Friday, October 31, 2008

நவம்பர் 2, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

நவம்பர் 2, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 31வது ஞாயிறு
கல்லறை திருவிழா (அனைத்து ஆன்மாக்கள் நினைவு தினம்)

Wisdom 3:1-9
Ps 23:1-6
Rom 5:5-11 or Rom 6:3-9
John 6:37-40


யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 1



37 தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் வந்து சேருவர். என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன்.38 ஏனெனில் என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல, என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்.39 ' அவர் என்னிடம் ஒப்படைக்கும் எவரையும் நான் அழிய விடாமல் இறுதி நாளில் அனைவரையும் உயிர்த்தெழச் செய்ய வேண்டும். இதுவே என்னை அனுப்பியவரின் திருவுளம்.40 மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன் ' என்று கூறினார்.

(thanks to www.arulvakku.com)

நீ எப்போதாவது, யேசு கொடுத்த மீட்பை சிதைத்து விட்டு, மோட்சத்திற்கு செல்லவே மாட்டோம் என்று நினைத்தது உண்டா? இன்றைய நற்செய்தியில், யேசு, "
37 தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் வந்து சேருவர். என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன் " அவர் உஙளை குறிப்பிடுகிறார். தந்தை கடவுள் உங்களை யேசுவிடம் ஒப்படைத்து இருக்கிறார். யேசு உங்களை மோட்சத்திற்கு வழி நடத்தி செல்வார்.

நம்முடைய ஞானஸ்நானத்தில், தந்தை கடவுள் யேசுவிடம் நம்மை ஒப்படைக்கிறார். "மகனே, இவர்களை உன்னிடம் கையளிக்கிறேன், அவர்கள் மோட்சம் செல்வதற்கு தேவையான எல்லாவற்றையும் செய்" என்று யேசுவிடம் கூறுகிறார். யேசு அவருக்கு இவ்வாறு பதிலளிக்கிறார். " நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன் "


தந்தைக்கு என்ன தேவையோ, அதை அவர் பெறுகிறார். (எல்லோரும் மோட்சம் செல்வது). ஆனால், அவரின் எல்லா வகை முயற்சிகளையும், அவரின் அன்பையும் நிராகரித்தவர்களுக்கு என்ன செய்வது.


நோயுற்ற நமது அன்பானவர்களுக்கும் இது பொருந்தும், அவர்கள் இந்த பூமியில் இருக்கும்போது, யேசுவோடு இருக்க விரும்பினால், அவர்கள் இறக்கும் நேரத்தில், யேசு அவர்கள் முன் நிற்கும்போது, அவரோடு இருக்க வேண்டும் என்று ஆசை படுவார்கள்.

நாம் யேசுவை நேருக்கு நேராக பார்க்கும்போது, நமக்கு எல்லாமே தெளிவாக தெரியும். நாம் நமது வாழ்வில் நடந்த பாவஙளுக்காக மனம் வருந்துவோம், மேலும் யேசு நம்மை உத்தரிக்கிற ஸ்தலத்தை நாமே தேர்ந்தெடுக்க அனுமத்கிக்கிறார். அங்கே நமது விடுபட்ட பாவங்கள் எல்லாம் நீக்கப்பட்டுவிடும். அதன் பிறகு நாம் நமது பாவங்களிலிருந்து மீண்டு புனிதப்பட்டுவிடுவோம். அப்போது நாம் நித்தியத்திற்கும், கடவுளின் முழு அன்போடு மோட்சத்தில் இருப்போம். இருந்தாலும், இந்த பூமியில் நாம் இறைவன் மேல் உள்ள அன்பினால் நமது பாவங்கள் துடைக்கபடுவது, உத்தரிக்கிற் ஸ்தலத்தில் கழுவப்படுவதை விட மேலானது.


நாம் எவ்வாறு, நம்மை பாவங்களிலிருந்து விடுபட்டுகொள்வது. மற்றவர்களை எவ்வளவு கடினமாக இருந்தாலும், அன்பு செய்வது. அடிக்கடி பாவம் செய்பவர்களை மன்னிப்பது, மிகவும் தாராளமாக தேவையானவர்களுக்கு உதவுவது. இப்படி செய்கிறபோது, கடவுளின் அன்பில் நாம் இணைகிறோம். மேலும் கடவுளரசில் இந்த பூமியில் இருந்து கொண்டே வாழ்கிறோம்.


புனித தெரசா அவர்கள் "கடவுள் நம்மை உத்தரிக்கிற ஸ்தலத்தில் நம் பாவங்கள் கழுவப்படுவதை விரும்புவதில்லை. இந்த பூமியிலேயே, அவரை சந்தோசப்படுத்தி, அவர் மேல் முழு நம்பிக்கையுடன் இருந்தால், அவர் அவரின் அன்பினால் ஒவ்வொரு நிமிடமும் நம்மை புனிதப்படுத்துகிறார் அதனால் , நம் மேல் எந்த பாவ கறைகளும் இல்லாமல் இருக்கும். அதன் பிறகு நாம் உத்தரிக்கிற ஸ்தலத்திற்கு செல்ல தேவையில்லை" என்று கூறுகிறார்.

© 2008 by Terry A. Modica

Friday, October 24, 2008

அக்டோபர் 26, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

அக்டோபர் 26, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 30வது ஞாயிறு

Ex 22:20-26
Ps 18:2-4, 47, 51
1 Thes 1:5c-10
Matt 22:34-40

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 22

34 இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர். 35 அவர்களிடையே இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன், 36 ' போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது? ' என்று கேட்டார். 37 அவர், ' உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து. ' 38 இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. 39 ' உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக ' என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை. 40 திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன ' என்று பதிலளித்தார்.




இன்றைய ஞாயிறின் நற்செய்தியில், "நாம் மற்றவர்களை அன்பு செய்யாமலும், நம்மையே அன்பு செய்யாமலும், கடவுளை அன்பு செய்ய முடியாது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கடவுளுக்கு தான் முதல் வாய்ப்பு.

நாம் கடவுளை நமது முழு மனதுடனும், முழு ஆத்ம திருப்தியோடும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கனமும் அன்பு செய்ய நம்மால் இயலவில்லை. நமக்கு மிகவும் க்ஷ்டமாக இருக்கிறது. ஏனெனில், அதிகமான நேரங்களில், நமது மனம் மற்றவர்களை பற்றியும், நம்மை பற்றியும் யோசிக்கிறது. அதிலேயே நாம் நேரம் செலவிடப்படுகிறது.

ஆமாம், மற்றவர்களை நோக்கி நமது எண்ணம் இருந்தால் தான் நாம் அவர்களை அன்பு செய்ய முடியும். மேலும் நமது எண்ணங்கள் நம்மை பற்றி இருந்தால் தான், நாம் நம்மையே அன்பு செய்ய முடியும். நமது தேவைகள் மிகவும் முக்கியமானவைதான், நமது தேவைகளை பூர்த்தி செய்ய நாம் கடைமைபட்டிருக்கிறோம். அப்படியில்லையென்றால், நாம் மற்றவர்களோடு எப்படி பகிர்ந்து கொள்வது? மேலும், எல்லாவற்றையும் நாமே வைத்து கொள்ள கூடாது.

தற்போதைய கேள்வி: எதற்கு முதலிடம் கொடுப்பது? எது முதன்மையானது? வேறு மாதிரி கேட்டால்: நாம் கடவுளோடு எவ்வளவு நேரம் செலவழிப்பது? நம்மை பற்றி, நமது தேவைகளுக்காக எவ்வளவு நேரம் செலவ்ழிப்பது? மற்றவர்களுக்காக நமது நேரங்களையும், தேவைகளையும், தியாகம் செய்ய வேண்டும்.?

நமது முதன்மை வாய்ப்பாக, கடவுளை முதலில் நிறுத்தி, அவருடைய உறவிற்கு முதலிடம் கொடுத்தோமானால், மற்ற காரியங்களுக்கான நேரம் செலவிட நம்மால் முடியும். கடவுளுடைய நட்பு, நம்மால் முடியாத தேவைகளால் ஏற்படும் காயங்களை குணமாக்குகிறது. இந்த உந்துதல் தான், நம்மை மற்றவர்கள் மேல் அன்பு காட்ட வைக்கிறது, அது மிகவும் கடினமாக இருந்தாலும், நம்மை மற்றவர்களோடு அன்பு செய்ய வைக்கிறது. மேலும், நாள் முழுதும், கடவுளோடு நட்புறவு வைத்து கொள்ள , அவரோடு இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.


நாம் நம் மேல் அன்பு கொள்ளவும், பிறரை அன்பு செய்யவும், நாம் கடவுளை முதலில் அன்பு செய்து, அவரை நம்பி இருந்தாலே, நாம் நமது தேவைகளில் வெற்றி பெறுவோம். வழிகாட்டவும், குணப்படுத்தவும், நமது சக்திக்காகவும், கடவுளை நம்பி இருந்தால், நாம் கடவுளை முழுமனதுடன் அன்பு செய்கிறோம். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கனமும், நாம் அவர் அன்பிலேயே இருக்கிறோம்.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, October 17, 2008

அக்டோபர் 19, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

அக்டோபர் 19, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை:
ஆண்டின் 29வது ஞாயிறு
Is 45:1, 4-6
Ps 96:1, 3-5, 7-10
1 Thes 1:1-5b
Matt 22:15-21

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 22

15 பின்பு பரிசேயர்கள் போய் எப்படி இயேசுவைப் பேச்சில் சிக்க வைக்கலாமெனச் சூழ்ச்சி செய்தார்கள். 16 தங்கள் சீடரை ஏரோதியருடன் அவரிடம் அனுப்பி, ' போதகரே, நீர் உண்மையுள்ளவர்; எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கேற்பக் கற்பிப்பவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர் என்பது எங்களுக்குத் தெரியும். 17 சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா? நீர் என்ன நினைக்கிறீர் என எங்களுக்குச் சொல்லும் ' என்று அவர்கள் கேட்டார்கள். 18 இயேசு அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்து கொண்டு, ' வெளிவேடக்காரரே, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? 19 வரி கொடுப்பதற்கான நாணயம் ஒன்றை எனக்குக் காட்டுங்கள் ' என்றார். அவர்கள் ஒரு தெனாரியத்தை அவரிடம் கொண்டு வந்தார்கள். 20 இயேசு அவர்களிடம், ' இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை? ' என்று கேட்டார். 21 அவர்கள், ' சீசருடையவை ' என்றார்கள். அதற்கு அவர், ' ஆகவே சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள் ' என்று அவர்களிடம் கூறினார்.
(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், யேசு பரிசேயரை பார்த்து "வரி செலுத்தும் நாணயத்தில் யாருடைய உருவம் பொறிக்கப்பட்டுள்ளது ?" என்று கேட்கிறார். இந்த நிகழ்ச்சியை வைத்து, யாருடைய உருவம் நம் இதயத்தில் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நமக்கு கற்பிக்கிறார். நம்முடைய இதயம் கடவுளுக்கு உரித்தானது. அவருக்கு மட்டுமே உரித்தானது.

ரோமானியர்கள், அவர்களுடைய அரசர்களை தெய்வீகமானவர்கள் என்று நினைத்தனர். அதனால், அந்த அரசர் பொறித்த நாணயத்தை எப்போதும் எடுத்து செல்வது என்பது, அவர்கள் மனித கடவுளை எப்போதுமே தம்மிடம் வைத்து கொள்வதாகும். யேசுவிடம் அவர்கள் இந்த கேள்வியை கேட்கும்போது, அவர்கள் நாணயத்தை வைத்து கொண்டேதான் கேட்டனர்.


சீசருக்கு வரி செலுத்துவது என்பது, ஒரு அயல் நாட்டிற்கு வரி செலுத்துவது என்பதை விட, அதற்கு மேலான, ஒரு சமய மறைபொருளை எடுத்து காட்டுவதாகும். யேசு ஒரு இறைவாக்கினராக இருந்தால், அவர் யூதர்கள் இது மாதிரியான பொற்காசுகளை வைத்து கொள்ள கூடாது என்று பேசியிருக்க வேன்டும். அல்லது அவர் உண்மையான மெசியாவாக இருந்தால், அயல் நாட்டின், வரிகளுக்கும், அடிமைதனத்திற்கும், அவர் விடுதலை வாங்கிகொடுக்க வேண்டும். அப்படித்தான் பரிசேயர்கள் எதிர்பார்த்தனர்.


பரிசேயர்கள், யேசுவிடம் காமிக்கும்போது, அந்த பொற்காசை எங்கேயிருந்து எடுத்தார்கள் என்று நமக்கு தெரியாது. அவர்கள் பைகளில் இருந்து எடுத்திருந்தால் (அப்படிதான் இருந்திருக்கும்) அவர்கள் கபட வேடம் போடுகின்றனர் என்று நமக்கு தெரிகிறது. ஆனால் யேசுவிற்கு அவர்கள் கபட வேடத்தை வெளிக்காட்டவேண்டும் என்ற விருப்பம் இல்லை. உண்மையான மெசியாவின் இலக்கு என்ண என்று காட்ட விரும்பினார்.

நாம் கடவுளின் பிள்ளைகளாக இருந்தால், யேசு தான் நமது இதயத்தில் பொறிக்கப்பட்டுள்ளார். மேலும், உண்மையான மெசியாவின் மூலம் நாம் மீட்கப்பட்டுள்ளோம். நமது பாவங்களால், நாம் சாத்தானின் அடிமைகளாக இருந்தோம், அந்த அடிமைத்தனத்திலிருந்து, யேசு நம்மை மீட்டுள்ளார்.

மற்றவர்கள் உங்களை பார்க்கும்போது, யாருடைய அடையாளமாக, நீங்கள் காட்சியளிக்கிறீர்கள்? மற்றவர்கள் உங்களை பார்க்கும்போது, உங்கள் இதயத்தில் பொறிக்கப்பட்டுள்ள யேசுவை பார்க்கிறார்களா? எந்த அளவிற்கு அவர்கள் பார்க்கிறார்களோ? அந்த அளவிற்குள் தான் நீங்கள் இறையட்சியில் இருக்கிறீர்கள்.


© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, October 10, 2008

அக்டோபர் 12, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

அக்டோபர் 12, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை:
ஆண்டின் 28வது ஞாயிறு


Is 25:6-10a
Ps 23:1-6
Phil 4:12-14, 19-20
Matt 22:1-14

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 22

1 இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து உவமைகள் வாயிலாகப் பேசியது: 2 ' விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்தினார். 3 திருமணத்திற்கு அழைப்புப் பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார். அவர்களோ வர விரும்பவில்லை. 4 மீண்டும் அவர் வேறு பணியாளர்களிடம், ' நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். காளைகளையும் கொழுத்த கன்றுகளையும் அடித்துச் சமையல் எல்லாம் தயாராயுள்ளது. திருமணத்திற்கு வாருங்கள் ' என அழைப்புப் பெற்றவர்களுக்குக் கூறுங்கள் என்று சொல்லி அனுப்பினார். 5 அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார்; வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார். 6 மற்றவர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள். 7 அப்பொழுது அரசர் சினமுற்றுத் தம் படையை அனுப்பி அக்கொலையாளிகளைக் கொன்றொழித்தார். அவர்களுடைய நகரத்தையும் தீக்கிரையாக்கினார். 8 பின்னர் தம் பணியாளர்களிடம், ' திருமண விருந்து ஏற்பாடாகி உள்ளது. அழைக்கப் பெற்றவர்களோ தகுதியற்றுப் போனார்கள். 9 எனவே நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள் ' என்றார். 10 அந்தப் பணியாளர்கள் வெளியே சென்று வழியில் கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் கூட்டி வந்தனர். திருமண மண்டபம் விருந்தினரால் நிரம்பியது. 11 அரசர் விருந்தினரைப் பார்க்க வந்த போது அங்கே திருமண ஆடை அணியாத ஒருவனைக் கண்டார். 12 அரசர் அவனைப் பார்த்து, ' தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்? ' என்று கேட்டார். அவனோ வாயடைத்து நின்றான். 13 அப்போது அரசர் தம் பணியாளர்களிடம், ' அவனுடைய காலையும் கையையும் கட்டிப் புறம்பே உள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும் ' என்றார். 14 இவ்வாறு அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர். '
(thanks to www.arulvakku.com )

இன்றைய நற்செய்தியில், போலித்தன்மையுடன் ஏமாற்றுபவர்களின் ப்ரச்னையை பற்றி கூறுகிறார். அது என்னவெனில், சிலர் யேசுவின் நட்பை பெறுவதற்காக, மதச்சடங்குகளில் ஈடுபாட்டுடன் இருப்பர். கோவில் காரியங்களில், ஆர்வத்துடன் செயல்படுவர். ஆனால், உண்மையான நட்பு கொள்வதில், இணங்கமாட்டர்கள்.

அந்த மாதிரியான மனிதர்களை பற்றி உங்களுக்கு தெரியும். அவர்கள் நட்புடன் இருப்பர், நல்ல செயல்கள் செய்வர். ஆனால் அவர்களுடைய நன்மைகளுக்காகவே அந்த நல்ல விசயங்களை செய்வார்கள். கஷ்டமான காலங்களில், அவர்களுடைய விசுவாசத்திற்கான சவாலான நேரங்களில், கோவிலுக்கு செல்வதை நிறுத்திவிடுவார்கள். குருவானவர் தவறான செய்திகளை பேசும்போதோ, அல்லது தவறான காரியங்களில் ஈடுபடும்போது, கத்தோலிக்க மதத்தை விட்டு விலகி செல்வர். உங்களோடு உள்ள நட்புறவிற்கு அவர்கள் ஏதாவது தியாகம் பன்ன வேண்டியிருந்தால், உங்களை விட்டு விலகி விடுவர்.

இந்த நீதிக்கதையின் மூலம், நட்பிலும், திருமனத்திலும், உண்மையான அன்பினால் இணையாமலிருப்பவர்களுக்கு,யேசு கடவுளின் மருந்து சீட்டை, அதற்கு என்ன செய்ய வேண்டும் என சொல்கிறார். எல்லோருக்குமே, விருந்து உண்ண அழைக்கபடுகின்றனர். ஆனால், சிலர், மகிழ்ச்சையான விருந்தையே விரும்புகின்றனர். ஆனால், கடினமான தருனங்களையோ அவர்கள் தவிர்த்துவிடுகின்றனர். ஆனால் சந்தோசமான தருனங்களும், கடினமான நேரங்களும், எல்லோர் உறவிலும் உண்டு. இந்த மாதிரியான போலிகளை தவிர்க்க கடவுள் சில எல்லைகளை நிர்மானித்துள்ளார்.


உங்களுடைய விருந்து மேஜைக்கு நீங்கள் அழைத்தவர்கள் பற்றி என்னிப்பாருங்கள். அதாவது கடவுளோடு சேர்ந்து உண்மையான நட்பிற்கு அழைத்தவர்கள். ஆனால், அந்த நட்பை அவர்களுக்கு ஏற்றமாதிரி அவர்கள் மாற்றி அமைக்க முயல்வர். நாம் அவர்களை முழுவதுமாக அன்பு செய்ய வேண்டும். ஆனால் அது ஒரு எல்லைக்குள் இருக்க வேண்டும். அந்த நட்புறவு, நல்ல முறையாக செல்ல நமது கடமைகளை நமது பங்கிற்கு செய்யவேண்டும். மற்றவர்கள் அவர்கள் கடமையை செய்யாதபோது உங்களுடைய உறவை நிராகரித்து விட்டார்கள்.

அவர்களுக்காக, நம்மால் முடிந்த எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு, அவர்களை மனம் திரும்பவும், மன மாற்றத்திற்கும் உறுதுனையாக இருக்க வேண்டும் என்று கடவுள் நம்மிடம் கேட்கிறார். இருந்தாலும், நமது முயற்சிகள் ஒரு எல்லைக்குள்ளாக இருக்க வேன்டும். நமது முயர்சிகள் வீணாக போகும்போது, நாம் நமது வழியை நோக்கி செல்ல வேன்டும், என்று கடவுள் கூறுகிறார்.


மேலும் எப்போதுமே , நாம் நமக்கு கிடைக்கும், நல்ல உண்மையான நட்புடன் கூடிய நண்பர்களை தேடி அவர்களோடு சேர்ந்து கடவுளோடு இணைதல் வேண்டும்.


© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, October 3, 2008

அக்டோபர் 5, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

அக்டோபர் 5, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை:
ஆண்டின் 27வது ஞாயிறு
Isaiah 5:1-7
Ps 80:9, 12-16, 19-20 (with Is 5:7a)
Phil 4:6-9
Matt 21:33-43

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 21

33 ″ மேலும் ஓர் உவமையைக் கேளுங்கள்: நிலக்கிழார் ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, சுற்றிலும் வேலி அடைத்து அதில் பிழிவுக்குழி வெட்டி ஒரு காவல் மாடமும் கட்டினார்; பின்பு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.பிழிவுக்குழி என்பது திராட்சைப் பழங்களை மிதித்துச் சாறு பிழிவதற்க்காகப் பாறையில் வெட்டப்படுவது. 34 பழம் பறிக்கும் காலம் நெருங்கி வந்த போது அவர் தமக்குச் சேர வேண்டிய பழங்களைப் பெற்று வரும்படி தம் பணியாளர்களை அத்தோட்டத் தொழிலாளர்களிடம் அனுப்பினார். 35 தோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து, ஒருவரை நையப் புடைத்தார்கள்; ஒருவரைக் கொலை செய்தார்கள்; ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள். 36 மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களைவிட மிகுதியான வேறு சில பணியாளர்களை அனுப்பினார். அவர்களுக்கும் அப்படியே அவர்கள் செய்தார்கள். 37 தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டு அவரை இறுதியாக அவர்களிடம் அனுப்பினார். 38 அம்மகனைக் கண்ட போது தோட்டத் தொழிலாளர்கள், ' இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்று போடுவோம்; அப்போது இவன் சொத்து நமக்குக் கிடைக்கும் ' என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். 39 பின்பு அவர்கள் அவரைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றுபோட்டார்கள். 40 எனவே, திராட்சைத் தோட்ட உரிமையாளர் வரும்போது அத்தொழிலாளர்களை என்ன செய்வார்? ' என இயேசு கேட்டார். 41 அவர்கள் அவரிடம், ' அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து விடுவார்; உரிய காலத்தில் தமக்கு சேர வேண்டிய பங்கைக் கொடுக்க முன்வரும் வேறு தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார் ' என்றார்கள். 42 இயேசு அவர்களிடம், ' கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது; நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! ' என்று நீங்கள் மறைநூலில் ஒருபோதும் வாசித்தது இல்லையா? 43 எனவே உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
(thanks to www.arulvakku.com)


"இறையாட்சிக்கு யார் அதிக பழங்களை ஈட்டு கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு இறையாட்சி கிடைக்கும்" என்று இன்றைய நற்செய்தி கூறுகிறது. நாம் இந்த பூமியில் இருக்கும்போது நமக்கு இறையாட்சி என்பது என்ன? அதனுடைய பழங்கள யாவை? நமது பூமி வாழ்வில் எப்படி ஈட்டு கொடுக்க போகிறோம்.

கிறிஸ்துவை போல நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களுமே, நாம் ஈட்டும் பழங்களாகும், நாம் யேசுவோடு சேர்ந்து இறையரசுக்கு செல்லும் பயனத்தின் விளைவுகளாகும். நாம் யேசுவை போல் அன்பு செய்தால், அவரை போல் நாமும் மற்றவர்களை மன்னித்தால், உண்மையை போதிப்பதாலும், துவண்டு போனவர்களுக்கு ஆறுதலாயும் , இருந்தால், நாம் இறையரசில் வாழ்கிறோம்.

நான் கத்தோலிக்கர்களிடம், "நீங்கள் மோட்சத்திற்கு போவீர்கள் என்பதை நம்புகீறீர்களா? " என்று கேட்டால், அதிகம் பேர் நிச்சயமாக சொல்வதில்லை, சந்தேகத்துடனே சொல்கின்றனர். ஏனினில், வரும் காலங்களில், ஏதேனும் சாவான பாவம் பன்னிவிடுவோமோ என்ற பயம். அல்லது, "ஆம் போவோம்" என்று சொன்னால், அவ்வளவு அடக்கமான பதிலாக இருக்காது என்று நினைக்கின்றனர்.

நாம் யேசுவை போல முழுமையாக, நம்மால் செய்ய முடியாது. நம்மில் அதிகம் பேர், உத்தரிக்கிற் ஸ்தலத்தில் சில காலம் செலவழிக்கவேண்டும்.அங்கு நம்மிடம் உள்ள இறையாட்சிக்கு தேவையில்லாத விசயங்கள் நம்மிடமிருந்து களையப்படும். எல்லா கறைகளும் நீக்கப்பட்ட பின், நாம் நிச்சயம் மோட்சத்திற்குள் இருப்போம். நாம் உத்தரிக்கிற ஸ்தலத்திற்குள் சென்றுவிட்டால், நிச்சயம் மோட்சத்திற்குள் செல்வோம். நாம் கிற்ஸ்துவை போல இருக்க வேண்டும் என்ற ஆவல், நியாயமான ஆவலாயிருந்தால், நிச்சயம், மோட்சத்திற்குள் செல்வோம். இந்த ஆவலினால், நாம் ஒருபோதும் சாவான பாவம் செய்யமாட்டோம். அதனால், நாம் கிறிஸ்துவை விட்டு அகன்று செல்லமாட்டோம். அதைவிட நமது மரண நேரத்தில், யேசுவை மிகவும் மகிழ்ச்சியுடன், அவரோடு சேர்ந்து அனைப்போம்.

கிறிஸ்துவின் மேல் உள்ள அன்பினால், அவருக்காக நீங்கள் எந்த காரியம் செய்தாலும், அதுவே நமக்கு சாட்சியாக, நாம் இறைவாழ்வில் வாழ்கிறோம் என்பதை குறிக்கும். மேலும் நாம் மோட்சத்தில் என்றென்றும் வாழ்வோம்.


© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, September 26, 2008

28 செப்டம்பர் 2008, ஞாயிறு நற்செய்தி மறையுரை

28 செப்டம்பர் 2008, ஞாயிறு நற்செய்தி மறையுரை:
ஆண்டின் 26வது ஞாயிறு

Ezek 18:25-28
Ps 25:4-5, 8-10, 14
Phil 2:1-11
Matt 21:28-32

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 21

28 மேலும் இயேசு, ' இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், ' மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய் ' என்றார். 29 அவர் மறுமொழியாக, ' நான் போக விரும்பவில்லை ' என்றார். ஆனால் பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார். 30 அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார். அவர் மறுமொழியாக, ' நான் போகிறேன் ஐயா! ' என்றார்; ஆனால் போகவில்லை. 31 இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்? ' என்று கேட்டார். அவர்கள் ' மூத்தவரே ' என்று விடையளித்தனர். இயேசு அவர்களிடம், ' வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 32 ஏனெனில் யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக வரி தண்டு வோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவுமில்லை; அவரை நம்பவுமில்லை ' என்றார்.
(thanks to www.arulvakku.com)



இன்றைய ஞாயிறின் நற்செய்தி நம்மில் பலருக்கு அதிர்ச்சியை அளிக்கும்!, பலர் இறைவாழ்வில் நேர்மையாகவும் ஒழுங்காகவும் நல்லொழுக்கத்துடனும் நடந்து கொள்வதாக நினைக்கும் பலருக்கும் இந்த நற்செய்தி அதிர்ச்சியை அளிக்கும். ஆனால் அவர்கள அவரகளது செயல்களை நியாயமாக பரிசோதித்து பார்த்தால், அவர்கள் அனைவரும் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுகிறார்களா? என்பது தெரியும். இயேசு அவர்களிடம், ' வரிதண்டுவோரும் விலைமகளிரும் (அந்த இரு தொழில்கள் தான் உலகில் மிகவும் அவமானகரமான செயல்கள்/தொழில்கள்) உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' என்று சமய வல்லுனர்களை பார்த்து கூறுகிறார்.

இந்த சமய வல்லுனர்கள் யேசு கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் தெரிந்திருந்தும், அவர்கள் யேசுவிற்கு "சரி/ஆமாம்" என்று சொல்வதற்கு பதில், நல்ல விசயங்களை பேசுவதற்கு பதில் அதை செய்ய வேண்டியது தான், செயலில் காமிக்க வேண்டியது தான் யேசுவிற்கு நாம் சொல்லும் பதிலாகும். அவருக்கு சரியான பதில், மோட்சத்திற்கும், நரகத்திற்கும் நடுவில் உள்ள இடைப்பட்ட கோடு ஆகும்.

கடவுளுக்கு சரியான பதில் தேவையில்லை. ஆனால் அவருக்கு சரியான நியாயமான அன்பான செயல்களே தேவை. திருச்சபையின் சட்டங்களை கடைபிடிக்கவேண்டிய செயல்கள் கடவுளுக்கு தேவையில்லை, ஆனால் அன்பினால் ஊக்கப்படுத்தபட்ட கீழ்பபடிதலும், உற்சாகமான உந்துதலுடனும் கடவுளின் தேவைகளுக்கு ஏற்ப ஊழியம் செய்வது தான் கடவுளுக்கு தேவை.

கோவிலுக்கு வெளியே நாம் திருச்சபையின் தேவகளோடு, பரிசுத்தத்தோடும் நடந்து கொள்ளவில்லையென்றால், திருப்பலி பூசைக்கு செல்வதனால் உள்ள பயன் என்ன? ஏன் சிலர் கோவிலுக்கு வருவதில்லை என்று உங்களுக்கு தெரியுமா? ஏனெனில், திருச்சபைக்கும், கிறிஸ்துவின் சரிரத்திற்கும் வெளியே இருப்பது பாவம் என்று அவர்களுக்கு தெரிவதில்லை. இயல்பாக அவர்கல் நல்ல செய்லகள் செய்து கொண்டிருந்தாலே , யேசுவின் உண்மையான அன்பை வழிகொண்டிருந்தாலே அவர்கள் கடவுளோடு நெருக்கமானவர்கள் ஆவர். இவர்கள் தினமும் திருப்பலிக்கு சென்று வரும் பக்தர்களை விட, (வெளியே எந்த ஒரு நல்ல செயல்களும் செய்யாமல் இருப்பவர்கள்) சீக்கிரம் கடவுளோடு இனைவர்.

கடவுள் வேண்டாம் அல்லது இல்லை என்று சொல்பவர்களை கண்டனம் செய்வது என்பது நாம் அவர்களோடு நம்மை ஒப்பிட்டு பார்க்கிறோம். இந்த செயலை நாம் ஒருபோதும் செய்யக்கூடாது. ஒப்பிட்டு பார்ப்பது நம்மை நல்ல மனிதனாக் ஆக்கலாம் அல்லது தீயவர்களாக ஆக்கலாம். நாம் நேற்று எப்படி இருந்தோம் என்று அல்லது , முன்னர் எப்படி இருந்தோம் என்று நாம் நம்மையே ஒப்பிட்டு பார்த்து கொள்ளலாம். அது என்னவெனில், நாம் கடவுளோடு எப்படி நெருக்கமாக முன்னரும் , தற்போதும் எப்படி இருந்தோம் என்று ஒப்பிட்டு கொள்ளலாம்.


© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, September 19, 2008

செப்டம்பர் 21, 2008, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஞாயிறு நற்செய்தி, மறையுரை
செப்டம்பர் 21, 2008
ஆண்டின் 25வது ஞாயிறு

Is 55:6-9
Ps 145:2-3, 8-9, 17-18
Rom 1:20c-24, 27a
Matt 20:1-16a


எசாயா

அதிகாரம் 55
6 ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்: அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள். 7 கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர் தம் எண்ணங்களையும் விட்டுவிடுவார்களாக: அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும்: அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்: அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும்: ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர். 8 என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல, என்கிறார் ஆண்டவர். 9 மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன.

உரோமையருக்கு எழுதிய திருமுகம்

அதிகாரம் 1
20 ஏனெனில் கண்ணுக்குப் புலப்படா அவருடைய பண்புகள்-அதாவது, என்றும் நிலைக்கும் அவரது வல்லமையும் கடவுள் தன்மையும்-உலகப் படைப்பு முதல் அவருடைய செயல்களில் மனக் கண்களுக்கு தெளிவாய்த் தெரிகின்றன. ஆகவே அவர்கள் சாக்குப்போக்கு சொல்வதற்கு வழியே இல்லை. 21 ஏனெனில், அவர்கள் கடவுளை அறிந்திருந்தும் கடவுளுக்குரிய மாட்சியை அவருக்கு அளிக்கவில்லை: நன்றி செலுத்தவுமில்லை. அதற்கு மாறாக அவர்கள் எண்ணங்கள் பயனற்றவையாயின. உணர்வற்ற அவர்களது உள்ளம் இருண்டு போயிற்று. 22 தாங்கள் ஞானிகள் என்று சொல்லிக்கொள்ளும் அவர்கள் மடையர்களே. 23 அழிவில்லாக் கடவுளை வழிபடுவதற்குப் பதிலாக அழிந்துபோகும் மனிதரைப்போலவும், பறப்பன, நடப்பன, ஊர்வன ஆகியவற்றைப் போலவும் உள்ள உருவங்களை வழிபட்டனர். 24 ஆகவே, அவர்களுடைய உள்ளத்தின் இச்சைகளுக்கு ஏற்ப ஒருவரோடொருவர் தங்கள் உடல்களை இழிவுபடுத்துகின்ற ஒழுக்கக்கேடான செயல்களைச் செய்யும்படி கடவுள் அவர்களை விட்டுவிட்டார். அவ்வாறே ஆண்களும் பெண்களோடு சேர்ந்து இன்பம் பெறும் இயல்பான முறையைவிட்டு தங்களிடையே ஒருவர்மீது ஒருவர் வேட்கை கொண்டு காமத்தீயால் பற்றி எரிந்தார்கள். ஆண்கள் ஆண்களுடன் வெட்கத்திற்குரிய செயல்களைச் செய்து, தாங்கள் நெறி தவறியதற்கான கூலியைத் தங்கள் உடலில் பெற்றுக்கொண்டார்கள்


மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 20


1 ' விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார். 2 அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார்.
ஒரு தெனாரியம் ஒரு தொழிலாளரின் ஒருநாள் கூலிக்கு இனையான உரோமை வெள்ளி நாணயம்.
3 ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்ற பொழுது சந்தை வெளியில் வேறுசிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார். 4 அவர்களிடம், ' நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன் ' என்றார். 5 அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார். 6 ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ' நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்? ' என்று கேட்டார். 7 அவர்கள் அவரைப் பார்த்து, ' எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை ' என்றார்கள். அவர் அவர்களிடம், ' நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள் ' என்றார். 8 மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், ' வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும் ' என்றார். 9 எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர். 10 அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம் தான் பெற்றார்கள். 11 அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டபோது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, 12 கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே ' என்றார்கள். 13 அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, ' தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா? 14 உமக்குரியதைப் பெற்றுக் கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். 15 எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா? ' என்றார். 16 இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர் ' என்று இயேசு கூறினார்.

(thanks to www.aruvakku.com )



கடவுள் நியாயமாக நடப்பதில்லை! இவ்வாறு எத்தனை முறை நாம் நினைத்திருப்போம்? நம்முடைய நிலைப்பாட்டின் படி, இது உண்மையாகும்!. இன்றைய நற்செய்தியின் உவமை, இதற்கு சரியான உதாரணமாகும்.

யேசு இன்றைய நற்செய்தியில் குறிப்பிடும், நிலக்கிழார், நியாயமாக நடக்கவில்லை என்று எப்படி யூதர்கள் நினைத்தார்களோ? அப்படியே நாமும் நினைக்கிறோம். இதனை புரிந்து கொள்ள, நாம் பெற்றோர்களை இதனோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டு. ஒரு அன்பான அம்மா எல்லா குழந்தைகள் மேலும் ஒரே மாதிரி அக்கறையுடன் தான் இருப்பார். எந்த குழந்தைக்கு அதிக கவனம் தேவையோ அதற்கு அதிக அக்கறையுடன் பார்த்து கொண்டாலும், அந்த தாய் மற்றவர்கள் மேலும் அதே அன்புடன் இருப்பாள்.

தந்தை கடவுளும் இந்த நிலக்கிழார் போல தான், எல்லாருக்கும் ஒரே அளவுடன் கொடுப்பவர் ஆவார். நாம் மோட்சத்திற்கு செல்லும் வழியை நம்மால் மட்டுமே அடைய முடியாது. சரி சமமான நன்மை, உதவியும் அதிமாக உழைப்பவர்க்கு கிடைப்பது என்பது அநீதி கிடையாது. மாறாக, கடைசி நிமிடத்தில் கூட கடவுளோடு நட்பு கொண்டு அவரிடம் சேர்ந்தால், கடவுள் முழுமையான அன்பை அவரிடமும் கொடுப்பார். அவர் எதிலும் குறைவாய் இருப்பதில்லை.

முதல் வாசகம் "9 மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன" என்று சுட்டி காட்டுகிறது. நமக்கு நீதி என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரியான நடைமுறை தான் என்று நினைக்கிறோம். ஆனால் பழைய ஏற்பாட்டில் பார்த்தோமானால், "கண்ணுக்கு கண்" என்பது தான் நீதி. ஆனல், யேசு நீதியை மிக உயரத்திற்கு கொண்டு சென்றார். அவரின்படி நீதி என்பது, எல்லோருக்கும் சமமான அன்பும், இரக்கமும் கொடுக்கபடவேண்டும். அவர்கள் அதற்கு தகுதியானவர்களோ இல்லையோ? அன்பும் இரக்கமும் எல்லோருக்கும் கொடுக்கப்படவேண்டு.

கடவுளின் உயர்ந்த வழிமுறைகளை நாம் தெரிந்து கொள்ள வேன்டும் என்று அவசியமில்லை. நாம் கடவுளுக்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும், நாம் அவரின் அன்பிற்கு தகுதியற்றவர்களாக இருந்தாலும், அவர் நம் மேல் மிகவும் அன்பு கூறுகிறார். நாம் நம்மில் நினைவில் வைத்து கொள்ள வேண்டியது, நாம் எவ்வளவு தகுதி இல்லாமல் இருந்தாலும், கடவுள் எல்லா புனிதர்களுக்கும், கிறிஸ்துவைன் தாய் மரியாளுக்கும் கொடுத்த அதே அன்பை உங்களுக்கும் கொடுக்கிறார். "எனது அன்பை நாம் எப்படி கொடுக்க வேன்டும் என்கிற உரிமை எனக்கில்லையா? " என்று யேசு நம்மிடம் கேட்கிறார்.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm