Friday, April 26, 2013



ஏப்ரல் 28, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 5ம் ஞாயிறு
Acts 14:21-27
Ps 145:8-13
Rev 21:1-5a
John 13:31-35
 

யோவான் நற்செய்தி
புதிய கட்டளை
31 அவன் வெளியே போனபின் இயேசு, ' இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சிபெற்றுள்ளார்.32 கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார்.33 பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால் நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது. இதையே யூதர்களுக்குச் சொன்னேன்; இப்போது உங்களுக்கும் சொல்கிறேன்.34 ' ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் ' என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்.35 நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர் ' என்றார்.
(thanks to www.arulvakku.com)

நீங்கள் மரணம் அடைய போகீறீர்கள் என்று தெரிந்தால், உங்கள் அன்பானவர்களுக்கு என்ன அறிவுரை உங்களின் கடைசி நேரத்தில் வழங்குவீர்கள்? உங்களிடமிரிந்து அவர்கள் கற்று கொள்ள கூடிய முக்கியமான விசயம் என்ன?

இன்றைய ஞாயிறின் நற்செய்தியில், இயேசுவிற்கு அவரது காலம் குறைவு என்பது தெரியும். முதலில் அவரது நண்பர்கள் அனைவரிடமும், தந்தை கடவுளுக்கு புகழ் கூறி ஆரம்பிக்கிறார். அதே  நேரத்தில்,   தந்தை கடவுளும் அவரும் ஒன்றே என்பதையும் குறிப்பிடுகிறார். அவரது நண்பர்களை பிள்ளைகளே என்றும் கூறுகிறார், தந்தை கடவுள் போல அவர்களை கூப்பிடுகிறார். தந்தை கடவுளோடு அவரும் ஒன்றானவர் என்பதை இதன் மூலம் விளக்கமாக நமக்கு தெரிவிக்கிறார். இதனை மிகவும் தாழ்மையுடன் தெரிவிக்கிறார்.  தந்தை கடவுளுக்கும் , மீட்பர் மகனுக்கும் இடையே உள்ள கோடு நமக்கு புரிவதில்லை. இதையே அவர் வேறு மாதிரியாக சொல்லியிருக்கலாம் , “ நான் தெய்வம், நான் தான் கடவுள், என்னை ஆராதியுங்கள் “ என்றும் சொல்லியிருக்கலாம். ஆனால், அவர் கடவுளின் புகழை மேன்மைபடுத்துவதில் குறியாய் இருந்தார்.

கடவுளின் ப்ரசன்னம் மூலம் , அவர் புகழொளி எங்கும் வீசுகிறது. அதில், அவரின் அன்பு, புனிதம், அமைதி, ஞாணம், அவரின் படைப்பு மேலும் அவரின் எல்லாமும், அங்கே  நிறைந்திருக்கிறது, அந்த புகழொளியில் நாம் முழுதும் குளித்து அவரின் ஆசிர் பெறலாம். அவரை நாம் மகிமைபடுத்தும்பொழுது, நாமும் புகழொளியை கடவுளுக்கு திருப்பி அனுப்ப்புகிறோம். அவரின் புகழொளி உங்களில் எந்த அளவிற்கு ஒளிர்கிறது.?


தந்தை கடவுளுக்கும், மகன் சுதனுக்கும் புகழொளி ஒருவருக்கொருவர் மகிமைபடுத்திய பின்பு, யேசு அவரின் சீடர்களுக்கு, அவரின் உல்க, தெய்வீக ஞாணத்தை அளித்தார். இயேசுவின் புகழொளியில், நாம் சேர்வதற்கு, நாம் இயேசு அன்பு செய்வது போல நாமும் அன்பு செய்ய வேண்டும்.

சுய நலமின்றி மற்றவர்களுக்கு நாம் செலுத்தும் அன்பே, உண்மையாகும். யேசு சுய நலமின்றி அவரை முழமையாக , அவரது இறப்பை நமக்கு கொடுத்தார். குருக்களும், சீடர்களும், இயேசுவை பின் செல்பவர்களும், திருச்சபையின் தலைவர்களும், உண்மையான அன்புடன் அவர்கள் இறைசேவை செய்ய வில்லை என்றால், அவர்கள், உண்மையான குருக்களோ, திருச்சபையின் தலைவர்களோ, சீடர்களாகவோ இருக்கமுடியாது.

தியாகத்துடனும், முழுதுமாக கொடுக்கப்பட்ட அன்பு தான் கடவுளின் அன்பாகும், அது தான் கடவுளின் புகழ் ஓளியாகும். ஈஸ்டர் காலத்தில், இன்றைய நற்செய்தி, ஏன் பாடுகளை பற்றி வாசிக்கிறார்கள்?  மற்ற வாசகங்களோ ஈஸ்டர் காலத்தை பற்றியது. “ இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்” (Rev 21:5a)  இருந்தாலும்,  இயேசு, துரோகத்தையும், துன்பத்தையும், மரணத்தையும் தாங்கி கொள்ள தயார் படுத்தி கொண்டிருந்தார். ஏன்? கடவுள் புகழை நாம் இயேசுவை தொடர்ந்து அவரின் திருப்பணிகள் நாம் தொடர்ந்து செய்ய வேண்டும்.  அதற்கு இயேசு அவரது ஞாணத்தை சீடர்களுக்கு கொடுக்கிறார். தியாகத்தோடு, நாம் ஒருவரை ஒருவர் அன்பு செய்து, இயேசு உண்மையானவர்  என்று உலகிற்கு அறிவிப்போம். அவர் உயிர்த்தெழுந்துவிட்டார், நம்மில் வாழ்கிறார்.

© 2013 by Terry A. Modica

Saturday, April 20, 2013

ஏப்ரல் 21, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஏப்ரல் 21, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
பாஸ்கா காலத்தின்  4ம் ஞாயிறு
Acts 13:14, 43-52
Ps 100:1-3, 5
Rev 7:9, 14b-17
John 10:27-30

யோவான் நற்செய்தி
அதிகாரம் 10:27-30
27என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப்பின் தொடர்கின்றன.28 நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ளமாட்டார்.29 அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள இயலாது.http://www.arulvakku.com/images/footnote.jpg30 நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம் ' என்றார்.
(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தி மிகவும் சுருக்கமாகவும், இயேசுவின் நோக்கத்தையும் தெரிவிக்கிறது. நமது நல்லாயனை மட்டுமே நாம் பின்பற்றி செல்ல வேண்டும். அவர் ஒருவரை மட்டும் தான் நாம் கண்ணை மூடிகொண்டு நாம் நம்பலாம்.

மற்றவர்கள் நம் மேல் அக்கறை கொண்டவர்கள், நாம் அவர்களுக்கு செவி சாய்க்கலாம். ஆனால் கண்ணை மூடி கொண்டு அவர்களை பின்பற்றுவதில்லை. அவர்களுள் உள்ள நல்ல உயர்ந்த குணத்தை கூட நாம் வளர்த்து கொள்வதில்லை. ஆயர்க்ளையும், பங்கு குருக்களையும், நம் கம்பெனி முதலாளீகளையும், ஆசிரியர்களையும், பெற்றோரையும் நாம் மரியாதை செலுத்துகிறோம். ஆனால் அவர்கள் அனைவரும் பாவம் செய்கிறவர்கள். அவர்களது பொறுப்புகளை, முழுதாக புரிந்து கொள்ளவில்லை. ஒவ்வொரு முறையும் பரிசுத்த ஆவியின் துனையை பெற்று, அவரிடம் வேண்டி, அவரின் அறிவுரையோடு நாம் நடந்து கொள்ள வேண்டும். அப்படி நடந்து கொள்ளாமல், நாம் வேறாக நடக்கும் பொழுது, கடவுள் வருத்தம் அடைவார்.

இயேசுவை மட்டும் தான் கண்ணை மூடிகொண்டு நாம் நம்பலாம். அவர்தான் முழுமையான பரிசுத்தமானவர், எல்லாம் அறிந்தவர், மேலும் பாவம் செய்யாதவர். அவரால் தான் சரியான நேரத்தில், சரியான முடிவை எடுக்க தெரியும், மேலும், சாத்தானின் தூண்டுதலுக்கு நாம் இரையாகாமல் பார்த்து கொள்வார். நமக்கு எது உகந்ததோ, எது சரியோ உங்கள் வாழ்விற்கு எது தேவையோ, மற்றும், எல்லோருக்கும் சரியான வழியை, முடிவை கொடுப்பவராக இருக்கிறார். மேலும், இயேசு மட்டும் தான் நம்மை மோட்சத்திற்கு நம்மை செல்லும் பாதையில், ஏற்படும் ஆபத்துகளை தாண்டி அழைத்து செல்ல முடியும்.

இயேசுவின் திட்டத்தை தாண்டி, நாம் தவறாக செல்லும்பொழுது, நம்மை பார்த்து புன்னகைத்து, நமது அன்பினை ஏற்று, நாம் இன்னும் சரியான பாதைக்கு வருவோம் என்ற எண்ணத்தோடும் இருப்பவர் இயேசு ஒருவர் மட்டுமே. அதனால் தான் நம்மை பார்த்து அவர் புன்னகைக்கிறார். புதிய திட்டத்தை நம்மில் கொண்டு வர அவருக்கு தெரியும். இரக்கத்துடன், நம் கையை புடித்து கொள்வார், அதன் மூலம் தந்தை கடவுளை விட்டு நாம் விலகாமல் பார்த்து கொள்வார். நாம் யாரையாவது  நம்பாமல் இருக்கும்போது, நம்மையே நம்பாமல் இருக்கும்போது கூட, என்ன நடந்தாலும், நாம் அவரை கண்டிப்பாக நம்பலாம். எப்படி விலகி சென்றாலும், நம்மை மீண்டும் அவர் அழைத்து செல்வார். நமது தவறுகளிலிருந்து நம்மை மீட்டு, நல்லதாக மாற்றி, நம்மை மீட்பவர் அவரே. ஏனெனில், நாம் அவரை அன்பு செய்கிறோம், நல்லதே செய்ய ஆசைபடுகிறோம். நமது பாதுகாப்பை எப்பொழுதும் காப்பவர். நம்மை மீட்பவர். கெட்டதிலிருந்து  நல்லதை கொடுப்பவர். நமது பாவத்திலிருந்து நம்மை நல்வழிக்கு கொண்டு வருபவர். எப்பொழுதுமே நம்மை மோட்சத்திற்கு அழைத்து செல்பவர். நம்மை சரியான வழியில் கொண்டு செல்பவர்.

© 2013 by Terry A. Modica

Friday, April 12, 2013

ஏப்ரல் 14, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஏப்ரல் 14, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
பாஸ்கா காலத்தின் 3ம் ஞாயிறு
Acts 5:27-32, 40b-41
Ps 30:2, 4-6, 11-13
Rev 5:11-14
John 21:1-19


யோவான் நற்செய்தி
அதிகாரம் 21:1-19
8. பிற்சேர்க்கை
இயேசு தம் சீடர் எழுவருக்குத் தோன்றுதல்
1 பின்னர் இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு:2 சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர்,3 அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், ' நான் மீன்பிடிக்கப் போகிறேன் ' என்றார். அவர்கள், ' நாங்களும் உம்மோடு வருகிறோம் ' என்று போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை.4 ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்து கொள்ளவில்லை.5 இயேசு அவர்களிடம், ' பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா? ' என்று கேட்டார். அதற்கு அவர்கள், ' இல்லை ' என்றார்கள்.6 அவர், ' படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும் ' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பபட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை.7 இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், ' அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம் ' என்றார். அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந்திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார்.8 மற்றச் சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகு தொலையில் இல்லை; ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள்.9 படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது.10 இயேசு அவர்களிடம், ' நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள் ' என்றார்.11சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையைக் கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.12 இயேசு அவர்களிடம், ' உணவருந்த வாருங்கள் ' என்றார். சீடர்களுள் எவரும், ' நீர் யார்? ' என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர் தாம் என்று அவர்கள் அறிந்து கொண்டார்கள்.13 இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார்.14 இவ்வாறு, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார்.

இயேசுவும் பேதுருவும்
15 அவர்கள் உணவருந்தியபின் இயேசு சீமோன் பேதுருவிடம், 'யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?' என்று கேட்டார். அவர் இயேசுவிடம், 'ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே! 'என்றார். இயேசு அவரிடம், 'என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்' என்றார். 16 இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், ' யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா? ' என்று கேட்டார். அவர் இயேசுவிடம், ' ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே! ' என்றார். இயேசு அவரிடம், ' என் ஆடுகளை மேய் ' என்றார்.17 மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், ' யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா? ' என்று கேட்டார். ' உனக்கு என்னிடம் அன்பு உண்டா? ' என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், ' ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா? என்றார். இயேசு அவரிடம்,  என் ஆடுகளைப் பேணிவளர்.  18 ' நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடிவந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன் ' என்றார்.19 பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார். இதைச் சொன்ன பின் பேதுருவிடம், ' என்னைப் பின் தொடர் 'என்றார்.
(thanks to www.arulvakku.com)

எப்பொழுதுமே இந்த வார நற்செய்தியை வாசிக்கும்பொழுது, சீடர்கள் கரைக்கு வரும் முன்பே , இயேசுவிற்கு அவர் சுட்டு கொண்டிருந்த மீண்கள் எங்கிருந்து வந்தது? அவர் தனியாக வலை வைத்திருந்தாரா? ரொட்டியும் மீனையும், சந்தையிலிருந்து வாங்கி வந்திருந்தாரா? அப்படி சந்தைக்கு சென்றிருந்தால், யாரும் அவரை அடையாளம் கண்டு கொள்ளவில்லையா? அல்லது மீன் தண்ணியிலிருந்து துள்ளி குதித்து அந்த  அடுப்பிற்கு வந்த்தா? சாத்தான் கல்லை உணவாக மாற்றி அவரை சோதனை செய்தது போல, இயேசுவும் கல்லை ரொட்டி துண்டாக மாற்றினாரா?


ரொட்டி துண்டுகளையும், மீனையும் பல மடங்காக இயேசு பெருக்கிய அற்புதத்தை நினைவில் கொள்வோம். இங்கேயும் அதே போல் ஒரு அற்புதம். குறைந்த அளவாக இருந்தாலும், அற்புதம் அற்புதம் தான். இவ்வுலகை படைத்த கடவுள், அளவிடமுடியாத செல்வங்களையும் பொருட்களையும் , அன்பையும் வைத்திருக்கிறார். எல்லாவற்றிலும் தேவைக்கு மேல் வைத்திருக்கிறார். நாம் எவ்வளவு வைத்திருக்கிறோம் என்பதை பொறுத்து அல்ல. அவர் நம் மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதாகும்.

கடவுளுக்கு  நம்மிடமிருந்து என்ன விரும்புகிறார் என்றால், கடவுள் நமக்கு கொடுத்ததை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள  நீங்கள் விருப்பம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பது தான். ரொட்டியும், மீணும் பல மடங்காக பெருக்கிய அற்புத நிகழ்வில், இயேசு சீடர்களிடம் அதனை மற்றவர்களிடம் பகிர்ந்து கொடுக்க சொல்கிறார். இன்றைய நிகழ்வில், சீடர்கள் பிடித்த மீன்களை  கொஞ்சம் எடுத்து வர சொல்லி, இயேசுவோடு அவருடைய உணவோடு சேர்த்து கொள்ள செய்கிறார்.

அதன் பிறகு, இராயப்பரிடம், இயேசு மேல் அவர் எவ்வளவு அன்பு கொண்டிருந்தாரோ, அதே அன்பை , இயேசுவின் ஆட்டு மந்தையிடமும், பகிர்ந்து கொள்ள கேட்டு கொள்ளபடுகிறார். அந்த அன்பு எங்கிருந்து வந்தது? இராயப்பர் ஒன்றும் அவருடைய சொந்த முயற்சியால் மற்றவர்களை அன்பு செய்யவில்லை. நாமும் அப்படி தான். இராய்ப்பார் கடவுளின் அன்புடன், அவருள் கடவுளின் அன்பு இனைத்து படைக்கபட்டிருக்கிறார். நாமும் அப்படிதான்  கடவுளீன் அன்போடு படைக்கப்பட்டிருக்கிறோம். கடவுளைபோலவே நாமும் படைக்கப்பட்டிருக்கிறோம், கடவுள் என்றால் அன்பு.

கடவுளின் அளவில்லாத அன்பை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என இராயப்பரிடம் கேட்டுகொள்ளப்பட்டது. அதன் மூலம், இறையரசு, இவ்வுலகில் தொடர்ந்து இங்கே பரவ முடியும் என்பதற்காக தான். கடவுள் உங்களிடம் என்ன கேட்கிறார்? நீங்கள் என்ன வைத்திருக்கிறீர்கள் என்பதை பொறுத்து உங்கள் பதில் இருக்க வேண்டும் என்பதில்லை. கடவுளிடம் உள்ளதை எவ்வளவு விருப்பத்துடன்,  நீங்கள் பகிர்ந்து கொள்ள தயாராய் இருக்கிறீர்கள் என்பது தான்.

© 2013 by Terry A. Modica

Friday, April 5, 2013

ஏப்ரல் 7 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஏப்ரல் 7 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
பாஸ்கா காலத்தின் 2ம் ஞாயிறு
Acts 5:12-16
Ps 118:1-4, 13-15, 22-24
Rev 1:9-13, 17-19
John 20:19-31

யோவான் நற்செய்தி
இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல்
(மத் 28:16 - 20; மாற் 16:14 - 18; லூக் 24:36 - 49)
19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார்.20இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.21இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் 'என்றார்.22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, ' தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.23 எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா ' என்றார்.

இயேசு தோமாவுக்குத் தோன்றுதல்
24 பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை.25 மற்றச் சீடர்கள் அவரிடம், ' ஆண்டவரைக் கண்டோம் ' என்றார்கள். தோமா அவர்களிடம், ' அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன் ' என்றார்.26எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார்.27 பின்னர் அவர் தோமாவிடம், ' இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள் ' என்றார்.28தோமா அவரைப் பார்த்து, ' நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!! ' என்றார்.29 இயேசு அவரிடம், ' நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர் ' என்றார்.

முடிவுரை: நூலின் நோக்கம்
30 வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை.31இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன.
(thanks to www.arulvakku.com)

இன்றைய ஞாயிறின் நற்செய்தி, பரிசுத்த ஆவியின் வரவிற்கு அடித்தளமாக இருக்கிறது. பரிசுத்த ஆவியை அன்பளிப்பாக சீடர்களுக்கு கொடுக்கும் முன்பு, அமைதியையும், அவரது இதயத்தையும் சீடர்களுக்கு வழங்குகிறார். இயற்கையை தாண்டிய இந்த அனபளிப்பு, நமது இதயத்தை ஊடுருவி செல்கிறது. கிறிஸ்து,, நாம் ப்ரச்சினைகளிலும, கஷ்டங்களிலும் இருக்கும்போது, நம்மை அவரது வருகையினால் அமைதிபடுத்தும் அன்பளிப்பு ஆகும்.

இந்த வரத்தை, அவரின் முதல் 12 சீடர்களுக்கும், இயேசு இரண்டு முறை அதே சந்திப்பில், அவர்களுக்கு வழங்குகிறார். பிறகு, ஆண்டவரின் ஆவியை, (வாழ்வின் ஊற்றான), வழங்கி, குருவாக யாருக்கு மன்னிப்பு வழங்குகிறீர்களோ அவர்கள் மன்னிக்கபடுவர் என்றும், அவர்களுக்கு அமைதியையும் அன்பளிப்பாக வழங்குகிறார்.

இயேசுவால் வழங்கப்பட்ட, இந்த அமைதியின் அன்பளிப்பு, குருக்களின் மூலமாக, புனிதமான பாவசங்கீர்த்தனத்தின் மூலமாக, நாம் பெறுகிறோம். இதன் மூலம், நாம் பரிசுத்த வாழ்வில் நிலைத்திருக்கு முடிகிறது. இயேசு இன்றும் கடவுளின் ஆவியை நமக்கு கொடுத்து கொண்டிருக்கிறார். இதன் மூலம் கடவுளின் ப்ரசன்னமும் இவ்வுலகில் இருந்து கொண்டிருக்கிறது. அந்த ஆவி தான் இவ்வுலகை உருவாக்கியது, மேலும், நம்மை பரிசுத்த வாழ்வில் நிலைத்திருக்க செய்கிறது. பரிசுத்த ஆவியின் மூலம் தான், கடவுளின் பரிசுத்தம் நம்மை செயல்படவும், நம்மில்  பிரகாசிக்கவும் செய்கிறது.

இரக்கத்தின் தெய்வமான இயேசு நமக்காக சிலுவையில் மரணமடைந்து, அவரது ஆவியை நமக்கு கொடுத்துள்ளர். அதன் மூலம், நம்மில் பரிசுத்தம் இல்லாததையும், ஆவியோடு இல்லாததையும், நமது பாவத்தையும் விட்டொழித்து, கடவுளின் மன்னிப்பின் மூலமாக நாம் பரிசுத்த வாழ்வில் வாழ் முடியும்.

பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே” என்ற ஜெபத்தை சொல்லும் பொழுதெல்லாம், மிகவும் மெதுவாக, அர்த்தத்தோடு ஜெபியுங்கள். ஒவ்வொரு வாத்தையின் அர்த்தத்தையும் தியானித்து சொல்லுங்கள். “எங்களுக்கு எதிராக பாவம் செய்பவர்களை மன்னிப்பது போல, எங்கள் பாவங்களையும்  மன்னியும்” என்று சொல்கிறோம் அல்லவா. உங்களை துன்புறுத்திய நபரை, இன்னும் அதே நோக்கத்தில் இருப்பவர்களை  நினைத்து, மனப்பூர்வமாக அவர்களை இந்த ஜெப நேரத்தில் மன்னியுங்கள்.

மாறாக,  நீங்கள் அவர்களை மன்னிக்காவிட்டால், அவர்களின் ஆண்மாவும் , உங்கள் ஆண்மாவும் பாதிக்கபடும். ஏனெனில், அவர்களுக்கு கடவுளின் மன்னிப்பை பெறும் வாய்ப்பை தடுத்து விடுகிறீர்கள் நீங்கள் மற்றவர்களை மன்னிக்காததால், கடவுள் உங்கள் பாவங்களை மன்னிக்கும் வாய்ப்பை தடுத்து விடுகீறீர்கள். அதனால் உங்கள் பாவங்களும் மன்னிக்கபடவில்லை.

மன்னிப்பது என்பது, அவர்களின் பாவங்களை ஏற்று கொள்வதில்லை. ஆனால், அவர்களின் பாவத்திற்கு தண்டனை கொடுக்காமலிருப்பது தான் நம் முதல் வேலையாகும்.  அவர்களுக்கு தகுதியிருந்தாலும், இல்லையென்றாலும், அவர்களை கிறிஸ்துவின் அமைதியின் அன்பளிப்பாக அன்பு செய்தல் வேண்டும்.

© 2013 by Terry A. Modica