Saturday, December 16, 2017

டிசம்பர் 17 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை

டிசம்பர்  17 2017  ஞாயிறு நற்செய்தி மறையுரை
திருவருகை கால 3ம் ஞாயிறு

Isaiah 61:1-2a, 10-11
Luke 1:46-50, 53-54 (with Isaiah 61:10b)
1 Thes 5:16-24
John 1:6-8, 19-28

யோவான் நற்செய்தி
கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்;
அவர் பெயர் யோவான்.
7அவர் சான்று பகருமாறு வந்தார்.
அனைவரும் தம் வழியாக நம்புமாறு
அவர் ஒளியைக்குறித்துச்
சான்று பகர்ந்தார்.
8அவர் அந்த ஒளி அல்ல;
மாறாக, ஒளியைக் குறித்துச்
சான்று பகர வந்தவர்.

திருமுழுக்கு யோவான் சான்று பகர்தல்
(மத் 3:1-12; மாற் 1:7-8; லூக் 3:15-17)
19எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, “நீர் யார்?” என்று கேட்டபோது அவர், “நான் மெசியா அல்லஎன்று அறிவித்தார்.

20இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார்.
21அப்போது, “அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா?” என்று அவர்கள் கேட்க, அவர், “நானல்லஎன்றார் நீர் தாம் வர வேண்டிய இறைவாக்கினரா?” என்று கேட்டபோதும், அவர், “இல்லைஎன்று மறுமொழி கூறினார்.

22அவர்கள் அவரிடம், “நீர் யார்? எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி சொல்லியாக வேண்டும்; எனவே உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்?” என்று கேட்டார்கள்.
23அதற்கு அவர்,
“‘ஆண்டவருக்காக வழியைச்
செம்மையாக்குங்கள்
எனப் பாலைநிலத்தில் குரல்
ஒன்று கேட்கிறது
என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப்பற்றியேஎன்றார்.

24பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள்
25அவரிடம், “நீர் மெசியாவோ எலியாவோ வர வேண்டிய இறைவாக்கினரோ அல்லவென்றால் ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்?” என்று கேட்டார்கள்.

26யோவான் அவர்களிடம், “நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்;

27அவர் எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லைஎன்றார்.

28இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

இன்றைய ஞாயிறின்  நற்செய்தி , ஞானஸ்நான யோவான் "ஒளியை குறித்து சான்று பகர " வந்தார் என்று கூறுகிறது. இதன் அர்த்தம் என்ன ?
(thanks to www.arulvakku.com)
ஒளியின் சான்று

இயேசு உண்மையின் ஒளியாக இருந்து, இருளில் வெளிசத்தை கொடுத்து நம்மை நித்திய வாழ்விற்கு அழைத்து செல்பவர் என்று நமக்கு தெரியும். மேலும்,  அவரது ஆவி, நமக்கு உண்மையை எடுத்துரைத்து , நமது பாவங்களின் அழிவிலிருந்து நம்மை காப்பவர் என்றும் நமக்கு  தெரியும். ஆனால் யோவானின் சான்று என்ன? அவர் எப்படி ஒளிக்கு சான்று பகர்ந்தார். மேலும் எப்படி நம் வாழ்வில் அவரின் சான்று உதவியது ?

யோவானின் சான்றோ : "நான் கிறிஸ்து அல்ல , நான் குரல். இந்த காட்டில் உள்ள குரல். பாலைவனத்தில் ஒலிக்கும் குரல் " என்று கூறியது.  யோவானின் சான்று , கிறிஸ்துவின் ஒளியை நம்மிடம் கொண்டு வந்து நம்மிடம் ஒரு சவால் விடுகிறது.  "உங்கள் வாழ்க்கையில் எந்த கஷ்டம் உங்களை வாட்டுகிறது  ?  நன்றாக கேளுங்கள்!   கிறிஸ்து உங்களை சந்திக்க வருகிறார்!  அவருக்கு வழியை உண்டாக்குங்கள்!  மற்ற வேலைகளை விட்டு விட்டு ! மனம் திருந்தி , மாற்றத்தை கொண்டு , இயேசுவை பார்ப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்யுங்கள். அதன் மூலம் இயேசுவை பாருங்கள். உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்!

நாமெல்லாம் பல நேரங்களில் இயேசு நம்மை விட்டு தூராமாய் இருப்பத் போல தெரியும், நம் தேவை அறிந்து அவர் அருகில் இல்லாது போன்று தோன்றும். அவர்  அருகில் இருப்பதை உணர உங்கள் கண்கள் எப்படி எவ்வாறு திறந்தது ?  எந்த குரலால் நீங்கள் கடவுளை நோக்கி திரும்புனிர்கள் ?  அதே போல நீங்கள் செய்து பலரை கடவுள் பக்கம் திரும்ப  வைக்க வேண்டும்.  இசையா முதல் வாசகத்தில் கூறுவது போல " ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும்,  உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும்  "  நாம் அவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் . அதன் மூலம் கடவுளின் நட்பை அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.


யோவானுக்கு என்ன அழைத்தல் உள்ளதோ அதே அழைத்தல் தான் நமக்கும் உள்ளது அதே சான்றை நாமும் உலகிற்கு எடுத்து சொல்ல வேண்டும்.:  இந்த உலகம் அனைத்தும் கேட்கும் வரை நம் குரலை உயர்த்தி நாம் சான்று பகிர வேண்டும். குழப்பத்திலும், நம்பிக்கையற்றும், வழியிலும், தலைவேதனையிலும், விசுவாசமின்றி , பாவத்திலும் பல ஆன்மாக்கள் இருக்கின்றன. நாம் அவர்களின் தேவையை நிராகரிக்கலாமா ?  நாம் அமைதியாக இருப்பது அன்பான காரியமா? அவர்கள் உண்மையை அறிந்து கொள்ளாமல் இருக்க நாம் விடலாமா ? கண்டிப்பாக இல்லை.! ஒரு நாள் இயேசுவிற்கு நாம் பதில் சொல்ல வேண்டியிருக்கும் , நம் திருமுழுக்கு அழைத்தலை நாம் ஏன் செய்ய வில்லை என நாம் இயேசுவிடம் பத்தி சொல்ல வேண்டும். நாம் அந்த அழித்தலை ஏற்று பலர் இயேசுவை கண்டு கொள்ள உதவிட முடியும்.


என்ன மாதிரியான குரல் உங்களுக்கு இருக்கிறது? ஏனெனில் கிறிஸ்து நம்முள் இருக்கிறார், நமது வாழ்வே மற்றவர்களுக்கு படிப்பினையாக இருக்கும். அதுவே நம் குரல் , நம் சோதனைகளில், நாம் எப்போதும் இயேசுவின் மேல் விசுவாசம் கொண்டு நாம் எப்படி கையாள்கிறோம் என்பதே துன்பத்தில் இருபவர்களுக்கு அவரின் குரலாக இருக்கிறோம். எவ்வளவு அதிகம் நாம் அமைதியுடன் , அதிக அன்பையும் அவர்களுக்கு கொடுக்கிறோமோ , நம் குரல் மிக பெரிது.

நமது குரல் வளை ஒரு வார்த்தை கூட பேச முடியாமல்  இருந்தால் கூட , நாம் எப்படி வாழ்கிறோமோ அதுவே ஒளியின் உண்மையை இந்த உலகிற்கு எடுத்துரைக்கும். எவ்வளவு உண்மையாக நாம் வாழ்கிறோமோ அதே அளவிற்கு உண்மை நம் மூலம் இந்த உலகிற்கு செல்லும்.

நமது செய்தியை கொண்டு என்ன செய்ய வேண்டும்  அவர்களின் விருப்பம். ஆனால், நாம் செய்ய வேண்டியதை சொல்ல வேண்டியது சொல்லி அவர்களுக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

© 2017 by Terry A. Modica


Saturday, December 9, 2017

டிசம்பர் 10 2017 ஞாயிறு நற்செய்தி

டிசம்பர்  10 2017  ஞாயிறு நற்செய்தி
திருவருகை கால  2ம் ஞாயிறு
Isaiah 40:1-5, 9-11
Ps 85:9-14
2 Peter 3:8-14
Mark 1:1-8



திருமுழுக்கு யோவானின் உரை
(மத் 3:1-12; லூக் 3:1-9, 15-17; யோவா 1:19-28)
1கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்:
2-3இதோ, என் தூதனை உமக்குமுன்
அனுப்புகிறேன்; அவர் உமக்கு வழியை
ஆயத்தம் செய்வார்.
பாலை நிலத்தில் குரல் ஒன்று
முழங்குகிறது; ஆண்டவருக்காக
வழியை ஆயத்தமாக்குங்கள்;
அவருக்காகப் பாதையைச்
செம்மையாக்குங்கள்
என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது.
4இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்.

5யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்.

6யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்; தோல்கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.

7அவர் தொடர்ந்து, “என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை.

8நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்எனப் பறைசாற்றினார்.
(thanks to www.arulvakku.com)
பலன்களுடன் கூடிய எதிர்காலம் உங்களுக்கு உரியது

இன்றைய நற்செய்தி வாசகங்கள் "ஆண்டவருக்காக ஆயத்தமாகுங்கள்" என்று சொல்கிறது -- அவர் எதனை கொடுக்க விரும்பினாலும், நமக்காக எதனை செய்ய விரும்பினாலும், நம்மிடம் எது கேட்க விரும்பினாலும்  அதற்காக தயாராகுங்கள் என்று நமக்கு அறிவுறுத்துகிறது. நமது வாழ்விற்கான திட்டம் அவரிடம் இருக்கிறது.  இறைபனிக்கான நோக்கமும் அதில் இருக்கிறது. நம்மை தந்தை கடவுளின் குழந்தைகளாக அவரது கொடைகளை பெற்று, இந்த உலகின் மீட்பர் கிறிஸ்துவோடு இணைந்து நாமும் இறைபணி தொடர ஆயத்தமாகுவோம்.

நாம் கிறிஸ்துவோடு இணைந்தால் தான் , அவரோட நேர் வழியில் சென்று நாம் பரிசுத்த வழியில் நம்மால் இறைபணி முழுமையாக செய்ய முடியும்

நாம் சரியான பாதையில் தான் செல்கிறோம் என்பதை எப்படி தெரிந்து கொள்வது? நம் பயணத்தின் பலன்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம் . பரிசுத்த வழி எப்போதுமே நல்ல பலன்களை கொடுக்கும்.

எசாயா சொல்கிறார்: 3குரலொளி ஒன்று முழங்குகின்றது; பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள்.4பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானது நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும்.5ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்

திருவருகைகாலத்தில் நாம் கிறிஸ்துமஸ் தயாரிப்பில் ஈடுபடுகிறோம் . -- கடவுளை புது கடவுளாக பார்க்க இருக்கிறோம் -- இந்த சந்தர்ப்பத்தை உபயோகித்து நம் பாவங்களை நினைத்து வருந்தி மனம் திருந்தி, இயேசுவை பின் சென்று, அவரது பரிசுத்த பாதையில் இணைந்து . இந்த சந்தர்ப்பத்த்தை விட்டு விட்டால்,  கிறிஸ்துமசின் முழு அர்த்தம் இல்லாமல் போய் விடும்.  நமது கடினமான காலங்களில் கூட , உறுதியான விசுவாசத்துடன் நாம் எதிர்கொள்ள முடியும்.

ஆண்டவரின் வழியை ஆயத்தமாக்குங்கள்! உங்களுக்கு கொடுக்க இன்னும் அதிக அன்பு இருக்கிறது, விரைவாக குணமாக்க இருக்கிறார். இன்னும் அதிக சந்தோசம் நமக்கு கிடைக்கும்!  வீனான பாவ நிலத்தை விட்டு , கடவுளின் விரைவு சாலைக்கு வாருங்கள். பாவ சங்கீர்த்தனம் செய்து , இயேசு உங்களிடம் வர பெரிய பாதையை உண்டாக்குங்கள். அந்த பாதை மூலம் இயேசு விரைவில் வர, மாட்சியுடன் வருவார்.

எல்லா மனிதர்களும் , காய்ந்து போன புல் போன்றவர்கள், மேலும் நமது மாட்சி , காய்ந்து போன பூ போன்று மாறிவிடும். ஆனால், கடவுளின் மாட்சி மட்டும் தான் என்றும் நிறைந்து இருக்கும்.

இந்த திருவருகை காலத்தில் உங்களின் துன்பங்கள் போராட்டம் என்ன ? அதற்கு உத இயேசு தயாராய் இருக்கிறார். ஆனால், நிங்களோ அதன் மூலம் பாவத்தில் விழ தயாராய் இருக்கிறீர்கள் ?

உங்கள் வாழ்வில் எது நல்லதாக நடந்து  கொண்டி இருக்கிறது? எந்த செயல்கள் நீங்கள் எதிர்பார்க்கும் பலனுடன் நடந்து கொண்டிருக்கிறது ?  அவைகள்  மிளிரும் பச்சை புல் போல சில காலங்களில் காய்ந்து போய் விடுகிறதா? இன்னும் 100 வருடங்களுக்கு அதன் பலன் எல்லோருக்கும் பயன்படுமா ?

கடவுள் உங்களுக்கு திறமையை கொடுத்து இறைபணி ஆற்ற அழைக்கின்றார். ஒவ்வொருவருக்கு ஒரு தனிப்பட்ட குறிப்பிட்ட பணியை செய்ய அழைக்கின்றார்.  அந்த பணிக்கு கடவுள் கொடுத்த திறமை தேவை படுகிறது. அதனை செய்ய உங்களால் மட்டுமே முடியும். விசுவாசமிக்க வாழ்வு வாழ்ந்து நித்திய வாழ்வில் ஒரு வித்தியாசத்தை உருவாக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம். அதன் மூலம் இந்த உலகம் வாழ்வு வாழ்வதற்கான நல்ல உலகமாக இருக்க முடியும்.

இயேசு நம்மிடம் நேரடியாக வர ஆசைபடுகிறார். அதன் மூலம், நாம் இறையரசிற்கு பலன்களை கொண்டு வர விரும்புகிறார்.
ஆண்டவரின் பாதியை ஆயத்தபடுத்துங்கள். உங்கள் மூலம் வித்தியாசம் கொண்டு வர ஆசைபடுகிறார்.


© 2017 by Terry A. Modica