Friday, May 28, 2010

மே 30, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மே 30, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
பரிசுத்த திரித்துவ திருவிழா
Proverbs 8:22-31
Ps 8:4-9 (with 2a)
Rom 5:1-5
John 16:12-15

________________________________________
யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 16

12 ' நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது.13 உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்.14 அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார்.15 தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் ' அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார் ' என்றேன்.


கடவுள் , உங்களுக்கு தெரியாததை உங்களுக்கு தெரியப்படுத்துவார் என்று நீங்கள் நம்புகிறீர்களா? நீங்கள் யேசுவிடம் என்ன கேட்டு கொண்டிருக்கிறீர்கள் , இன்னும் உங்களுக்கு பதில் கிடைக்கவில்லை? திருச்சபை உங்களுக்கு கூறும் போதனைகளில் எது உங்களுக்கு ப்ரியவில்லை அல்லது உங்களால் ஏற்று கொள்ள முடியவில்லை? இன்றைய நற்செய்தியில், யேசு இன்னும் உங்களுக்கு நிறைய சொல்ல ஆசைபடுகிறார் என்று கூறுகிறார். ஆனால் அவர் கூறும் எல்ல விசயங்களையும் நம்மால், கையாள முடியாது.

ஏன் இன்னும் நாம் தயாராய் இல்லை? ஏனெனில், நாம் இன்னும் பரிசுத்த ஆவியிடம் நம்மை ஒப்படைத்து நம்மை தயார் படுத்தவில்லை. பரிசுத்த ஆவி நம்மை தயார்படுத்த விடவில்லை. நாம் நம்மையே கடவுளிடம் கொடுத்து நம்மை மாற்ற அவரிடம் கேட்க வேண்டும். உண்மை நமக்கு பெரிய சுமையாகவே இருக்கும், அது நமக்கு ஆசிர்வாதமாக இல்லாமல், சுமையாக இருப்பதால், நாம் உடனடியாக ஒதுக்கி வைத்து விடுகிறோம்.
யேசு சொன்னது அனைத்தும், தந்தை கடவுளிடமிருந்து பரிசுத்த ஆவி மூலமாக யேசுவிற்கு வந்தது. கடவுள் நமக்கும் அதே பரிசுத்த ஆவியை கொடுத்திருக்கிறார். அதே ஞானம், அதே உண்மை, எல்லா அன்பளிப்புகளும், அதனை உபயோகப்படுத்தவில்ல என்றால், அதெல்லாம் வீனான பொருளாகிவிடும் ஆனால், நம்மையும் பரிசுத்த ஆவியிடம் ஒப்படைத்து அவர் நம்மை தூய்மைபடுத்த வேண்டும். பரிசுத்த திரித்துவத்தில், தந்தை கடவுள் நமது பாவங்களை மன்னிப்பவர், யேசு அந்த மன்னிப்பை வழங்குபவர், பரிசுத்த ஆவி நம்மை தூய்மைபடுத்தி, இனிமேல் பாவம் செய்யாதே என்ற ஆற்றலை வழங்குபவர்.

பாவசங்கீர்த்தனத்தில், குருவானவர் யேசுவின் ப்ரசன்னமாகவும், இந்த திருச்சபையின் உடலாகவும் இருக்கிறார். பாவ மன்னிப்பு பரிசுத்த ஆவியின் செயலாகும், ஆனால், அதற்கு மேலும், குற்ற உணர்வை சுத்தமாக தூக்கி எறிவதாலும், பாவ நடத்தையிலிருந்து மாறி அந்த பாவங்களை இனிமேல் செய்யாமல் இருக்க பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவி செய்கிறார். திருப்பலியில் நடக்கும் பாவ மன்னிப்பில், பரிசுத்த திரித்துவ கடவுள் நம் மனம் திருந்துவதை ஏற்று கொண்டு, நம்மை இன்னும் பரிசுத்த வாழ்வில் வாழ மாற்றுகிறார்கள்.
தாழ்ச்சியுடன் இருப்பது, நம்மால் இருக்க முடியும். நம் வாழ்வில் இன்னும் பதில் கிடைக்காத பல கேள்விகளுக்கு, நம்மாலே பதில் கண்டு பிடிக்க முடியும், எப்படி? தந்தை கடவுளின் விருப்பங்களை யேசுவுடன் இனைந்து நாம் இவ்வுலகில் நிறைவேற்றினால், இன்னும் பரிசுத்த வாழ்வில் வாழ்ந்தால், நமக்கு பதில் கிடைக்கும்.

© 2010 by Terry A. Modica

Saturday, May 22, 2010

மே 23 2010 ஞாயிறு நற்செய்தி மறையுரை

மே 23 2010 ஞாயிறு நற்செய்தி மறையுரை
பரிசுத்த ஆவியின் ஞாயிறு

Acts 2:1-11
Ps 104:1, 24, 29-31, 34
1 Cor 12:3b-7, 12-13 (or Rom 8:8-17)
John 20:19-23 (or John 14:15-16, 23b-26)


யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 20

19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார்.20 இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.21 இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் ' என்றார்.22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, ' தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.23எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா ' என்றார்.

(thanks to www.arulvakku.com)



இன்று இரண்டு நற்செய்தி வாசகங்கள் நாம் வாசிக்க முடியும். அதில் யேசு, , ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று இரண்டு முறை கூறுகிறார். முதலில், இயேசு அவரின் சீடர்களுக்கு அமைதியின் அன்பளிப்பை கொடுக்கிறார், அதன் மூலம், அவர்களின் கவலைகளை விட்டு விட்டு, அவர்களின் நடுவே நின்றிருக்கும் யேசுவை அவர்கள் கண்டு கொள்ள முடியும்.


மீண்டும், அவரின் இறைசேவையை ,சீடர்கள் தொடர அவர்களை அழைக்கும் பொழுதும், அவர்களிடம், "' உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று கூறி, பரிசுத்த ஆவியோடு வாழும்பொழுது , இவ்வுலகத்திற்காக, மக்களுக்காக கடவுளின் சேவையை நாம் தொடரமுடியும். யேசு நம்மோடு இருக்கிறார் என்று நாம் நினைக்கும் பொழுது, நாம் அமைதியோடு இருக்க முடிகிறது. இருந்தாலும், மற்றவர்களிடம் இயேசுவை பற்றி சொல்லும்பொழுது, நமக்கு சவாலக தான் இருக்கிறது. ஏனெனில், நாம் தகுதியற்றவர்களாக, அல்லது அதிக உறசாகத்துடனும், மேலும், நாம் நிராகரிக்கபடுவோஓம் என்றும், அல்லது நம்மை கேலி செய்வார்கள் என்றும் நாம் நினைக்கிறோம். அதனால் தான் அவர் நமக்கு பரிசுத்த ஆவியை கொடுத்தார்.


தந்தை கடவுள் நம்மிடம் கேட்கும் இறைசேவையை செய்யும்பொழுது, நம்ம என்னவெல்லாம் தேவையோ அதனையெல்லாம் நமக்கு தருபவர் பரிசுத்த ஆவியானவர் ஆவார். அதனால், நாம் தகுதியற்றவர்களாக இருந்தாலும், கடவுள் நமக்கு ஆறுதல் தராமல் இருக்க மாட்டார், அதுவும் மக்கள் நம்மை நிராகரிக்கும் பொழுது கண்டிப்பாக நம்முடன் இருப்பார்.

பரிசுத்த ஆவியின் துனையுடன் , யேசுவோடு நாம் இனைந்து இருப்பதால், நமக்கு கிடைக்கும் மிகப் பெரிய நன்மை, நம்து உள் அமைதி, நமக்கு என்ன நடந்தாலும், மற்றவர்கள் நம்மை என செய்தாலும், அல்லது ஒன்றுமே செய்ய வில்லை என்றாலும், நமது உள் அமைதி அமைதியாகவே இருக்கும். ஆவியோடு வாழ்வது என்றுமே அமைதியை தரும். பரிசுத்த ஆவியின் கொடைகளில் ஒன்று நமக்கு அமைதியை தருவது.

இன்றைய நற்செய்தியின் இறுதியில், யேசு அவருடைய சீடர்களுக்கு (முதல் கத்தோலிக்க குருக்கள்) பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை கொடுத்து, இறைவனின் ப்ரசன்னம் இங்கே தொடர்ந்து இருக்க அவர்களை தயார் படுத்தினார். பாவசங்கீர்த்தன அருட்சாதனத்தை குருக்கள் மூலமாக யேசு நம்மிடம் வர தயார் படுத்தினார்.


