Friday, February 14, 2014

பிப்ரவரி 16, 2௦14 , ஞாயிறு நற்செய்தி, மறையுரை


பிப்ரவரி 16, 2௦14 , ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 6ம் ஞாயிறு
Sirach 15:15-20
Psalm 119:1-2,4-5,17-18,33-34
1 Cor 2:6-10
Matthew 5:17-37

மத்தேயு நற்செய்தி


திருச்சட்டம் நிறைவேறுதல்
17 ' திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.18 ' விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.19எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவையனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.20 மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன்.

சினங்கொள்ளுதல்
21 ' கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர் ' என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்கள்.22 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; ' தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ ' முட்டாளே ' என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; ' அறிவிலியே ' என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார்.23 ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்,24 அங்கேயே பலிபீடத்தின் முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.25உங்கள் எதிரி உங்களை நீதிமன்றத்துக்குக் கூட்டிச் செல்லும் போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்து கொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள்.26கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன்.

விபசாரம்
(
மத் 19:9; மாற் 10:11, 12; லூக் 16:18)
27 ' விபசாரம் செய்யாதே ' எனக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.28 ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்; ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று.29 உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது.30 உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதையும் உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்குச் செல்வதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது.31 ' தன் மனைவியை விலக்கி விடுகிறவன் எவனும் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுக்கட்டும் ' எனக் கூறப்பட்டிருக்கிறது.32 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எவரும் தம் மனைவியைப் பரத்தைமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது. அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர். விலக்கப்பட்டோரை மணப்போரும் விபசாரம் செய்கின்றனர்.

ஆணையிடுதல்
33 ' மேலும், ″ பொய்யாணை இடாதீர். ஆணையிட்டு நேர்ந்து கொண்டதை ஆண்டவருக்குச் செலுத்துவீர் என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்கள்.34 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனென்றால் அது கடவுளின் அரியணை.35 மண்ணுலகின் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது அவரின் கால்மணை. எருசலேம் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது பேரரசரின் நகரம்.36 உங்கள் தலைமுடியின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனெனில் உங்கள் தலைமுடி ஒன்றையேனும் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ உங்களால் இயலாது.37 ஆகவே நீங்கள் பேசும்போது ' ஆம் ' என்றால் ' ஆம் ' எனவும் ' இல்லை ' என்றால் ' இல்லை ' எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது.
(thanks to www.arulvakku.com)
இயேசுவின் காலத்தில் இருந்த யூத மத குருக்கள், கடவுளின் கட்டளையை அப்படியே பின் பற்ற வேண்டும் என்ற வழக்கத்தில் இருந்தனர். எனினும் , இயேசு, அந்த சட்டங்களின் ஆழ்ந்த அர்த்தங்களை எடுத்து கூறினார். இந்த சட்டங்களின் முக்கிய நோக்கத்தை வைத்தே அதன் விளக்கத்தை கூறினார் : அன்பு

இன்றைய நற்செய்தியில், இயேசு ஒவ்வொரு சட்டங்களையும் நாம் சரியாக கடைபிடிப்பதில்லை ஏனெனில், நமது அன்பினால் அதனை கடைபிடிப்பதில்லை  என்று நமக்கு விளக்குகிறார்.
இயேசு சட்டங்களின் உண்மையான அர்த்தத்தோடு அதனை கடைபிடித்தார். அதனால் தான், நம் கீழ்படியாமைக்காக , நமக்காக மரணித்து , அவரது எல்லையில்லா அன்பை நமக்கு கொடுத்தார் .
கிறிஸ்துவை பின்பற்றுபவர்களான நாமும், தாராளாமாக அன்பில் நிலைத்திருக்க வேண்டும். எல்லா கட்டளைகளையும் கடைப்பிடித்து, - உண்மையான கீழ்படிதல் உடன் – முழு இருதயத்தோடு, கடவுளின் அன்பை வேண்டி, எல்லா நேரங்களிலும்,  நம் மேல் நாம் அன்பு செலுத்துவது போல, மற்றவர்களை அன்பு செய்ய வேண்டும்.

வார்த்தைகளின் அர்த்தத்தை எப்படி அன்பின் கட்டளையாக மாற்ற முடியும் என்பதை இயேசு விளக்கி சொல்கிறார். ஒவ்வொரு மாதிரியிலும், இயேசு, மிகுந்த அன்பின் ஊடாக அந்த பிரச்சினைகளை கையாள வேண்டும் என்று சொல்கிறார். அந்த பிரச்சினைகள் எவ்வளவு கடினமாக இருந்தாலும், அன்பினாலேயே அதனை கையாளவேண்டும் என்று நமக்கு விளக்குகிறார்

இயேசுவின் முதல் தலைப்பு கோபம்: கோபம் கொள்கிறவர் தன்டனைக்குள்ளானவர் என்று கூறுகிறார். அதற்கு பரிகாரத்தையும் கூறுகிறார். யாரோடு பகை உண்டோ அவர்களிடத்தில் சமாதானம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். இதனை, கடவுளை ஆராதனை செய்வதை விட முக்கியமானது என்பதை வலியுறுத்தி கூறுகிறார். நமது கோபம் , அன்பினால் மாற்றப்பட்டவுடன் கடவுளை ஆராதிப்பது எவ்வளவு நன்றாக இருக்கும் என்று யோசித்து பாருங்கள்? கடவுளே அன்பானவர்?
அடுத்த விசயமாக, அதிக ஆசை கொள்தளையும், இச்சையையும் பற்றி பேசுகிறார். இது அன்பிற்கு எதிரானது. ஏனெனில், மற்றவர்ல ஒரு பொருளாகவே கையாள படுகிறார்கள். சரியான திருமணத்திலிருந்து விலகுவது என்பது , கிறிஸ்து அன்பு செய்வது போல நம்மால் அன்பு செய்ய இயலவில்லை என்பதை காட்டுகிறது. கிறிஸ்து முழுமையான அன்பை கொடுத்து, கஷ்டமான நேரங்களில், தியாகத்தையும் அன்பையும் செய்தல் வேண்டும் என்று நமக்கு படிப்பினை கொடுக்கிறார் மறு மனம் என்பது, முன்றைய திருமணத்தில் கணவனையோ மனைவியையோ நாம் அன்பு செய்யாமல் இருக்கிறோம் என்பதை குறிக்கிறது.
இந்த போதனைகளை வாழ்க்கையின் மற்ற பாகங்களுக்கும் இயேசு கொண்டு செல்கிறார். ஒரு சத்தியத்தை உடைப்பது என்பது அன்பிற்கு எதிரானது. பொய் சொல்வதும், பொறுப்புகளை தட்டி கழிப்பதும் அன்பிற்கு எதிரானது. இந்த நற்செய்தியோடு இணைந்த எல்லா மலை பிரசங்கங்களும் , எப்படி அன்பு செய்வது என்று விளக்கப்பட்டுள்ளது.
© 2014 by Terry A. Modica


Friday, February 7, 2014

பிப்ரவரி 9, 2௦14 ஞாயிறு நற்செய்தி மறையுரை


பிப்ரவரி 9, 2௦14 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 5ம் ஞாயிறு
Isaiah 58:7-10
Ps 112:4-9
1 Cor 2:1-5
Matthew 5:13-16

மத்தேயு நற்செய்தி (5:13-16)
13 ' நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது.14 நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது.15 எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும்.16இவ்வாறே உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க அப்பொழுது   அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.
(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், இயேசு “நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்” என்று நம்மிடம் சொல்கிறார். உப்பாக இருப்பதன் அர்த்தம் என்ன? உப்பு என்ன செய்கிறது என்று யோசித்து பாருங்கள். உப்பு  உணவிற்கு சுவையை கூட்டுகிறது.
உப்பின் உவர்ப்பு போய்விட்டால் என்ன ஆகும் என்ற கேள்வியையும் இயேசு எழுப்புகிறார். அதனை மீண்டும் பெறுவது எப்படி? அதற்கு பதில்: கடவுள் நம்மை மீண்டும் உப்பாக கடவுள் மாற்ற நாம் அனுமதிக்க வேண்டும்
உங்கள் ஞானஸ்நாணத்தில், நீங்கள் உப்பு சுவை உள்ளவராக மாற்றப்படுகிறிர்கள், கடவுளின் உயிரான அன்புடனும், அமைதியுடனும், மகிழ்வுடனும் கலக்கிறீர்கள் . பயனுள்ள கிறிஸ்தவர்கள், அவர்கள் மத, மன மாற்றத்தின் போது, கடவுளின் வாழ்க்கையுடன் – கடவுளின் அன்பு, அமைதி, மகிழ்ச்சி மற்றும் பல -  அனைத்தும் அவர்களை சுற்றி உள்ளவர்களுக்கும் அதநை பகிர்ந்து கொள்வர்.

ஆனால், அதிகமாக முயற்சி செய்வது பற்றி கவனத்துடன் இருங்கள்!, உப்பு அதிகமான உணவை என்ன செய்வீர்கள்? சுவை அவ்வளவு நன்றாக இருக்காது. நம் எவ்வளவு நல்ல எண்ணத்துடன் இருந்தாலும், அதிகமாக முயற்சி செய்தால், அது நல்லது செய்வதை விட கெட்டதாக தான் முடியும்
இயேசுவின் அன்பை நம்மிடமிருந்து பெறுபவர்கள், அவர்களை நாம் நடத்தும் விதத்தில்,இயேசுவின் அவரின் அமைதியை அவர்களிடம் நாம் கொடுக்கும் பொழுது, அவரின் சந்தோசத்தை நம் வாழ்வின் மூலம்  உடனடியாக இயேசுவின் பக்கம் திரும்புவர். அவர்கள் எப்படி இருந்தாலும், அவர்களை இயேசு அன்பு செய்ய தயாராக இருக்கிறார் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இயேசு மிகவும் மென்மையானவர், பரிசுத்த வாழ்வில் வளர உண்மையாக இயேசு உதவுகிறார். பிரச்சினைகளை , கஸ்டங்களை ஆசிர்வாதமாகவும், சந்தோசமாகவும் மாற்றக்கூடியவர் இயேசு என்று அவர்கள் அறிதல் வேண்டும்
இயேசு நம்மை ஒளியாக இருக்கவும் அழைக்கிறார். அதனை மற்றவர்களுக்கு தெரியும்படி இருக்க வேண்டும் என்று கூறுகிறார். – ஆனால், மற்றவர்களின் கண்களை மூடும் அளவிற்கு அந்த ஒளி இருக்க கூடாது. மற்றவர்களின் வாழ்வில்  இயேசுவின் பிரசன்னத்தை கொண்டுவர, நாம் இயேசுவின் ஒளியை நம்மில் ஒளிர விட வேண்டும். கிறிஸ்து நம்மில் ஒளிர நாம் அனுமதித்து, அதனை மற்றவர்கள் கவனிக்க செய்தல் வேண்டும்.
கூடுதலாக, இயேசு நாம் அனைவரும், ‘நகர்’ ஆக இருக்க வேண்டும் என்று கூறுகிறார். நாம் தனியாக இருந்தால், நம்மால் மன மாற்றம் செய்ய முடியாது. ‘நகர்’ என்றால், கிறிஸ்தவர்களின் குழு: ஒரு பங்கு, குடும்பம், கோவில் குழு. கிறிஸ்தவர்களாக இருப்பது என்பது, கிறிஸ்தவ குழுவோடு இருத்தல் ஆகும். நம் ஒளி மற்றவர்களின் ஒளியோடு இணையும் பொழுது, எல்லா ஒளியும் இணைந்து உலகிற்கு கிறிஸ்துவை இன்னும் பெரிதாக காட்ட முடியும். என்? ஏனெனில், கிறிஸ்துவை நம்பாதவர்கள், இதனை பார்த்து இவ்வளவு பேர், கிறிஸ்துவின் அன்புடன் கலந்து, ஒருவருக்கொருவர் அன்போடு இருக்கிறார்களே: எவ்வித நிபந்தனையுமின்றி, தாராள குணத்துடன், ஒரு பணியாளின் குணத்தோடு அன்புடன் இருப்பதை அவர்கள் பார்க்க முடியும்
நம் ஒருவருக்கொருவர் கிறிஸ்துவின் ஒளியாக மற்றவர்களுக்கு இருக்கிறோம். ஒருவருக்கொருவர் உப்பாக சுவை ஊதடுக்கிறோம். மற்றவர்களின் துணை இல்லாமல், நமது ஒளி சற்று மங்கி தான் காணப்படும். நமது உப்பு சுவை உவர்ப்பாக காண்பிக்கும். மேலும், கடவுளின் இறையரசில் நாம் உதவாதவனாகி விடுவோம்.

© 2014 by Terry A. Modica

Saturday, February 1, 2014

பிப்ரவரி 2 2௦14 , ஞாயிறு நற்செய்தி, மறையுரை

பிப்ரவரி 2 2௦14 , ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டவரின் காணிக்கை பெருவிழா
Malachi 3:1-4
Ps 24:7-10
Hebrews 2:14-18
Luke 2:22-40


இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல்
22 மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள்.23 ஏனெனில், ' ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும் ' என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது.24 அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.25 அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார்.26 ' ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை ' என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார்.27 அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது.28 சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி,29 ' ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர்.30ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு,31 நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன.32 இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை ' என்றார்.33 குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர்.34 சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, ' இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்.35 இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும் ' என்றார்.36 ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர்; மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்;37 அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலைவிட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார்.38 அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப்பற்றிப் பேசினார்.

நாசரேத்துக்குத் திரும்பிச் செல்லுதல்
39 ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்துமுடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள்.40 குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.

(thanks to www.arulvakku.com)

இன்றைய ஞாயிறில் ஆண்டவர் இயேசுவை காணிக்கையாக ஒப்பு கொடுக்கப்பட்டதை கொண்டாடுகிறோம். குழ்ந்தை இயேசு கடவுளுக்கு அர்ப்பநிக்கப்பட்டதால், அவரின் முழு வாழ்வும் , அவரது இறப்பும் கூட கடவுளுக்கு ஒப்புகொடுக்கபட்டது – நமக்காக .

உங்கள் வாழ்வை கடவுளுக்கு ஒப்பு கொடுத்துள்ளீர்களா?

உங்கள் இறப்பையும் கடவுளுக்கு அர்ப்பணித்தால் என்ன? உங்கள் கடைசி மூச்சு கூட இறைவனுக்கு சேவை செய்ய நீங்கள் கடவுளிடம் கேட்டால் கண்டிப்பாக கிடைக்கும். நீங்கள் இவ்வுலகை விட்டு மோட்சத்திற்கு செல்லும்பொழுது எந்த மாதிரியான தேவ சாட்சியத்தை இங்கே விட்டு செல்ல இருக்கிறீர்கள்?

