Thursday, August 23, 2012

ஆகஸ்டு 26, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை



ஆகஸ்டு 26, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 21ம் ஞாயிறு
Josh 24:1-2a, 15-18b
Ps 34:2-3, 16-21 (with 9a)
Eph 5:21-32
John 6:60-69


யோவான் (அருளப்பர்) நற்செய்தி
Description: http://www.arulvakku.com/images/pointmsg.jpg

Description: http://www.arulvakku.com/images/dot.jpgஅதிகாரம் 6


சீடர் முணு முணுத்தல்
60 அவருடைய சீடர் பலர் இதைக் கேட்டு, ' இதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா? ' என்று பேசிக் கொண்டனர்.61 இதுபற்றித் தம் சீடர் முணுமுணுப்பதை இயேசு உணர்ந்து அவர்களிடம், ' நீங்கள் நம்புவதற்கு இது தடையாய் இருக்கிறதா?62 அப்படியானால் மானிடமகன் தாம் முன்பு இருந்த இடத்திற்கு ஏறிச் செல்வதை நீங்கள் கண்டால் அது உங்களுக்கு எப்படி இருக்கும்?63 வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன.64 அப்படியிருந்தும் உங்களுள் சிலர் என்னை நம்பவில்லை ' என்றார். நம்பாதோர் யார், யார் என்பதும் தம்மைக் காட்டிக்கொடுக்கவிருப்பவன் யார் என்பதும் இயேசுவுக்குத் தொடக்கத்திலிருந்தே தெரிந்திருந்தது.65 மேலும் அவர், ' இதன் காரணமாகத்தான் ″ என் தந்தை அருள் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது ″ என்று உங்களுக்குக் கூறினேன் ' என்றார்.

பேதுருவின் அறிக்கை
66 அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரை விட்டு விலகினர். அன்று முதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை.67 இயேசு பன்னிரு சீடரிடம், ' நீங்களும் போய் விட நினைக்கிறீர்களா? ' என்று கேட்டார்.68 சீமோன் பேதுரு மறுமொழியாக, ' ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.69 நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். அதை நம்புகிறோம் ' என்றார்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், கிறிஸ்துவின் உண்மையான திருப்பணியை பற்றி அறிந்த பின்னர், அவரை கேட்டு, அவரை பின் சென்றவர்கள் பலர் உடனே அவரை விட்டு விலகியதை பார்க்கிறோம். அவர் போதனை செய்த விசயத்தை எப்படி அவர்கள் தவற விட்டார்கள்? "நான் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன" என்று இயேசு கூறுகின்றார். ஆனால் அவர்கள் சாதாரண வார்த்தையை தான் கேட்டனர், உள்ளர்த்ததை அவர்கள் புரிந்துகொள்ள வில்லை. அதனால் இயேசு கொடுத்த வாழ்வை அவர்கள் தவற விட்டுவிட்டார்கள். அந்த வாழ்வு: சந்தோசமான வாழ்வு, வெற்றியின் வாழ்வு, நித்திய வாழ்வு, மற்றும் குணமளிக்கும் வாழ்வு.


இயேசுவை புனிதமாகவோ, ஆண்மீகத்துடனும் அவர்கள் பார்க்கவில்லை. அவரை மனிதனாகவே பார்த்தனர், மெசியாவாக பார்க்கவில்லை, உடல் நோய்களை குணமளிப்பவராகவே பார்த்தனர், ஆண்மாவை குணமளீப்பவராக பார்க்கவில்லை. நமது பாவங்களிலிருந்து விடுதலை அளிப்பவராக பார்க்காமல், ரோமானியர்களிடமிருந்து விடுதலை அளிப்பவராக பார்த்தார்கள்.

அதனால் , அவர உடலையும், இரத்ததையும் (போன வார, ஞாயிறு நற்செய்தியில் வந்த வசணம்), உண்பது என்பது, ஏற்று கொள்ளக்கூடியதாக இல்லை. அதனால், இவ்வார்த்தைகளி அமிழ்ந்து போயிருக்கும், ஆவியும் அதன் வாழ்வையும் அவர்களால் அறிந்து கொள்ளவில்லை. அதனால் இயேசுவை பின் செல்வது என்பது மிகவும் நம்ப முடியாமல், கடினமான ஒன்றான செயலாக ஆனது.

உண்மையான சீடர்கள் - இன்னும் அதிகமாக இயேசுவிடமிருந்து கற்று கொள்ள காத்திருப்பவர்கள் - அவர்களும், இயேசு என்ன சொல்ல வருகிறார் என்பதை உண்மையாக அறிந்திருக்கவில்லை. ஆனால், அவரின் வார்த்தைகளில் தூய ஆவி இருந்ததை அறிந்து கொண்டார்கள்.

இயேசு எத்தனை முறை, மற்றவர்கள் மூலமாக உங்களிடம் வந்திருக்கிறார், ஆனால் அதனை நீங்கள் அறிந்து கொள்ளவில்லை? ஏனெனில், நீங்கள், தனி மனிதராக பார்த்தீர்கள், ஏனெனில், கிறிஸ்துவிற்கு மாறான அந்த மனிதனின் குனாதிசியங்களை பார்த்தீர்கள்.

ஒவ்வொரு மனிதனும் கடவுளை போன்றே படைக்கப்பட்டிருக்கிறோம். பரிசுத்த ஆவியானவர் இவ்வாழ்வை கொடுக்காவிட்டால் எந்த மனிதனும் வாழமுடியாது. கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களிடத்தில் கூட கிறிஸ்து இருக்கிறார். வெற்றியான வாழ்வு வாழ, நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனின் அடியிலும் இருக்கும் இயேசுவை நாம் காணவேண்டும்.
திருப்பலியில் இயேசுவின் ப்ரசன்னத்தை அறிந்து கொள்ள நீங்கள் சிரமபடுகிறீர்களாமற்றவர்கள் மூலம் வரும் இயேசுவை கண்டு கொள்ள பயிற்சி செய்து கொள்ளுங்கள். அதன் மூலம், திவ்ய நற்கருணையை புதிய வழியில் காண்பீர்கள்.
© 2012 by Terry A. Modica

Friday, August 17, 2012

ஆகஸ்டு 19, 2012 ஞாயிறு நற்செய்தி மறையுரை



ஆகஸ்டு 19, 2012 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டிம் 20ம் ஞாயிறு
Prov 9:1-6
Ps 34:2-7
Eph 5:15-20
John 6:51-58
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
Description: http://www.arulvakku.com/images/pointmsg.jpg

Description: http://www.arulvakku.com/images/dot.jpgஅதிகாரம் 6
மானிடமகனின் சதையும் இரத்தமும் உணவாதல்
51 ' விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். ' 52 ' நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்? ' என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது.53 இயேசு அவர்களிடம், ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்.54 எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.55 எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்.56 எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்.57 வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்.58 விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர். ' 
(Thanks to www.arulvakku.com)

இன்றைய ஞாயிறின் நற்செய்தியில், திவ்ய நற்கருணை கட்டளையை கேட்கிறோம்: " எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். " இவர் எந்த வாழ்வை குறித்து சொல்கிறார்? அவர் வாழ்வை வாழ்வதற்கும், நம் இப்பிறப்பின் வாழ்விற்கு என்ன வித்தியாசம்?

ஒவ்வொரு திருப்பலியிலும், இயேசு நமக்கு அவரது உடலையும் இரத்ததையும் முழுதுமாக தருகிறார். முழுதும், என்றால், மனிதனாகவும், தெய்வமாகவும் நம்மில் வருகிறார். அவரது அன்பினால் முழு ஊட்டம் பெற விரும்புகிறார். சோதனையை தாங்கிகொள்ள அவரிடமிருந்து ஆற்றலை பெற வேண்டும் என விரும்புகிறார். நமது காயங்களை ஆற்றிகொள்ள அவரிடமிருந்து குணப்படுத்தலை பெற விரும்புகிறார். அதற்கும் மேலாக அவரது முழு வாழ்வையே ,கொடுத்து, மோட்சம் செல்வதற்கும் மட்டும் அல்ல , இவ்வுலக வாழ்விலே முழு கிறிஸ்துவ வாழ்வை வாழ நமக்கு கொடுக்கிறார்.
இயேசுவை பெற்ற பின்பு நாமும் அவரை போல மாற வேண்டும். திவ்ய நற்கருணையில், இயேசு தான் முழு உடலோடும் இரத்தத்தோடும் இருக்கிறார் என்று நம்பினால், நாம் ஏன் ஒவ்வொரு திருப்பலியை விட்டு வெளியே செல்லும்பொழுது, நாம் கிறிஸ்துவை போல மாறி செல்வதில்லை. ?
திருப்பலியின் ஆரம்பத்தில் நடக்கும் மன்னிப்பு வார்த்தைபாட்டில் முழு மனதோடு பங்கு கொண்டு, ஒவ்வொரு திருப்பலி வாசகத்தையும் கவனத்தோடு கேட்டு, குருவோடு சேர்ந்து "உன்னை அடைய நான் தகுதியானவில்லை , ஆனா ஒரு வார்த்தை சொன்னால், என் ஆண்மா குணமடையும்" என்ற ஜெபத்தை சொல்லி, திவ்ய நற்கருணையை, பனிவோடும், ஆவலோடும்  நாம் பெற்று கொண்டேனால், நாம் அவரது இனைந்து ஒரே உடலாகவும், இரத்தமாகவும் ஆவோம்.

இப்போது, நாமும் அவரது உடலும் இரத்தமுமாக இவ்வுலகில் இருக்கிறோம், நம்மை மற்றவர்கள் பெற்று கொள்ள தயாராக இருக்கிறோம்கிறிஸ்துவின் உண்மையான ப்ரசன்னத்தை நம் மூலம் அவர்கள் பெற்று ஊட்டமடைய ஒரு வாய்ப்பினை கொடுப்பதாக இருக்கிறோம்.

அன்பை மற்றவர்களிடம் பகிரும்பொழுது, அவர்கள் கடவுளின் அன்பை பெறுகிறார்கள். அவர்கள் அந்த அன்பை திருப்பி கொடுக்காதபொழுது, நம்மை , நம் அன்பை அவர்கள் முழுதும் ஏற்று கொண்டுவிட்டார்கள்! நாம் பெற்றதை விட அதிகம் கொடுத்திருக்கிறோம். அதே போல, இறையரசிற்காக, நமது நேரத்தையும், திறமைகளையும் கொடுக்க்ம்பொழுது, அதற்கு எதிர்பலன் பாராது கொடுக்கும்பொழுது, நாம் திவ்ய நற்கருணையாகிறோம். நாம் இயேசுவோடு ஒரே உடலாக , இரத்தமாகிறோம்.

மற்றவர்கள் நமக்கு கொடுக்காததை, இயேசுவிடமிருந்து முழுதுமாக பெற்றால், நாம் இன்னும் பலருக்கு அவரை முழுமையாக கொடுக்க முடியும். அதனால் தான், ஒவ்வொரு திருப்பலியிலும், நற்கருணை பெறுவது நமக்கு முழு ஊட்டமாக இருக்கிறது. அதுவே நம் வாழ்வின் ஊற்றாகவும் , ஆதாரமாகவும் இருக்க வேண்டும்.

© 2012 by Terry A. Modica

Friday, August 10, 2012

ஆகஸ்டு 12, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஆகஸ்டு 12, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 19ம் ஞாயிறு
1 Kings 19:4-8
Ps 34:2-9
Eph 4:30–5:2
John 6:41-51

யோவான் (அருளப்பர்) நற்செய்தி
Description: http://www.arulvakku.com/images/pointmsg.jpg

Description: http://www.arulvakku.com/images/dot.jpgஅதிகாரம் 6.
41 ' விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே ' என்று இயேசு கூறியதால் யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள்.42 ' இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா? அப்படியிருக்க, ″ நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன் ″ என இவர் எப்படி சொல்லலாம்? ' என்று பேசிக்கொண்டார்கள்.43 இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது: ' உங்களிடையே முணுமுணுக்க வேண்டாம்.44 என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.45 ″ கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத்தருவார் ″ என இறைவாக்கு நூல்களில் எழுதியுள்ளது. தந்தைக்குச் செவிசாய்ந்து அவரிடமிருந்து கற்றுக்கொண்ட அனைவரும் என்னிடம் வருவர்.46 கடவுள்தாமே கற்றுத்தருவார் என்பதிலிருந்து தந்தையை எவராவது கண்டுள்ளார் என்று பொருள் கொள்ளக்கூடாது. கடவுளிடமிருந்து வந்துள்ளவர் மட்டுமே கடவுளைக் கண்டுள்ளார்.47உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்.48 வாழ்வுதரும் உணவு நானே.49 உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர்.50 உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே.

மானிடமகனின் சதையும் இரத்தமும் உணவாதல்
51 ' விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.

(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தி, கிறிஸ்துவே, நற்கருணையை பற்றிய ஒரு விளக்கம் கொடுப்பதாக அமைந்திருக்கிறது: "என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்.48 வாழ்வுதரும் உணவு நானே" என்று இயேசு கூறுகிறார்.

"வாழ்வு தரும் உணவு நானே!" என்று ஏன் இயேசு கூறினார்? திவ்ய நற்கருணை எப்படி நமக்கு வாழ்வு தரும்?" இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்." என்று இயேசு பதில் சொல்கிறார். மாறாக சொல்வதானால், அவரை முழுமையாக நமக்காக கொடுத்தார். அவரின் வாழ்வை நமக்காக கொடுத்தார். சிலுவையில் கொடுத்தார். நமது பாவ வாழ்வு நம்மை சாவிற்கு இட்டு செல்கிறது. ஆனால், பாவமில்லாத இயேசு, நமக்கு பதிலாக, நம் சாவை அவர் எடுத்து கொண்டு, நமக்கு நித்திய வாழ்வை கொடுத்துள்ளார்.

உயிர்த்தெழுந்த அவரது உடல், சாவை வென்று வந்தது. அவரது உடல், சிலுவை அறைபட்டு, உயிர்ந்தெழுந்த அவரது உடல் தான் நம் வாழ்வின் சக்தியாகும். இதனை தான் நாம் திருப்பலியில் கொண்டாடுகிறோம், சிலர் இதனை தவறாக, 'கிறிஸ்துவோடு இணைகிறோம்' என்று புரிந்து கொள்கிறார்கள்.

"கோவில் பீடத்தில் நடக்கும் தியாகம்" நாமும் கிறிஸ்துவோடு கலந்து கொள்கிறோம் என்பதை குறிக்கிறது. அவரது வாழ்வில், அவரது இறைசேவையில், நமது பாவங்களுக்கான சிலுவை மரணத்திலும், உயிர்த்தெழுதலிலும், மோட்சத்திற்கு செல்வதிலும் நாம் கிறிஸ்துவோடு கலந்து கொள்கிறோம். நமது வாழ்வை அவருக்கு அர்ப்பனித்து, இயேசுவோடு நாம் இனைகிறோம். நம் மூலம இறைவார்த்தையை அவர் பரப்புகிறார். கிறிஸ்துவின் விருப்பத்திற்காக, நம் விருப்பங்களை தியாகம் செய்கிறோம். இதனால் கிறிஸ்துவோடு சேர்ந்து மோட்சத்திற்கு, அவரை பின் செல்கிறோம்.
ஒவ்வொரு கத்தோலிக்க திருப்பலியிலும், இயேசுவின் உடலையும் இரத்தத்தையும், உணவாக நமக்கு நன்மை வடிவில் கொடுக்கபடுகிறது: வாழ்வின் உணவாக. போப் ஜான் பால், அவருடைய மறைகல்வி குறிப்பேடுகளில் குறிப்பிட்டு உள்ளது போல, "திவ்ய நற்கருணை தான் , கிறிஸ்தவ வாழ்விற்கு ஆதாராமாயி இருக்கிறது " என்பதை போப் இது சரியான வார்த்தை என்று முன் மொழிந்துள்ளார்.
கிறிஸ்துவின் கடைசி இரவு உணவின் போது ஆரம்பிக்கப்பட்டு நற்கருணை நமக்கு கிடைக்கபெறுகிறது. அப்போஸ்தலர்கள் மூலமும், தொடர்ந்து குருக்கள் மூலமும் நமக்கு கிடைக்க பெறுகிறது. கிறிஸ்துவின் திருவழிபாட்டில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும், திவ்ய நற்கருணையை , திருப்பலியில் அதன் ப்ரசன்னத்தை நாம் போற்றி ஏற்றுகொள்ள வேண்டும். ஆனால் அதனை ஏற்று கொள்ள நம்மில் உள்ள தடையை முதலில் போக்க வேண்டும்.
கிறிஸ்து நற்கருணையில் முழுதுமாக இருக்கிறார். கடைசி இரா உணவில் எப்படி அப்போஸ்தலர்களுடன் இருந்தாரோ, அவ்வாறே திருப்பலியிலும் முழுதுமாக நற்கருணையில் வீற்றிருக்கிறார்.

கடைசி இரவு உணவில், அப்போஸ்தலர்களிடம் அமர்ந்து என்ன சொன்னாரோ அதனையே, "இதோ என் உடல், இதோ என் இரத்தம்" என்று அவரை ஆராதித்து வணங்கும் ஒவ்வொருவருக்கும்   இவ்வாறு சொல்கிறார். இயேசு தான் நம்மை காப்பவர் என்று நம்பு ஒவ்வொருவருக்கும் , அவரின் திவ்ய நற்கருனைதான் , நிலையில்லா வாழ்வின் ஊற்றாக, ஆதாரமாக இருக்கும்.

© 2012 by Terry A. Modica