பரிசுத்த ஆவியின் மன்னிக்கும் ஆற்றல், நமது பாவ வாழ்விலும் , அமளியான வாழ்விலும் , நாம் அமைதியை அனுபவிக்க ஆற்றல் தருகிறது. மன்னிப்பது ரொம்பவும் கடினமாக இருந்தாலும் கிறிஸ்துவின் ஆவியில், நாம் அதனை செய்ய முடியும். நம்மை காயப்படுத்துபவர்களை நாம் மன்னிக்கலாம், அவர்கள் திருந்தாவிட்டாலும் நாம் மன்னிக்கலாம். இது தான் நமக்கு அமைதியை கொடுக்கும்.

© 2010 by Terry A. Modica

Friday, May 14, 2010

மே 16, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மே 16, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 7ம் ஞாயிறு
Acts 7:55-60
Ps 97:1-2, 6-7, 9
Rev 22:12-14, 16-17, 20
John 17:20-26


யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 17

20 ' அவர்களுக்காக மட்டும் நான் வேண்டவில்லை; அவர்களுடைய வார்த்தையின் வழியாக என்னிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவும் வேண்டுகிறேன்.21எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்.22நாம் ஒன்றாய் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருக்குமாறு நீர் எனக்கு அருளிய மாட்சியை நான் அவர்களுக்கு அளித்தேன்.23இவ்வாறு, நான் அவர்களுள்ளும் நீர் என்னுள்ளும் இருப்பதால் அவர்களும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக. இதனால் நீரே என்னை அனுப்பினீர் எனவும் நீர் என்மீது அன்பு கொண்டுள்ளதுபோல் அவர்கள்மீதும் அன்பு கொண்டுள்ளீர் எனவும் உலகு அறிந்து கொள்ளும். ' 24 ' தந்தையே, உலகம் தோன்று முன்னே நீர் என்மீது அன்பு கொண்டு எனக்கு மாட்சி அளித்தீர். நீர் என்னிடம் ஒப்படைத்தவர்கள் என் மாட்சியைக் காணுமாறு அவர்களும் நான் இருக்கும் இடத்திலேயே என்னோடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.25நீதியுள்ள தந்தையே, உலகு உம்மை அறியவில்லை; ஆனால் நான் உம்மை அறிந்துள்ளேன். நீரே என்னை அனுப்பினீர் என அவர்களும் அறிந்து கொண்டார்கள்.26நான் அவர்களோடு இணைந்திருக்கவும் நீர் என்மீது கொண்டிருந்த அன்பு அவர்கள் மீது இருக்கவும் உம்மைப் பற்றி அவர்களுக்கு அறிவித்தேன்; இன்னும் அறிவிப்பேன். '



(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தி ஒற்றுமையின் நற்செய்தி. யேசு இறப்பதற்கு முன் விண்ணகத்தை நோக்கி முன் நமக்காக நமது திருச்சபைக்காக அவர் வேண்டினார். உறவிற்கான அருட்சாதனத்தை எஏற்படுத்துகிறார். யேசுவும் தந்தை கடவுளும் ஒன்றானவர்கள் போல, நாமும் ஒருவரோடு ஒருவர் ஒன்றானவர்கள் தான். அதன் மூலம் நமது ஒற்றுமையின் சாட்சியாக - நிரந்தரமான , பொறுப்புடனும், சுய தியாகத்தாலும், நிபந்தனையற்ற அன்பினாலும் - நாம் கடவுளின் அன்பை இந்த உலகத்திற்கு காட்டலாம். கடவுளின் அன்பு தான் உண்மையானது என்று உலகுக்கு நிருபித்து காட்டலாம். அவரின் அன்பு, நிரந்தரமானது, பொறுப்பானது, நிபந்தனையற்றது, தியாகத்தாலனது, யார் என்ன தவறு செய்திருந்தாலும், எல்லோர் மேலும் அன்போடு இருப்பவர்.

இவ்வுலகில், நமது திருமண அருட்சாதனமே , நமது ஒற்றுமையின் எடுத்து காட்டாகும். இதன் மூலம் நாம் கற்கும் போதனை கடவுள் நம்மை எந்த நிபந்தனையுமின்றி அன்பு செய்கிறார். நல்லதோ கெட்டதோ அவர் எப்பொழுமே நம்மை அன்பு செய்கிறார். நோயுற்று இருந்தாலும், மிகுந்த நலமுடன் இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், முழு நம்பிக்கையுடன் கடவுள் நம்மை அன்பு செய்கிறார். திருமண அருட்சாதனத்தில், கணவன் அவருடைய வாழ்க்கையை மனைவிக்கு சேவை செய்வதற்காக தியாகம் செய்கிறார், மனைவி, கணவனுக்காக தன் வாழ்வை அர்ப்பணிக்கிறார். கிறிஸ்து அவருடைய வாழ்வை நமக்காக , இந்த திருச்சபைக்க்காக தம் வாழ்வை கொடுத்தார். கிறிஸ்து தான் இந்த திருச்சபையின் மணமகன் அவர். திருச்சபைக்காக , அவரின் வாழ்வை கொடுத்தார். அந்த வாழ்க்கையின் அர்ப்பணிப்பால் , நாம்மையும் அவர் பின் செல்லவும், அவருக்கு சேவை செய்யவும் நம்மை அழைக்கிறார்.



திருமணம் புனிதமானது! விவாகரத்து ஆன தம்பதிகளை கத்தோலிக்க குருக்கள் மீண்டும் திருமணம் செய்து வைக்க முடியாது, (அவர்களது முந்தைய திருமணம் உண்மையான ஒற்றுமையின்றி இருந்தால் தான்). தம்பதிகளின் இணைப்பு ஒற்றுமை , யேசுவும் , கடவுளும் கொண்ட ஒற்றுமையாக , அதே புனிதத்துடன் இருக்க வேண்டும். நாமெல்லாம் கடவுளின் இறைசேவைக்காக நாம் ஒற்றுமையின் புனிதத்துடன் இருக்க வேண்டும். அவரின் அன்பிற்கு உதாரணமாய் இருக்க வேண்டும்

இதே ஒற்றுமை, எல்லோருக்கும் பொருந்தும், கடவுள் எங்கெல்லாம் இரண்டு பேரோடு அல்லது அதற்கு மேற்பட்டவரோடு இனைகிறாரோ அங்கெல்லாம் கடவுளின் அன்புடன், நமது ஒற்றுமை பிரதிபலிக்க வேண்டும்.

ஒவ்வொரு இணைப்பும், (கடவுளால் உண்டாக்கப்பட்டது) அனைத்தும் புனிதமானது. ஒவ்வொரு உறவும், இவ்வுலகிற்கு யேசுவின் தியாகத்தையும், அவரின் உண்மையான அன்பையும் பிரதிபலிக்க வேண்டும். கிறிஸ்துவின் உடலில் (நமது திருச்சபை) பிரிவினையும், வேற்றுமையும் இருந்தால், எவ்வளவு துன்பத்திற்கும் வேதனையுமாக இருக்கும். !

© 2010 by Terry A. Modica

Friday, May 7, 2010

மே 9 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மே 9 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 6ம் ஞாயிறு
Acts 15:1-2, 22-29
Ps 67:2-3, 5-6, 8
Rev 21:10-14, 22-23
John 14:23-29



யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 14

23 அதற்கு இயேசு பின்வருமாறு கூறினார்: ' என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்.24 என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லை. நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை.25 உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன்.26 என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவு+ட்டுவார்.27 அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம்.28 ' நான் போகிறேன், பின் உங்களிடம் திரும்பி வருவேன் ' என்று நான் உங்களிடம் சொன்னதைக் கேட்டீர்களே! நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வது பற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில் தந்தை என்னைவிடப் பெரியவர்.29 இவை நிகழும்போது நீங்கள் நம்புமாறு இப்போதே, இவை நிகழுமுன்பே, சொல்லி விட்டேன்.

(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தி நமக்கு நல்ல பாடத்தை கற்று தருகிறது. இயேசுவை நாம் அன்பு செய்தோம் என்றால், அவரின் கட்டளைகளையும் , போதனைகளையும் நம் வாழ்வில் கடைபிடிக்கிறோம் என்று அர்த்தம். நாம் அதனை தான் செய்ய விரும்புகிறோம். கிறிஸ்துவிற்கு மரியாதை செய்யும் விதமாக, அவரை போல வாழ முயற்சிக்கிறோம். யேசு அன்பு செய்வது போல , நாம் அன்பு செய்ய ஆசைபடுகிறோம். நாம் இதனையெல்லாம் செய்யும்போது, கடவுள் நம்மில் நீடித்து இருக்க ஆசைபடுகிறோம்.

எனினும், இது ஒன்றும் அவ்வளவு சுலபமானதில்லை. ஒவ்வொரு நாளும், அவரின் வார்த்தையை காப்பாற்றவும், அவரை போல வாழவும், நாம் முயற்சிக்கும்போது பல சவால்களை சந்திக்க நேரிடுகிறது. அது மாதிரியான சவாலான நேரங்களில் இயேசு எப்படி கையான்டார் என்பதனை நாம் மறந்து விடுகிறோம். மக்கள் அவர்களின் தோல்விகளிலும், அன்பற்ற நடவடிக்கைகள் மூலமும், நமக்கு தொல்லை தருகின்றனர். மேலும், இதனையெல்லாம் பார்த்து விட்ட்ய், என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி, பதில் நடவடிக்கையாக பாவ செயல்கலில் ஈடுபடுகிறோம்.

நமது நற்செய்திகளில், எந்த ஒரு இடத்திலும், ஒவ்வொரு சம்பவத்திற்கும், நாம் எப்படி கிறிஸ்துவை போல இருக்க வேன்டும் என குறிப்படவில்லை. "அது மாதிரியான நிகழ்ச்சிகள் நமக்கு நேர்ந்தால், கடவுளின் கொள்கயான #127 வை பின்பற்றுங்கள்:”



அதனால் யேசு நமக்கு பரிசுத்த ஆவியை கொடுப்பதாக நமக்கு உறுதியளிக்கிறார். பரிசுத்த ஆவியானவர் இங்கே இருந்து கொன்டு, யேசுவையும், அவரின் பரிசுத்த வழியையும் நாம் ஒவ்வொரு முறை சவாலை சந்திக்கும் போது நமக்கு வழி காட்டுகிறார். காலையில் எழுந்தது முதல், இரவில் தூங்கும் வரை நம்மோடு கூடவே பரிசுத்த ஆவியானவர் இருந்து நமக்கு வழி காட்டுகிறார்.


அப்புறம் என்ன, ? நமது ப்ரச்னை, எப்படி கிறிஸ்துவின் கட்டளைகளை கடைபிடிக்க வேன்டும் என்று நமக்கு தெரியாமல் இல்லை, ஆனால் நாம் கிறிஸ்துவின் கட்டளைகளை படி நடக்க பரிசுத்த ஆவியை துனையாக வைத்து கொள்ள மறந்து விடுகிறோம். அல்லது, அவரது பரிந்துரைகளை, வழிகாட்டுதலை நன்றாக புரிந்து கொள்ள நம்மால் முடியவில்லை. கடவுளின் முழு துனையும் நமக்கு உள்ளது. ஆனால் நமது வாழ்வில் சவால்களை , நாம் தான் கையாள வேண்டும் என நினைது கடவுளின் துணையின்றி முயற்சிக்கிறோம்.

பரிசுத்த ஆவியின் குரலை கேட்க , அவருடன் கூடவே எப்பொழுது இருக்க, இந்த பயிற்சியை செய்யுங்கள். ஒவ்வொரு மணி நேரமும், பாவங்களை கழுவி தூய்மையாக இருங்கள். ஒவ்வொரு மணி நேரமும் மாறும்போது, உங்கள் கடிகாரத்தில் அலாரம் வைத்து கொள்ளுங்கள். எப்பொழுதெல்லாம் அலாரம் அடிக்கும் போது, பரிசுத்த ஆவியான்வர் உங்களோடு இருந்து உங்களுக்கு வழிகாட்டுவதற்கு நன்றி சொல்லுங்கள். இன்னும் அடுத்த 60 நிமிடன்களுக்கு உஙளை வழி நடத்துவதற்கும் நன்றி சொல்லுங்கள். இதையே சில வாரங்கள் தொடர்ந்து செய்தால், நீஙள் அனைவரும் கடவுள் நம்மோடு இருப்பதையும், எப்பொழுது அவர் நமக்கு உதவி செய்கிறார் என்பது நமக்கு தெரியும்.

http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica