Friday, June 26, 2009

ஜூன் 28, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜூன் 28, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 13 வது ஞாயிறு
Wisdom 1:13-15; 2:23-24
Ps 30:2, 4-6, 11-13
2 Cor 8:7, 9, 13-15
Mark 5:21-43

மாற்கு நற்செய்தி

அதிகாரம் 5
21 இயேசு படகிலேறி, கடலைக் கடந்து மீண்டும் மறு கரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார்.22 தொழுகைக் கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து,23 ' என் மகள் சாகுந்தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள் ' என்று அவரை வருந்தி வேண்டினார்.24 இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக் கொண்டே பின்தொடர்ந்தனர்.25 அப்போது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார்.26 அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர். அவர் நிலைமை வர வர மிகவும் கேடுற்றது.27 அவர் இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையைத் தொட்டார்.28 ஏனெனில், ' நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன் ' என்று அப்பெண் எண்ணிக் கொண்டார்.29 தொட்ட உடனே அவருடைய இரத்தப் போக்கு நின்று போயிற்று. அவரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றதைத் தம் உடலில் உணர்ந்தார்.30 உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, ' என் மேலுடையைத் தொட்டவர் யார்? ' என்று கேட்டார்.31 அதற்கு அவருடைய சீடர்கள் அவரிடம், ' இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும், ' என்னைத் தொட்டவர் யார்? ' என்கிறீரே! ' என்றார்கள்.32 ஆனால் அவர் தம் மேலுடையைத் தொட்டவரைக் காணும்படி சுற்றிலும் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்.33 அப்போது அப்பெண் தமக்கு நேர்ந்ததை அறிந்தவராய், அஞ்சி நடுங்கிக்கொண்டு, அவர்முன் வந்து விழுந்து, நிகழ்ந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னார்.34 இயேசு அவரிடம், ' மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு ' என்றார்.35 அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக் கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், ' உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்? ' என்றார்கள்.36 அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், ' அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர் ' என்று கூறினார்.37 அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை.38 அவர்கள் தொழுகைக் கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார்.39 அவர் உள்ளே சென்று, ' ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள் ' என்றார்.40 அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள். ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றியபின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக் கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார்.41 சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், ' தலித்தா கூம் ' என்றார். அதற்கு, ' சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு ' என்பது பொருள்.42 உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்மறந்து நின்றார்கள்.43 ' இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது ' என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்; அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார்.



(thanks to www.arulvakku.com)

நாமும் யேசுவின் ஆடையை தொட்டு அதை உணர்ந்தால், நமக்கு எப்படியிருக்கும். மிகவும் பெரிதான விசயமாகும். யேசுவின் அருகில் இருந்தாலே, நாம் உடலாலும், உள்ளத்திலும், மனதளவிலும் நாம் குணமடைவோம். நாம் எப்படி அவரின் ஆடையை தொடமுடியும்? அதுவும் 2000 வருடங்களுக்கு பிறகு?

அவரை தொட நம்மால் முடியும். அதனை தான் யேசுவும் விரும்புகிறார். யார் யேசு, அவர் எந்தளவிற்கு நம்மை அன்பு செய்கிறார் என்பது நமக்கு புரிந்தால், நாம் அவரை நெருங்க முடியும். தொழுகை கூட தலைவருக்கு அது தெரிந்ததினால் தான், அவர் விசுவாசத்தோடு, யேசுவிடம், ". நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள் " என்று கூறினார். அவர் கண் முன் தெரிந்த விசயங்களை தான்டி அவர் யேசுவை அறிந்து கொண்டதாலேயே அப்படி கூறினார்.

யேசுவை தெரிந்து கொள்வதற்கு, நாம் தெய்வீக வாழ்வை தெரிந்திருக்க வேண்டும். அந்த தெய்வீக வாழ்வுதான், நம்மை இவ்வுலக வாழ்விலிருந்து மாற்றி யேசுவின் வாழ்க்கை போல மாற்றி, நம்மை மோட்சத்திற்கு அழைத்து செல்லும். இன்றைய முதல் வாசகம்: இறப்பு என்பது, கடவுளின் திட்டத்தில் கன்டிப்பாக இல்லை என்று கூறுகிறது. இதனையே தான், யேசு இன்றைய நற்செய்தியில் , அந்த பென்னை இறந்த பின் தான் அவள் வீட்டிற்கே செல்கிறார். கண்டிப்பாக, கடவுள் யேசு அவர் அந்த வீடு செல்லும் வரை உயிரோடயே வைத்திருக்கலாம், ஆனால், இறப்பிலிருந்து அவரால் உயிர்த்தெழ வைக்க முடியும் என்பதை இந்த உலகத்திற்கு காட்டவே யேசு இவ்வாறு செய்தார்.
நாம் மரணத்திற்கு பயந்தால், கிறிஸ்துவின் அருகாமையை ஏற்றுகொள்ளவில்லை என்று அர்த்தம். அவருடைய துனியை நம்மால் தொடமுடியும். ஆனால் நாம் அதனை பார்ப்பதில்லை, அதனால் அதன் மீது நாம் நம்பிக்கை கொள்ளவில்லை. இந்த மாதிரியான நிலைமையில், நாம் கூவி அழும் மக்களை போன்றவர்கள் . யேசு நம்மையெல்லாம் விரட்டி விட்டு, அவர் அற்புதத்தை தொடர்வார்.
நம்முடைய சோதனைகளினால், நம் வாழ்வு மிக மோசமான முடிவை நோக்கி செல்கிறது என்று நாம் பயப்பட்டால், கடவுள் எவ்வளவு ஆற்றல் உள்ளவர் என்பதை நாம் மறந்து விட்டோம். மேலும், நம்மை மீட்க நம் மீது அக்கறையுடன் உள்ளார் என்பதை மறந்துவிட்டொம். நாம் யேசுவின் அருகில் செல்ல வேண்டும். நம் கவனத்தை திசை திருப்பாமலும், எந்த ஒரு சந்தேகம் இல்லாமலும், எவ்வளவு தூரமிருந்தாலும், நாம் யேசுவை நோக்கி செல்ல வேன்டும். நமது கண்கள் யேசுவை மட்டுமே பார்த்து, நமது கைகள் அவரை தொட வேண்டும். இதனையெல்லாம், நமது ஜெபத்தில் செய்ய வேண்டும்.

கடவுள் நம் மேல் தேவையான அளவு அக்கறைபடவில்லை, நமக்கு தேவையான உதவியை செய்ய வில்லை என்று நாம் பயந்தால், யேசு எதற்காக அவரது வாழ்வை நமக்காக தந்தார், தந்தை அவரை அனுப்பினார் என்று இன்னும் நிறைய நேரம் செலவழித்து, நாம் கற்றுகொள்ள வேண்டும்.
(www.gnm.org)

Friday, June 19, 2009

ஜூன் 21, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜூன் 21, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 12ம் ஞாயிறு
Job 38:1, 8-11
Ps 107:23-26, 28-31
2 Cor 5:14-17
Mark 4:35-41

மாற்கு நற்செய்தி

அதிகாரம் 4
35 அன்றொரு நாள் மாலை நேரம். இயேசு சீடர்களை நோக்கி, ' அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள் ' என்றார்.36 அவர்கள் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு, படகில் இருந்தவாறே அவரைக் கூட்டிச் சென்றார்கள். வேறு படகுகளும் அவருடன் சென்றன.37 அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்தது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக் கொண்டிருந்தது.38 அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள், ' போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா? ' என்று சொல்லி அவரை எழுப்பினார்கள்.39 அவர் விழித்தெழுந்து காற்றைக் கடிந்து கொண்டார். கடலை நோக்கி, ' இரையாதே, அமைதியாயிரு ' என்றார். காற்று அடங்கியது; மிகுந்த அமைதி உண்டாயிற்று.40 பின் அவர் அவர்களை நோக்கி, ' ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா? ' என்று கேட்டார்.41 அவர்கள் பேரச்சம் கொண்டு, ' காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ! ' என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள்.

(thanks to www.arulvakku.com)

நான் வாழும் ப்ளோரிடாவில், தற்போது சூறாவளி காற்று வீசும் காலமாகும். இங்கே சிலர் இந்த புயலை, கடவுள் நமக்கு கொடுக்கும் தண்டனை என நினைக்கின்றனர். மனிதர்களின் தவறுகளுக்கு அவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்பதில், எல்லோரும் சரியெனவே கூறுவர். யேசு கடவுளின் கோபக்கணையை தன் உடல் மேல் ஏற்றுகொண்டு, அதன் துன்பங்களை, வலியை ஏற்று, நம் பாவங்களுக்காக, அவரது இரத்தத்தை சிந்தி, மரணமடைந்தார். இதன் மூலம், நாம் நமது பாவங்களினால் கிடைக்க வேண்டிய நீதியிலிருந்து விடுபட்டோம்.
யேசு நம்மில் உள்ள சூறாவளியை அமைதியாக்க விரும்பினார், சூறாவளியை உண்டாக்க அல்ல.
கஷ்டம், துன்பம் எல்லாம் நமக்கு தண்டனை இல்லை. அவைகள் தான் நம்மை கடவுளுக்கு இன்னும் நெருக்கத்தில் கொண்டு செல்லும் வாய்ப்பு ஆகும். நாம் எல்லாரும்,நமது வாழ்வில் சூறாவளி காலத்தை சந்திக்கிறோம். ஒவ்வொரு சூறாவளியும், யேசு நம்முடன் ஒவ்வொரு நிமிடமும் நடந்து வருகிறார் என்பதை நமக்கு புரிய வைக்கிறது. மேலும் நமக்கு உதவி தேவைபட்டாலும், இல்லாவிட்டலும் கூட நம்முடனே யேசு கிறிஸ்து இருக்கிறார். இந்த துன்ப காலங்களில் தான், நாம் இன்னும் அதிக அறிவினை பெறுகிறோம், நமது ஞாணம் இன்னும் விரிவடையும், விசுவாசத்தில் இன்னும் உறுதியடைவோம். இன்னும் பனிவும், தாழ்மையும் நமக்கு வரும். மேலும், நாம் கடவுளை நம்பியே இருப்பதால், அந்த துன்ப வேளையில், அவரின் முழு அன்பை நாம் இன்னும் சரியாக புரிந்து கொள்ள முடியும். ஆனால் இவையெல்லாம் நமக்கு கிடைக்க வேண்டுமென்றால், கடவுள் ஒரு மேஜிக் நிபுணர் போல வந்து, நம் ப்ரச்னையை நாம் நினைப்பது போல முடித்து வைப்பார் என்று எதிர்பார்க்காமல் இருக்க வேன்டும்.

இன்னும் சில சூறாவளிகள் இவ்வுலகில் தொடர்ந்து வந்து கொண்டிருப்ப்பது, ஏனென்றால், நாம் இன்னும் கிறிஸ்துவின் உண்மையான ப்ரசன்னத்தை அவர்களுக்குள் கொண்டு வரவில்லை. நாம் நமது அனுபவங்களின் மூலம் பலனடைந்த பின், நாம், மற்றவர்களும், அவர்களின் துன்பங்களை தாங்கி கொள்ள நாம் உதவ வேன்டும். யேசு இந்த உலகில் உபயோக்கும் கரங்களாக நாம் ஆகவேன்டும். அதன் மூலம், நமது துன்பங்கள், வீனாகவில்லை என்பதை நாம் அறிவோம். இதன் மூலம் நம் துன்பங்களினால் ஏற்பட்ட மன் சஞ்சலங்கள்,வருத்தங்கள் எல்லாம் மறைந்து நம்மில் அமைதி ஏற்படும்.

சில நேரங்களில், நாமெ நம்முடைய தவறான முடிவால்(பாவங்களால்), சூறாவளியை , துன்பத்தை ஏற்படுத்தி கொள்கிறோம். ஆனால், கடவுள் நமக்கு தன்டனை கிடைக்க வேண்டும் என்று விரும்பவில்லை. கடவுள் அதிகமான சிவப்பு கொடி எச்சரிக்கை செய்கிறார். இருந்தும், நாம் துன்ப சூறாவளியில் மாட்டிவிட்டல், நாம் நமது கொந்தளிப்பை அமைதிபடுத்தி, அவரோடு இனக்கம் கொண்டு, அவரோடு சேரவேண்டும் என அழைக்கின்றார்.
சூறாவளி நம்மால் உண்டானதோ அல்லது, இயற்கையை உண்டானதோ, இன்றைய நற்செய்தியில் சீடர்கள் கூறுவது போல "போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா? " என்று அவர்கள் போல் நாமும் கூவி அழுதால், யேசு " ஏன் பயப்படுகிறீர்கள்? உங்களுக்கு குறைவான விசுவாசமே உள்ளது!, எனது அமைதி ஏற்கனவே இங்கு இருக்கிறது" என்று கூறுகிறார்.

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, June 12, 2009

ஜூன் 14 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜூன் 14 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டவரின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழா
Exodus 24:3-8
Ps 116:12-13, 15-18
Heb 9:11-15
Mark 14:12-16, 22-26


மாற்கு நற்செய்தி

அதிகாரம் 14
12 புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாள் வந்தது. பாஸ்கா ஆட்டுக்குட்டியைப் பலியிடும்
அந்நாளிலே இயேசுவின் சீடர், ' நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே சென்று ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்? ' என்று கேட்டார்கள்.13 அவர் பின்வருமாறு கூறி, தம் சீடருள் இருவரை அனுப்பினார்: ' நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல்லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் சுமந்துகொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார். அவர் பின்னே செல்லுங்கள்.14 அவர் எந்த வீட்டுக்குச் செல்கிறாரோ, அந்த வீட்டின் உரிமையாளரிடம், ' நான் என் சீடர்களோடு பாஸ்கா விருந்து உண்பதற்கான என் அறை எங்கே? ' என்று போதகர் கேட்கச் சொன்னார் ' எனக் கூறுங்கள்.15 அவர் மேல்மாடியில் ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அது தேவையான வசதிகளோடு தயார் நிலையில் இருக்கும். அங்கே நமக்கு ஏற்பாடு செய்யுங்கள். ' 16 சீடர்கள் சென்று, நகரை அடைந்து, தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.
22 அவர்கள் உண்டுகொண்டிருந்தபொழுது அவர் அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, ' இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்; இது எனது உடல் ' என்றார்.23 பின்பு அவர் கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்தார். அனைவரும் அதிலிருந்து பருகினர்.24 அப்பொழுது அவர் அவர்களிடம், 'இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம். 25 இனிமேல் இறையாட்சி வரும் அந்நாளில்தான் நான் திராட்சைப்பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை ஒருபோதும் குடிக்க மாட்டேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்.26 அவர்கள் புகழ்ப்பாடல் பாடிவிட்டு ஒலிவமலைக்குச் சென்றார்கள்.

(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில் நற்கருணை மற்றும் யேசுவின் திரு இரத்தத்தை பற்றியும், 'இது எனது உடன்படிக்கையின் இரத்தம்' மற்றும், 'மீட்பின் கிண்ணம்' என்று குறிப்பிடுகிறது. உங்களுக்கு திவ்ய நற்கருணை எந்த அளவிற்கு முக்கியம்?



கிறிஸ்து நமது தலைமை குருவாக பணி செய்யவே இந்த உலகிற்கு வந்தார். பழைய ஏற்பாட்டில் உள்ள யூத குருக்கள், மக்களின் பாவத்திற்கு பரிகாரமாக , ஆட்டின் , கன்று குட்டியின் இரத்தத்தை கொடுக்க சொன்னது போல் இல்லாமல், யேசு நமது பாவங்களுக்காக .அவரின் சொந்த இரத்தத்தால், நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்தார். யேசு "'இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம்." என்று கூறினார்.. இது தான் புதிய உடன்படிக்கை. மற்ற எந்த குருக்களும் இல்லாமல், நமக்காக நித்திய வாழ்வை பெற்று தந்தார்.

கடவுளின் இரத்தத்தால் மட்டுமே இந்த வெற்றியை கொடுக்க முடியும். ஏனெனில், எவ்வளவு தான், நாம் நல்ல எண்ணங்களை கொண்டிருந்தாலும், குருக்கள் எவ்வளவு பரிசுத்தமாக இருந்தாலும், மீன்டும் , மீன்டும் நாம் பாவத்தைல் விழுந்துவிடுகிறோம். யேசு மட்டும்தான், பரிசுத்தமான மனிதனாக இருந்து, அவரது தெய்வீகம் சாவை வென்றது, அவரால் தான், நித்த்ய வாழ்வின் கதவுகளை திருக்க முடியும்.

நமது பாவங்களுக்கு பரிகாரமாக, யேசு மிகப்பெரிய விலையை கொடுத்தார். மணம் திருந்தாத பாவத்துடன், திருப்பலிக்கு செல்வதால் என்ன ஆகும்.? நாம் தவறு செய்து விட்டொம் என்று தெரிந்தும், கஷ்டப்பட்டு , அதனை மாற்றி கொள்வது என்பது, யேசு நம்மை மாற்ற வேண்டும் என்று நாம் விரும்புவது சுலபமாக இருக்கலாம். இதில் எது பெரியது? இதனை விட பெரியது எது என்றால், திவ்ய நற்கருணையில் அனைத்து பலன்களையும் நாம் அனுபவிக்க வேண்டும் என்று நாம் விரும்புவது ஆகும்.

நம் பாவங்களை நாம் தூர எறிந்து, அதற்கு பரிகாரம் செய்யாமல், நாம் கிறிஸ்துவின் உடலையும், இரத்தத்தையும் பெறுவது, யேசு, நமக்காக அவர் கொடுத்த விலை மதிப்பற்ற பரிசை (அவர் நமக்காக இறந்தார்) நாம் நிராகரிப்பதற்கு சமமாகும். அவர் நமக்காக ஏற்றுகொண்ட , பெருந்துயரை நினைத்து, நாம் அவரின் ப்ரசன்னத்தை, அவரின் இருப்பை, நற்கருணை அருட்சாதனத்தில் இல்லாமல் இருந்தால் நமக்கு நலமாய் இருக்கும் என நாம் நினைப்பது அவர் கொடுத்த அன்பளிப்பை ஏற்று கொள்ளாததற்கு சமம்.

தொடர்ந்து, நமக்கு அளிக்கப்படும் பாவ மன்னிப்பை பெறுவதற்கு , நாம் மனந்திருந்தியிருக்க வேண்டும், நமது பாவங்களை நினைத்து வருந்தி பிறகு நாம் யேசுவை, திருப்பலி அருட்சாதனத்தில், ஏற்று கொள்ள வேண்டும், அப்படி மனம் திரும்பாமல் அவரை ஏற்று கொள்வது, அவரை அவமதிப்பது போல ஆகும். அதே போல யேசுவை கொண்டு நமது பாவங்களை கழுவ நாம் அனுமதிக்காமல் இருப்பதும், அவரை இழிவுபடுத்துவது போல ஆகும்.

பரிசுத்த கடவுளின் திரு உடலும், திரு இரத்தமும், நம்மை அவரை போல ஆக்குவதற்கு , உள்ள ஆற்றல் உள்ளது. திருப்பலியை விட்டு நாம் வெளியேறும்போது, வேறு மனிதராக , திருப்பலிக்கு முன் வந்தது போல இல்லாமல் வெளியேறவேண்டும். இது கடவுளின் திட்டம். முதன்மை குருவாக அவர் தொடர்ந்து பனியாற்றி கொன்டிருக்கிறார். இன்னும் அவர் பனி இன்னும் முடியடையவில்லை.


© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, June 5, 2009

ஜூன் 7, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜூன் 7, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
பரிசுத்த தமத்திருத்துவ பெருவிழா
Deut 4:32-34, 39-40
Ps 33:4-6, 9, 18-20, 22 (with 12b)
Rom 8:14-17
Matt 28:16-20


மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 28
16 பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள்.17 அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள்.18 இயேசு அவர்களை அணுகி, ' விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது.19 எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன் ' என்று கூறினார்.




நீங்கள் அனைவரும் கடவுளுக்கு மிகவும் வேண்டியவர்கள், மிக மிக விசேஷமானவர்கள். நீங்கள் அவருக்கு சொந்தமானவர்கள். அவர்கள் மூவருக்கும் சொந்தமானவர்கள்.: தந்தை, மகன் மற்றும் ஆவியானவர்.


பரிசுத்த தமத்திருத்துவத்தின் பெயரால், திருமுழுக்கு கொடுக்கபடுவதற்கு ஓர் காரணம் இருக்கிறது. இன்றைய நற்செய்தியில், யேசு குறிப்பிடப்படுவது போல, சில ப்ராட்டஸ்டன் குழு யேசுவின் பெயரால் மட்டுமே கொடுப்பது போல இல்லாமல், நாம் மூன்று பேராலும் கொடுக்கிறோம். ஏனெனில், தமத்திருத்துவ கடவுளும் ஒன்றானவர்கள், அவர்கள் அனைவரும் உங்களோடு சிறந்த உறவை கொண்டாட விரும்புகிறவர்கள். உண்மையான நட்பை உங்களோடு வைத்து கொள்ள விரும்புகிறார்கள்.

பரிசுத்த திருத்துவ கடவுளிடம், ஒவ்வொருவரிடமும், நீங்கள் தனியான மிக அன்பான நட்பை வைத்து கொள்ளலாம் என்று உங்களுக்கு தெரியுமா? கடவுள் தந்தையுடனும், நம்மை இரட்சித்த மகனுடனும், பரிசுத்த ஆவியுடனும், நீங்கள் தனியாக அமர்ந்து, அவர்களோடு பேசியதுன்டா? நீங்கள் துன்பமடையும்போது, தந்தை கடவுள் மடியில் அமர்ந்து அவரின் ஆறுதலை பெறமுடியுமா? நீங்கள் சோதனைக்கு உட்படும்போது, யேசுவின் ஆற்றல் உங்களிடம் வந்து உங்கள் சோதனையை தாங்கி கொள்ள உதவுவதை நீங்கள் உணர்கிறீர்களா? நீங்கள் கவலை அடையும்போதும், விசுவாசத்தில் குழப்பமடையும்போதும், பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலை அறிந்து கொள்கிறீர்களா?

யேசுவின் தந்தை நமக்கு தந்தையாவார். நம்முடைய மிகவும் சிறப்பு வாய்ந்த "அப்பா" (இன்றைய ரோமன் வாசகத்தில், குறிப்பிடப்படுகிறது, அதன் அர்த்தம், யூதர்களின் அர்த்தத்தில், சின்ன குழந்தைகளின் தந்தை ஆகும்) , அவர் பயப்படும்படியான, தன்டனை கொடுக்கும் அப்பாவாக, உங்களை புரிந்து கொள்ளாத அப்பாவா? இல்லை! உங்கள ஞானஸ்நானத்தில், சந்தோசமாக உங்களை தத்தெடுத்து கொண்டார். ஏனெனில், அவர் மிகவும் அன்பான தந்தை, நமக்கு என்ன தேவையோ அதனை கொடுப்பவர்.

இதனையெல்லாம், பரிசுத்த ஆவியானவர் நமக்கு உறுதியளிக்கிறார். பரிசுத்த ஆவியானவர் நம்மை தழுவி, ஆறுதலளித்து, மேலும், நாம் வாழ்வதற்கு தேவையான படிப்பினைகளை கற்று கொடுத்து, நமது வாழ்வில் சந்தோசத்துடனும், முழு அன்புடனும் வாழ வழி வகுக்கிறார். மேலும் அந்த அன்பின் முலமாக , யேசு அவரையே நமக்காக தியாகம் செய்து, நமது பாவத்தின் தன்டனையிலிருந்து விடுபட்டு, பரிசுத்த ஆவியின் துனையுடன் பரிசுத்த வாழ வழி வகுத்தார்.

கடவுள் திரித்துமமானவர், நமக்கு உதவி செய்பவர், குணப்படுத்துபவர், ஆற்றலை கொடுப்பவர், விசுவாசம் கொள்ள செய்பவர். அவருடைய இந்த திரித்துவ தெய்வீகத்தில், நாம் வாழவேண்டும் என விரும்புகிறார். அவர்களின் முழுமையின் முழு பயன்களையும், நாம் பெற்று பயனடைய வேண்டும் என விரும்புகிறார். ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்துவர்கள், கத்தோலிக்கர்கள் அனைவருக்கும் கடவுளின் ப்ரசன்னம், திவிய நற்கருணையில் உள்ளது. அதனால், மிகவும் கவலைபடக்கூடிய எந்த ஒரு குறையும் நமக்கு இல்லை
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Saturday, May 30, 2009

மே, 31 2009, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மே, 31 2009, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
பெந்தகோஸ்தே ஞாயிறு (பரிசுத்த ஆவி)

Acts 2:1-11
Ps 104:1, 24, 29-31, 34
1 Cor 12:3-7, 12-13 or Gal 5:16-25
John 20:19-23 or John 15:26-27; 16:12-15

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 20
19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார்.20 இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.21 இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் ' என்றார்.22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, ' தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.23 எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா ' என்றார்.

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 15
26 தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார்.27 நீங்களும் சான்று பகர்வீர்கள். ஏனெனில் நீங்கள் தொடக்கமுதல் என்னோடு இருந்து வருகிறீர்கள்.

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 16
12 ' நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது.13 உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்.14 அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார்.15 தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் ' அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார் ' என்றேன்.

(thanks to www.arulvakku.com)

கிறிஸ்துவின் ஆவி, பரிசுத்த ஆவியாக நமக்கு தாராளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம், நாம் பரிசுத்தமாக இருந்து, கிறிஸ்து தொடங்கி வைத்த இறைசேவையை நாம் தொடரலாம். நாம் யேசுவை போல இருக்க முடியாது, ஆனால், அவருடைய ஆவி நம்மில் ஆக்கபூர்வமாக இருந்தால், நாம் கிறிஸ்துவின் பரிசுத்தத்தை கொண்டிருக்கிறோம். அவருடைய விசுவாசம், அவரின் இயற்கையின் அளவை தாண்டிய அன்பு, அமைதி, நம்பிக்கை மற்றும், சக்தி வாய்ந்த ஆற்றல், மற்றும் பல் நாம் யேசுவில் பார்க்கும் அனைத்தும் நாம் கொண்டிருக்கிறோம்.
உங்கள் ஞான்ஸ்நானத்தில் பரிசுத்த ஆவியை பெற்று கொண்டீர்கள். உறுதிபூசுதலில், பரிசுத்த ஆவி நம்மில் இருக்கிறார் என்பதனையும், ஆவியுனுடைய ஆற்றல் நம்மில் பெருகவும் செய்கிறது. பெந்தகோஸ்தோவிலிருந்து, கடவுள் அவருடைய இறையசிற்காக சேவை செய்யும் அனைவரையும், பரிசுத்த ஆவியின் மூலம் மாற்றி, அவருடைய இறையரசை இங்கே நிலை கொள்ள செய்கிறார். தாராளமாக கடவுள் நமக்கு ஆவியானவரை கொடுத்து, அவர் நம்மிடம் என்ன செய்ய சொல்கிறாரோ அதில் வெற்றியடைய நமக்கு உதவியாக இருக்கிறார். ஆனால் எந்த வழிமுறையில், எந்த அளவிற்கு கடவுளின் பரிசுத்தத்தையும், ஆற்றலையும் நம்மிடமிருந்து வெளிப்படுத்துகிறோம் என்பது நம்மை பொருத்து இருக்கிறது.

பரிசுத்த ஆவிக்கான ஜெபத்தில் என்னோடு இனைந்து கொள்ளுங்கள்:

அன்பு யேசுவே, உங்களின் பரிசுத்த ஆவியின் முழுமையை எங்களில் கொண்டுவாரும். உமது பரிசுத்த ஆற்றலில் வாழ எமக்கு உதவியருளும். உங்களின் உண்மையை நன்கு புரிந்து கொள்ள எங்கள் என்னத்தை திறக்க உதவும். எங்கள் இதயத்தை திறந்து,உங்களை நாங்கள் புரிந்து கொள்ள ஆரம்பிக்கும் முன்பே பரிசுத்த ஆவியை நாங்கள் ஏற்றுகொள்ள உதவும்.
இறையரசை, மற்ற எல்லாவிசயங்களை விட, அதிகமாக அறிந்து கொள்ள உதவும். கடவுளரசில் சேராத விசயங்கள் என்னோடு ஒட்டிகொண்டுள்ளன என்ன என்பதை அறிந்து கொள்ள உதவியருளும். மேலும் அதனை துடைத்தொழிக்க எனக்கு மன உறுதியையும், சக்தியையும் கொடு. எனக்கு நீ மட்டுமே வேன்டும்.

பரிசுத்த ஆவியே, எனது பாவ நிலையை ஏற்று, அதனால் ஏற்பட்ட இழப்பிற்காக, உண்மையாக வருத்தப்படவும், அதனிலிருந்து மீண்டு வர எனக்கு உதவியருளும். எனது பாவமன்னிப்பிற்காக நான் வருந்தும்போது ஆறுதலாயிருந்தருளும், மேலும், எனது புதிய வாழ்வில், மகிழ்வோடு உன்னில் வளர உனது ஆவியை கொடுத்தருளும். இந்த குணப்படுத்தும் இரக்கத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள எனக்கு உதவும்.

யேசு இவ்வாறு கட்டளையிட்டார், "உலகம் முழுதும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள்", எனது அன்பளிப்பையும், திறமையையும் உபயோகித்து, இவ்வுலகில் இறையரசிற்காக, முயற்சி மேற்கொள்ளுங்கள். நான் எனக்குள்ளே ஓர் எதிர்பார்ப்பு வைத்துள்ளேன், நான் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்று எனக்குள்ளே ஒரு வரையரை உண்டு. இப்போது எனது எதிர்பார்ப்புகள், என்னுடைய இயலாமை, எனது விருப்பங்கள், என்னுடைய நோக்கங்கள் அனைத்தையும், உம்மிடம் ஒப்படைக்கிறேன் . உமக்கு உபயோகமாக இருக்க விரும்புகிறேன். நீ எங்கே என்னை அழைத்து செல்கிறாயோ அங்கே நான் செல்ல ஆசைபடுகிறேன். பரிசுத்த ஆவியே, கிறிஸ்துவின் பரிசுத்த , வெற்றியின் அன்பை இந்த உலகில் பரப்ப, என்னை தயார் பன்னியருளும்.
வா!, என்னை புதுப்பித்தருளும், பரிசுத்த ஆவியே, ஆமென்!

© 2009 by Terry A. Modica

Friday, May 22, 2009

மே 24, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மே 24, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
பாஸ்கா காலத்தின் 7வது ஞாயிறு

Acts 1:15-17, 20-26
Ps 103:1-2, 11-12, 19-20
1 John 4:11-16
John 17:11b-19

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 17
11 இனி நான் உலகில் இருக்கப்போவதில்லை. அவர்கள் உலகில் இருப்பார்கள். நான் உம்மிடம் வருகிறேன். தூய தந்தையே! நாம் ஒன்றாய் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும்.12 நான் அவர்களோடு இருந்தபோது நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்து வந்தேன்; நன்கு பாதுகாத்தேன். அவர்களுள் எவரும் அழிவுறவில்லை. மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறும் வண்ணம் அழிவுக்குரியவன் மட்டுமே அழிவுற்றான்.13 ' இப்போது உம்மிடம் வருகிறேன். என் மகிழ்ச்சி அவர்களுள் நிறைவாக இருக்கும்படி நான் உலகில் இருக்கும்போதே இதைச் சொல்கிறேன்.14 உம் வார்த்தையை நான் அவர்களுக்கு அறிவித்தேன். நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல், அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. ஆதலால் உலகம் அவர்களை வெறுக்கிறது.15 அவர்களை உலகிலிருந்து எடுத்துவிட வேண்டுமென்று நான் வேண்டவில்லை; தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே வேண்டுகிறேன்.16 நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல் அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல.17 உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். உமது வார்த்தையே உண்மை.18 நீர் என்னை உலகிற்கு அனுப்பியது போல, நானும் அவர்களை உலகிற்கு அனுப்புகிறேன்.19 அவர்கள் உண்மையினால் உமக்கு உரியவர் ஆகும்படி அவர்களுக்காக என்னையே உமக்கு அர்ப்பணமாக்குகிறேன். '
(thanks to www.arulvakku.com)

விசுவாசத்தில் ஒன்றாய் இருக்கும் சகோதர சகோதரிகளிடம் நாம் இணைந்து ஒன்றாய் இருக்க வைப்பது எது? அது என்ன என்றால், நமது ஒரே கடவுளை, யேசு கிறிஸ்துவை நாம் எல்லாம் அவர் பின்னால் அணி வகுத்து செல்கிறோம்.

நமக்குள்ளே பல வேறுபாடுகள் இருக்கலாம், இருந்தும், நம்மிடையே ஒற்றுமை உள்ளது. கடவுளுக்கு சேவை செய்யும் நமது பங்கில், பல குழுக்களில், நம்மிடையே பல கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், இருந்தும் நம்மிடையே ஒற்றுமை உள்ளது. ப்ராட்டஸ்டன்ட் (கத்தோலிக்கர் அல்லாத திருச்சபை) நம்பிக்கைகளை நாம் ஏற்றுகொள்ளாமல் போகலாம், ஆனால், நம்மிடையே ஒற்றுமை உள்ளது. நமக்குள்ளே கிறிஸ்துவின் ஒற்றுமை உள்ளது.
இன்றைய நற்செய்தியில், யேசு நமது ஒற்றுமைக்காக, இறைவனிடம் வேண்டுகிறார். நாம் அவரது வேண்டுதலுக்கு ஏற்றோர் போல நடந்து கொள்கிறோமா? அல்லது அதற்கு எதிராக நடந்து கொள்கிறோமா?
கடவுளிடம் ஒன்றாய் இருப்பது, நம்மிடையே உள்ள வேற்றுமைகளை களைந்து அதற்கு பிறகு ஒன்றாய் இருக்க வேண்டும் அர்த்தமில்லை. கிறிஸ்துவை நாமெல்லாம் வழிபடுகிறோம் என்ற ஒரே காரணத்தினால் நாமெல்லாம் ஒரு இடத்தில் இருக்கிறோம் என்பதை ஏற்று கொள்ள வேண்டும். பல வேறான வழிகளில் நாம் கிறிஸ்துவை வழிபட்டாலும், நாமெல்லாம் ஒன்றாய் இருக்கிறோம். ஒன்றாய் இருக்க வேன்டும் என்ற நமது எண்ணமே, நம்மிடையே உள்ள ஓர் அங்கீகாரமாகும். நாமெல்லாம், ஒரே உடலின் பல பாகங்கள் என்பதை ஏற்றுகொள்வதே, ஒருவொருக்கு ஒருவரின் உதவி தேவை என்பதை அறிந்து எல்லோரும் ஒன்றாய் அவரவர் கடமைகள் செய்ய உதவும்.

இறைவன் யேசுவில், நாமெல்லாம் ஒன்றாய் இருப்பது, இந்த உலகத்தில் உள்ள மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு நிற்கிறோம் என்ற அர்த்தமாகும். நமது ஒற்றுமை, கடவுளரசிடமிருந்து வந்தது. இந்த உலகின் இருட்டிலிருந்தோ, சாத்தானிடமோ இருந்து வந்தது இல்லை. மேலும் இந்த ஒற்றுமை, நாம் நம்முடைய பாவங்களை களைந்தும், நமது ஒன்றான உடலின் (அனைவரின்) பாவங்களை தூக்கி எறிந்தால், இந்த ஒற்றுமை மேலும் பலப்படும்.


யேசு கடவுளிடம் இவ்வாறு சொல்கிறார் " உம் வார்த்தையை நான் அவர்களுக்கு அறிவித்தேன். நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல், அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. ஆதலால் உலகம் அவர்களை வெறுக்கிறது."

யேசுவை அன்பு செய்கிற, அவரை பின் செல்பவர்கள், அவருக்கு சேவை செய்கிறவர்கள், அவர்கள் எந்த பின் புலத்தை உடைய்வர்களாக இருந்தாலும், எந்த இனத்தவர் ஆனாலும், அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். பரிசுத்த குடும்பம். சிலுவையின் ஒரே சைடில் தான் நாமெல்லாம் வாழ்கிறோம். அதுதான் நித்திய வாழ்வின் விடுவிப்பு ஆகும்.
எனினும், நாமே நாம் பாவம் செய்ய அனுமதித்தால், இந்த உலகம் என்ன நினைக்கிறதோ, அதே மாதிரி நினைத்தும், தவறான என்னங்களாலும்,மற்ற கிறிஸ்தவர்களை நோக்கி நிந்தனை செய்வதும், நாமே, நமது கிறிஸ்தவர்களுக்குள், பிளவை உண்டாக்குகிறோம். இந்த வேறுபாடு, கடவுளரசிடமிருந்தும் நாம் நம்மில் பிரிவை உண்டாக்குகிறோம். யேசு வேன்டிக்கொண்ட ஒற்றுமையை நாம் உடைக்கிறோம்.

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, May 15, 2009

மே 17, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மே 17, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
பாஸ்கா கால 6வது ஞாயிறு
Acts 10:25-26, 34-35, 44-48
Ps 98:1-4
1 John 4:7-10
John 15:9-17
யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 15
9 என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள்.10 நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்.11 என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்.12 ' நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை.13 தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை.14 நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்.15 இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன்.16 நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்.17 நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை.
(thanks to www.arulvakku.com)

பணியாளனாய் இருப்பதே உண்மையான கிறிஸ்துவனின் அடையாளமாகும். கடைசி இரவு உணவின் போது, யேசு இதனை வலியுறுத்தி கூறினார்.யேசு சீடர்களின் பாதம் கழுவியபோது, பணிவிடை பெறுவதற்கல்ல, பணிவிடை செய்யவே மனுமகன் இந்த உலகத்திற்கு வந்தேன் என்று கூறினார். அவர் நாம் அனைவரையும் வின்னரசின் "பணியாளர்கள்" என்று அடிக்கடி மேற்கோள் காட்டி குறிப்பிடுகிறார். ஆனால் இன்றைய நற்செய்தியில், அவர் நம்மோடு நட்பாக நண்பனாக இருக்க ஆசைபடுகிறார். நாம் அவரின் அடிமைகளாக அல்ல. அவரே மாற்று கருத்தை சொல்கிறாரா?

அப்படி ஒன்றும் இல்லை! நண்பர்கள் நமக்கு பணிவிடை செய்தால், அவர்களுக்கு நம் மேல் அக்கறை உள்ளது. அடிமைகள் நமக்கு பணிசெய்வது, அவர்களின் கடமை, இல்லையென்றால், அவர்களுக்கு தண்டனை கிடைக்கும்.

"நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்" என்று யேசு கூறுகிறார். இதனை நண்பனாக நாம் ஏற்று கொள்கிறோமோ அல்லது அடிமையாகவா?
அடிமைகள் கடவுளின் கட்டளைகளை ஏற்று நடந்து கொள்ளாவிட்டால், என்ன ஆகுமோ என பயப்படுகின்றனர். அவர்கள் எல்லோரும் தம்மை காத்து கொள்ள நினைப்பவர்கள். நண்பர்களோ, கடவுளின் கட்டளை என்ன என்று ஆர்வத்தோடு அதனை அறிய முற்படுவார்கள். ஏனெனில், அந்த கட்டளைகளை , கடவுள் மேல் கொண்ட அன்பினால் எடுத்து கொள்வார்கள், அவருக்கு சேவை செய்ய ஒரு வாய்ப்பாக எடுத்து கொள்வார்கள். நண்பர்கள் எல்லாம் மற்றவர்களுக்காக அக்கறை படுபவர்கள்.
' நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை" என்று யேசு கூறுகிறார். இதுவே எல்லா கட்டளையும் விட மேலான கட்டளையாகும். நண்பர்களுக்கு ஒரு கட்டளையாக எடுத்து கொள்ளவும். "நான் உங்களை எந்தளவிற்கு அன்பு செய்கிறேன் என்று உங்களுக்கு தெரியாது, கடவுள் என்னோடு பகிர்ந்து கொள்வது எல்லாம் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்", என்று யேசு கூறுகிறார். அவர் நண்பர்கள் அனைவரும் யேசு என்ன பகிர்ந்து கொள்கிறார் என்று தெரிந்து கொள்கிறார்கள். (நற்செய்தி மூலம், கோவில் மூலம்), அன்பு செய்ய வாய்ப்புகளை அறிவுறுத்துகிறது. ஒவ்வொரு கட்டளையின் அடிப்படை அன்புதான். திருச்சபை ஒவ்வொரு படிப்பினையும் அன்பை வைத்து தான் தரப்படுகிறது.

இந்த கட்டளைகளை நாம் பின்பற்றவில்லையென்றால் கடவுளின் அன்பு கிடைக்காதா? கடவுளின் கட்டளைகளை பின்பற்றாமல் இருக்கும்போது, நம்மை கடவுள் அன்பு செய்தாலும், நாம் அன்பு செய்யபடவில்லை என நினைக்கிறோம்.

இது ஒரு அடிமைத்தனம். பயத்தினாலும், தவறான நம்பிக்கையினாலும், நம்மில் உள்ள குறைகளாலும், நாம் முழுமையாக அன்பு செய்யபடுவதில்லை. என நாம் நினைக்கிறோம். கடவுளின் கட்டளைக்கு கட்டுபடுகிறோம். அந்த கட்டளையிலிருந்து , தப்பி , கட்டளை தவறினால் , அவருக்கு எதிராக நாம் போகிறோம். யார் கலகம் செய்யாமல், கடவுளை ஏற்று , அவருக்கு அடிமையாகி, அவர் கட்டளைகளை ஏற்று நடக்க ஆரம்பித்தால், அவரின் அன்பை திரும்பி பெறலாம்.

நண்பர்களே, கடவுள் உங்களை எப்போதுமே அன்பு செய்கிறார். அந்த அன்பில், நாம் ஒருவொருக்கு ஒருவர் உதவி செய்து சந்தோசமாக இருக்கலாம்.
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm