Friday, August 31, 2007

செப்டம்பர் 2 , நற்செய்தி மற்றும் மறையுரை :

செப்டம்பர் 2 , நற்செய்தி மற்றும் மறையுரை :

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 14

1 ஓய்வுநாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர். மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களைவிட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். 9 உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், ' இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள் ' என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். 10 நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், ' நண்பரே, முதல் இடத்திற்கு வாரும் ' எனச் சொல்லும்பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள். 11 தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர். ' 12 பிறகு தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, ' நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும் போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே 13 மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். 14 அப்போது நீர் பேறு பெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும் ' என்று கூறினார்.

http://www.arulvakku.com/

இன்றைய நற்செய்தி நம்மிடம் ஒரு கேள்வி கேட்க வைக்கிறது. "நான் நல்ல விசயங்கள், சேவைகள் செய்யும்போது என்னுடைய எதிர்பார்ப்புகள் என்ன? (என்னுடைய நோக்கம் என்ன? ) ". "சுய லாபங்களுக்காக" ? சுய நலத்தினால்? .. நம் நோக்கம் ஏதாவது நமக்கு கிடைக்கும் என்று நினைத்து மற்றவர்களுக்கு உதவி செய்தால், அந்த நோக்கம் தவறானது. இது கிறிஸ்துவை போல் வாழும் வாழ்வு அல்ல.

நற்செய்தியின் எடுத்துகாட்டு, நாம் புனித மாக வாழ வேண்டும் என்றால், இயலாதவர்களூக்கு நாம் விருந்து படைக்க வேன்டும் என்று அர்த்தமில்லை. யேசு அதனை சொல்லவில்லை. இந்த எடுத்துகாட்டை அப்படியே எடுத்து கொண்டால், நாம் முக்கியமான விசயத்தை விட்டு விடுகிறோம்.

உண்மையான செய்தி என்னவென்றால், நாம் எது செய்தாலும், நம் சுய லாபத்திற்கு அல்லாமல், அன்பிற்காக செய்ய வேண்டும். நாம் மற்றவர்களுக்கு அவர்கள் நன்மைக்காகவே செய்யவேண்டும். நம்மை எதிர்த்து யாராவது பாவம் செய்தால் கூட, நாம் அவர்களுக்காக, பாவம் விட்டு மாறவேண்டும் என்று கடவுளிடம் வேன்டுகிறோம். நமது ஜெபம், அவர்களுடைய ஆன்மாவிற்காக இருக்க வேண்டும். அதனால் நாம் கடவுளிடம் பெறும் ஆசிர்வாதம், ஒரு ஊக்கமாகும், அதுவே நோக்கமாக இருக்க கூடாது.

நமது நோக்கத்தையும், எதிர்பார்ப்புகளையும், நன்றாக தெரிந்து கொண்டால், நாம் யேசுவை போல் வாழ முடியும், "உனக்குள்ள பலன்களை உயிர்த்தெழும்போது, மிக சரியாக உனக்கு கிடைக்கும்" என்று உறுதியளிக்கிறார். இந்த உறுதியளிப்பின், முழுமை பெறும் நாள், எப்போது , நாம் உயிர்த்தெழுந்த யேசுவை போல வாழ ஆரம்பிக்கிறோமோ அன்றிலிருந்து ஆரம்பிக்கிறது.
அப்பப்பொழுது,யேசு நமக்கு கிடைக்கும் அருட்கொடையானது, நம்மை யேசு என்ன வெல்லாம் செய்ய சொல்கிறாரோ, அதனை எந்த ஒரு சுய நலமில்லாமலும், தூய மனத்துடனும், , தாராளமாகவும் செய்ய நம்மை தூண்டுகிறது. மேலும் பல நன்மைகளும், கொடைகளும் பெறுவோம், ஆனால் அதனால் தான், நாம் மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று கிடையாது.

http://www.gnm.org

© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Saturday, August 25, 2007

agust 26th :நற்செய்தி மறையுரை

நற்செய்தி & மறையுரை :


லூக்கா நற்செய்தி

அதிகாரம் 13

22 இயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித்துக்கொண்டே எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார். 23 அப்பொழுது ஒருவர் அவரிடம், ' ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா? ' என்று கேட்டார். அதற்கு அவர் அவர்களிடம் கூறியது: 24 ' இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும். ' 25 ' வீட்டு உரிமையாளரே, எழுந்து கதவைத் திறந்துவிடும் ' என்று கேட்பீர்கள். அவரோ, நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது ' எனப் பதில் கூறுவார். 26 அப்பொழுது நீங்கள், ' நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம். நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே ' என்று சொல்வீர்கள். 27 ஆனாலும் அவர், ' நீங்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது. தீங்கு செய்வோரே, அனைவரும் என்னைவிட்டு அகன்று போங்கள் ' என உங்களிடம் சொல்வார். 28 ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் இறைவாக்கினர் யாவரும் இறையாட்சிக்கு உட்பட்டிருப்பதையும் நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும்போது அழுது அங்கலாய்ப்பீர்கள். 29 இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள். 30 ஆம், கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர். '

http://www.arulvakku.com


இன்றைய நற்செய்தி தான் மோட்சத்தில் உள்ள குறுகிய கதவின் வாயிலுக்கு அழைத்து செல்லும் சாலை குறியீடுகள் ஆகும். கடவுளுக்கு நம்முடைய எண்ணங்களும், செயல்களும் தெரியும் என்கிறார் இசையா. அப்படி தெரிந்து கொண்டு, நம் பாவங்களை கழுவி, நம் எண்ணங்களை சுத்தபடுத்த உதவுகிறார். இதன் மூலம் கடவுளின் பிரகாசத்தையும், புகழொளியையும் நாம் மரணமடையும் போது பார்க்கலாம். கடவுள் நம்மிடையே ஓர் அடையாளத்தை கொடுத்துள்ளார். அது தான் யேசு கிறிஸ்து. அவருடைய வாழ்வு. --எப்படி வாழ்ந்து மற்றும் எப்படி இறந்தார் -- என்பது, நமக்கு மோட்சத்தை எப்படி அடைய வேண்டும் என்பதற்கான அடையாளமாகும். இன்றைய நற்செய்தியில் "பலர் மோட்சத்தின் உள்ளே செல்ல முயற்சி செய்வார்", என்று யேசு கூறுகிறார். அவர்கள் அதிக வலிமையும் திறமையும் சக்தியும் உடையவராகவும் இருப்பர் என்று கூறுகிறார். அந்த வலிமை போதுமானதா? நற்செய்தி வாசகம் முழுவதும், இதற்கான பதிலை கூருகிறார். நாம் அன்பு செய்வதில் பிழையற்று இருக்க வேண்டும். முழுமையாக அன்பு செய்ய வேண்டும் என்று கூறுகிறார். நாம் செய்யும் தவறுகளும், பிழைகளும் , நம்மை மோத்சத்திற்கு அழைத்து செல்லாது என்று அர்த்தமில்லை. மோத்சத்தின் கதவுகளுக்கு சாவி அன்பு ஒன்று தான். நாம் அன்பை தூக்கி எறிந்தால், அந்த சாவியை தூக்கி எறிந்ததற்கு சமமாகும்.

அன்பில் நாம் பிழையற்று இருக்க வேண்டும் என்றால், கடவுளின் அன்பை நாம் கொண்டிருக்க வேண்டும். யேசு நம்மிடையே கொண்டிருக்க வேண்டும், அதன் மூலம் அவர் நம் மூலம் மற்றவர்களை அடைகிறார். நாம் தனியாக, முழுமையான அன்பை கொடுக்க முடியாது. அதனால், கடவுளை வேண்டு, அவரை சார்ந்து, மற்றவர்களுக்கு அவரின் முழு அன்பை கொடுக்க முடியும். அவரின் அன்பில் நாம் சார்ந்து இருக்க வேண்டுமென்றால், அதன் மேல் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றால், அவரின் அன்பை தடுத்து நிறுத்தும், எல்லா விசயங்களையும் நம்மிடமிருந்து விலக்க வேண்டும். மன்னிக்காமல் இருப்பது, பழிவாஙும் எண்ணம், தவறான எண்ணங்கள், எதிர் மறையான சிந்தனைகள், இரக்கமில்லாமல், மற்றவர்களை ஒதுக்கி தள்ளுவது ஆகியன, கடவுளின் அன்பை நம்மிடம் கிடைக்க விடாமல் செய்வது ஆகும்.

அடுத்த வாசகத்தில், கடவுளின் ஒழுங்கை அவமரியாதை செய்யாதீர்கள் என்று குறிப்பிடபடுகிறது. நம்முடைய சோதனைகளயும், கஷ்டத்தையும், கடவுள் உபயோகித்து, நமது அன்பை முழுமையாக்குகிறார். நாம் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நமது அன்பின் வாழ்வில் வளர்ந்தோமானால், நாம் கடவுளை வேண்டி, நமது அன்பை வளர்க்க கோரினால், அவர் உதவியுடன், யேசுவை போல் மாறிவிடுவோம். இதன் மூலம் மோட்சத்திற்கான வழியை நாம் நேராக பெற்று விடலாம். மேலும் நமது குறையுள்ள, முடமான நமது பரிசுத்த வாழ்வு குணமாக்கப்படும்.

சுய பரிசோதனைக்கான கேள்வி:
உமது வாழ்வில் யாரை அன்பு செய்ய மிகவும் கஷ்டமாக இருக்கிறது. (நீயே உன்னை அன்பு செய்ய மறுப்பதையும் நினைத்துகொள்). எப்படி இவர்களிடம் முழுமையான, பரிசுத்தமான் அன்பை, கடவுள் மூலம் அவர்களை முழுமையாக அன்பு செய்யும் சக்தியை பெற்று, அவர்களை முழுதுமாக அன்பு செய்யலாம்.?


© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Saturday, August 18, 2007

ஆகஸ்டு 19 2007 , நற்செய்தி & மறையுரை:

ஆகஸ்டு 19 2007 , நற்செய்தி & மறையுரை:


லூக்கா நற்செய்தி

அதிகாரம் 12

49 ' மண்ணுலகில் தீமூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். 50 ஆயினும் நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன். 51 மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன். 52 இது முதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு எதிராக இருவரும் பிரிந்திருப்பர். 53 தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர். '


http://www.arulvakku.com

இன்றைய நற்செய்தியில், யேசு "மண்ணுலகில் தீமூட்ட வந்தேன்" , மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வரவில்லை என்று கூறுகிறார். அவர் பரிசுத்த ஆவியை திருமுழுக்கு மூலம் பெற ஆவலோடு இருந்தார். அதுவரை மிகவும் மண நெருக்கடியோடு இருந்தார். அதே போல், அவரை பின்பற்றி செல்பவர்களும், பரிசுத்த ஆவியுடனும் எப்போது இருக்க வேண்டும் என்று விரும்பினார். இது தான் உலகை மாற்றும். இது தான் நிரந்தர அமைதியை தரும். நம் மூலம் மற்றவர்களுக்கும் நிரந்தர அமைதி பரவும்.

பரிசுத்த ஆவியானவர் நெருப்பு, அந்த நெருப்பு நமது குறைகளை துடைத்து எறிகிறது. நம்மை தூய்மைபடுத்துகிறது. அன்பற்ற செயல்கள், நமது தவறான எண்ணங்கள் மூலம், கிடைக்கும் பலன்கள் அமைதியின்மை, ஒற்றுமையின்மை, கருத்து வேற்றுமைகள், மற்றும் போர் ஆகும். அதனால் தான், பரிசுத்த ஆவியின் அருளால், எவ்வளவு பிரச்னைகளிலும் நாம் அமைதியாக இருக்க முடிகிறது. பரிசுத்த ஆவியினால், இவ்வுலகில் , நாம் கடவுளின் அமைதி பரிசை எடுத்து செல்லும் கருவியாகிறோம். நீ பரிசுத்த ஆவியின் நெருப்பை, உணரவில்லையெனில், அது கிறிஸ்துவின் அமைதியை பரப்ப உங்களை தட்டி எழுப்ப வில்லையெனில், யேசு உன்மேல் கடுந்துயரம் அடைகிறார்.

உங்களோடு ஒட்டியிருக்கும் ஒரு பாவத்தை நினைத்துகொள்ளுங்கள், அதை விரைவில் நிறுத்தி விடுவோம் என்று நீங்கள் நினைத்தை நிணைத்து கொள்ளவும். யேசு உன்னை என்ன செய்ய சொல்கிறார் என்றால், பரிசுத்த ஆவ்யின் நெருப்பை கொண்டு, அந்த பாவத்தை கொளுத்தி, உங்கள் வாழ்வு அந்த பாவத்திலிருந்து மீண்டு வர வேண்டும் என்று கூறுகிறார். யேசு என்ன செய்ய வேண்டும் என்று பார். எந்த மாதிரியான ஞானஸ்நானத்தை அவர் குறிப்பிடுகிறார். தண்ணீரால் ஆன ஞானஸ்தானம் இல்லை, அவர் ஏற்கனவே அதை பெற்று விட்டார். அவர் குறிப்பிடுவது மிகவும் வலி கொடுக்க கூடிய சுய தியாகம் ஆகும். அந்த வலியை பொறுக்க கூடிய மண உறுதி, அன்பிற்காக ஏங்கிய வலி தான் யேசுவை முழுதுமாக ஆட்கொண்டிருந்தது. அதன் மூலம் பாவத்திலிருந்து மீட்பை கொடுக்க வலியுறுத்தியது.


பாவங்களை நிறுத்த, நாம் யேசுவை போல் மாறவேன்டும். நாம் உளமார மற்றவர்களுக்காக தியாகம் செய்ய தயாராய் இருப்பது, கிறிஸ்துவ வாழ்வின் முழுமை பெறுவது ஆகும். நமது உள்ளத்தில், நமது அன்பும் , வேலைகளும், நமது சகோதரர்களை நித்திய அமைதிக்கு வித்திட வேண்டும் என்று நமது உள்ளம் கொழுந்து விட்டு எறிய வேண்டும்.

யேசு இந்த நெருப்பு தான் ஒவ்வொரு வீட்டிலும், பிரிவை உண்டாக்குகிறது என்கிறார். இது தான், நம் வீட்டில் உள்ளவர்கள் சுய லாபத்தோடு வாழ்வு நடத்தும்போது, நம்மிடமிருந்து அவர்களை பிரிக்கிறது. எது எப்படி இருந்தாலும், நீங்கள் தொடர்ந்து அவர்களிடம் அன்பு செய்ய வேண்டும். இந்த செயல், நம்மிடம் உள்ள நெருப்பை இன்னும் வளர செய்யும். நம்மை மேலும் சுத்த படுத்தும். தொடர்ச்சியாக, உலகமும் மாறும்.

http://www.gnm.org

Saturday, August 11, 2007

ஆகஸ்டு 12, 2007 ஞாயிறு நற்செய்தி மறையுரை:

ஆகஸ்டு 12, 2007 ஞாயிறு நற்செய்தி & மறையுரை:

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 12

32 ' சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்; உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார். 33 உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை. 34 உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும். 35 உங்கள் இடையை வரிந்துகட்டிக் கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்து கொண்டிருக்கட்டும். 36 திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள். 37 தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறு பெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 38 தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறுபெற்றவர்கள். 39 எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். 40 நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். ' 41 அப்பொழுது பேதுரு, ' ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா? ' என்று கேட்டார். 42 அதற்கு ஆண்டவர் கூறியது: ' தம் ஊழியருக்கு வேளா வேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப்பொறுப்பாளர் யார்? 43 தலைவர் வந்து பார்க்கும் போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர். 44 அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன். 45 ஆனால் அதே பணியாள் தன் தலைவர் வரக்காலந் தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டு ஆண், பெண் பணியாளர்கள் அனைவரையும் அடிக்கவும் மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் தொடங்கினான் எனில் 46 அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வந்து அவனைக் கொடுமையாகத் தண்டித்து நம்பிக்கைத் துரோகிகளுக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார். 47 தன் தலைவரின் விருப்பத்தை அறிந்திருந்தும் ஆயத்தமின்றியும் அவர் விருப்பப்படி செயல்படாமலும் இருக்கும் பணியாள் நன்றாய் அடிபடுவான். 48 ஆனால் அவர் விருப்பத்தை அறியாமல் அடிவாங்கவேண்டிய முறையில் செயல்படுபவன் அவரது விருப்பத்தை அறியாமல் செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.


http://www.arulvakku.com
ஆகஸ்டு 12, 2007 ஞாயிறு நற்செய்தி & மறையுரை:

இன்றைய நற்செய்தியில், கடவுள் மிகவும் சந்தோசமாக அவரது விண்ணரசை உங்களிடம் கொடுக்க தயாராய் இருக்கிறார். இந்த விண்ணக அரசு, விண்ணையும், இந்த பூமியில், அவருடைய அன்பினால் கிடைக்கும் ஆதாயங்களையும் , பூமியில் கிடைக்கும் நல்ல பலன்களும் சேர்ந்து தான் குறிப்பிடபடுகிறது.
கடவுள் எதையுமே அவரிடம் வைத்து கொள்வதில்லை. நாம் அதையெல்லாம், கடனமாக உழைத்து அதனை பெற வேண்டியதில்லை. ஆனால், நாம் அதனை உபயோகபடுத்துகிறோமோ? கடவுள் கொடுக்கும் அனைத்தையும், எப்படி பெற வேண்டும் என்று யேசு விளக்குகிறார்: உனது இதயத்தை பரிசோதனை செய். உலக பொருட்களுக்காக நீ ஏங்குவாய் ஆனால், உனது கைகளில், இருக்கும் பொருட்கள் எல்லாம், ஒன்றுமில்லாமல் போகும். உனது பண பைகள் எல்லாம் உலக பொருட்களுக்காக திட்டத்துடன் இருந்தால், அல்லது கடவுளுக்கு உகாத உறவுகள் கொண்டிருந்தால், கடவுளுடைய மிகப்பெரும் பிரமாதமான அருட்கொடைகள் உனக்கு வர இடமில்லை. இந்த உலக பொருட்செல்வங்கள் எல்லாம், நிரந்தரமானவை அல்ல , அதனால், இதனையெல்லாம், கடவுளின் அழிய முடியாத வெகுமதிக்கு, இந்த உலக விசயங்களை விட்டு விடுங்கள்.

இந்த நற்செய்தி, நம்முடைய செல்வங்கள் எல்லாவற்றையும், கடவுளின் அருட் செல்வத்திற்காக, விற்று விடவேண்டும் என்று அர்த்தமில்லை. எது முக்கியம் என்றால், நம் எண்ணம், நோக்கம், எல்லாம், கடவுளின் அருட்செல்வத்திற்காக ஏங்க வேண்டும் அதனை பெற முயற்சிக்க வேண்டும். அந்த செல்வங்கள் எல்லாம், கடவுளரசிற்கு சேவை செய்கிறதா? அல்லது நிரந்தரமற்ற நோக்கங்களுக்காக உபயோகபடுகிறதா?

எதுவெல்லாம், கடவுளோடு உன்னை இணைக்கிறதோ அதனை ஊக்கப்படுத்துகிறதோ? அதுதான் உனக்கு நித்திய வாழ்வின் வெகுமதி.

நம் வாழ்வில், உலக பொருட்களுக்காக, வீணடிக்காமல், கடவுளுக்காக அவரது அருட் கொடைகளுக்காக வாழ வேண்டும் என்று யேசு எசசரிக்கிறார். தலைவர் எப்போது வருவார் என்று நமக்கு தெரியாது, மேலும் நித்திய இளைபாற்றிக்கு , கடவுளோடு நிரந்தர இணைப்புக்கு நம்மை அழைத்து செல்வார் என்று தெரியாது. நாம் தயாராய் இருக்கிறோமா? அல்லது உலக வெகுமதிக்காக, நம்முடைய விருப்பம் செல்கிறதா?

இதனால் தான், கடவுள் அவருடைய மிக பெரிய இரக்கத்தால், நமக்கு உத்தரிக்கிற ஸ்தலத்தை கொடுத்துள்ளார். உலக வெகுமதியில் இருந்து வெளி வருவது என்பது மிகவும் வலியை கொடுக்கும். இதனை யேசு 'அடிபடுவான்' , தலைவருடைய பேச்சை கேட்காதவர்கள் என்று கூறுகிறார். ஏன் அதற்காக காத்திருக்க வேண்டும். இப்போது சரியான நேரம், கடவுளரசை தெரிந்து, அந்த நோக்கத்திலேயே இருந்து , நாம் கடவுளின் அன்பளிப்பை, அவரின் வெகுமதியை பெற்று வளர்வோம். அப்போது தான், எந்த திருடனும் நம்மை அழிக்க முடியாது.

சுய பரிசோதனைக்கான கேள்வி:
நாளை நீ மரணமடைய போகிறாய் என்று தெரிந்தால், நீ எதை தயார் செய்வாய்? எந்த மனோ நிலையில் , என்ன நோக்கத்தில், என்ன திட்டம் கடவுளரசிற்கு உபயோகமில்லை என நினைக்கிறீர்கள்? எந்த பழக்க வழக்கங்கள், எந்த மாதிரியான அடிமைதங்கள், அன்பற்ற நடைமுறைகள், மன்னிக்க முடியாத, குழப்பங்கள் உள்ளன. இந்த மதிப்பற்ற பொருட்களை கிறிஸ்துவிடம் எடுத்து செல்லுங்கள். இதன் மூலம் கடவுளின் வெகுமதிக்கு போதிய இடம் உங்கள் உள்ளங்களில் கிடைக்கும்.

© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Saturday, August 4, 2007

ஆகஸ்டு 5 2007., ஞாயிறு நற்செய்தி , மறையுரை:

ஆகஸ்டு 5 2007., ஞாயிறு நற்செய்தி , மறையுரை:


லூக்கா நற்செய்தி

அதிகாரம் 12

13 கூட்டத்திலிருந்து ஒருவர் இயேசுவிடம், ' போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக்கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும் ' என்றார். 14 அவர் அந்த ஆளை நோக்கி, ' என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்? ' என்று கேட்டார். 15 பின்பு அவர் அவர்களை நோக்கி, ' எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது ' என்றார். 16 அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார்: ' செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. 17 அவன், ' நான் என்ன செய்வேன்? என் விளை பொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே! ' என்று எண்ணினான். 18 ' ஒன்று செய்வேன்; என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்; அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன் ' . 19 பின்பு, ' என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பல வகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு ' எனச் சொல்வேன் ' என்று தனக்குள் கூறிக்கொண்டான். 20 ஆனால் கடவுள் அவனிடம், ' அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்? ' என்று கேட்டார். 21 கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே. '

(http://www.arulvakku.com)
பேராசையின் பிரச்னை என்ன என்றால், அது மற்றவர்களை வேதனைபடுத்துகிறது, காயப்படுத்துகிறது. உலகச் செல்வங்களால், நம்மை தற்பெருமை உள்ளவனாகவும், மற்றவர்களை சாராமலும் இருப்போம். நாம் நம்மையும், நம்மிடம் உள்ள செல்வங்களையும் சார்ந்து இருப்பதால், கடவுளை நம்புவதில்லை, நாம் சுயநலமிகளாக இருப்போம், அதன் மூலம் மற்றவர்கள வேதனைபடுவர். நாம் நம்முடைய செல்வங்களை , நம் வீட்டில் அடைத்து வைப்பதால், மற்றவர்களுக்கு தேவையானதை கொடுப்பதில்லை. இன்றைய நற்செய்தியில், தற்பெருமையும், சுய சார்பு நிலையும், கடவுளின் புனிதத்திற்கு எதிரானது என்று குறிப்பிடுகிறார்.

நமக்கு கிடைக்கும், அறுவடை கடவுளிடமிருந்து வருகிறது. நமக்கு கிடைக்கும் அபரிதமான பணம், சந்தோசம், ஞானம், அனுபவ பாடங்கள் எல்லாம், கடவுள் நமக்கு கொடுத்த திறமைகள், ஆற்றல், சக்தி மூலம் நமக்கு கிடைத்தது. உனது சொந்த முயற்சியால், பெற்ற வெற்றி, அனைத்தும், உண்மையாகவே கடவுளிடமிருந்து வந்தது. நமக்கு கிடைக்கும் எல்லாவற்றிர்கும், கடவுள் தான் ஊற்று, அவை எல்லாம், மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுக்க படவேண்டியவை, ஏனெனில், இதன் மூலம் தான், மற்றவர்களின் வேண்டுதலுக்கு கடவுள் பதில் கொடுக்கிறார். நமக்கு கிடைப்பதை, மற்றவர்களுக்கு கொடுக்கும்போது, கடவுளின் கைகளாக இருக்கிறோம்.

கடவுள் தான் நமக்கு எல்லாம் கொடுக்கிறார், என்று புரிந்தால், தாராள மனப்பாங்கு நம்மிடம் வளரும். மேலும், நாம் கொடுக்க கொடுக்க அவரும் கொடுத்து கொண்டேயிருப்பார்.

கடவுளின், தாராள மனத்தை புரிந்து கொள்தல் தான் உண்மையான செல்வம்: நம் வாழ்வு, சோதனைகளிலும்,அமைதியாகவும், வளமானதாகவும் இருக்கும். ஆபத்தான நேரங்களிலும், நமக்கு நம்பிக்கை வளரும். நமக்கு உள்ளதை எல்லாம், மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டால், அவர் சொத்து நம்முடையாதாகும். இது தான், திருச்சபையின், கடவுளரசின் அடிப்படை பொருளாதாரமாகும். மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் போது தான், யேசுவின் உடல் அப்போதுதான் சுபிட்சம் பெறும். இதனை தான், புனிதர்களின் புனித இணைப்பு என்று கூறுகிறோம்.


© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm