Saturday, July 17, 2010

ஜுலை 18 2010 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஜுலை 18 2010 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 16ம் ஞாயிறு

Gen 18:1-10a
Ps 15:1-5
Col 1:24-28
Luke 10:38-42



லூக்கா நற்செய்தி


அதிகாரம் 10


மார்த்தா மரியாவைச் சந்தித்தல்
38 அவர்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது இயேசு ஓர் ஊரை அடைந்தார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா.39 அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.40 ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, ' ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டு விட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும் ' என்றார்.41 ஆண்டவர் அவரைப் பார்த்து, ' மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.42 ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது ' என்றார்.
(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், நமது கவலைகள் மற்றும் பயம் பற்றியும் யேசு நம்மிடம் பேசுகிறார். அவைகள் நம்மை தொந்தரவு செய்கிறது. அவைகள் நம்மை கட்டுபடுத்த ஆரம்பித்தால், நம் வாழ்விற்கு கேடு வந்து விடும். ஏனெனில், அவைகள், நாம் கடவுள் மேல் வைத்துள்ள கண்களை வேறு பக்கம் திருப்பிவிடும், மற்றும் அதன் விளைவுகள் இன்னும் மோசமாகி விடும்.

மரியாவோ நல்ல பங்கை தேர்த்தெடுத்து கொண்டாள்; யேசுவிற்கு சீடராக இருப்பதையே குறிக்கோளாக கொண்டு , வேறு எதுவும் அவரை தொந்தரவு செய்யாதபடி பார்த்து கொண்டார். நாம் நமது பல வேலை நெருக்கடிகளிடையே, சில நேரம் ஒதுக்கி, யேசுவோடு அமைதியாக உட்கார்ந்து , அவரிடமிருந்து கற்று கொண்டால், நமது பல கவலைகள் , கவலையே பட தேவையில்லை என்று நமக்கு புரியும்.
யேசுவின் காலடியில் நாம் அமைதியாக உட்கார்ந்து அவரிடம் வேண்டினால் தான், நமது துயரங்கள் கவலைகள், மற்றும் துன்பங்கள் அனைத்தும் போக்கும், நம்பிக்கை கிடைக்கும். இந்த சோதனைகளிலிருந்து வெளிவர நமக்கு தேவையான ஞானம் கிடைக்கும். மார்த்தாவின் சின்ன கவலை போல, நமது சின்ன கவலைகளும், யேசுவின் மேல் இருந்த நமது கண்கள் எடுக்கப்பட்டால், அது பாவமாகும். எதுவும், யேசுவிடமிருந்து நம்மை அகற்றினால், அது நமக்கு நல்லதல்ல.

யேசுவிடமிருந்து , நாம் எப்படி பரிசுத்த வாழ்வை வாழ்வது என்று கற்று கொள்ளவில்லை என்றால், அவர் மேல் நம் கண்கள் இல்லாமல் இருந்தால், நாம் பரிசுத்த வாழ்வில் வளர முடியாது. அவரை போல நாமும் அன்பு செய்ய முடியாது, அவர் கொடுக்கும் எல்லா அன்பையும், நாம் பெற முடியாது. நாம் அவரோடு அமைதியாக அமர்ந்து, அவரிடம் வேண்டி, அவர் கூறும் போதனைகளை குடித்தால், ஒழிய நாம் அவரின் அன்பை அரவணைக்க முடியாது. வண்டி ஓட்டுபொழுதோ, அல்லது, ப்ரசங்கம் கேடபதும் போதாது.

கலக்கமும், கவலைகளும் பயத்தின் வகைகள் ஆவை. என்னவோ தவறான விசயம் நடக்க போகிறது என பயப்படுகிறோம். உண்மையான காரணத்திற்காக கவலைபட்டாலும், அது யேசுவின் மேல் உள்ள கண்களை தடுத்தால், அது தவறாகும். பயம் நமக்கு, ஒரு எச்சரிக்கை மணியாகும், அதனை கண்டவுடன், நாம் அமைதியாக யேசுவோடு உட்கார்ந்து ,அவருடன் கலந்தாலோசித்து, எதனால் இந்த பயம் என்று தெரிந்து, அவரிடமிருந்து அதற்கான பதிலையும், ஊக்கத்தையும், அதன் பிறகு அமைதி வரும் என்ற நம்பிக்கையையும் பெறலாம்.

http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica