Friday, September 24, 2010

செப்டெம்பர் 26, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

செப்டெம்பர் 26, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 26ம் ஞாயிறு
Amos 6:1a, 4-7
Ps 146:(1b) 7-10
1 Timothy 6:11-16
Luke 16:19-31

செல்வரும் இலாசரும்
19 ' செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்.20 இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார்.21 அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.22 அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார்.23 அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலையில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார்.24 அவர், ' தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச்செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப்படுகிறேன் ' என்று உரக்கக் கூறினார்.25 அதற்கு ஆபிரகாம், ' மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக் கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய்.26 அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது ' என்றார்.27 ' அவர், ' அப்படியானால் தந்தையே, அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன்.28 எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே ' என்றார்.29 அதற்கு ஆபிரகாம், ' மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும் ' என்றார்.30 அவர், ' அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள் ' என்றார்.31 ஆபிரகாம், ' அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவிசாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்ப மாட்டார்கள் ' என்றார். '

(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில் உள்ள பணக்காரனின் பாவம் என்ன? அவன் இறந்த பிறகு எதனால் அவனுக்கு அந்த சித்திரவதை கிடைத்தது.? செல்வத்துடன் இருப்பது ஒன்றும் பாவமில்லை; அவனுடைய ஆண்மாவை துன்புறுத்தியது எது என்றால், அவருடைய செல்வத்தை பிறருக்கு பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை, லாசருடனும் அவன் பகிரிந்து கொள்ளவில்லை, அவனுக்கு வாய்ப்பு இருந்தும் அந்த பணக்காரன் பயன்படுத்தி கொள்ளவில்லை.

மரணம் ஒன்றும் வாழ்வின் முடிவல்ல; நமது ஆண்மா, நமது மரணத்தில் தான் முழுதுமாக திறந்து கடவுளின் அன்பில் வாழ்வோம். மரணத்தின் மூலம்தான், நாம் கடவுளையும் அவர் நமக்கு கொடுத்த அன்பளிப்புகளையும், ஆற்றலையும் முழுது அறிந்து கொள்ள முடியும். மேலும், அந்த ஆற்றலை நாம் சரியாக பயன்படுத்த வில்லை என்றும் நாம் அறிவோம்.

நாம் நமது திறமைகளை, கடவுளின் அன்பளிப்புகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டால், நாம் கடவுளரசில் முதலீடு செய்கிறோம். கடவுளின் பொருளாதாரத்தில், நமது முதலீடு பல மடங்கு பெருகும். நாம் கொடுப்பதை விட பல மடங்காக நமக்கு கிடைக்கும் அதனையும் நாம் பலரோடு பகிர்ந்து கொள்ளலாம்.

அதற்கு மாறாக, நாம் நமது செல்வத்தை நமக்காக மட்டும் வைத்திருந்தால், இருட்டறையில் இருக்கும் பூவை போல வாடிவிடும். இருட்டறையில் பூச்செடியினால் வளர முடியாது. எதையெல்லாம் காப்பாற்றி வைக்க ஆசைபடுகிறீர்களோ , அது உபயோகமில்லாமல் போகும், மேலும் விசாமாக கூட போகலாம்; பரிசுத்த வாழ்விலும் , சொந்த வாழ்விலும் தேங்கி நிற்கிறோம். நமக்கு கிடைத்த அன்பளிப்புகள் வீணாகி விடும். நமது சுய ஆசைகளுக்காக நாம் கடவுளோடு நமக்கு உள்ள இணைப்பை நாமே அழித்து கொள்கிறோம். அந்த கடவுள் தான் தாராள மனத்தின் அரசராவார்.

ஒவ்வொரு நாளும், நாம் நம்மளுடையதை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. கடவுளின் ஆசிர்வாதங்களையும் நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும். லாசரை அந்த பணக்காரன் ஒதுக்கியதற்கு காரணம், லாசருக்கு உள்ள நோய் தான். அவன் தொழு நோயாளி என்பதை நீங்கள் அனுமானிக்கலாம்.

அடுத்து இது ஒரு கேள்வியை எழுப்புகிறது: நாம் கொடுத்து உதவ வேண்டியவர்களை பார்க்கும் போது அருவருப்பாக இருப்பதினால், நாம் கொஞ்சமாக கொடுக்கிறோமோ? அல்லது அவர்கள் மேல் மனக்கசப்பும் , மன்னிக்க முடியாத கோபமும் இருக்கிறதா? கடவுளோடு இனைந்திருக்க வேன்டுமானால், இதே மாதிரி நிலையில் நாம் இருக்க முடியாது. அன்பின் மூலம் நாம் நம்மையே உறசாகபடுத்தி கொண்டு, தாராள மனதை வளர்ப்போம்.

இன்றைய இரண்டாவது வாசகத்தில், "விசுவாசத்திற்காக போராடு" யாரோடு போட்டி போடுகிறோம்.? நம்மோடு!, நேற்றையை விட இன்று இன்னும் பரிசுத்த மாக இருக்கிறீர்களா? இன்னும் தாராள மனதை கொண்டு இருக்கிரீர்களா? இன்னும் பழைய நிலையிலே மந்தமாக இருக்கிறீர்களா? அல்லது இன்னும் பரிசுத்தமாகவும், உங்கள் பாவங்களை கண்டு கொண்டு மணம் மாறி கடவுளோடு இணைந்து இருக்கிறீர்களா?

http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica

Friday, September 17, 2010

செப்டம்பர் 19, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

செப்டம்பர் 19, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 25ம் ஞாயிறு


லூக்கா நற்செய்தி


அதிகாரம் 16


முன்மதியோடு செயல்பட்ட வீட்டுப் பொறுப்பாளர்
1 இயேசு தம் சீடருக்குக் கூறியது: ' செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப் பட்டது.2 தலைவர் அவரைக் கூப்பிட்டு, ' உம்மைப்பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது ' என்று அவரிடம் கூறினார்.3 அந்த வீட்டுப் பொறுப்பாளர், ' நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கி விடப்போகிறாரே! மண்வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது.4வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும் போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியும் ' என்று அவர் தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.5 பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், ' நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்? ' என்று கேட்டார்.6 அதற்கு அவர், ' நூறு குடம் எண்ணெய் ' என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், ' இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும் ' என்றார்.7 பின்பு அடுத்தவரிடம், 'நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?' என்று கேட்டார். அதற்கு அவர், 'நூறு மூடை கோதுமை' என்றார். அவர், 'இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்' என்றார். 8நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்ளுகிறார்கள்.9 ' ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக் கொள்வார்கள்.10 மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார்.11 நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்?12 பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்?13 ' எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது. '

(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், எப்படி ஒருவன் செல்வத்துடனும், பரிசுத்தமாகவும் இருக்க முடியும் என்று கூறுகிறது. பணமும், பொருட்செல்வமும் நமது கடவுளாக இருந்தால், நாம் பரிசுத்தமானவர்களாக இருக்க முடியாது; நாம் கடவுளிடமிருந்து பிரிந்து விடுகிறோம். ஏனெனில் நமக்கு கிடைத்த பொருட்களை தாராளாமாக மற்றவர்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும் என்று பைபிள் குறிப்பிட்டு சொல்கிறது.

செல்வத்தை சேர்த்து கொள்வதில் நாம் அதிகம் ஆர்வம் காட்டி, அதற்கு முக்கியத்துவம் கொடுத்தும், அதனை மற்றவர்களிடம் பிரித்து கொடுப்பதில் முக்க்யத்துவம் கொடுக்காமல் இருந்தால், கடவுள் நமது தலைவராக இருக்க மாட்டார். இது பொருட்செல்வத்திற்கு மட்டும் இல்லை, நம்மிடம் உள்ள எல்லா நல்ல விசயங்களுக்கும் பொருந்தும்.
நமக்கு எல்லா வகையான திறமைகளும், ஆற்றலும், செல்வமும் கொடுக்கப்பட்டிருக்கிறது; இதனையெல்லாம் பகிர்ந்து கொள்வதற்கு நாம் எந்த அளவிற்கு தயாராக இருக்கிறோம்?

"நேர்மையற்ற முறையில் வந்த செல்வம்" எது என்றால், யேசு "மற்றவர்களுக்கு போய் சேரவேண்டியது" என்று சொல்கிறார். மற்றவர்களின் பணத்தை (கடன் ) நமது சொந்த உபயோகத்திற்காக வாங்கினாலும், கடவுளரசிற்கு அதனால், சிறிதளவேனும் பயன் இல்லையெனில் , நாம் நம்பிக்கையானவர்களாக கடவுளின் பணியாளனாக இல்லை


அதே போல, நமது நேரத்தை நமது சொந்த உபயோகத்திற்காக செலவழித்தாலோ, பரிசுத்தமற்ற விசயங்களில் செல்வழித்தாலோ, நாம் கடவுளரசிற்கு நம்ப தகுந்தவர்கள் இல்லை. இயேசு உங்கள் மூலமாக மற்றவர்களை ஆசிர்வதிக்க விரும்புகிறார். அவர்களுக்கு சேரவேண்டியதை உங்களிடம் வைத்து கொண்டிருக்கிறீர்கள், யேசு அதனை அவரின் அன்பளிப்பாக உங்கள் மூலம் கொடுக்க சொல்கிறார். நாம் இந்த கடமையை (கடவுளின் பொருளாதாரத்தில் முக்கிய கொள்கை ) ஒதுக்கி தள்ளினால், "உங்களுக்கு சேர வேண்டியதை யார் தருவார்?" என்று இயேசு கேட்கிறார்.

நாம் கடவுளின் நம்பிக்கைகுரிய பணியாளனாக இருந்தால், நமக்கு என்ன கிடைக்கும். நித்திய வாழ்விற்கு உரித்தான அத்தனை செல்வங்களும் நமக்கு உண்டு: ஆவியின் செல்வங்கள், கடவுளின் பாராட்டுதலும் , அவரின் முழு அன்பும், இன்னும் பல உங்களுக்கு கிடைக்கும்.
நமது செல்வங்களுடனும், பரிசுத்த வாழ்விலும் இருக்க வேண்டுமானால், நாம் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டிய அன்பை - கடவுளின் அன்பை- மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும். நாம் இவ்வுலக செல்வங்களையும், நித்திய வாழ்வின் செல்வங்களையும்(விசுவாசம், ஞாணம், நம்பிக்கை, இன்னும் பல) , மற்றவர்களுக்கு பகிர்ந்து அளிப்பதில் தான் நாம் கடவுளின் நம்பிக்கை உள்ள பணியாளனாக இருக்க முடியும்.

http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica

Friday, September 10, 2010

செப்டம்பர் 12, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

செப்டம்பர் 12, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 24ம் ஞாயிறு
Exodus 32:7-11, 13-14
Ps 51:3-4, 12-13, 17, 19
1 Timothy 1:12-17
Luke 15:1-32



லூக்கா நற்செய்தி


அதிகாரம் 15


காணாமற்போன ஆடு பற்றிய உவமை
(மத் 18:12 - 14)
1 வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர்.2 பரிசேயரும், மறைநூல் அறிஞரும், ' இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே ' என்று முணுமுணுத்தனர்.3 அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்:4 ' உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா?5 கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்;6வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ' என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன் ' என்பார்.7 அதுபோலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
காணாமற்போன திராக்மா உவமை
8 'பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள் ஒன்று காணாமற் போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா? 9 கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ' என்னோடு மகிழுங்கள், ஏனெனில் காணாமற் போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன் ' என்பார்.10 அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன். '
காணாமற்போன மகன் உவமை
11 மேலும் இயேசு கூறியது: ' ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள்.12 அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, ' அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும் ' என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார்.13 சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார்.14 அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்;15 எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார்.16 அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை.17 அவர் அறிவு தெளிந்தவராய், ' என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே!18 நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், ' அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; 19 இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன் ' என்று சொல்லிக்கொண்டார்.20 ' உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அந்தத் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார்.21 மகனோ அவரிடம், ' அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன் ' என்றார்.22 தந்தை தம் பணியாளரை நோக்கி, ' முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்;23 கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம்.24 ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான் ' என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.25 ' அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, 26 ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, ' இதெல்லாம் என்ன? ' என்று வினவினார்.27 அதற்கு ஊழியர் அவரிடம், ' உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார் ' என்றார்.28 அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார்.29 அதற்கு அவர் தந்தையிடம், ' பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்துவருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்துகொண்டாட ஓர் ஆட்டுக்குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை.30 ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துகளையெல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே! ' என்றார்.31 அதற்குத் தந்தை, ' மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே.32 இப்போது நாம் மகிழ்ந்துகொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான் ' என்றார். '

(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தி, எதையெல்லாம் கடவுளரசிடமிருந்து இழந்தாரோ, அதனை அவர் பக்கம் கொண்டு வருவதில் தான் அவர் ஆர்வம் உள்ளது என்று கூறுகிறது. நமது கடவுள் மீண்டும் நட்பினை புதுப்பிப்பதிலும், சமாதானம் ஆவதிலும் ஆர்வம் உள்ளவர் ஆவார். உண்மையிலிருந்து விலகி நிற்பவர்களை மீண்டும் உணமை அறிய செய்பவர் ஆவார். ஏன்? காணாமற் போன ஆடுகளை போல , காணாமற் போன பொருட்களை போல உள்ளவர்கள் மேல், நாம் கொண்டுள்ள அக்கறை விட, கடவுள் அவர்கள் மேல் அதிக அக்கைறை கொண்டுள்ளார்.


உங்களை நிராகரித்தவர்கள், உங்களை விட்டு விலகியவர்களை நினைத்து பாருங்கள். அந்த நட்பினை புதுப்பிக்க , உடைந்த உறவை இணைக்க கடவுள் அக்கறை கொள்கிறார். அந்த முயற்சியை, அவர்களின் கடைசி மூச்சு இருக்கும் வரை கடவுள் கைவிடமாட்டார். (சில நேரங்களில், அந்த சமரசப்படுத்துதல், இறப்பிற்கு பிறகும் கூட நடக்கும்). மேலும் விசுவாசத்தை ஒதுக்குபவர்களை நினைத்து பாருங்கள். அவர்களை யேசு என்றும் கைவிடமாட்டார், அவர்க்ளை கடவுளிடம் திருப்பும் முயற்சியில் என்றுமே கைவிடமாட்டார்.

ஏன்? ஏனெனில், அவர்களின் பங்கும், மதிப்பும், உங்களுடைய குடும்பத்திற்கும், திருச்சபைக்கும் இல்லாமல் இருக்கிறது. சமுகத்தில் சக்தியை குறைக்கிறது. சமூகத்தின் வாழ்விற்கு ஊற்றாக இருக்க கூடிய கடவுள், அவர்களையெல்லாம், குணப்படுத்தி, பாதுகாப்பாக மீண்டும் கடவுளரசில் இணைய எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறார்.


இவையெல்லாவற்றையும், கடவுளே செய்யட்டும் என்று நாம் விட்டு விட கூடாது. எனினும், அவர் இந்த வேலைகளையெல்லாம், நம் மூலம் செய்கிறார், ஆனால், நாம் முயற்சி செய்து, அந்த் முயற்சி பலனடையாவிட்டால், இன்னும் நாம் முயற்சியை அதிகமாக்க வேண்டும் என்றில்லை. இந்த ப்ரச்னையில், கடவுள் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என்று நாம் நம்ப வேண்டும். இயேசு அவர்களை பின் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார் என்று நாம் நம்புவோம். அவர்கள் இயேசுவிடமிருந்து ஒளிந்து இருந்தாலும், அவர்களை தேடி யேசு செல்வார். அவர்க்ளை யேசுவை தள்ளிவிட்டாலும், யேசு அவர்களை மணம் மாற்ற முயற்சிப்பார்.


இந்த மந்தையில் , வேறு ஏதாவது வழியில் அவர்களை அழைக்க வழியிருந்தாலும், அந்த முயற்சியை மேற்கொள்ளுங்கள். அப்படியில்லையெனில், யேசுவிற்கு நாம் ஏன் அந்த வழியில் முயலவில்லை என்று பதில் சொல்ல வேண்டும். பாவிகளை அன்பு செய்வதில் நாம் ஏன் தோல்வியுற்றோம், தனியாக திரிபவர்களிடமும், ஒதுக்கபட்டோரிடமும், நாம் ஏன் நமது அன்பை காட்டவில்லை என்று யேசுவிடம் பதில் கூறவேண்டும். அவர்களுக்கு எப்படி உதவி செய்திருக்கலாம் என்றும், நாம் ஏதோ செய்து, அவர்களை தள்ளிவிட்டோமா? என்றும் நாம் யேசுவிற்கு பதில் சொல்ல வேண்டும்.


நம்முடைய குற்ற உணர்வுகளுக்காக நாம் மணம் திரும்பி நாம் முதலில் ஆரம்ப்பிபோம். நம் தாழ்ச்சியும், இரக்கமும், பாவமன்னிப்பும் , நமது குறைபாடுள்ள அன்பை விலக்கி, முழு அன்பை , தூய அன்பை அவர்கள் புரிந்து கொள்ள உதவும். அதன் மூலம் யேசுவின் தூய அன்பை அவர்களுக்கு அளிப்பார்.


http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica

Friday, September 3, 2010

செப்டம்பர் 5, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

செப்டம்பர் 5, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 23ம் ஞாயிறு
Wisdom 9:13-18b
Ps 90:(1) 3-6, 12-17
Philemon 9-10, 12-17
Luke 14:25-33

லூக்கா நற்செய்தி


அதிகாரம் 14



இயேசுவின் சீடர் யார்?
(மத் 10:37 - 38)
25 பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது:26 ' என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது.27 தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது.28 ' உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட்டாரா?29 இல்லாவிட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக,30 ' இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லை ' என்பார்களே!31 ' வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா?32 எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும்போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேட மாட்டாரா?33 அப்படியே, உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.

(thanks to www.arulvakku.com)

உங்கள் வாழ்க்கையில் கடவுளின் உறவை விட,வேறு எதற்கு முதன்மை இடம் கொடுக்கிறீர்கள்? இன்றைய நற்செய்தியில், யேசு எதற்கு முதன்மையிடம் கொடுக்கிறீர்கள் என்று பார்க்க சொல்கிறார். உங்கள் நன்பர்களுக்கா ?, உங்கள் வேலைக்கா? உங்கள் சொத்துக்கா? உங்கள் லட்சியங்களுக்காகவா? இல்லை உங்கள் அனுதின செயல்களுக்கா?

எந்த சிலுவையிலிருந்து விலக விரும்புகிறீர்கள்? அதிலிருந்து விலகுவதால், இயேசுவை ஒதுக்கி தள்ளுகிறீர்களா? (குறிப்பாக: அன்பிற்காக எந்த தியாகத்தை செய்ய நீங்கள் விரும்பவில்லை? )

நாம் அவருடைய சீடராக இருப்பதற்கு முழுமையான பற்றுதலோடும், ஒத்துழைப்போடும் இல்லாமல் இருந்தால், அவரை போல மாறாமலும், அவரிடமிருந்து கற்காமலும் இருந்தால், நமது வாழ்வில் மற்ற வேலைகளுக்கும் நாம் சரியாக தயார் படுத்தவில்லை என்று இயேசு கூறுகிறார்.


மாறாக சொல்வதானால், நாம் நமது முக்கிய நோக்கத்திற்காக, நமது வேலைகளை சரியாக செய்து வந்தாலும், கிறிஸ்துவோடு உள்ள நமது உறவு எல்லாவற்றிற்கும் மேலான , முதன்மையான குறிக்கோளாக இல்லையெனில், நாம் மிகச்சரியான முடிவிற்கு செல்ல முடியாமால் இருப்போம். ஏனெனில், இவ்வுலக சிந்தனைகளால், மிகவும் தொந்தரவிற்கு உள்ளாவோம். அதனால் பாதிக்கபடுவோம், வெற்றியாளராக இல்லாமல், பாதிக்கப்பட்டோராய் இருப்போம். இவ்வுலகில் நாம் செய்து முடிக்கும் எந்த வெற்றியும் தற்காலிகமானதே, ஏனெனில், அந்த வெற்றியில், கடவுளரசின் நோக்கங்களோ, அல்லது நித்திய வாழ்விற்கான ஆயத்தங்களோ இல்லை.



சீடர் என்பவர் மானவர் ஆவார். யேசுவிடமிருந்து, மற்றவர்களை அன்பு செய்வது எப்படி என்று கற்று கொள்கிறோம். சில் நேரங்களில், இதுவே, நமக்கு மிகப்பெரிய சிலுவை ஆகும். யேசு நமக்கு எப்படி , அன்புடனும், சந்தோசத்துடனும், நிபந்தனையற்ற அன்புடனும், மன்னித்து வாழவும் வாழ கற்று தருகிறார். நமது பரிசுத்த வாழ்வில் தொந்தரவு செய்பவர்களையும் நமது எல்லைக்குள் வரவிடாமல் இருக்கவும் யேசு நமக்கு கற்று தருகிறார். இதுவே நமக்கு ஒரு சிலுவையாக இருக்க கூடும்.

இயேசுவை பின் செல்வதிலும், அவரை போலவே மாறுவதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றால், தொடர்ந்து நாம் முயற்சி செய்து, நமக்கு வரும் சிலுவையை தூக்கி கொண்டு , நம்மையே யேசுவோடு இணைத்து, அவரின் சிலுவையோடு, நாமும் இனைந்து, அவரது ஆற்றலோடு நாமும் இனைந்தால் தான், நம்மால் அவர் பின் செல்ல முடியும். கிறிஸ்துவோடு உள்ள இனைப்பில் நாம் கவனம் செலுத்தவில்லையென்றால், நாம் நமது முயற்சியில் தோல்வியடைவோம். சிலுவையின் பாரத்தால், நாம் கீழே விழுவோம். ஆனால் இயேசு செய்ததை போல , மற்றவர்களின் அன்பிற்காக நாம் தியாகம் செய்ய முயற்சித்தால், யேசுவை முழுமையாக அனைத்து, அவரோடு முழு இனைப்பில், நாம் செய்ய வேண்டியதை செய்வோம். இது எந்த் ஒரு ஜெபமும், அல்லது மற்ற முறைகளையும் விட மிகவும் அதிக பலனை தரக்கூடியது.
http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica