Friday, July 25, 2008

ஜுலை 27 2008, ஞாயிறு நற்செய்தி, மறையுரை:

ஜுலை 27 2008, ஞாயிறு நற்செய்தி, மறையுரை:
ஆண்டின் 17வது ஞாயிறு


1 Kings 3:5, 7-12
Ps 119:57, 72, 76-77, 127-130
Rom 8:28-30
Matt 13:44-52

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 13

44 ' ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்து விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும். 45 ' வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார். 46 விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள் யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும். 47 ' விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். 48 வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க்கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர். 49 இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்; 50 பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். ' 51 ' இவற்றையெல்லாம் புரிந்து கொண்டீர்களா? ' என்று இயேசு கேட்க, அவர்கள், ' ஆம் ' என்றார்கள். 52 பின்பு அவர், ' ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவு+லத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப்போல் இருக்கின்றனர் ' என்று அவர்களிடம் கூறினார்.

(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், யேசு வின்னக அரசு மறைந்திருக்கும் புதையலையும், விலையுயர்ந்த முத்தையும், வலை நிறைந்த மீன்களில், நல்லதை எடுத்து கொண்டு, கெட்டவற்றை வெளியே எறியப்படுவதை போல பல உதாரணங்களில் காட்டுகிறார்.

வேறு வார்த்தைகளில் சொல்வதனால், நமது கிறிஸ்துவ வாழ்வு விலை உயர்ந்த அதிக மதிப்பு மிக்க பொருட்களோடு சேர்ந்து உள்ளது. அதில் சிலபொருட்கள் மதிப்பில்லாதது, தூக்கி எறியபடவேண்டியது. சில பொருட்கள் தற்காலிகமானது, இந்த உலகோடு சம்பத்தப்பட்டது. இவையெல்லாமே கடவுளரசிற்கு உபயோகப்படவில்லையெனில், அவையெல்லாமே வீனான பொருட்களாகும்.

இன்றைய வாசகத்தில், உரோமையர் எழுதிய திருமுகத்தில், அனைத்துமே கடவுளை அன்பு செய்பவர்களுக்காக ஒன்றினைந்து செயல்படுகிறது என்கிறார். நமது வாழ்க்கையில் உள்ள தீமைகளை ஒழித்து, இறந்த மீன்களை தூக்கி எறிந்தால், நாம் கடவுளை போல மாறுகிறோம். நாம் இரட்சிக்கபட்டுவிட்டோம். நாம் கடவுளரசிற்கு உபயோகமாக உள்ளோம். நமக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டால் கூட, எல்லாவற்றையும் படைத்த, எல்லாம் வல்ல இறைவனின் மேற்பார்வையில், அவரது அரசின் கீழ், நாம் அதனை நல்ல விசயத்திற்கு உபயோகித்தால், அது முத்தை போல ப்ரகாசமாகும்.


இன்றைய முதல் வாசகத்தில், சாலமன், இறைவனிடம் அதிக சொத்துக்களை கேட்டிருக்கலாம், கடவுள் அவருக்கு கொடுத்திருப்பார். ஆனால், புரிந்து கொள்ளக்கூடிய மனதையும், அதன் மூலம் அவர் ஞானம் பெற்று, நாட்டினை அவர் நல்ல முறையில் ஆட்சி செய்யலாம் என்று கேட்டார். அதன் பிறகு, அவர் சில தவறுகள் அவரது ஆட்சியில் செய்து இருந்தாலும், அகில உலகமும், அவர் நல்ல அறிவாளியான அரசர் என்று போற்றியது, அதன் மூலம், பல செல்வஙகளை சேர்த்தார்.


இந்த கதையின் மூலம், நமக்கு என்ன சொல்லபடுகிறது என்றால், நாம் எப்போதுமே, முதலில் கடவுளின் செல்வங்களை பெறுதல் வேண்டும், பிறகு, இந்த உலகின் செல்வங்களை நாம் உபயோகிக்கலாம். ஏனெனில், கடவுளின் ஞானம் நாம் இந்த உலக செல்வங்களை மற்றவர்களின் பயனுள்ளதாக எப்படி உபயோகிக்கலாம் என வழிகாட்டும். நாம் எவ்வளவு அதிகமாக கிறிஸ்துவை அன்பு செய்து, அவர் வழியில் செல்கிறோமோ, அப்போதுதான், நமக்கு உண்மையான செல்வம் எது என நம்மால் கண்டுபிடிக்க முடியும், எது வீனான செல்வங்கள், கடவுளுக்கு தேவையில்லாத செல்வம் எது என்று அறிந்து அதனை தூக்கி எறிய முடியும். மேலும் நம்மிடம் உள்ள எல்லா செல்வங்களையும், கடவுளின் உபயோகத்திற்காக, அவரது பயன்பாட்டிற்காக செலவிட முடியும்.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, July 18, 2008

ஜுலை 20, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை:

ஜுலை 20, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை:

ஆண்டின் 16வது ஞாயிறு

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 13

24 இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: ' விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். 25 அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான். 26 பயிர் வளர்ந்து கதிர் விட்டபோது களைகளும் காணப்பட்டன. 27 நிலக்கிழாருடைய பணியாளர்கள் அவரிடம் வந்து, ' ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி? என்று கேட்டார்கள். 28 அதற்கு அவர், ' இது பகைவனுடைய வேலை ' என்றார். உடனே பணியாளர்கள் அவரிடம், ' நாங்கள் போய் அவற்றைப் பறித்துக் கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன? ' என்று கேட்டார்கள். 29 அவர், ″ வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக்கூடும். 30 அறுவடைவரை இரண்டையும் வளர விடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம், ' முதலில் களைகளைப் பறித்துக் கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள் ' என்று கூறுவேன் ″ என்றார். ' 31 இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: ' ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும்விடச் சிறியது. 32 ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும் விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும். 33 அவர் அவர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை: ' பெண் ஒருவர் புளிப்புமாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்புமாவுக்கு ஒப்பாகும். ' 34 இவற்றையெல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை. 35 ' ' நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன்; உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன் ' என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது. 36 அதன்பின்பு இயேசு மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார். அப்போது அவருடைய சீடர்கள் அவரருகே வந்து, ' வயலில் தோன்றிய களைகள்பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிக் கூறும் ' என்றனர். 37 அதற்கு அவர் பின் வருமாறு கூறினார்: ' நல்ல விதைகளை விதைப்பவர் மானிடமகன்; 38 வயல், இவ்வுலகம்; நல்ல விதைகள், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள்; களைகள், தீயோனைச் சேர்ந்தவர்கள்; 39 அவற்றை விதைக்கும் பகைவன், அலகை; அறுவடை, உலகின்முடிவு; அறுவடை செய்வோர், வானதூதர். 40 எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும். 41 மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார். அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும் நெறிகெட்டோரையும் ஒன்று சேர்ப்பார்கள்; 42 பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். 43 அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப்போல் ஒளிவீசுவர். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும். '

(thanks to www.arulvakku.com)


அமெரிக்க பிஷப்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, கத்தோலிக்க மதமாற்றத்திற்கும், மணம் மாற்றுதலுக்குமான முறைபடிவங்களை "சீடர்களை உருவாக்குங்கள்" என்ற தலைப்பில் உருவாக்கியுள்ளனர். இது மூன்று நோக்கங்களை அல்லது மூன்று வாக்கியங்களை கொண்ட்டதாகும். (1) உனது விசுவாசத்தை நல்ல முறையில் வளர்த்திட வேண்டும். (2) மற்ற சகோதரர்களை மத/மண மாற்றத்திற்கு அழைத்தல் (3) உண்மையான கிறிஸ்துவ வாழ்வில் வாழ்ந்து சமூக மாற்றத்திற்கு உறுதுணையாய் இருத்தால். இன்றைய நற்செய்தியிலும், யேசு, உவமைகள் மூலமாக மத/மண மாற்றத்திற்கான மூன்று நோக்கங்களையும் கூறுகிறார்.