உங்கள் ஞானஸ்நாணத்தில் நீங்கள் கிறிஸ்துவின் வாழ்விலும், மரணத்திலும், அவரின் இரத்சிப்பிலும் மீண்டும் பிறக்கிறீர்கள், ஆனால், முழு மனதோடு, முழு இருதயத்தோடு  நீங்கள் உங்களை அவருக்கு அற்பணித்தீர்களா? ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணப்பொழுதும் இந்த  அர்ப்பணிபை நாம் செய்து கொண்டே இருக்க வேண்டும்  ஞானஸ்நாணத்தில் மட்டுமல்ல.

இதற்கு அர்த்தம் என்ன என்றால், தொடர்ந்து நம் ஜெபித்து கொண்டே இருக்க வேண்டும், எவ்வளவு வேலை இருந்தாலும்

இதன் அர்த்தம் என்ன என்றால், ஒவ்வொரு சூழ் நிலையிலும், அதற்கு தகுந்தார் போல நாம் நடந்து கொள்ளாமல், கடவுளின் விசுவாசத்தின் மூலம் நாம் நடந்து கொள்ள வேண்டும்.

இதற்கு அர்த்தம் என்ன என்றால், முழு இருதயத்தோடு எந்நேரமும் கடவுளோடு தொடர்பில் இருக்க வேண்டும் , அப்படியில்லாமல், நாம் கடவுளோடு தொடர்பில் இருக்கிறோம் என்ற நினைப்பில் இருந்து விட்டு, நாம் நினைவுகளை வேறு இடத்தில் செலுத்தாமல் இருக்க வேண்டும்.
இதன் அர்த்தம் என்ன என்றால், இவ்வுலக ஆசைகளோடு , நாம் எப்படி ஒட்டி வாழ்கிறோம் என்பதை கண்டு பிடித்து , அதனை விட்டு விட்டால், நாம் கடவுளோடு இணைந்து வாழலாம்.

இதன் அர்த்தம் என்ன என்றால், எப்பொழுதுமே ஆவியில் விழிப்பாயிருப்பது .

இதன் அர்த்தம் என்ன என்றால், பரிசுத்த வாழ்வில் ஒவ்வொரு நாளும் வளர்வது.


இதன் அர்த்தம் என்ன என்றால் – தொடர்ந்து, நமக்குள்ளேயே, “கடவுளின் அன்பை நாம் முழுதுமாக இக்கணம் அனுபவிக்கிரோமோ? அப்படி இல்லையென்றால் , அவரின் அன்போடு இணைய நாம் என்ன செய்ய வேண்டும். “ என்ற கேள்விகளோடு, இன்னும் “அவரின் அன்பில் வாழ, மிகவும் கடினமாக இருந்தாலும், மற்றவர்களுக்கு நம்மிடம் உள்ளதை கொடுக்கிறோமோ? அல்லது அன்போடு வாழ என்னை நானே உட்படுத்தி கொள்கிரேனா?” என்ற கேள்விகளையும் நாம் கேட்டு நாம் திருந்தி வாழவேண்டும்.

© 2014 by Terry A. Modica

Friday, January 24, 2014

ஜனவரி 26 2014 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஜனவரி    26 2014 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 3ம் ஞாயிறு
Isaiah 8:23--9:3
Ps 27:1, 4, 13-14
1 Corinthians 1:10-13, 17
Matthew 4:12-23

மத்தேயு நற்செய்தி

இயேசு கலிலேயாவில் பணி தொடங்குதல்
(
மாற் 1:14 - 15; லூக் 4:14 - 15)
12 யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டுக் கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.13 அவர் நாசரேத்தைவிட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார்.14 இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறியது:15 ' செபுலோன் நாடே! நப்தலி நாடே! பெருங்கடல் வழிப் பகுதியே! யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பே! பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே!16காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உதித்துள்ளது. '17அதுமுதல் இயேசு, ' மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது எனப் பறைசாற்றத் தொடங்கினார்.

முதல் சீடர்களை அழைத்தல்
(
மாற் 1:15 - 20; லூக் 5:1 - 11)
18 இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது, சகோதரர் இருவரைக் கண்டார். ஒருவர் பேதுரு எனப்படும் சீமோன், மற்றவர் அவர் சகோதரரான அந்திரேயா. மீனவரான அவ்விருவரும் கடலில் வலைவீசிக் கொண்டிருந்தனர்.19 இயேசு அவர்களைப் பார்த்து, ' என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் என்றார்.20 உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.21அங்கிருந்து அப்பால் சென்றபோது வேறு இரு சகோதரர்களைக் கண்டார். அவர்கள் செபதேயுவின் மகன் யாக்கோபும் அவர் சகோதரரான யோவானும் ஆவர். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார்.22உடனே அவர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டு விட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

திரளான மக்களுக்குப் பணி புரிதல்
(
மாற் 3:7 - 12;லூக் 6:17 - 19)
23 அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்; அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.
(thanks to www.arulvakku.com)
உங்களை யார் தொந்தரவு செய்கிறது? இன்றைய நற்செய்தியில், எசாயா கொடுத்த வாக்கு நிறைவேறியதை முதல் வாசகத்தில் பார்க்கிறோம். இருளில் வாழ்ந்த மக்கள், இயேசுவின் மூலம் ஒளியை பார்த்தார்கள், அதன் மூலம் அவர்கள் குணமடைவார்கள் என்று அறிந்தார்கள். பாவ வாழ்வினால், உண்டான, துக்க  பிடையான வாழ்வை துடைத்து எரிய யார் எந்த முயற்சியும் அடைவதில்லை.?  சாத்தானின் இறப்பையும், அழித்தலையும் தன்னுள்ளே வைத்து கொள்பவர்கள் யார்? யாருடைய பிடிவாதம் உங்களை வேதனை படுத்துகிறது?
உங்கள் ஜெபத்தினாலும், விசுவாசமான அன்பினாலும், இயேசுவை அவர்களுக்கு வெளிப்படுத்தி உள்ளீர்கள். இந்த உண்மையை எதிர்த்து, அவர்கள் சண்டையிட்டாலும், இயேசுவிடமிருந்து அவர்கள் மறைந்து இருந்தாலும், கிறிஸ்துவின் மிக பெரிய வெள்ளமென உள்ள ஒளியை யாரும் மறைக்க முடியாது. மிக விரைவில், இந்த ஒளி சந்தோசத்தை கொடுக்கும், உங்களுக்கு மட்டுமல்ல, யாரையெல்லாம், மீட்க வேண்டுமோ அவர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும்.

லூக்கா நற்செய்தியில் (12:49-50), இயேசு இருளில் வாழும் மக்களை பற்றி கூறுகிறார்: “அது நிறைவேறுமளவும், நான் மன நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறேன்”. இதன் மூலம் உங்கள் வேதனையை அவர் அறிகிறார் , அவரும் அதனை உங்களோடு பகிர்ந்து கொள்கிறார். இன்னும் ஈடுபாட்டுடனும், மிகவும் ஆர்வத்துடன் உங்கள் வேதனையில் பங்கு கொள்கிறார். நீங்கள் அறிந்ததை விட, அவர் இன்னும் அதிகமாகவே செய்து கொண்டிருக்கிறார். எந்த வெற்றிக்காக வேண்டிகொள்கிறிர்களோ அதற்காக , அதனைசெய்து முடிக்க  எல்லா வகையிலும் – முடியாத காரியாமாக இருந்தாலும் – அதனை முழுமையுடன் செய்ய அயராமல் உழைத்து கொண்டிருக்கிறார்.
ஒவ்வொருவரின் கலகம் செய்யும் தன்மைகள், இறைவனிடம் வராமல் இருப்பதற்கான குணங்கள், அனைத்தும், உடைந்து போக, இறைவனின் அருளால், அவர்கள் கடவுளிடம் நெருங்க நாம் ஜெபிக்க வேண்டும். கடவுள் மற்றவர்கள் மூலம் அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர இறைவனிடம் நாம் வேண்டுவோம். அவர்கள் ஒளி பெற வேண்டுவோம் , கடவுள் அவர் வழியில் (இந்த வழி நாம் நினைக்கும் வழியாக இருக்காது) அவர்களின் கடினமான மறுப்பு கொள்கையை உடைத்தேரிக்க இறைவனிடம் நாம் ஜெபிப்போம். மனம் திரும்பியவுடன், அவர்கள் கிறிஸ்துவின் ஒளியை மற்றவர்களுக்கும் கொண்டு செல்ல ஜெபிப்போம். அவர்கள் மனம் திரும்புதல், உறுதியான , என்றென்றும் நிலைத்திருக்கும் , ஆழமான மண மாற்றமாக இருக்க வேண்டும் என ஜெபிப்போம்.
நாம் கடவுளின் மனதை மாற்ற ஜெபிக்க வேண்டியதில்லை; அவர் ஏற்கனவே, கிறிஸ்துவின் ஒளியை இருளில் வாழ்வபவர்களுக்கு கொண்டு உழைத்து கொண்டிருக்கிறார். நாம் அவர்களை கடவுளின் கைகளுக்கு கொண்டு செல்ல ஜெபிப்போம். ஏனெனில், அதனை அவர்களாகவே செய்வதில்லை.
© 2014 by Terry A. Modica



Friday, January 17, 2014

ஜனவரி 19, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஜனவரி 19, 2013  ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் இரண்டாம் ஞாயிறு
Isaiah 49:3, 5-6
Ps 40:2, 4, 7-10

1 Corinthians 1:1-3
John 1:29-34

யோவான் நற்செய்தி

29 மறுநாள் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், ' இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்.30எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்.31இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் இஸ்ரயேல் மக்களுக்கு இவரை வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன்; தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தும் வருகிறேன் ' என்றார்.32 தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது: ' தூய ஆவி புறாவைப்போல வானிலிருந்து இறங்கி இவர் மீது இருந்ததைக் கண்டேன்.33 இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் ' தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர் ' என்று என்னிடம் சொல்லியிருந்தார்.34 நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறிவருகிறேன். '
(thanks to www.arulvakku.com)
ஒவ்வொரு திருப்பலியிலும்,  யோவான் இன்றைய நற்செய்தியில் கூறுவதை, குருவானவர் கூறுவதை கேட்கிறோம்: “இவரே கடவுளின் செம்மறி, இவரே உலகின் பாவங்களை போக்குபவர்”, இதற்கு பதிலுரையாக, நாம் “ஆண்டவரே நாம் உன்னை பெறுவதற்கு தகுதியற்றவன் .. அனால் ஒரு வார்த்தை சொல்லியருளும், எனது ஆன்மா குணமடையும்”
திருப்பலியின் பாவமன்னிப்பு சடங்கில், நாம் உண்மையாக மனம் வருந்தி, பாவ மன்னிப்பு கோரினால், நமது குணப்படுத்துதல் ஆரம்பித்து விடும். நம் பாவங்கள் போக்கப்பட்டு, நாம் இயேசுவை முழு மனிதனாகவும, கடவுளாகவும், திவ்ய நற்கருணையில் பெறுவோம். அதே ஆற்றலோடு , கோவிலை விட்டு, நாம் வெளியே சென்று, யோவானை போல, நாமும், “இயேசுவை கண்டேன், கடவுளின் மகனை தரிசித்தேன்” என்று கூறலாம்.
ஒவ்வொரு திருப்பலியும், இந்த மாதிரி அனுபவத்தோடு தான் முடிகிறதா?
திருப்பலின் ஒவ்வொரு பகுதியின் இதனை நமக்கு வலியுறுத்துகிறது. இயேசு நம்மிடையே நாம் சமூகமாக ஒன்றாய் பாடும்போது இருக்கிறார். பாவ மன்னிப்பு சடங்கில் இயேசு பிரசன்னமாய் இருக்கிறார். நாம் உண்மையாக பாவமன்னிப்பு கேட்பதை உன்னிப்பாக கவனிக்கிறார். வாசகம் வாசிக்கும்பொழுது ஒவ்வொரு வார்த்தையிலும் இயேசு இருக்கிறார். ஒவ்வொரு வார்த்தையும் நம்மில் வந்து, நம் ஆன்ம வாழ்வு வளர உணவாக மாறுகிறது. பிரசங்கம் சில நேரங்களில். நன்றாக இல்லாத பொழுது, அவரின் ஆவி நமக்கு தனியாக நமக்கு சொல்லி தருகிறது. (சில நேரங்களில் தோன்றும் சில சிந்தனைகள், கடவுளின் செயலாகும்) இயேசு ஒவ்வொரு ஜெபத்திலும் இருக்கிறார். நம் ஜெபத்திலும், குருவானவர் சொல்லும் ஜெபத்திலும் இயேசு எங்கும் நிறைந்திருக்கிறார்.
ஒவ்வொரு திருப்பலியும், நம்மை மாற்றுவதற்காக உள்ளது, மேலும், கிறிஸ்துவின் உண்மையான பிரசன்னத்தை இவ்வுலகிற்கு அறிவிக்க நம்மை அனுப்ப்புகிறது.

யோவான் கூறியது போல: “அவரை எனக்கு தெரியாது”, அதனை மாற்றி சொன்னால், “நான் ரொட்டியும், திராட்சை ரசம் மட்டுமே பார்த்தேன்” மேலும், “நாம் பாவியாக இருந்தேன், நான் எவ்வளவு ஆபத்தை உண்டாக்கினேந என தெரியாது” , மற்றும், “நாம் காயமுற்று இருந்தேன் எப்படி குணமடைவது என தெரியாமல் இருந்தேன் “ என்றும் நாம் சொல்வோம்.

யோவானை போல நாமும்: “இப்பொழுது நான் அவரை கண்டுகொண்டேன், இவரை வெளிப்படுத்தும் பொருட்டே , இவர் தான் கடவுளின் மகன், பரிசுத்த ஆவியானவர் இவரை என்னில் வெளிப்படுத்தினார், இயேசு திவ்ய நற்கருணையில் இருப்பதை பரிசுத்த ஆவி என்னில் வெளிப்படுத்தினார். பரிசுத்த ஆவியானவர் தயை குணத்துடன், என் பாவங்களை சுட்டி காட்டி, அதனை விட்டு விலக உதவியாக இருந்தார். பரிசுத்த ஆவியானவர் என் காயங்களுக்கு குணமளிக்க கூடிய எல்லா உதவி உள்ள இடத்தையும் என்னை கூட்டி கொண்டு சென்றார்”

© 2014 by Terry A. Modica


Friday, January 10, 2014

டிசம்பர் 12, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


டிசம்பர் 12, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டவரின் திருமுழுக்கு பெருவிழா
Isaiah 42:1-4, 6-7
Ps 29:1-4, 9-10 (with 11b)
Acts 10:34-38
Matthew 3:13-17
இயேசு திருமுழுக்குப் பெறுதல்
(
மாற் 1:9 - 11; லூக் 3:21 - 22)
13 அதன்பின் இயேசு யோவானிடம் திருமுழுக்குப் பெறக் கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார்.14 யோவான், ' நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்? ' என்று கூறித் தடுத்தார்.15 இயேசு, ' இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை ' எனப் பதிலளித்தார். அதற்கு யோவானும் இணங்கினார்.16 இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவது போலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார்.17 அப்பொழுது, ' என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் ' என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.
(thanks to www.arulvakku.com)
இன்றைய ஞாயிறில், இயேசு இறைசேவையை ஆரம்பித்ததை , அதற்காக தன்னை ஆயத்த படுத்தி கொண்டதை நாம் கொண்டாடுகிறோம். நாமும் அதே திருமுழுக்கு பெறுகிறோம், ஞானஸ்நானத்தில் நாம் இதே அனுபவத்தை அடைகிறோம். கிறிஸ்துவின் வாழ்வில் நாம் .முழுதும்  மூழ்கிறோம். மற்ற இரண்டு அருட்சாதனங்கள் – புது நன்மையையும் , உறுதிபூசுதல் – நம் பரிசுத்த வாழ்வை உறுதி செய்து, அந்த வாழ்வை நாம் தொடர நமக்கு அதிகாரத்தையும், ஆற்றலையும் கொடுக்கிறது. இதன் மூலம் கடவுள் சொல்கிறார்: இதோ என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்: நான் தேர்ந்துகொண்டவர் அவர்: அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது: அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்:

தந்தை கடவுள் பூரிப்படையும் அளவிற்கு பரிசுத்த ஆவி உன்னில் என்ன செய்கிறார்? உங்கள் முலமாக இறையரசிற்கு எப்படி சேவை செய்கிறார். நீங்கள் இன்றைய உலகிற்கு அதே பரிசுத்த ஆவிக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து, கிறிஸ்துவின் இறைசேவையை தொடர செய்வீர்களா?
எல்லா கிறிஸ்தவர்களுக்கும், ஞானஸ்நாணம கொடுக்கப்பட்டு அவர்கள் கிறிஸ்துவின் சேவையை தொடர அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால், இறை சேவையை தொடர நாம் ஆர்வத்தோடு செயல்பட நமக்கு கடினமாக இருக்கிறது. எடுத்து காட்டாக, தீவிர நோய்கள் கொண்ட குழந்தைகளின் பெற்றோர்  மருத்துவர்களாகவோ அல்லது நர்ஸாகவோ ஆகிறார்கள், சிறு வயதில் பல்வேறு துன்பத்திற்கு ஆளானவர்கள், பெரியவர்களின் குற்றங்களுக்கு ஆளானவர்கள், வளர்ந்த பிறகு, சமூக சேவை ஆற்றுபவர்களாகவும், பல குற்றங்களால் துன்பபடும் குழந்தைகளை காப்பவர்களாகவும், மாறுகிறார்கள். பல நிறுவனங்களில் வேலை செய்யும்பொழுது துன்பத்திற்கு உள்ளானவர்கள், தனியே ஒரு நிறுவனம் தொடங்கி, அதில் பலருக்கு வேலை கொடுத்து, அவர்களை நல்ல முறையில் நடத்துவார், எப்படி என்றால், கிறிஸ்துவை நாம் எப்படி நடத்த வேண்டுமோ அதே போல.
நாம் எதிலெல்லாம் ஆர்வத்துடன் செயல்பட முடிகிறதோ, அதற்கான ஆற்றலை, கிறிஸ்துவின் பாடுகளின் மூலமும்,  ஞானஸ்நாணத்தின் மூலமும் நாம் பெறுகிறோம்.
மேலும், திருப்பலியை தொடர்ந்து நாம் கொண்டாடும்பொழுது, திவ்ய நர்கருனையின் உண்மையான அர்த்தத்தை புரிந்து அதற்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து, இறைசெவையை தொடர, நம் அழைத்தலை புதுப்பித்து கொள்கிறோம். திவ்ய நற்கருணை அருட் சாதனத்தின் முலம் நாம் புதுபிக்க படுகிறோம். கிறிஸ்து திவ்ய நற்கருணை முலம் இயேசு அவரின் இறைசேவையில் நம்மை இணைக்கிறார். அதன் முலம் நாம் இவ்வுலகை மாற்ற முடியும்.
இதனை செய்வதற்கு தந்தை கடவுள் உன்னை அழைத்துள்ளார். இந்த அழைப்பினால், தான், நீங்கள் எல்லாம் செய்கிறீர்கள், அதனால் தந்தை கடவுள் உங்களால் பூரிப்படைகிறார்.

© 2014 by Terry A. Modica

Friday, January 3, 2014

ஜனவரி 5,2013 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஜனவரி 5,2013 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டவரின் திருகாட்சி ஞாயிறு
 Isaiah 60:1-6
Ps 72:1-2, 7-8, 10-13
Ephesians 3:2-3, 5-6
Matthew 2:1-12

மத்தேயு நற்செய்தி
ஞானிகள் வருகை
1 ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து,2 ' யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம் ' என்றார்கள்.3 இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று.4 அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான்.5 அவர்கள் அவனிடம், ' யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும்.6 ஏனெனில், யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார் என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார் ' என்றார்கள்.7 பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக் கொண்டு போய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான்.8 மேலும் அவர்களிடம், ' நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன் ' என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான்.9 அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது.10 அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.11 வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.12ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.
(thanks to www.arulvakku.com)
கிறிஸ்துமஸ் விழா காலத்தில், ஞாணிகளின் வருகையும் நாம் கொண்டாடுகிறோம். குழ்ந்தை இயேசுவை அவர்கள் வீழ்ந்து வணங்கியதை நாமும் கவனமாக எடுத்து கொள்ள வேண்டும். கிரேக்க வார்த்தையான  ஞாணிக்கு அர்த்தம் என்ன என்றால், கிழ்த்த்திசை விஞ்ஞாணிகள் என்று அர்த்தம். சில நேரங்களில், நாம் அவர்களை “ஜோசியர்கள்” என்று மாற்றி சொன்னாலும், இயேசுவின் குடிலை அவர்கள் சென்று வணங்கியது, ஜோசியத்தால் அல்ல.
ஏனெனில், அவர்கள் யூதர்கள் அல்ல. யூத மீட்பரை ஆவலுடன் காண அவர்கள் உறுதியோடு இருந்தனர். இதன் மூலம் “ஆண்டவரின் திருக்காட்சி” என்று இத்திருவிழாவின் பெயருக்கு ஏற்றார் போல, அவர்கள் இயேசுவை காண வந்த்திருந்தனர். இயேசுவின் முக்கியத்துவத்தை அந்த ஞானிகள் நம்பினார்கள். உலகிற்கு அது புரியாவிட்டாலும், அவர்களுக்கும் அது புரியாவிட்டாலும், அவர்கள் இயேசுவை நம்பினார்கள்.
இயேசுவை அவர்கள் மேசியாகவும், அரசராகவும், ஆராதனை செய்தனர். அவர் எப்பட அராசராவர் என்று கூட தெரியாமல், எப்படி அவர் அரசாட்சி இவ்வுலகை மீட்க போகிறது என்று கூட தெரியாமல் ஞானிகள் இயேசுவை ஆராதித்தார்கள். அவர்கள் விஞ்ஞான அறிவியலாளர்கள், அவர்கள் மத போதனைகள் படித்து உள்ளார்கள், ஆண்டவரின் ஆவியின் தூண்டுதலோடு , அவர்கள் எல்லாம் செய்தார்கள். அதனால் அவர்கள் வாழ்வும் மாறியது.
தூய ஆவியார் ஒருவாரால் தான், ஒவ்வொருவரின் விசுவாசம் கொடுக்க முடியும். விசுவாசம், பரிசுத்த ஆவியின் கொடை. (கொரிந்தியர்கள் 1 12 பார்க்கவும்). ஆண்டவரின் திருக்காட்சி என்றால், “கண்டுபிடித்தல்”, “இரகசியத்தை வெளிப்படுத்தி நம் வாழ்வை மாற்றுதல்” என்று அர்த்தம் ஆகும்.  இந்த நாள் கடவுள் நமக்கு கொடுத்த அன்பளிப்பு ஆகும், இதன் மூலம் நாம் புது வாழ்வை வாழ ஆசை படுவதை தொடங்கி வைக்கிறது.

ஆண்டவரின் திருக்காட்சியின் மூலம் ஞானிகள் , கிறிஸ்துவின் பிரசன்னத்தில், எவ்வளவு சந்தோசத்துடன், இருந்த்திருப்பார்கள் என்பதை நம்மால் நாம் கற்பனை பண்ணி பார்க்கலாம். ஒரு ஏழையின் குடும்பத்தில் பிறந்த இந்த குழ்ந்தை எப்படி அரசராக போகிறார் என்று அவர்களுக்கு புரியாவிட்டாலும், அவரை பற்றிய ஏதாவது செய்தி இஸ்ரேலிலுருந்து வருகிறதா? என்று அவர்கள் வாழ்நாள் முழுதும் அவர் நினைவாகவே இருந்தனர். இயேசுவின் சிலுவை மரணத்தையும், அவர் சீடர்களின் போதனைகளையும் அவர்கள் கேட்டிருக்கலாம் . அதன முலம் அவர்கள் கிறிஸ்தவர்களாக மாறியிருக்கலாம். அதன் மூலம் எஞ்சியுள்ள புனித சின்னங்கள் புனிதபடுத்தபட்டுள்ளது .

© 2013 by Terry A. Modica