைந்து ஒரே உடலாகவும், இரத்தமாகவும் ஆவோம்.

இப்போது, நாமும் அவரது உடலும் இரத்தமுமாக இவ்வுலகில் இருக்கிறோம், நம்மை மற்றவர்கள் பெற்று கொள்ள தயாராக இருக்கிறோம்கிறிஸ்துவின் உண்மையான ப்ரசன்னத்தை நம் மூலம் அவர்கள் பெற்று ஊட்டமடைய ஒரு வாய்ப்பினை கொடுப்பதாக இருக்கிறோம்.

அன்பை மற்றவர்களிடம் பகிரும்பொழுது, அவர்கள் கடவுளின் அன்பை பெறுகிறார்கள். அவர்கள் அந்த அன்பை திருப்பி கொடுக்காதபொழுது, நம்மை , நம் அன்பை அவர்கள் முழுதும் ஏற்று கொண்டுவிட்டார்கள்! நாம் பெற்றதை விட அதிகம் கொடுத்திருக்கிறோம். அதே போல, இறையரசிற்காக, நமது நேரத்தையும், திறமைகளையும் கொடுக்க்ம்பொழுது, அதற்கு எதிர்பலன் பாராது கொடுக்கும்பொழுது, நாம் திவ்ய நற்கருணையாகிறோம். நாம் இயேசுவோடு ஒரே உடலாக , இரத்தமாகிறோம்.

மற்றவர்கள் நமக்கு கொடுக்காததை, இயேசுவிடமிருந்து முழுதுமாக பெற்றால், நாம் இன்னும் பலருக்கு அவரை முழுமையாக கொடுக்க முடியும். அதனால் தான், ஒவ்வொரு திருப்பலியிலும், நற்கருணை பெறுவது நமக்கு முழு ஊட்டமாக இருக்கிறது. அதுவே நம் வாழ்வின் ஊற்றாகவும் , ஆதாரமாகவும் இருக்க வேண்டும்.

© 2012 by Terry A. Modica

Friday, August 10, 2012

ஆகஸ்டு 12, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஆகஸ்டு 12, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 19ம் ஞாயிறு
1 Kings 19:4-8
Ps 34:2-9
Eph 4:30–5:2
John 6:41-51

யோவான் (அருளப்பர்) நற்செய்தி
Description: http://www.arulvakku.com/images/pointmsg.jpg

Description: http://www.arulvakku.com/images/dot.jpgஅதிகாரம் 6.
41 ' விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே ' என்று இயேசு கூறியதால் யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள்.42 ' இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா? அப்படியிருக்க, ″ நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன் ″ என இவர் எப்படி சொல்லலாம்? ' என்று பேசிக்கொண்டார்கள்.43 இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது: ' உங்களிடையே முணுமுணுக்க வேண்டாம்.44 என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.45 ″ கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத்தருவார் ″ என இறைவாக்கு நூல்களில் எழுதியுள்ளது. தந்தைக்குச் செவிசாய்ந்து அவரிடமிருந்து கற்றுக்கொண்ட அனைவரும் என்னிடம் வருவர்.46 கடவுள்தாமே கற்றுத்தருவார் என்பதிலிருந்து தந்தையை எவராவது கண்டுள்ளார் என்று பொருள் கொள்ளக்கூடாது. கடவுளிடமிருந்து வந்துள்ளவர் மட்டுமே கடவுளைக் கண்டுள்ளார்.47உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்.48 வாழ்வுதரும் உணவு நானே.49 உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர்.50 உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே.

மானிடமகனின் சதையும் இரத்தமும் உணவாதல்
51 ' விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.

(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தி, கிறிஸ்துவே, நற்கருணையை பற்றிய ஒரு விளக்கம் கொடுப்பதாக அமைந்திருக்கிறது: "என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்.48 வாழ்வுதரும் உணவு நானே" என்று இயேசு கூறுகிறார்.

"வாழ்வு தரும் உணவு நானே!" என்று ஏன் இயேசு கூறினார்? திவ்ய நற்கருணை எப்படி நமக்கு வாழ்வு தரும்?" இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்." என்று இயேசு பதில் சொல்கிறார். மாறாக சொல்வதானால், அவரை முழுமையாக நமக்காக கொடுத்தார். அவரின் வாழ்வை நமக்காக கொடுத்தார். சிலுவையில் கொடுத்தார். நமது பாவ வாழ்வு நம்மை சாவிற்கு இட்டு செல்கிறது. ஆனால், பாவமில்லாத இயேசு, நமக்கு பதிலாக, நம் சாவை அவர் எடுத்து கொண்டு, நமக்கு நித்திய வாழ்வை கொடுத்துள்ளார்.

உயிர்த்தெழுந்த அவரது உடல், சாவை வென்று வந்தது. அவரது உடல், சிலுவை அறைபட்டு, உயிர்ந்தெழுந்த அவரது உடல் தான் நம் வாழ்வின் சக்தியாகும். இதனை தான் நாம் திருப்பலியில் கொண்டாடுகிறோம், சிலர் இதனை தவறாக, 'கிறிஸ்துவோடு இணைகிறோம்' என்று புரிந்து கொள்கிறார்கள்.

"கோவில் பீடத்தில் நடக்கும் தியாகம்" நாமும் கிறிஸ்துவோடு கலந்து கொள்கிறோம் என்பதை குறிக்கிறது. அவரது வாழ்வில், அவரது இறைசேவையில், நமது பாவங்களுக்கான சிலுவை மரணத்திலும், உயிர்த்தெழுதலிலும், மோட்சத்திற்கு செல்வதிலும் நாம் கிறிஸ்துவோடு கலந்து கொள்கிறோம். நமது வாழ்வை அவருக்கு அர்ப்பனித்து, இயேசுவோடு நாம் இனைகிறோம். நம் மூலம இறைவார்த்தையை அவர் பரப்புகிறார். கிறிஸ்துவின் விருப்பத்திற்காக, நம் விருப்பங்களை தியாகம் செய்கிறோம். இதனால் கிறிஸ்துவோடு சேர்ந்து மோட்சத்திற்கு, அவரை பின் செல்கிறோம்.
ஒவ்வொரு கத்தோலிக்க திருப்பலியிலும், இயேசுவின் உடலையும் இரத்தத்தையும், உணவாக நமக்கு நன்மை வடிவில் கொடுக்கபடுகிறது: வாழ்வின் உணவாக. போப் ஜான் பால், அவருடைய மறைகல்வி குறிப்பேடுகளில் குறிப்பிட்டு உள்ளது போல, "திவ்ய நற்கருணை தான் , கிறிஸ்தவ வாழ்விற்கு ஆதாராமாயி இருக்கிறது " என்பதை போப் இது சரியான வார்த்தை என்று முன் மொழிந்துள்ளார்.
கிறிஸ்துவின் கடைசி இரவு உணவின் போது ஆரம்பிக்கப்பட்டு நற்கருணை நமக்கு கிடைக்கபெறுகிறது. அப்போஸ்தலர்கள் மூலமும், தொடர்ந்து குருக்கள் மூலமும் நமக்கு கிடைக்க பெறுகிறது. கிறிஸ்துவின் திருவழிபாட்டில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும், திவ்ய நற்கருணையை , திருப்பலியில் அதன் ப்ரசன்னத்தை நாம் போற்றி ஏற்றுகொள்ள வேண்டும். ஆனால் அதனை ஏற்று கொள்ள நம்மில் உள்ள தடையை முதலில் போக்க வேண்டும்.
கிறிஸ்து நற்கருணையில் முழுதுமாக இருக்கிறார். கடைசி இரா உணவில் எப்படி அப்போஸ்தலர்களுடன் இருந்தாரோ, அவ்வாறே திருப்பலியிலும் முழுதுமாக நற்கருணையில் வீற்றிருக்கிறார்.

கடைசி இரவு உணவில், அப்போஸ்தலர்களிடம் அமர்ந்து என்ன சொன்னாரோ அதனையே, "இதோ என் உடல், இதோ என் இரத்தம்" என்று அவரை ஆராதித்து வணங்கும் ஒவ்வொருவருக்கும்   இவ்வாறு சொல்கிறார். இயேசு தான் நம்மை காப்பவர் என்று நம்பு ஒவ்வொருவருக்கும் , அவரின் திவ்ய நற்கருனைதான் , நிலையில்லா வாழ்வின் ஊற்றாக, ஆதாரமாக இருக்கும்.

© 2012 by Terry A. Modica

Friday, August 3, 2012

ஆகஸ்டு 5, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஆகஸ்டு 5, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 18ம் ஞாயிறு

Ex 16:2-4, 12-15
Ps 78:3-4, 23-25, 54
Eph 4:17, 20-24
John 6:24-35

யோவான் (அருளப்பர்) நற்செய்தி
Description: http://www.arulvakku.com/images/pointmsg.jpg

Description: http://www.arulvakku.com/images/dot.jpgஅதிகாரம் 6

24 இயேசுவும் அவருடைய சீடரும் அங்கு இல்லை என்பதைக் கண்ட மக்கள் கூட்டமாய் அப்படகுகளில் ஏறி இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்றனர்.25 அங்கு கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, ' ரபி, எப்போது இங்கு வந்தீர்? ' என்ற கேட்டார்கள்.26 இயேசு மறுமொழியாக, ' நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.27அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார் ' என்றார்.28அவர்கள் அவரை நோக்கி, ' எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்? ' என்று கேட்டார்கள்.29 இயேசு அவர்களைப் பார்த்து, ' கடவுள் அனுப்பியவரை நம்பவதே கடவுளுக்கேற்ற செயல் ' என்றார்.30 அவர்கள், ' நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்? அதற்காக என்ன அரும் செயல் செய்கிறீர்?31 எங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டனரே! ' அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார் ' என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா! ' என்றனர்.32 இயேசு அவர்களிடம், ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே.33 கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது ' என்றார்.

வாழ்வுதரும் உணவு
34 அவர்கள், ' ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும் ' என்று கேட்டுக்கொண்டார்கள்.35 இயேசு அவர்களிடம், ' வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், "27அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். " என்று இயேசு சொல்கிறார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஒவ்வொரு நாளும் உங்கள் ஆண்மாவை வளர்க்கும் ஒவ்வொரு செயலிற்கும் கடுமையாக உழைத்து, முடிவில்லா வாழ்வுக்கு தயார்படுத்துங்கள்.

' கடவுள் அனுப்பியவரை நம்பவதே கடவுளுக்கேற்ற செயல்என்று இயேசு சொல்கிறார். ஏன் இதனை 'செயல்' என சொல்கிறார்?
முழுமையான விசுவாசம் கொள்ள, நம்மில் உள்ள சந்தேகங்களை, அவநம்பிக்கைகளை அதன் மூலம், இயேசுவின் மேல் உள்ள நம்பிக்கை தகர்த்துவிடுமோ என நாம் நினைத்தால், அதனையெல்லாம் போக்கி, இயேசுவின் வார்த்தைகள் மேல் நம்பிக்கை கொண்டு, அவரின் வழீயில் நாம் செல்வோம் என்பதை உறுதிபடுத்திகொள்ள வேண்டும்

இந்த செயல்
1) அவநன்ம்பிக்கையை தரும் விசயங்களை நாம் கண்டறிய வேண்டும்
2) நாம் கிறிஸ்துவை நம்பினால், நமக்கு என்ன தீங்கு நேருமோ என பயப்படும் விசயங்களை ஒதுக்கி தள்ள வேண்டும்.
3) உண்மையை முழுமையாக புரிந்து , இன்னும் மேலும் மேலும் உண்மையை அறிந்து  பரிசுத்த வாழ்வில் முன்னேற வேண்டும்.
நாம் பயப்படும் அத்தனையுமே உண்மைக்கு புறம்பானது ஆகும்.

"கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது" என்று இயேசு கூறுகிறார். அவரையே திவ்ய நற்கருணையாக இருப்பதை, ஒவ்வொரு திருப்பலியிலும், நம்மில் வருவதை நமக்கு உணர்த்துகிறார். திவ்ய நற்கருணை மூலம், நீங்கள் முழுமையான பயனடைய, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? திவ்ய நற்கருணை பெற உங்களுக்குள் ஏதாவது தடை இருக்கிறதா? அந்த தடையை உடைக்க கடினமாக உழையுங்கள். உங்கள் நித்திய வாழ்விற்கு அது கண்டிப்பாக மிக பெரிய வித்தியாசத்தை கொடுக்கும். முழுமையான உள்ளத்துடன் கிறிஸ்துவுடன் இணைய முற்பட்டல்., கிறிஸ்துவும், எல்லா வழிகளிலும் உங்களை தயார் படுத்துவார்.


ஏனெனில், நற்கருணை தான் இயேசு. அது நம்மை குணமாக்கும், பரிசுத்தமாக்கும், கிறிஸ்துவை போல நம்மை மாற்றும். எனினும், இதற்கு நாம் முழு முயற்சி எடுத்து இந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும். இதில் ஏன் சோம்பேறிதனம் ஏற்படுகிறது. நம் கடின உழைப்புதான் , நம் விசுவாசத்தை முன்னுறுத்தி நம்மை நித்திய வாழ்விற்கு அழைத்து செல்லும்.
.

© 2012 by Terry A. Modica

Friday, June 1, 2012


ஜூன் 3 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
பரிசுத்த திரித்துவ திருவிழா

மத்தேயு நற்செய்தி             

Deut 4:32-34, 39-40
Ps 33:4-6, 9, 18-20, 22 (with 12b)
Rom 8:14-17
Matt 28:16-20

அதிகாரம் 28
இயேசு சீடருக்குக் கட்டளை கொடுத்து அனுப்புதல்
(மாற் 16:14 - 18; லூக் 24:36 - 49; யோவா 20:19 - 23; திப 1:6 - 8)
16 பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள்.17 அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள்.18 இயேசு அவர்களை அணுகி, ' விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது.19 எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன் ' என்று கூறினார்.
(thanks to www.arulvakku.com)


நீங்கள் கடவுளுக்கு மிகவும் முக்கியமானவர். நீங்கள் கடவுளுக்கு சொந்தமானவர்கள்: தந்தை கடவுள், மகன் மற்றும் பரிசுத்த ஆவியானவராக இருக்கிற கடவுளுக்கு சொந்த மானவர்கள்.

அதனால் தான், நமக்கு ஞானஸ்நாணம் கொடுக்கும் பொழுது, திரித்துவ கடவுள் பெயரால் கொடுப்பது மிகவும் முக்கியமானது. அதனால் தான் இயேசு இன்றைய நற்செய்தியில், "தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்",  என்று கூறினார். கடவுள் மூவொரு கடவுளாக முழுதுமாக உள்ளார். மூவொரு கடவுளும், உங்களோடு  தனிப்பட்ட நட்பு வைத்து கொள்ள ஆசைபடுகின்றார்.

மூவொரு கடவுளின் ஒவ்வொருவரோடும், நீங்கள் அன்பான நட்பை கொண்டு வாழ்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? தந்தை கடவுளோடு நீங்கள் பேசியதுண்டா? மீட்பராகிய மகனோடு தனியாக அமர்ந்து பேசியதுன்டா? பரிசுத்த ஆவியோடு தனியாக உரையாடியதுன்டா? நீங்கள் மனதளவில் காயப்படும்பொழுது, தந்தை கடவுளின் மடியில் அமர்ந்து, அவரது ஆறுதலை பெற்று கொண்டீர்களா? சோதனைகளை வெல்ல முற்படும்பொழுது, இயேசுவின் ஆற்றலை பெற்று சோதனைகளை வென்றதுன்டா? விசுவாசத்தில், குழுப்பமடைந்து, போராடி கொண்டிருக்கும்பொழுது, பரிசுத்த ஆவியின் ஆலோசனைகள் உங்களுக்காக தயாராக இருப்பது தெரியுமா?

இயேசுவின் தந்தை கடவுள், நமக்கும் தந்தைதான் . அவர் நமக்கு தண்டனை கொடுக்கும் அதிகாரத்தில் இருந்து கொண்டு, நம்மை முழுமையாக புரிந்து கொண்டிருக்கிறா என்ற பயத்தோடு இருக்கிறோமோஉங்கள் ஞானஸ்நாணத்தில், உங்களை சந்தோசமாக தத்தெடுது உள்ளார், ஏனெனில், அவர் உங்கள் அன்பான , நமது தேவைகளை கவனித்து கொள்ளும் அப்பாவாக இருக்கிறார்.
பரிசுத்த ஆவி இதனை உறுதிபடுத்துகிறார். கடவுளின் ஆவியானவர், நமக்கு ஆறுதலாக இருந்து, அரவனைத்து, அனைத்து பரிந்துரைகளையும் நமக்கு போதித்து, நமது வாழ்வில் முழு அன்போடும், வாழ்வில் சந்தோசத்தோடும் நம்மை வழி நடத்துகிறார்அந்த அன்பில், இயேசு தன்னையே தியாகம் செய்து, நமது பாவத்தின் தண்டனையிலிருந்து  நம்மை மீட்டு, பரிசுத்த ஆவியின் உதவியால், பரிசுத்த வாழ்வு வாழ உதவிடுகிறார்.

சக்தி தருபவராகவும், நோய் தீர்ப்பவராகவும், உதவி செய்பவராகவும் மூவொரு கடவுளாக கடவுள் இருக்கிறார். அவரது தெய்வீகத்தின் முழுமையுடன் நீங்கள் வாழ வேண்டும் என்று விரும்புகிறார்! அவரிடமிருந்து, எல்லாவற்றையும் பெற்று பயனடைய வேண்டும் என்று ஆசைபடுகிறார்.

ஞானஸ்நாணம் பெற்ற கிறிஸ்தவர்களாக, அர்ச்சிக்கபட்ட கத்தோலிக்கர்களாக கடவுளின் முழு ப்ரசன்னமும் நற்கருணையில் வீற்றிருக்கும் கடவுள் நமக்கு முழுமையாக உள்ளதுநமக்கு எதுவும் குறைவில்லை.! எல்லாமே நமக்கு கிடைக்கிறது!

© 2012 by Terry A. Modica