Saturday, July 29, 2017

ஜூலை 30 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஜூலை  30 2017 ஞாயிறு   நற்செய்தி மறையுரை
ஆண்டின் 17ம் ஞாயிறு
1 Kings 3:5, 7-12
Ps 119:57, 72, 76-77, 127-130
Romans 8:28-30
Matthew 13:44-52
மத்தேயு நற்செய்தி
புதையல் உவமை
44“ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்து விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.
முத்து உவமை
45-46“வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார். விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள் யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்.
வலை உவமை
47“விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும்.
48வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க்கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர்.

49இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்;

50பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.
முடிவுரை
51
இவற்றையெல்லாம் புரிந்து கொண்டீர்களா?”
 என்று இயேசு கேட்க, அவர்கள், “ஆம்என்றார்கள்.

52பின்பு அவர்
ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப்போல் இருக்கின்றனர்
 என்று அவர்களிடம் கூறினார்.
(thanks to www.arulvakku.com)
விண்ணரசின் பொக்கிஷங்கள்
இன்றைய ஞாயிறின் நற்செய்தியில், இயேசு கடவுளின் விண்ணரசை, புதையலுக்கு ஒப்பாகவும், விலையுயர்ந்த நல்ல முத்துக்கு நிகராகவும், கடலில் சென்று வலையை கொண்டு அதிக மீன்களை பிடிக்கும் செயலுக்கு ஒப்பாகவும் சொல்கிறார்.
வேறு மாதிரியாக சொல்வதானால், நம் கிறிஸ்துவ வாழ்வு என்பது, அதிக மதிப்புடைய செல்வங்கள் நிறைந்தது. நமது தங்க பெட்டிகளில் தேவையில்ல்லாத குப்பைகள் இருக்கிறது, அதனை துடைத்து எரிந்து விட்டு , விண்ணரசின் பொக்கிசங்களை சேமிக்க அதனை தயார் படுத்தவும். நம்மிடம் உள்ள சில செல்வங்கள், திறமைகள் விண்ணக அரசிற்கு தேவை இல்லாதது. அதனுடைய செல்வம் மதிப்பு மிகுந்ததாக மாற வேண்டுமெனில், அதன் மூலம் விண்ணக அரசிற்கு பயன் உள்ளதாய் மாற்றவேண்டும்.

ரோமானியர் வாசகத்தில் " கடவுளிடம் அன்பு கூர்பவர்களோடுஅதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடுஅவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார்"  நாம் நமது தவறான முத்துகளையும், தவறான மீன்களையும் தூக்கி எரிந்து நாம் வாழும்பொழுது கடவுளை போல நாமும் மாறிவிடுகிறோம். விண்ணக அரசிற்கு மிகவும் உதவி செய்ய கூடியவனாக நாம் மாறி விடுகிறோம். கடவுளின் உருவாக்கத்தில், அவரின் மிக பெரிய ஆற்றலின் , மிகுந்து இரக்கமுள்ள கடவுளின் அடியில் நமக்கு தீய செயல்கள் நடந்தாலும் கூட அதனை நம் முத்துக்கள் மிளிர்வதற்கும், இன்னும் இறையரசில் மின்னவும் நாம் அந்த தீய செயலை உபயோகிப்போம்.
முதலாவது வாசகத்தில், சாலமன் கடவுளிடம் அதிக சொத்தையும் பொக்கிசங்களையும் கேட்டிருக்கலாம், கடவுள் கண்டிப்பாக கொடுத்திருப்பார். ஆனால் அவரோ " ஞானம் நிறைந்த உள்ளத்தை" கேட்டார். அதன் மூலம் நல்லாட்சி நடைபெற உதவி கேட்டார். அவர் ஆட்சியில் சில குறைகள் இருந்தாலும், ஞானம் நிறைந்த அரசர் என உலகம் அனைத்தும் கேள்வியுற்று மிக பெரிய பெயர் பெற்றார், அதன் மூலம் பல செல்வங்களை சேர்த்தார்.
இதன் மூலம் நமக்கு கிடைக்கும் போதனை என்னவேனில், நாம் முதலில் கடவுளின் விண்ணரசின் பொக்கிசங்களை சேர்க்க வேண்டும். அதன் பிறகு, இவ்வுலகின் சொத்தக்க்களை கடவுளின் ஞானம் மூலம் எப்படி அதனை உபயோகிக்க வேண்டும் என அறிந்து விண்ணக அரசிற்காக அதனை உபயோகிப்போம். நாம் கிறிஸ்துவை எந்த அளவிற்கு அதிகமாக அன்பு செய்கிறோமோ, அந்த  அளவிற்கு எது அதிக மதிப்பு வாய்ந்தது என்று நம்மால் முடிவு செய்ய முடியும். கடவுளுக்கு வேண்டாத பொருளை நாம் அகற்ற முடியும் மேலும், மற்ற அனைத்தையும் கடவுளரசின் தேவைக்காக உபயோகிக்க முடியும் .

© 2017 by Terry A. Modica

Friday, July 21, 2017

ஜூலை 23, 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஜூலை  23, 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 16ம் ஞாயிறு
Wisdom 12:13,16-19
Ps 86:5-6,9-10,15-16
Romans 8:26-27
Matthew 13:24-43
மத்தேயு நற்செய்தி
வயலில் தோன்றிய களைகள் உவமை
24இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: 
விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார்.

25அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான்

26பயிர் வளர்ந்து கதிர் விட்டபோது களைகளும் காணப்பட்டன.

27நிலக்கிழாருடைய பணியாளர்கள் அவரிடம் வந்து, ‘ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி? என்று கேட்டார்கள்.

28அதற்கு அவர், ‘இது பகைவனுடைய வேலைஎன்றார். உடனே பணியாளர்கள் அவரிடம், ‘நாங்கள் போய் அவற்றைப் பறித்துக் கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன?’ என்று கேட்டார்கள்.

29அவர், ‘வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக்கூடும்.

30அறுவடைவரை இரண்டையும் வளர விடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம், ‘முதலில் களைகளைப் பறித்துக் கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்என்று கூறுவேன்என்றார்.

கடுகு விதை, புளிப்பு மாவு உவமைகள்
(
மாற் 4:30 - 32; லூக் 13:18 - 21)

31-32இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: 
ஒருவர் கடுகு விதையை* எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும்விடச் சிறியது. ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும் விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும்.

33அவர் அவர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை: 
பெண் ஒருவர் புளிப்புமாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்புமாவுக்கு ஒப்பாகும்.
உவமைகள் வாயிலாகவே பேசும் இயேசு
(
மாற் 4:33 - 34)
34இவற்றையெல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை.

35“நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன்; உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன்என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது.
வயலில் தோன்றிய களைகள் உவமையின் விளக்கம்
36அதன்பின்பு இயேசு மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார். அப்போது அவருடைய சீடர்கள் அவரருகே வந்து, “வயலில் தோன்றிய களைகள்பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிக் கூறும்என்றனர்.

37அதற்கு அவர் பின் வருமாறு கூறினார்: 
நல்ல விதைகளை விதைப்பவர் மானிடமகன்;

38வயல், இவ்வுலகம்; நல்ல விதைகள், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள்; களைகள், தீயோனைச் சேர்ந்தவர்கள்;

39அவற்றை விதைக்கும் பகைவன், அலகை; அறுவடை, உலகின்முடிவு; அறுவடை செய்வோர், வானதூதர்.

40எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும்.

41மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார். அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும்* நெறிகெட்டோரையும் ஒன்று சேர்ப்பார்கள்;

42பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.

43அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப்போல் ஒளிவீசுவர் கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.
(THANKS to www.arulvakku.com)

மன(மத) மாற்றத்தின் மூன்று அடுக்குகள்
நீங்கள் போய் சீடரக்குங்கள்: அமெரிக்க கத்தோலிக்க  மன மாறுதல் திட்டம் மற்றும் வீயூகம் (1992) அறிக்கையில் மூன்று செயல்களை மனம் மாறுதலுக்கான அடுக்குகளாக குறிப்பிட்டுள்ளது.
(1) உங்கள் சொந்த விசுவாச வளர்ச்சியை ஊட்டம் கொடுத்து வளர்த்தல்
(2) மற்றவர்களை மனம் மாற அழைத்தல்
(3) கிறிஸ்தவ வாழ்வின் மூலம் சமூகத்தை மாற்றுதல் 
இன்றைய ஞாயிறின் நற்செய்தியில் இயேசு மூன்று உவமைகள் மூலம் இதே வியூகத்தை போதிக்கிறார்
(1) உங்கள் சொந்த விசுவாச வளர்ச்சியை ஊட்டம் கொடுத்து வளர்த்தல்
இறையரசில் நாம் களைகளிடையே வளரும் நல்ல கோதுமை போன்றவர்கள். இப்படி வளர்வதற்கு முழு முயற்சி தேவை; களைகள் நம்மை தாண்டி வளர்ந்து நம்மை அமுக்க நினைக்கும். அதனால் , தினமும் பரிசுத்த வாழ்வில் வளர நாம் உழைக்க வேண்டும். உங்கள் பரிசுத்த வாழ்வை குழைக்கும் களைகள் அகற்ற நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றீர்கள்?  அசுவிசுவாசம் மற்றும் சாத்தானின் மத்தியில்  உங்கள் விசுவாச வாழ்வு எப்படி பயன் கொடுக்கிறது? உங்களை படைத்த தந்தை கடவுள் உங்களுக்கு தேவையான ஆற்றலை சக்தியை கொடுத்து வளர உதவி செய்கிறார்.
(2) மற்றவர்களை மனம் மாற அழைத்தல்
இறையரசில், நாம் கடுகை போன்ற மிக சிறிய விதை போன்று புற்களிடையே வளர்ந்து பலரும் தங்க கூடிய பெரிய மரம் போல பலரும் வளர பயனுள்ளதாய் வளர்வோம். உங்கள் விசுவாசம் மூலம் யார் பயன் அடைகிறார்கள் ? உங்கள் பரிசுத்த வாழ்வு வளர்ச்சி யாரையெல்லாம் இயேசுவோடு இணைய அழைக்கிறீர்கள்? பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு தேவையான சக்தியை , வழியை கொடுத்து உங்களை மேம்படுத்துகிறார், ஆனால், நீங்கள் அதற்கு உங்கள் விருப்பத்தை பரிசுத்த ஆவியானவரிடம் தெரிவிக்க வேண்டும். மேலும் உங்கள் அனுபவத்தின் மூலம் அவர்களுக்கு இறை சேவை செய்ய வேண்டும்.
(3) கிறிஸ்தவ வாழ்வின் மூலம் சமூகத்தை மாற்றுதல் 
இறையரசில், நாம் புளித்த மாவு போல இருக்கிறோம். அது தான் மற்ற மாவுடன் சேர்ந்து அதனை பெரிதாக்கி , ரொட்டி துண்டுகாலாக மாற்றி , மற்றவர்கள் அதனால் பலன் பெறுவர். இந்த உலகை முன்னேற்றுவதற்கு கிறிஸ்தவனாக நீங்கள் என்ன செய்கிறீர்கள்? உங்கள் வேலையிடத்தில், உங்கள் சமுகத்தில், மேலும் உங்கள் பங்கு கோவிலில் உங்கள் விசுவாசம் என்ன வித்தியாசம் கொண்டு வருகிறது ? திருப்பலியில் நமக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் நிறைந்த திவ்ய நற்கருணையை நாம் பெரும்பொழுது, இந்த உலகின் திவ்ய நற்கருணையாக நாம் மாறுகிறோம். மேலும் திருப்பலி முடிவில், நீங்கள் போய் இந்த உலகிற்கு இறையரசின் புளிப்பு மாவாய் இருங்கள் என்று குருவானவர் உங்களை ஆசிர்வதித்து உங்களை ஆற்றலோடு அனுப்புகிறார்.
© 2017 by Terry A. Modica


Friday, July 14, 2017

ஜுலை 16 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஜுலை 16 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 15ம் ஞாயிறு
Isaiah 55:10-11
Ps 65:10-14 (with Luke 8:8)
Romans 8:18-23
Matthew 13:1-23

மத்தேயு  நற்செய்தி

உவமைப் பொழிவு
விதைப்பவர் உவமை
(மாற் 4:1 - 9; லூக் 8:4 - 8)
1அதே நாளில் இயேசு வீட்டிற்கு வெளியே சென்று கடலோரத்தில் அமர்ந்தார்.

2மக்கள் பெருந்திரளாய் அவரிடம் ஒன்றுகூடி வந்தனர். ஆகவே அவர் படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் நின்றுகொண்டிருந்தனர்.

3அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றைக் குறித்து அவர்களோடு பேசினார்: 
விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார்.

4அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கி விட்டன.

5வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன;

6ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேரில்லாமையால் கருகிப் போயின.

7மற்றும் சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிட்டன.

8ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் சில நூறு மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன.

9
கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்”  என்றார்.
உவமைகளின் நோக்கம்
(மாற் 4:10 - 12; லூக் 8:9 - 10)
10சீடர்கள் அவரருகே வந்து, “ஏன் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகின்றீர்?” என்று கேட்டார்கள்.

11அதற்கு இயேசு அவர்களிடம் மறுமொழியாகக் கூறியது: 
விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை.

12உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார். மாறாக, இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்.

13அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை; புரிந்து கொள்வதுமில்லை. இதனால்தான் நான் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகிறேன்.

14இவ்வாறு எசாயாவின் பின்வரும் இறைவாக்கு அவர்களிடம் நிறைவேறுகிறது:
நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும்
கருத்தில் கொள்வதில்லை.
உங்கள் கண்களால் பார்த்துக்
கொண்டேயிருந்தும் உணர்வதில்லை.
15இம்மக்களின் நெஞ்சம்
கொழுத்துப்போய்விட்டது;
காதும் மந்தமாகிவிட்டது.
இவர்கள் தம் கண்களை
மூடிக்கொண்டார்கள்; எனவே
கண்ணால் காணாமலும் காதால்
கேளாமலும் உள்ளத்தால் உணராமலும்
மனம் மாறாமலும் இருக்கின்றார்கள்.
நானும் அவர்களைக்
குணமாக்காமல் இருக்கிறேன்.
16உங்கள் கண்களோ பேறுபெற்றவை; ஏனெனில் அவை காண்கின்றன. உங்கள் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன.

17நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; பல இறைவாக்கினர்களும் நேர்மையாளர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை.
விதைப்பவர் உவமையின் விளக்கம்
(மாற் 4:13 - 20; லூக் 8:12 - 15)
18“எனவே விதைப்பவர் உவமையைப் பற்றிக் கேளுங்கள்:

19வழியோரம் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறையாட்சியைக் குறித்த இறைவார்த்தையைக் கேட்டும் புரிந்து கொள்ளமாட்டார்கள். அவர்கள் உள்ளத்தில் விதைக்கப்பட்ட விதைகளைத் தீயோன் கைப்பற்றிச் செல்லுவான்.
20பாறைப் பகுதிகளில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார்கள்.

21ஆனால், அவர்கள் வேரற்றவர்கள். எனவே அவர்கள் சிறிது காலமே நிலைத்திருப்பார்கள்; இறைவார்த்தையின் பொருட்டு வேதனையோ இன்னலோ நேர்ந்த உடனே தடுமாற்றம் அடைவார்கள்.

22முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால் பயன் அளிக்க மாட்டார்கள்.

23நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்து கொள்வார்கள். இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும் சிலர் முப்பது மடங்காகவும் பயன் அளிப்பர்.

(THANKS to www.arulvakku.com)

நல்ல மண்ணில் விதைக்கப்படும் விதை
இன்றைய ஞாயிறின் நற்செய்தி விதை விதைப்பதை பற்றி சொல்கிறது. சரியான நிலத்தில் விதைக்கபடாத விதை , அதன் தன்மை மாறா விட்டால், அதற்காக செய்த முயற்சி வீனாகிவிடும். ஒவ்வொரு விதையும் அதன் சுயத்தை இழந்து விட வேண்டும். அந்த மண்ணில் அழிந்து , புதிய செடியாக / வாழ்வை அதே விதையிலிருந்து உண்டாக்கும். அதிலிருந்து தான் , முதல் தண்டாக , செடியாக, வேறாக மாறி, பல மடங்காக பெருகும்,  அதன் வேர் எவ்வளவு ஆழமாக கீழே   செல்கிறதோ அந்த  அளவிற்கு பூமியின் மேல் நன்றாக வளரும். அப்படியிருந்தும், அதற்கு தேவையான உரமும் நீரும் எப்பொழுதும் கொடுத்து கொண்டே இருக்க வேண்டும்.
இவையெல்லாம் நடந்தால், இறுதியாக ஒரு செடி வளரும், அது விதையை போலவே இருக்காது. விதை வளர்ந்து இந்த உலக இயற்கை வளம் பெற அது செடியாக மரமாக வளர்ந்து பல்வேறு பலனை கொடுக்கும்.
இயேசுவின் உவமையை நாம் கேட்கும்பொழுது, நாம் நல்ல விதையாக இருந்து, நல்ல பலனுள்ள வாழக்கையை கொடுக்க வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் நாம் ஆசைபட்டால் மட்டும் பலன் தராது, நமது வாழ்வை நல்ல நிலமாக மாற்ற என்ன செய்ய வேண்டும்?
இசையாஸ் வாசகத்தில், கடவுள் ஒரு நல்ல வளமான மண் - கடவுளும் அவர் வார்த்தைகளும் - என்று சொல்லப்பட்டுள்ளது. புனித பவுல் இரண்டாவது வாசகத்தில் துன்பபடுவது படைத்தலின் ஒரு அங்கம் என்று சொல்லபடுகிறது (விதை மண்ணில் விழுந்து, மடிந்து புதிய வாழ்வை கொடுக்கும்) . துன்பத்திலிருந்தும், இறப்பிலயும் இருந்து தான் மீட்பு கிடைக்கிறது.
நாம் இந்த நிலத்தில் முழுதுமாய கொடுத்து, கடவுள் நம்ம ஊட்ட சத்துடேன் வளர்க்க அனுமதித்தால் மட்டுமே நாம் இந்த கடவுளின் அழைப்பை முழுதுமாக ஏற்று கொண்டோம் என்று அர்த்தம்

© 2017 by Terry A. Modica