Saturday, November 29, 2014

நவம்பர் 30 2014 ஞாயிறு நற்செய்தி மறையுரை திருவருகை காலம்

நவம்பர் 30 2014 ஞாயிறு நற்செய்தி மறையுரை
திருவருகை காலம் முதல் ஞாயிறு
Isaiah 63:16b-17, 19b; 64:2-7
Ps 80:2-3, 15-16, 18-19 (with 4)
1 Cor 1:3-9
Mark 13:33-37

மாற்கு நற்செய்தி

மானிடமகன் வரும் நாளும் வேளையும்
(
மத் 24:36 - 44; லூக் 17:26 - 30, 34 - 36)
33கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில் அந்நேரம் எப்போது வரும் என உங்களுக்குத் தெரியாது.34 நெடும்பயணம் செல்லவிருக்கும் ஒருவர் தம் வீட்டைவிட்டு வெளியேறும்போது தம் பணியாளர் ஒவ்வொருவரையும் அவரவர் பணிக்குப் பொறுப்பாளராக்கி, விழிப்பாயிருக்கும்படி வாயில் காவலருக்குக் கட்டளையிடுவார்.35அதுபோலவே நீங்களும் விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர் மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும் வேளையிலோ, காலையிலோ எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது.36 அவர் திடீரென்று வந்து நீங்கள் தூங்குவதைக் காணக்கூடாது.37நான் உங்களுக்குச் சொல்லுவதை எல்லாருக்குமே சொல்கிறேன்; விழிப்பாயிருங்கள். ' 
(thanks to www.arulvakku.com)

இயேசுவுக்கு அன்பளிப்பு

இன்று திருவருகை காலத்தை ஆரம்பிக்கிறோம். கிரிஸ்துமசிற்கு நாம் தயாராகும் பொழுது , எப்படி நம் அன்புள்ளவர்களிடம், மற்றும் முக்கியமானவர்கள் அனைவருக்கும் அவர்களை அசத்துற மாதிரியான அன்பளிப்பை நாம் கொடுக்க முயற்சி செய்கிறோம், இருந்தாலும், அந்த அன்பளிப்பு அவர்களுக்கு காலத்திற்கும் உதவியாக இருக்குமா என்று நாம் பார்க்க ஆசைபடுகிறோம், அல்லது அவர்களிடமிருந்து கண்டு கொள்ள முயற்சி செய்கிறோம்

எத்தனை அன்பளிப்புகள் நீங்கள் கொடுத்தது , தூசி தட்டி கொண்டிருக்கிறார்கள். ? எந்த அன்பளிப்புகள் எல்லாம் உண்மையாகவே அவர்காளுக்கு உதவியாகவே இருக்கிறது ?

கிறிஸ்துவின் பிறப்பை நாம் கிறிஸ்துமஸ் அன்று கொண்டாடுவதால், நாம் அவருக்கு அன்பளிப்பு கொடுக்க வேண்டும். என்றும் நிலையான அன்பளிப்பாக இருக்க வேண்டும். எல்லாமே வைத்திருக்கும் ஒருவருக்கு நாம் என்ன அன்பளிப்பு கொடுக்க முடியும்.
அல்லது அவரிடம் இல்லாதது எதுவும் இருக்கிறதா ?

நிலையான மாற்றத்தை நித்திய வாழ்வில் கொடுக்க என்ன அன்பளிப்பை நீங்கள் இயேசுவிற்கு கொடுக்க போகிறீர்கள் ? மற்றவர்கள் கொடுக்காத அன்பள்ளிப்பு , இயேசுவிடம் இல்லாத அன்பளிப்பாக இருக்க வேண்டும் ? அதற்கு பதில்: உங்கள் வாழ் க்கையில் எதனை , எந்த ஆற்றலை , அறிவை இன்னும் இயேசுவிற்காக, இறைபணிக்காக நீங்கள் உபயோகிக்காமல் இருக்கிறீர்கள்? அது உங்கள் வாழ்க்கை முறையை மாற்றுவதாக கூட இருக்கும் .

இன்றைய முதல் வாசகம் கடவுள் நம் தந்தை என்று நினவு படுத்துகிறது. பதிலுரை பாடல் , தந்தை கடவுளை நோக்கி நாம் திரும்ப வைக்க வேண்டும் என்று நமக்கு கடவுள் உதவி செய்ய வேண்டும் என்று சொல்கிறது. இரண்டாவது வாசகம், தந்தை கடவுள் நமக்கு செய்த எல்லா உதவிகளுக்கும் நன்றி கூறுகிறது. அதனால், அவர் செய்த எல்லா நன்மைகளுக்கும் என்ன கொடுக்க போகிறீர்கள் ?

நற்செய்தி வாசகத்தில், நாம் எவ்வாறு தயார்படுத்த வேண்டும் என்று நமக்கு நினைவு படுத்த படுகிறது. கிறிஸ்துவின் வருகைக்காக , நாம் நம் செயல்கள் மூலம் எந்த மாதிரியான வித்தியாசத்தை கொடுக்க முடியும். ? அவரின் இரண்டாம் வருகையை நாம் இங்கு குறிப்பிடுகிறோம். இந்த பூமியின் கடைசி மூச்சு முடியும் பொழுது கிறிஸ்து நமக்காக வருவார். கிறிஸ்துமஸ் அன்று நமக்காக இயேசு வர விருக்கிறார். மேலும் இன்றே இப்பொழுது வர இருப்பவர் .


எதோ புதிய ஒன்றை உங்களுக்கு கொடுக்க விரும்புகிறார். முதல் வாசகத்தில் சொல்ல படுவதை போல உங்களுக்கு சரியானதை கொடுப்பதாக அவர் அறிவாரா ? உங்கள் பரிசுத்த , தெய்வீக திறமைகளை (இரண்டாவது வாசகம் ) கிறிஸ்து உபயோகிப்பாரா ? நீங்கள் எல்லாம் ஆயத்தமாக இருக்கிறீர்களா ? (நற்செய்தி வாசகத்தில் )


திருவருகை காலம் தான் கிறிஸ்து நமக்கு கொடுத்த அன்பளிப்பையும் , நாம் அவருக்கு கொடுக்க வேண்டிய அன்பளிப்பையும் நாம் நினைவு படுத்தி கொள்ளும் வாய்ப்பாகும் . இந்த அன்பளிப்பு நித்திய வாழ்வில் ஒரு வித்தியாசத்தை நமக்கும் , அவருக்கும் ஏற்படுத்துவதாக இருக்கட்டும்.


© 2014 by Terry A. Modica 

Friday, November 21, 2014

நவம்பர் 23 2014, ஞாயிறு நற்செய்தி மறையுரை

நவம்பர் 23 2014, ஞாயிறு நற்செய்தி மறையுரை
கிறிஸ்து அரசர் பெருவிழா
Ezek 34:11-12, 15-17
Ps 23:1-3, 5-6
1 Cor 15:20-26, 28
Matt 25:31-46

மக்களினத்தார் அனைவருக்கும் தீர்ப்பு
31 ' வானதூதர் அனைவரும் புடை சூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார்.32 எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர்.33 ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார்.34 பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ' என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.35 ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்;36 நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள் ' என்பார்.37 அதற்கு நேர்மையாளர்கள் ' ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்?38 எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்?39 எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத்தேடி வந்தோம்? ' என்று கேட்பார்கள்.40 அதற்கு அரசர், ' மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் ' எனப் பதிலளிப்பார்.41 பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ' சபிக்கப் பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள்.42 ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை.43 நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை ' என்பார்.44 அதற்கு அவர்கள், ' ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்? ' எனக் கேட்பார்கள்.45 அப்பொழுது அவர், ' மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' எனப் பதிலளிப்பார்.46 இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள். ' 

(thanks to www.arulvakku.com)


கிறிஸ்து அரசராக , அவரின் மக்களை நன்கு கவனித்து கொள்வார்
கிறிஸ்துவை அரசராக வெளிப்படுத்துங்கள்

ஆடு மேய்ப்பவர்களை நாம் அரசர்களாக நினைப்பதில்லை. ஆனால் இன்றைய நற்செய்தி நல்லாயன் கிறிஸ்துவை அரசராக சித்தரித்து அவரின் ஆற்றல் என்ன என்பதை சொல்கிறது . எப்படி ஆயர்கள் ஆடுகளை நன்றாக கவனித்து பராமரிப்பார்களோ அந்த அளவிற்கு நல்ல அரசனும் எல்லோரையும் கவனித்து கொள்வார்.

அரசர் அவரின் கட்டுபாட்டுக்குள் உள்ள எல்லா எல்லைகளையும் தனது படைகள் மற்றும் காவலாளிகள் மூலம் காப்பார். அதனால் தான் இயேசு சொல்கிறார் , “' மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் "

எடுத்து கட்டாக , நல்லாயனாக உள்ள கிறிஸ்து அரசர், பசி உள்ளவர்களுக்கு உணவு கொடுக்க விரும்பினால், நிறைய உணவை நம்மில் சிலருக்கு கொடுத்து நம் மூலம் அவர்களுக்கு கொடுக்க
செய்கிறார்

நாம் அவர் சொல்வதை கேட்கவில்லை என்றால் என்ன ஆகும்? பசியோடு இருப்பவர்கள் அரசர் இறக்கம் உடையவர் என நினைப்பார்களா? இல்லை. அவரின் நல்ல குணத்தை நாம் அவர்களின் பசி ஆறியவுடன் தான் அறிவார்கள்

உங்களை சுற்றியிருப்பவர்களை பாருங்கள். ஒவ்வொருவரும் நாம் கடவுள் அரசரை நல்லவர் என காட்ட நமக்கு வாய்ப்பாகும்.
நீங்கள் யாரையாவது பிடிக்காமல் இருக்கிறீர்களா ? உங்களை கோபப்படுத்தியவர்கள் , அவமானம் செய்தவர்கள் உள்ளார்களா ? , நீங்கள் இந்த கேள்வியை கேட்டு கொள்ளுங்கள். அவர்களுக்கு எது தேவையை இருக்கிறது . பதில் இல்லையென்றால் , பரிசுத்த ஆவியிடம் கேளுங்கள். அவர்களை கவனமாக ஆராயிந்தால் அவர்களிடம் உள்ள பயம், வலி, அனைத்தும் உங்களுக்கு தெரிய வரும்.
மேலும் இந்த கேள்வியை கேளுங்கள் : என்னிடம் அதிகம் உள்ள திறமை , செல்வம் என்ன, அதன் மூலம் மற்றவர்களுக்கு கிறிஸ்து அரசரின் அன்பளிப்பாக என்ன கொடுக்க முடியும். ? அவர் இரக்கமுள்ளவர் என்பதை நாம் காட்ட வேண்டும்.

நாம் நமக்கு கிடைக்கும் வாய்ப்பை தவற விடும் பொழுது, கடவுள் அரசர் பிரிக்கும் ஆடுகளாக நாம் மாறிவிடுகிறோம். மோட்சத்திற்கு செல்ல நாம் ஆம் என்று சொல்லி வாய்ப்பை பயன் படுத்தும் பொழுது , கடவுளரசின் நல்லாசியை நாம் பரப்புகிறோம்

© 2014 by Terry A. Modica