Saturday, September 23, 2017

செப்டம்பர் 24, 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை

செப்டம்பர்  24, 2017  ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 25ம் ஞாயிறு
Isaiah 55:6-9
Ps 145:2-3, 8-9, 17-18
Romans 1:20c-24, 27a
Matthew 20:1-16a
மத்தேயு   நற்செய்தி

திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமை
1விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார்.

2அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார்.

3ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்ற பொழுது சந்தை வெளியில் வேறுசிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார்.
4அவர்களிடம், ‘நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்என்றார்.

5அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார்.

6ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ‘நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார்.

7அவர்கள் அவரைப் பார்த்து, ‘எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லைஎன்றார்கள். அவர் அவர்களிடம், ‘நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்என்றார்.

8மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், ‘வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும்என்றார்.

9எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர்.

10அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம் தான் பெற்றார்கள்.

11அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டபோது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து,

12கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரேஎன்றார்கள்.

13அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, ‘தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா?

14உமக்குரியதைப் பெற்றுக் கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம்.

15எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?’ என்றார்.

16
இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்
என்று இயேசு கூறினார்.
(THANKS TO WWW.ARULVAKKU.COM)

முழுதும் அன்பு செய்யபடுகிறீர்கள் சமமாக அன்பு கொடுக்கபடுகிறது
கடவுள் நியாயமாக நடப்பதில்லை! எத்தனை முறை நாம் இப்படி நினைத்திருப்போம் ?  கண்டிப்பாக இது உண்மையாக கூத இருக்கலாம்,  நம் வாழ்வின் நடைமுறையில். இன்றைய   நற்செய்தி இதற்கு மிக சரியான எடுத்து காட்டாகும்.
நிலத்தின் சொந்தகாரர் நியாமாக நடந்து கொண்டதாக தெரியவில்லை. நாம் அவரை புரிந்து கொள்ள முயற்சிப்போம் , எனினும், இதே உவமையை பெற்றோரோடு ஒப்பிடுகையில், அன்புள்ள தந்தை அவரின் அனைத்து குழந்தைகளையும் சமமாக அன்பு செய்கிறார். இருந்தாலும், எந்த குழந்தைக்கு அதிகம் தேவை  படுகிறதோ அந்த குழந்தையின் மேல் அதிகம் கவனம் செலுத்தலாம், மற்ற குழந்தைகளையும் அதே போல அன்பு செய்கிறார்.
 தந்தை கடவுள் , திராட்சை  தோட்டத்தின் முதலாளி போன்றவர் தான், அவர் எல்லோருக்கும் சமமாஹவே கொடுப்பவர். நாம் நாமாகவே மோட்சத்திற்கு செல்ல முடியாததால், எல்லோரும் சமம் ஆக பாவிப்பதில் தவறில்லை. சிலர் அதிகமாக இறைபணி செய்திருந்தாலும், எல்லோருக்கும் மோட்சம் உண்டு. மேலும் கடவுள் எல்லோருக்கும் ஒரே பரிசுத்தமான அன்பை கொடுக்கிறார். கடைசி நேரத்தில் அவரை கண்டு சேர்ந்தவர்களுக்கும் கூத அதே அன்பை கொடுக்கிறார். அவர் இதனை விட யாருக்கும் குறைவாக கொடுப்பதில்லை. முதல் வாசகம் "மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல"  என்று நமக்கு நினைவூட்டுகிறது, கடவுளின் வழி நம் வழியை விட மேலானது, நாம் நினைப்பதை விட மேலானது. நியாமாக நடப்பது என்றால், எல்லோருக்கும் சமமான மதிப்பீடு கிடைக்கவேண்டும் என நாம் நினைக்கிறோம், ஆனால், அது பழைய ஏற்பாட்டின் காலங்களோடு ஒத்து போனது. "கண்ணுக்கு கண்" என்று கூறுவது போல உள்ளது. இயேசு நீதியை மிகவும் உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்றார். அதன் அர்த்தம் என்ன என்றால், எல்லோரையும் சமமாக அன்பு செய்தாலும், அழ மேல் இறக்கம் கொள்வதும் ஆகும். அவர்கள் அதற்கு தகுதி ஆனவர்களா இல்லையா என்பது வேறு விஷயம்.
கடவுளுடைய உயர்ந்த வழிகளை நாம் புரிந்து கொள்ள வேண்டியதில்லை. கடவுள் நம்மை முழுதுமாய் அன்பு செய்கிறார். நாம் அவரை அன்பு செய்யாவிட்டாலும் கூட. அவர் நம்மை தொடர்ந்து அன்பு செய்கிறார். நாம் அதற்கு தகுதி அற்றவராய் இருந்தாலும் கூட  மிக புனிதர்களுக்கு எவ்வளவு அன்பை தருகிறாரோ அதே அளவு அன்பை நமக்கு கொடுக்கிறார். கிறிஸ்துவின் புனித அன்னை மரியாளுக்கு எந்த அன்பு செலுத்து கிறாரோ அதே அன்பை நமக்கு தருகிறார்.! "ஏன் அன்பை எப்படி உபயோக்க வேண்டும் நான் விரும்புகிறேனோ அப்படி நான் செய்ய கூதாதா? " என்று கேட்கிறார்.

© 2017 by Terry A. Modica

Saturday, September 9, 2017

செப்டம்பர் 10 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை

செப்டம்பர் 10 2017  ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 23ம் ஞாயிறு

Ezekiel 33:7-9
Ps 95:1-2, 6-9
Romans 13:8-10
Matthew 18:15-20


மத்தேயு நற்செய்தி

பாவம் செய்யும் சகோதரர்
(லூக் 17:3)
15உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும்.

16இல்லையென்றால் இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும்என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக் கொண்டு போங்கள்.

17அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில் திருச்சபையிடம் கூறுங்கள். திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும்.

18மண்ணுலகில் நீங்கள் தடைசெய்பவை அனைத்தும் விண்ணுலகிலும் தடைசெய்யப்படும்; மண்ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

19-20உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார்.ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

(thanks to www.arulvakku.com)
மனம் திரும்ப வைக்கும் 3 வழிகள்
இன்றைய ஞாயிறு நற்செய்தி, நாம் நீதிக்காகவும், பரிசுத்த வாழ்விற்கும், உண்மையாக துணை நிறக வேண்டும் என்றும், பாவ வழிகளில் செல்பவர்களை மனம் திரும்ப அழைக்க வேண்டும் என்று கூறுகிறது. அப்படி நாம் செய்ய வில்லையென்றால், நாமும் அந்த பாவங்களில் பங்கு கொள்கிறோம் என்று அர்த்தம். அதற்கான விலையை நாம் கொடுக்க வேண்டும். (முதல் வாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது )
இதே நற்செய்தியில் இயேசு நாம் சமூகத்தோடு இணைந்து இந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும் ஏன சொல்கிறார், அவர்களின் அறிவுரையும் , ஜெப உதவியும் நமக்கு மிகவும் தேவை. எப்படி ?
முதலில் நாம் பாவம் செய்பவர்களிடம பேசுகிறோம். அவர்களே அவர்களை துன்புறுத்தி கொள்கிறார்கள் , அவர்களின் பாவங்கள் மூலம் மற்றவர்களுக்கும் துன்பம் கொடுக்கிறார்கள். (அந்த துன்பங்களை நாம் பார்க்க முடியாவிட்டாலும், எல்லா பாவங்களுமே துன்பம் கொடுப்பவை தான் ), இதனை நாம் அவர்களிடம் சொல்ல வில்லையென்றால் நாம் அவர்கள் மேல் அன்பு செலுத்தவில்லை , அவர்கள் மேல் நாம் அக்கறை கொள்ளவில்லை.
நாம் இந்த உண்மையை அவர்களுக்கு பகிர்ந்து அவர்கள் மாறாவிட்டால் கூட, நம் பாவங்களிலிருந்து நாம் வெளியே வருகிறோம். ஆனால் நமது முயற்சியை விட்டு விட கூடாது, மேலும் நம்மில் சிலரை அழைத்து கொண்டு, இன்னும் அதிகமாய் அவர்களை மனம் மாற்ற முயற்சிக்க வேண்டும் , அவர்கள்  பாவங்களை அறிந்து மனம் மாற அழைக்க வேண்டும்.
இதுவும் தோற்றுவிட்டால், இன்னும் அதிகமாய் முயற்சிக்க வேண்டும்.
சிலருக்கு உதவி செய்யும்பொழுது , அது ஏற்று கொள்ளபடவில்லைஎனில், மட்டுமே, நாம் அந்த முயற்சியை கைவிடுகிறோம். உண்மையில் சொல்ல போனால், நாம் இதனை முடிவிற்கு கொண்டுவரவில்லை அவர்கள் தான் நம்மை விட்டு செல்கிறார்கள். பாவம் செய்பவர்கள் தான் நம்மை விட்டு பிரிந்து செல்கிறார்கள். எனினும், இயேசு எப்படி வரி தண்டுவோரையும், பிற இனத்தாரையும் நடத்தினார் என்று பாருங்கள், அவர்கள் மேல் என்று அன்பு செய்ய அவர் தவறியதில்லை. மேலும் அவர்களுக்காக மரணம் எய்தினார்.!.

© 2017 by Terry A. Modica