(1)நமது விசுவாசத்தை நல்ல முறையில் வளர்த்திடல்: இறையரசில், நாமெல்லாம், களைகளுக்கிடையே இருக்கும் நல்ல கோதுமைகள். அந்த களைகள் உங்களுடைய பரிசுத்த வாழ்விலிருந்து பாவ வாழ்விற்கு இட்டு செல்லாமல் இருப்பதற்கு என்ன முயற்சி செய்து கொண்டு இருக்கிறீர்கள்? அவநம்பிக்கை உடையோரிடமும், தீயோஒரிடமும், இடையே வாழும் நீங்கள், உங்கள் விசுவாச வாழ்வு எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கிறது? இந்த பயன்கள் கிடைக்க பல முயற்சிகள் செய்ய வேண்டும். நாம் தினமும் முயற்சி செய்து, பரிசுத்த வாழ்வில் வளர்ந்திடாமல் இருந்தால், களைகள் நம்மை மூழ்கடித்து அது வளர்ந்து விடும்.

(2) மற்ற சகோதரர்களை மத/மண மாற்றத்திற்கு அழைத்தல்: கடவுளரசில், நாமெல்லாம், கடுகு போன்ற சிறு விதையாகும். அது புல்வெளிக்குள் வளர்ந்து பெரிய மரமாக தழைத்து, பலர் அதில் இளைப்பாறி, பல பயன்களை பெறுவர். உனது விசுவாசத்தின் மூலம் யார் பயன் பெறுகிறார்கள்? உனது பரிசுத்த வாழ்வின் வளர்ச்சி மற்றவர்களை யேசுவோடு வாழ எப்படி அழைக்கிறது? பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு முழு அதிகாரத்தை கொடுத்து, உங்கள் அனுபவித்திலிருந்து, அவர்களை அழைக்க விரும்பினால், அவர் முழு ஆதரவையும் கொடுத்து ஊக்குவிப்பார்.

(3) சமூகத்தை மாற்றுங்கள்: வின்னகரசில், நாமெல்லாம், புளிப்புமாவிற்கு ஒப்ப்பாவோம். அந்த புளிப்பு மாவும், எப்படி எல்லா மாவையும் புளிப்பாக்கி நல்ல ப்ரெட் உருவாக காரணமாகிறதோ அதே போல், மற்றவர்கள் இறைவனோடு இணைக்க வைக்கும் புளிப்பு மாவு ஆவோம். நீ கிறிஸ்தவனாக இந்த உலகை முன்னேற்ற என்ன காரியங்களில் ஈடுபடுகிறாய்? உனது பரிசுத்த வாழ்வு, உங்கள் வேலையிடத்தில், உங்கள் சமூக குழுவில், உனது பங்கில், எந்த மாதிரியான வித்தியாசத்தை காட்டுகிறது? ஒவ்வொரு திருப்பலியிலும், கிறிஸ்துவின் உடலை நாம் வாங்கும்போது, நீ யேசுவின் உடலாக இந்த உலகத்திற்கு பல நல்ல விசயங்களை வளர்த்திட, உனக்கு அதிகாரம் வழங்கபடுகிறது.

http://www.paulist.org/main/whoare.htm.


© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, July 11, 2008

ஜூலை 13, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜூலை 13, 2008
ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 15வது ஞாயிறு

Is 55:10-11
Ps 65:10-14 (with Luke 8:8)
Rom 8:18-23
Matt 13:1-23

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 13

1 அதே நாளில் இயேசு வீட்டிற்கு வெளியே சென்று கடலோரத்தில் அமர்ந்தார். 2 மக்கள் பெருந்திரளாய் அவரிடம் ஒன்றுகூடி வந்தனர். ஆகவே அவர் படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் நின்றுகொண்டிருந்தனர். 3 அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றைக் குறித்து அவர்களோடு பேசினார்: ' விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். 4 அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கி விட்டன. 5 வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன; 6 ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேரில்லாமையால் கருகிப் போயின. 7 மற்றும் சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிட்டன. 8 ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் சில நூறு மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. 9 கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும் ' என்றார். 10 சீடர்கள் அவரருகே வந்து, ' ஏன் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகின்றீர்? ' என்று கேட்டார்கள். 11 அதற்கு இயேசு அவர்களிடம் மறுமொழியாகக் கூறியது: ' விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை. 12 உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார். மாறாக, இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும். 13 அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை; புரிந்து கொள்வதுமில்லை. இதனால்தான் நான் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகிறேன். 14 இவ்வாறு எசாயாவின் பின்வரும் இறைவாக்கு அவர்களிடம் நிறைவேறுகிறது: ' நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்வதில்லை. உங்கள் கண்களால் பார்த்துக் கொண்டேயிருந்தும் உணர்வதில்லை. 15 இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது; காதும் மந்தமாகிவிட்டது. இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டார்கள்; எனவே கண்ணால் காணாமலும் காதால் கேளாமலும் உள்ளத்தால் உணராமலும் மனம் மாறாமலும் இருக்கின்றார்கள். நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன். ' 16 உங்கள் கண்களோ பேறுபெற்றவை; ஏனெனில் அவை காண்கின்றன. உங்கள் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன. 17 நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; பல இறைவாக்கினர்களும் நேர்மையாளர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை. 18 ' எனவே விதைப்பவர் உவமையைப் பற்றிக் கேளுங்கள்: 19 வழியோரம் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறையாட்சியைக் குறித்த இறைவார்த்தையைக் கேட்டும் புரிந்து கொள்ளமாட்டார்கள். அவர்கள் உள்ளத்தில் விதைக்கப்பட்ட விதைகளைத் தீயோன் கைப்பற்றிச் செல்லுவான். 20 பாறைப் பகுதிகளில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார்கள். 21 ஆனால், அவர்கள் வேரற்றவர்கள். எனவே அவர்கள் சிறிது காலமே நிலைத்திருப்பார்கள்; இறைவார்த்தையின் பொருட்டு வேதனையோ இன்னலோ நேர்ந்த உடனே தடுமாற்றம் அடைவார்கள். 22 முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால் பயன் அளிக்க மாட்டார்கள். 23 நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்து கொள்வார்கள். இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும் சிலர் முப்பது மடங்காகவும் பயன் அளிப்பர். '


(thanks to www.arulvakku.com)


இன்றைய ஞாயிறின் நற்செய்தி, விதை விதைப்பதை பற்றி சொல்கிறது. இதில் முக்கியமான செய்தி என்ன வென்றால், விதைக்கும் விதை நல்ல முறையில் மாறவில்லையென்றால், எல்லா முயற்சிகளும், வீணாகிவிடும். ஒவ்வொரு விதையும், தன்னுடைய முழு உருவத்தை விட்டு விட வேண்டும். அந்த விதை சேற்றில் அழுகி புதிய முளைபாரியாக வெளி வரும். அதற்கு பிறகு தான் , முதல் செடி வரும், பிறகு பல பல செடிகளாக பல்கி பெருகி பலமானதாகவும், வலிமையான வேறுடனும் வளரும். ஆனால், அதனை ஒழுங்காக பராமரிக்கபடவேண்டும். நினைவில் கொள்க.

இந்த எல்லா நிலைகளிலும் வளர்ந்த பின்னால், அதன் விளைவு, மரமாகவோ, பெரிய செடியாகவோ மாறி, விதைக்கும், மரத்திற்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கும். மேலும், வளர்ந்த பின்னால், மற்ற இயர்கை உயிரனங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

யேசு இந்த உவமையை சொல்கிறபோது, நாம் அதிக பழங்களை கொடுக்க கூடிய நல்ல விதையாக இருக்க விரும்புகிறோம் . ஆனால், வெறும் விருப்பம் மட்டும், நம்மை மாற்றி விடாது. எந்த முறைகள் நல்ல மண்ணாக மாறி நம் வாழ்வை முன்னேற்றும் மேலும், பல மடங்கு வளர்ச்சியையும், அதனால் பலருக்கு நன்மையையும் தரும்.?

இசையாவின் முதல் வாசகம், "யேசுவே நல்ல விளைச்சல் தரும் மண்ணாகும்" என்று கூறுகிறது. கடவுளும், அவரது வார்த்தைகளும், முழுமையாக கடவுள் என்ன விரும்புகிறார் என்று பறைசாற்றுகிறது. இரண்டாவது வாசகத்தில், புனித பவுல் அடிகளார், துன்பத்திற்கு ஆளாகுதல், படைப்பின் ஒரு அங்கமாகும். ஒவ்வொரு உருவாக்கத்திற்கும், (விதைகள் அழிந்து, புதிய செடியாக வேண்டும்) ஓர் அழிவு வேண்டும். மீண்டும் உயிர்த்தெழுதல் , துன்பத்திலுருந்தும், மரணத்திலிருந்தும் தான் வருகிறது.

நாம் நம்மையே கடவுளிடம் (மண்ணிடம்) முழுமையாக அர்ப்பணித்து, கடவுள் நம்மை முழுமையாக மாற்றி வளர்த்திட அனுமதித்தால் தான், நாம் முழுமையான கடவுளின் மக்களாவோம்.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, July 4, 2008

ஜூலை 6 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை:

ஜூலை 6 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை:


Zec 9:9-10
Ps 145:1-2, 8-11, 13-14
Rom 8:9, 11-13
Matt 11:25-30

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 11

25 அவ்வேளையில் இயேசு, ' தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். 26 ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம். 27 என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார் ' என்று கூறினார். 28 மேலும் அவர், ' பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். 29 நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். 30 ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது ' என்றார்.

(thanks to www.arulvakku.com)
மறையுரை

பல வேலைகள் செய்யும்போதும், பங்கு , கோவில் சேவைகளில் ஈடுபடும்போதும், யேசுவை மற்றவர்களுக்கு எடுத்து செல்லும்போதும், உங்களுக்கு பாரச்சுமை அழுத்துகிறதா? வேலை சுமை அதிகமாயுள்ளதா?

நமக்கு அதிக போராட்டங்களை சந்திக்கிறோம், பல சிலுவைகளை சுமக்கிறோம்.பலருக்கு உதவி செய்ய வேண்டியுள்ளது. இதனால், நமக்கு பல வேலை சுமையாகிறது, அதனால், நாம் மிகவும் அயர்ச்சி அடைகிறோம். இருந்தாலும், யேசு இன்றைய நற்செய்தியில் சொல்கிறார், "என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது " அவர் நம்மிடம் செய்ய சொல்லும் செயல்கள் யாவும், அவ்வளவு பளுவானது அல்ல.

அது எப்படி முடியும்?

வாழ்க்கையில் உள்ள பொறுப்புகள், வேலைகள் நம்மை சோர்வடைய செய்யும். ஏனெனில், கடவுள் நமக்கு கொடுத்த பொறுப்புகளை விட நாம் அதிகமாக செய்கிறோம். அல்லது, யேசு கொடுத்த சிலுவைகளிலிருந்து தப்பிக்க, நமது சொந்த வேலைகளை இழுத்து போட்டு செய்கிறோம். நமது வேலை பளு நம்மை ஆற்றல் இல்லாமல் செய்தால், கடவுள் நம்மை சோர்வடைய செய்கிரார். ஏனெனில், அவர் நமக்கு எச்சரிக்கை செய்கிறார்: உங்கள் வேலை பளுவை குறைத்து கொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கையை சுலபமானதாக ஆக்கி கொள்ளுங்கள். மாற்றத்தை உண்டாக்குங்கள்!. செபங்களில் அதிக நேரம் செலவிடுங்கள். என்கிறார் கடவுள். இது உங்களுக்கு கோபத்தையும், ஆங்காரத்தையும் தூண்டுமெனில், நமது சுய நலங்கள் தான், நமது வாழ்வை சுல்பமானதாக்கி கொள்ள தூன்டுகின்றன ஆனால், அதுவே நமக்கு மிகவும் கடினமாக மாறிவிடுகிறது என கடவுள் நமக்கு எடுத்து சொல்கிறார்.


கடவுளின் சேவையை ஏற்று கொள்வதற்கு முன், நாம் நம்முடைய தேவைகளை கவனித்து கொள்ள வேண்டும். யேசுவின் சுமை நாம் ஏற்று கொள்ளாமல், மற்றவர்களுக்கு தள்ளி விட ஆசைபட்டால், அவரின் சுமை நமக்கு பளுவானதாக இருக்கும். யேசுவோடு சேர்ந்து, சேவை செய்திட நம்மால் எவ்வள்வு முடியுமோ, அவ்வளவு தான் அவர் நமக்கு கொடுப்பார். அப்போது தான், நமது கோபமும், ஆற்றாமையும், தானாக நீங்கிவிடும்.மேலும், நாமும், பரிசுத்த பெரும் ஆனந்தம், திருப்தி அடைவோம். ஏனினில், யேசுவின் ஆற்றலும், திறனும், நம்ம் சேவை பளுவோடு சேர்ந்து விடுகிறது.


© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm