Friday, January 25, 2013

ஜனவரி 27, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை



ஜனவரி 27, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 3ம் ஞாயிறு
Neh 8:2-6, 8-10
Ps 19:8-10, 15
1 Cor 12:4-11
Luke 1:1-4; 4:14-21

லூக்கா நற்செய்தி
1. அர்ப்பணம்
1 மாண்புமிகு தியோபில் அவர்களே, நம்மிடையே நிறைவேறிய நிகழ்ச்சிகளை முறைப்படுத்தி ஒரு வரலாறு எழுதப் பலர் முயன்றுள்ளனர்: 2தொடக்க முதல் நேரில் கண்டும் இறைவார்த்தையை அறிவித்தும் வந்த வந்த ஊழியர் நம்மிடம் ஒப்படைத்துள்ளவாறே எழுத முயன்றனர்.3 அது போலவே நானும் எல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்தே கருத்தாய் ஆய்ந்து நீர் கேட்டறிந்தவை உறுதியானவை எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு,4 அவற்றை ஒழுங்குப்படுத்தி உமக்கு எழுதுவது நலமெனக் கண்டேன்.

4. கலிலேயப் பணி
கலிலேயப் பணியின் தொடக்கம்

(மத் 4:12 - 17; மாற் 1:14 - 15)
14 பின்பு இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது.15அவர் அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்து வந்தார். எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசினர்.

நாசரேத்தில் இயேசு புறக்கணிக்கப்படுதல்
(மத் 13:53 - 58; மாற் 6:1 - 6)
16 இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார்.17 இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது;18 ' ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்19 ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார். '20 பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன.21 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, ' நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று ' என்றார்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், இயேசுவே அவரது இறைபணியை பற்றி அறிவிப்பதை காண்கிறோம்:  ' ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்19 ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார். '20 பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன.21 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, ' நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று '


அவருடைய இறைசேவை, இயேசு மோட்சத்திற்கு எழுந்தருளி சென்ற பின் மறைந்துவிட்டதா? இவ்வுலகைவிட்டு அவர் சென்றவுடன் இறைசேவையும் சென்றுவிட்டதா?  கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் வாசகத்தில் எழுதப்பட்டுள்ளது போல, நாம் அனைவரும் கிறிஸ்துவின் உடலாக இப்பூமியில் இருக்கிறோம்.

நாம் அனைவரும் – ஒவ்வொருவரும் – இந்த உடலில் முக்கியமான அங்கமாக இருக்கிறோம்!. நீங்களே உங்களை தரம் தாழ்த்தி கொள்ளாதீர்கள். கடவுள் உங்களை உருவாக்கி, இந்த திருச்சபையோடு இனைத்துள்ளார். ஏனெனில், கன்டிப்பாக உங்களால் ஒரு முயற்சியை கான்பிக்க முடியும் என்ற நம்பிக்கையால் தான். உங்களால் செய்ய முடிந்ததை, இன்னொருவரால் செய்ய முடியாது. கடவுள் உங்கள் மூலம் ஒரு திட்டத்தை இவ்வுலகில் செய்ய முனைந்தாரானால், அதன் மூலம் இவ்வுலகை இன்னும் நல்ல நிலையில் கொண்டு செல்ல முடியும் என்று அவர் திட்டமிட்டால், அதனை உங்களால் மட்டுமே செய்ய முடியும். நாம் கிறிஸ்தவர்கள் அனைவரும், கிறிஸ்துவின் உடலாக இவ்வுலகில் ஒரு சமூக இனைப்பில் இருக்கிறோம். ஒவ்வொரு முறையும், திவ்ய நற்கருணையை நாம் பெறுகிறபொழுது, நாம் நம்மையே வாங்குகிறோம். , அதன் மூலம், நாம் கிறிஸ்துவின் இறைசேவையை, புதுபித்து கொள்கிறோம். அவரின் செயற் திட்டமே நம் திட்டமும் ஆகும்.

இயேசுவை திவ்ய நற்கருணையில் நாம் பெறுகிற பொழுது, அவரை மனிதனாகவும், தெய்வமாகவும் நாம் முழுதாக பெற்று கொள்கிறோம். அதே போல அவரது இறைசேவையையும் நாம் ஏற்று கொள்கிறோம். கடவுள் தூய ஆவி நம் மேல் வருகிறது. ஒவ்வொரு திருப்பலியில் நாம் நமது அழைப்பை புதுபித்து கொள்கிறோம். நற்செய்தியை ஏழைகளுக்கு அறிவிக்கவும், பார்வை இழந்தவர்களுக்கு பார்வை பெறவும், அடிமைதனத்திலிருந்து விடுதலை பெறவும், கடவுளுக்கு உகந்ததை மக்களுக்கு அறிவிக்கவும் நாம் அழைக்கபட்டுள்ளோம்.

இதையே வேறு மாறாக, சொல்வதென்றால், இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ளது போல, ஒவ்வொரு முறையும் இயேசுவை திவ்ய நற்கருணையில் வாங்கும்பொழுது, நாம் இயேசுவை பின்பற்ற வேண்டும்.

பாவங்கள் இதனை எல்லாம் செய்ய தடையாக இருக்கின்றன.

நாம் கேட்கும் ஜெபங்களுக்கு  நமக்கு சரியான வரம் கிடைக்க வில்லையென்றாலும், சாத்தான் வெற்றி பெறும் தருவாயிலும், இயேசுவின் மீட்பை, அதன் செய்தியை கேட்காமல் ஆன்மா துயறுரும்போதும், நாம் யோசித்தோமானால், கிறிஸ்துவின் இவ்வுலக உடல் செய்ய வேண்டியதை செய்யாமல் இருக்கிறது என்று அர்த்தம்.  கடவுள் இவ்வுலகிற்கு தேவையான அனைத்தும் நம் மூலமாக் கொடுத்தருளுகிறார். இயேசு அவரது இறைசேவையை நம் மூலம் இவ்வுலகில் தொடர்கிறார்.

© 2013 by Terry A. Modica

Friday, January 18, 2013

ஜனவரி 20, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை



ஜனவரி 20, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் இரண்டாவது ஞாயிறு
Isaiah 62:1-5
Ps 96:1-3, 7-10
1 Cor 12:4-11
John 2:1-11 

யோவான் (அருளப்பர்) நற்செய்தி,
அதிகாரம் 2
கானாவில் திருமணம்
1 மூன்றாம் நாள் கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார்.2 இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர்.3திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, ″ திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது ″ என்றார்.4 இயேசு அவரிடம், 'அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே' என்றார்.http://www.arulvakku.com/images/footnote.jpg5 இயேசுவின் தாய் பணியாளரிடம், ' அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள் ' என்றார்.6 யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர்கொள்ளும்.7 இயேசு அவர்களிடம், ' இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள் ' என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள்.8 பின்பு அவர், ' இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள் ' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.9 பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது. ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு,10 ' எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம் போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்? ' என்று கேட்டார்.11 இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், ப்ரச்சினையுள்ள நேரத்தில் பாவத்தில் விழாமல், எப்படி அதனை கையாள்வது என்று நமக்கு எடுத்து காட்டாய் விளக்குகிறது. அங்கே ஒரு தேவை இருக்கிறது என்பதை அறிந்து அன்னை மரியாள், இயேசு அதற்காக ஏதாவது செய்ய வேண்டுமமென விரும்பினார். தெய்வீக அனுமதியில்லாமல், அங்கே ஒரு அருஞ்செயல் நடக்காது என்பது அன்னை மரியாள் முழுதும் அறிந்திருந்தாள். தெய்வத்தால் தான் அந்த அதிசய நிகழ்வு நடக்கும் என்பதை அறிந்து, இயேசுவிடம் கேட்கிறார். முதலில் இயேசுவின் மனிதத்தன்மை தான் பதில் கூறியது. இயேசு அவருடைய தெய்வீக தன்மையை  அப்போது காட்ட விரும்பவில்லை. இயேசு ஆண்மாவின் புண்களை ஆற்றதான் ஆர்வமாக இருந்தார், காலியான ஜாடியில் திராட்சை இரத்தை நிரப்ப அல்ல.

 இயேசு அவரிடம், 'அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே' என்றார். இது எப்படி இருக்கிறதென்றால், “நான் உங்கள் கோரிக்கையை ஏற்று கொள்கிறேன், ஆனால், இப்படி ஒரு அதிசய நிகழ்வு இங்கே நடந்த்தால், மீட்பை கொடுக்க வேண்டிய இறைசேவையை செய்யவே விரும்புகிறேன், ஆனால், இங்குள்ள மக்களோ விருந்திற்காக மட்டுமே என்னிடம் வரும்படி இந்த அதிசய நிகழ்வு செய்து விடும்” என்று இயேசு கூறுவது போல் உள்ளது.

அன்னை மரியாள் நமக்கு உதவி செய்பவர் என்று கத்தோலிக்கர்கள் அனைவரும் இந்த திருவசனங்கள் மூலம் நம்புகிறோம். ஒரு தாயாக நமக்கு வேண்டியதை, இயேசுவிடமிருந்து நமக்கு பெற்று தருவார் என பார்க்கிறோம். ஏனெனில் இயேசுவின் மனதை அன்னை மரியாள் மாற்றி விடுவார். இயேசு முடியாது என்று சொல்லிவிட்டார், ஆனால் இந்த குழப்பம், அன்னை மரியாளின் வழிக்கே வந்தது, அவரே இறுதியில் வெற்றி பெற்றார். யேசு இந்த குழப்பத்தில் தோற்றே போனார்.

குழப்பமான நிலையில், இப்படி தான் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒருவர் வெற்றி பெற்றவராகவும், இன்னொருவர் தோற்றவராகவும் ஆன பின்புதான், குழப்பமோ, இழுபறியோ முடிவடைந்ததாகும். அதனால், கடவுளிடம் நாம் வேண்டுகோள் வைக்கும்பொழுது நாம் என்ன கேட்டோமோ, அதனை கொடுப்பதில்லை. நாம் தான் தோற்றுவிட்டோம் என நாம்  நினைக்கிறோம். அதனால், இன்னும் கடுமையாக முயற்சி செய்து, இன்னும் அவரிடம் வேண்டுகிறோம். கடவுளை தோற்றவராக முயற்சி செய்கிறோம். மேலும் இது  நடைபெறாமல் போகும்பொழுது, நாம் அன்னை மரியிடம் சென்று, நமக்காக அவரின் மகனிடம் சிபாரிசு செய்ய சொல்கிறோம்.

ஆனால், ஆரம்பத்திலிருந்தே, கடவுள் நம்மை தான் வெற்றியாளராக்க விரும்புகிறார். 
நமக்கு எது நல்லதோ அதுவே நமக்கு கிடைக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். இதனையே அன்னை மரியாளுக்கு தெரிந்து, அந்த வேலையாட்களிடம் “என் மகன் சொல்வதை நீங்கள் செய்யுங்கள்” என்று கூறினார்.

குழப்பங்கள் ஒன்று தப்பானதல்லை. நம்மிடையே  குழப்பம் உண்டாகும் பொழுது, நமக்கு கிடைத்த புனித வாய்ப்பாக, நாம் கடவுளை நம்புவது  நமக்கு நல்ல பலன்களை கொடுக்கும். அந்த கல்யாண விருந்தில், உள்ள அனைவர் மேலும் இயேசுவுக்கு அக்கறை உண்டு என்று அன்னை மரியாளுக்கு தெரியும், அதனை நம்பிதான் இயேசுவிடம் அதிசய நிகழ்வு செய்ய சொன்னர். இயேசு கடவுளை நம்பினார், மேலும், கடவுள் அந்த மக்களையும், இயேசுவின் மீட்பு பணியையும் காப்பார் என இயேசு நம்பினார். இது இரண்டு பேருக்கும் வெற்றி தரும் நிகழ்வாகும்.

© 2013 by Terry A. Modica

Friday, January 11, 2013

ஜனவரி 13, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை



ஜனவரி 13, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டவரின் திருமுழுக்கு திருவிழா
Isaiah 42:1-4, 6-7 (or Isaiah 40:1-5, 9-11)
Ps 29:1-4, 9-11 (or Ps 104:1-4, 24-25, 27-30)
Acts 10:34-38 (or Titus 2:11-14; 3:4-7)
Luke 3:15-16, 21-22 

லூக்கா நற்செய்தி
அதிகாரம் 3
3. திருப்பணிக்குத் தயார் செய்தல்
திருமுழுக்கு யோவான் முழக்கமிடுதல்
(மத் 3:1 - 12; மாற் 1:1 - 8, யோவா 1:19 - 28)
5 அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்கள்.16 யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, ' நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.
இயேசு திருமுழுக்குப் பெறுதல்
(மத் 3:13 - 17; மாற் 1:9 - 11)
21 மக்களெல்லாரும் திருமுழுக்குப் பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது வானம் திறந்தது.22 தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது. அப்பொழுது, ' என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன் ' என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.
(thanks to www.arulvakku.com)
இன்றைய ஞாயிறின் நற்செய்தி எல்லா எதிர்பார்ப்பையும் ப்ரதி பலிக்கிறது. நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள்? அநீதிக்கு எதிராக உங்களை கடவுள் எப்படி வந்து காப்பாற்ற வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? அல்லது சாத்தானிடமிருந்து உங்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என எதிர்பார்க்கிரீர்கள்? அல்லது உங்களின் அன்பானவர் கடவுளிடம் திரும்ப வேண்டும் என காத்திருக்கும் நேரத்தில் உங்களி அனுசரனையாக ஆறுதல் அளிக்க கடவுளிடம் எதிர்பார்க்கிறீர்களா? குழப்பத்திலும் நிச்சயமற்ற நிலையிலும் என்ன வழிகாட்டுதலை கடவுளிடம் எதிர்பார்க்கிறீர்கள்? இதனையெல்லாம் எதிர்பார்த்து காத்திருக்கும்போது, கிறிஸ்துவின் அன்பளிப்பான அமைதியை உங்களில் இருப்பதை உங்களால் அறிய முடிகிறதா? அல்லது கவலையுடனும், செயல்குழைந்தும், பொறுமையிழந்தும் இருக்கின்றீர்களா?


இன்றைய நற்செய்தியில், யோவானை சுற்றியிருந்த அனைவரும், எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர், யோவான் தான் மெசியா என்றும், பூமிக்கு வந்தே விட்டார் எனவும் நினைத்தனர். அநீதிக்கு எதிராகவும், வேற்று நாட்டின் அடிமைதனத்திற்கு எதிராகவும், பாவங்களுக்கு எதிராகவும் கடவுள் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்புடனே, யோவானின் மனந்திரும்பும் ஞானஸ்நாணத்தில் உற்சாகத்தோடு கலந்து கொண்டனர். அவர்களது உற்சாகம், அவரவரின் சொந்த தேவைகளை பொறுத்து இருந்தது. இறைவனின் வழிகாட்டுதலால் அவர்கள் உற்சாகமடையவில்லை.

இருந்தாலும், கடவுள் இதைவிட மேலானதை அவரின் மனதில் இருத்தி வைத்திருந்தார். உண்மையான மெசியாவோ, பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நாணம்
 பெறுவார். மேலும், யோவான், மக்களை மனம் திரும்ப அழைக்க மட்டுமே முடியும். உண்மையான மெசியாவோ, பரிசுத்த ஆவியினால், அவர்களுக்கு ஆற்றல் கொடுத்து பரிசுத்த வாழ்வில் வாழ்ச் செய்தார்.

யேசு யோவானிடம் ஞாணஸ் நாணம் பெற தன்னை ஒப்படைத்தது எதற்காக என்றால், அவர் மனம் திரும்ப இல்லை, ஏனெனில், அவர் பாவமில்லாதவர். நாம் அனைவரும் மனம் திரும்ப வேண்டிய செயலில் தன்னையும் ஈடுபடுத்தி கொண்டார். அங்கேயிருந்தே அவரின் மீட்பு சேவையை , நமது பாவங்களையெல்லாம், சிலுவைக்கு எடுத்து செல்லும் சேவையை துவங்கி விட்டார்.

கிறிஸ்துவ ஞாணஸ் நாணத்தில்,  யேசுவின் பரிசுத்தத்திலும், அவரின் இறைசேவையிலும் நாம் முழுகப்படுகிறோம். மேலும், அவரின் குருத்துவத்திலும், நற்செய்தி அறிவித்தலிலும், பிறருக்கு சேவை செய்து முன்மாதிரியாக இருப்பதிலும், மீட்புக்காக அவர் பட்ட வேதனையிலும், நாம் முழ்கடிக்கபடுகிறோம். யேசு செய்ததை போல நாமும் செய்ய பரிசுத்த ஆவியானவர் நமக்கு ஆற்றல் தருகிறார். மேலும், கடவுள் சொல்கிறார்: “' என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன் '”

நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? உங்கள் ஞாணஸ் நானத்தால் உங்கள் அனுதின வாழ்வில் என்ன நடக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?  எதிர்பார்ப்பது என்பது ஒரு நல்ல குணம் தான், ஆனால், இது பொறுமையிழந்து  நல்லது நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால், அது நல்லதல்ல, அது ஏமாற்றத்தை தான் கொடுக்கும். கடவுள் நல்ல செயல்களினால் எதிர்பார்ப்பு ஏற்பட்டு, , மேலும், அவர் நம்மிடத்தில் என்ன எதிர்பார்க்கிறாரோ அதில் நடந்தால், நமக்கு சந்தோசமும், உறுதியான விசுவாசமும், தெய்வீக அற்புதங்களும் நடக்கும்.

© 2013 by Terry A. Modica

Saturday, January 5, 2013

ஜனவரி 6, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஜனவரி  6, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
திருகாட்சி திருவிழா
Isaiah 60:1-6
Ps 72:1-2, 7-8, 10-13
Ephesians 3:2-3, 5-6
Matthew 2:1-12

மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 2
ஞானிகள் வருகை
1 ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து,2 ' யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம் ' என்றார்கள்.3 இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று.4 அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான்.5 அவர்கள் அவனிடம், ' யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும்.6 ஏனெனில், யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார் என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார் ' என்றார்கள்.7 பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக் கொண்டு போய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான்.8 மேலும் அவர்களிடம், ' நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன் ' என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான்.9 அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது.10 அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.11 வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.12ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.
(thanks to www.arulvakku.com)
கிறிஸ்துமஸ் கால கட்டம், ஞாணிகள், குழந்தை யேசுவை காணச் சென்றதோடு முடிவிற்கு வருகிறது. கிரேக்கத்தில் “ஞாணிகள்” என்பதற்கு கீழ்திசை அறிவியலாளர்கள் என்று அர்த்தம். இதே வார்த்தையை “ஜோசியர்கள்” என்று சிலர் கூறுவதுண்டு, ஆனால், குழந்தை யேசுவின் குடிலில் அவர்கள் வந்து நின்றதை பார்க்கும்பொழுது, அவர்கள் “ஜோசியர்கள்” இல்லை என்பது தெரியும். மத்தேயு அவர்களை நற்செய்தியில் காட்டுவதன் நோக்கம், இயேசு யூதர்களையும் மற்றும் யூதர்கள் அல்லாதவர்களுக்கும் மீட்பை வழங்கவே வந்தார் என்பதை நமக்கு சுட்டி காட்டுகிறார்.

திருச்சபை, இந்த ஆண்டவரின் திருகாட்சி விழாவில், இதனை கொண்டாடும்  நேரத்தில், இயேசுவின் முன், அவரின் இறை ப்ரசன்னத்தோடும், மனித உருவோடும், அவரை தாழ்பணிந்து ஏற்று கொள்வபவர்களுக்கு, இறையரசில் கண்டிப்பாக இடமுண்டு என்று சொல்கிறது. கிறிஸ்துவே வழி, உண்மையும் வாழ்வும் ஆவார். அவரில்லாமல், யாருக்கும் விண்ணக வாழ்வு இல்லை. எல்லோரும் அதற்கு அழைக்கபடுகின்றனர்.

மிக பிரபலமானவர்கள் இருந்த அந்த காலத்தில், ஞாணிகள் ஒன்றும் அரசர்களில்லை. ஆனால், சில பைபிள் வசணங்களில், அவர்களை அரசர்கள் என்று குறிப்பிடபட்டுள்ளது. ஏனெனில், அவர்கள் அரசர்கள் கொடுக்கும் அன்பளிப்புகளை கொண்டு வந்தார்கள். அவர்களுடைய அரச குணத்தை அங்கே காட்டவில்லை, ஆனால் இயேசு அரசன் என்பது அந்த அன்பளிப்புகளால் காட்டினார்கள். தீர்க்க தரிசனமாக இயேசு இறையரசர், நமக்காக அவர் இறப்பார் என்பதை சாட்சியமாக இருந்தார்கள்.

திருக்காட்சி” என்ற வார்த்தைக்கு அர்த்தம், “தெரியப்படுத்தும் தருணம்” ஆகும்.  இது இரகசியம் வெளிபடுத்தபட்டு, நமது வாழ்வை மாற்றும் தருணம் ஆகும். அந்த ஞாணிகள் குழந்தை யேசு தான் இவ்வுலகின் மீட்பர் என்று அறிந்து கொண்டார்களா? அந்த காலத்தில், அரசர்கள் எல்லாம் தெய்வீக இடத்தில் வைத்து பார்க்கபட்டனர்.  “அவர்கள் கடவுளாக இறக்கும் வரையில் நம்மில் வாழ்கிறார்கள்” என்று அந்த காலத்தில் ஒரு எண்ணம் இருந்து வந்தது. அந்த ஞாணிகளுக்கு இயேசு தான்  நிரந்தர அரசர் என்று அவர்களுக்கு தெரிய வந்ததா?

இந்த யாத்திரைக்கு பிறகு, இயேசுவை பற்றி அவர்கள் என்றுமே மறந்ததில்லை, ஜெருசலேத்திலிருந்து அவரை பற்றி ஏதாவது செய்தி வராதா? என்று அவர்கள் காதை தீட்டி வைத்திருந்தனர். யூதர்களின் அரசன் சிலுவையை அறையபட்டார் என்பதை அறிந்தனர். நாம் இதனை அறிவோம். ஏனெனில், ஒரு நேரத்தில், அவர்கள் புனித கிறிஸ்தவர்களாக மாறினர். அவர்களின் உடல் இன்னும் இருக்கிறது, அவைகள் புனிதபடுத்தப்பட்டுள்ளன.

© 2012 by Terry A. Modica