Friday, June 25, 2010

ஜூன் 27, 2010 ஞாயிறு நற்செய்தி , மறையுரை

ஜூன் 27, 2010 ஞாயிறு நற்செய்தி , மறையுரை
ஆண்டின் 13ம் ஞாயிறு

1 Kings 19:16b, 19-21
Ps 16:1-2, 5, 7-11
Gal 5:1, 13-18
Luke 9:51-62


லூக்கா நற்செய்தி


அதிகாரம் 9


1 இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து,52 தமக்கு
முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.53 அவர் எருசலேம் செல்லும் நோக்கமாயிருந்ததால் அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.54 அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, ' ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா? ' என்று கேட்டார்கள்.55 அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார்.56 பின்பு அவர்கள் வேறோர் ஊருக்குச் சென்றார்கள்.
57 அவர்கள் வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, ' நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன் ' என்றார்.58 இயேசு அவரிடம், ' நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிடமகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை ' என்றார்.59 இயேசு மற்றொருவரை நோக்கி, ' என்னைப் பின்பற்றிவாரும் ' என்றார். அவர், ' முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும் ' என்றார்.60 இயேசு அவரைப் பார்த்து, ' இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும் ' என்றார்.61 வேறொருவரும், ' ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும் ' என்றார்.62 இயேசு அவரை நோக்கி, ' கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல ' என்றார்.
(thanks to www.arulvakku.com)



உங்களை யாரும் ஏற்று கொள்ளவில்லையெனில், அந்த நிலைமையை எப்படி சமாளிப்பீர்கள்? இன்றைய நற்செய்தியில் சீடர்கள் அந்த நிலைமையை எப்படி கையாண்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. யேசுவுக்கு முன்னரே சாமரியரின் ஊருக்கு சென்றவர்கள், யேசு வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய சொன்னார்கள். ஏனெனில், சமாரியர்கள் ,யூதர்களுக்கு எதிரான தவறான எண்ணத்தில் இருந்தனர். யேசு சொல்வதை அவர்கள் கேட்க விரும்பவில்லை. யேசு என்ன சொல்ல விரும்பினாலும், அவர்கள் இதயத்தை மூடி விட்டார்கள். அதனால், உலகை இரட்சித்தவரோடு இனைந்து இருக்கும் அனுபவத்தை அவர்கள் தவற விட்டு விட்டனர்.



உங்களோடு நெருக்கமாக இருப்பவர்களிடம், யேசுவை கொன்டு செல்லும்பொழுது, அவர்கள் ஏற்று கொள்ளவில்லையெனில், நீங்கள் என்ன நினைப்பீர்கள்? நீங்கள் சொல்வதை ஒருவர் கேட்கவில்லையெனில், நீங்கள் என்ன நினைப்பீர்கள்? திருச்சபையின் போதனைகளை, நீங்கள் விளக்கி சொல்லும்பொழுது, அதனை புரிந்து கொள்ள கூட அவர்கள் முயற்சிக்காத பொழுது, நீங்கள் என்ன நினைப்பீர்கள்?


உங்களை விட, யேசுவின் சீடர்கள் அவர்கள் ஏற்று கொள்ளப்படாததை அதிகம் விரும்பவில்லை. யேசுவின் நெருங்கிய நன்பர்களான ஜானும், ஜேம்ஸும் , அவர்களை நெருப்பில் வைத்து எரிக்க வேண்டும் என விரும்பினர். "' ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா?" என்று யேசுவிடம் கேட்டனர். இயேசு ஏற்கனவே யாரவது "உங்களை யாராவது நிராகரித்தால், உங்கள் கால் செருப்பில் உள்ள தூசியை தட்டிவிட்டு, அந்த இடத்தை விட்டு செல்லுங்கள் " என்று கூறியிருக்கிறார். தற்போது, அவர் என்ன போதனை கூறினாரோ, அதையே அவர் பின் பற்றினார். யேசு அவரின் நம்பிக்கைகளை , அந்த ஊர் மக்களுக்கு தினிக்க விரும்பவில்லை. அவரின் போதனைகளை அந்த ஊருக்கு தேவை என்று தெரிந்திருந்தும், அவர் அந்த போதனைகளை அங்கே கூறியிருக்க முடியும்.


நாம் இயேசுவை பின் செல்ல வேண்டும் என்றால், நாம் நமக்கு பிடித்த நிறைய விசயங்களை, கெட்ட எண்ணங்களை விட்டு அவர் பின் செல்ல வேண்டும். மற்றவர்கள் மேல் உள்ள பொறாமையும், அதிருப்தியும், விருப்பமின்மையும் நீங்கள் தூக்கி எறியவேண்டும். யாரும் உங்களை ஏற்று கொள்ள வில்லையெனிலும், அதனை ஏற்று கொண்டும் நாம் யேசுவின் பின் செல்ல வேண்டும். நமது எண்ணங்களை மற்றவர்கள் கட்டுபாட்டுக்குள் விட கூடாது. நமது காலணியில் உள்ள அழுக்கை துடைத்து எறிய வேண்டும் என்றால், நமது தீய எண்ணங்களை துடைத்து விட்டு, யேசுவின் சந்தோசத்தில் நிலைத்திருக்க வேண்டும்.



இன்றைய நற்செய்தியின் முடிவில், யேசுவை பின் செல்வது, எப்போதுமே முன்னேறும் செயலாகும், என்று யேசு விளக்குகிறார். நாம் எப்போதுமே ஏதாவது ஒரு விசயத்தைவிட்டு வெளியே வருகிறோம். யாராவது நிராகரித்தால், அங்கிருந்து வெளியே வருகிறோம், அதிருப்தியான விசயத்தை விட்டு வெளியே வருகிறோம். இதயம் இல்லாதவர்களிடமிருந்தும் யேசுவை பின் செல்லாதவர்களிடமிருந்தும், நாம் வெளியே வருகிறோம்.


முன்னேறி செல்ல, பரிசுத்த ஆவிதான் , நம்மை தயார் பன்னி யேசுவை நாம் பெற்று கொள்ள உதவி செய்பவர். நாம் யாரையாவது, யேசுவிடம் அழைத்து வந்து, அந்த முயற்சி வெற்றி பெறவில்லயென்றால், நாம் உண்மையாக தோல்வி அடையவில்லை; நாம் அறுவடை செய்யாமல், விதை விதைக்கிறோம். பரிசுத்த ஆவி அந்த விதையை வளர்த்து, அறுவடை செய்வார். நாம் மற்ற வயல்களை பார்த்து செல்ல வேண்டும்.


http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica

Saturday, June 19, 2010

ஜூன் 20,2010 ஞாயிறு நற்செய்தி,மறையுரை

ஜூன் 20,2010 ஞாயிறு நற்செய்தி,மறையுரை
ஆண்டின் 12ம் ஞாயிறு

Zec 12:10-11; 13:1
Ps 63:2-6, 8-9
Gal 3:26-29
Luke 9:18-24

லூக்கா நற்செய்தி


அதிகாரம் 9

18 இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம், ' நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்? ' என்று அவர் கேட்டார்.19 அவர்கள் மறுமொழியாக, ' சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர் ' என்றார்கள்.20 ' ஆனால் நீங்கள் நான் யார் என சொல்கிறீர்கள்? 'என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழியாக, ' நீர் கடவுளின் மெசியா ' என்று உரைத்தார்.21 இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.22 மேலும் இயேசு, ' மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலைசெய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் ' என்று சொன்னார்.23 பின்பு அவர் அனைவரையும் நோக்கி, ' என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.24ஏனெனில், தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்.



(thanks to www.arulvakku.com)


"நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?" இந்த கேள்வியை தான் இன்றைய நற்செய்தி மூலமாக நம் ஒவ்வொருவருக்கும் கேட்கப்படுகிறது. உங்கள் வாழ்க்கை , இந்த கேள்விக்கு சரியான பதிலை கொடுக்கிறதா? , உங்கள் வாழ்வின் மூலமாகவும், உங்கள் பேச்சின் மூலமாகவும், யேசு தான் உங்கள் கடவுள், உங்களை இரட்சிப்பவர், உங்கள் அன்பு , உங்கள் போதகர், வழிகாட்டி, மேலும், மிக்ச்சரியான வாழ்வு வாழ்வதற்கு எடுத்து காட்டாக யேசு தான் இருக்கிறார் என்பதனை ஒவ்வொரு தருணத்திலும் நீங்கள் எடுத்து சொல்கிறீர்களா?

உங்கள் வாழ்வு நலமாக இருக்கும்போது, யேசுவால் தான் இத்தனை ஆசிர்வாதமும் எங்களுக்கு கிடைத்திருக்கிறது என்று சொல்கிறீர்களா? நீங்கள் ப்ரச்சினைகளில் இருக்கும்போதும், நீங்கள் மற்றவர்களை மன்னித்து, யேசு உங்கள் வலியையும் வேதனையையும் , அவர்களின் பாவங்களையும் யேசு சிலுவைக்கு எடுத்து சென்று விட்டார் என உங்களால் சொல்ல முடிகிறதா? சரியான காரணத்திற்காக நீங்கள் கோபப்படும் பொழுது, மற்றவர்களுக்கு எரிச்சல் கொடுக்கும் பேச்சை நீங்கள் பேசுகிறீர்களா? அல்லது யேசுவிடம் வேண்டி, இருவருக்கும் நடுவே அமைதியும் சமாதானமும் ஏற்பட வேண்டும் என்று கேட்கிறீர்களா?


நமது உதடுகள் யேசு தான் கடவுள் என்று சொல்லலாம் ஆனால், நமது வாழ்வோ அதற்கு எதிர்மாறாக இருக்கும். நமது நடவடிக்கைகள் மூலம், நாம் என்ன செய்தியை கொடுக்கிறோம் என்பதில் நாம் கன்னும் கருத்துமாக இருக்க வேண்டும். மிக கவனத்துடன் நமது வாழ்வை நடத்திட வேண்டும், நமது வார்த்தைக்கும், வாழவிற்கும் ஒற்றுமை இருக்க வேண்டும்.


நமது உள்ளத்திள் ஏற்படும் விளைவுகளாலும், வலியினாலும், பயத்தினாலும் நாம் பாவம் செய்கிறோம். நமது நடவடிக்கைகளில் என்ன மாறுதல் என்று நாம் கவனித்து கூர்ந்து பார்த்தால், யேசுதான் கடவுள் என்பதனை நாம் நினைவில் கொள்ளாமல் வைக்க என்ன நம்மிடம் இல்லை என்பது தெரியும். இதன் மூலம், நாம் யேசுவின் அன்பையும், அவரது குணப்படுத்தலையும் நாம் பெறுவோம்.

"எனது வாழ்வு யேசு தான் கடவுள் என்பதை ஆணித்தரமாக காட்டுகிறதா? , அவரின் உண்மையான ஆற்றலை , அன்பை காட்டுகிறதா? இந்த கேள்வியை நாம் ஒவ்வொரு நாளும் நமக்குள்ளே கேட்டு கொள்ள வேண்டும். இதற்குண்டான பதிலில்,நாம் எங்கே முன்னேற வேண்டும் என்பது நமக்கு தெரியும். அதன் மூலம் யேசு யார், அவர் எப்படிபட்டவர் என்பதும் நமக்கு தெரியும். இதன் மூலம், நம்மால் ஏன் மற்றவர்கள் மனதை மாற்ற முடியவில்லை என்பதும் தெரியும். நமது வாழ்க்கை வேறாக இருக்கும்பொழுது, நமது வார்த்தையை யாரும் நம்புவது இல்லை.


இயேசு யார்? அவருக்கு உன்னை நேரடியாகவும், உன் உள்ளத்தையும் அறிந்தவர். உனக்கு தகுதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் உன்னை முழுதும் அன்பு செய்பவர், உனக்கு எப்பொழுதும் உதவி செய்பவர், நீங்கள் அந்த அன்பையும், உதவியையும் கான முடியாவிட்டாலும் கூட. என்றுமே உன்னை நிராகரித்ததில்லை. இதனை நீங்கள் நம்பினால், அவரிடம் பாதுகாப்பை நீங்கள் உணர முடியும். உங்கள் வாழ்க்கையில் எந்த ப்ரஸ்ன்னை இருந்தாலும், அவரின் அன்பு உங்களை என்றுமே அவர் பக்கத்தில் இருக்க வைக்கும். உங்கள் தூய சிலுவையை எடுத்து கொண்டு, அவரின் பின் செல்லுங்கள்.

© 2010 by Terry A. Modica

Friday, June 4, 2010

ஜுன் 6, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜுன் 6, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
நற்கருணை திருவிழா

Gen 14:18-20
Ps 110:1-4
1 Cor 11:23-26
Luke 9:11b-17


லூக்கா நற்செய்தி


அதிகாரம் 9

11 அதை அறிந்து திரளான மக்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். அவர்களை அவர் வரவேற்று இறையாட்சியைப் பற்றி அவர்களோடு பேசி, குணமாக வேண்டியவர்களைக் குணப்படுத்தினார்.12 பொழுது சாயத் தொடங்கவே பன்னிருவரும் அவரிடம் வந்து, ' இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே; சுற்றிலுமுள்ள ஊர்களுக்கும் பட்டிகளுக்கும் சென்று தங்கவும் உணவு வாங்கிக்கொள்ளவும் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும் ' என்றனர்.13 இயேசு அவர்களிடம், ' நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் ' என்றார். அவர்கள், ' எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமே உள்ளன. நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால்தான் முடியும் ' என்றார்கள்.14 ஏனெனில் ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அங்கு இருந்தனர். இயேசு அவருடைய சீடர்களை நோக்கி, ' இவர்களை ஐம்பது ஐம்பது பேராகப் பந்தியில் அமரச் செய்யுங்கள் ' என்றார்.15 அவர் சொன்னபடியே அனைவரையும் அவர்கள் பந்தியில் அமரச் செய்தார்கள்.16 அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, அவற்றின் மீது ஆசிகூறி, பிட்டு, மக்களுக்குப் பரிமாறுவதற்காகச் சீடரிடம் கொடுத்தார்.17 அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.



(thanks to www.arulvakku.com)

அன்பானது ஐந்து அப்பங்களும் ,இரண்டு மீனும் போன்றது, அதனை மற்றவர்களிடம் கொடுக்காதவரை அன்பு மிகவும் குறைவாகவே காணப்படும்." கலிலேயே கடற்கரையில் வடக்கு பக்கம் உள்ள கோவிலில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. அந்த இடத்தில் தான், இயேசு இரண்டு மீனையும் , ஐந்து அப்பங்களையும் பல மடங்காக பெருக்கினார். அவரை பார்க்க வந்த அனைவருக்கும் உணவு வழங்கினார்.


அந்த கோவிலின் பீடத்தின் முன்னே மொசைக்கில் செய்யப்பட்ட மீனும், ரொட்டி துண்டுகளும் வைக்கப்பட்டுள்ளது. எந்த பாறையிலிருந்து யேசு அதனை பல மடங்காக பெருக்கினாரோ அதற்கு பக்கத்திலேயே உள்ளது. ஆனால் அங்கே 4 ரொட்டி துண்டுகள் தான் உள்ளது. ஏன்? ஐந்தாவது ரொட்டி துண்டானது, நமக்கு ஒவ்வொரு திருப்பலியிலும் திவ்ய நற்கருணையாக வழங்கப்படுகிறது.

இந்த கோவிலின் முகப்பை இந்த முகவரியில் நீங்கள் பார்க்கலாம். http://wordbytes.org/holyland/pilgrim049.htm

திவ்ய நற்கருணை கிறிஸ்துவின் உண்மையான ப்ரசன்னத்தை விட மேலானது. கிறிஸ்துவின் உடலுடன் இணைவதைவிட மேலானது, ஏனெனில், நாம் அனைவரும் திருச்சபயில் இணைகிறோம். இது ஒரு அற்புதமான தெய்வீக நிகழ்வாகும். பல மடஙக பெருகுகிறது. நமக்கு என்ன குறை இருந்தலும், யேசுவாக , பரிசுத்த ஆவி மூலம் நம்மில் வருகிறது. திருப்பலியில், நாம் திவ்ய நற்கருனையில் பங்கு கொள்ளும் பொழுது, நம்மிடம் இல்லாததை, பல மடங்காக பெருக்க வேண்டும் என நாம் யேசுவிடம் கேட்கலாம்.

இயேசு நமக்கு தேவையன அனைத்தையும் கொடுப்பார் என்று நாம் நம்பலாம், சரியான நேரத்தில், நம்மால் எவ்வளவு எடுத்து கொள்ள முடியுமோ அவ்வளவையும் தருவார். இருந்த போதிலும், இது ஒரு வளரும் செயலாகும்.
உங்கள் வாழ்க்கையில், உங்களுக்கு தேவையான அன்பு கிடைத்துள்ளதா? நம்மில் பலர் இல்லை என்று தான் சொல்வார்கள். ஏனெனில், கடவுளை தவிர மற்றவர்கள் யாராலும், நமக்கு தேவையான அன்பை கொடுக்க முடியாது. யாராலும், அவர்க்ள நம்மிடம் மிகவும் நெருக்காமாக இருந்தாலும், நம் நம்பிக்கைக்கு தகுந்தவர்களாக இருந்தாலும், கிறிஸ்துவோடு நெருக்கமாக இருந்தாலும், அவர்களால் நமக்கு தேவையான அன்பை கொடுக்க முடியாது.

திவ்ய நற்கருணை, கடவுளின் பரிசுத்த அன்பிற்கும், நமக்கும் இவ்வுலகில் இணைப்பை ஏற்படுத்துவது ஆகும். திவ்ய நற்கருணையோடு நம் இணைப்பை நாம் சரியாக புரிந்து கொள்ளாததால் தான், நாம் இன்னும் முழுமையான அன்பை உணரமுடியவில்லை. அந்த நற்கருணையின் முழுமையை , நம் வாழ்க்கையை மாற்றும், நற்கருணையை முழுமையாக பெற , நாம் நற்கருணையாக, முழு அன்புடன் இருக்க வேண்டும். மற்றவர்களின் நலனுக்காக , தியாகம் செய்த அன்பு தான் திவ்ய நற்கருணை. நீங்கள் உஙளுக்கு போதிய அளவு அன்பு கிடைக்கவில்ல என்றால், எவ்வளவு அன்பு நீங்கள் எதிர்பார்க்கிறீர்களோ , அவ்வளவையும் கொடுங்கள். எல்லோருக்கும் திவ்ய நற்கருணையாக இருங்கள்.

http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica