Friday, April 20, 2018

ஏப்ரல் 22 2018 ஞாயிறு நற்செய்தி சிந்தனை மறையுரை


ஏப்ரல்  22 2018 ஞாயிறு நற்செய்தி சிந்தனை மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 4ம் ஞாயிறு
Acts 4:8-12
Ps 118:1, 8-9, 21-23, 26, 28-29
1 John 3:1-2
John 10:11-18

யோவான் நற்செய்தி

11நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்.

12கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டு விட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் ஆயரும் அல்ல; ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல; ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக்கொண்டு போய் மந்தையைச் சிதறடிக்கும்.

13கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை.

14-15நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன்.

16இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்லவேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவி சாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஒரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும்.

17தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனெனில் நான் என் உயிரைக் கொடுக்கிறேன்; அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன்.

18என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக் கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதை மீண்டும் பெற்றுக் கொள்ளவும் அதிகாரம் உண்டு. என் தந்தையின் கட்டளைப்படியே நான் இப்படிச் செய்கிறேன்.
(thanks to www.arulvakku.com)

இயேசுவே நல்ல ஆயர்
இன்றைய ஞாயிறின் நற்செய்தியில், இயேசு தன்னை நல்ல ஆயர் என்று சொல்கிறார். நாம் தான் அவர் கூறும் ஆட்டு மந்தைகள் , நமக்காக அவர் வாழ்வையே நமக்கு கொடுத்தார். அவருடைய மனித வாழ்வின் அணைத்து சுகத்தையும் , ஆசைகளையும், அவர் குடும்பம், தூக்கம் , ஒய்வு, குற்ற தண்டனையிலிருந்து தப்பித்தல், அனைத்தும்,   துறந்து நமக்காக தன உயிரை துறந்தார்.
ஆடுகளாக நாம் ஆயனின் குரலை சரியாக தெரிந்து கொள்வோம். மேலும், விருப்பத்துடன் அவர் பின் செல்வோம் , அங்கே தான் பச்சை புல் வெளிகள் இருக்கும். நாம் அவரை நல்லாயனாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். அவருடைய பாதுகாப்பில், வழி காட்டுதலிலும் , அவரின் அன்பிலும் நாம் இருக்க விரும்புகிறோம்.
எனினும், சில நேரங்களில் நாம் அவருடைய குரலை கேட்க தவறி விடுகிறோம். நாம் திட்டமிட்டபடி நமது வாழ்வு செல்லாத போது , நமது பய உணர்ச்சியில் , இயேசு நம்மை விட்டு சென்று விட்டார் என நினைத்து விடுகிறோம். காணாமல் போன  ஆட்டினை தேடி சென்று விட்டார், நம்மை தனியே விட்டு விட்டார் என நினைத்து விடுகிறோம். -- கண்டிப்பாக இல்லை -- ஓநாய்கள் தாக்கும் பொழுது, இயேசு நம்மை நினைத்து கொண்டாரா ? நம் மேல் அக்கறை இருந்தால் ஏன் இப்படி செய்கிறார் ? ஏன் நம்மை தனியே விட்டு விட்டு காணாமல் போன ஆட்டினை தேடி போனார் என நாம் நினைக்கிறோம்.
எவ்வளவு தூரம் இயேசு சென்றிருந்தாலும், நம்மை விட்டும் அவர் பிரிவதில்லை. எப்பொழுதும் நம்மோடு இயேசு இருக்கிறார். நம் வாழ்வு, எவ்வளவு தூரம் சென்றாலும், மரண விளிம்பிற்கு சென்றாலும், இயேசு நம்மை கைவிட்டதால் நாம் அங்கே செல்லவில்லை. அந்த துன்பம் நமக்கு நேருகிறபோது ,நமக்கு அருகில் இருக்கும் ஆடுகள், நாம் வேறு திசைக்கு செல்ல வேண்டும் என நமக்கு நினைவு படுத்துகின்றன ஆனால், நாம் அதனை புரிந்து கொள்ளவில்லை.
நாம் வேறு திசைக்கு செல்வதில்லை. நாம் எங்கே இருக்கிறோமோ அங்கேயே இருக்க ஆசைபடுகிறோம். மற்றவர்கள் நம்மை தட்டி தட்டி வேறு திசைக்கு செல்ல அழைக்கும் போது நாம் எரிச்சலடைகிறோம். மேலும், இயேசுவின் ஆசிர்வாதத்தை காண வேண்டுமானால், நாம் அவர் இருக்கும் திசைக்கு செல்ல வேண்டும், இயேசுவின் மேல் நம் கண்ணை வைத்து , அவர் சொல்வதை கேட்க நம் காதுகளை தயாராய் வைத்திருக்க வேண்டும், முதலில் அவர் சொல்வது கஷ்டமாக இருந்தாலும், நாம் அவர் சொல்படி செல்லவேண்டும்.
© 2018 by Terry A. Modica


Saturday, April 7, 2018

ஏப்ரல் 8 2018 ஞாயிறு நற்செய்தி சிந்தனை மறையுரை


ஏப்ரல்  8 2018 ஞாயிறு நற்செய்தி சிந்தனை மறையுரை
பாஸ்கா கால 2ம் ஞாயிறு

Acts 4:32-35
Ps 118:2-4, 13-15, 22-24
1 John 5:1-6
John 20:19-31
யோவான் நற்செய்தி

இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல்
(
மத் 28:16-20; மாற் 16:14-18; லூக் 24:36-49)
19அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று
உங்களுக்கு அமைதி உரித்தாகுக!
என்று வாழ்த்தினார்.
20இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.
21இயேசு மீண்டும் அவர்களை நோக்கி
உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்
 என்றார்.

22இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி
தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.


23
எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா
 என்றார்.
இயேசு தோமாவுக்குத் தோன்றுதல்
24பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை.

25மற்றச் சீடர்கள் அவரிடம், “ஆண்டவரைக் கண்டோம்என்றார்கள். தோமா அவர்களிடம், “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்என்றார்.
26எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று
உங்களுக்கு அமைதி உரித்தாகுக!
 என்று வாழ்த்தினார்.
27பின்னர் அவர் தோமாவிடம்
இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்
 என்றார்.
28தோமா அவரைப் பார்த்து, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!என்றார்.
29இயேசு அவரிடம்
நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்
 என்றார்.
முடிவுரை: நூலின் நோக்கம்
30வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை.

31இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன.
(thanks to www.arulvakku.com)


"நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!"  என்று  தோமா ஆச்சர்யத்துடன் இயேசுவை நோக்கி  குறிப்பிடுகிறார். இதே ஆச்சரியத்துடன் நாமும் தினமும் திருப்பலியில் திவ்ய நற்கருணையை நோக்கி நாம் பார்க்கிறோம். ஒவ்வொரு திருப்பலியிலும் இதனை புதுபித்து கொள்ளவேண்டும். இது மிக பெரிய சந்தோசமான நிகழ்வு, கிறிஸ்துவை ஆண்டவர் என்று அவரின் பிரசன்னத்தை நோக்கி (அப்பமும் ரசமுமாக) நாம் ஏற்றுகொள்வது நமக்கு ஒரு வாய்ப்பாக இருக்கிறது.
புனித இரண்டாம் ஜான் பால் திவ்ய நற்கருணை பற்றிய அவருடைய குறிப்பில் "கிறிஸ்துவை பற்றி நாம் சிந்திக்கையில், கிறிஸ்து பல வேறு பரிமானங்களில் , அவரின் பிரசன்னத்தை நாம் ஏற்றுகொள்ளும்போது, இதை எல்லாவற்றையும் விட கிறிஸ்து திவ்ய நற்கருணையிலும் , திராட்சை இரசத்திலும்  இருப்பது தான் மிக உயர்ந்த பிரசன்னம்"  என்று கூறுகிறார்.
இயேசு உண்மையாகவே உயிரோடு திரும்பி வந்துள்ளார் என்பதை அவரது சீடர்கள் சரியாக புரிந்து அவர்கள் ஏற்று கொள்ள என்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் இயேசு செய்தார். அவர் முழு உடலோடு திரும்பி வந்துள்ளார் என்பதை அவர்களுக்கு எடுத்துரைத்தார். முதலில் சீடர்கள் அவரை ஆவி என்றே நினைத்தனர். அல்லது அவரை எப்படி ஏற்றுகொள்வது என்று குழம்பி போயினர். உயிர்த்தெழுதலையும் ஒரு அற்புத நிகழ்வாக ஏற்றுகொண்டனர்.
இயேசு அவர்களின் மன கண்ணை திறந்தார். அந்த அற்புதத்தை அவர்கள் நம்ப , அவரின் காயங்களை காட்டினார். ஒவ்வொரு திருப்பலியிலும் அதே காயங்களை நமக்கும் காண்பிக்கிறார்.

நம் சொந்த அறிவிலும், அனுபவத்திலும், சாதாரன அப்பத்தில் கிறிஸ்துவின் உடல் இருப்பதை நாம் உண்மையாக அறிந்திருக்க சாத்தியம் இல்லை.  -- உடைந்த , உடல் காயமடைந்து இரத்தம் சிந்திய அதே உடல் தான் இங்கே திருப்பலியில் இருக்கிறது என்பதை நாம் உணர்வதில்லை , அப்படியிருக்கையில் அங்கே  உயிர்த்தெழுந்த இயேசுவும் இருக்கிறார்  என்பதை நாம் எப்படி அறிய போகிறோம்.   
திருப்பலியில், கிறிஸ்துவோடு இணைந்து நித்திய வாழ்வில் இணைய நாம் செல்கிறோம். நமது பாவங்களுக்காக கிறிஸ்து பெரிய வெள்ளியில் செய்த தியாகத்தை நாமும் நமது சொந்த வாழ்வில் செய்ய வேண்டும். என்று நாம் அறிந்து கொள்ளும் பொழுது, அவரின் காயங்களை பார்த்து நாம் உண்மையை அறிந்து கொள்வோம். அதன் பிறகு தான் நாம் திவ்ய நற்கருணையில் இயேசு இருக்கிறார் என்ற உண்மை நமக்கு புலப்படும்.
இதன் முதல் அடியாக, நாம் திவ்ய நற்கருணையை முழுதுமாக விசுவசித்து, கிறிஸ்து நமக்காக இறந்தார் , உயிர்த்தெழுந்து நம்மை மோட்சத்திற்கு மீட்டு செல்கிறார் என்று நம்புவோம். இறுதி செயலாக நாம் இயேசுவோடு இணைந்து செல்ல நாம் ஆசைப்படும்போழுது , அதற்காக அவர் நம்மிடம் வர வேண்டும் என ஏங்கி அவரை நம்முள் ஏற்று கொள்ளும் பொழுது , அவர் நம்மையும் அவரை போல மாற்ற வேண்டும் என விரும்புகிறோம். எப்படி நம்மை இயேசு மாற்ற விரும்புகிறாரோ அதே போல மாற்ற நாம் அவரை அனுமதிக்க வேண்டும். நாம் எப்பொழுதெல்லாம் திவ்ய நற்கருணையை பார்க்கிறோமோ அப்போதெல்லாம் , "என் ஆண்டவரே ஏன் கடவுளே" என்று அழைப்போம்.
© 2018 by Terry A. Modica